Jump to content

ஊருக்குப் போன ஊர்குருவி


Recommended Posts

விடியல் சொல்வதில் உண்மை நிறைய இருக்கின்றது. எனக்குத் தெரிந்து நிறையப் பேர் போய் எந்தவிதமான பிரச்சனையும் இன்றித் திரும்பியுள்ளனர். புலம்பெயர் மக்களின் முதலீடுகளில் அக்கறை கொண்டு உள்ள சிங்கள அரசியலாளர்கள், அவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொள்ளப் போவதில்லை. ஆனால், தமிழர்களை கடத்துவதற்கும் அவர்களை காணாமல் போக்கடிப்பதற்குமான சூழ்நிலை அன்று எப்படி இருந்ததோ, அதே போன்றுதான் இன்றும் இருக்கின்றது, நாளையும் இருக்கப்போகின்றது. சம்பவங்களின் நிகழ்வுகள் பூச்சியாமாகப் போயினும், நடப்பதற்கான நிகழ்தகவு 100 ஆகவே காணப்படுகின்றது

ஊரில் இருக்கும் என் அம்மாவிடம் கேட்டேன் "எல்லாரும் வருயினம், நானும் வந்து ஒரு எட்டு பார்க்கவா என", அம்மா பதறிப் போய் சொன்னது "பொறு பொறு இப்போதைக்கு வராதே" என்று... அவாவின் குரலில் இனம்புரியாத பதற்றம் இருந்ததை உணரக் கூடியதாக இருந்தது. அந்த பதற்றம் நிறைந்த குரல்தான் தமிழர்களின் அவல வாழ்வுக்கான சாட்சி

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

ஊரிலையிருந்து இரண்டு தென்னங்குத்தி இறக்க எவ்வளவு செலவாகும் வசம்பண்ணை? :)

:unsure:நீங்க இரண்டு பனங்குத்தி இறக்கக் கொடுத்த அதே செலவு தான் ஆகும் கு.சா அண்ணோய்..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

ஓம் வசம்பு, நானும் கேள்விப் பட்டனான். டக்ளஸ் கப்பம் வாங்கிறதில்லையாம். ஆனா, செல்லமா பிரான்ஸில இருந்து போற பெடியள வெருட்டி வாங்கின காசு தான் டக்ளசிட வால்கள் வெளிநாட்டுப் பயணம், குறிப்பாக பிரான்ஸ் பயணம் செய்யும் போது பயன் படுகுதாம். தப்பில்லைத் தானே? என்ன செலவுக்கு காசெடுத்திருக்கிறாங்கள் அவ்வளவு தான்! சித்தாவிட புளொட் இப்ப வவுனியாவில வாலாட்டிறதில்லை (வவுனியாவில மட்டும் தான்!). டொக்டர் மொகிதீன் கொலைக்குப் பிறகு சிறி லங்காப் பொலிஸ் எடுத்த நடவடிக்கையால எல்லாரும் அனுராதபுரத்தில களி தின்னுகினயாம். ஆனா அதுக்கு முதல் கொண்டாடுற வீர மக்கள் தினத்துக்கு பூச்சாடியில இருந்து "தண்ணிச் செலவு" வரை வவுனியா மக்களிட்ட "அன்பாகக்" கேட்டு வாங்கித் தான் கொண்டாடினவங்களாம்! இதுவும் தப்பிலைத் தானே? அது சரி உங்களுக்குச் சொன்ன மாதிரி முறைப்பாடுகளைக் கவனிச்சவையோ இந்த இரண்டு "களத்தில" நிண்டு "சேவையாற்றுற" தலைவர் மாரும்? ஒருக்கா அறியத் தாங்கோவன்! :unsure::)

Link to comment
Share on other sites

ஊரில் இருக்கும் என் அம்மாவிடம் கேட்டேன் "எல்லாரும் வருயினம், நானும் வந்து ஒரு எட்டு பார்க்கவா என", அம்மா பதறிப் போய் சொன்னது "பொறு பொறு இப்போதைக்கு வராதே" என்று... அவாவின் குரலில் இனம்புரியாத பதற்றம் இருந்ததை உணரக் கூடியதாக இருந்தது.

புரியவில்லை KP கூட அவங்களிடம் இருக்கும் போது ???????

Link to comment
Share on other sites

ஓம் வசம்பு, நானும் கேள்விப் பட்டனான். டக்ளஸ் கப்பம் வாங்கிறதில்லையாம். ஆனா, செல்லமா பிரான்ஸில இருந்து போற பெடியள வெருட்டி வாங்கின காசு தான் டக்ளசிட வால்கள் வெளிநாட்டுப் பயணம், குறிப்பாக பிரான்ஸ் பயணம் செய்யும் போது பயன் படுகுதாம்.

:unsure:ஏன் இப்போ டக்ளஸ் அமைச்சரில்லையோ?? அல்லது ஒரு ரூபா சம்பளத்திலை அமைச்சராய் இருக்கின்றாரோ?? :) கூட்டமைப்புக் காரர்கள் ஏதோ சீசன் ரிக்கற் எடுத்து வைச்சோ இந்தியா, கனடா, ஐரோப்பா என்று அடிக்கடி பயணித்தவை?? அதையும் ஒருக்கால் உங்கடை புலநாய்வு மூலம் எடுத்து விடுங்கோவன். ^_^ ஒருவேளை வன்னி மக்களுக்கு என்று "புலம்(ன்)" பெயர்ந்து சிலர் சுருட்டும் பணம் அவைக்குத் தான் என்று கதைவிடப் போறியளோ??:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக இது தமிழர்களின் குணம்

பிரச்சினை தன் கதவை தட்டும்வரை அவர்களுக்கு அடுத்தவர்களுக்கு நடப்பது பற்றி அக்கறையில்லை

அல்லது

அவர்கள் ஏதோ பிழை செய்ததால் நடந்தது என்றே இருப்பர்.

நெடுக் அவர்களின் கருத்துக்களுடன் 100 வீதம் ஆதரிக்கின்றேன்

பாலஸ்தீன பழமொழி ஒன்று................

முந்தநாள் அடுத்த வீதியில் யாரொ நாலுபேர் வந்து அங்குள்ளவர்களை அடித்தார்கள் உதைத்தார்கள்.

நான் போகவில்லை....... ஏன் என்றும் கேட்கவில்லை.

நேற்று பக்கத்து வீட்டடில் உள்ளவர்களை வந்து அடித்தார்கள் உதைத்தார்கள்.

நான் போகவில்லை.... ஏன் என்றும் கேட்கவில்லை.

இன்று அதே நாலுபேரும் எனை வந்து அடிக்கிறார்கள்.

யாரும் வரவில்லை............. ஏன் என்றும் கேட்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

இங்கே எவரும் தமிழர்களுக்கு இலங்கையில் பிரைச்சினையில்லை,அங்கே தேனும் பாலும் ஓடுகின்றதென்று சொல்லவரவில்லையே. இருக்கும் பிரைச்சினைகளை,அதீத கற்பனையில் மேலும் மெருகேற்றி இலங்கையில் தமிழர்களே வாழ முடியாதென்று கதையளக்கும் தங்களைப் போன்றோரின் கருத்தைத் தான் மறுதலிக்கின்றோம். இன்று இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமா பிரைச்சினை?? சிங்கள மக்களுக்கு இல்லையா?? சமீபபத்தில் ஒரு காணொளி பார்த்தேன்,அதில் புத்தபிக்குமாருக்கே ஆடைகளைப் பிடித்திழுத்து காவற்துறையினர் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள். எனவே உண்மைகளை உள்ளபடி உண்மைகளாக எழுதுங்கள். வெறும் பரபரப்பிற்காகவும் பணப்பறிப்பிற்காகவும் மிகைப்படுத்தி பொய்களை எழுத வேண்டாமென்பதே எங்களைப் போன்றோரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் உங்களுக்கு மட்டுமல்ல,உங்களைப் போன்ற அனைவருக்குமே........

