Jump to content

டைனாசோர்கள் எப்படி அழிந்து போயின.. ஆதாரங்கள் தேடும் விஞ்ஞானிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_47415966_1-19-din.jpg

இன்று இந்தப் பூமிப்பந்தில் மனிதன் ஆதிக்கம் செலுத்துவது போன்று 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஆதிக்கம் செலுத்திய ராட்சத பல்லி வகைகள் என்று கூறப்படும் டைனாசோர்களும் இதர ராட்சத விலங்குகளும் எப்படி பூண்டோடு பூமிப்பந்தில் இருந்து அழிக்கப்பட்டன என்பது தெளிவான விடை காண முடியாத வினாவாகவே இருந்து வந்துள்ளது.

தற்போது அதற்கு விடை தேடி சான்றுகள் அடிப்படையில் ஒரு திடமான விளக்கத்தை விஞ்ஞானிகள் அளிக்க முன் வந்துள்ளனர்.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 10 தொடக்கம் 15 கிலோமீற்றர்கள் விட்டமுடைய ராட்சத விண்பாறை அல்லது வால்நட்சத்திடம் ஒன்று இன்றைய மெக்சிகோ பகுதியில், துப்பாக்கிச் சன்னம் ஒன்றின் வேகத்தை விட 20 தடவைகள் அதிகரித்த வேகத்தில் மோதி ஜப்பான் நாகசாக்கி, கிரோசிமாவில் அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டுகள் வெளிப்படுத்திய சக்தியை விட ஒரு பில்லியன் மடங்கு அதிகரித்த சக்தியை பிறப்பித்ததுடன் பெருமளவு தூசிகளையும் கிழப்பி பூமியை இருட்டி விட்டதால் தான் இந்த டைனாசோர்கள் எனப்படும் ராட்சதப் பல்லிகள் அழிந்து போயிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தற்போது திடமாகக் கூறுகின்றனர்.

_47417014_yucat_nasa_466.jpg

ராட்சத விண்கல் மோதியதாகக் கருதப்படும் பூமியின் பகுதி.

இந்த கொள்கைக்கு மாற்றுக் கொள்கையாக பூமியில் திடீர் என்று தொடர்ச்சியாக ஏற்பட்டு சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்குத் தொடர்ந்த ராட்சத எரிமலை வெடிப்புக்களின் விளைவாக தோன்றிய பெருமளவு பாறைக் குழம்புகள் பூமியெங்கும் பரவி இந்த டைனாசோர்களை அழிந்திருக்கலாம் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்ற போதிலும்.. தற்போது விண்பாறை ஒன்று பூமியோடு மோதி ஏற்பட்ட தாக்கத்தின் விளைவால் தான் இந்த ராட்சதப் பல்லி இனங்கள் பூமியில் இருந்து கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துள் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளன என்று திடமாக கூற விளைகின்றனர் விஞ்ஞானிகள்.

எதுஎப்படி இருப்பினும் உண்மை என்பது அறிவியலின் பார்வை முன் கிடைக்கும் சான்றுகளுக்கு அப்பால் கிடைக்காத சான்றுகளுக்குள் கூட புதைந்து இருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்வதோடு நாளை மனித இனமும் இந்தப் பூமிப் பந்தில் இருந்து இப்படி துடைத்தழிக்கப்பட நேரலாம் எனபதையும் கவனத்தில் எடுத்து ஆராய்ச்சிகளை தொடர்வதும் பாதுகாப்புக்களை மேற்கொள்வதும் நன்றே. ஆனால் அது மனிதன் முன் இருக்கும் இந்த பரந்த பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள இயற்கை விட்டுள்ள மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். சவாலை அறிவியல் கொண்டு முறியடிக்க முடியுமா..??! நிச்சயம் அதைச் செய்ய மனிதன் தொடர்ந்து முயல்வான் என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாக இன்றிருக்கிறது. அதையே இந்த ஆய்வு விளக்கமும் நமக்கு காட்டி நிற்கிறது.

http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

டைனாசோர்களின் அழிவுக்கு ஓர் பெண் காரணமாய் இருக்கலாமோ? நீங்கள்தான் அதையும் ஆராய்ந்து சொல்லோணும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டைனாசோர்களின் அழிவுக்கு ஓர் பெண் காரணமாய் இருக்கலாமோ? நீங்கள்தான் அதையும் ஆராய்ந்து சொல்லோணும். :D

அவங்களால ஆண்களைத் தான் அழிக்க முடியுமே தவிர.. வேற எதுவும் உருப்படியா ஆகாது..! சாதாரண ஆப்கான் யுத்தத்திற்கே சண்டை பிடிக்க பயப்பிடுற கூட்டம்.. டைனாசோர்களை அழிச்சிருக்குமா என்ன. பெண்களை முன்னுறுத்தி கேள்வி என்றாலும் ஒரு அடிப்படையோட கேட்கனும்..??! :huh::)

Link to comment
Share on other sites

-

டினோஷோர்கள் இந்தியாவிலவந்து முட்டை போட்டதாம் ... ? இந்திய ஆராட்சிஅரங்க அதிபர் சொல்கிறார்...இங்கே ... :blink:

-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-

டீனாஷோர்கள் இந்தியாவிலவந்து முட்டை போட்டதாம் ... ? இந்திய ஆராட்சிஅரங்க அதிபர் சொல்கிறார்...இங்கே ... :D

-

இந்தியா நேற்று முளைத்த நாடு. பிரித்தானியர் இந்திய உபகண்ட தேசங்களை ஒருங்கிணைத்து பெயர் வைக்க அதை காந்தியின் பெயரால் நேரு குடும்பம் அபகரித்து ஆளும் தேசமாகிவிட்டது. இந்த அடிமை நிலையில் இருந்து இந்திய உபகண்ட மக்கள் விடுபட வேண்டும். அது இருக்க..

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா என்ற ஒரு தேசம் இருந்திருக்குமோ தெரியாது. அது பூமியின் மேற்தகடுகளின் நகர்வால் ஆபிரிக்காவில் இருந்து பிரிந்து வந்த ஒரு நிலப்பரப்பாகும். ஆபிரிக்காவில் டைனாசார் இருந்தது என்றால் அதனோடு இணைந்திருந்த பூமியின் பகுதியில் ஏன் இருந்திருக்க முடியாது.

என்னுடைய வினவல் என்ன என்றால் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசார்கள் அழிந்தன என்றால் எப்படி பிற உயிரினங்கள் தப்பின..??! டைனோசார்களின் வழித்தோற்றல்களாக இருக்கும் முதளை.. போன்ற நவ கால விலங்குகள் எப்படி இன்னும் உயிரோடு இருக்கின்றன. அவற்றை எப்படி மேற்படி மொத்துகை அழிக்கத் தவறியது..???! டைனோசார்களை மட்டும் தெரிந்து அழிக்க அப்படி என்ன விசேடமான மொத்துகையாக அந்த விண்கல் மொத்துகை இருந்தது...??! இப்படியான இன்னோரென்ன கேள்விகளுக்கு விடை கொடுப்பது யார்..??!

எங்கையே உதைக்குதே...???! :D :D

Link to comment
Share on other sites

இந்தியா நேற்று முளைத்த நாடு. பிரித்தானியர் இந்திய உபகண்ட தேசங்களை ஒருங்கிணைத்து பெயர் வைக்க அதை காந்தியின் பெயரால் நேரு குடும்பம் அபகரித்து ஆளும் தேசமாகிவிட்டது. இந்த அடிமை நிலையில் இருந்து இந்திய உபகண்ட மக்கள் விடுபட வேண்டும். அது இருக்க..

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா என்ற ஒரு தேசம் இருந்திருக்குமோ தெரியாது. அது பூமியின் மேற்தகடுகளின் நகர்வால் ஆபிரிக்காவில் இருந்து பிரிந்து வந்த ஒரு நிலப்பரப்பாகும். ஆபிரிக்காவில் டைனாசார் இருந்தது என்றால் அதனோடு இணைந்திருந்த பூமியின் பகுதியில் ஏன் இருந்திருக்க முடியாது.

