Jump to content

முகத்தார் வீடு


Recommended Posts

இது வெறும் அரட்டை மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காகவல்ல. .

முகத்தார் வீடு . 1

நேரம் : காலை 9 மணி

(முகத்தார் வாசலில் பேப்பர் பாத்துக் கொண்டிருக்கிறார் அப்பதான் பொண்ணம்மாக்கா தூக்கத்தாலை எழும்பி வாறா. . . .)

பொண்ணம்.மா : என்னப்பா செய்றியள் காலேலையே பேப்பரா?

முகத்தார் : என்ன இண்டைக்கு வேளைக்கு எழும்பியாச்சுப் போல கிடக்கு நான் 6மணிக்கே எழும்பி எல்லா வேலையும் முடிச்சுப் போட்டுத்தான் பேப்பர் பாக்கிறன் சுடுதண்ணிப் போத்திலை தேத்தண்ணி இருக்கு குடியும்

பொண்ணம்மா : ஏன் ஒருக்கா கப்பிலை ஊத்தித் தரமாட்டியளோ?

முகத்தார் : சரி. . சரி. . காலேலையே தொடங்காமல் முகத்தைக் கழுவிப் போட்டு வாருமன் எடுத்;து வைக்கிறன்

(பொண்ணம்மா முகம் கழுவ கிணத்தடிக்குப் போற முகத்தார் கப்பைக் கழுவி தேத்தண்ணியை ஊத்தி வைக்கிறார்)

முகத்தார் : இந்தாரும் தேத்தண்ணி. . அதுசரி திருநீறை நெத்திலை புூசினீரோ அல்லது தட்டிலை தலையை வைச்சு தேச்சனீரோ அப்பிடிக் கிடக்கு. .

பொண்ணம்மா : உங்கடை இந்த நக்கலுக்கொண்டும் குறைச்சலில்லை. .

(அந்த நேரம் படலை திறக்கும் சத்தம் கேக்கிறது பொண்ணம்மா எட்டிப் பாக்கிறா. .)

பொண்ணம்மா : கிழிஞ்சுது. . .வேலைவெட்டியில்லை காலேலையே வந்திடுங்கள்

முகத்தார் : யாராயப்பா இப்பிடி திட்டுறாய்?

பொண்ணம்மா : வேறை யார் உங்கடை கூட்டாளிதான் சாத்திரியார். .

முகத்தார் : இஞ்சை தனிய என்னவேணுமானாலும் திட்டு ஆட்களுக்கை மரியாதை கெடுத்துப் போடாதை என்ன. . .

பொண்ணம்.மா : சும்மா அந்தாளோடை அலம்பாமல் ஆளை வேளைக்கு கலைச்சுப் போட்டு வாங்கோ சட்டி பானை எல்லாம் கழுவ வேணும் சந்தைக்கும் போக வேணும் . .

முகத்தார் : சரி... சரி. . புலம்பாமல் போ. . .எட சாத்திரி என்ன காலேலையே. இஞ்சாலை முகமும் விடியாத மாதிரி கிடக்கு என்ன விசயம் ?

சாத்திரி : எல்லாம் வீட்டுப் பிரச்சனைதான் இந்த மனுசிமாருக்கு என்னத்தைச் செய்தாலும் திருப்திப் பட மாட்டாளவை

முகத்தார் : நீ எதைச் சொல்லுறாய்?

சாத்திரி : வேறை என்ன காலேலை எழும்பி சமைச்சுப் போட்டு ஒரு ரவுண்ட் வெளிக்கிடுவம் எண்டு வந்தால் மனுசிகாரி சொல்லுறாள் சாப்பாட்டைப் போட்டு நாய்க்கு வைச்சிட்டு போங்கோ எண்டு

முகத்தார் : இதென்ன சின்ன வேலைதானே. .

சாத்திரி : நானும் சொன்னன் போட்டு வந்து உனக்கும் நாய்க்கும் போட்டு தாறன் எண்டு அதுக்கு சொல்லுறாள் நான் வாறதுக்கிடையிலை நாய் படுத்திடுமாம் ஏன் அவளுக்கு இதைச் செய்யகூட என்ன வருத்தம். . .

