Jump to content

முகத்தார் வீடு


Recommended Posts

MUGATHTHAR எழுதியது:

பொண்ணம்மா : பாவற்காய் 2 எடுங்கோ அப்பிடியே கரட் இருந்தால் சம்பல் ஒண்டு போடலாம் கிழங்கேடுக்கிறதெண்டால் உரும்பிராய் கிழங்கா பாத்தெடுங்கோ பிறகு 4 முருங்கக்காயும். . .

முகத்தார் : எல்லாம் சரி இந்த முருங்கக்காய் மட்டும் வாங்க மாட்டன் கண்டியோ .போண கிழமை வாங்கேக்கை இரண்டு பெட்டையள் பாத்துச் சிரிச்சதுகள் எனக்கு வெக்கமாப் போச்சு.

முகத்தார் முருக்கங்காயை நான் வசுலுக்கு சந்தைக்கு போய்வரும்போது வாங்கிவந்துதாறன் நீங்கள் இனிமேல் வாங்கவேண்டாம். :idea:

Link to comment
Share on other sites

  • Replies 428
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாயிருக்குது தாத்தா

பகுதி 3 எப்போ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3615511un.gif

இங்கே பாருங்க சாத்திரிஐயா இப்படி கைதட்டுகின்றார் என்ன நடந்தது :P

Link to comment
Share on other sites

wwoooooowwwwwwwww சுப்பர் முகத்தார்,,கற்பனையோ கற்பனை...நீங்கள்தான் ரீரீஎன் சுப்பர்மட இயக்குனரோ??? :P

முகத்தார்,, இந்த தொடர்கதைகளை உங்க புளக்கில போட்டுவிடுங்க,, பகுதி1,2,3 எண்டு போட்டால் கனகாலம், புதிதா களத்துக்குவருகிறவர்களுக்கு பார்க்க சுலபமாக இருக்கும்... :idea:

ரிரிஎன் சுப்பர் மடம் நிகழ்ச்சி மாதிரி போகிறது....(நகைச்சுவை, அரசியல், செய்தி, நக்கல், அம்பலம் எண்டு)... தொடருங்க,, (வாரம் வாரம் எதிர்ப்பார்க்கிறம்,,) :idea: :P :P

இதுவும் "ஒரு பத்திரிகை" யில வருமா? :wink: :P

Link to comment
Share on other sites

தம்பி நன்றிகள் அப்பு கடைசிலை என்னையும் அரசியலுக்கை இழுக்கப் போறாய் போல கிடக்கு இலங்கை அரசியலைப் பற்றி எழுதினாலே மேலே சொன்ன (நகைசுவை நக்கல் அம்பலம்) எல்லாம் வந்துவிடும்...

என்ன இதையும் சுட்டுப் போடுவங்களா அட கடவுளே................

Link to comment
Share on other sites

முகத்தார் வீடு அங்கம் - 2 மிக நல்லா இருக்கு... தரமா..இயல்பைப் பிரதிபலிச்சு... யாழ்ப்பாண வழக்கோடு அலட்டல் இல்லாம... அழுத்தமாக எழுதி இருக்கிறியள்..! சுப்பர் முகத்தார்..! தொடர்ந்து தாங்கோ... உங்கள் ஆக்கங்கள் ஒரு பேப்பரில் வருவதை இட்டு மிக்க மகிழ்ச்சி..! :P :idea:

Link to comment
Share on other sites

மிக அருமையாகவும், நகைச்சுவையாகவும், இயல்பான வசன நடையோட ஒரு உரையாடலைத் தந்திருக்கிறீர்கள் முகத்தார். தொடர்ந்தும் எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

முகத்தார் வீடு - அங்கம் 3

இது கொஞ்சம் வித்தியாசமாக

(சாத்திரியை 1 கிழமையாக் காணவில்லை எண்டு முகத்தாரும் சின்னப்புவும் அவரைத் தேடி வருகிறார்கள் அங்கை பாத்தால் சாத்திரி வீட்டுக்கு முன்னால் ஒரு புதுக்கார் நிக்குது. உள்ளே சாத்திரி வலு பிசியா வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் பொறுமையுடன் வெளியில் காத்து நிக்கிறார்கள் முகம்ஸ்மும் சின்னப்புவும்)

சாத்திரி : சின்னப்பு கோவியாதைங்கோ கொஞ்சம் பிசி..

சின்னப்பு : யாரடாப்பா இது புது ஆட்களாக் கிடக்கு. .

சாத்திரி : இவை எங்கடை ஆட்கள்தான் லண்டனிலை இருந்து வந்திருக்கினம்

முகத்தார் : என்னவிசயம் அதுவும் உன்னட்டை வந்திருக்கினம்

சாத்திரி : இவை புலம் பெயர்ந்து போய் கைநிறைய நல்லா சம்பாதிச்சிருக்கினம் இப்ப இதை வைச்சு தமிழை .கலையை வளர்க்க இங்கை வந்திருக்கினம்

சின்னப்பு : அதுக்கு நீ என்ன ஜடியா குடுத்தனி ?

