Jump to content

வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு வழங்க சரத் பொன்சேகா இணங்கியுள்ளார்: சிவாஜிலிங்கம், (மஹிந்த)


Recommended Posts

வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து அதில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்க வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து மூன்று இன சமூகங்களுக்கும் தனித் தனி அலகுகளை வழங்குவதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதனை பிரதான வேட்பாளர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தாம் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

சிவாஜிலிங்கத்திற்குக் குழப்பமா? செய்தியாளருக்குக் குழப்பமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊடகத்தில் இச்செய்தி வந்தது என்பதை சுபத்திரன் குறிப்பிடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம

இவரை ஜனாதிபதியாக ஏற்றுகொள்ள முதலில் ஸ்ரீலங்கா பிரஞைகள் இணக்கம்காட்ட வேண்டும்.

இவருக்கு வோட்டு விழாமல் பார்க்க நல்ல பரப்புரை................. நான் நினைக்கிறேன் மகிந்து பார்ட்டி இலக்சன் இன்னும் நல்லாய் நெருங்கவிட்டுதான் இந்த சமாச்சாரத்தை கையில் எடுக்கும் என்று. இத்தனை இராணுவத்தினரை இழந்து முடித்த பிரச்னையை மறந்து இவர் நாட்டை துண்டுபோட பார்க்கிறார் என்று அவர்கள் இனிதான் தொடங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊடகத்தில் இச்செய்தி வந்தது என்பதை சுபத்திரன் குறிப்பிடவில்லை.

இது சுபத்திரனின் மனதில் உதித்த கற்பனை செய்தி.

Link to comment
Share on other sites

சிறீ லங்கா நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. மிச்ச ஆக்கள் வாடகைவீட்டில குடியிருக்கிற மாதிரி இருந்துப்புட்டு போகலாம் எண்டு சில மாதங்களுக்கு முன்னம் போர் நடைபெற்ற காலத்தில சொல்லி இருந்தாரே. அப்பிடி எண்டால் இன்னமும் கொஞ்சக்காலத்தால.. தேர்தலில தோற்றால்... சிறீ லங்கா தமிழ்மக்களுக்கு மாத்திரமே சொந்தமானது எண்டு சொல்லுவாரோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீ லங்கா நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. மிச்ச ஆக்கள் வாடகைவீட்டில குடியிருக்கிற மாதிரி இருந்துப்புட்டு போகலாம் எண்டு சில மாதங்களுக்கு முன்னம் போர் நடைபெற்ற காலத்தில சொல்லி இருந்தாரே. அப்பிடி எண்டால் இன்னமும் கொஞ்சக்காலத்தால.. தேர்தலில தோற்றால்... சிறீ லங்கா தமிழ்மக்களுக்கு மாத்திரமே சொந்தமானது எண்டு சொல்லுவாரோ

ஆர் உப்பிடி சொன்னது? :)

Link to comment
Share on other sites

ஆர் உப்பிடி சொன்னது? :)

அடிக்கடி நண்பரே உமக்கு ஞாபக மறதி வியாதி உள்ளது. கீழ்ப்பாக்கம் அல்லது அங்கொடை .............. நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிக்கடி நண்பரே உமக்கு ஞாபக மறதி வியாதி உள்ளது. கீழ்ப்பாக்கம் அல்லது அங்கொடை .............. நல்லது

தெரியாதெண்டால் தெரியது எண்டு சொல்லுறத விட்டிட்டு .... உப்பிடி சொல்லுறது சரியில்ல. :)

Link to comment
Share on other sites

தெரியாதெண்டால் தெரியது எண்டு சொல்லுறத விட்டிட்டு .... உப்பிடி சொல்லுறது சரியில்ல. :)

உமக்கு தமிழன் யார் எது செய்தாலும் அறிந்து வைத்துள்ளீர் ஆனால் சிங்களவன் எது செய்தாலும் சொன்னாலும் அவற்றை மறந்து விடுகிறீர்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமக்கு தமிழன் யார் எது செய்தாலும் அறிந்து வைத்துள்ளீர் ஆனால் சிங்களவன் எது செய்தாலும் சொன்னாலும் அவற்றை மறந்து விடுகிறீர்.....

அண்ணே ரெண்டுபக்கமும் சொல்லியிருக்கும்....மகிந்தாவோ சரத்தோ எண்டுதானே கேட்டன், பதிவில தெளிவில்லாமலிருந்து..... கேட்டதுக்கு தெரிஞ்சா பதில சொல்லுறதுதானே....அதை விட்டிட்டு. :)

Link to comment
Share on other sites

அண்ணே ரெண்டுபக்கமும் சொல்லியிருக்கும்....மகிந்தாவோ சரத்தோ எண்டுதானே கேட்டன், பதிவில தெளிவில்லாமலிருந்து..... கேட்டதுக்கு தெரிஞ்சா பதில சொல்லுறதுதானே....அதை விட்டிட்டு. :)

யாரப்பா இவங்க??? ரொம்ப தமாசா விவாதிக்கிறாங்க!

Link to comment
Share on other sites

தெரியாதெண்டால் தெரியது எண்டு சொல்லுறத விட்டிட்டு .... உப்பிடி சொல்லுறது சரியில்ல. :)

எல்லாம் உமக்கு விளங்கும் காதைப்பொத்தி இரண்டு போட்டால். :(:o:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.