உங்களைப் போல அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கக் கூடாதுங்க. வானொலிகளைக் கேட்பதேயில்லையா?? அவர்கள் உங்களை உசுப்பிவிடுமளவிற்குச் செய்திகளைச் சொன்னால்த் தானே, நீங்களும் நிகழ்ச்சிகளுக்கு கண்மண் தெரியாமல் பணங்களை அள்ளி வழங்கி ஆதரவு வழங்குவீர்கள். GTV "கரம் கொடுப்போம், வடம் பிடிப்போம்" என்று பச்சையாகவே சுருட்டுகின்றதே தெரியவில்லையா??

:) உங்க தாராளள மனப்பான்மைக்கு மனமார்ந்த நன்றிங்க. :D

:rolleyes:நீங்கள் பிரான்சிலுள்ள தமிழ் ஒலி வானொலியைத் தொடர்பு கொண்டால், அவர்கள் எப்படி இலங்கைக்குச் சென்று திரும்பலாமென்ற இரகசியங்களை இரகசியமாகச் சொல்லித் தருவார்கள். :):D

பி.கு: அவசரப்பட்டு நிகழ்ச்சியில் சென்று இது விடயமாகக் கேட்டுவிடாதீர்கள். காரியாலயத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே அறிவு முகர்ந்த அண்ணாச்சி ஒருவர் எழுதியவை.............. அவர் கைபடவே எழுதியவைகளில் சிலதுகள் என்னால் சிவப்பு வர்ணமிட்டு காட்டபட்டுள்ளன. அவர் மேலேயே சிலரை அறிவு குறைந்தவர்கள் என்று திட்டியுமுள்ளார். அவர் சொல்லுவது உண்மையென்றே நானும் ஒப்புகொள்கிறேன்.

காரணம் அவர் எதையும் ஒளிவு மறைவின்றி எழுதியபின்பும் ஏதும் விளங்காதவர்கள்போல். இலங்கையில் தமிழருக்கு பிரச்சனையில்லையா? என்று கேள்வி கேட்டால் அது ஒரு மூட்டாள்தனமான கேள்விதானே?

அவர் தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என்று எங்காவது எழுதியுள்ளாரா?

எங்களுக்கு பிரச்சனை இல்லை............. எங்களுக்கு தெரிந்தவர்கள் போய்வருகிறார்கள்............... எமது சகாக்கள் அங்கிருந்து வருகிறார்கள் அவர்களில் யாருக்கும் பிரச்சனை இல்லை என்றே அவர் திரும்ப திரும்ப எழுதுகிறார்.

அதாவது சித்தார்த்தன் அமைச்சர் ஐயா டக்ளஸ் தேவனாந்தா போன்றோர் வரும்போது என்னோடு வந்து நேரடியாக பேசுகிறார்கள். நான் நேரடியாகவே அவர்களுடன் கதைக்கிறேன். அவர்களும் முற்று முழுதாக மறுப்பதற்கில்லை என்று சொன்னார்களாம்.

இந்த அண்ணாவை நேரடியாகவே அந்த மக்கள் காப்பாளர்கள் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்தும் அவர் சொல்லுவது............. தற்போது களத்தில் அவர்கள்தான் நிற்கிறார்களாம். களத்தில் என்று அவர் மீண்டும் சுட்டிகாட்டியுள்ளார்.

திரும்ப திரும்ப ஒன்றை சொல்கின்றார்............. இங்கே டக்களஸ்தேவானந்தா மக்கள்சேவகன் சித்தார்த்தன் தவிர்ந்தவர்கள் பணப்பறிப்பில் ஈடுபடுகின்றார்களாம். உதாரணத்திற்கு ஜிரிவி பிரான்ஸ்லி ஏதோ றேடியோ கோயில் குளம் என்று மக்கள் சேவகர்களுடன் தொடர்பற்ற அனைத்தையும் அவர் சாடுகின்றார்.

திரும்ப திரும்ப அவர் அதைதான் சொல்கிறார் எமக்கு அங்கே பிரச்சனை இல்லை. ஆனால் தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று நான் சொல்லவில்லை.

ஆக இப்போது இலங்கையில் பிரச்சனையில்லாமல் வாழவும் வசதியுள்ளது

பிரச்சனையுடன் வாழவேண்டிய சூழ் நிலையும் அங்கு உள்தையே அவர் சுட்டிகாட்டகின்றார் என்று எனது அறிவுக்கு படுகின்றது.

தமிழராக ஏன் வாழ நினைக்கின்றீர்கள்?

இனி விவாதத்திற்கு உள்ளாக்கபட வேண்டியது.

Link to comment
Share on other sites

:rolleyes: கூட்டமைப்புக் காரர்கள் ஏதோ சீசன் ரிக்கற் எடுத்து வைச்சோ இந்தியா, கனடா, ஐரோப்பா என்று அடிக்கடி பயணித்தவை??

:):):D:D உதுகளை கதைக்க போனா நிறைய கதைக்கலாம். வைப்பகதில வைச்சதெல்லாம் போச்சு. அந்த கதை வேண்டாம் இப்போ எங்களுக்கு. மேலிடத்து ஓடர் இல்லை என்று சனங்களுக்கு வெள்ளி காட்டிவிட்டு கடைசியில் நெருப்பு மூட்டி எரித்ததாக கேள்விப்பட்டேன். வசம்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வருட நல்லூர்திருவிழா அந்த மாதிரி களை கட்டப்போகின்றது.புலம் பெயர்ந்தவர்கள் உலகம் முழுக்க இருந்து இப்போதே ஆயத்தமாகின்றார்கள்.வீதிகளில் நின்று கொடிபிடித்த பலர் கொடியேத்ததிற்கு நிற்கப்போகினமாம்.எங்கட சனத்திக்கு கூட்டம் கூடுவதென்றால் ஒரு அலாதிப் பிரியம்தான்.

விடிவெள்ளி நீங்கள் எழுதத்தொடங்கியதை தொடருங்கள். நாட்டிற்கு போய் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தங்கள் கருத்தை எழுதட்டும்.தமிழனுக்கு பிரச்சனையிருக்கு என்பதற்காக இவ்வளவு காலமும் சொன்னதெல்லாம் உண்மையென்றில்லை.

பீகாரில நடந்த கிட்னி எடுத்தபடத்தை ஊர்வலம் முழுவதும் காவிதிரிந்தவர்கள் தானே எம்மவர்கள்.

என்னங்க எல்லாரும் ஆரூடம் கூறுவதிலேயே நிக்கிறிங்க...

முதல்ல நல்லூருக்கு போய்வந்த பின்னர் எழுதுங்களேன் இத்தனை லட்சம் புலம்பெயர்ந்த மக்கள் வந்தவை என்று.