சாத்திரி : அதுதான் தமிழை வளர்க்கிதெண்டால் சினிமாப்படம் எடுங்கோவன் எண்டன் கலையையும் வளர்த்த மாதிரி போகும் எண்டு இப்ப என்னையே பிடிச்சுக் கொண்டினம் படத்தை எடுத்துத் தரச் சொல்லி .

முகத்தார் : முறையான இடத்துக்குத்தான் வந்திருக்கினம் இவைக்கு படமெடுத்த முன் அனுபவம் ஏதெனும் இருக்கோ?

சின்னப்பு : முன்னனுபவமிருந்தால் என்னதுக்கு சாத்திரியிட்டை வருகினம்

சாத்திரி : இஞ்சை வாங்கோவன் உங்களுக்கும் அவையை அறிமுகப்படுத்தி வைக்கிறன் இந்தா இவர்தான் தயாரிப்பாளர் தல. .மற்றதெல்லாம் இவற்றை நண்பர்கள்

முகத்தார் : தம்பி வணக்கம் என்ன படம் எடுக்கப் போறீயளாம்?

தல : அதுதான் வந்திருக்கிறம் படம் எடுக்க ஜடியா குடுத்திட்டு சாத்திரியார் இன்னும் கதையையே சொல்லேலை….

சாத்திரி : கதையா அது என்னத்துக்கு தமிழ் படத்துக்கு தேவையில்லையே அதை நான் பாத்துக் கொள்ளுறன். .

தல : அப்ப ஹீரோ ஹீரோயின் வில்லன் இவர்களையாவது தெரிவுசெய்யலாமே. .

சாத்திரி : (முகத்தாரைக் காட்டு ) இந்தா ஹீரோக்கு இவரைப் போடுவம்

தல : என்ன ஜயா விளையாடுறியள் நான் இவ்வளவு காசைப் போட்டு என்ன பக்திப்படமா எடுக்கப் போறன்

சாத்திரி : ஏன் அப்பிடிச் சொல்லுறீயள் இவருக்கு என்ன 52வயசுதான் ஆகுது அப்பிடியே ஆளைத் மாத்திப் போட்டிட மாட்டன்

தல : என்ன 25 எண்டு எழுதிக்காட்டப் போறீயளா இது படம் ஜயா. .

சாத்திரி : 58 வயசிலை நடிக்கிற ஆட்களின் படத்தை 200 நாளுக்கு மேலை ஓட வைக்கிற சனங்கள் இவரை ஏற்றுக் கொள்ள மாட்டினமோ?

தல : அப்ப வில்லன் நடிகனுக்கெண்டாலும் பழைய ஆளைப் போடுவம். .

சாத்திரி : போட்டாப் போச்சு இந்தா (சின்னப்புவைக் காட்டி) சும்மாதான் இருக்கிறார்

தல : ஜயா நான் படம் எடுக்கிறது சனம் பாக்கிறதுக்கு. . .

சாத்திரி : நீங்க பழைய ஆளைப் போடச் சொன்னதிலை நான் இவரைச் சொன்னனான்

(ரகசியமாக தலையிடம் இந்த 2பேரையும் புக் பண்ணினால் எங்களுக்கு சிலவே இருக்காது யுஸ் குடுக்கிற நேரத்திலை 1போத்தல் கள்ளுக் குடுத்தா காணும் கள்ளு வலு மலிவு இஞ்சை)

தல : சரி டைரக்டர் நீங்க சொல்லுறீயள் அப்ப ஹீரோயின் ஆரைப் போடப் போறீயள்

சாத்திரி : அதுதான் யோசிக்கிறன் கவர்ச்சிப்புயல்கள் 2பேர் இருக்கினம் போய் கேக்கத்தான் பயமாக்கிடக்கு. .

தல : பரவாயில்லை யார் எண்டு சொல்லுங்கோ நான் போய் கேட்டுப் பாக்கிறன்

சாத்திரி : பேர் வந்து பொண்ணம்மா . சின்னாச்சி ஆனா நாங்க எடுக்கிற கதைக்கு அவர்கள் பொருந்த மாட்டார்கள் போலத் தெரியுது ஒரு விஜயசாந்தி மாதிரியான சப்ஜெட் எண்டாப் பரவாயில்லை இது வந்து கணவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறமாதிரியான கரேக்டர்

தல : இப்ப என்ன சார் பண்ணறது?

சாத்திரி : சரி போணாப் போகுது நாங்க ஜோதிகாவை போடுவம்

தல : என்ன ஜோதிகாவா? அவங்க எங்கடை படத்திலை நடிக்க வருவங்களா?

