Jump to content

அப்பெ ரட்ட (எங்கன்ட நாடு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"வெடி தியபங் ,ஒக்கம கொட்டியா,காண்டா...." என்று 2ஆம் லெப்டினட் பண்டாவின் குரல் கேட்க அவனின் கட்டளையை மதித்து கீழ் பணிபுரியும் சிப்பாய்கள் துப்பாக்கியால் சாரமாரியாக் சுட்டார்கள்.மக்கள் பதட்டத்தால் நாலாபக்கமும் சிதறிஅடித்து கொண்டு ஒடினார்கள்.ஒடமுடியாதவர்கள் அந்த இடத்திலயே வீழ்ந்து மடிந்தார்கள். பண்டா தனது மேல் அதிகாரிக்கு 6 புலிகளை சுட்டு கொண்று விட்டதாக தகவல் அனுப்பினான்.அவனை பாராட்டிய மேல் அதிகாரி ,இறந்தவர்களின் உடம்பை பெற்றொல் ஊத்தி எரித்துவிடும்படி கட்டளை இட்டான்.

"மாத்தையா மே ஒக்கம நாக்கிய மினிசு பவ்"(இவர்கள் எல்லாம் வயசு போன கிழடுகள் பாவம்)ஒட முடியாமல் வீழ்ந்து செத்துபோட்டுதுகள் என்றான் ஒரு சிப்பாய்.2ஆம் லெப்டினட் பண்டாவுக்கு கோபம் வந்துவிட்டது,இவன்கள்தான் அந்த கொட்டிகளை பெத்து போட்டவன்கள் ஆனபடியால் இவன்களும் கொட்டிதான்...இங்கு நான் சொல்லுவது தான் சட்டம் நீ எனக்கு கீழ்பணிபுறியும் சிப்பாய் .நான் உன்மேல் அதிகாரி என்று மிரட்டலாக கூறினான்.அத்துடன் அவனுக்கு தண்டனையும் கொடுத்தான்.இறந்தவர்களின் உடல்களை எரிப்பது உனது வேலை என்றான்.

"மேக்க அப்பெ ரட்ட" தமிழன்கள் இங்க கள்ளதோணியில் வந்தவன்கள் அவன்களை அழிக்க வேண்டும் என்று தனக்கு கீழ் பணிபுரியும் இராணுவத்திற்கு சொல்லியவண்ணமே இருந்தான்.

6புலிகளை கொண்றவன் என்றபடியால் உயரதிகாரிகளுக்கு பண்டா மீது நம்பிக்கை பிறந்துவிட்டது.சுற்றிவளைப்புகள்,கைதுகள் என்று வரும்பொழுது பண்டாவைத்தான் அதிகாரிகள் அனுப்புவார்கள்.அப்பாவிகளை கைது செய்வான்,நீ கொட்டிதானே உண்மையை சொல் என சித்திரை வதை செய்வான்,ரோந்து செல்லும் பொழுது டிரக் வண்டியை பார்த்து பயந்து ஒடுபவர்களை சுட்டு கொலை செய்து போட்டு புலிகள் தப்பி ஒடினார்கள் சுட்டுக் கொண்றுவிட்டேன் என்று அதிகாரிகளுக்கு சொல்லுவான் அவர்களும் விசாரனை எதுமின்றி பாராட்டுவார்கள்

பண்டாவின் இச்செயல்களால் லெப்டினட் தரத்திற்கு பதவி உயர்தப்படுகிறான்.தரமுயர்த்தப்பட்டவுடனே,இராணுவத்தில் பணிபுரியும் பெண்னை திருமணம் செய்கிறான்.குடும்ப வாழ்க்கையின் பயனாக இரு ஆண்குழந்தையும் ஒரு பெண்னும் புத்தனின் அருளால் கிடைக்கிறது.தெய்யனபிட்ட மூவரும் தாயாருடன் சொந்த ஊரில் வளர்ந்து வரும் வேளையில் பண்டா தமிழர் தாயகத்தில் தமிழர்களை புலி என்ற போர்வையில் அழித்து பல பதக்கங்களும் ,விருதுகளும் பெற்று பதவி உயர்வடைகிறான் .

