Jump to content

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்......பாட்டு வரி கொஞ்சம் நினைவுக்கு வருது.....

மானம் பெரிதென சொல்லிடுவான்

மற்ரோரை தூண்டி செயல்படுவான்

மாண்டபின் துயாபோல் நடித்திடுவான்

மணியடித்து துட்டு கறந்திடுவான்

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply

எனக்கும் இது சரி என்று தோன்றுது.இப்ப எங்களிடம் இராணுவப்பலமோ அரசியல் பலமோ இல்லை.இருப்பது பொருளாதாரப்பலம் ஒன்றுதான்.இதைப்பயன்டுத்தி அங்குள்ள மக்களின் வாழவாதரத்தை மேம்படுத்த வேண்டும்.இப்பொழுது உள்ள நிலையில் இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் வாசிகசாலை கூட கட்ட முடியாது.இலங்கை அரசுடன் ஏதா ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி அங்கு பொருளாதாரத்தை கட்டி எழுப்பி மக்களுக்குவாழவில் பிடிப்பை ஏற்படுத்த வேண்டும்.

அதனையும் சுரண்ட சிங்களவன் வழி மேல் விழி வைத்து இருக்கிறான். தனது இழந்த பொருளாதாரத்தை புலம் பெயர் தமிழர்களின் பணத்தை கொண்டு மேம்படுத்த சிங்கள கூட்டம் தயார் நிலையில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகக் கோட்பாடு கைவிடப்படுவதன் மூலம் எவ்வாறு அங்கிருக்கும் மக்களின் இருப்பு உறுதிபடுத்தப் படும் என்பதை நீங்களாவது சொல்வீர்களா? நான் மானம் மரியாதை பற்றி எதுவுமே பேசவில்லை. நான் தாயக மக்களின் இருப்பைப் பற்றியே பேசுகிறேன்.புலம் பெயர்ந்தவர் பற்றியும் நான் பேசவில்லை.எவர் உங்களுக்கு என்ன உறுதி மொழிகளைத் தந்துள்ளார்கள் என்றாவது சொல்வீர்களா?ஏன் எல்லாம் பெரிய மூடு மந்திரம் போல் சொல்லப்படுகிறது?

நாரதர் அண்ணா,

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேல் தாயகக்கோட்பாட்டுக்காய் அரசியல் இராணுவ ரீதியாக பலமான நிலையில் இருந்த போதே தாயக்கோட்பாட்டை யாரும் அங்கீகரிக்காத போது இனி மேல் யார் வந்து தமிழினத்தின் தாயகக் கோட்பாட்டை ஆதரிக்கப் போகிறார்கள்?? பலமான நிலையில் கூட எம்மால் தாயகக்கோட்பாட்டுக்கான ஆதரவைத்திரட்ட முடியவில்லையே!

பொருளாதாரநலன் சார்ந்து இயங்கும் அரசியலில்(இதைப்பற்றி பலரும் விரிவாக எழுதியதால் எழுத வேண்டாம் என நினைக்கிறேன்) தமிழரிடம் என்ன இருக்கு எமக்கு சார்பாக குரல் கொடுப்பதற்கும், எமக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு வலியுறுத்தவும்??

பிச்சைக்காரனுக்கு யாராவது பிச்சை போடவேண்டுமாயின் பிச்சை போடுபவன் இரக்கப்பட்டு,கருணை காட்டினால் தான். நாமும் அதே போல் இன்று பிச்சைக்காரனின் நிலையில் தான் இருக்கிறோம். எந்த தீர்வையும் சிங்களம் தராவிட்டாலும் அடித்துப் பறிக்கும் அதிகாரமும்,தகுதியும் பறி போய்விட்டதே.

இன்றும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ்தலைமைகள் தவறவிட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டே பரவலாக உள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தப்படி மாகாணசபைத்தீர்வையாவது பெற்றிருக்கலாம் என்று பலரின் வாதம் இருக்கிறது. அதைவிட இன்றை எமது பேரிழப்புக்கும் தமிழர்கள் ஒரு தீர்வுக்கு வரமறுத்தமையையே காரணம் காட்டுகிறார்கள். ஏன் விடுதலைப்புலிகள் கூட ஒஸ்லோ பேச்சுவார்த்தயில் எட்டப்பட்ட சமஸ்டி முறையில் ஒரு தீர்வைப்பெற்று பின்னர் தம்மை முழுமையாகப் பலப்படுத்திய பின்னர் போரிட்டால் இவ்வளவு இழப்புகளையும் ச்சந்தித்திருக்க தேவையில்லை என்பதும் பலரின் கருத்து.

ஆக,

இங்கு தாயகக்கோட்பாட்டை விடவேண்டுமென்பது கருத்தோ,வாதமல்ல..

தமிழர்கள் ஒரு தீர்வுக்கு வந்து அதைப்பெற்ற பின்பு படிப்படியாக தமது இலக்கு நோக்கிய காய்நகர்த்தலை செய்யவேண்டுமே தவிர தாயகக்கோட்பாட்டை முற்றிலுமாக விட வேண்டும் என யாரும் நினைக்கவில்லை.

நாரதர் அண்ணா,

முதலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தயாரித்திருக்கும் தீர்வுத்திட்டமே நடைமுறைப்படுத்தப்படுமோ தெரியாது அதற்குள்ளே அவசரப்பட்டால் என்ன???

பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

ம்......பாட்டு வரி கொஞ்சம் நினைவுக்கு வருது.....

மானம் பெரிதென சொல்லிடுவான்

மற்ரோரை தூண்டி செயல்படுவான்

மாண்டபின் துயாபோல் நடித்திடுவான்

மணியடித்து துட்டு கறந்திடுவான்

உங்க பாட்டுவரி எனக்கு பிடிச்சிருக்கு...

பச்சைப்புள்ளி குத்தி இருக்கு....

Link to comment
Share on other sites

சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாத தீர்வைக் கூட்டமைப்பு முன் வைத்திருப்பதன் நோக்கம் என்ன?

இந்தியாவும் மேற்குலகமும் அதனை ஏற்றுக் கொள்லும் படி செய்யும் என்னும் நம்பிக்கையில் தானே?

அப்படியாயின் மேற்குலகமும் இந்தியாவும் இணைந்து இந்த தீர்வுத் திட்டத்கை நடிமுறைப்படுத்த சிறிலங்காவிற்க்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது சிறிலங்கா முற்று முழுதாக சீனா இரான் பாக்கிஸ்த்தான் என்று சாய்ந்து விடும்.இது மேற்குலகிற்கும் இந்தியாவுக்கு தெரியும்.ஆகவே அவர்கள் என செய்வார்கள் சிறிலங்காவிடம் பேரம் பேசுவார்கள், தமிழரின் தீர்வு உடன்படிக்கை மேலும் கீழ் இறக்கப்படும்.கடைசியில் ஒரு மாகண சபையோ கிராம்சபையோ ஒரு சில நாற்காலிகளுடன் வழங்க்கப்படும்.அதில் சம்பந்தன் அய்யா இருந்து என்ன செய்வார்?

