Jump to content

முகத்தார் வீடு


Recommended Posts

  • Replies 428
  • Created
  • Last Reply

நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்... :P :P :P

பாவம் அனித்த முகத்தார்.. எப்படி தொடர்ந்து எழுதுவார் ஆ?? வீட்டில பொன்ஸ் பாட்டின்ர உடுப்பு தோய்கிறது யாரு? பொன்ஸ் பாட்டிக்கு வக்கினையா சமைச்சுபோடுறது யாரு? பொன்ஸ் பாட்டிக்க்கு யாரு கால் பிடிச்சுவிடுறது?? இதுக்கெண்டு தூயா பையனையா வேலைக்கு அமர்த்தமுடியும்?? ஆ??? :evil: :twisted: :evil:

Link to comment
Share on other sites

சூப்பர்ரா இருக்கு முகத்தார் அங்கிள...

ம்ம்ம்;ம அப்பிடி அந்த நாய்ட்ட என்ன சொல்லி இருப்பிங்க?

பொன்னம்மாக்கா வாரா என்டா? :):lol:

Link to comment
Share on other sites

பாவம் அனித்த முகத்தார்.. எப்படி தொடர்ந்து எழுதுவார் ஆ?? வீட்டில பொன்ஸ் பாட்டின்ர உடுப்பு தோய்கிறது யாரு? பொன்ஸ் பாட்டிக்கு வக்கினையா சமைச்சுபோடுறது யாரு? பொன்ஸ் பாட்டிக்க்கு யாரு கால் பிடிச்சுவிடுறது?? இதுக்கெண்டு தூயா பையனையா வேலைக்கு அமர்த்தமுடியும்?? ஆ??? :evil: :twisted: :evil:

புலநாய் உயிரோட திரிய வேணுமா வேண்டாமா? :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

சாத்திரி : உன்னை ஆர் ஆடச் சொன்னது நீ சும்மா நில்லு நான் கமராவை ஆட்டுறன்

செமப் பகிடி சூப்பர் முகத்தார்

Link to comment
Share on other sites

பாவம் அனித்த முகத்தார்.. எப்படி தொடர்ந்து எழுதுவார் ஆ?? வீட்டில பொன்ஸ் பாட்டின்ர உடுப்பு தோய்கிறது யாரு? பொன்ஸ் பாட்டிக்கு வக்கினையா சமைச்சுபோடுறது யாரு? பொன்ஸ் பாட்டிக்க்கு யாரு கால் பிடிச்சுவிடுறது?? இதுக்கெண்டு தூயா பையனையா வேலைக்கு அமர்த்தமுடியும்?? ஆ??? :evil: :twisted: :evil:

ஆகா..இவ்வளவு வேலைகள் இருக்கா..உண்மையாலும் பாவம் தான் முகத்தார் அங்கிள்.. :) :wink: :roll:

Link to comment
Share on other sites

களத்தில் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் நிறைய இருக்கிறீர்கள் என பார்க்கும் போது சந்தோஷமாக் கிடக்கு எந்த நேரமும் களத்தில் இறுகிய முகங்களுடன் கருத்தெழுதுவதில் என்ன இருக்கு மனம் இலேசாக இளைப்பாற இந்த முகத்தார் வீடு உதவி செய்யும் இந்த முகத்தார் வீடு எனக்கு மட்டும் சொந்தமானதல்ல உங்களுடையதும்தான் (பொண்ணமக்கா நீங்கலாக) ஆனபடியால் நீங்களும் இதில் எழுதலாம் (முகத்தார் பகிடி போல) அல்லது உங்களின் ஜடியாக்களை எனக்குத் தெரியப்படுத்தலாம் சனத்தைச் சிரிக்க வைப்பதென்பது சும்மா லேசுப்பட்ட விசயமில்லை அதுவும் இந்த கத்திகளிட்டையும் தப்பிக்கவேண்டுமே உங்களின் ஆர்வத்துக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

பிறகென்ன முகத்தான் கலக்கு நேரம் கிடைக்கேக்கை நானும் வாறன் :P :P

Link to comment
Share on other sites

முகம்ஸ் சிரிச்சு சிரிச்சு வீட்டில அம்மா கேட்கிறா என்ன என்று..அம்மாக்கும் காட்டினேன்..நன்றி..மேலும் எழுதுங்கள்:)

Link to comment
Share on other sites

அப்போ அம்மாவும் சிரிக்க உடன அப்பா கேட்டு இருப்பாரே என்னன்னு?