என்னுடைய வினவல் என்ன என்றால் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசார்கள் அழிந்தன என்றால் எப்படி பிற உயிரினங்கள் தப்பின..??! டைனோசார்களின் வழித்தோற்றல்களாக இருக்கும் முதளை.. போன்ற நவ கால விலங்குகள் எப்படி இன்னும் உயிரோடு இருக்கின்றன. அவற்றை எப்படி மேற்படி மொத்துகை அழிக்கத் தவறியது..???! டைனோசார்களை மட்டும் தெரிந்து அழிக்க அப்படி என்ன விசேடமான மொத்துகையாக அந்த விண்கல் மொத்துகை இருந்தது...??! இப்படியான இன்னோரென்ன கேள்விகளுக்கு விடை கொடுப்பது யார்..??!

எங்கையே உதைக்குதே...???! :D :D

விண்க‌ல் மோதுகை பெரும‌ள‌வில் தூசிகளை கிளப்பி வானை மூடிய‌து.

பூமி தூசியால் முடப்பட்டிருக்கும் போது முதலாவதாகப் பாதிக்கப்படுவது பெரிய அளவில் உணவை உண்ணும் உயிரிகள்.அவ்வளவு உணவு அந்த இருண்ட காலப் பகுதியில் கிடையாது.இவை முதலில் அழிய, பின் காலஞ்செல்லச் செல்ல பச்சைத்தாவரங்களை முதன்மையாகக் கொண்ட உணவுச் சங்கிலியில் அங்கம் வகிக்கும் சிறிய அளவில் உண்ணும் விலங்குகளும் அழிந்து சென்றன.

பாறைகளின் கீழ் வாழ்ந்த மிகச்சிறிய அளவில் உணவு உண்ணும் டினோசர்கள், தாவரச் சருகுகளையும் இறந்த விலங்கு உடலங்களையும் உண்டு தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. இவற்றிலிருந்துதான் நவகால ஊர்வன கூர்ப்படைந்திருக்கின்றன.

நீர் வாழ் உயிரிகளிளும் இருண்ட‌ கால‌ப் ப‌குதியில் இருந்து த‌ப்பித்த‌வை உள்ள‌ன. இவ‌ற்றிலிருந்து நாம் வ‌ந்தோம்.

விண்க‌ல் மோதுகை எல்லா உயிரிக‌ளையும் அழிக்க‌வில்லை. அத‌ன் நோக்க‌ம் அதுவ‌ல்ல‌.

டினோச‌ர்க‌ளின் அழிவு ஒரு ச‌டுதியான‌ நிக‌ழ்வ‌ல்ல‌. ஒரு கால‌ப்ப‌குதியில் நிக‌ழ்ந்த‌ தொட‌ர்ச்சியான‌ நிக‌ழ்வு. இன்றும் கூட‌ சில உயிரின‌ங்க‌ள் அருகி அருகி பின் இல்லாம‌ற் போவ‌தை பார்க்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டைனோசர்களை மொத்தமாக அழித்த ராட்சத எரி நட்சத்திரம்!

லண்டன்: ராட்சத விலங்கான டைனோசர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது பூமியைத் தாக்கிய ராட்சத எரிநட்சத்திரம் தான் என்று விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

பூமியில் முன்பு வலம் வந்து கொண்டிருந்த ராட்சத பாலூட்டிகளான டைனோசர்கள் எப்படி மறைந்தன என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

பூமியின் தென் பகுதியில் (இப்போது இந்தியா உள்ள பகுதி) மிகப் பெரிய அளவிலான எரிமலைகள் வெடித்துச் சிதறியதால் டைனோசர்கள் அழி்ந்ததாக ஒரு கருத்தும், எரி நட்சத்திரம் தாக்கியதால்தான் டைனோசர்கள் இறந்ததாக இன்னொரு கருத்தையும் விஞ்ஞானிகள் கொண்டுள்ளனர்.

எரிமலை வெடித்ததாக கூறும் விஞ்ஞானிகள், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு அவை தொடர்ந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.

இந்த சர்ச்சைக்கு தற்போது 41 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று தீர்வைக் கூறியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் குழு சயின்ஸ் இதழில் தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். தற்போது ஆய்வு முடிவை இக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கியது ஒரு ராட்சத எரிநட்சத்திரம். இதன் காரணமாக பூமியில் இருந்து வந்த பாதி அளவிலான உயிரினங்கள் கூண்டோடு அழிந்தன. அதில் டைனோசர்களும் ஒன்று.

பூமியைத் தாக்கிய அந்த எரிநட்சத்திரத்தின் அளவு 15 கிலோமீட்டர் அகலம் உடையதாகும். தற்போது மெக்சிகோ உள்ள பகுதி அன்று சிக்கக்ஸிலப் என்று அறியப்பட்டது. அந்த இடத்தில்தான் இந்த எரிகல் வந்து மோதியது.

இதன் காரணமாக பூமிப் பந்தின் பெரும் பகுதியில் பெரும் தீப்பிழம்புகள் தோன்றின. 10 ரிக்டருக்கும் மேலான நிலநடுக்கங்கள் பூமியை சிதறடித்தன. கண்டங்களில் பெருமளவில் நிலமாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் ராட்சத சுனாமிகள் தோன்றி பூமிப் பரப்பில் பாதியை அழித்து விட்டது.

ஹீரோஷிமாவைத் தாக்கிய அணு குண்டின் சக்தியை விட பல கோடி மடங்கு அதிக அளவிலான வேகத்துடனும், சக்தியுடனும் அந்த ராட்சத எரிநட்சத்திரம் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால்தான் பூமியே சிதறுண்டு போயுள்ளது.

இந்த தாக்குதலில் பூமியில் இருந்து வந்த உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை பூண்டோடு அழிந்து போய் விட்டன. அவற்றில் டைனோசர்களும் ஒன்று.

எரிநட்சத்திரம் தாக்கியதால் ஏற்பட்ட பெரும் பிரளயத்தால் பூமியின் பெரும்பாலான பகுதிகளை இருள் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட புதிய சூழலைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான் டைனோசர்கள் அழிந்து போயுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவரான ஜெர்மனி விஞ்ஞானி பீட்டர் ஷூல்ட் கூறுகையில், 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததாக நமக்கு தடயங்கள் உள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது அப்போது பூமியைத் தாக்கிய எரிநட்சத்திரம்தான் இதற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது.

மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்புகளால் டைனோசர்கள் இறந்ததாக கூற முடியாத அளவுக்கு எங்களது ஆய்வு முடிவுகள் உள்ளன.

டைனோசர்கள் அழிந்த காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பின்னர்தான் மனிதர்கள் சக்தி வாய்ந்த உயிரினங்களாக பூமியில் உருவெடுத்தனர். எனவே இந்தப் பிரளயம், மனித குல வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம் என்றார்.

thatstamil.com

Link to comment
Share on other sites

டைனோசர்களை மொத்தமாக அழித்த ராட்சத எரி நட்சத்திரம்!

...

..

அதன்படி, கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கியது ஒரு ராட்சத எரிநட்சத்திரம். இதன் காரணமாக பூமியில் இருந்து வந்த பாதி அளவிலான உயிரினங்கள் கூண்டோடு அழிந்தன. அதில் டைனோசர்களும் ஒன்று.

பூமியைத் தாக்கிய அந்த எரிநட்சத்திரத்தின் அளவு 15 கிலோமீட்டர் அகலம் உடையதாகும். தற்போது மெக்சிகோ உள்ள பகுதி அன்று சிக்கக்ஸிலப் என்று அறியப்பட்டது. அந்த இடத்தில்தான் இந்த எரிகல் வந்து மோதியது.

...

thatstamil.com

ஒட்டேக்ககு முதலில கொஞ்சமாவது வாசிக்கவெல்லோ வேண்டும் ...! ?

-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டேக்ககு முதலில கொஞ்சமாவது வாசிக்கவெல்லோ வேண்டும் ...! ?

-

ரெண்டுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லையோ, முதலாவது குருவிகளின் இணையத்தில் வந்தது இரண்டாவது தற்றிஸ் தமிழில் வந்தது இரண்டும் ஒரே பொருளை பற்றியதாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்ததால் தனியாக இணைக்காமல் இதன் தொடராக இனைத்தேன் தப்புங்களா அண்ணா :lol::lol::lol:

Link to comment
Share on other sites

என்னுடைய வினவல் என்ன என்றால் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசார்கள் அழிந்தன என்றால் எப்படி பிற உயிரினங்கள் தப்பின..??! டைனோசார்களின் வழித்தோற்றல்களாக இருக்கும் முதளை.. போன்ற நவ கால விலங்குகள் எப்படி இன்னும் உயிரோடு இருக்கின்றன. அவற்றை எப்படி மேற்படி மொத்துகை அழிக்கத் தவறியது..???! டைனோசார்களை மட்டும் தெரிந்து அழிக்க அப்படி என்ன விசேடமான மொத்துகையாக அந்த விண்கல் மொத்துகை இருந்தது...??! இப்படியான இன்னோரென்ன கேள்விகளுக்கு விடை கொடுப்பது யார்..??!

