Jump to content

லாட்டரிப் பரிசு குலுக்கலில், 480 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் : பிரிட்டனை சேர்ந்த தொழிலாளி தம்பதியருக்கு லாட்டரிப் பரிசு குலுக்கலில், 480 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. பிரிட்டன் குளோசெஸ்டர் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வருபவர்கள் நிகல் பேஜ் (43), அவரது மனைவி ஜஸ்டின் லேகாக் (41). வீடு, எஸ்டேட் போன்ற சொத் துக்களை பராமரித்து வரும் பணியில் இருப்பவர் நிகல். இருவரும் இரண்டாவது திருமணத்தின் மூலம் சேர்ந்துள்ளனர். முந்தைய திருமணத்தின் மூலம் மூன்று குழந்தைகள் உள்ளன.

இவர்களுக்கு பிரிட்டன் கேம்லாட் நிறுவனம் நடத்திய ஜாக்பாட் பரிசு குலுக்கலில், 480 கோடி பரிசுத் தொகை கிடைத் துள்ளது. மொத்தம் 960 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்த குலுக்கலில் மற்றொரு டிக்கெட் வாங்கிய ஸ்பெயின் நாட்டவருடன் இந்த தொகையை பெறுகின்றனர். இந்த 480 கோடி பரிசுத் தொகையில், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து உதவவும், தங்களுடைய பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நன்கொடை அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த தொகையை எப்படி செலவு செய்யப்போகிறோம் என்றுகூட கற்பனை செய்ய முடியவில்லை என்கின்றனர்.

பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் பேஜ் கூறுகையில், "சமீபத்தில் ஒரு நாள் காலை எழுந்து, கம்ப்யூட்டரை பார்க்கையில், "வாழ்த்துகள் நீங்கள் 480 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளீர்கள்' என்று கேம்லாட் நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து இன்னாள் வரை நான் மீளவில்லை என்று கூறுகிறார்.

நன்றி .........தினமலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடே நானும் எங்கட நிலாமதி அக்காவுக்கு 480 கோடி ரூபாய் விழுந்திருக்கு எண்டு ஒடியந்து பாத்தா, அது பிரிட்டன்கரனுக்கல்லே விழுந்திருக்கு. அதுசரி, நிலா அக்காவுக்கு 480 கோடி ரூபாய் விழுந்தா எங்களுக்கும் ஆளுக்கொரு கோடி தாராமலா போவா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் தருவேன் ..உங்களுக்கு தராமலா...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடே நானும் எங்கட நிலாமதி அக்காவுக்கு 480 கோடி ரூபாய் விழுந்திருக்கு எண்டு ஒடியந்து பாத்தா, அது பிரிட்டன்கரனுக்கல்லே விழுந்திருக்கு. அதுசரி, நிலா அக்காவுக்கு 480 கோடி ரூபாய் விழுந்தா எங்களுக்கும் ஆளுக்கொரு கோடி தாராமலா போவா? :D

கடன் உறவை முறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நிலாக்காவுக்கு தான் பரிசு விழுந்திட்டாக்கும் என ஓடி வந்து பார்ந்தால் வெள்ளைக்கா பரிசு விழுந்திருக்கு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் உறவை முறிக்கும்

இது கடன் இல்லை அன்பளிப்பு தானே.அது உறைவை முறிக்காது.மாறாக உறவை வளர்க்கும் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.