Jump to content

இந்து சமயம் எங்கே போகிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமயம் எங்கே போகிறது?

இம்முறை சிவராத்திரி விரதம்

கௌசிக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 13-03-10

ரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 11-02-10 இது ஆங்கில திககிகளாகும்

இதில் எது சரியானது என்பதை தெரிந்தவர்கள் கூறவும்

ஆறுமுக நாவலர் அவர்களே இதை கொஞ்சம் ஆராந்து சரியானதை சொல்லவும்

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கோயிலில் சொன்னார்கள் பங்குனி மாதம்[மார்ச்] வருகின்ற சிவராத்திரி தான் உண்மையாக விரதம் அனுட்டிக்க வேண்டுமாம் ஏனென்றால் பெப்ரவரி மாதம் அனுட்டித்தால் அது தமிழுக்கு தைக்கு வருமாம் அப்படி தையில் வரக் கூடாதாம்...அதனால் பங்குனியில் அனுட்டித்தால் அது தமிழுக்கு மாசி மாதத்திற்கு வருவதால் அதை தான் அனுட்டிக்க வேண்டும் எனவும் மேலும் சிவராத்திரிக்கு பேர் போன திருக்கேதீஸ்வரத்திலும் பங்குனி மாதம் தான் அனுட்டிக்கிறார்களாம்.

Link to comment
Share on other sites

இது என்னவென்று எனக்கு தெரியாது .ஆகவே விசயம் தெரிந்தவர்களிடம் இதை விட்டுவிடுகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகா சிவராத்திரி

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.

சந்திரனின் நிலையை வைத்துத்தான் நாள், திதி கணிக்கின்றார்கள். வாக்கிய முறைக்கும், கணித முறைக்கும் வித்தியாசம் உள்ளது.

Link to comment
Share on other sites

E=MC2

1cm=10cm

என்பன விஞ்ஞான விதிகள்;

இவை என்றும் மாறுபடாதவை;ஒளியின் வேகமும் மாறுபடாதவை; ஆனால் அஞ்ஞானம் எல்லா இடங்களிலும் மாறுபடும். என் கணித சாத்திரத்திலும் பஞ்சாங்க சாத்திரத்திலும் என்று மாறுபடும். ஒரு ஹைட்ரஜன் கூட்டுச் சேரும் ஒட்சிசனின் இயல்பு அகிலம் முழுதும் ஒரே மாதிரித்தான். ஆனால் சனியுடன் கூட்டுச் சேரும் வெள்ளி ஒவ்வொரு சாத்திரிக்கும் ஏற்ப மாறுபடும்

இனியாவது தமிழர் இந்த பொய் சாத்திரத்தில் இருந்து விடுபட்டு; 1+1=100 என்று சொல்லும் பொய்யிலிருந்து விடுபட்டு; விஞ்ஞானத்தை நம்ப வேண்டும்;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு நிழலி...நீங்கள் இதைப் பற்றி அறிந்திருப்பீர்கள்...ஆனால் புலம் பெயர் நாட்டில் ஜயர்மார் தங்கள் சுய லாபத்திற்காக இவற்றினை மாற்றலாம்...அதில் வேண்டுமானால் பிழை கண்டு பிடியுங்கள்...அதற்காக இந்து சமயத்தையே குறை பிடிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு நிழலி...நீங்கள் இதைப் பற்றி அறிந்திருப்பீர்கள்...ஆனால் புலம் பெயர் நாட்டில் ஜயர்மார் தங்கள் சுய லாபத்திற்காக இவற்றினை மாற்றலாம்...அதில் வேண்டுமானால் பிழை கண்டு பிடியுங்கள்...அதற்காக இந்து சமயத்தையே குறை பிடிக்காதீர்கள்.

முன்னைய கருத்துக்களத்தில் இந்து மதத்தைப் பற்றிச் சில கட்டுரைகளை இணைத்திருந்தேன். தேடினால் கிடைக்கும். வாசித்துவிட்டு என்னைத் தேடி வரக்கூடாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எங்கையும் போகட்டும் வரட்டும்.ஆனால் நாங்கள் எங்கையும் போகாமல் இருந்தால் சரி. :lol:

Link to comment
Share on other sites

நவகிரக வழிபாடு நாலாயிரம் வருடங்களுக்கு மேல்.

