Jump to content

ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தா!


Recommended Posts

அந்த விடியோ படம் எடுக்கப்பட்டபோது உண்மையில் நான் உடல் நலமற்று... 'சமாதி' நிலையில் இருந்தேன்.

எடியேய் முனியம்மா கதையை கேட்டியோ இதுதானாம் சமாதி நிலை அப்ப நானும் ஒவ்வொருநாளும் இரவிலை சமாதி நிலையிலைதானே இருக்கிறனான். இப்ப விளங.குதோ சமாதி நிலை எடுக்கிறது எவ்வளவு கஸ்ரமெண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆன்மிகம் வாங்கல்லையோ ஆன்மிகம்

குற்றம் சாட்டப்பட்ட எல்லா சாமியார்களுமே தப்பானவர்கள்தான் என்று தீர்மானமாக நம்மால் சொல்ல முடியவில்லை. படித்த செய்திகளின் அடிப்படையில் மட்டுமே சொல்வதானால் அப்படிச் சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்வது அறிவுடைமை ஆகாது. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காத்திருப்போம். நீதி இன்னும் இந்த நாட்டில் சாகவில்லை.

ஆனால் ஒரு விஷயம் ரொம்ப துரதிஷ்ட வசமானது.

‘நிச்சயம் இவர் இப்படிச் செய்திருக்க முடியாது’ என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிற நிலையில் தங்களை யாரும் வைத்துக் கொள்ளவில்லை. அதற்குக் காரணங்கள் பல.

கோவணத்தை எலி கடிக்கிறது என்பதற்காக பூனை வளர்க்க ஆரம்பித்த சாமியார் எப்படி சம்சாரி ஆனார் என்பது பழைய கதை.

முதல் deviation எப்படி முற்றிலும் deviation ஆக ஆக்கும் என்கிற தத்துவத்தை அந்தக் கதையிலிருந்து நாம் உணரவில்லை.

துறவி என்கிறவர் யாசித்து உண்ண வேண்டும் என்பது பெரியவர்கள் சொன்னது.

ஏன் அப்படிச் சொன்னார்கள்?

முதற் காரணம், நாளை என்கிற நாளுக்காக எதையும் சேமிக்கக் கூடாது. செல்வம் சேர்ந்து விட்டாலே அதைக் காக்கிற கவலை, பெருக்குகிற ஆசை, அவசியமில்லாதவைகளை வாங்குதல் என்று நிறைய deviation கள் வந்து விடும். இந்த நாட்டில், நான் அறிந்த எந்தத் துறவியும் யாசித்து உண்டதில்லை.

முதன் முதலில் துறவிகள் பால் அன்பும் மதிப்பும் இருந்தவர்கள் நில புலன்களையும் பணத்தையும் மடத்தின் பேரில் எழுதி வைத்தது முதல் தவறு என்றால், துறவிகள் அதை ஏற்றது அதை விடப் பெரிய தவறு.

சரி, என் பேரில் என்ன இருக்கிறது, எல்லாமே ட்ரஸ்ட் தானே என்றால் அந்த ட்ரஸ்ட் நல்ல முறையில் இயங்குகிற பொறுப்பு உங்கள் தலையில் ஏறிக் கொண்டு விட்டதே! நல்ல காரியங்களுக்குத்தான் செலவழிக்கப் போகிறோம் என்றால், மேலும் நல்ல காரியம், மேலும் சேகரிப்பு என்று தொடர்கிறதே! நேரடியாகவோ, மறைமுகமாகவோ செல்வத்தின் பால் கவனம் போய் விட்டதே! பணப்புழக்கம் ஆரம்பித்து விட்டாலே பனைமரத்தின் கீழ் பால்தான். செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில நட்புகள், சில விரோதங்கள், சில வியாபாரங்கள்…. ம்ம்ஹூம் பாதி ஆன்மிகம் கோவிந்தா.

அடுத்தது பிரம்மச்சரியம்.

பிரம்மச்சரியம் என்பது பிளாஷ் பாயிண்ட் இல் இருக்கும் எண்ணை போன்றது. அதனருகில், சிறிது தூரத்தில் கூட ஒரு சின்ன தீப்பிழம்பு கூட வரக் கூடாது. வந்தால் ப்ளக் என்று பற்றிக் கொண்டு விடும். பெண்களின் வாசனையே கூடாது. ஆனால் அவர்கள் விட்டால்தானே.

சாமியார்களுக்கு முதல் ஓட்டே பெண்களுடையதுதான். அதிலும் வாழ்வில் தோல்வியைச் சந்தித்த பெண்கள் ரொம்பத் தீவிர பக்தைகள். புருஷன் கொஞ்சம் முரடனாக இருந்து விட்டால் போதும். உடனே நான் ஆன்மிகத்தில் கலந்து விட்டேன் என்று போய் விடுகிறார்கள்.

பெண்ணின் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத சாமியார்களுக்கு இவர்களின் நேசம் போதையளிப்பதாக இருக்கிறது.

அந்த போதையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக நுகர ஆரம்பிக்கிறார்கள்.

மெதுவாக முன்னேறுகிற எதிலுமே மாற்றம் நடந்து கொண்டிருப்பது சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரியாது.

