Jump to content

அந்த நகரத்து அழகி


Recommended Posts

‎அந்த நகர மைய குறீயீடாக அமைந்திருக்கின்ற மணிக்கூட்டு கோபுரமடியில் இருந்து அந்த பிராந்தியத்தையே அலறவைத்து வந்தது ஒரு சத்தம்..சத்தம் என்றால் வெறும் சத்தமல்ல ஊரிலுள்ள கெட்டவார்த்தைகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்த மாதிரி அது. மிஞ்சினால் ஒன்றோ இரண்டோ மூன்றோ மூல தூசண வார்த்தைகள் இருந்திருக்கும் . அதை பல வடிவத்தில் மாற்றி பல வார்த்தை ஜாலங்களில் தொடர்ச்சியாக அந்த பிரதேசத்தையே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

அந்த கல்லூரி வாசலினூடாக சந்தையில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு பையோடு ஏதோ யோசனையுடன் செல்லும் நடுத்தர வயது மனிதர் கூட இச்சத்தத்தின் அர்த்தத்தை மனதுக்குள் ரசித்து உதட்டில் சில கணம் புன்னகையை வைத்து எடுத்து விட்டு செல்லுகிறார்..நூலகம் நோக்கி செல்லும் பருவ பெண்கள் கூட ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கபடுகிற மாதிரி வெட்கபட்டு கொண்டு,, வெளியில் அருவருத்து கொண்டு ஆனால் உள்ளுக்குள் ரசித்து கொண்டு செல்லுகின்றனர்.முனியப்பர் கோயிலுக்கு செல்லும் நடுத்தர பெண்கள் தீடிரென்று சினந்து கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி அவதானித்த பின்னர் அட இவளோ என்று சொல்லிக்கொண்டு செல்லுகின்றனர்.

அவளே தான் ,,,இவர்கள் ஒளித்து வைத்து ரசிக்கும் இவர்களால் ஊத்தை வார்த்தைகள் என்று வர்ணிக்கப்படுபவையை உதிர்த்து கொண்டிருப்பவள்,.அத்துடன் இந்த நகரத்தின் சிலரின் உபாதைகளையும் ஊத்தைகளையும் பெற்றுக்கொள்ளுபவளும்.அவளே. ஏதோ அவசரத்தில் ஏதோ நோக்கத்துக்காக சென்று கொண்டிருந்த அவளை.வழி மறித்து அந்த மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு கிட்ட உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த பதினாறே நிரம்பாத சில பொடியள் அவளை பார்த்து சல்லிக்கல்லு யனைவமே அப்பி என்று சிங்களம் தமிழும் கலந்த அந்த பாடல் வரிகளை பாடியதே அவளுக்கு வந்த கோபம். அதனால் வந்தது இந்த வார்த்தை ஜால சத்தம்.அரை குறையாக உதிர்க்கப்படும் யனவமே அப்பி என்ற சிங்கள வார்த்தைக்கு அர்த்தம் சரியாக அந்நகரத்து வாசிகளுக்கு தெரியுதோ இல்லையோ.சல்லிக்கல்லு என்று தமிழ் போல இருக்கும் அந்த சொல்லுக்கு அர்த்தம் அவர்கள் கொள்ளுவது வேறு மாதிரி.

ஏன் என்று அவளுக்கு தான் முதல் தெரியுமே,..அதன் பின்னர் தானே மற்றவருக்கு தெரிந்திருக்கும்.அவளிடம் அவசரத்தில் இருட்டில் அனுபவிக்க போன ஒன்று.இவர் அனுபவிக்கும் அத்தருணத்தில் அவள் ஜடமாக இருந்து மள்ளாக்கொட்டை சாப்பிட்டு அதன் சுவையை ரசித்து கொண்டிருந்திருக்கிறாள். அந்த ஆத்திரத்தில் அவளிடம் சில்லறை காசாக உருவகபடுத்தி சல்லிக்கல்லுகளை கொடுத்து வந்திருக்கிறான்...அவளும் ஏமாந்திருக்கிறாள் அன்றிலிருந்து அவளுக்கு சல்லிக்கல்லு என்று பட்டம் முடிசூட்டப்பட்டு இப்பவும் தொடர்கிறது.