எங்கையே உதைக்குதே...???! :lol: :lol:

ஆதிகாலத்தில், ஒரே ஒரு பெரிய கண்டம் "பஞ்சை", பின்பு அது "க்கொண்டுவானா" "யூராசி "என இரண்டாகப் பிரிந்தது அவை இன்னும் சிறிய சிறிய கண்டங்களாகப் பிரிந்து, அப்படி சிறுத்த கண்டங்களின் அளவிற் ஏற்றபடி டினோஷோர்களும் சிறுத்து முதலைகளாகவும் பல்லிகளாகவும், பறவைகளாகவும் மாறி பாரிய அழிவுகளில்லிருந்து தப்பி இன்று வரை மனிதர்களின் அன்புக்காளாகி நன்றாக வாழ்கின்றன ! ...அவைகள் அழிந்து விட்டதாக இந்த நிபுனர்கள் கதைப்பதைக் கேட்டு சிரிக்கின்றன ... ஒரு நாள் மணிதன் அவற்றை மிண்டும் பெரிதாக்கி தன்னை கடித்துத் தின்னுவதைப் பார்க துடிக்கிறான் ...

இதோ பிரஞ்சுக்காரர்கள் டினோஷோரிற்கு முதல் உலகம் எப்படி நடந்தது என்பதை ஆற குறும் படங்களால் காட்டுகிறார்கள்

பிரஞ்சு மொழியில் ! இங்கே பார்கலாம்

மதிப்பிற் குரிய பழம் பெரும் குடிமக்கள் ஆகிய தமிழர் அன்றிலிருந்து (குமரிக் கண்டகாலம்) இன்றுவரை தங்கள் மொழியில் எந்தவித மாற்றமுமில்லாமல் பேசி எழுதி வருகிறார்களாம் ! அவர்களிடம் இந்த "யூராசி அராச்சியாளர்கள்" டினோஷோரைப்பற்றி கேட்டிருக்க வேண்டும் ... ஆனால் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை ...

நாங்கள் அந்தப் பழம்குடிமக்களிடம் பின்வரும் கேள்விகளை கேட்டால்:

காண்டா மிருகம் என்ற சொல் எப்படி வந்தது ?

மரம் மனிதன் மீன் ... பறவை என்ற சொற்கள் எப்படி வந்ததன ?

கடல் கண்டம் காலம் ... நேரம் வானம் விண் ...என்ற சொற்கள் எப்படி வந்ததன ?

இப்படியே இது போன்ற இன்னும் பல ...

Link to comment
Share on other sites

ரெண்டுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லையோ, முதலாவது குருவிகளின் இணையத்தில் வந்தது இரண்டாவது தற்றிஸ் தமிழில் வந்தது இரண்டும் ஒரே பொருளை பற்றியதாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்ததால் தனியாக இணைக்காமல் இதன் தொடராக இனைத்தேன் தப்புங்களா அண்ணா :lol::lol::lol:

எல்லாமே ஒரே ஒரு கட்டுரையில் இருந்துதான் வருகுது ... அப்ப எல்லாத்தையும் வெட்டி இங்கே ஒட்டினால் ...? என்ன பிரியோசனம்

இங்கே கொஞ்சம் பாருங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லையோ, முதலாவது குருவிகளின் இணையத்தில் வந்தது இரண்டாவது தற்றிஸ் தமிழில் வந்தது இரண்டும் ஒரே பொருளை பற்றியதாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்ததால் தனியாக இணைக்காமல் இதன் தொடராக இனைத்தேன் தப்புங்களா அண்ணா :lol::lol::lol:

குருவிகள் தனது செய்திக்கான பதிவோடு மூலக் கட்டுரையையும் இணைத்திருக்கிறார். அதனைப் பார்த்து சரி தவறுகளை இனங்காண்பது இலகு.

தட்ஸ்தமிழ் கொஞ்சம் அதிகம் செய்திகளை உள்ளடக்கி உள்ள போதும் அது செய்துள்ள மொழிபெயர்ப்பில் பிழைகள் இருக்கின்றன.

உதாரணம்:

ஹீரோஷிமாவைத் தாக்கிய அணு குண்டின் சக்தியை விட பல கோடி மடங்கு அதிக அளவிலான வேகத்துடனும், சக்தியுடனும் அந்த ராட்சத எரிநட்சத்திரம் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால்தான் பூமியே சிதறுண்டு போயுள்ளது.

உண்மையில் குறித்த விண்கல் பூமியோடு மோதிய வேகம் ஒரு துப்பாக்கி குண்டின் வேகத்தின் 20 மடங்கு அதிகரித்த வேகத்தில் ஆகும். அது பல கோடி மடங்கு வேகமல்ல. ஒரு துப்பாக்கி குண்டின் சராசரி வேகம் 320 மீற்றர்கள்/செக்கன் என்று கொண்டால்... 320x20 = 6400 மீற்றர்கள்/செக்கன். இது பல கோடி மடங்கு வேகமா..???! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விண்க‌ல் மோதுகை பெரும‌ள‌வில் தூசிகளை கிளப்பி வானை மூடிய‌து.

பூமி தூசியால் முடப்பட்டிருக்கும் போது முதலாவதாகப் பாதிக்கப்படுவது பெரிய அளவில் உணவை உண்ணும் உயிரிகள்.அவ்வளவு உணவு அந்த இருண்ட காலப் பகுதியில் கிடையாது.இவை முதலில் அழிய, பின் காலஞ்செல்லச் செல்ல பச்சைத்தாவரங்களை முதன்மையாகக் கொண்ட உணவுச் சங்கிலியில் அங்கம் வகிக்கும் சிறிய அளவில் உண்ணும் விலங்குகளும் அழிந்து சென்றன.

பாறைகளின் கீழ் வாழ்ந்த மிகச்சிறிய அளவில் உணவு உண்ணும் டினோசர்கள், தாவரச் சருகுகளையும் இறந்த விலங்கு உடலங்களையும் உண்டு தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. இவற்றிலிருந்துதான் நவகால ஊர்வன கூர்ப்படைந்திருக்கின்றன.

நீர் வாழ் உயிரிகளிளும் இருண்ட‌ கால‌ப் ப‌குதியில் இருந்து த‌ப்பித்த‌வை உள்ள‌ன. இவ‌ற்றிலிருந்து நாம் வ‌ந்தோம்.

விண்க‌ல் மோதுகை எல்லா உயிரிக‌ளையும் அழிக்க‌வில்லை. அத‌ன் நோக்க‌ம் அதுவ‌ல்ல‌.

டினோச‌ர்க‌ளின் அழிவு ஒரு ச‌டுதியான‌ நிக‌ழ்வ‌ல்ல‌. ஒரு கால‌ப்ப‌குதியில் நிக‌ழ்ந்த‌ தொட‌ர்ச்சியான‌ நிக‌ழ்வு. இன்றும் கூட‌ சில உயிரின‌ங்க‌ள் அருகி அருகி பின் இல்லாம‌ற் போவ‌தை பார்க்கின்றோம்.

விண்கல் மோதிய போது தூசி மட்டுமல்ல பெருமளவு சக்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போ அந்தச் சக்திக்கு என்ன நடந்தது..??! தூசிப்படலம் வெறுமனவே சில வகை உயிரினங்களை மட்டும் தானா அழித்தது.

தாவரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் உணவுச் சங்கிலியின் பிற இணைப்பிகள் எப்படி தப்பின..???! அதுமட்டுமன்றி டைனோசார்களில் தாவர உண்ணிகள் மட்டுமன்றி விலங்குண்ணிகளும் மடிந்து போயுள்ளனவே..???! பறக்கக் கூடிய விலங்குப் போசனையுள்ள டைனாசோர்களும் அழிந்தே போயுள்ளன. சிறிய விலங்குகளும் இன்று வாழும் தாவரங்களும் தப்பிக் கூடிய சூழல் இருந்தும் ஏன் அவை தப்பிக்க வில்லை..???!

