Jump to content

இந்து சமயம் எங்கே போகிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமயம் எங்கே போகிறது?

இம்முறை சிவராத்திரி விரதம்

கௌசிக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 13-03-10

ரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 11-02-10 இது ஆங்கில திககிகளாகும்

இதில் எது சரியானது என்பதை தெரிந்தவர்கள் கூறவும்

ஆறுமுக நாவலர் அவர்களே இதை கொஞ்சம் ஆராந்து சரியானதை சொல்லவும்

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கோயிலில் சொன்னார்கள் பங்குனி மாதம்[மார்ச்] வருகின்ற சிவராத்திரி தான் உண்மையாக விரதம் அனுட்டிக்க வேண்டுமாம் ஏனென்றால் பெப்ரவரி மாதம் அனுட்டித்தால் அது தமிழுக்கு தைக்கு வருமாம் அப்படி தையில் வரக் கூடாதாம்...அதனால் பங்குனியில் அனுட்டித்தால் அது தமிழுக்கு மாசி மாதத்திற்கு வருவதால் அதை தான் அனுட்டிக்க வேண்டும் எனவும் மேலும் சிவராத்திரிக்கு பேர் போன திருக்கேதீஸ்வரத்திலும் பங்குனி மாதம் தான் அனுட்டிக்கிறார்களாம்.

Link to comment
Share on other sites

இது என்னவென்று எனக்கு தெரியாது .ஆகவே விசயம் தெரிந்தவர்களிடம் இதை விட்டுவிடுகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகா சிவராத்திரி

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.

சந்திரனின் நிலையை வைத்துத்தான் நாள், திதி கணிக்கின்றார்கள். வாக்கிய முறைக்கும், கணித முறைக்கும் வித்தியாசம் உள்ளது.

Link to comment
Share on other sites

E=MC2

1cm=10cm

என்பன விஞ்ஞான விதிகள்;

இவை என்றும் மாறுபடாதவை;ஒளியின் வேகமும் மாறுபடாதவை; ஆனால் அஞ்ஞானம் எல்லா இடங்களிலும் மாறுபடும். என் கணித சாத்திரத்திலும் பஞ்சாங்க சாத்திரத்திலும் என்று மாறுபடும். ஒரு ஹைட்ரஜன் கூட்டுச் சேரும் ஒட்சிசனின் இயல்பு அகிலம் முழுதும் ஒரே மாதிரித்தான். ஆனால் சனியுடன் கூட்டுச் சேரும் வெள்ளி ஒவ்வொரு சாத்திரிக்கும் ஏற்ப மாறுபடும்

இனியாவது தமிழர் இந்த பொய் சாத்திரத்தில் இருந்து விடுபட்டு; 1+1=100 என்று சொல்லும் பொய்யிலிருந்து விடுபட்டு; விஞ்ஞானத்தை நம்ப வேண்டும்;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு நிழலி...நீங்கள் இதைப் பற்றி அறிந்திருப்பீர்கள்...ஆனால் புலம் பெயர் நாட்டில் ஜயர்மார் தங்கள் சுய லாபத்திற்காக இவற்றினை மாற்றலாம்...அதில் வேண்டுமானால் பிழை கண்டு பிடியுங்கள்...அதற்காக இந்து சமயத்தையே குறை பிடிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு நிழலி...நீங்கள் இதைப் பற்றி அறிந்திருப்பீர்கள்...ஆனால் புலம் பெயர் நாட்டில் ஜயர்மார் தங்கள் சுய லாபத்திற்காக இவற்றினை மாற்றலாம்...அதில் வேண்டுமானால் பிழை கண்டு பிடியுங்கள்...அதற்காக இந்து சமயத்தையே குறை பிடிக்காதீர்கள்.

முன்னைய கருத்துக்களத்தில் இந்து மதத்தைப் பற்றிச் சில கட்டுரைகளை இணைத்திருந்தேன். தேடினால் கிடைக்கும். வாசித்துவிட்டு என்னைத் தேடி வரக்கூடாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எங்கையும் போகட்டும் வரட்டும்.ஆனால் நாங்கள் எங்கையும் போகாமல் இருந்தால் சரி. :lol:

Link to comment
Share on other sites

நவகிரக வழிபாடு நாலாயிரம் வருடங்களுக்கு மேல்.

