Jump to content

மீன் பொரியல்


Recommended Posts

அசைவ உணவுப்பிரியர்கள் பலருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு என்றால் அது மீன் பொரியல் என சொல்லலாமா? என்ன தான் சுவையாக கறி வைத்தாலும், அதோடு சாப்பிட மீன் பொரியல் இல்லை என்றால் கொஞ்சம் கஸ்டம் தான். அதுவும் படகிலேயே போய் மீனை பிடித்து பொரித்தால்?! யம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இத்தனை அருமை பெருமைகளை தனக்குள் அடக்கிய மீன் பொரியலை செய்வதொன்றும் பெரிய வேலை கிடையாது. மிகவும் எளிதான செய்முறை தான்.

Thooyaskitchen+Fish+Fry.jpg

தேவையானவை:

உங்களுக்கு பிடித்த மீன் 5 துண்டுகள்

(சின்ன மீன் என்றால் 5 மீன்கள்)

மிளகாய் தூள் 1 தே.க

மஞ்சள் தூள் 1/2 தே.க

மல்லி தூள் 1/2 தே.க

கரைத்த புளி 1 தே.க

உப்பு தேவைக்கேற்ப

பொரிக்க எந்த எண்ணெய் பயனடுத்துவீர்களே, அது கொஞ்சம்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை விட்டு சூடாக்கி கொள்ளுங்கள். [மீனை சுத்தம் செய்து மேற்கூறிய தூள்கள், புளி, உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.] மிதமான சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு பொரிய விடுங்கள்.

2. மீன் ஒரு பக்கம் பொரிந்து வந்ததும் அடுத்த பக்கம் திருப்பி பொரிய விடுங்கள்.

3. இரண்டு பக்கமும் பொரிந்ததும், மீனை எடுத்து எண்ணெயை வார விட்ட பின்னர் பரிமாறுங்கள்.

* மீன் பொரிக்கும் போது கொஞ்ச வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீள வாக்கில் பொரித்து எடுத்தாலும் நல்ல சுவையாக இருக்கும் என நான் சொல்லியா நீங்க தெரிஞ்சுக்கணும்!

* இன்று நான் சமைத்ததை உலகிற்கு சொல்ல வேண்டும் என்றால் மீன் பொரியலுக்கும் செய்முறை போடுவது தப்பில்லை!

Link to comment
Share on other sites

ம்ம்.. மீன் பொரியல் எனக்கு நல்லா பிடிக்கும்... செய்து பார்த்திட வேண்டியது தான்.:rolleyes:

Link to comment
Share on other sites

ம்ம்.. மீன் பொரியல் எனக்கு நல்லா பிடிக்கும்... செய்து பார்த்திட வேண்டியது தான்.:rolleyes:

எனக்கும் பிடிக்கும்..பொரியல் இல்லாட்டி சாப்பிட கஸ்டமா இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயாக்கா,

கரைத்த புளி எதற்கு?? கறி வைக்கவா?? :rolleyes:

பொரியலுக்கும் புளி விடுவதா???

நான் மீன் சாப்பிடுவதில்லை ஆனால் அம்மா சமைக்கும் போது பார்த்திருக்கேன். புளி விடுவதில்லையே.

Link to comment
Share on other sites

எனக்கு சோற்றுடன் கலந்து சாப்பிட மீன்பொரியல் நல்ல விருப்பம். ஆனால் வீட்டிலையும் சரி, எங்காவது விருந்துக்கு போகிற உறவினர், நண்பர் வீடுகளிலையும் சரி வழமையாய் குழம்பாய்தான் போடுவீனம். மீனை முதலில பொரிச்சுப்போட்டு பிறகு குழம்புக்கறி ஆக்குவீனம். பொரியலில இருக்கிற சுவை குழம்பில இருக்காது. பெரும்பாலும் ஏன் பொரியலாய் செய்யாமல் குழம்புக்கறி ஆக்குறீனம் எண்டு விளங்க இல்லை. மீன் துண்டுகள் தாராளமாக இல்லாதபடியால பற்றாக்குறை காரணமாய் இப்பிடி செய்யுறீனமோ என்னமோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுக்குளா, பாரை, சீலா மீன்களில பொரியல் செய்தா வீட்டில நானே அரைப் பானை சோத்தையும் மீன் பொரியலோடையே சாப்பிட்டு முடிச்சுப் போடுவன். :D

இணைப்புக்கு நன்றி தூயா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ரொம்ப நாளா தூயாவைக் காணவில்லையே என்று பார்த்தேன்.

மீன் பிடிக்கவா போயிருந்தீர்கள்.

இந்த எண்ணையை கண்ணில காட்ட மாட்டேன்ங்கிறாங்க.மற்றப்படி மீன் பொரியல் என்றால் சட்டிக்குள் இறங்கி விணையாடுவோமில்ல.

Link to comment
Share on other sites

இதையும் செய்து பாருங்கள் .... எது உருசி என்று சொல்லுங்கள்!

