Jump to content

தமிழ் கொலைக் களம் – இளமாறன்


Recommended Posts

நாம் ஒருமுறை ஏடிஎம் என்று சொல்லக்கூடிய தானியங்கி காசளர் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள். ஆனால் மருந்துக்குக்கூட ஒரே ஒரு வார்த்தையை தமிழில் பயன்படுத்தவில்லை. எமக்கு வியப்பைவிட ஆத்திரம் பொங்கி வந்தது. அவர்களுக்கு தமிழ்பேச தெரியாமல் இருந்தால் அப்படி ஒரு அந்நிய மொழியில் பேசுவதை நாம் எந்த விதத்திலும் தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பேச்சு என்பது அவர்களின் விடுதலை உணர்ச்சி. அதில் தலையிடும் அளவிற்கு நாம் நாகரீகம் அற்றவர்கள் அல்ல. ஆனால், நமது முகவரியான நமது அடையாளத்தை நாம் இழந்து, அந்நிய முகத்தை அணிந்து கொள்வதை நம்மால் தாங்க முடியவில்லை. இன்று தமிழ்நாடெங்கும் இந்த தரங்கெட்ட நிலை செழித்தோங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழில் பேசுவது ஏதோ தவறான போக்கு என்றோ, அல்லது கீழ்த்தரமானது என்றோ ஒரு மனநிலை நமது மக்களிடம் ஆழமாக பதிந்துவிட்டது. ஆகவே ஆங்கிலம் பேசுபவர்களை அவர்கள் பெரும் மேதாவிகள் என்று கணிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒருமுறை ஒரு பகல் வேளையில் ஆங்கில பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்த ஒரு இளம்தாய், அந்த குழந்தையை கண்டபடி திட்டிக் கொண்டே அடித்தார். எமக்குப் புரியவில்லை. சிறு குழந்தைகளை அடிப்பதென்பது குழந்தைகளின் மனவோட்டத்தை, அவர்களின் சிந்தனையை, அவர்களின் செயல்திறனை முறிப்பதற்கு சமமாகும்.

நமக்கு அறிமுகம் இல்லாதவர் என்றாலும்கூட, குழந்தையை அடிப்பதை நாம் தடுக்காமல் இருக்க முடியாது. ஆகவே அவரிடம் சென்று குழந்தையை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, அந்த தாய் கூறிய பதில் எம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு சாதாரண குடிசைப் பகுதியில் வாழும் ஒரு பெண், அந்த பகுதியிலிருந்து குழந்தையை பள்ளிக்கு அனுப்புகிறார். அந்த தாயின் ஏக்கமெல்லாம் ஒன்றுதான். அந்த குழந்தை தம்மை மம்மி என்று அழைக்கவில்லையாம். ஏராளமான பண செலவு செய்தும், பள்ளிக்கான சிறப்பு கட்டணங்கள் செலுத்தியும்கூட, அந்த குழந்தை தம்மை மம்மி என்று அழைக்காமல் அம்மா என்று அழைத்தால்தான் அந்த தாய் வேதனையுடன் தமது குழந்தையை கடிந்து கொண்டதும், அடித்ததும் என்ற செய்தி நமக்கு இதயத்தில் தேள் கொட்டியதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

இது ஏதோ இங்கே அங்கே நடைபெறும் நிகழ்வுகள் அல்ல. மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் நமக்கு ஒரே செய்தியை சொல்கிறது. அது நமது மொழி, நமக்கான அடையாளம் இல்லை என்பதுதான். உலகெங்கும் வாழும் ஒரு இனம், தமது மொழி அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறதே இதற்கான காரணம்தான் என்ன? இன்று தமிழ்நாட்டில் வந்தேறிகளாக இருக்கும் வேறு இன மக்கள் வர்த்தகத்திற்காக தமிழ் எனும் மொழி அடையாளத்தை முகமூடியாக அணிந்துகொண்டு தம்மை உயர்த்திக் கொண்டே இருக்கும்போது தமிழர்கள் தமக்கான உயிர் வாழ்வை என்று சொல்வதைவிட, தமது அருட்கொடையை இழந்து கொண்டிருக்கிறார்களே இதை முறியடிக்கவே முடியதா? என்ற எண்ணம் நமக்குள் ஒவ்வொரு நாளும் எரிந்துகொண்டே இருக்கிறது. நாம் நேரிடையாகவே குற்றம் சாட்டுகிறோம்.