முகத்தார் : விடு சாத்திரி இதுக்குப் போய் டென்ஷன் ஆகிக் கொண்டு . . . .

(அந்த நேரம் பொண்ணம்மா தேத்தண்ணி கொண்டு வந்து சாத்திரிக்கு குடுக்கிறா. .)

பொண்ணம்மா : என்ன சாத்திரியண்ணை களைச்சுப்போய் வந்திருக்கிறீயள் தேத்தண்ணி குடியுங்கோவன். எனக்குக் கொஞ்சம் உள்ளைவேலை யிருக்கு வாறன். .

முகத்தார் : (மனசுக்குள்) உள்ளை வேலையா? நான் போய்த்தான் ஏதன் செய்யவேணும்) சாத்திரி தேத்தண்ணியை குடியன்

சாத்திரி : முகத்தான் நீ குடுத்து வைச்ச ஆளடப்பா பொண்ணம்மா மாதிரி பெண்சாதி கிடைக்கிறதுக்கு . . .

முகத்தார் : (நான் போட்டு வைச்ச தேத்தண்ணியை கொண்டு வந்து குடுத்தவுடனை பொண்ணம்மா நல்லம் நான் குடுத்து வைச்சனான் யாரிட்டை சொல்லுறது) சாத்திரி இதெல்லாம் விதிப் பலன் . . . .

(அந்த நேரம் நாய் படலையைப் பாத்துக் குரைக்குது யாரோ நிற்பதுபோல நிழல்வேறை)

முகத்தார் : இது என்னடா ஆமிக்காரனைக் கண்ட மாதிரி நாய் குரைக்குது யாரது?

சாத்திரி : அதுதான் எனக்கும் தெரியலை கூப்பிடட்டே . . ?

பொண்ணம்மா : என்னப்பா நாய் ஏதோவைக் கண்டமாதிரி குரைக்குது போய் ஒருக்கா பாருங்கோவன்

(முகத்தார் எழுந்து படலையடிக்குப் போறார் நிண்டஆளையும் கூட்டிக் கொண்டு வாறார் ஆளைக் கண்டதும்)

பொண்ணம்மா : நான் நினைச்சன் இவராத்தான் இருக்குமெண்டு. .வாங்கோ. .

சாத்திரி : எட. . சின்னப்புவே. என்ன குமர்ப்பிள்ளை மாதிரி வெக்கப்பட்டுக் கொண்டு. .

சின்னப்பு : இல்லையடா சாத்திரி எனக்கும் இந்த நாய்களுக்கும் ஒத்து வராது ஏற்கனவே ஒரு (புல)நாயிட்டை மாட்டுப்பட்டு கந்தலானனான் அதாலை கொஞ்சம் தள்ளி நிக்கிறனான்.

.

பொண்ணம்மா : சரி. . . 3பேரும் சேர்ந்தாச்சு இனி விடிஞ்ச மாதிரித்தான். .

.

முகத்தார் : என்ன சின்னப்பு காலேலை கடையள் புூட்டுப் போல இந்தப் பக்கம் வந்திருக்கிறாய். . . ?

சின்னப்பு : இல்லை முகத்தான் சாத்திரி வீட்டுப் பக்கம் போனன் இந்த நாயைவிட முனியம்மாவின் குரையல் பெரிசாக்கிடக்கு பேசாம திரும்பிட்டன். .

முகத்தார் : அது ஒண்டுமில்லை இண்டைக்கு அட்டமி யெல்லோ கனத்தநாள் சிலபேரிலை காட்டும் இந்த நேரத்திலை நாங்கள் கொஞ்சம் விலகியிருப்பது நல்லம்

சாத்திரி : சின்னப்பு இஞ்சை எண்டாலும் மனுசியை நினைவுபடுத்தாமல் இரு பாப்பம் அதுசரி அடுத்தமாதம் லெக்ஷன் வருகுதெல்லோ பேப்பருகள் என்ன சொல்லுது. . ?

