Jump to content

மற்றுப் பற்றென | சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் | ஏழாம் திருமுறை


Recommended Posts

மற்றுப் பற்றென | சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் | ஏழாம் திருமுறை

http://www.shaivam.org/gallery/audio/satguru/tis_sat_ain_marruparru.mp3'>http://www.shaivam.org/gallery/audio/satguru/tis_sat_ain_marruparru.mp3

திருச்சிற்றம்பலம்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்

பாத மேமனம் பாவித்தேன்

பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற

வாத தன்மைவந் தெய்தினேன்

கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை

யூரிற் பாண்டிக் கொடுமுடி

நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்

சொல்லும் நாநமச்சி வாயவே.

இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்

திட்ட நாள்மறந் திட்டநாள்

கெட்ட நாளிவை என்ற லாற்கரு

தேன்கி ளர்புனற் காவிரி

வட்ட வாசிகை கொண்ட டிதொழு

தேத்து பாண்டிக் கொடுமுடி

நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்

சொல்லும் நாநமச்சி வாயவே.

ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்

போகும் நாளுயர் பாடைமேல்

காவு நாளிவை என்ற லாற்கரு

தேன்கி ளர்புனற் காவிரிப்

பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்

சோதி பாண்டிக் கொடுமுடி

நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்

சொல்லும் நாநமச்சி வாயவே.

எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை

தம்பி ரானென்பொன் மாமணி

கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி

காவி ரியதன் வாய்க்கரை

நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை

யூரிற் பாண்டிக் கொடுமுடி

வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்

சொல்லும் நாநமச்சி வாயவே.

அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி

யேனும் நான்மிக அஞ்சினேன்

அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்

நல்கி னாய்க்கழி கின்றதென்

பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்

தாடு பாண்டிக் கொடுமுடி

நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்

சொல்லும் நாநமச்சி வாயவே.

ஏடு வானிளந் திங்கள் சூடினை

என்பின் கொல்புலித் தோலின்மேல்

ஆடு பாம்பத ரைக்க சைத்த

அழக னேயந்தண் காவிரிப்

பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்

சோதி பாண்டிக் கொடுமுடி

சேட னேயுனை நான்ம றக்கினுஞ்

சொல்லும் நாநமச்சி வாயவே.

விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்

தேன்வி னைகளும் விண்டனன்

நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற

நின்ற காவிரிக் கோட்டிடைக்

குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்

தாடு பாண்டிக் கொடுமுடி

விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்

சொல்லும் நாநமச்சி வாயவே.

செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்

தீயெ ழச்சிலை கோலினாய்

வம்பு லாங்குழ லாளைப் பாகம

மர்ந்து காவிரிக் கோட்டிடைக்

கொம்பின் மேற்குயில் கூவ மாமயி

லாடு பாண்டிக் கொடுமுடி

நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்

சொல்லும் நாநமச்சி வாயவே.

சார ணன்தந்தை எம்பி ரானெந்தை

தம்பிரா னென்பொன்மா மணியென்று

பேரெ ணாயிர கோடி தேவர்

பிதற்றி நின்று பிரிகிலார்

நார ணன்பிர மன்றொ ழுங்கறை

யூரிற் பாண்டிக் கொடுமுடிக்

கார ணாவுனை நான்ம றக்கினுஞ்

சொல்லும் நாநமச்சி வாயவே.

கோணி யபிறை சூடியைக் கறை

யூரிற் பாண்டிக் கொடுமுடி

பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்

பித்த னைப்பிறப் பில்லியைப்

பாணு லாவரி வண்ட றைகொன்றைத்

தார னைப்படப் பாம்பரை

நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை

சொல்லு வார்க்கில்லை துன்பமே.

பண் - பழம்பஞ்சுரம்

தலம் - திருப்பாண்டிக்கொடுமுடி

சுவாமிபெயர் - கொடுமுடிநாதர்

தேவியார் - பண்மொழியாளம்மை

திருச்சிற்றம்பலம்

மூலம்: http://www.shaivam.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பனே என்ரை சிவனே அரோகரா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.