விஞ்ஞானரீதியாக ஒன்பது கிரகங்களையும் கண்டுபிடித்து கடந்த நூற்றாண்டில்தான்.

ஆனால் தற்போது... 99.999999999990 பொய், புரட்டு, முட்டள்தனம்.

Link to comment
Share on other sites

நவகிரக வழிபாடு நாலாயிரம் வருடங்களுக்கு மேல்.

விஞ்ஞானரீதியாக ஒன்பது கிரகங்களையும் கண்டுபிடித்து கடந்த நூற்றாண்டில்தான்.

ஆனால் தற்போது... 99.999999999990 பொய், புரட்டு, முட்டள்தனம்.

ஆனால் சந்திரனும் எப்படி நவக்கிரகமானது??

Link to comment
Share on other sites

ஆனால் சந்திரனும் எப்படி நவக்கிரகமானது??

ஒகே.. எட்டு கிரக வழிபாடு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒகே.. எட்டு கிரக வழிபாடு?

ஐயோ பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்டமாதிரிக்கிடக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமயம் எங்கே போகிறது என்பதிலும் பார்க்க நாம் எங்கே போகிறோம்? என்பது தான் முக்கியம்.

கேட்டுப் பாருங்கள் இந்த நிகழ்ச்சியை.

http://www.blogtalkradio.com/search/sov/

Link to comment
Share on other sites

இந்து சமயம் எங்கே போகிறது?

இம்முறை சிவராத்திரி விரதம்

கௌசிக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 13-03-10

ரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 11-02-10 இது ஆங்கில திககிகளாகும்

இதில் எது சரியானது என்பதை தெரிந்தவர்கள் கூறவும்

ஆறுமுக நாவலர் அவர்களே இதை கொஞ்சம் ஆராந்து சரியானதை சொல்லவும்

சிவராத்திரி மட்டுமல்ல பல வித்தியாசங்கள் இரு பஞ்சாங்கத்திலும் உண்டு.இருவரின் கணிப்புகளும் வித்தியாசமானவை.ஆதலால் தான் நாட்களும் வித்தியாசப்படுகிறது.

Link to comment
Share on other sites

இந்து சமயம் எங்கே போகிறது என்பதிலும் பார்க்க நாம் எங்கே போகிறோம்? என்பது தான் முக்கியம்.

கேட்டுப் பாருங்கள் இந்த நிகழ்ச்சியை.

http://www.blogtalkradio.com/search/sov/

கேட்ட இனிமையாக இருக்கிறது..

அதில் கூறப்படுவது விழங்கிறதோ இல்லையோ என்பதர்கு அப்பால் ..

அந்த நிகழ்சியை வழங்கும் உரை நடை அருமையாக உள்ளது ..

இணைப்புக்கு நன்றி அகதி...

Link to comment
Share on other sites

குழப்பம் இருந்தால் இரு மாதங்களிலும் விரதம் பிடிக்க வேண்டியதுதான்.. உடம்பாவது குறையும்..! :lol:

Link to comment
Share on other sites

E=MC2

1cm=10cm

என்பன விஞ்ஞான விதிகள்;

இவை என்றும் மாறுபடாதவை;ஒளியின் வேகமும் மாறுபடாதவை; ஆனால் அஞ்ஞானம் எல்லா இடங்களிலும் மாறுபடும். என் கணித சாத்திரத்திலும் பஞ்சாங்க சாத்திரத்திலும் என்று மாறுபடும். ஒரு ஹைட்ரஜன் கூட்டுச் சேரும் ஒட்சிசனின் இயல்பு அகிலம் முழுதும் ஒரே மாதிரித்தான். ஆனால் சனியுடன் கூட்டுச் சேரும் வெள்ளி ஒவ்வொரு சாத்திரிக்கும் ஏற்ப மாறுபடும்