முகத்தார் : யாரடாப்பா உதிலை மினைக்கடுறது சனத்துக்கும் பெரிசா ஆர்வமில்லை.

சின்னப்பு : முந்தி பிரேமதாசா வெட்டுவர் புடுங்குவர் எண்டு போட்டம் பிறகு அம்மா ஏதோ செய்வா எண்டு போட்டம் என்ன நடந்தது இருக்கிற இனவாதத்தை கூட்டித்தான் விட்டிருக்கினம் அவ்வளவுதான்

சாத்திரி : சின்னப்பு இந்தமுறை நீ யாருக்குப் போடப் போறாய். . ?

சின்னப்பு : நான் போடாமல் விட்டா வீட்டிலை இந்த குறுக்காலைபோன குத்தியன் எடுத்துக் கொண்டு போய் தன்ரையாளுக்குப் போட்டுவன் ஆனா படியா போடத்தான் வேணும் யாருக்கு எண்டு இன்னும் யோசிக்கேலை

சாத்திரி : நான் நினைக்கிறன் ரணில் கொஞ்சம் லிஸ்ட் விட்டிருக்கிறார் அவற்ரை தேர்தல் பிரசாரத்திலை மனுசன் செய்திச்சுச்செண்டால் நல்லம்

சின்னப்பு : எங்கை உவங்கள் செய்ய விடுவங்களோ. . . ?

முகத்தார் : அப்ப மகிந்தா வந்தால் என்ன நடக்கும் . . ?

சின்னப்பு : அவர் ஜேவிபிக்கும் மொட்டைக்கும்தான் ஜனாதிபதி ஆகப் போறார் வந்தாப் பிறகு பாரன் மனுசன் தலையைப் பிச்சுக் கொண்டு ஓடாட்டிக்கு. . .

சாத்திரி : ஏன் சின்னப்பு அப்பிடிச் சொல்லுறாய் ?

சின்னப்பு : பின்னை என்ன இந்த ஜேவிபிக்கும் மொட்டைகளுக்கும் ஒத்துவராது பாலிமெண்டிலை பாத்தீங்களே மொட்டைகளின்ரை காவி உடுப்பைக் கழட்டி அடிச்சது ஆர்?

முகத்தார் : ஆனா சின்னப்பு தெற்கிலையெல்லாம் மகிந்தாவுக்குத்தான் அதரவு கூட இருக்கெண்டு சொல்லினம் அதோடை மொட்டைகள் பிரச்சாரத்திலை இலங்கேலை பௌத்தத்தை கொண்டு வந்ததும் மகிந்தா(மன்னன்)தான் அதுபோல அந்த பௌத்தம் அழியாமல் காப்பாத்துவதும் இந்த மகிந்தாவால்தானாம். .எண்டு விடுகினம்

சின்னப்பு : முகத்தான் உந்த மொட்டைகளின் கதையை விடு அரச சுகபோக வாழ்க்கை பிடிக்காமல் துறவியானவர்தான் புத்தர் அவரைப் பின்பற்றி வாறவை அரச பதவிக்கு ஆசைப்படுகிறதெண்டால் என்ன இது. . . .

சாத்திரி : அதுவும் சரிதான் சின்னப்பு யார் வந்தாலும் எமக்கு இதே கெதிதான் என்ன சொல்லுறீயள். . .?

முகத்தார் : அனேகமா சிறுபான்மையெல்லாம் ரனிலுக்குத்தான் சப்போட் பண்ணுவினம் போலக்கிடக்கு பாப்பம் என்ன நடக்குதெண்டு. . .

பொண்ணம்மா : என்ன 3பேரும் லெக்ஷன் கேக்கப் போறீங்களோ. . ? உங்களுக்கு இந்த அரசியலை விட்டாவேறை கதையில்லைப் போல என்ன. . . ?

சின்னப்பு : எங்கடை வயசுக்குப்பிள்ளை நாங்க வேறை என்னத்தைத்தான் கதைக்கிறது

சாத்திரி : சரி இதை இதோடை விடுவம் இன்னோரு கதைகேள்விப் பட்டியளோ திருகோணமலை கடல்த்தண்ணி பச்சைத் தண்ணியாக் கிடக்காம்

சின்னப்பு : இதென்ன கதை கடல்தண்ணி பச்சைத்தண்ணியில்லாமல் சூடுதண்ணியோ.?