Link to comment
Share on other sites

அப்போ அம்மாவும் சிரிக்க உடன அப்பா கேட்டு இருப்பாரே என்னன்னு?

சீ அப்பா கேக்க இல்லை சுண்டல் கேட்டவர் :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

புலநாய் உயிரோட திரிய வேணுமா வேண்டாமா? :twisted: :twisted: :twisted:

ரசி அக்காவின் பூனை டன் அண்ணாவின் புலநாய்க்கு தான் காவல் காக்குதாம் :)

Link to comment
Share on other sites

காவல் காக்கிற மாரித் தெரியேல்லையே வெண்ணிலா :?

(அந்தப் பூனை எங்கடா ஆள் வரும் சுடலாம் எண்டு நிக்கிது)

Link to comment
Share on other sites

முகத்தார் வீடு அங்கம் 4

இது சாத்திரியார் வீட்டில்

சாத்திரி இருமியபடி வீட்டில் நுழைகிறார்

முனியம்மா: என்னப்பா இருமிறியள் குளிர் தொடங்கீட்டுது உடுப்பை நல்லா போட்டுகொண்டு போறேல்லையே சின்னா வந்து கூப்பிட்ட உடைனை அப்பிடியே ஒடுறதே ஜக்கெட்டை போட்டு கொண்டு போயிருக்கலாமே?

சாத்திரி: அடடா என்னது திடீரெண்டு இவ்வளவு அக்கறை ஏதோ கேக்க போறாய் போலை கிடக்கு என்ன

முனியம்மா: இஞ்சை வாங்கோப்பா இதிலை கொஞ்ச நேரம் இருங்கோ ஒரு அலுவல் கதைக்க வேணும்

சாத்திரி: அட அதுதானே பாத்தனான் என்னடா தீரெண்டு அன்பு எண்டு விசயத்தை சொல்லு

முனியம்மா: இல்லையப்பா பேன கிழைமை அந்த அறுபதாம் கலியபணத்துக்கு போட்டு வந்ததிலை இருந்து எனக்கும் ஒரு ஆசை நானும் அறுபதாம் கலியாணம் செய்யலாமெண்டு நினைச்சிருக்கிறன்

சாத்திரி: நான் ஒருத்தன் இருக்கிறன் இந்த வயசிலை இனி இன்னும் 59 பேரை எங்கை தேடிபிடிச்சு செய்ய போறாய்

முனியம்மா: உங்களுக்கும் முகத்தானோடை சேந்து எப்பவும் நக்கலும் நளினமும் பழகிட்டுது ;இதுக்குதான் உங்களை கேக்காமலேயே நான் காட் அடிக்க குடுத்துட்டன்

சாத்திரி: அடியே அறுபாதாம் கலியாணமெண்டுறதடி பிள்ளைளளையெல்லாம் நல்லபடியா கட்டி குடுத்து அதுகளும் பிள்ளை குட்டியளோடை சந்தோசமா இருக்கேக்கை எங்கடை கலியாணத்தை ஊரே பாத்திருக்கும் பிள்ளையளை தவிர அதாலை பிள்ளை எங்கடை கலியாணத்தை பாக்கவேணுமெண்டு ஒரு சந்தோசத்துக்கு பிள்ளையளா எங்களுக்கு செய்து பாக்கிறது தானடி அறுபதாம் கலியாணம் நாங்களா திருப்பி செய்யிறதில்லை இப்ப இதுவும் அய்ரோப்பாவிலை ஒரு ஸ்ரைலா போச்சுது

முனியம்மா: இஞ்சையப்பா இப்ப வயசானவை எல்லாரும்தான் செய்யினம் எங்களுக்கு 5 பெட்டையள்ளை 3 கட்டி குடுத்தாச்சு மற்றது இரண்டும் அதுகளா ஏதும் பாத்து செய்தாதான் நீங்கள் ஒண்டும் செய்யிற மாதிரி தெரியேல்லை நீங்களும் கண்டதையும் குடிச்சு வருத்தங்கள் வந்திட்டிது இருமிறியள் அதாலை தான் அவசரமா அறுபதாம் கலியாணத்தை செய்வம் எண்டு யோசிச்சனான்

சாத்திரி: ஆகா என்ன தாராள மனசு உனக்கு நான் மண்டையை போடுறதுக்கு முதல் உனக்கு 60ம் கலியாணம் செய்யவேணும்.நானே ஊரை சனத்தை பேக்காட்டி சாத்திரம் குறிப்பு எண்டு பாக்கிறன். அதுக்கை யாரும் நல்ல இழிச்சவாய் பெடியளா அம்பிடாதா எண்டு படாத பாடு படுறன் உனக்கெங்கை விழங்க போகுது