இந்த சல்லிக்கல்லு தேவைப்படுகிறது அங்குள்ள பெண்கள் தங்களை கண்ணகிகளாக உருவகபடுத்த..அப்படி ஒரு மாதிரி பெண்கள் அவர்களுக்கு தென்பட்டால் கூட சல்லிகல்லு என்று அழைக்க தொடங்க பார்ப்பார்கள்

கெக்கே போட்டு ரசித்த பொடியள் மீண்டும் ஒருமுறை அவளிடம் அதை எதிர்பார்த்து கூவ .அதை செவிசாய்க்க கூடிய எல்லை எல்லாத்தையும் தாண்டி சென்று விட்டாள்,.றீகல் தியேட்டர் அடியில் அடல்ஸ் ஒன்லி படத்தின் கட்அவுட்டை உள்ளே உள்ள படம் எப்படி இருக்கும் என்று மிகை கற்பனை பண்ணிக்கொண்டு ஆவென்று பார்த்து கொண்டிருந்தது. ஒன்று..நடக்கும் வேகத்தில் அதையும் சாடையாக இடித்து தள்ளிக்கொண்டு மூத்திர ஒழுங்கைக்குள் நகர்ந்து கொண்டிருந்தாள்.இந்த மூத்திர ஒழுங்கை கடைசி மட்டும் காவி பின் தாங்க மாட்டாமால் கடைசியில் ஒதுங்குபவர்களின் இடம்.இது. இந்த பகுதியிலிருந்து நகரத்து மைய பகுதிக்கு செல்லுவதுக்கு சுலபமான சேறும் சகதியும் நிரம்பி வழியும் குறுக்கும் பாதை.

அவளை கடந்து செல்லும் அந்த தோடம்பழ வியாபாரி கூட இவளை சுவைத்து இருப்பான் ,,அவனுக்கு கூட இவளின் அவசரம் கிராக்கிக்குத்தான் என்ற நினைப்பு.நெற்றியில் பட்டையும் சந்தனம் சவ்வாதுமாக ஒண்ணுக்கு ஒதுங்க இடம் தேடி கொண்டிருக்கிற பெட்டிக்கடை வைத்திருக்கின்ற அந்த பழசு கூட இவளிடம் சென்றிருப்பார்,அவரின் நினைப்பு கூட இவளின் அவசரம் கிராக்கியை தேடித்தான் என்று..அவளோ அவனின் நினைப்புடன் இந்த நகரமுழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்..அவனை நாலு நாளாக அவளின் கண்ணில் காண கிடைக்கவில்லை. அதனால் ஏற்படும் தவிப்பை தண்டரோ போட்டு கூவியா சொல்லவா வேணும் அவர்களுக்கு..அவனின் நட்பு கிடைத்த பின் அதை விட்டு விட்டேன் அதையும் சேர்த்து சொல்லுவா வேண்டும் .இவர்களின் நினைப்பை எல்லாம் காவி நினைக்க அவளுக்கு இடமில்லை.ஏனெனில் .நினைப்பு முழுவதையும் அவனே பிடித்து விட்டான்.

நகரம் இவளது அவசரத்தின் வேகத்தை விட வேகமாக இப்ப இயங்க தொடங்கி விட்டது. அந்த பிரதான றோட்டில் இறங்கினவள் எந்த பக்கம் போவது என்று தனது மூளையை கசக்கி கொண்டு நின்றாள் .சிறிது அதில் நின்று நிதானித்து விட்டு ஆஸ்பத்திரி இருக்கும் தெரு பக்கமாக விறு விறுவென்று நடக்க தொடங்கி விட்டாள் .தெரு நடுபகுதியில் உள்ள மரங்களின் கீழ் மனிதர்கள் மட்டுமல்ல மினிவான் ,வாடகை கார்களும் ஓய்வெடுத்து கொண்டிருந்தன.கண்டக்டர்கள், வாகன ஓட்டனர்கள் அதில் சாவகசமாக நின்று கொண்டும் குந்தி கொண்டும் சிலர் பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒன்றுடன் சாய்ந்து கொண்டும் வாயடித்து கொண்டிருந்தார்கள் ..அதுக்குள் அவன் நிற்கிறானா என்று துளாவினாள். அவள் தேடும் அவன் அதுக்குள்ளும் சில நேரம் நிக்க கண்டிருக்கிறாள் இவன் அறிமுகம் கிடைக்க முந்தி.