மிகப் பெரிய அளவிலான சக்தி வெளியீடு எப்படி பிற சிறிய உயிரினங்களை மட்டும் விட்டு வைத்தது..???! மிகப் பெரிய அளவிலான சக்தி வெளியீடும் பூமியைச் சூழ்ந்து கொண்ட தூசிகள் ஏற்படுத்திய இருண்ட சூழலும் எப்படி இன்றைய தாவரங்களை விட்டு வைத்தது..???!

ஆய்வாளர்களின் கருத்துப்படி டைனாசோர்களின் அழிவு இந்த மொத்துகையைத் தொடர்ந்தான ஒரு வருட காலத்துள் நிகழ்ந்து விட்டதாகக் கூறுகின்றனர்...??!

Link to comment
Share on other sites

விண்கல் மோதிய போது தூசி மட்டுமல்ல பெருமளவு சக்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போ அந்தச் சக்திக்கு என்ன நடந்தது..??! தூசிப்படலம் வெறுமனவே சில வகை உயிரினங்களை மட்டும் தானா அழித்தது.

தாவரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் உணவுச் சங்கிலியின் பிற இணைப்பிகள் எப்படி தப்பின..???! அதுமட்டுமன்றி டைனோசார்களில் தாவர உண்ணிகள் மட்டுமன்றி விலங்குண்ணிகளும் மடிந்து போயுள்ளனவே..???! பறக்கக் கூடிய விலங்குப் போசனையுள்ள டைனாசோர்களும் அழிந்தே போயுள்ளன. சிறிய விலங்குகளும் இன்று வாழும் தாவரங்களும் தப்பிக் கூடிய சூழல் இருந்தும் ஏன் அவை தப்பிக்க வில்லை..???!

மிகப் பெரிய அளவிலான சக்தி வெளியீடு எப்படி பிற சிறிய உயிரினங்களை மட்டும் விட்டு வைத்தது..???! மிகப் பெரிய அளவிலான சக்தி வெளியீடும் பூமியைச் சூழ்ந்து கொண்ட தூசிகள் ஏற்படுத்திய இருண்ட சூழலும் எப்படி இன்றைய தாவரங்களை விட்டு வைத்தது..???!

ஆய்வாளர்களின் கருத்துப்படி டைனாசோர்களின் அழிவு இந்த மொத்துகையைத் தொடர்ந்தான ஒரு வருட காலத்துள் நிகழ்ந்து விட்டதாகக் கூறுகின்றனர்...??!

பூமியின் ஒரு பக்கத்தில் நடக்கும் எத்தனை பெரிய வெடிப்பும் பூமியின் அடுத்த பக்கத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாது. உதாரணமாக சூரியனை முகம் கொடுக்காத பகுதியில் இருட்டு. மறுபகுதி சூரியனின் அணுகுண்டு வெடிப்புகளுக்கு முகம் கொடுக்கிறது.( வெளிச்ச‌ம் - ‍ ப‌க‌ல்)

விண்க‌ல் வெடிப்பிற்கு முக‌ம் கொடுத்த‌ ப‌குதியில் பெரும் அழிவு நிக‌ழ்ந்திருக்கும். முக‌ம் கொடுக்காத‌ ப‌குதியில் இருள் கார‌ண‌மாக‌ ஒளித்தொகுப்பு ந‌ட‌ந்திருக்காது. ஏற்க‌னெவே சொன்ன‌து போல் உண‌வுச் ச‌ங்கிலியின் உச்சியில் இருக்கும் வில‌ங்குக‌ளும், அதிக‌ள‌வு உண‌வுண்ணும் வில‌ங்குக‌ளும் முத‌ற்க‌ட்ட‌த்தில் அழிந்துபோகும்.

த‌ப்பித்துக் கொள்ள‌க்கூடிய‌வை என்ப‌வை.. இற‌ந்த தாவர, விலங்குப் பகுதிகளை உண்டு பிழைக்கக் கூடியவை மட்டுமே. சிறிய உடல் கொண்ட சிறிதளவு உண்பவற்றிற்கு தான் தப்பிக்க வாய்ப்பு அதிகம். அத்துட‌ன் தாழ் வெப்ப‌நிலையைத் தாங்க‌க் கூடிய‌வையாக இருக்க‌வும் வேண்டும்.

தாவர வித்துகள் உறங்குநிலை காரணமாக இருண்ட காலப்பகுதியில் தப்பி பின் இருள் விலக தாவரங்களை மறுபடியும் உருவாக்க வல்லன.

எல்லா இன‌ங்க‌ளும் அழிய‌வில்லை. ப‌ற‌வைக‌ள் டினோச‌ர்க‌ளில் இருந்து வ‌ந்த‌வைதான்.

ஒரு குறிப்பிட்ட‌ சூழ்நிலை எல்லா உயிர் இன‌ங்க‌ளையும் ஒரே வித‌மாக‌ப் பாதிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் ஒரு பக்கத்தில் நடக்கும் எத்தனை பெரிய வெடிப்பும் பூமியின் அடுத்த பக்கத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாது. உதாரணமாக சூரியனை முகம் கொடுக்காத பகுதியில் இருட்டு. மறுபகுதி சூரியனின் அணுகுண்டு வெடிப்புகளுக்கு முகம் கொடுக்கிறது.( வெளிச்ச‌ம் - ‍ ப‌க‌ல்)

விண்க‌ல் வெடிப்பிற்கு முக‌ம் கொடுத்த‌ ப‌குதியில் பெரும் அழிவு நிக‌ழ்ந்திருக்கும். முக‌ம் கொடுக்காத‌ ப‌குதியில் இருள் கார‌ண‌மாக‌ ஒளித்தொகுப்பு ந‌ட‌ந்திருக்காது. ஏற்க‌னெவே சொன்ன‌து போல் உண‌வுச் ச‌ங்கிலியின் உச்சியில் இருக்கும் வில‌ங்குக‌ளும், அதிக‌ள‌வு உண‌வுண்ணும் வில‌ங்குக‌ளும் முத‌ற்க‌ட்ட‌த்தில் அழிந்துபோகும்.

த‌ப்பித்துக் கொள்ள‌க்கூடிய‌வை என்ப‌வை.. இற‌ந்த தாவர, விலங்குப் பகுதிகளை உண்டு பிழைக்கக் கூடியவை மட்டுமே. சிறிய உடல் கொண்ட சிறிதளவு உண்பவற்றிற்கு தான் தப்பிக்க வாய்ப்பு அதிகம். அத்துட‌ன் தாழ் வெப்ப‌நிலையைத் தாங்க‌க் கூடிய‌வையாக இருக்க‌வும் வேண்டும்.

தாவர வித்துகள் உறங்குநிலை காரணமாக இருண்ட காலப்பகுதியில் தப்பி பின் இருள் விலக தாவரங்களை மறுபடியும் உருவாக்க வல்லன.

எல்லா இன‌ங்க‌ளும் அழிய‌வில்லை. ப‌ற‌வைக‌ள் டினோச‌ர்க‌ளில் இருந்து வ‌ந்த‌வைதான்.

ஒரு குறிப்பிட்ட‌ சூழ்நிலை எல்லா உயிர் இன‌ங்க‌ளையும் ஒரே வித‌மாக‌ப் பாதிக்காது.

இரண்டு சாதாரண ஆட்கள் மோதினாலே விளைவு விபரீதமாகி விடுகிறது. உச்ச வேகத்தில் மோதும் ஒரு விண்கல் விளைவிக்கும் விளைவென்பது எண்ணிப்பார்க்க முடியாதது. அதுவும் 10 தொடக்கம் 15 கிலோமீற்றர்கள் விட்ட முடைய விண்கல் மோதியிருக்கிறது. பில்லியன் கணக்கான சக்தி பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்தி பெளதீகவியல் மற்றும் இரசயான மாற்றங்களை வளிமண்டலத்திலும் ஏற்படுத்தி இருக்கும். அப்படி இருக்க.. எப்படி ஒரு பகுதி பூமி மட்டும் தான் பாதிக்கப்பட்டது மற்றப்பகுதி அப்படியே இருண்டதோடு சரி என்பதை ஏற்றுக் கொள்ள முடியும்...??!

