Jump to content

பா.விஜயின் கவிதை


Recommended Posts

பா.விஜயின் கவிதை

நிழல் தேடாதே

உன் நிழலில் ஒரு

ஊரையே நிற்கவை !

முட்களில் மோதிக்

கிழியாதவனுக்குப்

பூக்களைத் தடவும்

தகுதி கிடையாது !

மகிழ்ச்சியாய்ச் சிரி

கவலைகளைப் பிய்த்துக்

காற்று மண்டலத்திற்கு

அப்பால் வீசு !

எதைக் கண்டும்

பிரமிக்காதே

பிரமிப்பைப்போல் ஒரு

பின்னடைவே கிடையாது !

தோல்வி என்பது

சிந்திக்கத் தெரியாதவனின்

சித்தாந்தம் !

நிலாவைத் தொட்டது

மூன்று தோல்விகளுக்குப்

பிறகுதான் !

நீ எழுந்தால் ஒரு

எட்டு வந்து பார்க்காதவன்

நீ விழுந்தால் விழுந்து

விழுந்து விசாரிப்பான் கவனி !

இளைஞனே

இரைப்பையையும்

நம்பிக்கையையும்

காலியாக விடாதே !

நடக்குமா என்ற

கேள்வி-

உன் நம்பிக்கைக் கோபுரத்தின்

அத்திவாரத்தில்

விழுந்த கடப்பாறை !

உலகை உலுக்கி உலுக்கி

எடுத்தவனெல்லாம்

துவக்கத்தில் ஒரு

தூசுப்படலமாக இருந்தவன்தான் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதையை இணைத்த நுணாவிலானுக்கு நன்றிகள். அதிக பிரசங்கித்தனமில்லாமல் சொல்ல வந்த கருத்தை கவிஞர் வார்த்தைகளைச் சுருக்கி ஆனால் தெளிவாக சொல்லியிருக்கிறார். எவரையும் இலகுவில் சென்றடையக் கூடிய வகையில் கவிதைகள் அமைதல் வேண்டும், அந்த வகையில் பா. விஜய் பாராட்டுக்குரியவராகிறார்.

முட்களில் மோதிக்

கிழியாதவனுக்குப்

பூக்களைத் தடவும்

தகுதி கிடையாது !

என்ற வரிகள் கவிஞரின் அருமையான சிந்தனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கவிஞன் பா. விஜய் அண்மையில் எனது சிநேகிதி இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை பா. விஜய் இன்றைய இளையவர்களுக்கு ஏற்ற மாதிரி தனது பாணியில் எழுதியிருந்த நூல் ஒன்றின் பல பக்கங்களை தொலைபேசி வாயிலாக எனக்கு வாசித்துக் காட்டினார். அப்பப்பா என்ன கற்பனை வளம் பா. விஜயஜன் கவிதைத்தமிழ் மிக அற்புதப் புதையல். இன்றைய காலத்தில் கவிச் சக்கரவர்த்தியாக தமிழில் வலம் வரக்கூடிய அத்தனை சிறப்பையும் பா. விஜயின் எழுத்துக்களில் பார்க்க முடிகிறது.

Link to comment
Share on other sites

........

நீ எழுந்தால் ஒரு

எட்டு வந்து பார்க்காதவன்

நீ விழுந்தால் விழுந்து

விழுந்து விசாரிப்பான் கவனி !

......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எளிமையான வரிகளில் கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.கவிதையை இணைத்தமைக்குப் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான கவிதை. சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்று இதைத் தான் கூறுவார்கள்.இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பா.விஜயின் கவிதை

தோல்வி என்பது சிந்திக்கத் தெரியாதவனின் சித்தாந்தம் !

நிலாவைத் தொட்டது மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் !

நீ எழுந்தால் ஒருஎட்டு வந்து பார்க்காதவன்

நீ விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பான் கவனி ! !

அருமையான கவிதை. இவை எனக்கு பிடித்த வரிகள். நுணாவிலான் இணைத்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பா.விஜியின் கவிதை மிகவும் அற்புதம்.நுணாவிலானுக்கு நன்றிகள்.

காற்சிலம்பின் ஓசையிலே என்ற கவிதைத் தொகுதியிலிருந்து படித்ததில் பிடித்த சில வரிகள்.

விதி என்பது

தன்னம்பிக்கை அற்றவனின்

தாய்மொழி

அது

இறந்து போய்

நடனமாடிக்கொண்டிருக்கும்

வாழத் தெரியாதவனின்

வாய்ப்பாடு

அது

தன் எச்சிலைக்கூட

அடுத்தவன் வாய்மூலமாய்த்

துப்பிவிட முடியுமாஎன

சோம்பிக் கிடப்பவனின்

ஒப்பாரி

விதியை நம்பி

முகந்தொங்க மாட்டான்

மூலிகைத் தமிழன்

எந்த எறும்பு

விதியை நம்புகிறது?