அவளை பொறுத்தவரை அவளுக்கு இப்ப உலகத்தில் மிகவும் அழகன் அவன் தான் .ஆனால் பரட்டை தலையுடன் பல நாள் பல்லு தீட்டாத காவி படர்ந்த பற்களுடனும் கிட்ட சென்றால் பல மாதம் உடம்பு கழுவதாதால் ஏற்படும் ஒருவித அழுக்கு வாசனையுடனும் அந்த கடை வாசல்களிலும் தெருக்களிலும் வலம் வரும் ஒருவன் தான் அவன்.அவனை பார்த்தால் ஒரு காட்டு மனிதனோ அல்லது ஆதிவாசி போன்று அமைந்த தோற்றம் ,,அவனது பற்கள் எப்பவுமே சிரித்தப்படி இருப்பது போல் தோற்றமளிக்கும் அதில் எப்பவுமே வீணி வடிந்தபடி..உண்மையில் அவன் எப்பவுமே சிரித்தபடி இருப்பது அல்ல ..அவனது உருவ அமைப்பே அப்படி இயற்கையில் அமைந்து விட்டது .அங்குள்ள கடை க்காரர் அதில் கூடி இருக்கும் சிலரிடம் எப்பவும் கேட்டு கொண்டிருப்பான்.

இப்படி ,,அண்ணே ஒரு பணிசும் ஒரு டீயும் வாங்கி தாண்ணே .என்று அரியண்டம் கொடுத்து கெஞ்சி கொண்டு இருப்பான்..அதற்க்கு விலையாக பத்து மடங்கு பெறுமதியான வேலையை வாங்கி விடுவார்கள் .அவன் எந்த தொட்டாட்டி வேலை செய்து முடித்தாலும் அவனுக்கு அதிகம் கிடைக்கும் சம்பளம் பணிசும் டீயும் தான் .அவனுக்கும் அதுக்கு மேல் தேவை இருப்பது போல் தெரியவில்லை . தெரியவில்லையோ மேலும் தேவைகள் இருக்கு என்று தெரியாதோ என்னவோ தெரியாது.அப்படி யாரும் இல்லாத நேரங்களில் மூலையுள்ள கடை வாசலில் சாய்ந்து கொண்டு இருந்த படி போய் வரும் பெண்களை கண் வெட்டாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான் . .அவனது தாமசத்தால் உருவாகிய இறுகிபோன உடல் உருவாகி இருந்தது. சில வேளை வேண்டுமென்றே தெரியாத மாதிரி தனது உடையை நழுவ விட்டு தனது அங்கங்களை தெரியதக்கதாய் விட்டு விட்டு இருப்பான் ..அதால் போகும் .பெண்கள் அருவருத்து திட்டி கொண்டு செல்லுவார்கள் ..அவர்கள் அருவருத்த மாதிரி தானே நடிக்க வேண்டும் ....சில வேளை ரசித்தும் இருக்காலாம் ஏனெனில் தையல்காரன் கவர்ச்சியாக தைக்கும் உடைகளிற்க்குள் ஒளிந்து கொண்டு கவர்ச்சி காட்டும் கோறை நெஞ்சு உடைய அவ்வூர் இளைஞர்களிலும் பார்க்க உண்மையிலையே இயற்கை கட்டமைப்பானவன்.