விஞ்ஞானரீதியாக ஒன்பது கிரகங்களையும் கண்டுபிடித்து கடந்த நூற்றாண்டில்தான்.

ஆனால் தற்போது... 99.999999999990 பொய், புரட்டு, முட்டள்தனம்.

Link to comment
Share on other sites

நவகிரக வழிபாடு நாலாயிரம் வருடங்களுக்கு மேல்.

விஞ்ஞானரீதியாக ஒன்பது கிரகங்களையும் கண்டுபிடித்து கடந்த நூற்றாண்டில்தான்.

ஆனால் தற்போது... 99.999999999990 பொய், புரட்டு, முட்டள்தனம்.

ஆனால் சந்திரனும் எப்படி நவக்கிரகமானது??

Link to comment
Share on other sites

ஆனால் சந்திரனும் எப்படி நவக்கிரகமானது??

ஒகே.. எட்டு கிரக வழிபாடு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒகே.. எட்டு கிரக வழிபாடு?

ஐயோ பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்டமாதிரிக்கிடக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமயம் எங்கே போகிறது என்பதிலும் பார்க்க நாம் எங்கே போகிறோம்? என்பது தான் முக்கியம்.

கேட்டுப் பாருங்கள் இந்த நிகழ்ச்சியை.

http://www.blogtalkradio.com/search/sov/

Link to comment
Share on other sites

இந்து சமயம் எங்கே போகிறது?

இம்முறை சிவராத்திரி விரதம்

கௌசிக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 13-03-10

ரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 11-02-10 இது ஆங்கில திககிகளாகும்

இதில் எது சரியானது என்பதை தெரிந்தவர்கள் கூறவும்

ஆறுமுக நாவலர் அவர்களே இதை கொஞ்சம் ஆராந்து சரியானதை சொல்லவும்

சிவராத்திரி மட்டுமல்ல பல வித்தியாசங்கள் இரு பஞ்சாங்கத்திலும் உண்டு.இருவரின் கணிப்புகளும் வித்தியாசமானவை.ஆதலால் தான் நாட்களும் வித்தியாசப்படுகிறது.

Link to comment
Share on other sites

இந்து சமயம் எங்கே போகிறது என்பதிலும் பார்க்க நாம் எங்கே போகிறோம்? என்பது தான் முக்கியம்.

கேட்டுப் பாருங்கள் இந்த நிகழ்ச்சியை.

http://www.blogtalkradio.com/search/sov/

கேட்ட இனிமையாக இருக்கிறது..

அதில் கூறப்படுவது விழங்கிறதோ இல்லையோ என்பதர்கு அப்பால் ..

அந்த நிகழ்சியை வழங்கும் உரை நடை அருமையாக உள்ளது ..

இணைப்புக்கு நன்றி அகதி...

Link to comment
Share on other sites

குழப்பம் இருந்தால் இரு மாதங்களிலும் விரதம் பிடிக்க வேண்டியதுதான்.. உடம்பாவது குறையும்..! :lol:

Link to comment
Share on other sites

E=MC2

1cm=10cm

என்பன விஞ்ஞான விதிகள்;

இவை என்றும் மாறுபடாதவை;ஒளியின் வேகமும் மாறுபடாதவை; ஆனால் அஞ்ஞானம் எல்லா இடங்களிலும் மாறுபடும். என் கணித சாத்திரத்திலும் பஞ்சாங்க சாத்திரத்திலும் என்று மாறுபடும். ஒரு ஹைட்ரஜன் கூட்டுச் சேரும் ஒட்சிசனின் இயல்பு அகிலம் முழுதும் ஒரே மாதிரித்தான். ஆனால் சனியுடன் கூட்டுச் சேரும் வெள்ளி ஒவ்வொரு சாத்திரிக்கும் ஏற்ப மாறுபடும்