மொழி சொல்லி, இனம் சொல்லி, ஆட்சிக்கு வந்த திமு கழகம்தான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். 1967ஆம் ஆண்டு தமிழர்களுக்கான ஆட்சி என்று நாமெல்லாம் இறுமார்ந்து கொண்டிருந்த காலத்தில் கடந்த ஆட்சியே பரவாயில்லை என்பதுபோன்ற ஒரு நிலையை இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது. கடந்த 43 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சிகளில் தமிழ் மெல்ல மெல்ல தேய்ந்து இன்று எலும்புருக்கிக் கண்ட மேனியாக காட்சியளிக்கிறது. இதுகூட பரவாயில்லை. ஆனால் தமிழ் பேசுவது மிகவும் கேவலமானது என்கிற மனப்போக்கு உருவாகி இருக்கிறதே, இதுதான் நமது மொழி குறித்த எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி இருக்கிறது.

உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய தமிழ்நாட்டில் தமிழ் பள்ளிகளை விட, ஆங்கில பள்ளிகளே அதிகரித்து, ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த மம்மி-டாடி கல்விக் கூடங்கள் நமது இளம் குருத்துக்களை அழித்தொழித்து, அந்த நாக்களில் தமிழ் வராமல் முடக்கிப்போடும் கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அடிப்படை அற்ற வாழ்வியல், தமது பொருளாதாரத்திற்கு அதிகமான கல்வி கட்டணங்கள் என தமிழ் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி வைத்து அவர்களை பிரிட்டிஷ் காரர்களாக மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கில மொழியின் அடிமைகளாக நமது குழந்தைகள் தொடர்ந்து அந்த ஆங்கிலகூடங்களில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது கல்விக் கூடங்கள் அல்ல, தமிழின் கொலைக்கூடங்கள். அங்கேதான் நமது தமிழுக்கு சமாதி கட்டுவது தொடங்குகிறது. நமது பெற்றோர்கள் தமிழை சுமந்து கொண்டுபோய் அந்த கூடங்களிலே புதைப்பதற்கு தமது பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். இதை முறியடித்து, மாற்றி, மொழி காக்க, உழைக்க வேண்டிய தமிழக அரசு, ஏராளமான ஆங்கில பள்ளிகளுக்கு அனுமதி அளித்து தமிழை மெல்ல மெல்ல கொல்வதற்கு உறுதுணை புரிகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

அதற்கான பொருட் செலவுகள், திட்டமிடல்கள், அரசு தளவாடங்களில் அதிரடி செயல்கள் என மிக வேகமாக நடைபெற இருக்கும் இச்செம்மொழி மாநாடு நமக்கு மிகப்பெரிய கேள்வியை முன்வைக்கிறது. 43 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இந்த இரண்டு திராவிட கட்சிகள்தானே ஆட்சியிலே இருந்தது. 43 ஆண்டுகள் என்பது சற்றேறக்குறைய அரைநூற்றாண்டு காலமல்லவா? நாம் கடந்து வந்த இந்த அரை நூற்றாண்டு காலத்திலே நமது மொழிக்கான அடையாளத்தை, நமது மொழி தேசியத்தை, நமது மொழி இன உணர்வை, நமது மொழியின் மானத்தை, நமது மொழியின் உயிரை உயர்த்தி பிடிக்க இந்த அரசு செய்தது தான் என்ன? இதுவரை நமது உயர்நிலைக் கல்விகளில் குறிப்பாக, அறிவியல், வேதியியல், இயற்பியல், புவியியல், பொறியியல், மருத்துவ இயல், ஆழ்கடல் ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி என ஏதாவது ஒரு கல்வி நமக்கு தமிழிலே அளிக்கப்பட்டதா?