இந்த இடத்திலையும் இப்ப காணவில்லை என்ற போது நெஞ்சுக்குள் அவளுக்கு என்னவோ செய்தது .அவன் எங்கு போயிருப்பான் நகரத்தை விட்டு வெளியில் போக கூடியளவுக்கு அவனுக்கு தேவையுமில்லை ஆற்றலுமில்லை என்று பழகிய கொஞ்ச நாளில் அவளுக்கு நல்லா தெரியும்.

அவனை நினைத்து கலங்குவதுக்கு காரணம் காதல் என்ற கெட்ட வார்த்தையினால் என்று கடைசி வரையும் நினைக்கமாட்டாள். அதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை..அதுக்காக அவள் விபச்சாரி தானே அவளுக்கு எங்கை தெரிய போகுது என்று நினைக்க கூடாது .இந்த பலராலும் பூசிக்கபடும் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நன்றாகவே தெரியும் .இவளை தாண்டி பள்ளிக்கு செல்லும் பெட்டைகள் பொடியளின் பகிடிகளுக்கு புன்னகை உதிர்த்து விட்டு அது காய முன்பு ..அங்காலையும் நிற்கும் பொடியளும் பகிடி விட அதற்க்கும் வழிய விட்டுட்டு செல்லுகிறார்கள்.

அந்த நாட்களில் அந்த கிராமத்து சந்தியில் காலை நேரம் களிப்பூட்டி கொண்டு இருக்க ஸ்கூல் பஸ்க்காக இவள் வரும் போது அந்த பிரதேசமே குளிர்மை கொண்டாடி கொண்டு இருக்கும்..அவளின் அசைவு அங்குள்ள கல்லூரி பெண்களில் இருந்து வித்தியாச படுத்தி கொண்டு இருக்கும் ..அது இயற்கை கொடுத்த வரம் ...அவளின் புன்னகை த்தும்பும் போல் இருக்கும் அப்பாவித்தானமான முகம் அங்கு இருப்பவர்களின் உணர்வுக்களுக்கு தக்க மாதிரி விடை கொடுத்து கொண்டு இருக்கும். அவ்வூர் வாசிகளை விட அவன் நவ நகாரிகமாக இருந்தான் அண்மை காலமாக தான் அவ்வூரில் தென் படுகிறான் ,இவள் பள்ளிக்கு வரும் நேரங்களில் அவனும் வழமையாக வருவதுண்டு .அவள் அங்கு பரப்பும் முழு புன்னகையையும் தனதாக்கி கொள்ள யோசித்தான் ..அதற்க்கு தனக்கு தெரிந்த சகல அஸ்திரங்கள் சகலவற்றையும் பிரயோகித்தான் .. .

இரட்டை பின்னலில் வந்தால்என்னை விரும்புவதாக அர்த்தம் என்று சொல்லி தன்னிடம் உள்ள கடைசி அஸ்த்திரத்தையும் பாவித்து முடித்தான்

அடுத்த நாள் அந்த ஸ்கூல் பஸ் இரட்டை பின்னலுடன் சென்றது .அன்றிலிருந்து அவளுக்கு கசிறினோ பீச் காட்டினான் .. படத்தில் நாயகன் நாயகிக்கு நெருப்பூட்டி திரையில் சிவப்பாக்கா ..ராணி தியேட்டர் பொக்ஸ் றூமில் இருந்த படி சிவப்பு பச்சை எல்லாம் காட்டினான் அவன் கடைசி யில் இவளுக்கு சிவப்பு கொடி காட்டி விட்டு சென்று விட்டான்..ஆனால் காலம் செல்ல அவளுக்கு வயிறு காட்டியது ...அதனால் கிராமத்து சொந்தகளினால் தூக்கிய எறிப்பட்டவள் நகரத்தில் அலைந்தாள் அவனைத்தேடி ..ஆனால் நகரமோ அவளை இந்த தொழில் செய்யும் நரகத்தில் தள்ளியது.

அவள் ஸ்ரான்லி றோட்டில் தேடினால் அவன் நிற்க்கலாம் என்ற நப்பாசை அவளுக்கு ...மூட்டை தூக்கு தொழிலாளிகளுடன் நிற்க்க கண்டதாக நினைப்பு.