இல்லை நல்லூர் திருவிழாவுக்கு போக நீங்களா ஒழுங்கு செய்கிறீர்கள்?

இல்லை ஏதேச்சும் ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தினிங்களோ??

மேலே அறிவு முகர்ந்த அண்ணாச்சி ஒருவர் எழுதியவை.............. அவர் கைபடவே எழுதியவைகளில் சிலதுகள் என்னால் சிவப்பு வர்ணமிட்டு காட்டபட்டுள்ளன. அவர் மேலேயே சிலரை அறிவு குறைந்தவர்கள் என்று திட்டியுமுள்ளார். அவர் சொல்லுவது உண்மையென்றே நானும் ஒப்புகொள்கிறேன்.

காரணம் அவர் எதையும் ஒளிவு மறைவின்றி எழுதியபின்பும் ஏதும் விளங்காதவர்கள்போல். இலங்கையில் தமிழருக்கு பிரச்சனையில்லையா? என்று கேள்வி கேட்டால் அது ஒரு மூட்டாள்தனமான கேள்விதானே?

அவர் தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என்று எங்காவது எழுதியுள்ளாரா?

எங்களுக்கு பிரச்சனை இல்லை............. எங்களுக்கு தெரிந்தவர்கள் போய்வருகிறார்கள்............... எமது சகாக்கள் அங்கிருந்து வருகிறார்கள் அவர்களில் யாருக்கும் பிரச்சனை இல்லை என்றே அவர் திரும்ப திரும்ப எழுதுகிறார்.

அதாவது சித்தார்த்தன் அமைச்சர் ஐயா டக்ளஸ் தேவனாந்தா போன்றோர் வரும்போது என்னோடு வந்து நேரடியாக பேசுகிறார்கள். நான் நேரடியாகவே அவர்களுடன் கதைக்கிறேன். அவர்களும் முற்று முழுதாக மறுப்பதற்கில்லை என்று சொன்னார்களாம்.

இந்த அண்ணாவை நேரடியாகவே அந்த மக்கள் காப்பாளர்கள் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்தும் அவர் சொல்லுவது............. தற்போது களத்தில் அவர்கள்தான் நிற்கிறார்களாம். களத்தில் என்று அவர் மீண்டும் சுட்டிகாட்டியுள்ளார்.

திரும்ப திரும்ப ஒன்றை சொல்கின்றார்............. இங்கே டக்களஸ்தேவானந்தா மக்கள்சேவகன் சித்தார்த்தன் தவிர்ந்தவர்கள் பணப்பறிப்பில் ஈடுபடுகின்றார்களாம். உதாரணத்திற்கு ஜிரிவி பிரான்ஸ்லி ஏதோ றேடியோ கோயில் குளம் என்று மக்கள் சேவகர்களுடன் தொடர்பற்ற அனைத்தையும் அவர் சாடுகின்றார்.

திரும்ப திரும்ப அவர் அதைதான் சொல்கிறார் எமக்கு அங்கே பிரச்சனை இல்லை. ஆனால் தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று நான் சொல்லவில்லை.

ஆக இப்போது இலங்கையில் பிரச்சனையில்லாமல் வாழவும் வசதியுள்ளது

பிரச்சனையுடன் வாழவேண்டிய சூழ் நிலையும் அங்கு உள்தையே அவர் சுட்டிகாட்டகின்றார் என்று எனது அறிவுக்கு படுகின்றது.

தமிழராக ஏன் வாழ நினைக்கின்றீர்கள்?

இனி விவாதத்திற்கு உள்ளாக்கபட வேண்டியது.

உண்மை தான்

இதுக்கு பச்சை குத்தாமல் இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

வெள்ளவத்தையில் இருக்கும் எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு என் பயணப்பொதிகளை வைத்துவிட்டு அப்படியே நேரே வெள்ளவத்தை காவல் நிலையத்துக்குச் சென்று அங்கு என்னை பதிந்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்.

இது வரைக்கும் எனக்கோ அல்லது என் தாய் தந்தையருக்கோ அல்லது என் உறவுக்காரருக்கோ பெரிதாய் சிங்கள பாசை தெரியாது நாம் ஆங்கிலத்தில் பேசினோம் அவர்களும் ஆங்கிலத்தில் பேசினார்கள் பதிவு சுமுகமாக முடிவுற்றது. அதன்பின் கிட்டத்தட்ட ஒரு கிழமை கொழும்பில் தங்கி நின்றேன். அந்த காலத்தில் வெளியே செல்லும் போது சோதனைச்சாவடிகளில் எங்கள் வாகனத்தை இலங்கைப்படையினர் சோதனையின் நிமித்தம் நிறுத்துவார்கள் எமது ஆவணங்களை பரிசீலித்துவிட்டு தொடர்ந்து செல்ல அனுமதிப்பார்கள். நாங்களும் அவர்களுடன் பகிடிவிட்டு பேசும்போது அவர்களும் பகிடியாகவும் மிகவும் நட்பாகவும் பேசுவார்கள். சில இடங்களில் ஆங்கிலம் தெரியாத படையினர் நிற்குமிடத்தில் கிட்டத்தட்ட ஊமைப்பாசைதான். காலி முகத்திடலை பாக்கபோகின்றோம் என்று சொல்வதற்கு கோல்பேஸ் என்று சொல்லிவிட்டு பின் பார்த்தலை கையால் காட்டவேண்டிய நிலை ஒன்றும் செய்ய முடியாது. பின் எங்கள் சாரதி விளக்கமாக அவர்களுக்குச் சொல்லுவார்.

அந்த ஒரு கிழமையில் இரவுவேளைகளில் சிலநேரம் இலங்கைப்படையினர் சோதனையின் நிமித்தம் எம் வீட்டுக்கு வருவதுண்டு ஆவணங்களையும் பார்த்துவிட்டு அறைகளையும் ஒரு தடவை பார்த்துவிட்டு நாங்கள் ஏதும் பகிடிவிட்டால் சிரித்துகொண்டு போய்விடுவார்கள். ஆனால் வெள்ளை வான் பற்றி புலம் பெயர் ஊடகங்களில் கேள்விப்பட்ட விடயங்கள் அந்த ஒரு கிழமையும் எந்த நேரமும் பயமுறுத்திய வண்ணம் இருந்தது. கடவுள் செயலாலோ என்னவோ நாம் அவர்களிடம் சிக்கவில்லை. நாம் இருந்த தெருவில் இருந்த வியாபாரி ஒருவர், வெளிநாட்டுக்காரர் சிலர் இவர்களால் கடத்தப்பட்டதாக எங்கள் உறவினர்கள் தெரிவித்தனர். இவற்றை புலனாய்வுத்துறையினர் என்ற போர்வையில் தமிழ்க்குழுவினரே செய்வதாக அங்கு பலரும் தெரிவித்தனர். இதன் பின் மாளிகாவத்தை, மோதறை, பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலக கோஸ்டியினரும் தமிழர்கள் மத்தியில் தம் கைவரிசையை காட்ட ஆரம்பித்ததாகவும் பாதிக்கப்பட்ட சிலர் சாட்சியம் கூறினர்.