மாற்றாக நாங்கள் எங்கள் அடிப்படைக் கோரிக்கைகளை விட்டுக் கொடாமல் தொடர்ந்தும் இருந்தோமானால், இன்று இரு துருவ அரசியலை நோக்கிச் செல்லும் உலகில் மேற்குலகமோ இந்தியாவோ, சீனவோ எமது நிலைப்பாட்டை ஆதரித்துச் செயற்பட வேண்டிய தருணம் ஏற்படும். நிலமைகள் எப்போதுமே ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை.சிங்களவரின் இராஜதந்திர நகர்வுகளைக் குறைத்து மதிபிடும் வழமையான அரசியலே கூட்டமைவின் அண்மைய நகர்வுகள்.எது சரி எது பிழை என்பதை காலம் சொல்லும்.அதற்காக பல்வேறு சிந்தனை உடையோர் எல்லோரும் ஒன்றாக இருந்து தமிழருக்கான இன்னொரு புதை குழியைத் தோண்ட வேண்டிய அவசியம் இல்லை.எந்த வழி சரியானது என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும்.அதுவரை உரையாடுவோம்.சிந்திப்போம் செயற்படுவோம்.

Link to comment
Share on other sites

கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறது என்கிறார்கள். அப்படியென்றால் ஏனைய தமிழ்ப்பிரிவினர் இலங்கையரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது.

அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன் தானே மாறிக்கொள்வார். புதியவர்தானே. ஆரம்பத்தில் வேகம் இருக்கும். ஒட்டுக்குழுக்களும் படையினரும் நெருக்குதல் கொடுக்கும் போது குடும்பத்திரே மாற்றிவிடுவார்கள்.

முதலில் ததேசியமு வேட்பாளர் வரதராஜன் பற்றி இப்படி சொன்னீர்கள்

ஒன்றுமட்டும் புலப்படுகிறது, தேசிய முன்னணி வெற்றிபெற்றால் புலம் பெயர் மக்களால் நடத்தப்படும் இப்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மீள் வாக்கெடுப்பில் ஈடுபடும் பகுதியினர் அவர்களோடு இணைந்து நிற்பர். அவ்வாறில்லாது கூட்டமைப்பு வெற்றி பெறுமானால் இவர்களது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

இறைவன்

இப்போது இப்படிச் சொல்லுகின்றீர்கள் ????

கருனாநிதி கட்டையில போறநேரத்தில் கதிரையைக் கட்டிக்கொண்டு அழுகின்றார் என்று எல்லோரும் கத்தினார்கள்

சம்பந்தன் என்ன பதினாறு வயது இளைஞனா ? அவருக்கு கட்டையில போறவயது தானே ? கயேந்திரன் போன்ற துடிப்பான இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டு தாங்கள் விலகியிருக்கலாமே ? ஏன் தாங்கள் இருந்து கொண்டு அவர்களை விலத்தினார்கள் ? தமிழ்த்தேசியமோ ?

கருனாநிதிக்கு ஒன்று சம்பந்தனுக்கு ஒன்றா ?

ஆக வேண்டாப்பொண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் ?

Link to comment
Share on other sites

கனடிய தமிழ் வானொலியில் கயேந்திரன் ஒலிவடிவம்

http://www.ctr24.com/newctr/player/player.htm?plaurl=../Archivesongs/370.mp3

இது கயேந்திரனால் வழங்கப்பட்ட பேட்டி இதில் கயேந்திரன் ததேகூ வாலுகள் எவ்வாறு கத்தினாலும் எப்படி நாணயமாகவும் நிதானமாகவும் உரையாடுகின்றார் ஆனால் பழுத்த அரசியல்விஞ்ஞானி என்று மார்தட்டும் சம்பந்தர் கத்தி ஆவேசமாக இணைப்பைத் துண்டித்ததும் புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்களுக்கு சொல்ல யார் என்று சொன்னதும் நினைவிருக்கின்றதா ?

ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதிமட்டுமே வேண்டுமாம் ?

Link to comment
Share on other sites

கனடிய தமிழ் வானொலியில் கயேந்திரன் ஒலிவடிவம்

http://www.ctr24.com/newctr/player/player.htm?plaurl=../Archivesongs/370.mp3

இது கயேந்திரனால் வழங்கப்பட்ட பேட்டி இதில் கயேந்திரன் ததேகூ வாலுகள் எவ்வாறு கத்தினாலும் எப்படி நாணயமாகவும் நிதானமாகவும் உரையாடுகின்றார் ஆனால் பழுத்த அரசியல்விஞ்ஞானி என்று மார்தட்டும் சம்பந்தர் கத்தி ஆவேசமாக இணைப்பைத் துண்டித்ததும் புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்களுக்கு சொல்ல யார் என்று சொன்னதும் நினைவிருக்கின்றதா ?

ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதிமட்டுமே வேண்டுமாம் ?

தந்தை செல்வநாயகம் கூட 1947 வரைக்கும் ஒரு புலம்பெயர்ந்த தமிழன் தான் எண்டதை அவர் வளி வந்ததாக சொல்லிக்கொள்ளும் SMS குழுவுக்கு ஞாபகம் இருக்குமோ தெரியாது...?

இப்பவானால் தமிழர்களுக்கு எல்லாம் தந்தை ஆக புலம் பெயந்த செல்வநாயகம் யார் எண்டு கேப்பார்கள்...

Link to comment
Share on other sites

இறைவன்,

தாயகக் கோட்பாட்டைக் கைவிடுவதன் மூலம் எங்கனம் வன்னியில் உள்ள மக்களும் போராளிகளும் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை விளக்கினால் ,தாயகக் கோட்பாட்டைக் கைவிடுவது சரியான அரசியல் நிலைப்பாடு என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் இதுவரை அதற்கான பதிலை தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டுள்ள எவரும் சொல்லவில்லை.இன்று மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்தவர்களும் வன்னி மக்களையும் போராளிகளையும் சொல்லியே தமது செயல்களை நியாயப்படுதுகிறார்கள்.இதனையும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.மக்களின் நீண்டகால நலனை அடிப்படியாக வைத்து அரசியலை முன் நோக்கி நகரத்தவே மக்களுக்கு அரசியற் தலமை என்பது அவசியம்.சலுகைகளைப் பெற தமிழர்களிடம் பலர் உண்டு.