முனியம்மா: உங்கடை விளக்கத்தை விடுங்கோ அந்த நேரம் ஊரிலை நீங்கள் பஞ்சத்திலை நூல் மாதிரி 7 பவுணிலை தாலியை கட்டி போட்டியள் இப்பதான் இஞ்சை அகதி காசு பிள்ளை காசு எண்டு வசதியா வந்திட்டம் கையோடை தாலியையும் மாத்தி ஒரு 60. 70 பவுணிலை கட்டவேணும்

சாத்திரி: அடியே கழட்டி கழட்டி கட்ட அது சீலை இல்லையடி தாலி. அவித்து மாத்தி கட்டினா அதுக்கு பேர் வேறையடி

முனியம்மா: சும்மாயிருங்கோ இப்ப யுரோப்பிலை இது நோமல் எல்லாரும்தான் அடிக்கடி மாத்தி பவுணை கூட்டி கட்டினம்

சாத்திரி: ஏனடி அண்டைக்கு எங்கடை இடத்திலை 45 வயசுகாரி 25 வயசுகார பெடியோடை ஓடிட்டாள் இதுவும்தான் இஞ்சை யுரோப்பிலை நோமல் நீயும் ஓடன்

முனியம்மா: உங்களை கட்டி நான் என்ன சுகத்தை கண்டன் அந்த நேரம் வாத்தியார் எண்டு பொய் சொல்லி உங்கடை வீட்டுகாரர் என்னை கட்டி வைச்சிட்டினம் ம்ம்ம்ம்ம்...........

சாத்திரி: எடியே பழசைகிளறாதை அந்த நேரம் உன்ரை கொப்பரும்தான் தனக்கு சுதுமலை அம்மன் கோயிலை சுத்தி வயல்காணி இருக்கு எல்லாம் உனக்குதான் எண்டு பொய் சொன்னவர் நானும் ஒரு மரியாதைக்காக காட்ட சொல்லி கேக்ககேல்லை பிறகு தானே தெரியும் அது உங்கடை காணி இல்லை அது அம்மன் கோயில் வீதியெண்டு. நல்ல வேளை நான் நெல்லு விதைக்க வெளிக்கிடேல்லை.

முனியம்மா : இப்ப முடிவா என்ன சொல்லுறியள் 60ம் கலியாணம் செய்யிறதா இல்லையா

சாத்திரி: எடியே ஊர் உலகத்தக்:கு காட்ட நாங்கள் 60ம் கலியாணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை ஒரு காலம் பிள்ளையள் விரும்பினா செய்து வைக்கட்டும் அப்ப பாப்பம் உன்னோடை இருந்தா சண்டைதான் வரும் நான் முகத்தான் வீட்டு பக்கம் போட்டு வாறன்

சாத்திரி முகத்தான் வீட்டு அழைப்பு மணியை அமத்துகிறார். பொண்ணம்மாக்கா கதவை திறக்கிறார்

பொண்ணம்மாக்கா: வாங்கோ சாத்திரி உங்களை நினைக்க நீங்கள் வாறியள் உள்ளையிருங்கோ அவர் குளிக்கிறார் உங்களிட்டை ஒரு விசயம் கேக்க வேணும் நாங்கள் 60ம் கலியாணம் செய்யலாமெண்டு இருக்கிறன் அவரிட்டை இன்னும் கேக்கேல்லை ஒரு நல்ல நாளா பாத்து சொல்லுங்கோ

அய்யோ எண்டு அலறியபடி சாத்திரி வீதியில் இறங்கி ஓடுகிறார்

யாவும் கற்பனையே

Link to comment
Share on other sites

சாஸ்தட நிலமையை பார்த்தால் ;) ;)

Link to comment
Share on other sites

சாத்திரி யாராவது தொடக்கிவிட்டாத்தான் வரும் போல கிடக்கு நல்லா இருக்கு அது சரி ஏன் விழுந்தடிச்சு ஓடுறாய் பேசாம தாலி எடுத்துக் குடுத்து ஹாயா போகவேண்டியதுதானே.....

Link to comment
Share on other sites

60 வயசிலதான் 60ம் கல்யாணம் வைப்பினம்..

அப்ப சாத்திரி ஐயாககும் முகம் தாத்தாக்கும்

வயது 60 ஆஆ? :shock: :P :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :):lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.