Jump to content

"பொண்ணுகளே ..." .... இரசித்த கவிதை ஒன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

முதலில் உங்களோடு பேச வரும் பெண்கள் இதயசுத்தியின்றி பேச வருவார்களா என்ற கேள்வி உங்களுக்கு ஏன் உதயமாகிறது? உங்கள் அவதானிப்பின் அடிப்படையிலேயே கோளாறு இருப்பதாய் தோன்றுகிறது. கடந்து வந்த பாதைகள்???.... (நீங்கள் யாராவது ஒரு சில பெண்களால் ஏமாற்றப்பட்டீர்களா?) காதல் என்பதில் பெண்கள் சுயநலமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் குறிப்பாக சொல்ல எத்தனிக்கும் விடயம் என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். பெண்களை இதயசுத்தியோடு பேச தயாராக்கச் சொல்கிறீர்கள் அந்த இதய சுத்தி மேலைத்தேய நாகரீகம் சார்ந்தா? அல்லது கீழைத்தேய பண்பாடு சார்ந்தா?

நான் கடந்து வந்த பாதை என்பது என் சொந்த வாழ்க்கைப் பாதையில் என்ற அர்த்தத்தில் அல்ல. என் வாழ்க்கையில் நான் பயணித்த இடங்களில் வாழ்ந்த இடங்களில் சேவையாற்றிய இடங்களில் என்று பல வகைப்படும்.

நான்... பெண்கள் என்னை ஏமாற்ற இன்னும் இடமளிக்கவில்லை. அளித்திருந்தால் நானும் ஏமாற்றப்பட்டிருப்பேன்.

இதயசுத்தி என்பது மனித நாகரிக்கத்திற்கானது. அதில் மேலையென்ன.. கீழையென்ன..! அன்பைப் போதித்த ஜேசுவும்.. கருணையைப் போதித்த நபியும் ஜீவகாருணியம் பேசிய புத்தனும்.. தர்மத்தைப் பேசிய கிருஷ்ணனும்.. மனிதத்தை தான் முன்னிறுத்தினார்களே அன்றி மேலை கீழை என்றா பேசினார்கள்.

இதய சுத்தி என்பதும் அப்படித்தான். அது ஒரு மனித நாகரிகப் பண்பு. பல பெண்கள் அதை இழந்து போலித்தனமாக பிறரை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நடிப்பின் நாயகிகள்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடந்து வந்த பாதை என்பது என் சொந்த வாழ்க்கைப் பாதையில் என்ற அர்த்தத்தில் அல்ல. என் வாழ்க்கையில் நான் பயணித்த இடங்களில் வாழ்ந்த இடங்களில் சேவையாற்றிய இடங்களில் என்று பல வகைப்படும்.

நான்... பெண்கள் என்னை ஏமாற்ற இன்னும் இடமளிக்கவில்லை. அளித்திருந்தால் நானும் ஏமாற்றப்பட்டிருப்பேன்.

இதயசுத்தி என்பது மனித நாகரிக்கத்திற்கானது. அதில் மேலையென்ன.. கீழையென்ன..! அன்பைப் போதித்த ஜேசுவும்.. கருணையைப் போதித்த நபியும் ஜீவகாருணியம் பேசிய புத்தனும்.. தர்மத்தைப் பேசிய கிருஷ்ணனும்.. மனிதத்தை தான் முன்னிறுத்தினார்களே அன்றி மேலை கீழை என்றா பேசினார்கள்.

இதய சுத்தி என்பதும் அப்படித்தான். அது ஒரு மனித நாகரிகப் பண்பு. பல பெண்கள் அதை இழந்து போலித்தனமாக பிறரை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நடிப்பின் நாயகிகள்..! :lol:

நெடுக்கு நீங்கள் பணியாற்றிய இடங்களில், வாழ்ந்த இடங்களில் பெண்களைக் கொச்சைப்படுத்தும் ஆண்கள் இல்லையா? அல்லது பெண்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்திவிட்டு கை கழுவி விட்டவர்கள் இல்லையா? ஏதோ ஜேசுவும்,புத்தனும். நபியும், கிருஸ்ணனுக்கும் மட்டுந்தான் ஜீவகாருண்யம் பேசத் தெரிந்ததாய் சொல்கிறீர்கள். அங்கு கூட உதாரணத்திற்கு ஆண்களையே முதன்மையாக்கிப் பேசும் ஆதிக்கப் போக்கே உங்களிடம் புலப்படுகிறது. ஏன் உங்கள் தந்தையைக் காட்டிலும் உங்கள் தாயாரிடம் நீங்கள் மனித காருண்யத்தை அறிந்ததில்லையா? சரி இவை நம் கருத்துரையாடலுக்கு அப்பாற்பட்டவை.

மனித நாகரீகப்பண்பைப் பல பெண்கள் இழந்து போலித்தனமாகப் பிறரை ஏமாற்றுகிறார்கள் என்று நீங்கள் குறிப்பிடும் அந்தப் புள்ளிக்கே வருகிறேன்.பெண்களின் மனித நாகரீகமாக நீங்கள் கருதும் விடயம் யாது? அதில் போலித்தனம் என்பது ஏற்படுவது எதனால்?

Link to comment
Share on other sites

நகைச்சுவையாக எழுதப்போய் நண்பர் நெடுக்காலபோவனை மாட்டி விட்டுட்டனோ, மன்னித்துக் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் நேரடியாக தான் ஏமாற்றப்பட வில்லை என்கிறார்.மற்றவங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பார்த்து தெளிவுபெற்றேன் என்கிறார்.இந்த உலகத்தில் எத்தனைவீதம் பேர் பிரமச்சாரிகளாக வாழுகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள நெடுக்கருக்கு

ஆழ்ந்த அனுபவசாலி என்கின்றரீதியில் ஒரு அறிவுரை...

