Jump to content

நூறாண்டு காலம் வாழ்வது எப்படி?


Recommended Posts

நூறாண்டு காலம் வாழ்வது எப்படி

நூறாண்டு காலம் வாழுவதற்குரிய மந்திரம் எது ?

நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டு திசைகளே உள்ளன..

டேனிஸ் மக்களிடையே நூறாண்டு காலம் வாழ்வது எப்படியென்ற தேடல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசும் ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாண்டு காலம் உங்கள் உயிர் வாழும் காலத்தை எமது ஆட்சி நீட்டிப்பு செய்யும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. 50 இலட்சம் குடித்தொகை கொண்ட டென்மார்க்கில் தற்போது 867 பேர் நூறு வயதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 733 பேர் பெண்களாகும். டென்மார்க்கின் சராசரி இறப்பு வயது பெண்கள் 81 ஆகவும், ஆண்கள் 76 ஆகவும் உள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாழ்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனால் அனைத்திலுமே முக்கியமான காரணம் பெண்கள் மாற்றங்களை இலகுவாக ஏற்று அதற்கமைவாக வாழ்வதால் அவர்கள் ஆண்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று இது குறித்த ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் கெனிங் கியக் தெரிவித்துள்ளார். நூறாண்டு காலத்தை எட்டித் தொடும் பிரதான மந்திரமாக இது இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நூறாண்டு வாழ மாற்றங்களை இயல்பாக ஏற்கப் பழகுங்கள்.

நூறு வயதை எட்டித் தொடும் முதியவர்களுடன் பேசுவது அவசியம். அவர்களுடைய கடந்தகால வாழ்க்கை, உணவு முறைகள் போன்றவற்றை கேட்டறிவது மற்றவர்களும் நீண்ட காலம் வாழுவதற்கு உதவும். ( இவர்கள் கிளம்ஸ்கள் என்று வயோதிபரை ஒதுக்கும் இளையோர் விரைவான சாவிற்கு வரவேற்புப் பாடுகிறார்கள் ) புவியில் வடக்கு – கிழக்கு – தெற்கு – மேற்கு என்று நான்கு திசைகளை பிரதானமாகக் கூறுவோம். ஆனால் நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டே இரண்டு திசைகள் மட்டுமே உள்ளன. நாம் செய்யும் செயல் நீண்ட கால உயிர்வாழ்தலுக்கு எதிரான திசையிலும், சரியான திசையிலும் மட்டுமே இருக்கும். குறுங்கால உயிர் வாழும் திசைக்குள் பிரவேசித்தால் உடன் அதை நிறுத்தி சரியான திசைக்குள் திரும்பிவிட வேண்டும். ஒவ்வொரு செயலிலும் இந்த இரு திசைகளையும் பிரதானமாகக் கருதி உடனுக்குடன் மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லையேல் நீடித்த ஆயுளை எட்டித் தொட முடியாது. இதுதான் 100 வயதைத் தொடும் காந்த முள்ளாகும்.

மேலும் இளமையுடன் வாழ்வை நகர்த்த சில யோசனைகளையும்; தந்துள்ளார்கள்.

01. மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் உடன் நிறுத்தி சரியான திசைக்கு வாழ்வை திருப்புங்கள்.

02. தினசரி 30 நிமிடங்கள் தேகப்பயிற்சி செய்யுங்கள்.

03. உடன்பாடு காண முடியாதவர்களை கைவிட்டு புதியவர்களுடன் இணைந்து புதுவாழ்வு காணுங்கள். பழையதையே நினைத்து கண்ணீர் விட வேண்டாம்.

04. சிறு பிள்ளைகளுடன் பழகி குழந்தை மனதோடு வாழுங்கள்.

05. புதிய மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள், மூளை புதுமைகளை விரும்பும்

06. புதினங்களை அறியுங்கள் ஆனால் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

07. ஆரோக்கிய வாழ்வு தொழில் போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட வேண்டும்.

தற்போது 867 ஆக இருக்கும் 100 வயதைத் தொட்ட மனிதர் எண்ணிக்கையை எதிர்வரும் 2050 ல் 20.000 ஆக உயர்த்திவிட இப்போதே அரசு திட்டங்களை தீட்டியுள்ளது. இப்போது பிறக்கும் பிள்ளைகளில் இருவருக்கு ஒருவர் 100 வயதைத் தொடுவார்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.