முதலில் ததேசியமு வேட்பாளர் வரதராஜன் பற்றி இப்படி சொன்னீர்கள்

இப்போது இப்படிச் சொல்லுகின்றீர்கள் ????

கருனாநிதி கட்டையில போறநேரத்தில் கதிரையைக் கட்டிக்கொண்டு அழுகின்றார் என்று எல்லோரும் கத்தினார்கள்

சம்பந்தன் என்ன பதினாறு வயது இளைஞனா ? அவருக்கு கட்டையில போறவயது தானே ? கயேந்திரன் போன்ற துடிப்பான இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டு தாங்கள் விலகியிருக்கலாமே ? ஏன் தாங்கள் இருந்து கொண்டு அவர்களை விலத்தினார்கள் ? தமிழ்த்தேசியமோ ?

கருனாநிதிக்கு ஒன்று சம்பந்தனுக்கு ஒன்றா ?

ஆக வேண்டாப்பொண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் ?

தமிழர் கோடபாடு கைவிடப்பட வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அதற்கான தேவை எப்போதும் தமிழன் இருக்கும்வரை இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலை தாயகக் கோட்பாட்டை முன்னெடுத்து செல்வது என்பதைவிட, கொஞ்சம் தணிந்து செயல்பட வேண்டுமென்கிறேன்.

ஏன் தனிநாடு, தமிழீழம் என்ற கோரிக்கைகள் தாயகத்து அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளாலும் வார்த்தைப் பிரயோகம் கூடச் செய்ய முடியாதிருப்பதை நீங்கள் அவதானிக்கவில்லையா? இவைகளெல்லாம் சூழ்நிலை அரசியல்கள். எதைக் கையிலெடுக்கவேண்டும் எதில் தணிவு பெறவேண்டும் என்பதெல்லாம் இப்படித்தான் அடங்கும்.

தனித் தமிழீழம் எந்தத் தமிழனுக்குத்தான் விருப்பமில்லை. எதிர்நிலைகொண்ட தமிழனும் தமிழீழத்தை விரும்புவான். அது அவனது உரிமையல்ல, உணர்ச்சி. ஒவ்வொரு தடவையும் புண்படும் போது, தனித் தமிழீழம்தான் கண்முன் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனித் தமிழீழம் எந்தத் தமிழனுக்குத்தான் விருப்பமில்லை. எதிர்நிலைகொண்ட தமிழனும் தமிழீழத்தை விரும்புவான். அது அவனது உரிமையல்ல, உணர்ச்சி. ஒவ்வொரு தடவையும் புண்படும் போது, தனித் தமிழீழம்தான் கண்முன் வரும்.

ம்..... உதத்தாதன் சொல்லுறது உணர்ச்சி அரசியலெண்டு “ தமிழீழம் ” எண்ட பதத்தை வச்சு இவளவுகாலமும் ஓட்டினாக்களால நடந்து முடிஞ்சதுகள பாத்திடீங்களல்லோ! பவரில இருந்துகொண்டு செய்த அநியாயங்களின்ட இறுதி அத்தியாயம்தான் முள்ளிவாய்க்கால். 3 1/2 லச்சத்த இறுதிவரை கொண்டுபோட்டு எங்கள வீதிக்கு இறக்கினது மக்கள காப்பாத்தவோ அல்லது தமிழீழம் கிடைக்கும் எண்ட நம்பிக்கையிலோ இல்ல , தங்களது பவர தக்கவச்சுக்கொள்ள. இப்ப நடக்கிறதும் அதின்ர தொடர்கதைதான் , பத்மினியக்காவோ கஜேந்திரனண்ணையோ இப்ப பேசுறேல்ல , கஜேந்திரகுமார்தான் பேசுறார். தேர்தல் முடிய பாருங்கோ வித்தைய. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி அண்ணா,

வெறும் உசுப்பேத்தும்,உணர்ச்சிவசப்படும் கருத்துக்களை விடுத்து யதார்த்தமாக சிந்தித்து பாருங்கள்,

புலம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு உங்கள் அக்கா,தங்கை பெற்றோரையும் கூடவே பாதுகாப்பாக வைத்திருப்பவர்களால் தான் இப்படி தன் மானம்,இனமானம் என்று உசுப்பேத்த முடியும்..

ஊரிலை பெற்றோர்,சகோதரர்கள் இருக்கும் உறவுகளால் இப்படி சொல்லமுடியாது(ஒருவேளை நீங்கள் ஊரில்லிருந்து எழுதி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்க).

தமிழினம் தன் இருப்பையே தக்கவைத்துக் கொள்ள முடியாமல் இருக்கும் போது மானம்,அவமானம் ஒரு கேடா???

இல்லை மானம்,தன் மானம் என்று இருந்து அழிவைத் தவிர சாதித்தது தான் என்ன??

CNN இல் வந்த ஆய்வுச்செய்தியையாவது படித்து பாருங்க எங்களுடைய மக்களின் துயரங்களை

எத்தனை சிறுவர்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என அங்கவீனம் ஆனவர்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல??

ஒவ்வொருவருக்கும் விரும்பினால் பணம்,உணவு கொடுக்கலாம் ஆனால் அவர்கள் ஒவ்வொருத்தரினதும் ஆசைகள் இலட்சியங்கள்,கனவுகளை திருப்பிக்கொடுக்க முடியுமா???

அங்கிருக்கும் மக்கள் சொல்கிறார்கள்,

நாங்கள் கடுமையாக உழைத்தோம்,எங்கள் இனத்தின் விடுதலைக்காய் எல்லாத்தையும் இழந்தோம்..கடைசியில் கண்டதென்ன??

எதுவுமே இல்லாமல் முடிந்ததை எப்படிச்சொல்ல??

அவர்களுடைய மனநிலைகளையும் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். அல்லது அவர்களுடைய இப்படியான

கேள்விகளுக்கு என்ன தான் பதில் வைத்துள்ளீர்கள்????

வெற்று வீரவசனங்களாலும்,உசுப்பேத்தல்களையும் விடுத்து அங்கிருக்கும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதும்,ஆகக்குறைந்த அடிப்படைத்தேவைகளையாவது பூர்த்திசெய்ய ஆவன செய்வதே தற்போதைக்கு மேல்.

"தன்னிலை தாழாமையும் அந்நிலை தழுமிடத்து உயிர் வாழாமையும் மானம் எனபடும்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புத்திசாலிகளென்றால் போரிடுவதுதான் ஒரே வழியா? இராஜதந்திரம் என்பது காலில் விழுதல் என்றுமட்டும் அர்த்தப்படாது. முஸ்லிம்களின் அரசியல் முறைத் தன்மையைத்தான் இங்கு சுட்டிக்காட்டினேன். அதற்காக அக்கா தங்கைமாரை நீங்கள் கூட்டிக் கொடுக்கத் தேவையில்லை.