அதுமட்டுமன்றி.. டைனோசார்களின் சுவடுகள் உலகின் பல பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆக அவை பூமிப் பந்தில் அன்றைய நிலப்பரப்பு பரம்பலுக்கு ஏற்ப பரந்து வாழ்ந்து அழிந்துள்ளன. எனவே குறித்த மொத்துகையின் தாக்கம் (நேரடித் தாக்கம் மட்டும் அல்ல. நேரடி மற்றும் அதன் பின்னான தாக்கங்கள்) பூமிப்பந்து எங்கனும் பரந்திருக்கிறது.

உணவுச் சங்கிலியில் தாவரங்கள் அழிக்கப்பட்டால் முதலில் தாவர போசணிகள் அழியும். அதன் பின்னர் தான் விலங்குப் போசணிகள் அழியும். ஏனெனில் விலங்குப் போசணிகள் இறந்த விலங்குகளை உண்டு வாழலாம். எப்போதும் உணவுச் சங்கிலியின் உச்சி விலங்கு மட்டும் அழியும் என்று எதிர்பார்க்க முடியாது. நச்சுப் பொருள் செறிவாக்கல் உணவுச் சங்கிலியின் உச்சி நோக்கி அதிகரிப்பதால் அங்கு உச்சியில் உள்ள விலங்குகள் அழியும். அதையே எல்லா இடத்திலும் பொருத்திப் பார்க்க முடியாது.

மேலும் தாவரங்களின் அழிவோடு நுண்ணங்கிகள் மற்றும் அழுகல் உண்ணிகளைத் தவிர மற்றவை அழிந்து போயிருக்க வேண்டும். அழுகல் உண்ணிகள் பெரிதும் ஒக்சிசனை நம்பி வாழ்பவை. நுண்ணங்கிகளிலும் பெரும்பான்மையானவை ஒக்சிசனை நம்பி வாழ்பவை.

அதுமட்டுமன்றி இவ்வளவு பெரிய சக்தி வெளியீடு பூமியில் வளிமண்டலக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். தாவரங்களின் அழிவு பூமியின் வளிமண்டலத்தில் ஒக்சிசனின் அளவை குறைத்து காபன்டை ஒக்சைட்டின் அளவை கூட்டி இருக்க வேண்டும். அன்று உயர் ஒக்சிசன் அளவில் வாழ்ந்த தாவரங்கள் பின்னர் குறைந்த ஒக்சிசன் அளவில் எப்படி தப்பிப்பிழைக்க கூர்ப்படைந்தன. உறங்கு நிலை வித்துக்கள்.. பல நூறாண்டுகள் உறங்கு நிலையில் இருந்து.. எப்படி புதிய சூழலில் முளைக்கக் கற்றுக் கொண்டன..??!

வித்துக்கள் பல நூறாண்டுகள் உறங்கு நிலையில் இருந்து முளைக்க முடியுமா..??! அப்படி முடியும் என்றால் ஏன் இன்றைய காலத்தில் அப்படியான வித்துக்களை மீட்டு முளைக்க வைக்க முடியவில்லை..???! டைனோசார்களின் சுவடுகள் கிடைக்கின்ற வேளையில் ஏன் அந்த உறங்கு நிலை வித்துக்கள் கிடைக்கவில்லை..??! கிடைத்தாலும் ஏன் முளைக்க வைக்கப்பட முடியவில்லை..??!

இன்றைய பறவைகள் மட்டுமல்ல.. இன்றைய ஊர்வனங்கள் கூட டைனோசார்கள் அடங்கும் வகைக்குள் தான் அடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆக அன்று டைனோசார்கள் எல்லாம் முற்றாக அழியவில்லை. இன்றைய ஊர்வனவற்றில் முதளை போன்ற பெரிய விலங்குகளை வேண்டையாடி உண்பவை உட்பட ஓணான் போன்ற பூச்சி உண்பவை மற்றும் ஆமை போன்ற தாவர போசணி உள்ளவை என்று பல வகைகளும் உள்ளன. ஆக பெரிய வேட்டையாடி வாழ்ந்த டைனோசார்கள் முற்றாக அழிந்ததே போயின என்றால் எப்படி முதளை போன்ற விலங்குகள் கூர்ப்படைந்தன...??! அவற்றின் மூதாதையர் யார்..???! அவை எங்கு வாழ்ந்தன..??! அவை எப்படி திடீரென மாறிய சூழலில் திடீர் என கூர்ப்படைந்தன..??!

இப்படி இன்னோரென்ன கேள்விகள் சங்கிலித் தொடராக தொங்கு நிற்கின்றனவே..??!

Link to comment
Share on other sites

இரண்டு சாதாரண ஆட்கள் மோதினாலே விளைவு விபரீதமாகி விடுகிறது. உச்ச வேகத்தில் மோதும் ஒரு விண்கல் விளைவிக்கும் விளைவென்பது எண்ணிப்பார்க்க முடியாதது. அதுவும் 10 தொடக்கம் 15 கிலோமீற்றர்கள் விட்ட முடைய விண்கல் மோதியிருக்கிறது. பில்லியன் கணக்கான சக்தி பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்தி பெளதீகவியல் மற்றும் இரசயான மாற்றங்களை வளிமண்டலத்திலும் ஏற்படுத்தி இருக்கும். அப்படி இருக்க.. எப்படி ஒரு பகுதி பூமி மட்டும் தான் பாதிக்கப்பட்டது மற்றப்பகுதி அப்படியே இருண்டதோடு சரி என்பதை ஏற்றுக் கொள்ள முடியும்...??!

பூமி உருண்டை வடிவம் என்பதால் மோதுகையில் வெளிப்படும் சக்தி 180 பாகையில் கிடையாக விரிந்து சென்றால் கூட ஒரு வட்ட மேற்பரப்பைத்தான் தாக்கும்.( நேரடியான தாக்கம்) இதனால் தான் விமானக் குண்டு வீச்சுக்கு நிலத்தில் கிடையாகப் படுக்க வேண்டும்.

:)

அதுமட்டுமன்றி.. டைனோசார்களின் சுவடுகள் உலகின் பல பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆக அவை பூமிப் பந்தில் அன்றைய நிலப்பரப்பு பரம்பலுக்கு ஏற்ப பரந்து வாழ்ந்து அழிந்துள்ளன. எனவே குறித்த மொத்துகையின் தாக்கம் (நேரடித் தாக்கம் மட்டும் அல்ல. நேரடி மற்றும் அதன் பின்னான தாக்கங்கள்) பூமிப்பந்து எங்கனும் பரந்திருக்கிறது.

ஆம். ஒரு வருடத்திற்கு மேல் நீடித்த இருள் தாவரங்களை அழித்திருக்கின்றது. ஒப்பீட்டளவில் பெரிய உடல் கொண்ட அதிகளவு உணவுண்ணும் உயிர்கள் அழிந்திருக்கின்றன.

உணவுச் சங்கிலியில் தாவரங்கள் அழிக்கப்பட்டால் முதலில் தாவர போசணிகள் அழியும். அதன் பின்னர் தான் விலங்குப் போசணிகள் அழியும். ஏனெனில் விலங்குப் போசணிகள் இறந்த விலங்குகளை உண்டு வாழலாம். எப்போதும் உணவுச் சங்கிலியின் உச்சி விலங்கு மட்டும் அழியும் என்று எதிர்பார்க்க முடியாது. நச்சுப் பொருள் செறிவாக்கல் உணவுச் சங்கிலியின் உச்சி நோக்கி அதிகரிப்பதால் அங்கு உச்சியில் உள்ள விலங்குகள் அழியும். அதையே எல்லா இடத்திலும் பொருத்திப் பார்க்க முடியாது.

உணவுச் சங்கிலியில் உள்ள நுணுக்கம் என்னவென்றால் மேல் தட்டில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையைப் போல் பத்துமடங்கு எண்ணிக்கை கிழ்த்தட்டில் உள்ள விலங்குகள் இருக்க வேண்டும். (இது மேல் தட்டு பிழைக்க)

இதை மாற்றிப் பார்த்தால் கீழ்த்தட்டு ( தாவர உண்ணிகள் etc.) அழிந்தால் அவற்றைப் போல் பல் மடங்கு வேகத்தில் மேல் தட்டு விலங்குகள் அழியும்.