.

விடுதலை நாட்களில் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் பொழுது "மெக்க அப்பே ரட்ட " என்று சொல்லி சிங்கள இனவாதகருத்துக்களை புகட்டுவான்.

ஒருநாள் கப்டன் பண்டாவை தாயார் அழைத்து உனக்கு ஒரு உண்மை தெரியுமோ? உன்னுடைய சியாவின் தாத்தே(அப்பப்பா வின் அப்பா தமிழன்) தெமிழு என்று சொல்ல இவனால் அதை ஜீரணிக்கமுடியவில்லை.....தங் மம சிங்களய.....மெக்க அப்பெ ரட்ட.......என்று சொல்லிய படியே தாயாருக்கு பதில் அளிக்காமல் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.

மகன்மார் இருவரையும் க.பொ.உயர்தரமுடிந்தவுடனே "கொத்தலாவ டிவன்ஸ் அகடமியில்" தனது செல்வாக்கை பயன்படுத்தி சேர்த்துவிடுகிறான்.இருவரையும் விமானப்படை அதிகாரியாக வரவேண்டும் அதற்கான பயிற்சியில் ஈடுபம்படி அன்புகட்டளையிடுகிறான்,இதன் மூலம்தான் புலிகளின் முக்கிய இடங்களை குண்டு போட்டு அழிக்கலாம் வவுனியாவில் பணிபுரியும் மேஜர் பண்டா கிழக்கு பிராந்தியத்திற்கு லெப்டினட் கேர்ணலாக பதவி உயர்வுடன் மாற்றலாகி செல்கிறான்.இவனினது கொடூர சித்திரவதைகள் காரணமாக இவனுக்கு ஒரு பட்டபெயரும் உண்டு அதாவது புள் பண்டா .சாதாரணமக்கள் இவனை புள் பண்டா என்று தான் தங்களுக்குள் கதைத்துக் கொள்வார்கள்.

கிழக்கில் பல தாக்குதல்களை நடத்தி கிழக்கின் கட்டளை அதிகாரியாகிறான் கேர்ணல் பண்டா...

புலிகளின் கன்னி வெடித்தாக்குதலில் ஒரு கண்ணயும் ஒரு காலையும் இழக்கிறான் கேர்ணல் பண்டா தொடர்ந்து பணி செய்ய முடியாததால் பிரிகேடியர் பண்டா என்ற பதவியுடன் புள் பண்டா ஒய்வு பெறுகிறான்.

மகன் பிரியங்க சுமன பண்டா வன்னியில் குண்டு மழை போடப்போகும்பொழுது புலிகளின் விமானஎதிர்ப்பு பீரங்கி படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு மரணமடைகிறான்.

தனது இழப்புக்களை பற்றிய கவலையில் இருக்கும் பொழுது இராணுவ பொலிசார் அவனது வீட்டை வருகிறார்கள்.புலிகளுக்கு இராணுவம் பற்றிய சில தகவல்களை வழங்கியமைக்காக விசாரனை செய்ய வேண்டும் என அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகிறான்.

சில சிங்கள பத்திரிகைகளை இராணுவீரன் ஒருவன் கொடுக்கின்றான்....

செய்திகளின் தலையங்களை வாசிக்கின்றான் ,எல்லாம் கொட்டிகளின் செய்தியாக இருக்கின்றன.

புலிகளின் தளபதியின் தாயார் வெளிநாடு பயணம்.

புலிகளின் தளபதி முதலமைச்சர்.

புலிகளின் தளபதி கட்சியின் உபதலைவர்,

புலிகளின் தளபதி ஜனதிபதியின் பிராந்திய ஆலோசகர்

புலிகளின் தளபதியின் மனைவி மேயர் ....

புலிகளின் தளபதி ஜனாதிபதி வேட்பாளர்.