இடியும் மழையும் நகரத்தை உலுப்பி கொண்டிருக்க அவனும் அவளும் தற்சயலாக பாழடந்த கட்டிடத்தில் ஒதுங்கிய போது தான் அந்த நட்பு உருவாகியது .நகரமே நள்ளிரவில் நித்திரை வராமால் போராடி கொண்டிருக்க ..இழக்க ஏதும் அற்ற அந்த இருவரும் அந்த இரவை முதல் இரவாக்கி அங்கு ஒரு யோக நடனம் செய்த அன்றிலிருந்து பிறகு அவர்கள் பல முதல் இரவுகளை சந்தித்து இருந்தார்கள்.

அவள் அவனிடமிருந்து அந்த காலம் ஏமாற்றிய காதலினிடமோ அவள் ஈடுபட்ட பாலியல் உறவுகளிலிருந்து பெற்று கொள்ளாத புதிய அனுபவத்தை பெற்றாள்..அதற்க்கு என்ன பெயர் சொல்ல தெரியமால் தவித்தாள்

அந்த தவிப்பு அடங்காமால் தான் இன்னும் தவிப்புடன் அவனை தேடி கொண்டிருக்கிறாள். அவள் பத்திரிகை படிப்பவளல்ல ..அவளை கடந்து செல்லும் போய் வருவர்களின் முக அசைவுகளை படிப்பதன் மூலம் அங்கு ஏதோ நடக்க கூடாத விசயம் நடந்து விட்டது அவளுக்கு உணர்த்தியது.

அந்தி தேவன் கோப கணைகளை வீசி கொண்டிருந்தான் ..முனிசபல் விளக்குகள் மெல்ல மெல்ல எரிய தொடங்கி கொண்டிருந்தன ..அப்பொழுதும் அவனை தேடி கொண்டிருந்தாள் ..அந்த நகர தெருவில் ஈயை கூட காணவில்லை ..அவ்வூர் சனங்கள் வீட்டுக்கு இரட்டை தாள்ப்பாள் பூட்டு பூட்டி பங்கருக்குள் இருப்பது மாதிரி இருந்து கொண்டு செய்தி கேட்டு கொண்டு இருந்தது.

பயம் கவ்விய உணர்வுடன் மறு நாள் காலை விடிந்தது..சனங்கள் மெல்ல மெல்ல குசு குசுத்து கொண்டு தெருவுக்கு இறங்கி தங்களுக்குள் கதைத்து கொள்ளுகிறார்கள்.

அங்கங்கை பிரேதம் கிடக்காம் உண்மை பொய் தெரியாது என்றது ஒன்று.

இரவு முழுவதும் பங்கருக்கிலை இருந்தது போல் இருந்து விட்டு வெளியில் வந்து ..ச்சாய் அவங்களாய் இருக்காது ..சும்மா ஆட்களாய் இருக்கும் என்று புறநானாற்று வீரம் கக்கியது.

அப்பொழுது சைக்கிளில் வந்த

பொடியன் ஒருவன் அவர்களை பார்த்து சொன்னான் ..இப்பத்தான் பார்த்துட்டு வாறன்.

முற்றவெளியிலை உண்மையாய் த்தான் என்று.. .

அவன் பிரேதமாக கிடந்து இருந்தான் என்று அவளுக்கு தெரியாது .. ஏனென்றால் அவனருகில் அவளும் பிரதேமாக கிடந்து இருந்தாள். http://mithuvin.blogspot.com/2010/02/blog-post.html

http://www.tamilish.com/Kathai/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல் வருடங்களுக்கு முன்னரான யாழ் பாணத்து வீதிகளின் பெயர் சொல்லி....அவை இப்போது மறந்தும் போயிருக்கலாம். ..நடந்திருக்கக் கூடிய கதை பாராடுக்கள். .

Link to comment
Share on other sites

பல் வருடங்களுக்கு முன்னரான யாழ் பாணத்து வீதிகளின் பெயர் சொல்லி....அவை இப்போது மறந்தும் போயிருக்கலாம். ..நடந்திருக்கக் கூடிய கதை பாராடுக்கள். .