சாத்திரி : சின்னப்பு உனக்கு தவறனைத்தண்ணியைத் தவிர வேறையொண்டும் தெரியாது இது பச்சை நிறத்திலை தண்ணியிருக்காம் சனம் திருவிழா மாதிரி கடக்கரையிலை கூடிச்செண்டால் பாத்துக்கோவன்

முகத்தார் : உந்த சுனாமிக்குப் பிறகு எங்கடைசனங்கள் கடலை வடிவாத்தான் பாக்குதுகள் ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் கண்டுபிடிச்சிடுங்கள்

சாத்திரி : இருந்தாலும் முகத்தான் இது முன்னையதுகளைவிட வித்தியாசமா இருக்குதாம்

முகத்தார் : நானும் பேப்பரிலை பாத்தனான் இதுவந்து இந்தியாகாரங்கள் செய்யிற வேலைபோலத்தான் எனக்கு படுகுது

சின்னப்பு : என்ன கடலுக்கை சாயத்தைக் கொட்டிப் போட்டங்களோ . . ?

சாத்திரி : சின்னப்பு உந்த விசர் பகிடியை விட்டுட்டு கதையைக் கேள் முகத்தான் நீ சொல்லு. . .

முகத்தார் : இந்த பாக்குநீரிணையை பெரிய கப்பல்கள் வரவேண்டுமெண்டு ஆழமாக்கிறதுக்கு சேது சமுத்திரத்திட்டமொண்டை தொடங்கினவையெல்லோ அது இப்ப நடமுறைக்கு வந்திட்டுது இனி கடலை ஆழமாக்கேக்கை அங்கையிருக்கிற உயிரிணங்கள் திக்குத்திசை தெரியாம கரையொதுங்கியிருக்குதுகள் போல கூட்டமா வரேக்கை அந்த இடத்திலை சில மாற்றங்கள் தெரியத்தான் செய்யும்

சின்னப்பு : அப்பிடியெண்டால் சில மீன் இனங்களும் அழியிறத்துக்கும் வாய்ப்பிருக்கு என்ன. . ?

முகத்தார் : மீனினங்கள் மட்டுமல்ல பளிங்குப்பாறையள் கூட அழிய வாய்ப்பிருக்கு

சின்னப்பு : அப்ப மீன் பிடிக்கிற ஆட்களுக்கு பாதிப்பில்லையோ . . ?

முகத்தார் : ஏன் இல்லாமல் இப்பிடி மீன் இனங்கள் அழியிறதாலை மீன்பிடித்தொழில் கலர்மீன் ஏற்றுமதிகூட பாதிப்படையச் சாத்தியம் இருக்கு . .

சாத்திரி : அப்ப இது எங்கடை அரசாங்கத்துக்கு விளங்கேலையோ இந்த திட்டத்துக்கு எதுக்கு சம்மதிச்சவை. .

முகத்தார் : எங்களுக்கு மாத்திரமில்லை தமிழ்நாட்டு மீன்பிடித்துறைக்கும் பாதிப்புத் தான் முதலிலை ஜெயலலிதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்தவ பிரயோசணமில்லை எங்கடை அரசாங்கம் தமிழீழ மீனவர்தான் பாதிக்கப் படப்போயினம் எண்டுட்டு சும்மா இருந்திட்டினம்

சாத்திரி : இப்ப இந்த திட்டம் முடிஞ்சால் கொழும்பு துறைமுகத்துக்கு வாற கப்பல்களின் எண்ணிக்கை குறைஞ்சிடுமே இதாலை இவைக்கு நட்டம்தானே. . ?

முகத்தார் : உண்மைதான் சாத்திரி எல்லாம் முடிஞ்சாப்பிறகுதான் ஓடி முழிப்பினம்

சின்னப்பு : உவைக்கு எங்கடை ஒருகண்ணைக் குத்திறதெண்டால் தங்கடை இரண்டு கண்ணையும் குத்திக் கொள்ளுவினம். .

