Jump to content

இலக்கணாவத்தை!!!


Recommended Posts

  • Replies 59
  • Created
  • Last Reply

அட நம்மட ஏரியா <_<:lol::lol:

நன்றி சின்னப்பு!

அதுசரி உங்க ஏரியா எது என்றதையும் சொல்லீட்டிங்க என்றால் நல்லா இருக்குமல்லோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி வல்வை லிங்கம்! நான் பலதடவை அப்பக்கத்தால் சென்றிருக்கிறேன். இப்போதுதான் இப்பதிவைப் பார்த்தேன். மிக அருமையான தேவையான பதிவு. முன்பு இலக்கனாவத்தையிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் கூட பல வாகன (லொறி, சொமசெட், எ போர்டி) உரிமையாளர்களைத் தெரிந்திருக்கும். 1975 வரை . இப் பதிவில் 31 , 32 , 40 படங்களைப் பார்க்கும் போது ஈரலிப்பான மண்வாசனையுடன் கூடிய காத்து நாசியில் ஏறி நெஞ்சை அடைக்குது. பக்கத்தில் கொஞ்சம் தூரம்தான் வறுத்தலை விளான், அந்தப்பக்கம் வழழாய் "எழுத்து சரியோ தெரியவில்லை" எல்லாம் சில நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். அம்மாவுக்கு இப்படங்களைக் காட்டினேன் பணம்கூடலைக் கண்டதும் ரெம்ப நெகிழ்ந்து பழைய நினைவுகளுக்குள் போய் விட்டா. மாவிட்டபுரம் வீடு, வளவெல்லாம் உண்டு.இன்னும் நிறைய ஞாபகங்கள் ...... . ரொம்ப ரொம்ப நன்றி ஒரு பச்சை! <_<:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி! பனை மரத்திலும் ஊஞ்சல் கட்டி ஆடியதுண்டு. இரண்டு பனைகளில் அளவான உயரத்தில் பெரிய நீளமான கப்பைக் நன்றாக வரிந்து கட்டி கீழே நல்ல பிறவட்டு பலகையில் ஊஞ்சல் கட்டி நடுவிலே பொடியளை, பெரியாட்களை இருத்தி (சிறுவர்களுக்குத் தடை) இரு ஓரங்களிலும் இரண்டு மல்லர்கள் நிண்டு வலித்தால் வட துருவத்தில் பென்குயின்களும் , தென் துருவத்தில் பனிக் கரடிகளும் தெரியும். <_<:lol::lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாழ்த்துக்கள் வல்வை லிங்கம்.

உங்கள் நண்பர்கள், ஊரார் ஒன்றிணைந்து உங்கள் ஊரில் கணிசமான முதலீட்டுடன் பொருத்தமான (பண்ணைப் பொருள், பனம்பொருள், மீன் தொடர்பான அல்லது கலைப்பள்ளி) நவீன - தரமான உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்களை தாபித்து ஊரை வளப்படுத்தலாம் அல்லவா?

முயல்வீர்களா லிங்கம்?

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வல்வை லிங்கம்.

உங்கள் நண்பர்கள், ஊரார் ஒன்றிணைந்து உங்கள் ஊரில் கணிசமான முதலீட்டுடன் பொருத்தமான (பண்ணைப் பொருள், பனம்பொருள், மீன் தொடர்பான அல்லது கலைப்பள்ளி) நவீன - தரமான உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்களை தாபித்து ஊரை வளப்படுத்தலாம் அல்லவா?

முயல்வீர்களா லிங்கம்?

நன்றி ஆசான்!

முதலில் ஒன்று கூடுவோம், பேசுவோம், இறங்குவோம் செயலில்.

Link to comment
Share on other sites

நன்றிகள் லிங்கம்.

செயலில் விரைந்து இறங்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இனிதே நிறைவேறிய "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" மக்களின் ஒன்றுகூடல்.

யாழ் மாவட்டத்தில் வடமராட்சிப்பகுதியில் உடுப்பிட்டிக்கும், வல்வெட்டித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் இலக்கணாவத்தை என்ற அழகான ஊர் இருக்கின்றது.