வாழ்வதற்கு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களைக் காக்கும் வழிபற்றிச் சிந்தியுங்கள். வளைந்து கொடுக்கவேண்டிய இடங்களில் வளையாமல் நிற்பதால் எதுவும் நடந்தேறிவிடாது. அழிவு மட்டுமே மிஞ்சியிருக்கும்.

தாயகக்கோட்பாட்டை கையில் எடுப்பதற்கு தமிழர்கள் பலமுடனிருக்க வேண்டும். இன்று என்ன பலம் எம்மிடமுண்டு. தன்மானம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள். மானமிழந்து அங்கே தமிழன் தவிக்கின்றான். மானம்பற்றி அங்கு சிந்திக்கப்படுகிறதா? இழப்புக்கள் மேலும் இழப்புக்கள்.

ஒருவழி திறக்க வேண்டும். தமிழர் பலம் மட்டுமல்ல, ஒற்றுமையும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரமிது.

35 வருடங்களுக்கு முன்பு சிங்களவன் எதைசெய்தான் என்று இனி நாம் சேர்ந்துவாழ முடியாது. பிரிந்தே போகிறோம் அல்லது செத்து மடிகிறோம் என்று ஆயுதங்களை தூக்கி சண்டைக்கு..... நீங்கள் போகவில்லை யாரோதான் போனார்கள் என்பதால்தான் உங்களால் 35 வருடமாக கைதட்ட முடிநந்தது.

தன்னிலைக்கே தமிழன் வெடிசுமந்து வெடித்தான்.

அந்நிலையை விலைபேசி விற்கமுடியுமென்றால்................................?

முள்pவாய்க்காலோடு தமிழன் அழிந்துவிட்டான் என்று எழுதிவையுங்கள். அதுவே தமிழனுக்கு நீங்கள் செய்யும் மிகபெரிய கருமம்.

மற்றபடி எமது சொந்த குணங்களை வைத்தே எமக்குரித்தான் இனப்பெயரை உலகம் இட்டுகொள்ளும்............. நாம் பெயருக்கேற்றால்போல் இரஜதந்திர அரசியல் செய்து வாழ்வோம் வழமுடன்.

முடியாவிட்டால் முடியவில்லை என்னால் முயற்சிசெய்ய கூட முடியவில்லை என்று உண்மையை எழுதுங்கள். அதற்றகாக அடுத்தவன் செய்தால் விபச்சாரம் என்றும் அதை நாமே செய்யும்போது இரஜதந்திர அரசியல் என்று கதை அவிக்காவதீர்கள்.

மேலே இன்னொரு உறவு எழுதியுள்ளது அங்கே அக்கா தங்கைமார் இல்லை என்றால்தான் எழுத முடியும் தன்நிலை பற்றி எழுத முடியும் என்று.

ஆம் இல்லைதான் இருந்தவர்கள் கிட்டதட்ட 35ஆயிரம் பேர் இருந்தவர்கள் எல்லோரும் வெடித்து வெடியோடு கலந்து போய்விட்டார்கள்.

அவர்களின் தியாகங்களையும் விலைபேசி விற்கலாம் என்று முடிவு செய்தபின்................... அங்கு யாரும் இல்லாது இருப்பNது எனக்கு சாரியானது.

ஆனால் இராஜதந்திரிகளுக்கு அது பிழையானதுதான்!

Link to comment
Share on other sites

தமிழர்கள் உரிமை குறித்து புலிகளுக்கு பின்னரான காலம் ஒன்றில்லை அதுசார்ந்த அரசியல் இராஜதந்திரம் என்று எதுவும் இல்லை. தாயகக் கோட்பாடு என்பது ஒரு ஆதங்கக் கருத்தேயன்றி அதற்கான அடித்தளம் எதுவும் இல்லை. தமிழர்களின் இருப்பை பலப்படுத்துவது தக்கவைப்பது கூட பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது. செயற்பட்டிற்கும் முயற்சிக்குமாக இருக்கும் ஒரே வழி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் செய்வது குறித்து மட்டுமே.

சிங்களத்தின் நேரடி ஒடுக்குமுறையில் இருந்து தப்பிநிற்கும் புலம்பெயர்வாழ்மக்கள் தமிழர் உரிமை குறித்து குரல்தரவல்லவர்களாக இருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின் உடனடியாக நாடுகடந்த அரசு தாயகக் கோட்பாடு வாக்கெடுப்பு முயற்சிகளே நடந்தது. சிறைப்பட்ட மக்களை விடுவித்தல், மீள் குடியேற்றம், போர்க்குற்ற விசாரணை போன்றவற்றிற்காக குரல்கொடுக்க மறுத்தபோதே தாயகக் கோட்பாட்டில் இருந்து குரல்தரவல்லவர்கள் விலகிவிட்டார்கள். இங்கே தாயகம் அதன் அவசியம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளை துச்சமாக தூக்கியெறிந்து அலட்சியப்படுத்தி புறம்புபட்டு நிற்கின்றது. நாடுகடந்த அரசுக்கான முயற்சியையும் சிறையில் வாடும் பல்லாயிரம் உயிர்களையும் எங்கனம் தொடர்புபடுத்துவது?

எம்மிடம் ஒரு வீடு குறித்த அமைப்பும் வரைவும் இருக்கின்றது. கனவு இல்லம். அது குறித்து உறுதியுடன் இருக்கின்றோம். அத்திவாரம் தோண்டு ஒவ்வொரு கல்லாக அடுக்கி வீட்டை உருவாக்குவதில் எமக்கு உடன்பாடு இல்லை. முகடுவரை கட்டி எழுப்பிய வீட்டை இடித்து தரைமட்டமாக்கியாச்சு இருந்தும் முகடுகட்டுவதிலே குறியாக நிற்கிறோம்.

Link to comment
Share on other sites

35 வருடங்களுக்கு முன்பு சிங்களவன் எதைசெய்தான் என்று இனி நாம் சேர்ந்துவாழ முடியாது. பிரிந்தே போகிறோம் அல்லது செத்து மடிகிறோம் என்று ஆயுதங்களை தூக்கி சண்டைக்கு..... நீங்கள் போகவில்லை யாரோதான் போனார்கள் என்பதால்தான் உங்களால் 35 வருடமாக கைதட்ட முடிநந்தது.

தன்னிலைக்கே தமிழன் வெடிசுமந்து வெடித்தான்.

அந்நிலையை விலைபேசி விற்கமுடியுமென்றால்................................?

முள்pவாய்க்காலோடு தமிழன் அழிந்துவிட்டான் என்று எழுதிவையுங்கள். அதுவே தமிழனுக்கு நீங்கள் செய்யும் மிகபெரிய கருமம்.

