Jump to content

இராணுவப்புரட்சியை மகிந்த ராஜபக்சே மேற்கொண்டால் அவருக்கு நன்கு பாடம் புகட்டப்படும்: சரத் பொன்சேகா


Recommended Posts

இராணுவப்புரட்சியை மகிந்த ராஜபக்சே மேற்கொண்டால் அவருக்கு நன்கு பாடம் புகட்டப்படும்: சரத் பொன்சேகா

சிறீலங்கா அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்தா தோல்வியடைந்த பின்னர் இராணுவத்தின் மூலம் பதவியை கைப்பற்ற முனைந்தால் அவருக்கு நல்ல பாடம் புகட்டப்படும் என நேற்று (23.01.2010) கொழும்பில் உள்ள ஹில்ட்டன் ஆடம்பர விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இம் மாநாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, ஜே.வி.பி தலைவர் சோமவன்சா அமரசிங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், திரு எஸ். சதாசிவம் உட்பட பெருமளவான அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஜெனரல் பொன்சேகா அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி: நீங்கள் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் போது இருந்த நிலைக்கும் தற்போதுள்ள நிலைக்கும் என்ன வேறுபாட்டை உணர்கின்றீர்கள்?

பதில்: எந்த அரசியல் அனுபவமும் இல்லாது நான் எனது பிரச்சாரத்தை ஆரம்பித்த போதும், தற்போது மகிந்தவை விட அனுபவத்தில் முன்னுக்கு உள்ளதாக உணர்கிறேன். என்னைச்சுற்றி கூடும் கூட்டத்தை கொண்டு நீங்களே அதனை உணர்ந்து கொள்ளலாம். எனக்கு ஐ.தே.க, ஜே.வி.பி உட்பட பல அரசியல் கட்சிகளின் ஆதரவுகள் உண்டு.

கேள்வி: கொழும்புக்கு 15 டாங்கிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீங்கள் கூறியது குறித்து ஏதாவது மேலதிகமாக கூற விரும்புகின்றீர்களா?

பதில்: அவை டாங்கிகள் அல்ல, அவை துருப்புக்காவி கவசவாகனங்கள். தேர்தல் நடைபெறும் போது இராணுவத்தையும், கவசவாகனங்களையும் கொழும்புக்கு கொண்டுவருவதன் உள்நோக்கம் வேறு.

கேள்வி: தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக உங்களுக்கு என்ன முறைப்பாடுகள் கிடைத்துள்ளன?

பதில்: எண்ணுக்கணக்கற்ற முறைப்பாடுகள் உள்ளன. போலியான வாக்காளர் அட்டைகள், போலியான அடையாள அட்டைகள், போலியான வாக்கு பெட்டிகள் என அதன் பட்டியல் நீளம். யாழ்ப்பாணத்திற்கு அடையாள அட்டைகளை தயாரிக்கும் இயந்திரமும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒரு பாரஊர்தி நிறைய நிரப்பப்பட்ட வாக்கு பெட்டிகள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் என்னிடம் தெரிவித்துள்ளனர். எனது ஆதரவாளர்கள் அணிந்திருப்பதைப் போல கறுப்பு நிற 3 இலட்சம் ரீ-சேட்டுக்களை அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

எனவே தேர்தலின் போது அவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுவிட்டு எமது ஆதரவாளர்கள் மீது பழியை போட முயற்சிக்கின்றனர். தேர்தலை அரசு ஏற்கனவே இழந்துவிட்டது. நாம் முன்னனியில் உள்ளோம். எமக்கு 54 விகித ஆதரவுகளும், அரசுக்கு 46 விகித ஆதரவுகளும் உள்ளது. எனவே தான் தோல்வியில் இருந்து தப்புவதற்கு அரசு எல்லா வகையான தேர்தல் முறைகேடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

கேள்வி: தேர்தல் வன்முறைகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?

Wariyapola-incidentபதில்: போரில் வன்முறைகளை நாம் வன்முறைகளால் எதிர்கொள்வோம், ஆனால் தேர்தல் வன்முறைகளை வன்முறைகளால் எம்மால் எதிர்கொள்ள முடியாது. அது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத்தான் எம்மால் முடியும். அவர்கள்தான் அமைதியை ஏற்படுத்த வேண்டும். நாம் இராணுவத்தையும், காவல்துறையினரையும் முழுமையாக நம்புகின்றோம்.