இனியாவது தமிழர் இந்த பொய் சாத்திரத்தில் இருந்து விடுபட்டு; 1+1=100 என்று சொல்லும் பொய்யிலிருந்து விடுபட்டு; விஞ்ஞானத்தை நம்ப வேண்டும்;

நிழலி! நீங்கள் முழு தப்பாக E = m x c x c என்றும் மாறுபடாதவை; ஒளியின் வேகமும் மாறுபடாதவை; என எழுதி, பௌதிகம் அறியாதவர்களை பிழையான திசையில் கொண்டு செல்ல முயற்சித்துள்ளீர்கள் என்பதை தயவு செய்து விளங்குங்கள். விஞ்ஞானம் என்ற போர்வையில் உங்கள் அஞ்ஞானத்தை வெளிப்படுதியுள்ளீர்கள்.

மேற்படி சமன்பாட்டில், திணிவு m ஆனது அதன் கதிக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஐன்ஸ்டீனின் தொடர்பியல் கோட்பாடுகளின்படி திணிவு (M), நீளம் (L), நேரம் (T) ஆகிய அடிப்படை கணியங்கள், அவை சம்பந்தப்பட்ட பொருளின் கதிக்கு ஏற்ப மாற்றமடையும். இதன்படி, பூமியில் 1 m நீளமுடைய கோல், மிக வேகமாக செல்லும் ரொக்கட் இல் இருந்தபடி அளவிடும் பொது 1 m க்கு குறைவாகவே (உ+ம்: 0.9 m) காணப்படும்.

ஒளியின் வேகமும் மாறுபடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் நிழலி.

கிரகங்கள் / கோள்கள் அதன் நீள்வட்ட பாதையில் ஒரே கதியில் பயணிப்பதில்லை. மையத்திலிருந்து தூரத்தில் உள்ள போது அவற்றின் கதி உயர்வாகவும், அருகில் வரும் போது கதி குறைவாகவும் இருக்கும்.

நிழலியைப்போலவே, தற்காலத்தில் பரம்பரையாக பஞ்சாங்கம் கணிப்பவர்களும், முறையான அறிவின்றி, சமன்பாடுகளை கோள்களின் நிலைக்கு ஏற்ப மாற்றாமல், அல்லது மாற்றுவதில் பிழைகள் விடுவதால் வேறுபாடுகள் ஏற்படுவதாகவே தோன்றுகிறது. முறையான அறிவைபெறாது பஞ்சாங்கத்தை வைத்து பிழைப்பு நடாத்தும் சுயநலவாதிகளால் இந்த வேறுபாடுகள் ஏற்படுவதாகவே கருதவேண்டியுள்ளது.

முறையான அறிவைபெறாது சொல்லப்படும் கருத்துக்கள் இந்து சமயம் "கேலிக்குரியது" என்ற மாயை தோற்றுவிக்கிறது.

நிழலி நீங்கள் இதை முழுமையாக விளங்கிக்கொண்டால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்.

அதே நேரத்தில், என்ன காரணத்தாலோ, இந்த வேறுபாடுகள் பொது மக்கள் மத்தியில் செல்லும்போது - அவை குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, இந்து சமயத்தை கேலிக்குரியதாக மாற்றி, பாமரர்களின் நம்பிக்கையை சிதைக்க முயற்சிக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் - மாற்றுக்கருத்துக்கள் சொன்னவர்களையும், இத் திரியை ஆரம்பித்தவர்களையும் பாராட்ட வேண்டும்.

அதே நேரத்தில் தொடரும் இப்போக்கு, இந்து சமயத்தை இழிவுபடுத்தி பிழைப்பு நடத்துபவர்களுக்கும், தம்மை பகுத்தறிவுவாதிகளாக காட்டிக் கொள்ளும் போலிகளுக்கும், குழம்பிய குட்டைகளில் மீன் பிடிக்க காத்திருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்பாக அமைந்துவிடும்.