சாத்திரி : நீங்க என்ன நினைச்சு என்னட்டை வந்திருக்கிறீயள் மை போட்டு வித்தை காட்டி ஆளை இழுத்தெடுத்திட மாட்டன் ஆனா என்ன கொஞ்சம் செலவாகும்

தல : காசுக்கு நோ. . பிரோப்பிளம் எனக்கு ஜோதிகா சம்மதிச்சா சரி. .

சாத்திரி : தம்பி தல ஜோதிகா படத்திலை நடிக்கிறதுக்குத்தான் சம்மதிப்பா உங்களுக்கில்லை (சா. . .சரியான ஜோள்ளுப் பார்ட்டியா கிடக்கு இதையே சாட்டா வைச்சு நல்லாக் கறந்திட வேண்டியதுதான்)

(தல அங்கிருந்து புறப்பட்டதும் முகத்தார் சின்னப்பு பக்கம் திரும்புகிறார் சாத்திரி)

சாத்திரி : முகத்தான் இந்தப் படத்துக்கு நீ தான் ஹீரோ சின்னப்புதான் வில்லன் ஜோதிகா தான் ஹீரோயின் நான் முடிவு செய்திட்டன்

முகத்தார்: பாவமடா தயாரிப்பாளர்

சாத்திரி : இந்தா உனக்கு 5டூயட் 5பைட் சீன் இருக்கு வாயை மூடிட்டு இரு

சின்னப்பு : சாத்திரி அப்பிடியே 5ரேப் சீனையும் சேர்த்து விடன் புண்ணியமா போகும்

சாத்திரி : சின்னப்பு பிறகு கொம்பனி கணக்கிலை ஆஸ்பத்திரி சிலவெல்லாம் செய்யேலாது

முகத்தார் : சாத்திரி உனக்கு கோயில் கட்டித்தான் கும்பிட வேணும் என்ரை ஆசையெல்லாம் நிறைவேறப் போகுது

சாத்திரி : ஹீரோ எண்டா பின்னை சும்மாவா.. . . .

முகத்தார் :அதோடை மச்சான் ஓசிலை லண்டன் கனடா எல்லாம் போகலாமே. .

சாத்திரி : ஆர் சொன்னது கூட்டிட்டு போற தெண்டு

முகத்தார் : 5டூயட் எண்டா அங்கையெல்லாம் கொண்டு போய் தானே எடுப்பாங்கள்

சாத்திரி : அது ஒறிச்சினல் டைரக்டர் நான் யாரு. . .உலகப்படத்திலை லண்டன் கனடாவை காட்டிப் போட்டு அதிலை ஏறி நிண்டு ஆடச் சொல்லிட மாட்டன்.

முகத்தார் : அப்ப சூட்டிங் தொடங்கினவுடனை இங்கையே தங்கிடலாம் என்ன சாப்பாடு தண்ணி எல்லாம் தருவினம் தானே. .

சாத்திரி : ஏன் பொண்ணம்மா சொந்தங்கள் எல்லாத்தையும் கூட்டி வாவன் அதெல்லாம் சரி வராது வீட்டிலை சாப்பிட்டுட்டு வரேக்கை எனக்கும் ஒரு பார்சல் கட்டிக் கொண்டு வரவேணும் விளங்கிச்சே. ..

முகத்தார் : சரி சாத்திரி கதையிலை கொஞ்சத்தை சொல்லன்

சாத்திரி : ஹீரோ அதாவது நீ என்றி ஆகிற சீனைச் சொல்லுறன் கேள்

நம்மடை ஹீரோயின் அதுதான் ஜோதிகா றோட்டாலை நடந்து வாற அவவின்ரை காலை மாத்திரம் காட்டுறம் அப்ப றோட்டிலை இருந்த கல்லொண்டு அவவின் காலிலை தட்டுப்பட்டு அங்கை படுத்திருந்த ஒரு சொறிநாய் மீது பட்டு விடுகிது நாய் மெல்ல தலையை தூக்கிப் பாத்து உறுமுது இந்த இடத்திலை பயங்கர சவுண்ட் ஈபைக்ட் ஒண்டைப் போடுறன் நாய் உறுமுறது தத்துரூபமா இருக்கும் பாரன்.;

முகத்தார் : என்ன நாயின் வொயிசை றைக்கோட் பண்ணிப் போடப் போறீயே

சாத்திரி : சா. . .முனியம்மாவை டப்பிங் குடுக்க வைக்கலாம் எண்டு இருக்கிறன்

முகத்தார்: சரி இதுக்கை நான் எங்கை வாறன்

சாத்திரி : பொறன். . அப்பதான் நீ நித்திரையாலை எழும்பி கேட்டை திறந்து கொண்டு றோட்டுக்கு வாறாய் ஜோதிகாவை துரத்த நினைத்த நாய் சடின் பிரேக் போட்டு உன்னைப் பாக்குது அதுக்கு பழைய நினைவுகள் ஏதோ ஞாபகம் வர அப்பிடியே உன்மேலை பாய்ஞ்சு கொத்தோடை கவ்வுது. .