பின்னர் எமது வவுனியா வீடு நோக்கிய பயணத்தை தொடங்குகின்றோம். இங்கு தான் நான் உண்மையிலே பயந்து நடுங்கிய வண்ணம் வானில் ஏறினேன். காரணம் புலம்பெயர் ஊடகங்களில் அந்தளவுக்கு கடத்தல், கப்பம் கேட்டல், கப்பம் கொடுக்க மறுத்தால் கொலை போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக அறிவித்துக்கொண்டிருந்தனர். நாம் கொழும்பிலே சந்தித்த எங்கள் உறவுக்காரர்கள் தங்கள் உறவினர்களுக்கு வவுனியாவிலே நடந்த கொடுமைகளை ஏற்கனவே கூறியிருந்தனர். இவைகள் எல்லாம் என்னை அந்தளவுக்கு வாட்டி வதைத்தன. இருந்தும் என் வீட்டுக்குப் போகவேண்டியிருந்ததால் கடவுள் மீது பழியை போட்டுவிட்டு வானில் ஏறி வவுனியா நோக்கி பயணிக்கின்றோம். கொழும்பு நகரை கடக்கும் வரை வழமையான சோதனைகள் ஆவணங்களை பார்த்தல், வானை ஒரு தடவை எட்டிப்பார்த்தல் இவற்றோடு முடிந்துவிடும். புத்தளத்தை தாண்டிச் செல்லும் போது தான் ஏன் தமிழனாக பிறந்தோம் என்று கோபப்படும் படி இலங்கைப்படையினர் நடந்துகொண்டனர். பெரும்பாலும் காவலரண்களில் சிறுவர்களே நிற்ப்பார்கள் அவர்கள் சிங்கள பாசையை தவிர எதுவும் பேசமாட்டார்கள் நாம் ஆங்கிலத்தில் பேசினால் சிலர் சிரிப்பார்கள் சிலர் ஏதோ சிங்களத்தில் சொல்வார்கள் அது எமக்கும் புரியாது. எம் வண்டிச் சாரதியே எமக்கிடையில் மொழிபெயர்ப்பாளராக செயற்படுவார்.

ஒரு மாதிரி வவுனியாவில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம். அதன் பின் நாம் வவுனியாவில் வானில் திரிவதில்லை ஆட்டோ, மோட்டர்சைக்கிள்களில் தான் அதிகமாக திரிவதுண்டு. இன்னும் பாதுகாப்பானது துவிச்சக்கரவண்டி தான். ஏனெனில் அதில் செல்லும் போது இலங்கைப்படையினர் அதிகமாக சந்தேகப்படமாட்டார்கள். பதின்நான்கு நாட்கள் வவுனியாவில் தங்கியிருந்தேன். இலங்கையில் அதி உச்ச பயங்கர நகரம் என்று வவுனியா நகரை கூறலாம். அந்தளவுக்கு கொலைகள் நிறைந்து காணப்பட்டது. யார் சுடுகின்றனர் ஏன் சுடுகின்றனர் என்ற காரணம் எல்லாம் தெரியாது அங்கு ஒரு பொடி கிடக்கின்றது இங்கு ஒரு பொடி தலையில்லாமல் கிடக்கின்றது. அதை கருணா கோஸ்டி போட்டிருக்கும், இதை ஈபிடிபி போட்டிருக்கும், இதை சீஐடி தான் போட்டதாம், அதை சீஎஸ்ஸோ தான் போட்டதாம், அது கொம்பனி தான் போட்டது என மக்கள் தங்களுக்குள் ஆரூடம் சொல்லது போல் பேசிக்கொள்வார்கள். அந்தளவுக்கு அங்கு ஒரு கொலைக்கலாச்சாரம் மலிந்து காணப்பட்டது. இதனிடையே இரவில் வீடு புகுந்து மயக்க மருந்துகள் விசிறிவிட்டு களவுகளும் சில இடங்களில் சிறுமிகள், இளம் பெண்கள் மீது பாலியல் வல்லுறவுகள் தாராளமாகவே நடைபெற்றன. இவற்றை துணை இராணுவக்குழுவிவரே செய்வதாக மக்கள் சாடுகின்றார்கள்.

மாலை நான்கு மணிக்கே வவுனியா நகரம் அடங்கிவிடும். ஆறுமணிக்கு பின் தெருவில் இராணுவத்தினரை தவிர யாரையும் காணமுடியாது. எங்கும் நிசப்தமாகவே தெருக்கள் காட்சியளிக்கும். இடையிடையே இராணுவ வண்டிகள் பேரிரைச்சலுடனும் அதிவேகமாகவும் தெருக்களில் பயணிக்கும். ஐரோப்பிய நாடுகளில் சாமம் சாமமாக தெருக்களில் திரியும் எங்களுக்கு இது பெரும் கஸ்டமாகவும், பெரும் பீதியையும் ஏற்படுத்தியது. இரவு 7/8 மணிக்குப்பின் நாம் வீட்டைவிட்டு முற்றத்துக்கே வருவதில்லை. ஏன் என்றால் இரவு வேளைகளில் இராணுவத்தினர் காணிகளின் ஊடாகவே ரோந்து செல்வார்கள். அவர்கள் கண்ணில் அந்த வேளைகளில் எதிர்ப்பட்டால் ஏன் வீண் வம்பு? எதுவாகிலும் நாம் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. எமது குடும்பம் 2002 சமாதானத்தின் பின் வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று பின் எமது குடும்ப அங்கத்தவர்கள் அரச வேலையில் இணைந்ததன் காரணமாக வவுனியாவில் வந்து குடியேறவேண்டி ஏற்பட்டது.

இதை அறிந்து அடிக்கடி பகல் இரவு என்று பாராது சாதரண படையினர், விசேட அதிரடிப்படையினர் எங்கள் வீட்டுக்கு சோதனையின் நிமித்தம் வருவதுண்டாம்.

ஒருநாள் காலை 4 மணி இருக்கும் எங்கள் வீடு நாய்க்குட்டிகள் பலமாக குரைக்கின்றன.