1)மீனை பொரிக்கும் முன் கொஞ்ச உப்புப்போட்டு தண்ணீரில் அவிய விடுங்கள் ... பின் எடுத்து தூளோ , சேர்க்க வேண்டியதை சேர்த்து பொரியுங்கள் ...

2) குழம்புக்குள்(கறி) இருக்கும் மீன் துண்டை எடுத்து பொரித்துப் பாருங்கள் ...

... நாங்கள் இப்போ, அடுப்படிப்பக்கம் போவதில்லை, ஆனால் சமையளில் எக்ஸ்பேட்! :D

Link to comment
Share on other sites

2) குழம்புக்குள்(கறி) இருக்கும் மீன் துண்டை எடுத்து பொரித்துப் பாருங்கள் ...

நல்ல ஐடியா மாதிரி இருக்கிது, அம்மாவை கேட்டு சொல்லிறன். வித்தியாசமான ருசியாய் இருக்கும் எண்டு நினைக்கறன்.

Link to comment
Share on other sites

தூயாக்கா,

கரைத்த புளி எதற்கு?? கறி வைக்கவா?? :rolleyes:

பொரியலுக்கும் புளி விடுவதா???

நான் மீன் சாப்பிடுவதில்லை ஆனால் அம்மா சமைக்கும் போது பார்த்திருக்கேன். புளி விடுவதில்லையே.

மீனுக்கு இவை தான் மசாலா. மன்னிக்கவும் முன்னர் எழுத மறந்துவிட்டேன். பொரியலுக்கு பொதுவாக புளிவிட மாட்டார்கள். ஆனால் விட்டு பொரித்தால் சுவையாக இருக்கும். இந்திய உணவகங்களில் இப்படி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

எனக்கு சோற்றுடன் கலந்து சாப்பிட மீன்பொரியல் நல்ல விருப்பம். ஆனால் வீட்டிலையும் சரி, எங்காவது விருந்துக்கு போகிற உறவினர், நண்பர் வீடுகளிலையும் சரி வழமையாய் குழம்பாய்தான் போடுவீனம். மீனை முதலில பொரிச்சுப்போட்டு பிறகு குழம்புக்கறி ஆக்குவீனம். பொரியலில இருக்கிற சுவை குழம்பில இருக்காது. பெரும்பாலும் ஏன் பொரியலாய் செய்யாமல் குழம்புக்கறி ஆக்குறீனம் எண்டு விளங்க இல்லை. மீன் துண்டுகள் தாராளமாக இல்லாதபடியால பற்றாக்குறை காரணமாய் இப்பிடி செய்யுறீனமோ என்னமோ.

பொரிச்சு போட்டு குழம்பு வைக்கிறதை இன்றுவரை நான் சாப்பிட்டதில்லை. எப்படி இருக்கும்? ஆனாலும் பொரித்த மீன் சுவைக்கு வராது எதுவுமே!!

அறுக்குளா, பாரை, சீலா மீன்களில பொரியல் செய்தா வீட்டில நானே அரைப் பானை சோத்தையும் மீன் பொரியலோடையே சாப்பிட்டு முடிச்சுப் போடுவன். :unsure:

இணைப்புக்கு நன்றி தூயா :rolleyes:

அரைப்பானை சோறை சாப்பிட்டு போட்டு அம்மாட்ட அடி வாங்கின ஆள் நீங்க தானா? கிகிகிகி

என்ன ரொம்ப நாளா தூயாவைக் காணவில்லையே என்று பார்த்தேன்.

மீன் பிடிக்கவா போயிருந்தீர்கள்.

இந்த எண்ணையை கண்ணில காட்ட மாட்டேன்ங்கிறாங்க.மற்றப்படி மீன் பொரியல் என்றால் சட்டிக்குள் இறங்கி விணையாடுவோமில்ல.

கிகிகி ஓமோம் மீன் பிடிக்க தான் போனனான். பிடிச்சு பிடிச்சு பொரிச்சு சாப்பிட்டு கொண்டே இருந்திட்டன். இப்ப தான் கொஞ்ச மீனை பிடிச்சு கொண்டு வீட்டுக்கு வந்திட்டன்...

Link to comment
Share on other sites

இதையும் செய்து பாருங்கள் .... எது உருசி என்று சொல்லுங்கள்!

1)மீனை பொரிக்கும் முன் கொஞ்ச உப்புப்போட்டு தண்ணீரில் அவிய விடுங்கள் ... பின் எடுத்து தூளோ , சேர்க்க வேண்டியதை சேர்த்து பொரியுங்கள் ...

2) குழம்புக்குள்(கறி) இருக்கும் மீன் துண்டை எடுத்து பொரித்துப் பாருங்கள் ...

... நாங்கள் இப்போ, அடுப்படிப்பக்கம் போவதில்லை, ஆனால் சமையளில் எக்ஸ்பேட்! :rolleyes:

உப்போடு சில மிளகுகளையும் சேர்த்து அவித்து எடுத்த மீனை பொரித்தால் நன்றாக இருக்கும். முயற்சி செய்து பார்த்துள்ளீர்களா?? இப்ப சமையல்கட்டிற்கு போவதில்லை என்றால்? முன்னர் சமைப்பீர்கள் போல?!!! செய்முறைகளை பகிரலாமே!!

