Jump to content

யாழ்.குடாநாட்டு வீதிகளின் புனரமைப்பு சீனாவின் கைகளில்


Recommended Posts

யாழ்.குடாநாட்டு வீதிகளின் புனரமைப்பு சீனாவின் கைகளில்

யாழ்ப்பாணத்தில் நான்கு பிரதான வீதிகளைப் புனரமைக்கும் திட்டம் சீனாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ் - பலாலி வீதி, யாழ் - காங்கேசன்துறை வீதி, யாழ் - பருத்தித்துறை வீதி, புத்தூர் - மீசாலை வீதி ஆகிய வீதிகளைப் புனரமைப்பதற்கு சீன அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது.

87 கி.மீ நீளமான இந்த வீதிப் புனரமைப்பு நடவடிக்கையில்; உள்ளுர் ஒப்பந்தகாரர்கள் புறக்கணிக்கப்பட்டு, சீன நிறுவனங்களே நேரடியாக ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் புனரமைப்பு வேலைகளின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை யாழ்.முனியப்பர் கோவில் முன்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் சீன அரசின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே வடபகுதிக்கான தொடரூந்துப் பாதை புனரமைப்புக்கு உதவுவதற்கும் சீனா உடன்பாடு தெரிவித்திருந்தது.

பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையான தொடரூந்துப் பாதையைப் புனரமைக்கும் வேலைகளில் சீனா ஈடுபடவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டின் முதன்மை வீதிகளைப் புனரமைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

குடாநாட்டின் ஒட்டுமொத்த பயண மார்க்கங்களும் தற்போது புனரமைப்புக்காக சீனாவிடம் கையளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20100122100356

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே கடலுக்குள்ளாலே யூரோ ரிய+ணல் மாதிரி இந்தியாவுக்கு போட்டு விட்டால் நல்லது.இந்தியாவுக்கு ஆப்பு இறுகுகிறது.இதுக்குள்ள நாம இந்தியாவை நம்ப வேணும் என்று கட்டுரைகள் வேற??????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடியே கடலுக்குள்ளாலே யூரோ ரிய+ணல் மாதிரி இந்தியாவுக்கு போட்டு விட்டால் நல்லது.இந்தியாவுக்கு ஆப்பு இறுகுகிறது.இதுக்குள்ள நாம இந்தியாவை நம்ப வேணும் என்று கட்டுரைகள் வேற??????????

கச்சதீவில் சீனா ஒரு கடற்படைதளத்தை அமைக்க நான் ஆதரவு அழிக்கிறேன். :)

Link to comment
Share on other sites

என்னையும் சேர்;த்துக்கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையும் சேர்;த்துக்கொள்ளவும்.

இந்தியா துணைதூதரகமும் அமைக்க போகிறதாம் சீனாவும் துணை தூதரகம் யாழ்பாணத்தில் அமைப்பதையும் நான் ஆமோதிக்கிறேன். எங்கட சனம் இலகுவாக பீக்கிங் பாத்த மாதிரியும் இருக்கும் , இனி எனக்கு பிடி்ச்ச சாப்படு நூடில், பூச்சி, பல்லி, பாம்புதான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவில் சீனா ஒரு கடற்படைதளத்தை அமைக்க நான் ஆதரவு அழிக்கிறேன். :lol:

நானும் ஆதரவு அளிக்கின்றேன்

நானும் ஆதரவு அழிக்கிறேன்

எதுவாக இருந்தாலும் நானும் ஆமோதிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி எனக்கு பிடி்ச்ச சாப்படு நூடில், பூச்சி, பல்லி, பாம்புதான். :lol:

ரூமினிட் நூடில்ஸ் போல யாராச்சும் ரூமினிட்ல தமிழீழம் தந்தால் அதையும் ஆமோதிப்போம். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.