எங்கள் வீட்டு கதவு பலமாக தட்டப்படுகின்றது எனது தந்தையார் எழுந்து மின் விளக்குகளை ஒளிரவிட்டார். இதற்கிடையில் என் தாயார் சாத்திய யன்னல் இடைவெளிக்கால் வெளியில் நிற்பவர்களை கண்டு விட்டார் என்னிடம் வந்து தம்பி STF காரர்கள் வந்திருக்கின்றனர் கடவுச்சீட்டை எடுத்து வைத்திரு என்று கூறினார். இது எனக்கு முதல் அனுபவம் பயத்தினால் கால் கை எல்லாம் நடுங்குகின்றது என் தந்தையார் கதவை திறக்கின்றார் தலையில் கறுப்பு துண்டுகள் கட்டிய சிலர், தலைக்கவசங்கள் அணிந்த சிலர் என ஒரு பத்து பதினைந்து பேர் முற்றத்தில் நிக்கின்றனர். சற்று தெருவை பார்த்தேன். தெரு வெளிச்சத்தில் இரண்டு பவல் கவசவாகனங்களை கண்டேன். கடவுளே இது என்ன சோதனை என்று கடவுளை நேந்த படி நிற்க, துப்பாக்கியை கையில் ஒரு குச்சியை பிடிப்பது போல் பிடித்தவண்ணம் திடகாத்திரமான உடற்கட்டை கொண்ட இராணுவத்தினர் சட சட வென வீட்டுக்குள் உள்நுளைந்தனர். அறைகளுக்குச் சென்றனர் சோதனை செய்தனர் எங்கள் குடும்ப பதிவு அட்டை, அடையாள அட்டைகளை வாங்கி பார்த்தனர் நான் என் கடவுச் சீட்டை கொடுத்தேன் அதை வாங்கிப்பார்த்துவிட்டு எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் என்று மலையகத்தமிழில் ஒருவர் என்னை கேட்டார் நான் வசிக்கும் நாட்டைச் சொன்னேன். கடவுச்சீட்டை புரட்டி புரட்டி பார்த்துவிட்டு ஐசி இருக்கா என்று கேட்டர் நானும் ஆம் என்று நான் வசிக்கும் தேசத்து அடையாள அட்டை கொடுக்க ஏதோ புரிந்தவர்போல் தலையை ஆட்டி ஆட்டி பார்த்துவிட்டு போகும் போது இந்த வீட்டில் யாரோ புதியவர் வந்திருக்கின்றதாக எமக்கு செய்தி வந்தது அது தான் வந்தோம் என்று சொல்லிவிட்டு இரவு வணக்கம்(Good night) கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக (God Bless You) என்று எல்லாம் சொல்லிவிட்டு சென்றனர். ஐரோப்பிய பொலீசார் பாணியில் அவர்களை என்னால் பார்க்ககூடியமாதிரி இருந்தது. என்னால் இதை நம்பமுடியாமல் இருந்தது, இலங்கை படையினர் அதுவும் வவுனியா இருக்கும் நிலையில் இவற்றை எல்லாம் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா என்ன? இதில் கவனிக்க படவேண்டிய விடயம் என்ன என்றால் STF காரர்கள் நன்றாக தமிழில் பயிற்றுவிக்கப்படிருக்கின்றனர். அடுத்தது அவர்களின் புலனாய்வுப்பிரிவு அந்தளவுக்கு ஊரெங்கும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது. வவுனியாவில் எமது தமிழ் இளைஞர்கள் பலர் அரச புலனாய்வாளர்களாக வேலை செய்வதாக எனது மைத்துனரும் தம்பியும் தெரிவித்தனர். துணை இராணுவக்குழுக்கள் அல்ல சம்பளத்தின் நிமித்தம் இவர்கள் வேலை செய்கின்றார்களாம்.

தொடரும்.....

Link to comment
Share on other sites

மேலே :rolleyes:அறிவு முகர்ந்த :) அண்ணாச்சி ஒருவர் எழுதியவை.............. அவர் கைபடவே எழுதியவைகளில் சிலதுகள் என்னால் சிவப்பு வர்ணமிட்டு காட்டபட்டுள்ளன. அவர் மேலேயே சிலரை அறிவு குறைந்தவர்கள் என்று திட்டியுமுள்ளார். அவர் சொல்லுவது உண்மையென்றே நானும் ஒப்புகொள்கிறேன்.

அதாவது சித்தார்த்தன் அமைச்சர் ஐயா டக்ளஸ் தேவனாந்தா போன்றோர் வரும்போது என்னோடு வந்து நேரடியாக பேசுகிறார்கள். நான் நேரடியாகவே அவர்களுடன் கதைக்கிறேன். அவர்களும் முற்று முழுதாக மறுப்பதற்கில்லை என்று சொன்னார்களாம்.

இந்த அண்ணாவை நேரடியாகவே அந்த மக்கள் காப்பாளர்கள் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்தும் அவர் சொல்லுவது............. தற்போது களத்தில் அவர்கள்தான் நிற்கிறார்களாம். களத்தில் என்று அவர் மீண்டும் சுட்டிகாட்டியுள்ளார்.

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

:)அடடா என்ன இது அகராதியிலேயே இல்லாத அறிவு முகர்ந்த என்று புதிசு புதிசா அறிவுக் கொழுந்துகள் எடுத்து விடுகினமே என்று யோசித்தால். அதற்கு அர்த்தைத்தையும் அவர்களே எடுத்து விட்டுள்ளார்கள். ஒருவரை நேரடியாக கேள்வி கேட்க இவர்கள் நினைத்தால் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் போன்ற அதிபுத்திசாலிகளை வந்து சந்திக்க வேண்டும். எனது கருத்தில் தளத்தில் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது கூட என்னுடன் கருத்துப் பகிர்ந்த ஒருவர் பாவித்த வார்த்தை பிரயோகம். அது கூட அதிபுத்திசாலிகளுக்கு புரியவுமில்லாமல் அது களத்தில் என்று தெரிகின்றதாம். இப்ப புரியுது அறிவு முகர்ந்தவர்களின் கருத்துகள் எப்படியிருக்குமென்று. :D:D

Link to comment
Share on other sites

:rolleyes:அடடா என்ன இது அகராதியிலேயே இல்லாத அறிவு முகர்ந்த என்று புதிசு புதிசா அறிவுக் கொழுந்துகள் எடுத்து விடுகினமே என்று யோசித்தால். அதற்கு அர்த்தைத்தையும் அவர்களே எடுத்து விட்டுள்ளார்கள். ஒருவரை நேரடியாக கேள்வி கேட்க இவர்கள் நினைத்தால் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் போன்ற அதிபுத்திசாலிகளை வந்து சந்திக்க வேண்டும். எனது கருத்தில் தளத்தில் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது கூட என்னுடன் கருத்துப் பகிர்ந்த ஒருவர் பாவித்த வார்த்தை பிரயோகம். அது கூட அதிபுத்திசாலிகளுக்கு புரியவுமில்லாமல் அது களத்தில் என்று தெரிகின்றதாம். இப்ப புரியுது அறிவு முகர்ந்தவர்களின் கருத்துகள் எப்படியிருக்குமென்று. :):)

அறிவு முகர்ந்த அதிக பிரசங்கிகள்:D:D:)

Link to comment
Share on other sites

விடிவெள்ளி, உங்கள் பயண அனுபவம் சுவாரசியமாய் இருக்கிது. பின்னூட்டல்களை பார்த்து உணர்ச்சிவசப்படாமல் முதலில் பயண அனுபவத்தை முழுவதுமாக கூறிமுடியுங்கள். அதன்பிறகு குடும்பியை பிடிச்சு இழுக்கலாம்.

கதையின் சாரம்சம்.. மேலோட்டமான செய்தி என்று பார்த்தால்.. இதுபற்றிய எனது பொதுவான பார்வை கிட்டத்தட்ட ஜஸ்டின் சொன்னது போன்றது. அதாவது, பத்துபேர் நாட்டுக்கு போகிறீனம் எண்டால்.. அதிலை ஏழு பேருக்கு ஒண்டும் நடக்க இல்லை, மூண்டுபேர் மாத்திரம் தான் அல்லது ஒருவர் மட்டும்தான் மாட்டுப்படுகிறார், துன்பியல் அனுபவத்தை பெறுகிறார் எண்டால்.. உண்மையில அது ஓர் ஆபத்தான பாதுகாப்பற்ற நிலமைதான்.