மற்றபடி எமது சொந்த குணங்களை வைத்தே எமக்குரித்தான் இனப்பெயரை உலகம் இட்டுகொள்ளும்............. நாம் பெயருக்கேற்றால்போல் இரஜதந்திர அரசியல் செய்து வாழ்வோம் வழமுடன்.

முடியாவிட்டால் முடியவில்லை என்னால் முயற்சிசெய்ய கூட முடியவில்லை என்று உண்மையை எழுதுங்கள். அதற்றகாக அடுத்தவன் செய்தால் விபச்சாரம் என்றும் அதை நாமே செய்யும்போது இரஜதந்திர அரசியல் என்று கதை அவிக்காவதீர்கள்.

மேலே இன்னொரு உறவு எழுதியுள்ளது அங்கே அக்கா தங்கைமார் இல்லை என்றால்தான் எழுத முடியும் தன்நிலை பற்றி எழுத முடியும் என்று.

ஆம் இல்லைதான் இருந்தவர்கள் கிட்டதட்ட 35ஆயிரம் பேர் இருந்தவர்கள் எல்லோரும் வெடித்து வெடியோடு கலந்து போய்விட்டார்கள்.

அவர்களின் தியாகங்களையும் விலைபேசி விற்கலாம் என்று முடிவு செய்தபின்................... அங்கு யாரும் இல்லாது இருப்பNது எனக்கு சாரியானது.

ஆனால் இராஜதந்திரிகளுக்கு அது பிழையானதுதான்!

அது சரிதான் 35 வருடகாலப் போராட்டத்தின் தழும்புகள் முதலில் ஆற்றப்பட வேண்டும். அதற்கு ஆவன செய்யவேண்டும். இதுதான் தற்போதைய செயற்பாடு. புலத்திலிருந்து கொண்டு இன்னமும் போராடு, போராடி மடிந்துபோ இப்படியெல்லாம் கூறலாம். அது தப்பில்லை. ஏனென்றால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். அதன் வலி எம்மால் புரிந்து கொள்ள முடியாதது.

கவரிமானினங்கள் மயிரெல்லாம் கொட்டிவிட்டுத்தான் புலத்தில் வந்து நிக்குதுகள். தாயகத்து மான்களெல்லாம் மானமிழந்து தவிக்கிறார்கள். அதைக் கண்டுகொள்ள முடியவில்லையா? ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையில்லை, ஒரு குழுநிலைப் போராட்டத்தைக் கூட முன்னெடுக்க முடியாத நிலையில் தமிழர்கள் கொடூரமாக அடக்கப்பட்டுள்ளார்கள். அந்தத் தமிழன் நாமாக இருக்கவில்லை. அதனால் எம்மால் வலிகள் புரிந்து கொள்ள முடியவில்லை.

முள்வேலிக்குள் இருந்தாலென்ன, சிறைகளுக்குள் கிடந்தாலென்ன? அவர்களெல்லாம் நாமா? இல்லையே வேறு யாரோதான். அவர்கள் எப்படிப் போனாலென்ன? நமக்குத் தேவை கோட்பாட்டைக் கட்டிக்காப்பதுதானே. யாருக்குத் தேவை அவைகள் நமக்குத்தானே. அங்கிருப்பவர்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நமக்கா வலிக்கப்போகிறது?

இன்னும் சில நாள்களில் சிறையிலிருக்கும் போராளிகளில் முக்கியமானோர் தாயகக் கோட்பாட்டுக்கெதிரான கருத்துக்களை முன்னெடுக்கப் போகிறார்கள். அவர்களையெல்லாம் நாம் எப்படி நோக்கப்போகிறோம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் தனிஈழத்தனியரசுக்கு ஒரு மனதாக ஆணை வழங்கினார்கள்.அப்படி ஒரு ஆணையை இந்தத் தேர்தலிலும் மக்கள் ததேகூட்டமைப்புக்கு வழங்கினால் ததேகூட்டமைப்பு தன் புதிய கொள்கையை வைத்து அரசியல் செய்யலாம்.(1 தொகுதியை விட எல்லாத்தொகுதிகளிலும் தவிகூ வென்றது போல்)அப்படி ஓரு பெரும்பான்மையான ஆணையை ததேகூ பெறத் தவறினால் தொடர்ந்து வரும் காலங்களில் தமிழர்களுக்கு தலைமை தாங்குபவர்கள் எப்படியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை வரும் தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றறிய வேண்டும்.அதை விட்டு இப்பொழுதே ததேகூட்டமைப்பு சரியான நிலைப்பாட்டை உளப்பூர்வமாக எடுத்திருக்கிறது.தமிழர் நலனுக்காகப் பாடுபடும் என்று நம்பிக்கை வைக்க முடியாது.மக்கள் கொடுத்த ஆணையை மக்களே மாற்ற வேண்டும் ஒரு சில தலைவர்கள் அதைச் செய்ய எந்த அதிகாரமும் இல்லை.

Link to comment
Share on other sites

தமிழ் வொய்ஸ்,

கஜேந்திரன் போன்ற இளைஞர்களை தலைவராக்கினால் வருசப்பிறப்பிற்கிடையில் தமிழீழம் என்கின்றீர்கள்.

நல்லா வீரவசனம் பேசுகின்றார் அவரை வச்சு படம் தான் எடுக்கலாம்,அரசியலுக்கும் அவருக்கும் வெகுதூரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரிதான் 35 வருடகாலப் போராட்டத்தின் தழும்புகள் முதலில் ஆற்றப்பட வேண்டும். அதற்கு ஆவன செய்யவேண்டும். இதுதான் தற்போதைய செயற்பாடு. புலத்திலிருந்து கொண்டு இன்னமும் போராடு, போராடி மடிந்துபோ இப்படியெல்லாம் கூறலாம். அது தப்பில்லை. ஏனென்றால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். அதன் வலி எம்மால் புரிந்து கொள்ள முடியாதது.

கவரிமானினங்கள் மயிரெல்லாம் கொட்டிவிட்டுத்தான் புலத்தில் வந்து நிக்குதுகள். தாயகத்து மான்களெல்லாம் மானமிழந்து தவிக்கிறார்கள். அதைக் கண்டுகொள்ள முடியவில்லையா? ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையில்லை, ஒரு குழுநிலைப் போராட்டத்தைக் கூட முன்னெடுக்க முடியாத நிலையில் தமிழர்கள் கொடூரமாக அடக்கப்பட்டுள்ளார்கள். அந்தத் தமிழன் நாமாக இருக்கவில்லை. அதனால் எம்மால் வலிகள் புரிந்து கொள்ள முடியவில்லை.