முகத்தார் : சாத்திரி உனக்கே இது நல்லா இருக்கா ஜோதிகாவை காப்பாத்தப் போய் கடைசிலை என்னையே காப்பாத்தேலாம போகப் போகுது. .

சாத்திரி : ஆ.. இஞ்சைதான் நீ சாத்திரியின் விளையாட்டை பாக்கனும் அப்பிடியே உனக்கும் நாய்க்கும் ஒரு பயங்கரச் சண்டையை சேக்கிறன் திடீரென நீ நாயின் காதுக்கை ஏதோ சொல்லுறாய் அதைக் கேட்டதும் நாய் சும்மா பிச்சுக்கிட்டு திரும்பி பாக்காம ஓடுது நீ என்ன சொன்னாய் எண்டதை படத்திலை கடைசி மட்டும் சொல்லவே மாட்டம் இதையெல்லாம் ஓரமா பாத்துக் கொண்டிருந்த ஜோதிகா உனக்குக் கிட்ட வந்து அப்பிடியே உன்ரை கையை பிடித்து தாங்ஸ் எண்டு சொல்லறா அப்பிடியே கட் பண்ணி போடுறம் ஒரு குத்து சோங் சும்மா மன்மதராசா தோத்துப் போகும் பாரன்

முகத்தார் : எனக்கெல்லாம் அப்பிடி ஆட ஏலாதடா. .

சாத்திரி : உன்னை ஆர் ஆடச் சொன்னது நீ சும்மா நில்லு நான் கமராவை ஆட்டுறன்

(முகத்தார் மெதுவாக கண்ணை மூடி ஜோதிகாவுடன் டூயட் பாடுற சீனுக்குள் போகிறார் திடீரென "பொதக்' எண்டு ஒரு சத்தம்)

பொண்ணம்மா : என்னப்பா ஒழுங்கா கட்டிலை படுக்கத்தெரியாதோ விழுந்திட்டியள் வயசுபோண நேரத்திலை கை கால் முறிஞ்சா எனக்குத்தான் கரைச்சல்

முகத்தார் : (மனசுக்குள் அடக் கடவுளே கனவிலை ஜோதிகாவோடை கட்டிப் பிடிச்சு உருளேக்கைதான் விழுந்ததெண்டு பொண்ணம்மாக்குத் தெரிஞ்சால்??????? )

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

அடடட... சுப்பர்... கலக்கிறீங்க.. பார்ற் 3ம் அருமை.. சா போற போக்கை பார்த்தால் டன்னின் புலனாய்விண்ட ரெக்கோட்டை சில வாரங்களில உடைக்கும் போல... :wink: :P

இருந்தாலும் முகத்தார் அந்த நாயிண்ட காதுக்க என்ன சொன்னார் எண்டதை கடைசி வரை சொல்லப்பாருங்க அங்கதான் நிக்கிறார் சாட்றீ... :wink: :P

ஒவ்வொரு ஞாயிறும் யாழ் இனையத்தளத்தில் காணத்தவறாதீர்கள் முகத்தார் வீடு... நிறை இருந்தால் பொண்ணம்மாக்காவிடம் சொல்லுங்கள், குறை இருப்பின் முகத்தாருக்க்கு சொல்லுங்கள்... :idea: :idea:

Link to comment
Share on other sites

ஆகா ஆகா முதத்தார் தொடர்ந்து எழுதி கலக்குறீங்க. என்ன தல உங்களுக்கு நடிகை ஜோதிகாவா பிடிக்கும் சொல்லவே இல்ல :P

Link to comment
Share on other sites

முகத்தார் :!: எங்கயோ போயிட்டிங்க

ஆனால் ட்ன்னுக்குத்தான் பயம் வந்துட்டுத்து :):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலக்கிறீங்க முகத்தார்

Link to comment
Share on other sites

முகத்தார் சும்மா சொல்லக் கூடாது கலக்குறீங்க. தொடர்ந்தும் கலக்குங்க.

:):(:(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாயிருக்கு முகத்தார் அங்கிள் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலக்கிறீங்க தாத்தா :wink: :P :P

Link to comment
Share on other sites

நல்ல கற்பனை....முகத்தார்... உண்மையா இவற்றை வைத்து ஒரு நகைச்சுவைத் தொடரத் தயாரிக்கலாமே...முகத்தார்..! குறும்படங்கள் பாணியில்.. நகைச்சுவைத் தொடர்கள்..! :P :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.