ஹாய் அட்டில் உலையரிசி.....!? :unsure: சேச்சே... அட்டில் கலையரசி நலமா?

புரியவில்லை?!!! :D

Link to comment
Share on other sites

இதையும் செய்து பாருங்கள் .... எது உருசி என்று சொல்லுங்கள்!

...

2) குழம்புக்குள்(கறி) இருக்கும் மீன் துண்டை எடுத்து பொரித்துப் பாருங்கள் ...

அதே போல், ஓரளவுக்கு பொரிந்த மீனை எடுத்து குழம்பு வைத்தாலும் அருமையாக இருக்கும்..

Link to comment
Share on other sites

'ஒரு பத்திரத்தில் எண்ணெயை விட்டு சூடாக்கி கொள்ளுங்கள்.'

புதுமையான செய்முறை. வீட்டிற்கு வெளியே செய்வதுதான் பாதுகாப்பு. :rolleyes:

Link to comment
Share on other sites

பொரிச்சு போட்டு குழம்பு வைக்கிறதை இன்றுவரை நான் சாப்பிட்டதில்லை. எப்படி இருக்கும்? ஆனாலும் பொரித்த மீன் சுவைக்கு வராது எதுவுமே!!

பொரித்த மீனிண்ட சுவை வராதுதான். ஆனாலும் அது ரூ இன் வன் எண்டு சொல்லுறீனம். நீங்களும் ஒருக்கால் ரை பண்ணி பாருங்கோ தூயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயாக்கா,

கரைத்த புளி எதற்கு?? கறி வைக்கவா?? :lol:

பொரியலுக்கும் புளி விடுவதா???

நான் மீன் சாப்பிடுவதில்லை ஆனால் அம்மா சமைக்கும் போது பார்த்திருக்கேன். புளி விடுவதில்லையே.

வணக்கம் ஜீவா அண்ணா..

நானும் உந்த பெரிசுங்கள் சமைக்கேக்க எட்டி எட்டி பார்க்கிறனான் குசினியை இட சுக்கம் <_< .. ஆனால் ஒருதரும் கரைத்த புளி பொரிச்ச மீனுக்கு விட்டதா தெரியல‌ :D .. சரி தூயாக்கா சொல்லிட்டா தானே ஒருக்க பெரிசுங்களிட்டை போய் சொல்லி பார்ப்போம் இப்படியும் மீன் பெரியல் செய்யலாமாம் என்று.. அதுங்க என்ன சொல்லினம் என்று பார்ப்போம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை தூயா, கனகாலமாக யாழ்பக்கம் உங்களைக் காணவில்லை. நீங்கள் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டு வைத்தியசாலையில் இருந்தீர்களோ?

Link to comment
Share on other sites

'ஒரு பத்திரத்தில் எண்ணெயை விட்டு சூடாக்கி கொள்ளுங்கள்.'

புதுமையான செய்முறை. வீட்டிற்கு வெளியே செய்வதுதான் பாதுகாப்பு. :(

எழுத்து பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றிகள்.

பொரித்த மீனிண்ட சுவை வராதுதான். ஆனாலும் அது ரூ இன் வன் எண்டு சொல்லுறீனம். நீங்களும் ஒருக்கால் ரை பண்ணி பாருங்கோ தூயா.

நிச்சயமாக...:D நன்றி

பிள்ளை தூயா, கனகாலமாக யாழ்பக்கம் உங்களைக் காணவில்லை. நீங்கள் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டு வைத்தியசாலையில் இருந்தீர்களோ?

கிகிகிகி அதே அதே...நலமா கந்தப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிகிகிகி அதே அதே...நலமா கந்தப்பு?

நீங்கள் சமைத்த சாப்பாடு சாப்பிடாததினால் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

நீங்கள் சமைத்த சாப்பாடு சாப்பிடாததினால் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

அப்படியா? விரைவில் கொஞ்சமாக உடாங் சம்பல் அனுப்புகின்றேன்...கிகிகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஜீவா அண்ணா..

நானும் உந்த பெரிசுங்கள் சமைக்கேக்க எட்டி எட்டி பார்க்கிறனான் குசினியை இட சுக்கம் :lol: .. ஆனால் ஒருதரும் கரைத்த புளி பொரிச்ச மீனுக்கு விட்டதா தெரியல‌ :blink: .. சரி தூயாக்கா சொல்லிட்டா தானே ஒருக்க பெரிசுங்களிட்டை போய் சொல்லி பார்ப்போம் இப்படியும் மீன் பெரியல் செய்யலாமாம் என்று.. அதுங்க என்ன சொல்லினம் என்று பார்ப்போம் :wub:

கிறுக்கு பையா?????

நீங்களும் சமையல் கட்டு பக்கம் எட்டி பார்க்கிறிங்களோ

நம்ப முடியலையே :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறுக்கு பையா?????

நீங்களும் சமையல் கட்டு பக்கம் எட்டி பார்க்கிறிங்களோ

நம்ப முடியலையே :)

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.