முள்வேலிக்குள் இருந்தாலென்ன, சிறைகளுக்குள் கிடந்தாலென்ன? அவர்களெல்லாம் நாமா? இல்லையே வேறு யாரோதான். அவர்கள் எப்படிப் போனாலென்ன? நமக்குத் தேவை கோட்பாட்டைக் கட்டிக்காப்பதுதானே. யாருக்குத் தேவை அவைகள் நமக்குத்தானே. அங்கிருப்பவர்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நமக்கா வலிக்கப்போகிறது?

இன்னும் சில நாள்களில் சிறையிலிருக்கும் போராளிகளில் முக்கியமானோர் தாயகக் கோட்பாட்டுக்கெதிரான கருத்துக்களை முன்னெடுக்கப் போகிறார்கள். அவர்களையெல்லாம் நாம் எப்படி நோக்கப்போகிறோம்?

நாட்டு பிரச்சனை என்பதும் தாயக விடுதலை என்பதும்................ தூரத்து இடிமுழக்கமாக இருந்தபோது. உங்களால் சுயநிர்யணம் பற்றிபேசவும் தன்மானம்பற்றி கதையளக்கவும் முடிந்து. காரணம் வெடியாக வெடித்துகொண்டிருந்தவர்கள் நீங்களோ உங்கள் குடும்பமோ இல்லைதானே?

இப்போது நாட்டுபிரச்சனை நெருங்கி நெருங்கி உங்கள் வீட்டு காணிக்குள் வந்த பின்தான்.

விட்டுகொடுப்பும் இராஜதந்திர அரசியலும் தேவைபடுகின்றது.

வலிகள் என்பது 83ம் ஆண்டிலிருந்து எங்களோடு ஒட்டிவிட்டது............... அதனாலோ என்னவோ இப்போதுதான் ஏதோ புதிதாக வலிவந்தமாதிரி துடிக்க எங்களால் முடியவில்லை.

இனமானத்தைவிற்று பிழைப்பு நடத்தவும் நாம் தயார் என்று சொல்லுங்கள்................. கூடிபிறந்த சகோதரிகளை கூட்டிகொடுத்தாவது நாம் வாழ துடிக்கிறோம் என்று சொல்லுங்கள்.

அதற்காக உண்மையை கொன்றுவிட்டு இராஜதந்திரம் என்று பூசிமெழுகாதீர்கள். எல்லாம் திறந்துதான் கிடக்கின்றது ............. இனி பூட்டுபோட்டு பூட்ட ஏதும் இல்லை.

Link to comment
Share on other sites

உதத்தாதன் சொல்லுறது உணர்ச்சி அரசியலெண்டு “ தமிழீழம் ” எண்ட பதத்தை வச்சு இவளவுகாலமும் ஓட்டினாக்களால நடந்து முடிஞ்சதுகள பாத்திடீங்களல்லோ! பவரில இருந்துகொண்டு செய்த அநியாயங்களின்ட இறுதி அத்தியாயம்தான் முள்ளிவாய்க்கால். 3 1/2 லச்சத்த இறுதிவரை கொண்டுபோட்டு எங்கள வீதிக்கு இறக்கினது மக்கள காப்பாத்தவோ அல்லது தமிழீழம் கிடைக்கும் எண்ட நம்பிக்கையிலோ இல்ல , தங்களது பவர தக்கவச்சுக்கொள்ள. இப்ப நடக்கிறதும் அதின்ர தொடர்கதைதான் , பத்மினியக்காவோ கஜேந்திரனண்ணையோ இப்ப பேசுறேல்ல , கஜேந்திரகுமார்தான் பேசுறார். தேர்தல் முடிய பாருங்கோ வித்தைய

இதைத் தான் ஆடு நனையுது என்று ஒநாய்[கருணாய்] அழுகுது என்று சொல்வார்களோ ? :rolleyes:

Link to comment
Share on other sites

கஜேந்திரன் போன்ற இளைஞர்களை தலைவராக்கினால் வருசப்பிறப்பிற்கிடையில் தமிழீழம் என்கின்றீர்கள்.

இதைத் தான் வீரவசனம் என்பார்கள்

நல்லா வீரவசனம் பேசுகின்றார் அவரை வச்சு படம் தான் எடுக்கலாம்,அரசியலுக்கும் அவருக்கும் வெகுதூரம்.

இப்போது படம் நடித்தவர்கள் தான் தலைவர்கள் பாருங்கோ

உதைத்தான் உங்கள் கூட்டணித்தலைவர்கள் அமிர்தலிங்கம் ஆனந்த சங்கரி முதல் அவர்களின் பாசைறையில் படுத்து வந்த சம்பந்த வேந்தர்கள் காலம் காலமாகச் சொல்லிவருகின்றார்கள் :rolleyes:

கயேந்திரனுக்கு நீங்கள் அரசியல் பாடம் எடுக்கலாமே ?

இந்த கூட்டணிக்கூட்டம் சம்பந்த வேந்தர்கள் தான் அரசியல் சாபக்கேடுகள்

Link to comment
Share on other sites

இன்றைய சூழ்நிலை தாயகக் கோட்பாட்டை முன்னெடுத்து செல்வது என்பதைவிட, கொஞ்சம் தணிந்து செயல்பட வேண்டுமென்கிறேன்.

ததேமுண்ணனி கயெந்திரன் தணிந்து போனால் என்ன நன்மை ? அல்லது மறுதலையாக என்ன தீமை வந்து விட்டது ? சம்பந்தர் போல் கைவிட்டு விட்டோம் என்று அறிவிக்க வேண்டும் என்கிறீர்களா ?

சம்பந்தர் எப்போதே கைவிட்டவர் தானே சொல்லப்போனால் :)அவர் அதைக் கையில் எடுக்கவே இல்லையே கைவிடுவதற்கு ஆனால் அதை உலக ஊடகங்கள் உச்சரிக்கின்றன

ஆக கனவிலும் தமிழர்கள் தனிநாடு என்று உச்சரிக்கக் கூடாது என்று உலகம் உன்னிப்பாக இருக்கின்றது சரி இந்த உலகத்தால் ஒரு சொதி கூட தமிழர்களுக்கு கொடுப்பதற்கு இவர்களிடம் இல்லையே

:rolleyes:தமிழர்கள் கோவனத்துடன் தான் இப்போது இருக்கின்றார்கள் அதையும் உடுக்கவேண்டாம் என்று சொல்ல வருகின்றீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