எனவே இவற்றுடன் தொடர்புடைய இந்துக்கள் தொடரும் இப்பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முயற்சிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

name='Aasaan' date='07 February 2010

எனவே இவற்றுடன் தொடர்புடைய இந்துக்கள் தொடரும் இப்பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முயற்சிக்க வேண்டும்.

இதில் கருத்தெளுதி தெரிய படுத்தியவர்களுக்கு எல்லோருக்கும் எனது நன்றிகள்

ஆசானுடைய இந்த கருத்து சரியாக உள்ளது.

Link to comment
Share on other sites

நிழலி! நீங்கள் முழு தப்பாக E = m x c x c என்றும் மாறுபடாதவை; ஒளியின் வேகமும் மாறுபடாதவை; என எழுதி, பௌதிகம் அறியாதவர்களை பிழையான திசையில் கொண்டு செல்ல முயற்சித்துள்ளீர்கள் என்பதை தயவு செய்து விளங்குங்கள். விஞ்ஞானம் என்ற போர்வையில் உங்கள் அஞ்ஞானத்தை வெளிப்படுதியுள்ளீர்கள்.

மேற்படி சமன்பாட்டில், திணிவு m ஆனது அதன் கதிக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஐன்ஸ்டீனின் தொடர்பியல் கோட்பாடுகளின்படி திணிவு (M), நீளம் (L), நேரம் (T) ஆகிய அடிப்படை கணியங்கள், அவை சம்பந்தப்பட்ட பொருளின் கதிக்கு ஏற்ப மாற்றமடையும். இதன்படி, பூமியில் 1 m நீளமுடைய கோல், மிக வேகமாக செல்லும் ரொக்கட் இல் இருந்தபடி அளவிடும் பொது 1 m க்கு குறைவாகவே (உ+ம்: 0.9 m) காணப்படும்.

நான் எங்கு சொன்னேன் திணிவு எங்கும் மாறுபடாது என்று? நான் கூறியது E = m x c x c எனும் விதி (சார்பியல்) என்றும் மாறுபடாது என்று; அதன் அர்த்தம் அது பூமியிலும் சரி, அகிலத்திலும் சரி, விண்வெளியிலும் சரி E = m x c x c எனும் விதி மாறுபடாது என்று. உங்களுக்கு ஏற்ற மாதிரி என் புரிதலை புரிந்து கொண்டு விட்டு அதில் பிழை சொல்கின்றீர்கள். E = m x c x c எனபது மாமேதை அயின்ஸ்ரின் இன் கருத்தான E = m x c x c என்பது இன்று வரைக்கும் நிரந்தரமானது; பர பிரம்மம் என்றதைக் காட்டிலும் நிரூபணமானது

ஒளியின் வேகமும் மாறுபடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் நிழலி.

இந்த நிமிடம் வரை அது மாறியதாக விஞ்ஞானம் நிரூபிக்கவில்லை.

உதாரணத்துக்கு 5 எனும் வலுவுடன், இன்னும் ஒரு 6 சேர்ந்தால் அது 11 ஆகும் (5+6=11). ஆனால் ஒரு வாகனம் 100 கி.மி வேகத்தில் செல்லும் போது, அதனை விஞ்சும் வாகனம் 110 கி.மி இல் சென்றால் சாதாரண கூட்டல் விதிப்படி அது 210 ஆக வேண்டும். ஆனால் சார்பியல் தத்துவம் படி, 100 கி.மி வேகத்தில் செல்லும் வாகனத்துக்கு அதனை விஞ்சும் வாகனத்தின் வேகம் வெறும் 10 தான். இங்கு தான் E=MCC எனும் கோட்பாடு பற்றிய பிரக்ஞை உருவாகுன்றது. அது எங்கு என்றால் இது ஒளியின் வேகம் தொடர்பான ஆராய்வில்