எந்தப் பறவை

விதியை நம்பி

விழிநீர் உகுக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை இணைப்பிறகு நன்றி.

Link to comment
Share on other sites

தன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்

புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு

கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை

நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே

நம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு

நம்பிக்கை என்பது அதிகபட்ச துணிவு

நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்

நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்

உன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை

உன்னை நீயே நம்பாவிட்டால் யார்? உன்னை நம்புவார்கள்

நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்

அதைத் துப்பி விடாதே

நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும் ஆயுள்

காப்பீட்டுத் திட்டம் மறுதலிக்காதே

ஒருவனுடைய புகழின் அளவு என்பது அவன் இதயத்தில்

உள்ள நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே ஏறும் குறையும்

இன்னும் சொன்னால் நம்பிக்கையில் மரணத்தை

ஜெயிக்க முடியும் ஏது உயிர்த்தெழுந்தது இப்படித்தான்

சிறந்த வியாபாரிகளை உருவாக்குவது அவர்கள் அடைந்த

நம்பிக்கைத் துரோக நஷ்டங்கள்

சிறந்த வெற்றியாளர்களை உருவாக்குவது அவர்களை நசுக்கிய

அசுரத்தமான தோல்விகள்

நம்பிக்கையே இல்லாமல் யார் வாழக் கூடும்

நம்பிக்கையால் வாழ்ந்தால் அட யார் வாழ்க்கை வாடும்

சந்தேகம்தான் தீயை வைக்கும்

நம்பிக்கைதான் தீபம் வைக்கும்

ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்

ஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ

மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன

நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது

ஓட்டைப்படகு ஓடிந்த துடிப்பு கரை சேரலாம்

கடல் போல் நம்பிக்கை இருந்தால்

நீ அடுத்தவர் மீது கொண்ட நம்பிக்கை என்பது காசோலை

நீ உன் மீதே கொண்ட நம்பிக்கை என்பது ஏ.டி.எம் அட்டை

நம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்று அதில்

புதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்று

காந்தத்திலிருந்து மின்சக்தி வருவது மாதிரி

நம்பிக்கையிலிருந்து முன்னோர்க்கும் எண்ண அலைகள் வரும்

போராட்டமே வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி

நம்பிக்கை சிறு நூல்தான் ஆனால் அந்த நூலில் கட்டி

காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்கவிடலாம்

இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையும் காலியாகவிடாதே

ஒரு நாளும் சோர்ந்து விடாதே கடைசிச் சொட்டு ஈரப்பசை வரை மரம் ப+க்கிறது

இழப்பு என்பது எதுவுமேயில்லை உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை

கர்வம் வை கிராம் கணக்கில் நம்பிக்கை வை கிலோ கணக்கில்

நம்பிக்கை இல்லாத இடம் ஒன்றே ஒன்றுதான் கல்லறை

தண்ணீருக்கு அடியில் சென்று

ஓவியம் வரைய முடியாது

தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது

உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால்

உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது

நம்பிக்கை ஒன்று போதுமே

எதிர்காலம் ஒன்றைப் பார்க்கச் செய்யலாம்

நம்பிக்கை இருக்கும் போதிலே

எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்

என்னமுடியும் எதைச் செய்ய முடியும்

என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை

எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்

என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை

ரோஜா தோட்டங்களில் பூத்தாலும்

மல்லிகைப்பூ மணம் மாறாது

நீ எங்கே பணி புரிந்தாலும்

உன் சுயம் கெடாது.

நன்றி:wtrfm.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்

நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்

.....................

.....................

.....................

.....................

சிறந்த வெற்றியாளர்களை உருவாக்குவது அவர்களை நசுக்கிய

அசுரத்தமான தோல்விகள்

-பா.விஜய்-

இன்னுமொரு கவியரசனாக சத்தமில்லாமல் உருவாகிக்கொண்டிருக்கின்றான் இந்த இளைய கவிஞன்.

Link to comment
Share on other sites

நம்பிக்கை ஒன்று போதுமே

எதிர்காலம் ஒன்றைப் பார்க்கச் செய்யலாம்

நம்பிக்கை இருக்கும் போதிலே

எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்

என்னமுடியும் எதைச் செய்ய முடியும்

என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை

எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்

என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை

அற்புதமான வரிகள்....

கவியை இணைத்த நூணாவிலனுக்கு நன்றிகள்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.