புலம் பெயர் தமிழருக்கான மேலதிக போனஸ் :

போர்கள் – கொடிய நோய் – வறுமை – சுகாதார சீர்கேடு – நல்ல உணவு இன்மை – தவறான அறிவு குறைந்த ஆட்சித்தலைமைகளும், அவர்களின் அடியாட்களும் அரசியலில் இருப்பது – தறவான இராணுவங்கள் – பிடிவாத குணம் கொண்ட மூர்க்க எண்ணங்கள் – ஆயுத பாவனை – கொலை – கொள்ளை – கப்பம் – பேசித் தீர்க்க தெரியாத பாமரத்தனம் – கல்வியை இழந்த சமுதாயமாக இருப்பது – கல்வியை வாழ்விற்குள் கொண்டுவராமல் பணத்திற்காக வாழ்வது – சர்வாதிகாரத்திற்கு துணை போவது – தலைமை வழிபாடு – அறிவு குறைந்தோர் ஊடகங்களில் இருந்து வழிகாட்டுவது – மக்களை கண்ணீர் வெள்ளத்தில் வைத்து பணம் பண்ணப் பார்ப்பது போன்ற பழக்கங்கள் மக்களின் ஆயுளைக் குறைக்கும் திசைப்பக்கமாக இருப்பதை நீண்ட காலம் வாழ விரும்புவோர் கவனத்தில் கொள்வது அவசியம்.

http://www.alaikal.com/news/?p=30217#more-30217

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறாண்டு வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறோம் :lol:

Link to comment
Share on other sites

:lol: கஷ்டப் பட்டு சொன்ன எல்லாத்தையும் விட்டு போட்டு நூறு வருஷம் சந்தோஷமாகவா வாழப் போறம்? வாழ்க்கை குறுகியதாக இருந்தாலும், தானும் சந்தோசமா இருந்து, அதே நேரம் முடிஞ்சால் நாலு பேருக்கு நன்மை கொடுக்க கூடியதாகவும், முடியாவிட்டால் அடுத்தவனுக்கு அலுப்புக் கொடுக்காமல் வாழ்ந்தாலே காணும். நூறு வருஷம் வாழ்ந்த நிம்மதி கிடைக்கும் :lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூறாண்டு வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறோம் :wub:

அதுதானே?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் தமிழருக்கான மேலதிக போனஸ் :

போர்கள் – கொடிய நோய் – வறுமை – சுகாதார சீர்கேடு – நல்ல உணவு இன்மை – தவறான அறிவு குறைந்த ஆட்சித்தலைமைகளும், அவர்களின் அடியாட்களும் அரசியலில் இருப்பது – தறவான இராணுவங்கள் – பிடிவாத குணம் கொண்ட மூர்க்க எண்ணங்கள் – ஆயுத பாவனை – கொலை – கொள்ளை – கப்பம் – பேசித் தீர்க்க தெரியாத பாமரத்தனம் – கல்வியை இழந்த சமுதாயமாக இருப்பது – கல்வியை வாழ்விற்குள் கொண்டுவராமல் பணத்திற்காக வாழ்வது – சர்வாதிகாரத்திற்கு துணை போவது – தலைமை வழிபாடு – அறிவு குறைந்தோர் ஊடகங்களில் இருந்து வழிகாட்டுவது – மக்களை கண்ணீர் வெள்ளத்தில் வைத்து பணம் பண்ணப் பார்ப்பது போன்ற பழக்கங்கள் மக்களின் ஆயுளைக் குறைக்கும் திசைப்பக்கமாக இருப்பதை நீண்ட காலம் வாழ விரும்புவோர் கவனத்தில் கொள்வது அவசியம்.

இவை இல்லாட்டி நாங்க தமிழரில்லையே...

இப்படியான குண்ங்கள் தானே நம்மை தமிழர் என்று நிரூபிக்குது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01. மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் உடன் நிறுத்தி சரியான திசைக்கு வாழ்வை திருப்புங்கள்.

முதலில் இதிலிருந்துதான் ஆரம்பிக்கனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.............. வாழ்ந்து,.....பிறகு.... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்கய்யா.இருக்கிற இன்றைய நாளை சந்தோசமாக வாழந்தாலே பெரிய விசயம். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.