ஒரு வாகனமும் ஒளியும் ஒன்றை ஒன்று கடந்து ஓடும் இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்திலும் ஒளியின் வேகம் (186,000 மைல்)(300,000 km/S) இன்னொரு வாகனம் சார்பாக அளவிடும் போதும் அது மாறிலியாக (மாறாது, அதே வேகம்) காணப்படுகின்றது. அதாவது, 120 kM/s ஆக ஓடும் ஒரு வாகனத்தை ஒளி கடந்து போகும் போது அதன் வேகம்

300,000 km/S- 120 kM/S=299880 ஆக இருப்பதில்லை, மாறாக அதே 300,000 km/S ஆகவே இருக்கின்றது. இங்கு தான் அயின்ஸ்ரின் எனும் மாமேதையின் E=MCC தத்துவம் பற்றிய புரிதல் ஏறபடுகின்றது

ஆனால் சாத்திரத்தில் ஒரு தத்துவம் எல்லா இடத்திலும் பொய்க்கின்ற்து. ஒரு சாத்திரி 1+1=2 என்றால், இன்னொரு சாத்திரி அதே கிரக பலனைக் கொண்டு 1+1=100 என்பார். அதே போல் எண் கணித சாத்திரம் ஒன்றைச் சொல்லும், பஞ்சாங்க சாத்திரம் இன்னொன்றைச் சொல்லும். ஒரே சாதகத்தை 3 சாத்திரிகளிடம் காட்டினால் 3 விதமல்ல 300 வித பலன் சொல்வர்( ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் சாதகத்தை குறிப்பிட்ட ஒரு சாத்திரியிடம் வேறு நபர்கள் மூலம் காட்டுங்கள்; இது தான் நடக்கும்) இது சுத்த பம்மாத்து. வெறும் வாயுக்களும், உறை/அதியுச்ச வெப்பமும், கோள வடிவம் கொண்ட ஒரு சுற்றுப் பாதையில் சுற்றும் கிரகங்கள் மானுட வாழ்வில் மாறுதலைக் கொண்டு வரும் என்பது சுத்த பம்மாத்து (ஒரு துணியை கோள வடிவமாக்கி அதில் ஒரு ரூபாயை/டொலரை வட்ட பாதையில் சுழட்டி எறியுங்கள்; அது கோள வடிவமாகவே சுற்றும்; ஏனெனில் கோள வடிவப் பாதை என்பது மைய விசை கொண்டது)

நீங்கள் தலை கீழாக நின்று மூட நம்பிகைகளை மெய் என்று நிரூபிக்க முனைகின்றீர்கள்; பாவம் நீங்கள் இன்றைய தலைமுறை உங்களைப் போன்றவர்களை நம்பத் தயாரில்லை

மற்றப்படி, பல நூற்றாண்டு காலத்துக்கு முற்பட்ட எந்த சமய கோட்பாடும்,, அது இந்து சமயமாக இருந்தால் என்ன, கிறிஸ்தவம். இஸ்லாமாக இருந்தால் என்ன இன்றைய விஞ்ஞான மெய்களின் மத்தியில் பொய்யாகவே உணரப்படும், அது எப்படி என்றால் பிரம்மன் தான் எல்லாரையும் படைத்தார் என்பதிலும், ஆதாமின் விலா எலும்பில் பெண் படைக்கப்பட்டாள் என்பதிலும் உள்ள பரிபூரண பொய்யைப் போல

Link to comment
Share on other sites

நிழலி! பௌதிகவியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள். சார்பியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள்.

மீண்டும் உங்கள் கருத்துக்கள் தவறானவை. உங்களுக்கு பௌதிகவியல் படிப்பிக்க எனக்கு நேரமில்லை! மன்னியுங்கள்!!

Link to comment
Share on other sites

பாவம் நீங்கள் இன்றைய தலைமுறை உங்களைப் போன்றவர்களை நம்பத் தயாரில்லை

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

இன்றைய தலைமுறை என்று சொல்லிக்கொள்பவர்கள், பெரும்பாலானவர்கள், அரைகுறையாக தெரிந்துகொண்டு, எல்லாம் தெரிந்தமாதிரி நடந்ததால் தான் தமிழினம் பாரிய அழிவுகளை சந்தித்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

நிழலி! பௌதிகவியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள். சார்பியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள்.