இனியாவது தமிழர் இந்த பொய் சாத்திரத்தில் இருந்து விடுபட்டு; 1+1=100 என்று சொல்லும் பொய்யிலிருந்து விடுபட்டு; விஞ்ஞானத்தை நம்ப வேண்டும்;

நிழலி! நீங்கள் முழு தப்பாக E = m x c x c என்றும் மாறுபடாதவை; ஒளியின் வேகமும் மாறுபடாதவை; என எழுதி, பௌதிகம் அறியாதவர்களை பிழையான திசையில் கொண்டு செல்ல முயற்சித்துள்ளீர்கள் என்பதை தயவு செய்து விளங்குங்கள். விஞ்ஞானம் என்ற போர்வையில் உங்கள் அஞ்ஞானத்தை வெளிப்படுதியுள்ளீர்கள்.

மேற்படி சமன்பாட்டில், திணிவு m ஆனது அதன் கதிக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஐன்ஸ்டீனின் தொடர்பியல் கோட்பாடுகளின்படி திணிவு (M), நீளம் (L), நேரம் (T) ஆகிய அடிப்படை கணியங்கள், அவை சம்பந்தப்பட்ட பொருளின் கதிக்கு ஏற்ப மாற்றமடையும். இதன்படி, பூமியில் 1 m நீளமுடைய கோல், மிக வேகமாக செல்லும் ரொக்கட் இல் இருந்தபடி அளவிடும் பொது 1 m க்கு குறைவாகவே (உ+ம்: 0.9 m) காணப்படும்.

ஒளியின் வேகமும் மாறுபடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் நிழலி.

கிரகங்கள் / கோள்கள் அதன் நீள்வட்ட பாதையில் ஒரே கதியில் பயணிப்பதில்லை. மையத்திலிருந்து தூரத்தில் உள்ள போது அவற்றின் கதி உயர்வாகவும், அருகில் வரும் போது கதி குறைவாகவும் இருக்கும்.

நிழலியைப்போலவே, தற்காலத்தில் பரம்பரையாக பஞ்சாங்கம் கணிப்பவர்களும், முறையான அறிவின்றி, சமன்பாடுகளை கோள்களின் நிலைக்கு ஏற்ப மாற்றாமல், அல்லது மாற்றுவதில் பிழைகள் விடுவதால் வேறுபாடுகள் ஏற்படுவதாகவே தோன்றுகிறது. முறையான அறிவைபெறாது பஞ்சாங்கத்தை வைத்து பிழைப்பு நடாத்தும் சுயநலவாதிகளால் இந்த வேறுபாடுகள் ஏற்படுவதாகவே கருதவேண்டியுள்ளது.

முறையான அறிவைபெறாது சொல்லப்படும் கருத்துக்கள் இந்து சமயம் "கேலிக்குரியது" என்ற மாயை தோற்றுவிக்கிறது.

நிழலி நீங்கள் இதை முழுமையாக விளங்கிக்கொண்டால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்.

அதே நேரத்தில், என்ன காரணத்தாலோ, இந்த வேறுபாடுகள் பொது மக்கள் மத்தியில் செல்லும்போது - அவை குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, இந்து சமயத்தை கேலிக்குரியதாக மாற்றி, பாமரர்களின் நம்பிக்கையை சிதைக்க முயற்சிக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் - மாற்றுக்கருத்துக்கள் சொன்னவர்களையும், இத் திரியை ஆரம்பித்தவர்களையும் பாராட்ட வேண்டும்.

அதே நேரத்தில் தொடரும் இப்போக்கு, இந்து சமயத்தை இழிவுபடுத்தி பிழைப்பு நடத்துபவர்களுக்கும், தம்மை பகுத்தறிவுவாதிகளாக காட்டிக் கொள்ளும் போலிகளுக்கும், குழம்பிய குட்டைகளில் மீன் பிடிக்க காத்திருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்பாக அமைந்துவிடும்.