மேலும் தாவரங்களின் அழிவோடு நுண்ணங்கிகள் மற்றும் அழுகல் உண்ணிகளைத் தவிர மற்றவை அழிந்து போயிருக்க வேண்டும். அழுகல் உண்ணிகள் பெரிதும் ஒக்சிசனை நம்பி வாழ்பவை. நுண்ணங்கிகளிலும் பெரும்பான்மையானவை ஒக்சிசனை நம்பி வாழ்பவை.

காற்றின்றிய சுவாசம் நடாதும் நுண்ணங்கிகள் பெரும் வகைகள் இருக்கின்றன. (Anaerobic)

குறிப்பாக உக்கவைப்பவை.

அதுமட்டுமன்றி இவ்வளவு பெரிய சக்தி வெளியீடு பூமியில் வளிமண்டலக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். தாவரங்களின் அழிவு பூமியின் வளிமண்டலத்தில் ஒக்சிசனின் அளவை குறைத்து காபன்டை ஒக்சைட்டின் அளவை கூட்டி இருக்க வேண்டும். அன்று உயர் ஒக்சிசன் அளவில் வாழ்ந்த தாவரங்கள் பின்னர் குறைந்த ஒக்சிசன் அளவில் எப்படி தப்பிப்பிழைக்க கூர்ப்படைந்தன. உறங்கு நிலை வித்துக்கள்.. பல நூறாண்டுகள் உறங்கு நிலையில் இருந்து.. எப்படி புதிய சூழலில் முளைக்கக் கற்றுக் கொண்டன..??!

வித்துக்கள் பல நூறாண்டுகள் உறங்கு நிலையில் இருந்து முளைக்க முடியுமா..??! அப்படி முடியும் என்றால் ஏன் இன்றைய காலத்தில் அப்படியான வித்துக்களை மீட்டு முளைக்க வைக்க முடியவில்லை..???! டைனோசார்களின் சுவடுகள் கிடைக்கின்ற வேளையில் ஏன் அந்த உறங்கு நிலை வித்துக்கள் கிடைக்கவில்லை..??! கிடைத்தாலும் ஏன் முளைக்க வைக்கப்பட முடியவில்லை..??!

இருண்ட காலம் பல நூற்றாண்டுகள் நீடிக்கவில்லை. ஒரு வருடம் அளவில் இருள் அகன்றிருக்கின்றது. என்னுடைய அப்பா முந்தைய வருட நெல்லை அடுத்த வருட விதை நெல்லாகப் பாவிப்பார். :lol:

விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்த படியால் ஒக்சிசன் குறையும் அளவும் குறைந்திருக்கும்.

இன்றைய பறவைகள் மட்டுமல்ல.. இன்றைய ஊர்வனங்கள் கூட டைனோசார்கள் அடங்கும் வகைக்குள் தான் அடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆக அன்று டைனோசார்கள் எல்லாம் முற்றாக அழியவில்லை. இன்றைய ஊர்வனவற்றில் முதளை போன்ற பெரிய விலங்குகளை வேண்டையாடி உண்பவை உட்பட ஓணான் போன்ற பூச்சி உண்பவை மற்றும் ஆமை போன்ற தாவர போசணி உள்ளவை என்று பல வகைகளும் உள்ளன. ஆக பெரிய வேட்டையாடி வாழ்ந்த டைனோசார்கள் முற்றாக அழிந்ததே போயின என்றால் எப்படி முதளை போன்ற விலங்குகள் கூர்ப்படைந்தன...??! அவற்றின் மூதாதையர் யார்..???! அவை எங்கு வாழ்ந்தன..??! அவை எப்படி திடீரென மாறிய சூழலில் திடீர் என கூர்ப்படைந்தன..??!

இப்படி இன்னோரென்ன கேள்விகள் சங்கிலித் தொடராக தொங்கு நிற்கின்றனவே..??!

இன்று நாம் பார்க்கும் விலங்குகள் டினோசர்கள் அழிந்த போது தப்பிப் பிழைத்தவை அல்ல. இன்றைய நிலைக்கு வர அவற்றிற்கு 65 மில்லியன் ஆண்டுகள் எடுத்துள்ளன. அன்று தப்பிப் பிழைத்த 20 கிலோவிற்கும் குறைவான நிறை கொண்ட விலங்குகளின் வழித்தோன்றல்கள் தான் இவை.

இவை எப்படி இன்றைய நிலைக்கு கூர்படைந்தன... :)

H1N5 கூர்ப்படையும் வேகத்தைப் பார்த்தால் விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

H1N5 கூர்ப்படையும் வேகத்தைப் பார்த்தால் விளங்கும்.

உங்கட பதிலைப் பார்த்தால்.. ஏதோ சிறுவர்கள் உருட்டிவிட்ட மாபிள் பூமி மீது முட்டிய கதையா எல்லோ இருக்குது. :)

எனக்கு மட்டுமல்ல.. பல அறிவியலாளர்களுக்கும் இந்தக் கொள்கை தொடர்பில் திருப்தி இன்மை இருக்கிறது. எதுஎப்படியோ ஒரு கொள்கை என்ற வகையில் அங்கு வாதப் பிரதிவாதங்கள் இருக்கவே செய்யும்.

H1N5 60 நிமிடத்தில் பல சந்ததிகளை உருவாக்கக் கூடியது.அதுமட்டுமன்றி அவை எளிமையான முறையில் பிறப்புரிமை தகவல்களை மாற்றி தொற்றிகளின் கலங்களில் பெருகக் கூடியவை. டைனாசோர்கள் அப்படிப்பட்டவை அல்ல. உயர் தாவரங்களில் வித்து நிலையில் கூர்ப்பு நடக்காது. உயர் தாவரங்கள் விலங்குகளில் கூர்ப்பு நடக்க ஒடுக்கற்பிரிவு எனப்படும் கலப் பிரிவு நடக்க வேண்டும். வித்து நிலையில் இழையுருப் பிரிவுதான் தொடர்ந்து நிகழ முடியும்.

காற்றின்றிய சுவாசம் நடாதும் நுண்ணங்கிகள் பெரும் வகைகள் இருக்கின்றன. (Anaerobic)

குறிப்பாக உக்கவைப்பவை.

நுண்ணங்கிகளில் கூட காற்றுச் சுவாசம் தான் வினைத்திறனானது. காற்றின்றிய சுவாசம் மூலம் டைனாசோர்கள் போன்ற பல கல அங்கிகள் வாழ முடியாது. எளிமையான நுண்ணங்கிகள் காற்றின்றிய சுவாசம் மூலம் பெறும் சக்தியைக் கொண்டு வாழலாம். ஆனால் அவற்றில் கூட ஒக்சிசனை பாவித்து சுவாசப் பொறிமுறை செய்பவையே அதிகம் வெற்றிகரமாக வாழ்கின்றன.

ஆம். ஒரு வருடத்திற்கு மேல் நீடித்த இருள் தாவரங்களை அழித்திருக்கின்றது. ஒப்பீட்டளவில் பெரிய உடல் கொண்ட அதிகளவு உணவுண்ணும் உயிர்கள் அழிந்திருக்கின்றன.

மொத்துகையால் ஏற்பட்ட இருள் ஒரு வருடத்துள் விலகிக் கொண்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. ஒரு வருடத்துள் சைனாசோர்கள் அழிந்தன என்பதுதான் சொல்லப்பட்டுள்ள செய்தி.

விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்த படியால் ஒக்சிசன் குறையும் அளவும் குறைந்திருக்கும்.

ஒக்சிசனை உருவாக்க தாவரங்கள் இல்லை என்ற நிலையில் இருந்த ஒக்சிசன் கூட இரசாயன தாக்கங்கள் மற்றும் நுண்ணங்கிகளால் பாவிக்கப்பட்டிருக்கும். அப்படியான நிலையில் எப்படி ஒக்சிசன் சூரிய ஒளி இன்றிய காலத்தில் குறையாது இருந்திருக்கும்..??!

என்னுடைய அப்பா முந்தைய வருட நெல்லை அடுத்த வருட விதை நெல்லாகப் பாவிப்பார்.