மீண்டும் உங்கள் கருத்துக்கள் தவறானவை. உங்களுக்கு பௌதிகவியல் படிப்பிக்க எனக்கு நேரமில்லை! மன்னியுங்கள்!!

எவை தவறானவை என முடிந்தால் ஆதாரத்துடன் எழுதுங்கள். நான் பெளதீகவியல் மாணவன். கணணித் துறை என் இரண்டாம் பட்ச தெரிவுதான். சந்தேகங்கள், சர்ச்சைகள் பின் தெளிவுகள் என்ற அறிவுத் தேடலின் மூலம்தான் என் பெளதீகவியல் அறிவை வளர்க்க விரும்புகின்றேன். நான் கூறியவற்றில் எங்கு தவறு இருக்கென்று சொன்னால்,அதற்கான தேடலை செய்யவும், அதற்குரிய பதிலை தரவும் தயாராக இருக்கின்றேன். விஞ்ஞானத்தில் எதுவும் பரிபூரண அறிவு இல்லை. 100 வருடமாக நம்பிய ஒரு விதியை ஒரு சின்ன சம்பவம் மாற்றி விடும்,அல்லது கேள்விக்குட்படுத்தும். என்னுடம் விவாதிக்க விரும்பினால் தொடருங்கள். அது என் புரிதல்களில் உள்ள இடைவெளிகளை மீண்டும் சரிபார்க்க எனக்கும், உங்களுக்கும் உதவும்

உங்களுக்கு ஒரு தகவல்: Discovery/ National Geography என்ற இரு பிரபல்யமிக்க தொலைக்காட்சிகளில் இது பற்றிய தொடர் விவாதம் ஒவ்வொரு கிழமையும் போகின்றது. விரும்பினால் பாருங்கள்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

இன்றைய தலைமுறை என்று சொல்லிக்கொள்பவர்கள், பெரும்பாலானவர்கள், அரைகுறையாக தெரிந்துகொண்டு, எல்லாம் தெரிந்தமாதிரி நடந்ததால் தான் தமிழினம் பாரிய அழிவுகளை சந்தித்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.

எவை அரை குறை என்று சான்றுகளுடன் தாருங்கள். உங்களால் என் கேள்விகளுக்கு பதில் எழுத முடியாவிடின் மொட்டையாக 'அரை குறை' என்று சொல்லாதீர்கள். சார்பியல் தத்துவம் தொடர்பாக விரிவாக நான் குறிப்பிட்டவற்றில் என் தவறுகளை சுட்டிக் காட்டுங்கள், பதிலளிக்கின்றேன்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவும். இன்றைய தலைமுறை உங்களைப் போன்று விவாதம் என்றவுடன் ஓடி ஒளிக்காது உண்மையான தேடலை செய்து பல அரிய கண்டுபிடிப்புகளையும் விஞ்ஞான தத்துவங்களையும் கண்டு பிடித்துள்ளன என்பதை

மீண்டும், மேலும் விவாதிப்போம். என்னில்/ நான் கூறிய சார்பியல் தொடர்பான விடயங்களில் எவை தவறென காட்டுங்கள். தவறெனில் நிச்சயம் ஒத்துக் கொள்வேன். இல்லையெனில் இறுதிவரைக்கும் விவாதம் செய்வேன்

Link to comment
Share on other sites

நீங்கள் பௌதிக மாணவன் என்பதை அறிந்தது மகிழ்ச்சி. உங்களுடன் விவாதத்தை தொடர விரும்புகிறேன்.

தற்போது வெளியே செல்ல இருப்பதால், நேரம் கிடைக்கும்போது விரிவாக பதில் எழுதுகிறேன்.

அதே நேரம் உங்கள் பௌதிக ஆசிரியர்களிடமும் கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பௌதிக மாணவன் என்பதை அறிந்தது மகிழ்ச்சி.

http://www.youtube.com/watch?v=KIdqrtbtGIk

http://www.worsleyschool.net/science/files/emc2/emc2.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.