நிலா அக்கா கருத்துக்கு நன்றிகள்...நடந்திருக்கக்கூடிய கதையா ,,ஹி ஹி,,தொப்பி அளவு இருந்தால் மாட்டி விடுங்கோ ..பிரச்சனையில்லை கதை முழுவதும் எனது கற்பனையே ..(யாவும் கற்பனை) என்று போட மறந்து விட்டன்..என்னக்கா கட்டாயம் போடணமோ :D நாகேஷ்-(மிது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைக்கு ஒரு கரு இருக்க வேண்டும் ........ஆனபடியால் நடந்திருக்கலாம்

Link to comment
Share on other sites

கற்பனைக்கு ஒரு கரு இருக்க வேண்டும் ........ஆனபடியால் நடந்திருக்கலாம்

நிலா அக்கா ..எனது பதிவில் ஒருவர் பின்னூட்டம் போட்டிருக்கிறார் .. உங்களை மாதிரி தான் சொல்லுறார் ...இது real life storyஜ mix பண்ணி இருக்காம்.. இதுதான் அந்த பின்னோட்டம் Fantastic, imaginative story mixed with real life incidents. I wonder how that ' Soda Moodi' becomes 'Sallik Kallu'. The Ending very touching. Keep it up.

Sorry, I am not familiarized of using Tamil fonts to give Comments in Tamil.

.

Link to comment
Share on other sites

நீர் கதை இணைத்த அன்றே பின்னோட்டம் விட்டிருந்தேன் எங்கேயோ போய் தொலைந்துவிட்டது.

முழுக்க முழுக்க நீர் எழுதியது ஒரு உண்மை கதையே,நான் அன்றாடம் அனுபவித்த இடங்கள் அனுபவித்த சம்பவங்கள் மீண்டும் என்னை மணிகூட்டு கோபுரத்தடிக்கு கொண்டு சென்றுவிட்டது.அதற்கு பக்கத்தில் தான் றூம் எடுத்து இருந்து படித்தேன்.இருவர் டாக்டர்கள் நான் இயக்கத்திற்கு போய் பரதேசி.சோடமூடி அன்றாடம் நாம் சந்திக்கும் ஒரு பிரகிரதி ஆனால் நீர் நினைத்தததுபோல் அன்று நினைக்கும் பக்குவம் எமக்கில்லை.

தொடர்ந்து எழுதுங்கள் எங்கள் சமூகத்திற்கு தேவை உங்கள் போல் சிலரே.

Link to comment
Share on other sites

நீர் கதை இணைத்த அன்றே பின்னோட்டம் விட்டிருந்தேன் எங்கேயோ போய் தொலைந்துவிட்டது.

முழுக்க முழுக்க நீர் எழுதியது ஒரு உண்மை கதையே,நான் அன்றாடம் அனுபவித்த இடங்கள் அனுபவித்த சம்பவங்கள் மீண்டும் என்னை மணிகூட்டு கோபுரத்தடிக்கு கொண்டு சென்றுவிட்டது.அதற்கு பக்கத்தில் தான் றூம் எடுத்து இருந்து படித்தேன்.இருவர் டாக்டர்கள் நான் இயக்கத்திற்கு போய் பரதேசி.சோடமூடி அன்றாடம் நாம் சந்திக்கும் ஒரு பிரகிரதி ஆனால் நீர் நினைத்தததுபோல் அன்று நினைக்கும் பக்குவம் எமக்கில்லை.

தொடர்ந்து எழுதுங்கள் எங்கள் சமூகத்திற்கு தேவை உங்கள் போல் சிலரே.