கொதிக்கிற நீரில் ஒரு தவளை குதித்தால் சூடு தாங்காமல் உடனே வெளியே குதித்து விடும். ஆனால் குளிர்ந்த நீர் இருக்கும் ஒரு அண்டாவில் தவளை நீந்திக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், தண்ணீரை சூடு பண்ண ஆரம்பியுங்கள். அதன் கத கதப்பை ரசிக்கும். முன்னை விட ஒரு டிகிரி. அதை விட ஒரு டிகிரி என்று சூடு ஏறிக் கொண்டிருப்பதே தெரியாமல் பொரிந்து செத்துப் போகுமே ஒழிய மெதுவாக நடைபெறும் இந்த மாற்றத்தை அது அறியவே அறியாது.

அது போலத்தான் பெண்களோடு பழக ஆரம்பிக்கிற சாமியார்களின் கதையும்.

அடுத்தது விளம்பர ஆசை.

போஸ்டரில் முகம், டிவியில் நிகழ்ச்சி, அந்த குரு இந்த குரு என்று பட்டங்கள்…. பத்திரிகைகளில் பேட்டிகள்…

இதெல்லாம் இருக்கிற எவருமே துறவிகளோ, சேவை நோக்கமோ கொண்டவர்கள் அல்ல.

இது மாதிரி பலஹீனமான ஆசாமிகள் மாட்டும் போது ஆன்மிகமே பம்மாத்து, இந்து மதமே டுபாக்கூர் என்று எண்ணத் தேவையில்லை. இந்து மதம் ஒரு மிகப் பெரிய கடல். இவர்களெல்லாம் அதிலிருக்கும் தண்ணீரின் ஒரு மாலிக்யூல் கூட கிடையாது.

தன்னை சாமியார் என்றோ குரு என்றோ அறிவித்துக் கொள்ளாத, மடம் இல்லாத, ட்ரஸ்ட் இல்லாத சாதாரண குடும்பஸ்தர்கள் எத்தனையோ பேர் ஆன்மிகத்தை சொல்லித்தர இருக்கிறார்கள். மறைந்த பல மகான்களின் நூல்கள் இருக்கின்றன.

பலஹீனமான, ஆன்மிக வியாபாரிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை விட்டு விலகுகிற தீர்மானத்துக்கு உங்களில் எத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்?

நன்றி:

இதயம் பேத்துகிறது

http://kgjawarlal.wordpress.com/2010/03/07/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/

சாரு நிவேதிதா எழுதிய

சரசம், சல்லாபம், சாமியார்.

புதிய விறுவிறு தொடர்

1

18.03.10 தொடர்கள்

அவந்திகா ஆசிரமத்தில் இருந்தபோது என்னை பல பத்திரிகைகளிலிருந்தும் பேட்டி கேட்டார்கள். நானோ வாயே திறக்கவில்லை. வாயைத் திறந்தால் அவந்திகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். என் இரண்டு கைகளையும் கட்டிப் போட்டது போல் உணர்ந்தேன். ‘சாமியாரிடமிருந்து பணம் வாங்கி விட்டாய்; அதனால்தான் மௌனமாக இருக்கிறாய்’ என்றெல்லாம் அவதூறு எழுதினார்கள். அப்போதும் என்னால் வாயைத் திறக்க முடியவில்லை. என் மான அவமானத்தைவிட அவந்திகாவின் உயிர் முக்கியமாயிற்றே? பிறகு எப்படி அவந்திகா ஆசிரமத்திலிருந்து தப்பினாள்?அது ஒரு துப்பறியும் கதைபோல் இருக்கும். அடுத்த இதழில் சொல்கிறேன்

கதை நல்லாத்தான் இருக்கு பாஸ்....நம்புற மாதிரி சொல்லுங்க....

Link to comment
Share on other sites

சாமியா

அல்லது

தங்கள் ஆசாமியா??? :lol::lol::wub:

:(:lol: :lol:

Link to comment
Share on other sites

முற்றும் துறந்தவனுக்குச் சொத்துக்கள் இருக்கமுடியாது.

ஆனால் நித்தியானந்தா முற்றும் திறந்தவர் ஆயிற்றே

Link to comment
Share on other sites

reporter210310_04.jpg

எனக்கும் வரவர பக்தி கூடுற மாதிரி தெரியுது. நாங்களும் ஆராய்ச்சி செய்யலாமோ? :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
    • இது ஒட்டு மொத்த‌ இந்திய‌ அள‌வில் தேர்த‌ல் ஆணைய‌த்தை கைக்குள் வைத்து பிஜேப்பி செய்யும் தேர்த‌ல் மோச‌டி இப்ப‌டி குள‌று ப‌டி செய்து தேர்த‌லில் வெல்வ‌தெல்லாம் ஒரு வெற்றியா......................இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது................இந்திய‌ அள‌வில் தாங்க‌ள் 400 இட‌ங்க‌ளின் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்க‌ளே / ஆனால் இப்ப‌டி குள‌று ப‌டி செய்து அமைப்போம் என்று ஆர‌ம்ப‌த்தில் சொல்ல‌ வில்லை இப்ப‌ பிடிப‌ட்டான் மோடி என்ற க‌ள்ள‌ன்......................தேர்த‌ல் ஆணைய‌த்தையும் ஈவிம் மிசினையும் ந‌ம்பி தான் த‌மிழ் நாட்டு பிஜேப்பி அண்ணாம‌லை அதிக‌மாய் பொங்கி எழுகிறார்....................இதெல்லாம் ஒரு தேர்த‌ல்.............................த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக‌ளை நினைக்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.