எனவே இவற்றுடன் தொடர்புடைய இந்துக்கள் தொடரும் இப்பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முயற்சிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

name='Aasaan' date='07 February 2010

எனவே இவற்றுடன் தொடர்புடைய இந்துக்கள் தொடரும் இப்பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முயற்சிக்க வேண்டும்.

இதில் கருத்தெளுதி தெரிய படுத்தியவர்களுக்கு எல்லோருக்கும் எனது நன்றிகள்

ஆசானுடைய இந்த கருத்து சரியாக உள்ளது.

Link to comment
Share on other sites

நிழலி! நீங்கள் முழு தப்பாக E = m x c x c என்றும் மாறுபடாதவை; ஒளியின் வேகமும் மாறுபடாதவை; என எழுதி, பௌதிகம் அறியாதவர்களை பிழையான திசையில் கொண்டு செல்ல முயற்சித்துள்ளீர்கள் என்பதை தயவு செய்து விளங்குங்கள். விஞ்ஞானம் என்ற போர்வையில் உங்கள் அஞ்ஞானத்தை வெளிப்படுதியுள்ளீர்கள்.

மேற்படி சமன்பாட்டில், திணிவு m ஆனது அதன் கதிக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஐன்ஸ்டீனின் தொடர்பியல் கோட்பாடுகளின்படி திணிவு (M), நீளம் (L), நேரம் (T) ஆகிய அடிப்படை கணியங்கள், அவை சம்பந்தப்பட்ட பொருளின் கதிக்கு ஏற்ப மாற்றமடையும். இதன்படி, பூமியில் 1 m நீளமுடைய கோல், மிக வேகமாக செல்லும் ரொக்கட் இல் இருந்தபடி அளவிடும் பொது 1 m க்கு குறைவாகவே (உ+ம்: 0.9 m) காணப்படும்.

நான் எங்கு சொன்னேன் திணிவு எங்கும் மாறுபடாது என்று? நான் கூறியது E = m x c x c எனும் விதி (சார்பியல்) என்றும் மாறுபடாது என்று; அதன் அர்த்தம் அது பூமியிலும் சரி, அகிலத்திலும் சரி, விண்வெளியிலும் சரி E = m x c x c எனும் விதி மாறுபடாது என்று. உங்களுக்கு ஏற்ற மாதிரி என் புரிதலை புரிந்து கொண்டு விட்டு அதில் பிழை சொல்கின்றீர்கள். E = m x c x c எனபது மாமேதை அயின்ஸ்ரின் இன் கருத்தான E = m x c x c என்பது இன்று வரைக்கும் நிரந்தரமானது; பர பிரம்மம் என்றதைக் காட்டிலும் நிரூபணமானது

ஒளியின் வேகமும் மாறுபடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் நிழலி.

இந்த நிமிடம் வரை அது மாறியதாக விஞ்ஞானம் நிரூபிக்கவில்லை.

உதாரணத்துக்கு 5 எனும் வலுவுடன், இன்னும் ஒரு 6 சேர்ந்தால் அது 11 ஆகும் (5+6=11). ஆனால் ஒரு வாகனம் 100 கி.மி வேகத்தில் செல்லும் போது, அதனை விஞ்சும் வாகனம் 110 கி.மி இல் சென்றால் சாதாரண கூட்டல் விதிப்படி அது 210 ஆக வேண்டும். ஆனால் சார்பியல் தத்துவம் படி, 100 கி.மி வேகத்தில் செல்லும் வாகனத்துக்கு அதனை விஞ்சும் வாகனத்தின் வேகம் வெறும் 10 தான். இங்கு தான் E=MCC எனும் கோட்பாடு பற்றிய பிரக்ஞை உருவாகுன்றது. அது எங்கு என்றால் இது ஒளியின் வேகம் தொடர்பான ஆராய்வில்

ஒரு வாகனமும் ஒளியும் ஒன்றை ஒன்று கடந்து ஓடும் இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்திலும் ஒளியின் வேகம் (186,000 மைல்)(300,000 km/S) இன்னொரு வாகனம் சார்பாக அளவிடும் போதும் அது மாறிலியாக (மாறாது, அதே வேகம்) காணப்படுகின்றது. அதாவது, 120 kM/s ஆக ஓடும் ஒரு வாகனத்தை ஒளி கடந்து போகும் போது அதன் வேகம்