கருத்துக்கு கூறியதுக்கு நன்றி நண்பரே.... எனக்கும் தான் அப்பொழுது நீங்கள் கூறும் பக்குவம் இருக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் படித்த மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. கதையை நகர்த்தியிருக்கும் விதமும் சொல்லும் பாங்கும் அருமையிலும் அருமை. கயவன் ஒருவனால் வஞ்சிக்கப்பட்ட அந்த அபலைப் பெண்ணை, அவளது (எமது) சமூகம் ஏற்கமறுத்தது கொடுமையிலும் கொடுமை. அவளது ஏமாற்றத்துக்கு சல்லிக்கல்லு என்று பட்டமும் வழங்கி அவளது மனதைக் காயப்படுத்தி வேடிக்கை பார்த்திருந்தது எங்கள் தூய்மையான சமூகம். ஆசைகாட்டி மோசம் செய்யும் ஈனத்தனமான ஆண்களினால் பாதிக்கப்பட்ட பெண்களின் குறியீடாக அவள் இருக்கிறாள்.

இந்தக் கதையை படிக்கின்றபோது 1990 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் எனக்கு சமூக விடயங்களை புரிந்துகொள்ள முடியாத பருவம் அது, நானும் எனது அண்ணாவும் (ஒன்றுவிட்ட சகோதரன்) யாழ் விக்டோரியா வீதியால் வந்துகொண்டிருக்கின்றோம். ஒரு பெண்மணி 50 வயதுக்கு ஒன்றிரன்டு கூட வயதிருக்கும், அவளைப் பார்த்து சிலர் 'சர்க்கரை' என்று சொல்ல அவள் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு தனது ஆடைதிறந்து காண்பிக்கிறாள். அப்போது அவளுக்காக மனம் வருந்திய நினைவுகள் வருகிறது. அவளும் இவளைப்போல வஞ்சிக்கப்பட்ட பெண்ணொருத்தியோ? என மனம் இப்போது கனக்கிறது.

தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!.

Link to comment
Share on other sites

நான் படித்த மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. கதையை நகர்த்தியிருக்கும் விதமும் சொல்லும் பாங்கும் அருமையிலும் அருமை. கயவன் ஒருவனால் வஞ்சிக்கப்பட்ட அந்த அபலைப் பெண்ணை, அவளது (எமது) சமூகம் ஏற்கமறுத்தது கொடுமையிலும் கொடுமை. அவளது ஏமாற்றத்துக்கு சல்லிக்கல்லு என்று பட்டமும் வழங்கி அவளது மனதைக் காயப்படுத்தி வேடிக்கை பார்த்திருந்தது எங்கள் தூய்மையான சமூகம். ஆசைகாட்டி மோசம் செய்யும் ஈனத்தனமான ஆண்களினால் பாதிக்கப்பட்ட பெண்களின் குறியீடாக அவள் இருக்கிறாள்.

இந்தக் கதையை படிக்கின்றபோது 1990 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் எனக்கு சமூக விடயங்களை புரிந்துகொள்ள முடியாத பருவம் அது, நானும் எனது அண்ணாவும் (ஒன்றுவிட்ட சகோதரன்) யாழ் விக்டோரியா வீதியால் வந்துகொண்டிருக்கின்றோம். ஒரு பெண்மணி 50 வயதுக்கு ஒன்றிரன்டு கூட வயதிருக்கும், அவளைப் பார்த்து சிலர் 'சர்க்கரை' என்று சொல்ல அவள் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு தனது ஆடைதிறந்து காண்பிக்கிறாள். அப்போது அவளுக்காக மனம் வருந்திய நினைவுகள் வருகிறது. அவளும் இவளைப்போல வஞ்சிக்கப்பட்ட பெண்ணொருத்தியோ? என மனம் இப்போது கனக்கிறது.

தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!.

காவாலி ...நன்றி நண்பரே...கருத்துக்கும் வாசித்த நல்ல கதைகளில் இந்த கதையும் ஒன்று என்று மகுடம் சூட்டியதுக்கும் ,,,ஊர் உலகம் தெரிந்த உங்களின் விமர்சனத்தை மகிழ்ச்சியோடு ஏற்று கொள்ளுகிறேன். அதிகமான எழுத்துக்கள் விளிம்பு நிலை மக்களை கண்டு கொள்ளமாலே இருக்கின்றன. அப்படி எழுதினாலும் கூட கண்டு கொள்ளுமால் பட்டு போய்விடுவதுண்டு...ஆனால் இந்த கதைக்கு பல தளங்களில் கிடைத்த வரவேற்பு உற்சாகத்தை தருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான விதத்தில் கதையை கொண்டு சென்றுள்ளீர்கள்...பாராட்டுகள்...தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.....மூத்திர ஒழுங்கையை நினைவுட்டியமைக்கு நன்றிகள்...... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தபூர்வமான கதை ஒன்றை வாசித்த திருப்தி.இப்படி எத்தனை அழகிகளின் வாழ்வு பாதிக்கப்பட்இருக்கும்.தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