பெண் இல்லாத வாழ்க்கை வெறுமைக்கு சமன்.

வாழ்க்கையில் 99வீத சந்தோசத்தை இழந்து கொண்டிருக்கின்றீர்கள்

செயல்முறை விளக்கம் தர உள்ளே செல்லுங்கள்

தேனை கேட்டறிந்து எழுதினால் எப்படி இருக்கும்

அதைத்தான் உணர்த்துகிறது தங்களது எழுத்து.

இல்லையென்றால் பிழை பெண்களிடமில்லை

தங்களிடமே

ஏதாவது ஒரு வைத்தியரை உடன் பார்க்கவும்

நல்ல வைத்தியரோ.... விசேசபடிப்பு படித்த வைத்தியரோ தேவையற்றது இதற்கு....

நன்றி

ஆமால்ல பிகரு நல்லா இருக்கில்ல..! எதுக்கும் உங்க ஆத்துக்காரியை கூட்டிக்கொண்டு வந்து வைச்சுக் கொண்டு சொல்லுங்கோ..! இன்னும் நல்லா இருக்கும்..! :D :D

மணமானால் அழகை ரசிக்கக்கூடாது என்று ஏன் நினைக்கின்றீர்கள்

ருசிக்கக்கூடாது என்பதை ஒத்துக்கொள்கின்றேன்

எனது மனைவியின் கருத்தும் இதுதான்

FRANCE வரும்போது சொல்லுங்கள் நேரிலேயே கேட்டுக்கொள்ளுங்கள்

ஒரு திறந்த புத்தகம் யான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நாலு பேருக்குள் தேர்தல் நடத்தி அதில் 3பேர் நல்லவர்கள் என்பதற்காக 75% நல்லவர்கள் என்று முடிவு கட்டுகீறீர்கள். நான் பரந்து பட்டு சமூகத்தின் பல இடங்களிலும் அவதானித்ததன் அடைப்படையில் 400 பேரை மாதிரி ஆக்கி தேர்தல் நடத்துகிறேன். அதில் 320 பேர் கெட்டவங்க. இதில் எது கூடிய திருத்தமானது தீர்மானித்துக் கொள்ளுங்கள்..!

ஐயோ...அண்ணா... 320 கெட்டவரா? நீங்கள் எங்கேனும் ஜெயிலுக்க இருக்கறீங்களே? எனக்கு அந்த 3 நல்ல ஆக்களுமே போதும் சாமி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருக்கும் ஆப்பு குடுக்கிற நெல்லையனுக்கே ஆப்பா அச்சச்சோ

Link to comment
Share on other sites

உங்களை எந்த பெண்ணும் ஏமாற்றவில்லை எனும் போது நீங்கள் சந்தித்த எல்லா பெண்களும் நல்லவர்கள் தானே .

எல்லா பெண்ணும் அடிப்படையில் நல்லவள்தான் .சிலஆண்கள் தான் அவளை தவறான பாதைக்கு மாற்றி விடுகின்றனர் .

பின் ஆண்களே பெண்ணின் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்து கொள்கின்றனர் .காதல் என்ற பேரில் பல பெண்களின் வாழ்க்கை

கேள்விக்குறியாகியிருக்கிறது .காதலுக்காக உயிர் விட்ட பெண்கள் எத்தனையோ .......இங்கெல்லாம் ஏமாற்றியது யார் ?ஆண்கள் நல்லவர்களாக

வாழும் வரை பெண்களும் நல்லவர்களே .............என்னதான் விமர்சனம் செய்தாலும் கடைசியில் உங்களின் வாழ்க்கையில் புது வசந்தத்தை கொண்டு வரப்போவது ஒரு பெண்தான் பெண் மட்டும்தான் ..............

Link to comment
Share on other sites

நான் கடந்து வந்த பாதை என்பது என் சொந்த வாழ்க்கைப் பாதையில் என்ற அர்த்தத்தில் அல்ல. என் வாழ்க்கையில் நான் பயணித்த இடங்களில் வாழ்ந்த இடங்களில் சேவையாற்றிய இடங்களில் என்று பல வகைப்படும்.

நான்... பெண்கள் என்னை ஏமாற்ற இன்னும் இடமளிக்கவில்லை. அளித்திருந்தால் நானும் ஏமாற்றப்பட்டிருப்பேன்.

உங்களை எந்த பெண்ணும் ஏமாற்றவில்லை எனும் போது நீங்கள் சந்தித்த எல்லா பெண்களும் நல்லவர்கள் தானே

எல்லா பெண்ணும் அடிப்படையில் நல்லவள்தான் .சிலஆண்கள் தான் அவளை தவறான பாதைக்கு மாற்றி விடுகின்றனர் .

பின் ஆண்களே பெண்ணின் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்து கொள்கின்றனர் .காதல் என்ற பேரில் பல பெண்களின் வாழ்க்கை

கேள்விக்குறியாகியிருக்கிறது .காதலுக்காக உயிர் விட்ட பெண்கள் எத்தனையோ .......இங்கெல்லாம் ஏமாற்றியது யார் ?ஆண்கள் நல்லவர்களாக

வாழும் வரை பெண்களும் நல்லவர்களே .............என்னதான் விமர்சனம் செய்தாலும் கடைசியில் உங்களின் வாழ்க்கையில் புது வசந்தத்தை கொண்டு வரப்போவது ஒரு பெண்தான் பெண் மட்டும்தான் ..............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.