சாதாரணமாக நமது பிள்ளைகளுக்கு பயிற்சி மொழியாகவாவது தமிழை முன்னிலைப்படுத்தினார்களா? நாம் தமிழர்கள் என்பதற்கான அடையாளத்தையாவது ஏற்படுத்த முனைப்புக் காட்டினார்களா? இப்போது சென்னை மாநகராட்சியிலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். அத்தீர்மானம் சொல்கிறது, வர்த்தக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகைகளில் தமிழை முதல் மொழியாக எழுத வேண்டும் என்று. ஒரு நாட்டில் அரைநூற்றாண்டு காலமாக தமிழ் பெயர் சொல்லி தம்மை நிலைநிறுத்திக் கொண்ட இந்த மண்ணில், ஒரு நிறுவனத்திற்கு பெயரை தமிழில்தான் வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுவதற்கே இப்போதுதான் விருப்பம் தெரிவித்திருக்கிறது என்றால் தமிழின்மீது இந்த அரசிற்கு எவ்வளவு பெரிய விருப்பம் இருக்கிறது என்பதை நாம் இந்த நேரத்திலே எண்ணி பார்க்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

மேலும் தமிழ் திரைப்படங்களுக்கு பெயர்களை தமிழில் வைத்தால் அதற்காக அரசு மானியம் வழங்கும். தமிழ் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால், அரசு பரிசளிக்கும் என்பதெல்லாம் மேலோட்டமாக பார்த்தால் ஏதோ தமிழ் மீது கொண்ட அக்கறை போன்று தோன்றலாம். ஆனால் இது தமிழுக்குக் கிடைத்த அவமானம், தமிழுக்கு நாம் செய்கிற தீச்செயல் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. காரணம் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது நமது இனத்தை முன்னிலைப்படுத்துவதற்காக. தமது இன அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக செய்யப்படும் ஒரு சிறந்த செயலாகும். காரணம் பெயரை வைத்து இவன் எந்த இனத்தைச் சார்ந்தவன் என்பதை அறிந்து கொள்வதற்கு அந்த குழந்தைகளுக்கு சூட்டப்படும் அடையாளமே பெயர்களாகும்.

உலகநாடுகளில் ஜெர்மனியிலும், ஜப்பானிலும், சீனத்திலும், அமெரிக்காவிலும் வேறு எந்த நாடுகளிலும் கண்மணி, கயல்விழி, இளமாறன், இளவேனில் போன்ற பெயர்களை சூட்டிக் கொள்வது கிடையாது. அல்லது அவர்கள் கூறிக் கொள்கின்ற இந்திய நாட்டில் வேறொரு வடஇந்திய மாநிலங்களில் நாம் மேலே குறிப்பிட்ட எந்த பெயரையும் விரும்பி தமக்கான பெயர் அடையாளமாக ஏற்பதும் கிடையாது. ஆனால் தமிழன் மட்டும் தமது பெயரை ரிஷி, ருச்சி இன்னும் நமது நாவிலே நுழையாத அளவிற்கெல்லாம் ஏதேதோ சூட்டிக் கொள்கிறானே நாளடைவில் இவன் பெயரைக் கேட்டு இவன் எந்த இனத்தை சேர்ந்தவன் என்பதை எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது? பேசுவதும் தமிழல்ல, பெயரும் தமிழல்ல. அப்படியானால் இவன் வாழ்வும் தமிழாக இருக்கப் போவது கிடையாது.