பொண்ணம்மா : என்னப்பா மணி 11யாகுது சந்தைக்குப் போகேலையோ. . .?

முகத்தார் : சரி. . சரி. . வெளிக்கிட்டுட்டன் சின்னப்பு சாத்திரி வெளிக்கிடுங்கோ மனசி கொப்பிலை ஏறுதக்கிடையிலை நான் ஒருக்கா சந்தைக்கு போகவேணும். .

சாத்திரி : நானும் வெளிக்கிடுறன் மனுசிக்காரி உலையும் வைச்சிருக்க மாட்டாள் போய்த்தான் எதன் செய்யவேணும் சின்னப்பு வரட்டே. . .

சின்னப்பு : இரண்டுபேரும் மனுசிமாருக்கு பயந்து என்ன ஓட்டம் ஓடுறாங்கள் நல்ல காலம் என்ரை மனுசி கொழும்புக்குப் போனது எவ்வளவு சந்தோஷம். . .

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

  • Replies 428
  • Created
  • Last Reply

சாத்திரி : எட. . சின்னப்புவே. என்ன குமர்ப்பிள்ளை மாதிரி வெக்கப்பட்டுக் கொண்டு. .  

சின்னப்பு : இல்லையடா சாத்திரி எனக்கும் இந்த நாய்களுக்கும் ஒத்து வராது ஏற்கனவே ஒரு (புல)நாயிட்டை மாட்டுப்பட்டு கந்தலானனான் அதாலை கொஞ்சம் தள்ளி நிக்கிறனான்.

.

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

முகம்ஸ் இதை பொன்னம்மாக்கா படிக்கட்டும், அதை அடுத்த பாகமா போடுங்க ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

:lol::lol::lol:

முகத்தால் உங்களுக்கு நல்ல எழுத்து திறமை இருக்கு, நல்லா எழுதுறீங்க

Link to comment
Share on other sites

முகத்தார் தன்னுடைய உண்மைக் கதைகளை சொல்கின்றார். நீங்கள் போய் எழுத்து திறமை அது இது என்று சொல்கிறிர்கள்..... அவரின் எழுத்து திறமையால் பொன்னம்மாக்கா சொன்ன பல விடங்களை சென்சர் பண்ணி இருப்பார்

Link to comment
Share on other sites

கலக்கிறீங்க முகம்.. புது கதைகள், புது விடயங்கள் ஆனால் அதே பழைய (ஓல்ட்) கதாப்பாத்திரங்கள்.. முகம் வரா வாரம் நகைச்சுவைகளுடன் செய்தியையும் தாங்க,,

சுப்பர்..............:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா எழுதுறீங்கய்யா... நல்லாயிருக்கு.. எல்லாரையும் நல்லா சிரிக்க வைக்குறீங்க.. தாத்தான்னா தாத்தாதான்.... :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்ணாகம் சந்தையடியில் எவடம் முகத்தார் தாத்தா?

Link to comment
Share on other sites

சுண்ணாகம் சந்தையடியில் எவடம் முகத்தார் தாத்தா?

ஓய் மின்சாரநிலையத்துக்கு பின்னாலை ளொள்ளா ??

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சுண்ணாகம் சந்தையடியில் எவடம் முகத்தார் தாத்தா?

சுன்னாகம் சந்தையடியில் கத்தரிக்காய் விற்பவருக்கு அருகாமையில் :lol:

Link to comment
Share on other sites

சுன்னாகம் சந்தையடியில் கத்தரிக்காய் விற்பவருக்கு அருகாமையில் :lol:

சுண்ணாகம் வாழைக்குலைதான் பேமஸ்... :wink: :P :P

Link to comment
Share on other sites

மட்டுவில்தான் கத்தரிக்காயுக்கு பேமஸ் :P

ஓய் அப்ப க...ளுக்கு எந்த ஊரப்பா ???

:wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஓய் அப்ப க...ளுக்கு எந்த ஊரப்பா ???

:wink: :wink: :wink: :wink:

கூவில்தான் சுவைக்கு அருமை :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.