"அப்பெ ரட்ட அப்பெ மினிசு "என்று எனது மகனை இழந்தேன் ,காலையும் ,கண்ணையும் இழந்தேன் ..தங் மம அத்துள(உள்ளே) கொட்டி ஒக்கம எளிய(வெளியில்) கத்தியவன் நெஞ்சை பிடித்தபடியே நிலத்தில் வீழ்ந்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்!

உண்மையிலையே சொல்லுறன்

நீங்கள் எங்கையோ போயிட்டிங்கள்!

ஆனால் இஞ்சை என்னைப்போலை கொஞ்சம்

நிண்ட இடத்திலையே நிண்டு அரைச்சுக்கொண்டுதான் நிக்கிறம்

Link to comment
Share on other sites

புத்தன் சும்மா சொல்லககூடாது பக்கத்திலை நிண்டிருந்தால் அப்பிடியெ கட்டிப்பிடிச்சு ஒரு உம்மா தந்திருப்பன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் அண்ணா சூப்பர்.

ஒரு பச்சைப்புள்ளி வழங்கி இருக்கு

அப்புறம் கு.சா தாத்தா வின் கருத்து தான் எனதும். அதனாலை கு.சா தாத்தாக்கும் ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்,ரொம்ப வித்தியாசமாய் சிந்தித்திருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து உண்மையில் இதை எழுதியது யார்?ஜம்மு தானே.

பாராட்டுக்கள் புத்து.

இது சும்மா கதையல்ல.உண்மை கதை.

Link to comment
Share on other sites

புத்தன், உங்கள் கதையின் தரத்தில் உயர்வு தெரிகின்றது. சொற்கள், வசனங்கள், பந்திகளையும் சில நிமிடங்கள் செலவளித்து சீராக்கி சீர்ப்படுத்தப்பட்ட கோர்வைகளாக எழுதினீங்கள் எண்டால் இன்னமும் சிறப்பாய் இருக்கும். சிங்களமும், தமிழுமாய் புகுந்து விளையாடி இருக்கிறீங்கள், பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைய கதை என்னால் தவறாக விளங்கபடுகிறது என்று நினைக்கிறேன்.....

எல்லோரும் பாரட்டுகிறார்கள் ஆக நல்ல கதையாகவிருக்கும் என்றே நம்புகிறேன்.

பெரியார்தாசன் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்....? தனிமனித சிந்தனைகளும் செயற்பாடுகளும் பின்னாளில் கவலைகளை கொடுக்க கூடியவை?

ஏதோ ஒரு இடத்தில் நான் நிற்கிறேன்.

தவிர காரக்டர் சிருஸ்டிப்பு நன்றாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா, கருணா, பிள்ளையான், தலைவரின் தாயார் ஆகியோரை வைத்து சிறப்பாகப் படைத்திருக்கிறீர்கள் புத்தன். வாழ்த்துகள்.

ஈழப்பிரியன் இக்கதையை எழுதியது புத்தன் தான். யம்மு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கற்பனை எல்லாம் புத்தனை தவிர ஒருத்தருக்கும் வராது அதற்காகவே ஒரு பாராட்டுக் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்!

உண்மையிலையே சொல்லுறன்

நீங்கள் எங்கையோ போயிட்டிங்கள்!

எல்லா புகழும் யாழுக்கே ... :D:D கருத்துப்கிர்ந்தமைக்கு நன்றிகள்

புத்தன் சும்மா சொல்லககூடாது பக்கத்திலை நிண்டிருந்தால் அப்பிடியெ கட்டிப்பிடிச்சு ஒரு உம்மா தந்திருப்பன் :(

ஜயோ வெட்கமாய்யிருக்கு... நன்றிகள் சாத்திரி உம்மா தந்தமைக்கு

புத்து பின்னீட்டீங்கள் :D

என்னத்தை கிடுகையோ? நன்றிகள் சஜீவன்

புத்தன் அண்ணா சூப்பர்.