கேள்வி: இராணுவமும், காவல்துறையும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக நீங்கள் குற்றம் சுமத்துகிறீர்களா?

பதில்: இராணுவத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள் மகிந்தவின் தயவை பெறுவதற்காக என்மீது குற்றம் சுமத்துகின்றனர். பாதுகாப்பு செயலாளரும், அவரின் உயர் அதிகாரிகளும் என்மீது ஊடகங்கள் ஊடாக சேறடிப்புக்களை மேற்கொள்கின்றனர்.

ஆனால் பிரிகேடியர் மற்றும் ஜெனரல் தரத்திற்கு கீழ் உள்ள அதிகாரிகளும், உதவி காவல்துறை ஆணையாளர் தரத்திற்கு கீழ் உள்ள அதிகாரிகளும் எந்த தவறுகளையும் மேற்கொள்ளவில்லை என்பது எனக்கு தெரியும்.

தேர்தலுக்கு முன்னர் அரசு சில இராணுவ அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. தேர்தல் சமயத்தில் யாழ்ப்பாணம் மற்றும் பூநகரி பகுதிகளில் பணியாற்றிய கட்டளை அதிகாரிகளை அரசு பங்களாதேசத்திற்கு அனுப்பியுள்ளது.

வடமராட்சி பகுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி எந்த காரணங்களுமின்றி கொத்தலாவல அக்கடமிக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது வடமராட்சிக்கு பொறுப்பாக எந்த இராணுவ அதிகாரியும் இல்லை.

கிளிநொச்சி பகுதியின் இராணுவ கட்டளை அதிகாரி பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய நண்பர். விடுதலைப்புலிகளுடன் வர்த்தக உடன்பாடுகளை கொண்டிருந்ததாக அவரின் மீது பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவருக்கு தற்போது யாழ்ப்பாணத்தின் பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.

தொலைக்கட்சிகள் ஊடாக இராணுவ ஜெனரல்கள் எவ்வாறு என்மீது சேறடிக்கின்றனர் என்பதை நீங்களே கண்டிருப்பீர்கள். பாதுகாப்பு செயலாளரின் ஆளுமை தொடர்பாகவே அவர்கள் பேசுகின்றனர்.

பாதுகாப்பு செயலாளர் கடந்த 15 வருடங்களாக கணணிகளை இயக்கியே பழக்கப்பட்டவர். அந்த நேரத்தில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம். நான்கு தடவை நான் காயமடைந்தேன். ஆனால் தற்போது இந்த கணணி பலகையை தட்டுபவர் இராணுவத்தளபதிகளுக்கு உத்தரவிடுகின்றார்.

கேள்வி: போர்க்குற்றங்கள் தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: எனது காலத்தில் இராணுவத்தின் மீது சுமத்தப்படும் எல்லா குற்றச்சாட்டுக்களுக்கும் நான் பொறுப்பேற்கத் தயார். எனது இராணுவம் எந்த தவறும் செய்யவில்லை.

தானே போருக்கான உத்தரவுகளை வழங்கியதாக பிரச்சாரப்படுத்த மகிந்த விரும்புகிறார். குற்றங்கள் முன்வைக்கப்பட்டால் இராணுவத்தளபதியே அதற்கு பொறுப்பு. அரச தலைவர் அது தொடர்பாக இராணுவத்தளபதியை பணிக்கலாம். அது நடைபெற்றால் குற்றச்சாட்டுக்களை நாம் உடனடியாக எதிர்கொள்ளத் தயார்.

கேள்வி: இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றாதா?

பதில்: சிறீலங்கா இராணுவத்தின் மூலம் அதனை மேற்கொள்ள முடியாது. மகிந்த அதற்கு முயற்சித்தால் அவருக்கு நல்ல பாடம் புகட்டப்படும்.

http://meenakam.com/?p=4057

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியும் ராசா

யார் முதலில் ஆரம்பிப்பது என்பதுதான் தங்களுக்க இப்ப உள்ள பிரச்சினை என்று...

ஆவலுடன் அந்த நாளை எதிர்பார்த்தபடி...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.