தங்களது புதுக்கண்டுபிடிப்பு பற்றி விளக்கம் அபாரம்

என்ன கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல் எறியும்வேலைதான்

கொஞ்சம் பார்த்து எறியுங்கள்

எறிந்த கல் திரும்பிவராது

அடுத்தவனுக்கு அது பலம்சேர்க்கும்

Link to comment
Share on other sites

இறைவன்,

நான் எழுதியவற்றைக் கவனமாகப் படிக்கவும், நான் தனி நாடு பற்றியோ தமிழீழம் பற்றியோ எழுதவில்லை.தமிழருக்கென வட கிழக்கில் இருக்கும் தாயகம் பற்றியே பேசுகிறேன்.தாயகக் கோட்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்துவ சமூகத்துக்கு அதன் பரம்பரையான வாழ்விடம் ஒன்று இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வது.தமிழருக்கான தீர்வுகள் என்று பேசும் போது தாயகம் ஒன்று இருக்கிறது என்று சொல்வதன் மூலம் வடகிழக்குக்கு தமிழர்களது பூர்வீக பூமி என்பதுவும் அதில் ஆழுகை செய்வதற்க்கு அவர்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன என்பதுவும் அதில் இருந்து பிறக்கும் முடிவுகள்.இதன் அடிப்படியிலையே த தே ம முன்னணி இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்னும் கோட்பாட்டை முன் வைக்கிறது.இங்கே இரண்டு தேசங்களும் அதன் அதன் பூர்வீக நிலங்களில் இறமை கொண்டவையாகவும் சம உரிமைகளை உடையனவாகவும் இருக்கும்.த தே கூட்டமைவு ஏற்றுக் கொண்ட வரபை ஆளமாக வாசித்துப் பாருங்கள்.அதில் சிறிலங்கா அதிபருக்கு விசேட அதிகாரங்களும் மத்திய அரசுக்கு விசேட அதிகாரங்களும் இருக்கும்.இதில் சட்டவாக்க அதிகாரம் பிரதேச சபையை கலைக்கும் அதிகாராம் என பல விசேட அதிகாரங்கள் இருக்கின்றன.இதில் இருந்து தெரியவருவது என்ன.தமிழருக்கு என விசேடமான உரிதுரிமைகள் அவர்களின் பூர்வீக பூமியில் அவர்களுக்குக் கிடையாது.தமிழர்களுக்கு சிறிலங்கா பாராளுமன்றத்தின் இறமையின் கீழ் சில அதிகாரங்கள் பரவலாக்கல் மூலம் வழங்க்கப்படுகின்றன என்பதே.இது நிச்ச்யமாகா தமிழர்களுக்கு ஒரு தாயகம் இருக்கிறது என்பதையோ அதில் அவர்களுக்கு இறமை இருக்கிறது என்பதன் அடிப்படையிலோ அமையப் பற்ற வரைபு அல்ல.

அடுததாக இந்த வரைபு சிறிலங்கா அரசால் ஏற்றுக் கொள்ளபடுகிறது என்று வைதுக் கொள்வோம். நடைமுறையில் அது எவ்வாறு செயற்படும்.அதி உயர் பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் ஏற்படுதப்படிருக்கும் சிங்களக் குடியேற்றங்கள் நிரந்தரமாக்கடும்.தமிழரின் தாயக பூமியின் தொடர்பை அறுக்கும் வண்ணம் முகியமான கேந்திர இடங்களில் இவை அமைக்கப்படும்.

Link to comment
Share on other sites

இது தமிழர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு திட்ட வரைபு, அதனையே சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டது.இதில் இருந்து தமிழர்கள் எங்கனம் பின் வாங்கமுடியும்.இப்போது எதையாவது பெற்றுக் கொண்டு பின்னர் பார்க்கலாம் என்று சொல்பவர்கள், எவ்வாறு பின்னர் இதனை மாற்ருவார்கள் என்று அவர்களிடம் எதாவது திட்டம் இருக்கிறதா? அவர்களிடம் என்ன பலம் இருக்கிறது என்று இவ்வாறு கூறுகிறார்கள்.இன்று தமிழருக்கான ஒரு தீர்வு அவசியம் என்னும் நிலைப்பாடு அனேகமான சர்வதேசமெங்கும் சொல்லப்படும் நிலையில் நாங்கள் ஒன்றையும் சரியாகச் சிந்திக்காமால் செயற்பட்டு, இந்தியா சொல்கிறது என்பட்தற்காக எமது நீண்ட கால நலனைக் கருத்தில் கொள்லாமல் அறிவிலிகளாகச் செயற்படப் போகிறோமா?.அல்லது சிங்களப் பேரின்வாத்தின் திட்டங்களை, பிராந்திய ஏகாதிபதியத்தின் திட்டங்களை அதனை முன் நிறுதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, எமக்குச் சாதகமாக இருக்கும் சர்வதேச நிலைகளைப் பயன் படுத்தப் போகிறோமா? எது புத்தியான செயற்பாடு?

வீடு கட்டுவதற்க்கு உறுதியான அதிவாரம் அவசியம்.தாயகக் கோட்பாடு என்பது அத்திவாரம்.உறுதியான அத்திவாரத்தை இடுவதன் மூலம் நாம் இப்போது ஒரு சிறிய குடிலைக் கட்டினாலும் பின்னர் அதனை மாற்றிக் கட்டலாம். நாம் தமிழருக்கான நிரந்தரச் சிறைக்கான அதிவாரத்தைப் போட்டு விட்டு அதில் இருந்து எக்காலத்திலும் ஒரு வீட்டைக் கட்ட முடியாது.உறுதியன அத்திவாரம் இல்லாத எந்த வீடும் பொல பொல என உடைந்து விடும், தமிழர்சுக் கட்சியின் வீட்டுக்கும் அது தான் நடக்கப் போகிறது.அது இந்தத் தெர்தலாக இல்லாமல் போகலாம் ஆனால் அத்திவாரம் இல்லாத இவர்களின் வீடு ஒரு நாள் உடையத் தான் போகிறது.

Link to comment
Share on other sites

குழந்தைப் பிள்ளைகள் இங்கு பலர் விளக்கம் எழுதுகின்றார்கள்.ஏதோ கொள்கை அடிப்படையில் தான் டீ.என் ஏ இற்குள் பிளவு வந்த மாதிரி.எல்லோருமே சீட்டிற்குதான் அடிபடுகின்றார்கள்.கஜேந்திரனுக்கு சீட் கிடைத்திருந்தால் இப்ப குமாரும்,பத்மினியும் அவருக்கு துரோகிகள் ஆகியிருப்பார்கள்.இது கஜேந்திரனுக்கு மட்டுமல்ல முழுத்தமிழ் எம்.பீ மாருக்கும் பொருந்தும்.டீ.என்.ஏ உடையக்கூடாது என்று நான் சொல்வதற்குக் காரணம் உலகமே எங்களை பார்த்து சிரிக்கின்றது.சிங்களம் சிரியோ சிரியென சிரிக்குது.எங்களுக்குள் எவ்வளவு பிரிவு இருந்தாலும் இதுவல்ல நேரம் எமது பிளவை வெளிக்காட்ட.