ஒரு கதையுக்கு.. பத்துபேரில ஒருவருக்கு துன்பியல் அனுபவம் கிடைச்சால் ஆயிரம்பேரில நூறுபேருக்கு துன்பியல் அனுபவம் கிடைக்கிது. இது பெரிய விசயம். ஊடகவியல் என்கின்ற அளவில பார்க்கும்போதுகூட.. ஒரு கடத்தல், ஒரு கொலை என்பது பெரிய விசயம்தான். இதனால்.. பாதுகாப்பற்ற நிலமையை எப்போதும் கவனத்தில கொள்ளவேணும்.

என்று ஓர் கடத்தல் கூட இடம்பெறவில்லை... ஓர் கொலைகூட இடம்பெறவில்லை.. ஓர் உயிர் அச்சுறுத்தல்கூட இடம்பெறவில்லை எண்டு ஓர் நிலமை ஏற்படுகிதோ அதுதான் உண்மையில பாதுகாப்பான நிலமை. யாரும் நம்பிப்போகலாம்.

மற்றது, இன்னோர் விசயத்தையும் கவனத்தில கொள்ளவேணும். இப்ப வெளிநாடுகளில கூட அரசியல், தீவிரவாதம் இவற்றுக்கு அப்பால.. வழமையான குழு வன்முறைகள், கொலைகள், எல்லாம் இருக்கிது. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதபோது.. ஓர் வறிய நாடான சிறீ லங்காவில வழமையான குற்றவியல் சம்பவங்களை முற்றிலுமாக ஒழிப்பது என்பது முடியாத ஓர் விசயம்.

அண்மையிலகூட நான் ஓர் செய்தி பார்த்தன். அதில இருந்திச்சிது.. கோண்டாவில் எங்கையோ.. உள்ளூர் திருடர் காசுக்காக இரவிலை செய்த கொலைச்சம்பவம் பற்றி. ஏன்... புலிகளின் கட்டுபாட்டில இருந்தகாலட்திலகூட திருட்டுக்கள், கொலைகள் நடந்துகொண்டுதான் இருந்திச்சிது. யாராச்சும் வெளிநாட்டு ஆக்கள் வந்து இருக்கிறீனம், காசு மடியுக்கை நிறைய இருக்கிது எண்டு திருடர் அறிஞ்சால்.. இங்கிருந்து போனவர்களிண்ட அவர்கள் கஸ்ட காலத்துக்கு பலத்த இழப்புக்களை சந்திக்க வேண்டி வரலாம்.

அதாவது, வழமையான risks associated with traveling overseas எப்பவும் இருக்கத்தான் செய்யும். நாட்டுக்கு போகின்ற நூறுபேரில ஆகக்குறைஞ்சது பத்து பேருக்காவது ஆபத்துக்கள் வரத்தான் பார்க்கும். அவை உள்ளூர் திருடர் காரணமாக வரலாம், பாதாள கோஷ்டிகள் காரணமாக வரலாம். அவை கொடிய நோயாகக்கூட இருக்கலாம். பலர் டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டு உயிர் பிழைச்சு வந்து இருக்கிறீனம்.

Link to comment
Share on other sites

விடிவெள்ளி, உங்கள் பயண அனுபவம் சுவாரசியமாய் இருக்கிது. பின்னூட்டல்களை பார்த்து உணர்ச்சிவசப்படாமல் முதலில் பயண அனுபவத்தை முழுவதுமாக கூறிமுடியுங்கள். அதன்பிறகு குடும்பியை பிடிச்சு இழுக்கலாம்.

கதையின் சாரம்சம்.. மேலோட்டமான செய்தி என்று பார்த்தால்.. இதுபற்றிய எனது பொதுவான பார்வை கிட்டத்தட்ட ஜஸ்டின் சொன்னது போன்றது. அதாவது, பத்துபேர் நாட்டுக்கு போகிறீனம் எண்டால்.. அதிலை ஏழு பேருக்கு ஒண்டும் நடக்க இல்லை, மூண்டுபேர் மாத்திரம் தான் அல்லது ஒருவர் மட்டும்தான் மாட்டுப்படுகிறார், துன்பியல் அனுபவத்தை பெறுகிறார் எண்டால்.. உண்மையில அது ஓர் ஆபத்தான பாதுகாப்பற்ற நிலமைதான்.

ஒரு கதையுக்கு.. பத்துபேரில ஒருவருக்கு துன்பியல் அனுபவம் கிடைச்சால் ஆயிரம்பேரில நூறுபேருக்கு துன்பியல் அனுபவம் கிடைக்கிது. இது பெரிய விசயம். ஊடகவியல் என்கின்ற அளவில பார்க்கும்போதுகூட.. ஒரு கடத்தல், ஒரு கொலை என்பது பெரிய விசயம்தான். இதனால்.. பாதுகாப்பற்ற நிலமையை எப்போதும் கவனத்தில கொள்ளவேணும்.

என்று ஓர் கடத்தல் கூட இடம்பெறவில்லை... ஓர் கொலைகூட இடம்பெறவில்லை.. ஓர் உயிர் அச்சுறுத்தல்கூட இடம்பெறவில்லை எண்டு ஓர் நிலமை ஏற்படுகிதோ அதுதான் உண்மையில பாதுகாப்பான நிலமை. யாரும் நம்பிப்போகலாம்.

மற்றது, இன்னோர் விசயத்தையும் கவனத்தில கொள்ளவேணும். இப்ப வெளிநாடுகளில கூட அரசியல், தீவிரவாதம் இவற்றுக்கு அப்பால.. வழமையான குழு வன்முறைகள், கொலைகள், எல்லாம் இருக்கிது. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதபோது.. ஓர் வறிய நாடான சிறீ லங்காவில வழமையான குற்றவியல் சம்பவங்களை முற்றிலுமாக ஒழிப்பது என்பது முடியாத ஓர் விசயம்.

அண்மையிலகூட நான் ஓர் செய்தி பார்த்தன். அதில இருந்திச்சிது.. கோண்டாவில் எங்கையோ.. உள்ளூர் திருடர் காசுக்காக இரவிலை செய்த கொலைச்சம்பவம் பற்றி. ஏன்... புலிகளின் கட்டுபாட்டில இருந்தகாலட்திலகூட திருட்டுக்கள், கொலைகள் நடந்துகொண்டுதான் இருந்திச்சிது. யாராச்சும் வெளிநாட்டு ஆக்கள் வந்து இருக்கிறீனம், காசு மடியுக்கை நிறைய இருக்கிது எண்டு திருடர் அறிஞ்சால்.. இங்கிருந்து போனவர்களிண்ட அவர்கள் கஸ்ட காலத்துக்கு பலத்த இழப்புக்களை சந்திக்க வேண்டி வரலாம்.

அதாவது, வழமையான risks associated with traveling overseas எப்பவும் இருக்கத்தான் செய்யும். நாட்டுக்கு போகின்ற நூறுபேரில ஆகக்குறைஞ்சது பத்து பேருக்காவது ஆபத்துக்கள் வரத்தான் பார்க்கும். அவை உள்ளூர் திருடர் காரணமாக வரலாம், பாதாள கோஷ்டிகள் காரணமாக வரலாம். அவை கொடிய நோயாகக்கூட இருக்கலாம். பலர் டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டு உயிர் பிழைச்சு வந்து இருக்கிறீனம்.