300,000 km/S- 120 kM/S=299880 ஆக இருப்பதில்லை, மாறாக அதே 300,000 km/S ஆகவே இருக்கின்றது. இங்கு தான் அயின்ஸ்ரின் எனும் மாமேதையின் E=MCC தத்துவம் பற்றிய புரிதல் ஏறபடுகின்றது

ஆனால் சாத்திரத்தில் ஒரு தத்துவம் எல்லா இடத்திலும் பொய்க்கின்ற்து. ஒரு சாத்திரி 1+1=2 என்றால், இன்னொரு சாத்திரி அதே கிரக பலனைக் கொண்டு 1+1=100 என்பார். அதே போல் எண் கணித சாத்திரம் ஒன்றைச் சொல்லும், பஞ்சாங்க சாத்திரம் இன்னொன்றைச் சொல்லும். ஒரே சாதகத்தை 3 சாத்திரிகளிடம் காட்டினால் 3 விதமல்ல 300 வித பலன் சொல்வர்( ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் சாதகத்தை குறிப்பிட்ட ஒரு சாத்திரியிடம் வேறு நபர்கள் மூலம் காட்டுங்கள்; இது தான் நடக்கும்) இது சுத்த பம்மாத்து. வெறும் வாயுக்களும், உறை/அதியுச்ச வெப்பமும், கோள வடிவம் கொண்ட ஒரு சுற்றுப் பாதையில் சுற்றும் கிரகங்கள் மானுட வாழ்வில் மாறுதலைக் கொண்டு வரும் என்பது சுத்த பம்மாத்து (ஒரு துணியை கோள வடிவமாக்கி அதில் ஒரு ரூபாயை/டொலரை வட்ட பாதையில் சுழட்டி எறியுங்கள்; அது கோள வடிவமாகவே சுற்றும்; ஏனெனில் கோள வடிவப் பாதை என்பது மைய விசை கொண்டது)

நீங்கள் தலை கீழாக நின்று மூட நம்பிகைகளை மெய் என்று நிரூபிக்க முனைகின்றீர்கள்; பாவம் நீங்கள் இன்றைய தலைமுறை உங்களைப் போன்றவர்களை நம்பத் தயாரில்லை

மற்றப்படி, பல நூற்றாண்டு காலத்துக்கு முற்பட்ட எந்த சமய கோட்பாடும்,, அது இந்து சமயமாக இருந்தால் என்ன, கிறிஸ்தவம். இஸ்லாமாக இருந்தால் என்ன இன்றைய விஞ்ஞான மெய்களின் மத்தியில் பொய்யாகவே உணரப்படும், அது எப்படி என்றால் பிரம்மன் தான் எல்லாரையும் படைத்தார் என்பதிலும், ஆதாமின் விலா எலும்பில் பெண் படைக்கப்பட்டாள் என்பதிலும் உள்ள பரிபூரண பொய்யைப் போல

Link to comment
Share on other sites

நிழலி! பௌதிகவியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள். சார்பியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள்.

மீண்டும் உங்கள் கருத்துக்கள் தவறானவை. உங்களுக்கு பௌதிகவியல் படிப்பிக்க எனக்கு நேரமில்லை! மன்னியுங்கள்!!

Link to comment
Share on other sites

பாவம் நீங்கள் இன்றைய தலைமுறை உங்களைப் போன்றவர்களை நம்பத் தயாரில்லை

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

இன்றைய தலைமுறை என்று சொல்லிக்கொள்பவர்கள், பெரும்பாலானவர்கள், அரைகுறையாக தெரிந்துகொண்டு, எல்லாம் தெரிந்தமாதிரி நடந்ததால் தான் தமிழினம் பாரிய அழிவுகளை சந்தித்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

நிழலி! பௌதிகவியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள். சார்பியலை நன்றாக படித்துவிட்டு எழுதுங்கள்.