இவ்வூரைச்சேர்ந்த கனடாவிலை வசிக்கின்ற கிட்டத்தட்ட 60 குடும்ப மக்கள் ஒன்றுகூடல் நடாத்துவதிற்கு பல வருடங்களாக எடுக்கப்பட்ட முயற்சி பல வேறுபட்ட காரனங்களினால் தடைப்பட்டு வந்து யூலை மாதம் 3ந்திகதி, சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் பாரதி கலைக்கோயில் மண்டபத்தில் இனிதே நிறைவேறியுள்ளது.

அன்று இடம்பெற்ற இந்த நிகழ்ச்சி எதிர்பாராத விதமாக எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் கலந்து கொண்டு பேரதிற்சியை கொடுத்திருந்தாலும், மண்டப உரிமையாளர் நெருங்கிய ஆதரவாளர் என்ற படியினால் இடவசதியையும், கேற்றரிங் உரிமையாளர் எங்கவூர் உறவு என்றபடியினால் உணவு வசதிகளையும் வெற்றியுடன் சமாளித்துக்கொண்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நிகழ்வு இலக்கணாவத்தை ஊரைச்சேர்ந்த மூன்று பிரபல்யங்கள் குடும்ப சகிதம் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

தமிழ் வாழ்த்துப்பாடல், கனடிய தேசியகீதம் போன்றவற்றைத் தொடர்ந்து, மாவீரர்கள், தாயகத்தில் திட்டமிட்டு கொல்லப்பட்ட பொதுமக்கள் உட்பட புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களை நேசித்த எங்களால் நேசித்து எங்களை விட்டகன்ற அனைத்து மக்களிற்கும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டன.

இந் நிகழ்வில் உரையாற்றிய ஒரு சிறுமி தனதுரையில் எங்கவூருக்கு வெளியே இவ்வளவு தொகையான மக்கள் தாங்களே ஒழுங்கு செய்து ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் இன்றைய தினம் எமதூர் மக்களைப் பொறுத்தவரை சரித்திரத்தில் இடம் பிடிக்கப்போகும் ஒரு முக்கிய தினமாகும் என்றார்.

தொடர்ந்து தனதுரையில், இன்றைய இந்த நிகழ்வு புலம்பெயர்ந்து மற்றைய நாடுகளில் வாழும் எமதூர் மக்களிற்கும் இது ஒரு உற்சாகத்தை கொடுக்கும் என்றார்.

கலை நிகழ்ச்சிகள் முறையே பாடல்கள், நடனங்கள், பேச்சுக்கள், வயலின் இசை, கீபோர்ட் இசை உட்பட பத்திற்கு மேற்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இங்கு நிகழ்ச்சித்தொகுப்பு உட்பட சில நிகழ்வுகளைத்தவிர அனைத்தும் சிறுவர்களே பங்கு பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இடையே வாழ்த்துச்செய்திகள் வாசிக்கப்ட்டன. இதில் சிறப்பம்சமாக பிரபல்ய சர்வதேச வானொலியான IBC வானொலியின் அறிவிப்பாளரும், எங்கவூர் உறவுமாகிய திணேஷ் யோகராஜாவின் வாழ்த்துச்செய்தி அவரின் குரலிலையே ஒலிபரப்பப்பட்டு அனைத்து தரப்பினரினதும் கவனத்தை ஈர்ந்து கொண்டது.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் சிற்றுண்டியும், குளிர்பானம், தேனீர் போன்றனவும், இடைவேளையின் போது இரவு உணவும் பரிமாறப்பட்டன.

இங்கு "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" என்ற பெயருடன் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் எதிர்கால செயல்திட்டங்களை நிறைவேற்று முகமாக பதினொரு(மூன்று பெண் ) உறுப்பினர்கள் கொண்ட ஒரு நிர்வாகமும் உருவாக்கப்பட்டுள்ளது.

.

நிகழ்ச்சிகள் யாவும் எங்கவூர் ஒரு பெண் உறவினரின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறின.

நன்றியுடன்,

வல்வை லிங்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.