உண்மை என்னவெனில் வங்கு ரோட்டில் போகும் நாட்டை வெளிநாட்டு அன்னிய செலவாணி மூலம் நிவர்த்தி செய்ய சிங்கள அரசு பகீரத பிராயத்தனம் செய்கிறது. will :rolleyes: be back shortly

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளவத்தையில் இருக்கும் எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு என் பயணப்பொதிகளை வைத்துவிட்டு அப்படியே நேரே வெள்ளவத்தை காவல் நிலையத்துக்குச் சென்று அங்கு என்னை பதிந்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்.

இது வரைக்கும் எனக்கோ அல்லது என் தாய் தந்தையருக்கோ அல்லது என் உறவுக்காரருக்கோ பெரிதாய் சிங்கள பாசை தெரியாது நாம் ஆங்கிலத்தில் பேசினோம் அவர்களும் ஆங்கிலத்தில் பேசினார்கள் பதிவு சுமுகமாக

என்ன MR. விடிவெள்ளி சிம்மன் எண்டவர் உங்களையும் சுத்திவிட்ராரோ அல்லது கூடுதல் வட்டிக்கு பணம் கொடுத்து நீங்களும் ஏமாந்து விட்டிர்களா ? :rolleyes::)

சும்மா எடுத்துவிட்டால் நாங்களும் கேட்பமேல்ல :):D :D

Link to comment
Share on other sites

என்ன MR. விடிவெள்ளி சிம்மன் எண்டவர் உங்களையும் சுத்திவிட்ராரோ அல்லது கூடுதல் வட்டிக்கு பணம் கொடுத்து நீங்களும் ஏமாந்து விட்டிர்களா ? :rolleyes::)

சும்மா எடுத்துவிட்டால் நாங்களும் கேட்பமேல்ல :):D :D

ஓ இவர் கனடா பிரஜையோ. பல தகவல்கள் தெரியும் போல உங்களுக்கு.சாம், இவர் தனது பிரயாண கட்டுரை என யாரையோ பழி வாங்குவது போல், உள்ளது. பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே காலப்பகுதியில் நானும் கொழும்புக்கு போயிருந்தேன். மேலே கட்டுரை எழுதும் நபருக்கு சிங்கள சிறப்பு படையினர் தமிழர்கள் ஒரிருவரை (அதுவும் புலிகள் செல்லடித்ததால்தான்) கொன்றதால் ஏதும் கோபம் இருக்கலாம். அதனாலோ என்னவோ பல உண்மைகள் மறைக்கபட்டுள்ளன.

வெள்ளவத்தை பொலிஸிற்கு நானும் போயிருந்தேன் அவர்கள் சிங்களத்திலேயே என்னுடன் பகிடிவிட்டார்கள் எனக்கு ஏதும் விளங்கவில்லை என்பதை என்னை கூட்டி சென்றவரிடம் சொன்னேன். அவர்கள் பின்பு ஆங்கிலத்தில் என்னுடன் பகிடிவிட்டார்கள் அதுவும் புரியவில்லை என்றேன். அவர்கள் தங்களை மன்னிக்கும்படி எனக்கு சொன்னார்கள் தமிழிலே அதிகளவு பகிடிவிட எமக்கு தெரியாது என்று சொல்லி தமது தொலைகாட்சியில் வடிவேலுவின் நகைசுவையை காண்பித்து சிரித்துகொண்டிருக்கும்படி சொன்னார்கள் தாம் எனது பதிவுகளை பதிய சிறிது நேரம் எடுக்கும் என்றும் சொன்னார்கள்.

என்னை கூட்டி சென்றவரிடம் கடத்தல்கள் பற்றி கேட்டேன்............ அது தமிழ் குழுக்களின் வேலை என்றார். அப்போது புலிகளின் நடமாட்டம் கொழும்பில் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

எனது வவுனியா பயணம் மிகவும் சுவாரிசியமானது அதை பின்பு எழுதுகிறேன்.

தொடரும்............

Link to comment
Share on other sites

இஞ்ச கன பேர் இன்னமும் 84,85 களில் நிற்கினம் பலஸ்தீன கவிதை பாடிக்கொண்டு.வேரோட ஒட்ட அறுத்துவிட்டான் சிங்களவன் இன்னமும் முளைக்கும் பூக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் இங்கிருந்த படி.

ஜீவா,தீர்க்கதரிசனமென்பது முன்கூட்டியே நடக்கப் போவதை சொல்வது இது தெரியாதததால் தான் பலர் இன்று இருந்த இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ரவல்ஸ் என்று பெயரையும் வைதுக்கொண்டு தமிழரைக் கொண்டு காசுபார்த்து..அந்தக் காசாலையே எம்மினத்தை மேலும் துன்புறுத்த நினைக்கும் நீங்கள்..2007 முதல் 2010வரை நாட்டுக்கு உல்லாசப் பயணம் போய் வந்திருக்கீறிர்கள் என்றால் உங்களுக்கு கவனிப்பே வேறு நண்பரே...இந்தக் கட்டுரைகள் கூட உல்லாசப் பயணத்துறை தந்திருக்கலாம்.....உங்களுக்கு மனச்சாட்சி இருந்தால்..இந்தக் கட்டுரையை தொடர்வதை இத்தோடு தயவுசெய்து நிறுத்துங்கள் .ஒரு 5 வருடத்தில் பயணக்கட்டுரைப் புத்தகமாகவே வெளியிடலாம்..அதன்பின் எம்மினம் அழிந்தோ..அடையாளம்..இழந்தோ போயிருக்கும்....அவ்வேளை இக்கட்டுரை பயனுடையதாக இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச கன பேர் இன்னமும் 84,85 களில் நிற்கினம் பலஸ்தீன கவிதை பாடிக்கொண்டு.வேரோட ஒட்ட அறுத்துவிட்டான் சிங்களவன் இன்னமும் முளைக்கும் பூக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் இங்கிருந்த படி.

ஜீவா,தீர்க்கதரிசனமென்பது முன்கூட்டியே நடக்கப் போவதை சொல்வது இது தெரியாதததால் தான் பலர் இன்று இருந்த இடமில்லை.

போராட்டம் என்பது காலங்கள் கொண்டு அல்லது தனிமனிதர்கள் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. மக்களின் அரசியல் சமூக தேவைப்பாடுகள்.. உரிமைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படுவது. சிங்களவன் 1970 களில் ஒட்ட நறுக்கியதாக சொல்லப்பட்ட ஜே வி பி தான் 1988 இல் முளைத்தது. இன்றும் இருக்கிறது. மக்களிடம் உரிமைகள் அற்ற உணர்வு தாம் இரண்டாம் நிலையில் வைத்து நடத்தப்படும் நோக்கப்படும் நிலை இருக்கும் வரை போராட்ட குணம் இருந்து கொண்டே இருக்கும்.

பலஸ்தீனம் 1985 இல் இருந்து இன்று வரை இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக கல்லெறிதான் அதிகம் நடத்திக் கொண்டிருக்கிறது. ரொக்கட் எறிவதையல்ல. காரணம் அந்த மக்களுக்கு போராட்டம் பற்றிய தெளிவு தேவை இருக்கிறது. தமிழர்களுக்கும் அந்தத் தேவை இருந்தாலும்.. அடிமையாக வாழ்வதில் கூட அவர்கள் திருப்திப்படக் கூடியவர்கள்.