ஆம் விதைப்பார். அதுவே 3 அல்லது 4 வருடம் சென்றதென்றால் விதைப்பாரா. சப்பை என்று சொல்லி வயலுக்கு உரமாக்கி இருப்பார். :)

இப்படி நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் கொள்கை அளவில் இது ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை மட்டும் நாமும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோதுகையின் பின்னர் அனைத்தும் அழிந்து, புதிதாக கூ்ர்ப்பின் மூலம் புதிய உயிரினங்கள் தோண்றியிருக்க வாய்பிருக்கிறது.

Link to comment
Share on other sites

உங்கட பதிலைப் பார்த்தால்.. ஏதோ சிறுவர்கள் உருட்டிவிட்ட மாபிள் பூமி மீது முட்டிய கதையா எல்லோ இருக்குது. :D

எனக்கு மட்டுமல்ல.. பல அறிவியலாளர்களுக்கும் இந்தக் கொள்கை தொடர்பில் திருப்தி இன்மை இருக்கிறது. எதுஎப்படியோ ஒரு கொள்கை என்ற வகையில் அங்கு வாதப் பிரதிவாதங்கள் இருக்கவே செய்யும்.

H1N5 60 நிமிடத்தில் பல சந்ததிகளை உருவாக்கக் கூடியது.அதுமட்டுமன்றி அவை எளிமையான முறையில் பிறப்புரிமை தகவல்களை மாற்றி தொற்றிகளின் கலங்களில் பெருகக் கூடியவை. டைனாசோர்கள் அப்படிப்பட்டவை அல்ல. உயர் தாவரங்களில் வித்து நிலையில் கூர்ப்பு நடக்காது. உயர் தாவரங்கள் விலங்குகளில் கூர்ப்பு நடக்க ஒடுக்கற்பிரிவு எனப்படும் கலப் பிரிவு நடக்க வேண்டும். வித்து நிலையில் இழையுருப் பிரிவுதான் தொடர்ந்து நிகழ முடியும்.

வித்துக்கள் கூர்பு ???

இம்பிரியல் கல்லூரி விளக்கங்களும் வீடியோ அனிமெஷனும்

http://www.physorg.com/news186920341.html

மோதுகையில் வெளிவரும் சக்தியை விட அவர்கள் இருளிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அங்கு காணலாம். மோதுகைச் சக்தி முழு உலகத்தையும் நேரடியாகப் பாதித்தது என்பது பிழை. ஒரு மாபிள் டெனிஸ் பந்தின் மேல் மோதினால் என்ன.. ஒரு விண்கல் பூமி மேல் மோதினால் என்ன.. :)

மொத்துகையால் ஏற்பட்ட இருள் ஒரு வருடத்துள் விலகிக் கொண்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. ஒரு வருடத்துள் சைனாசோர்கள் அழிந்தன என்பதுதான் சொல்லப்பட்டுள்ள செய்தி.

... Impact theories can only explain very rapid extinctions, since the dust clouds and possible sulfuric aerosols would wash out of the atmosphere in a fairly short time—possibly under ten years.[74]....

http://en.wikipedia.org/wiki/Cretaceous%E2%80%93Tertiary_extinction_event#Impact_event

பல நூற்றாண்டுகள் எடுக்க வில்லை..வளிமண்டல துணிக்கைகள் விரைவாகப் படியும்..

ஒக்சிசனை உருவாக்க தாவரங்கள் இல்லை என்ற நிலையில் இருந்த ஒக்சிசன் கூட இரசாயன தாக்கங்கள் மற்றும் நுண்ணங்கிகளால் பாவிக்கப்பட்டிருக்கும். அப்படியான நிலையில் எப்படி ஒக்சிசன் சூரிய ஒளி இன்றிய காலத்தில் குறையாது இருந்திருக்கும்..??!

விலங்குகளின் எண்ணிக்கை மிகச்சிறிய அளவிற்கு குறைந்த நிலையில் ஒக்சிசன் குறைந்து கொண்டு செல்லும் விகிதம் குறைவாக இருக்கும். அறவே குறையாது என்று அர்த்தம் அல்ல.

இங்கு க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து இத்த‌கைய‌ சூழ்நிலை எவ்வ‌ள‌வு கால‌ம் நீடித்த‌து என்ப‌துதான். இருள் அக‌ல‌த் தொட‌ங்க‌ மீண்டும் ஒக்சிச‌ன் அள‌வு கூடியிருக்கும்.

ஆம் விதைப்பார். அதுவே 3 அல்லது 4 வருடம் சென்றதென்றால் விதைப்பாரா. சப்பை என்று சொல்லி வயலுக்கு உரமாக்கி இருப்பார். :lol:

இப்படி நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் கொள்கை அளவில் இது ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை மட்டும் நாமும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். :lol:

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது புறப்பட்ட சுனாமி ....... எமது நாட்டின் கிழக்குப் பகுதியை கூடுதலாகவும், மேற்குப் பகுதியில் குறைவான தாக்கமே ஏற்பட்டது.

அதே போல் விண்கல் மெக்சிக்கோவில் மோதிய போது...... மறு பக்கம் இருந்த தாவரங்கள், உயிரினங்கள் தப்பியிருக்க சந்தர்ப்பம் உண்டு.

மேலும்....... முதலை , ஆமை போன்றவை நீரிலும் வாழக்கூடியவை என்பதால் , அவைகளுக்கு நிலத்தை விட நீரில் பாதுகாப்பு அதிகம்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்பிரியல் கல்லூரி விளக்கங்களும் வீடியோ அனிமெஷனும்

http://www.physorg.com/news186920341.html

மோதுகையில் வெளிவரும் சக்தியை விட அவர்கள் இருளிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அங்கு காணலாம். மோதுகைச் சக்தி முழு உலகத்தையும் நேரடியாகப் பாதித்தது என்பது பிழை. ஒரு மாபிள் டெனிஸ் பந்தின் மேல் மோதினால் என்ன.. ஒரு விண்கல் பூமி மேல் மோதினால் என்ன.. :)

நன்றி மேலதிக தகவல்களைப் பெறக் கூடியதாக இருந்தது.

... Impact theories can only explain very rapid extinctions, since the dust clouds and possible sulfuric aerosols would wash out of the atmosphere in a fairly short time—possibly under ten years.[74]....

http://en.wikipedia.org/wiki/Cretaceous%E2%80%93Tertiary_extinction_event#Impact_event

பல நூற்றாண்டுகள் எடுக்க வில்லை..வளிமண்டல துணிக்கைகள் விரைவாகப் படியும்..

இவர்களின் கணிப்புப்படி 10 ஆண்டுகளுக்குள் எடுத்திருக்கலாம் என்பது சொல்லப்படுகிறது. அவ்வளவு காலத்திற்கு வித்துக்கள் உறங்கு நிலையில் இருந்து முளைத்தன என்பது எல்லா வகை தாவரங்களுக்கும் பொருந்தாது. ஆனால் டைனோசார்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பன்ன வகைகள் இப்போதும் பூமியில் இருக்கின்றன. அவற்றின் வித்திகள் அதிக காலம் மற்றைய பூக்கும் தாவரங்களின் வித்துக்களை விட உறங்கு நிலையில் இருந்திருக்க முடியுமா..??! ஏனெனில் அவற்றின் பாதுகாப்புகவசங்கள் அத்துணை வலுவுள்ளவை அல்ல.

உறங்கு நிலை வித்து கூர்ப்புக்கு இலக்காகி இருக்க வாய்ப்பில்லை.

விலங்குகளின் எண்ணிக்கை மிகச்சிறிய அளவிற்கு குறைந்த நிலையில் ஒக்சிசன் குறைந்து கொண்டு செல்லும் விகிதம் குறைவாக இருக்கும். அறவே குறையாது என்று அர்த்தம் அல்ல.

இங்கு க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து இத்த‌கைய‌ சூழ்நிலை எவ்வ‌ள‌வு கால‌ம் நீடித்த‌து என்ப‌துதான். இருள் அக‌ல‌த் தொட‌ங்க‌ மீண்டும் ஒக்சிச‌ன் அள‌வு கூடியிருக்கும்.