காரணம் இவன் வாழ்வாக கருதுவது பீசா கார்னர்களையும் மற்றும் துரித உணவகங்களையும். அப்படியிருக்க அவனுக்கான அடையாளம் என்று ஒன்றுமே இல்லாமல் அவனே துடைத்தெறியும்போது நாளைய தமிழின அடையாளம் எப்படி விழித்திருக்கும் என்பதை இந்த காலத்திலும்கூட இவ்வளவு நெருக்கடியான நிலையிலும்கூட நாம் சிந்திக்க தவறுவோமேயானால் நமது வாழ்வு மட்டுமல்ல, நமது இனமும் அடையாளம் தெரியாத நிலைக்கு அடித்துச் செல்லப்படும் என்பதை வருத்தத்துடன் நாம் இங்கே பதிவு செய்கிறோம். உலகெங்கும் வாழ்ந்த பல்வேறு இனங்கள் முதலில் தம்மை அழித்துக் கொண்டது தமக்கான மொழியை இழந்ததின் மூலம்தான். இன்று அந்த மொழி பேசிய இனங்கள் இருக்கிறதா? என்கின்ற கேள்வி இருக்கிறது. ஆகவே நமது மொழியை காக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

ஒவ்வொரு நாளும் நாம் உறுதியாக முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலைப்பாடு என்னதென்றால், நான் தமிழன். எனக்கான ஒரு மொழி இருக்கிறது. எனக்கென்று இலக்கணம், இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் அனைத்தும் தனித்தன்மையோடு சிறந்து எனக்குள் புதைந்து இருக்கிறது. இது எம்முடைய மூதாதையர் எம்மை காக்க விட்டுச் சென்ற சிறப்பு சொத்துக்கள். இதை நான் சுமக்கவில்லை, மாறாக அனுபவிக்கிறேன். இதை சுவைத்துப் பார்க்கிறேன். அதை அனுபவித்து மகிழ்கிறேன் என்கின்ற உணர்வு நமக்குள் எழ வேண்டும். இந்த உணர்வு நம்மை, நமது மொழியை, நமது இனத்தை, நமது கலாச்சாரத்தை செழித்து வளர துணைபுரிய வேண்டும்.

தமிழர்கள், தமிழர்களோடு பேசும்போது தமிழில் பேசுங்கள். தமிழர்கள், தமிழர்களுக்கு எழுதும்போது தமிழில் எழுதுங்கள். நாம் எந்த நேரத்திலும் பிற இனத்திற்கோ, பிற மொழிக்கோ எதிரிகள் அல்ல. ஆனால் அதே நேரத்தில் எமது மொழியை நாம் காப்பதற்கும், எமது இனத்தை காப்பதற்கும், எந்த நேரத்திலும் பின்வாங்கப் போவதும் இல்லை என்பதை உறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள். பிற மொழிகளை கற்றுக் கொள்வதற்கு விரும்புங்கள். ஆனால் நம் மொழியை புறக்கணித்து விடாதீர்கள். உலகெங்கும் எத்தனையோ தாய்மார்கள் இருக்கிறார்கள். ஆனால் உன் தாய் மட்டும்தான் உன்னை கருத்தரித்தவள். உன்னை பிரசவித்தவள். அவளுக்குத்தான் தெரியும், உன்னை சுமந்ததற்கான அடையாளமும், உன்னை கருத்தரித்ததின் வலியும்.

ஆகவே நமது தாயை நேசியுங்கள். நமது தாயை விட மேலாக தமிழை நேசியுங்கள். நமது மொழி அழியாமல் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நமது பிள்ளைகளை தமிழ் பிள்ளைகளாக வளர்த்திடுங்கள். அவர்களுக்கு இனமான உணர்வை ஊட்டிடுங்கள். இதுதான் நாம், நமது இனத்திற்கு செய்யும் நன்றி கடனாகும்.

http://meenakam.com/2010/03/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%a9/

Link to comment
Share on other sites

நல்ல விடயங்கள் உண்மைகள் கசப்பானதாகவேயிருக்கும்.

Link to comment
Share on other sites

யதார்த்தை பிரதி பலிக்கும் கட்டுரை. ஆனால் இதற்கு வழி தேட வேண்டியவர்களும் நாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது..."தமிழா நீ பேசுவது தமிழா....."

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.