ஒரு நாயை அடைத்து வைத்து சாப்பாடு போட்டாலும் அது வாலை ஆட்டும். திறந்து விட்டு சாப்பாடு போட்டாலும் அது வாலை ஆட்டும். காரணம் அதற்கு அண்டிப்பிழைத்துத்தான் பழக்கம். தமிழர்களும் இந்த வகையினரே..! இப்படிப்பட்ட ஒரு இனம்.. தேசம்.. விடுதலை.. அதன் தேவைகளை சரியாக உணர்ந்து போராடுமா என்பது கேள்விக்குறிதான்.

பலஸ்தீனம் 1985 இல் இருந்து இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறது.. கீழுள்ள இணைப்புக்களை பார்க்க.. உலகத்தை கொஞ்சம் சுற்றுமுற்றிப் பார்த்துவிட்டு கருத்தெழுத வேண்டும்.

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8576542.stm

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8577492.stm

Link to comment
Share on other sites

ஓ இவர் கனடா பிரஜையோ. பல தகவல்கள் தெரியும் போல உங்களுக்கு.சாம், இவர் தனது பிரயாண கட்டுரை என யாரையோ பழி வாங்குவது போல், உள்ளது. பார்ப்போம்.

என்ன நுணாவிலான்,

:D எதையாவது எப்படியாவது சாட வேண்டுமென்று சிலர் கதையளக்க, நீங்களுமா அதை நம்பி விடுகின்றீர்கள்?? கனடாவிலிருப்பவர் ஜெர்மனியிலா பயண முகவர் நிலையத்தை நடாத்துவார்?? :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ரவல்ஸ் என்று பெயரையும் வைதுக்கொண்டு தமிழரைக் கொண்டு காசுபார்த்து..அந்தக் காசாலையே எம்மினத்தை மேலும் துன்புறுத்த நினைக்கும் நீங்கள்..2007 முதல் 2010வரை நாட்டுக்கு உல்லாசப் பயணம் போய் வந்திருக்கீறிர்கள் என்றால் உங்களுக்கு கவனிப்பே வேறு நண்பரே...இந்தக் கட்டுரைகள் கூட உல்லாசப் பயணத்துறை தந்திருக்கலாம்.....உங்களுக்கு மனச்சாட்சி இருந்தால்..இந்தக் கட்டுரையை தொடர்வதை இத்தோடு தயவுசெய்து நிறுத்துங்கள் .ஒரு 5 வருடத்தில் பயணக்கட்டுரைப் புத்தகமாகவே வெளியிடலாம்..அதன்பின் எம்மினம் அழிந்தோ..அடையாளம்..இழந்தோ போயிருக்கும்....அவ்வேளை இக்கட்டுரை பயனுடையதாக இருக்கும்...

வாய்ப்புக் கிடைக்கும் போது தன் சொந்த ஊருக்கு போவது உல்லாசப் பயணமாகும் என்றா சொல்கின்றீர்கள்? ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது ஐநூறு பேராவது (தமிழர்கள்) புலம் பெயர் தேசங்களில் இருந்து இலங்கைக்கு போய்க்கொண்டிருக்கின்றனர் இப்போது. அது இந்த கோடை விடுமுறை நாட்களில் பன்மடங்கு அதிகரிக்கப் போகின்றது. ஒருவர் விடாமல், எல்லாரையு, துரோகி என்று முத்திரை குற்றி இப்போ சொந்த ஊருக்கு போகின்றவர்களையும் துரோகியாக்க முயல்கின்றீர்கள்

இந்த கட்டுரையை சகிக்கக் கூட முடியாத, அதற்கு சரியான பதில்களை கூட எழுத வழி தெரியாது நிறுத்தச் சொல்கின்ற உங்களைப் போன்றவர்களை நம்பித்தான் எங்கள் தமிழ் தேசிய போராட்டம் இன்று உறைநிலைக்கு வந்துள்ளது.

Link to comment
Share on other sites

வாய்ப்புக் கிடைக்கும் போது தன் சொந்த ஊருக்கு போவது உல்லாசப் பயணமாகும் என்றா சொல்கின்றீர்கள்? ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது ஐநூறு பேராவது (தமிழர்கள்) புலம் பெயர் தேசங்களில் இருந்து இலங்கைக்கு போய்க்கொண்டிருக்கின்றனர் இப்போது. அது இந்த கோடை விடுமுறை நாட்களில் பன்மடங்கு அதிகரிக்கப் போகின்றது. ஒருவர் விடாமல், எல்லாரையு, துரோகி என்று முத்திரை குற்றி இப்போ சொந்த ஊருக்கு போகின்றவர்களையும் துரோகியாக்க முயல்கின்றீர்கள்

இந்த கட்டுரையை சகிக்கக் கூட முடியாத, அதற்கு சரியான பதில்களை கூட எழுத வழி தெரியாது நிறுத்தச் சொல்கின்ற உங்களைப் போன்றவர்களை நம்பித்தான் எங்கள் தமிழ் தேசிய போராட்டம் இன்று உறைநிலைக்கு வந்துள்ளது.

சொந்த ஊருக்குப் போவதும் விடுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம்.இத்தனை நடந்தும் 20பது வருடங்களாக போய்க் கொண்டுதானிருகின்றார்கள்.வெளி நாட்டிலிருந்து வரும் தமிழர்களால் அரசாங்கத்திற்கு நிறைய வருமானம்.அரசு இதில் கவனமாகவேயிருக்கும். மற்றும் நாம் தலைசிறந்த தமிழரல்லவா அதுதான் ஆளாளுக்கு அம்பு விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்பது காலங்கள் கொண்டு அல்லது தனிமனிதர்கள் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. மக்களின் அரசியல் சமூக தேவைப்பாடுகள்.. உரிமைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படுவது.

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8576542.stm

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8577492.stm

என்ன நீங்கள் அப்படி சொல்லிபோட்டிங்கள். தனிமனிதர்கள் வேண்டுமானால் தீர்மானிக்க முடியாது இருக்கலாம்.

அதுக்கா இந்த அர்ஜுன் என்பவராலும் தீர்மானிக்க முடியாது என்று எந்த ஆதாரத்தை வைத்து நீங்கள் சொல்லுங்கின்றீர்கள்.

அவர் எவ்ளவு பெரிய ஆளு......??

நீங்களேல்லாம் வெளிநாடுகளை இப்போதுதான் பார்க்கின்றீர்கள் அந்த அண்ணா வெளிநாட்டு வாழ்வை 80களிலேயே தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்கும் மண்ணுக்கும் புல்லுபுடுங்க போனவர்.

இப்போதும் தொடர்ந்தும் புடுங்குகிறார்............ உங்களுக்கு புரியாவிட்டால்.

அவர் புடுங்கும் புல்லுகள் பிழையானது என்று அர்ததம் ஆகிவிடுமா?

அண்ணா நீங்க இதையெல்லாம் செவிமடுக்காதைங்கோ............... தொடர்ந்து புடுங்குங்கோ உங்களின் சேவை தமிழ் மண்ணுக்கு என்றும் தேவை.

அப்படியே மேலேயிருந்து புடுங்காமல்.......... மண்புழுவா கீழே போனால் என்னமும் வளபடுத்தலாம். ( எங்களுக்கும் பெரிய ஆறுதலாக இருக்கும் சொன்ன கேட்க மாட்டாங்கிறாங்களே.....)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.