ஒரு பச்சைப்புள்ளி வழங்கி இருக்கு

அப்புறம் கு.சா தாத்தா வின் கருத்து தான் எனதும். அதனாலை கு.சா தாத்தாக்கும் ஒரு பச்சை.

பச்சை குத்தி கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஜீவா

புத்தனுக்கு நன்றிகள். நடைமுறையை கதையாக்கியமைக்கு நன்றி. :D

நன்றி தெரிவித்தமைக்கு நன்றிகள்

நல்லதொரு (நிஜ)கதை தந்தமைக்கு நன்றிகள்...!

வாசித்தமைக்கு நன்றி ஈழமகள்

வாழ்த்துக்கள்,ரொம்ப வித்தியாசமாய் சிந்தித்திருக்கிறீர்கள்.

நன்றிகள் சிற்பி

மாத்தி யோசி டட ட ..மாத்தி யோசி :D:D

புத்து உண்மையில் இதை எழுதியது யார்?ஜம்மு தானே.

பாராட்டுக்கள் புத்து.

இது சும்மா கதையல்ல.உண்மை கதை.

நன்றிகள் ஈழப்பிரியன்.....எவ்வளவு கஷ்டப்பட்டு ,கடற்கரையில் போய் இருந்து சிந்திச்சு எழுதின கதை....என்னை ஒரு படைப்பாளியாக ஏற்கமாட்டியள் போல கிடக்குது(எல்லாம் ஒரு தமாசுக்கு) :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமும், தமிழுமாய் புகுந்து விளையாடி இருக்கிறீங்கள், பாராட்டுக்கள்.

நன்றிகள் மச்சான் குறைகள திருத்தி எழுதமுயற்சிக்கிறேன்...

என்னுடைய அடுத்த கதை கிந்தியும் தமிழும் கலந்து எழுதலாம் என்று யோசிச்சு இருக்கிறேன்...நமஸ்தே ஜீ...அச்சா ஜீ...சுக்கிரியா ஜீ...பேட்டோ ஜீ..

வாசித்தமைக்கு சுக்கிரியா ஜீ....

பெரியார்தாசன் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்....?

ஆகையால் புத்தனும் மதம் மாறக்கூடும் என்று நினைக்கிறீங்களோ? :(:D

நன்றிகள் மருதங்கேணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா, கருணா, பிள்ளையான், தலைவரின் தாயார் ஆகியோரை வைத்து சிறப்பாகப் படைத்திருக்கிறீர்கள் புத்தன். வாழ்த்துகள்.

ஈழப்பிரியன் இக்கதையை எழுதியது புத்தன் தான். யம்மு அல்ல.

என்னை சும்மா இவன்கிளிட்ட மாட்டி விடாதையுங்கோ ...பிறகு நீங்கள் ஒரு தலை சிறந்த படைப்பாளியை இழக்கவேண்டி வரும் :(:D அப்பு அது எல்லாம் சுத்த கற்பனை,எனக்கு பிள்ளையானயும் தெரியாது கருணாவயும் தெரியாது... :D:D

இப்படியான கற்பனை எல்லாம் புத்தனை தவிர ஒருத்தருக்கும் வராது அதற்காகவே ஒரு பாராட்டுக் கொடுக்கலாம்.

நன்றிகள் ரதி ...கருத்துபகிர்ந்தமைக்கு

Link to comment
Share on other sites

நானும் ஒரு பச்சை குத்தியிருக்கிறன். சொரி, நான் முன்வீட்டில இருந்தும் சாத்திரியாரை போல உம்மா தர ஏலாது :(

Link to comment
Share on other sites

சொரி, நான் முன்வீட்டில இருந்தும் சாத்திரியாரை போல உம்மா தர ஏலாது :lol:

ஏன் வாயில காயமா?

Link to comment
Share on other sites

வித்தியாசமான கதை புத்தன். யதார்த்தத்தை நன்கு உணர்ந்து எழுதியுள்ளீர்கள். :lol:

இன்று என்னிடம் குத்துவதற்கு பச்சை புள்ளிகள் இல்லை. பிறகு குத்திவிடுகிறேன் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.