வித்தியாசமான விதத்தில் கதையை கொண்டு சென்றுள்ளீர்கள்...பாராட்டுகள்...தொடர்ந்து எழுதுங்கள்.

அப்படீங்களா ரதி ..உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.....மூத்திர ஒழுங்கையை நினைவுட்டியமைக்கு நன்றிகள்...... :D

.... :):lol::D :D :lol: .... புத்தன் கருத்துக்கு நன்றிகள்

யதார்த்தபூர்வமான கதை ஒன்றை வாசித்த திருப்தி.இப்படி எத்தனை அழகிகளின் வாழ்வு பாதிக்கப்பட்இருக்கும்.தொடர்ந்து எழுதுங்கள்.

sagevan.... கதையை வாசித்து உற்சாகமூட்டியதுக்கு நன்றிகள்
Link to comment
Share on other sites

  • 1 month later...

வித்தியாசமான நடை

.....மூத்திர ஒழுங்கையை நினைவுட்டியமைக்கு நன்றிகள்...... :(

அங்கதான் அடிக்கடி போறனீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கதான் அடிக்கடி போறனீங்களா?

நான் அடீகடி போன இடத்தில இதுவும் ஒண்று :(

Link to comment
Share on other sites

நன்றி நாகேஸ் வித்தியாசமாக எழுதப்பட்ட கதை.சிறுவனாய் இருந்த போது யாழ் பஸ் ஸ்ராண்டில் ஒரு பெண் கந்தலுமாக பிச்சை எடுத்து கொண்டும் இருந்தார். பஸ் ஸ்ராண்டில் நின்ற பஸ் சாரதி எனக்கு ஒன்று எனக்கு தெரிய வேணும் என்று அவரது மார்பை தொட்டு பார்த்து நீ பெண் தான் என சொல்ல பஸ் ஸ்ராண்டில் நின்ற பலர் ஆண்களும் பெண்களும் ரசித்து சிரித்ததை என்னால் மறக்க முடியவிலை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையின் போக்கு மிகவும் நன்று, பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்...

தொடரட்டும் உங்கள் எழுத்து வல்லமை.

Link to comment
Share on other sites

நன்றி நாகேஸ் வித்தியாசமாக எழுதப்பட்ட கதை.சிறுவனாய் இருந்த போது யாழ் பஸ் ஸ்ராண்டில் ஒரு பெண் கந்தலுமாக பிச்சை எடுத்து கொண்டும் இருந்தார். பஸ் ஸ்ராண்டில் நின்ற பஸ் சாரதி எனக்கு ஒன்று எனக்கு தெரிய வேணும் என்று அவரது மார்பை தொட்டு பார்த்து நீ பெண் தான் என சொல்ல பஸ் ஸ்ராண்டில் நின்ற பலர் ஆண்களும் பெண்களும் ரசித்து சிரித்ததை என்னால் மறக்க முடியவிலை. :)

நுணாவிலானுக்கு நன்றிகள் ...உங்கள் அனுபவத்தினூடாகவும்..கதையை வாசித்து கருத்து சொன்னதுக்கு மீண்டும் நன்றிகள்

கதையின் போக்கு மிகவும் நன்று, பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்...

தொடரட்டும் உங்கள் எழுத்து வல்லமை.

உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ..பாரதிப்பிரியன்... அண்மையில் இணைந்தீனீங்கள் ..போலை ..உங்களை இத்தருணத்தில் வரவேற்க்கிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.