இருள் அகண்ட உடனேயே தாவரங்கள் உருவாகி விட்டனவா..???! அதுவரை பூமியின் சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையா..??! அது தாவரங்கள் மீள உருவாவதில் பாதிப்பை செய்திருக்காதா..??! இன்னொன்றை கவனிக்க வேண்டும்... கடல் வாழ் உயிரினங்கள் கூட கடல் வாழ் ஒளியை நம்பி வாழும் தாவரங்கள் மற்றும் பிளாங்டன்களின் அழிவால் அழிவைச் சந்தித்திருக்கும். அங்கு கூட பெருமளவு உயிர் சேதனம் உக்கி இருக்க.. நுண்ணங்கிகளின் தாக்கம் கடலிலும் இருந்திருக்கும். அதுவும் ஒக்சிசனை எடுத்திருக்கும்.

கீழுள்ள இணைப்பை நோக்கின் அதில் சொல்கிறார்கள் என்னென்ன அடிப்படை விளைவுகளை இந்த மொத்துகை பூமியில் என்னென்ன அளவுகளில் ஏற்படுத்தியது என்பதை. இந்த ஆய்வு குறிப்பிட்ட அளவு ஆதாரங்களோடு முன் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கொள்கை. இது ஏற்கப்படுவது மட்டும் சாத்தியமானதல்ல. நிராகரிக்கப்படுவும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.

http://impact.ese.ic.ac.uk/ImpactEffects/Chicxulub.html

Link to comment
Share on other sites

-

உந்தக் கிருமிகளை ஆழிப்பது அவ்வளவு சுலபமானதல்ல,

அதோட, ஹீரோசிம்மாவில அணு குண்டு வெடித்த இடத்தில "ஜிங்கோ" என்ற மரமும் "கரப்புத்தான்" பூச்சியும் ஒரு பிரச்சனையுமில்லாம வாழுதாம்...

இன்னும், "சார்னுவில்லைச் " (றஷிய அணுஉலை) சுற்றியும் பல உயிரினங்கள் ... வேடிக்கையான பயப்படுத்தும் உருவங்களுடன்தான், ...ஆனால்... ,அவை வாழ்கின்றன வளர்கின்றன ...!!

அதை விட , அந்த விழுத்த விண்கல்லு 15 மீ விட்டமுள்ள ஒரு பாரிய பனிக்கட்டி யாகவும் இருந்திருக்கலாம் ... ? ...

The bombardment of Earth by asteroids 3.9 billion years ago may have enhanced early life,

according to a new University of Colorado study. Credit: NASA/JPL ... read more here

090520-earth-hit-02.jpg

image from www.livescience.com

- 15:19 10 March 2009 by Jeff Hecht - www.newscientist.com

Microbes living deep underground could have survived the massive barrage of impacts that blasted the Earth 3.9 billion years ago, according to a new analysis. That means that today's life might be descended from microbes that arose as far back as 4.4 billion years ago, when the oceans formed.

Around 3.9 billion years ago, shifts in the orbits of the gas giant planets are thought to have disrupted other objects in the solar system, sending many hurtling into the inner planets. Geologists call that time the Hadean Eon, and thought its fiery hell of impacts would have sterilised the Earth.

But a new study by Oleg Abramov and Steve Mojzsis of the University of Colorado in Boulder suggests hardy life-forms could have survived if they were buried underground. They will report the results on 23 March at the Lunar and Planetary Science Conference in Texas.

Sterilisation point

Using a computer model, they sent 200 million billion tonnes of mass - in rocks with the same mass distribution as those in today's asteroid belt - slamming into the planet.

The biggest impacts would have done the most damage - a 500-kilometre-wide blockbuster would have spread a 350-metre-deep layer of 1200 °C ejecta over the planet.

Yet heat from the impacts would not have penetrated very deeply into the underlying solid crust. The layer heated to the sterilisation point, about 110 °C, would be only about 300 metres thick. High-temperature 'extremophile' microbes, like those in the hot springs of Yellowstone National Park, would have survived at greater depths, down to their limit of about 4 km.

Moreover, the impacts might have helped provide a refuge for these heat-loving microbes by creating cracks in the rocky crust that water could flow into.

Early oceans

So, how far back could life have originated? It's hard to say, since rocks that would have recorded evidence of any life from before the Hadean were destroyed by the "late heavy bombardment" that battered the planet at the time. The oldest isotopic evidence of life comes from rocks that formed 3.83 billion years ago, soon after the bombardment ended.

But heat-loving microbes appear to be among the Earth's earliest life-forms, and may have developed as early as 4.4 billion years ago. That's when the hot young Earth - whose top few hundred kilometres had probably been vaporised 100 million years before, in the impact that formed the Moon - would have cooled enough for seas to form.

Says Mojzsis: "For all intents and purposes, life could have started 4.4 billion years ago, and the late heavy bombardment pruned, rather than frustrated, life."

That conclusion is reasonable, says Kevin Zahnle of NASA's Ames Research Center in California.

-

-

Link to comment
Share on other sites

இவர்களின் கணிப்புப்படி 10 ஆண்டுகளுக்குள் எடுத்திருக்கலாம் என்பது சொல்லப்படுகிறது. அவ்வளவு காலத்திற்கு வித்துக்கள் உறங்கு நிலையில் இருந்து முளைத்தன என்பது எல்லா வகை தாவரங்களுக்கும் பொருந்தாது. ஆனால் டைனோசார்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பன்ன வகைகள் இப்போதும் பூமியில் இருக்கின்றன. அவற்றின் வித்திகள் அதிக காலம் மற்றைய பூக்கும் தாவரங்களின் வித்துக்களை விட உறங்கு நிலையில் இருந்திருக்க முடியுமா..??! ஏனெனில் அவற்றின் பாதுகாப்புகவசங்கள் அத்துணை வலுவுள்ளவை அல்ல.

உறங்கு நிலை வித்து கூர்ப்புக்கு இலக்காகி இருக்க வாய்ப்பில்லை.

இருள் அகண்ட உடனேயே தாவரங்கள் உருவாகி விட்டனவா..???! அதுவரை பூமியின் சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையா..??! அது தாவரங்கள் மீள உருவாவதில் பாதிப்பை செய்திருக்காதா..??! இன்னொன்றை கவனிக்க வேண்டும்... கடல் வாழ் உயிரினங்கள் கூட கடல் வாழ் ஒளியை நம்பி வாழும் தாவரங்கள் மற்றும் பிளாங்டன்களின் அழிவால் அழிவைச் சந்தித்திருக்கும். அங்கு கூட பெருமளவு உயிர் சேதனம் உக்கி இருக்க.. நுண்ணங்கிகளின் தாக்கம் கடலிலும் இருந்திருக்கும். அதுவும் ஒக்சிசனை எடுத்திருக்கும்.

இதாலி, தென்மெரிக்கா மற்றும் இந்தோனேசியாப் பகுதிகளில் ஏற்படும் எரிமலை வெடிப்புகளைப் பார்த்தீர்கள் என்றால் ஆயிரக்கணக்கான தொன் தூசிகளையும் புகைத்துணிக்கைகளையும் அவை வளிமண்டலத்தினுள் காழுகின்றன. இதனால் பல சதுர கிலோமீட்டர் பகுதிகளிற்கு சூரிய ஒளி கிடைப்பது பாதிக்கப்படுகின்றது. இருப்பினும் இவ்வளவு தூசும் ஓரிரு வாரங்களினுள் படிவடைந்து வானம் மீண்டும் தெளிவடைகின்றது.

ஆகவே பத்து வருடங்கள் என்பது மிக மிக நீண்ட காலம். ஏன்.. ஒருவருடமே நீண்ட காலம் தான்.

ஆனால் சூரிய ஒளி மறைக்கப்படும் போது வெப்பநிலை மிக விரைவாக வீழ்ச்சியடையும். ஓரிரு மாதங்களினுள்ளேயே வெப்பநிலை 0 இற்கு கீழ் வந்திருக்கும். பெரிய உடல் விலங்குகளிற்கு தமது உடல் வெப்பநிலையைப் பேண பெருமளவு உணவு தேவை. ஆகவே இப்படியானவை தான் விரைவாக அழிந்து போக சாத்தியம் இருக்கின்றது.

தாழ் வெப்பநிலையில் வித்துகளின் உறங்குநிலை காலம் நீடிக்கப்படலாம்.

..Hydrated wild rice seeds can be frozen to –10 °C without damage, but dormancy is not lost at subfreezing temperatures. These results provide new options for long-term storage of wild rice seeds.

(Department of Vegetable Crops, University of California Davis, California 95616-8631, USA)

http://aob.oxfordjournals.org/cgi/content/abstract/69/4/297

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.