வீட்டிற்குள் எவ்வளவு சண்டை பிடித்தாலும் போகுமிடத்தில் ஒற்றுமை மாதிரி காண்பிக்க வேண்டியது மாதிரித்தான் இதுவும்.

நடுச் சந்தியில் வந்து நின்று சண்டை பிடித்து தாங்களும் நாறி புலம் பெயர்ந்த தமிழரையும் நாறடிக்கின்றார்கள்

உண்மையில் இவர்கள் ஒருவருமே சுத்தமானவர்களல்ல,தமிழரின் உரிமைக்காக தம்மை அர்ப்பணித்து உழைப்பவர்களுமல்ல.இதில் எவருமே விலை போகக் கூடியவர்கள்.நாட்டை விட்டு ஓடிவந்த நாம் நடப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கமுடியும்.அதுதான் முடிந்த அளவு ஒற்றுமையாக இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோமே தவிர இவர்கள் நல்லவர்கள் என்று நாம் நம்பவில்லை.

தேர்தல் முடிய 3,4 ஆண்டுகள் செல்ல ஒரு நல்ல தலைமையில் ஒரு அமைப்பு உருவாகும் என நம்புகின்றேன் அவர்களுக்கு புலம் பெயர்ந்தோரின் ஆதரவும் கிடைக்கும் என நம்புவோம்.

இந்த கிறுக்கர்களும் புலம் பெயர்ந்த லூஸுகளும் காலப் போக்கில் மறையப் போவது நிட்சயம்

Link to comment
Share on other sites

.டீ.என்.ஏ உடையக்கூடாது என்று நான் சொல்வதற்குக் காரணம் உலகமே எங்களை பார்த்து சிரிக்கின்றது.சிங்களம் சிரியோ சிரியென சிரிக்குது.எங்களுக்குள் எவ்வளவு பிரிவு இருந்தாலும் இதுவல்ல நேரம் எமது பிளவை வெளிக்காட்ட.

புலிகளின் இருந்து பிரிந்து போனவர்களை ஆதரித்து கருத்து எழுதினீர்களே... அது என்ன ஆச்சு...?? அப்போ சிங்களமும் உலகமும் உங்களை பாத்து சிரிச்சதாக அறியவில்லையோ...???

Link to comment
Share on other sites

நாட்டு பிரச்சனை என்பதும் தாயக விடுதலை என்பதும்................ தூரத்து இடிமுழக்கமாக இருந்தபோது. உங்களால் சுயநிர்யணம் பற்றிபேசவும் தன்மானம்பற்றி கதையளக்கவும் முடிந்து. காரணம் வெடியாக வெடித்துகொண்டிருந்தவர்கள் நீங்களோ உங்கள் குடும்பமோ இல்லைதானே?

இப்போது நாட்டுபிரச்சனை நெருங்கி நெருங்கி உங்கள் வீட்டு காணிக்குள் வந்த பின்தான்.

விட்டுகொடுப்பும் இராஜதந்திர அரசியலும் தேவைபடுகின்றது.

வலிகள் என்பது 83ம் ஆண்டிலிருந்து எங்களோடு ஒட்டிவிட்டது............... அதனாலோ என்னவோ இப்போதுதான் ஏதோ புதிதாக வலிவந்தமாதிரி துடிக்க எங்களால் முடியவில்லை.

இனமானத்தைவிற்று பிழைப்பு நடத்தவும் நாம் தயார் என்று சொல்லுங்கள்................. கூடிபிறந்த சகோதரிகளை கூட்டிகொடுத்தாவது நாம் வாழ துடிக்கிறோம் என்று சொல்லுங்கள்.

அதற்காக உண்மையை கொன்றுவிட்டு இராஜதந்திரம் என்று பூசிமெழுகாதீர்கள். எல்லாம் திறந்துதான் கிடக்கின்றது ............. இனி பூட்டுபோட்டு பூட்ட ஏதும் இல்லை.

வெடித்தவர்கள் நாமா? நாமெல்லாம் இங்கு சுகமாக அல்லவா இருக்கிறோம். நேரத்திற்கு நேரம் போட்டுக் கொள்கிறோம். கூடுமிடங்களில் அரசியல் பேசிக் கொள்கிறோம். இப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு மானம்பற்றியும் பேசுகிறோம். வருந்தும் தாயகத்தில் வாழும் தமிழனைவிடவும், அவர்களை அதிலிருந்து மீட்பதைவிடவும் வேறெதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

தாயகத்தில் வாழும் தமிழர்கள் தங்களைத்தாங்களே இந்தத் துன்பத்திலிருந்து மீட்டுக் கொள்வதற்குத் தாயகக் கோட்பாட்டை கொஞ்சம் தூரத்தில் வைத்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேள். நீங்களும் உங்கள் குடும்பமும் சொகுசாகப் போராடுங்கள்.

இப்போது இனமானம் காக்கத் துணிந்த நீங்கள் அன்று களத்தில் நின்றிருக்க வேண்டும். அங்கே வாழ்ந்த மக்களோடு துயரைப் பகிர்ந்திருக்க வேண்டும். மானமழிந்த பெண்களின் அவலக் குரல்களைக் காதில் வாங்கியிருக்க வேண்டும். இதில் எதுவுமில்லையே. நாமெல்லாம் சொகுசு போராட்ட வீரர்களில்லையா?

இன்றும் கூட கதியிழந்த தமிழரைப்பார்த்து கொள்கைப்படி நட, போராடு, மடிந்துபோ என்கிறோமே எவ்வளவு சுயநலம் நமக்கு. என்னோடு ஒட்டிய சோகத்திற்கு நாமல்லவா போராடியிருக்கவேண்டும். இங்குவந்ததே நாம் தாயகத்தில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கென்றுதான் நினைக்கின்றேன்.

வெடியாய் வெடித்தவர்கள் நாமில்லை. வெடிசுமந்தவர்களின் ஏழைக் குடும்பங்கள் நாமில்லையே. அவர்கள் வாழும் நிலையும் நமது மண்டு மூளைக்குப் புரிவதில்லை. ஏனென்றால் அவர்கள் நாமில்லை. அவர்கள் போராட வேண்டும். மானத்தை இழக்க வேண்டும். வேறுவழிகள் பற்றிச் சிந்திக்கவே கூடாது. இவையெல்லாவற்றையும் இங்கிருந்து நாங்களே தீர்மானிப்போம்.

ஏனென்றால் 83 ஆம் சோகங்கள் ஒட்டிக் கொண்டதால் நாமிங்கு வந்துவிட்டோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.