மீண்டும் உங்கள் கருத்துக்கள் தவறானவை. உங்களுக்கு பௌதிகவியல் படிப்பிக்க எனக்கு நேரமில்லை! மன்னியுங்கள்!!

எவை தவறானவை என முடிந்தால் ஆதாரத்துடன் எழுதுங்கள். நான் பெளதீகவியல் மாணவன். கணணித் துறை என் இரண்டாம் பட்ச தெரிவுதான். சந்தேகங்கள், சர்ச்சைகள் பின் தெளிவுகள் என்ற அறிவுத் தேடலின் மூலம்தான் என் பெளதீகவியல் அறிவை வளர்க்க விரும்புகின்றேன். நான் கூறியவற்றில் எங்கு தவறு இருக்கென்று சொன்னால்,அதற்கான தேடலை செய்யவும், அதற்குரிய பதிலை தரவும் தயாராக இருக்கின்றேன். விஞ்ஞானத்தில் எதுவும் பரிபூரண அறிவு இல்லை. 100 வருடமாக நம்பிய ஒரு விதியை ஒரு சின்ன சம்பவம் மாற்றி விடும்,அல்லது கேள்விக்குட்படுத்தும். என்னுடம் விவாதிக்க விரும்பினால் தொடருங்கள். அது என் புரிதல்களில் உள்ள இடைவெளிகளை மீண்டும் சரிபார்க்க எனக்கும், உங்களுக்கும் உதவும்

உங்களுக்கு ஒரு தகவல்: Discovery/ National Geography என்ற இரு பிரபல்யமிக்க தொலைக்காட்சிகளில் இது பற்றிய தொடர் விவாதம் ஒவ்வொரு கிழமையும் போகின்றது. விரும்பினால் பாருங்கள்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

இன்றைய தலைமுறை என்று சொல்லிக்கொள்பவர்கள், பெரும்பாலானவர்கள், அரைகுறையாக தெரிந்துகொண்டு, எல்லாம் தெரிந்தமாதிரி நடந்ததால் தான் தமிழினம் பாரிய அழிவுகளை சந்தித்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.

எவை அரை குறை என்று சான்றுகளுடன் தாருங்கள். உங்களால் என் கேள்விகளுக்கு பதில் எழுத முடியாவிடின் மொட்டையாக 'அரை குறை' என்று சொல்லாதீர்கள். சார்பியல் தத்துவம் தொடர்பாக விரிவாக நான் குறிப்பிட்டவற்றில் என் தவறுகளை சுட்டிக் காட்டுங்கள், பதிலளிக்கின்றேன்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவும். இன்றைய தலைமுறை உங்களைப் போன்று விவாதம் என்றவுடன் ஓடி ஒளிக்காது உண்மையான தேடலை செய்து பல அரிய கண்டுபிடிப்புகளையும் விஞ்ஞான தத்துவங்களையும் கண்டு பிடித்துள்ளன என்பதை

மீண்டும், மேலும் விவாதிப்போம். என்னில்/ நான் கூறிய சார்பியல் தொடர்பான விடயங்களில் எவை தவறென காட்டுங்கள். தவறெனில் நிச்சயம் ஒத்துக் கொள்வேன். இல்லையெனில் இறுதிவரைக்கும் விவாதம் செய்வேன்

Link to comment
Share on other sites

நீங்கள் பௌதிக மாணவன் என்பதை அறிந்தது மகிழ்ச்சி. உங்களுடன் விவாதத்தை தொடர விரும்புகிறேன்.

தற்போது வெளியே செல்ல இருப்பதால், நேரம் கிடைக்கும்போது விரிவாக பதில் எழுதுகிறேன்.

அதே நேரம் உங்கள் பௌதிக ஆசிரியர்களிடமும் கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பௌதிக மாணவன் என்பதை அறிந்தது மகிழ்ச்சி.

http://www.youtube.com/watch?v=KIdqrtbtGIk

http://www.worsleyschool.net/science/files/emc2/emc2.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.