Jump to content

நான் வாழும் மண்!!!


Recommended Posts

வணக்கம் உறவுகளே!

அண்மையில் "எனது ஊர் இலக்கணாவத்தை" http://www.yarl.com/forum3/index.php?showtopic=69896 என்ற தலைப்பில் ஒரு பதிவை இணைத்து உங்களது வரவேற்பை பெற்றுக்கொண்ட நான் உங்களது ஊக்குவிப்பினால் இன்று "வாழும் புலம்" பகுதியில் "நான் வாழும் மண்" என்ற தலைப்பில் நாணறிந்த சில விடயங்களை பதிவு செய்து எனக்கு தெரியாத விடயங்களை உங்களிடம் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னால் இங்கு தரப்படும் தரவுகள் அண்ணளவானவையே தவிர, உறுதியானவை அல்ல.

நான் வாழும் இடம் கனடாவில் (Canada) ஒன்ராறியோ(Ontario)மாநிலத்தில் North பக்கமாக Brampton என்ற இடமாகும், இது Toronto வில் இருந்து கிட்டத்தட்ட 40கிலோமீற்றர் தூரமாகும். இங்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வதிவிடமாக கொண்டுள்ளனர், இந்த தொகையில் கிட்டத்தட்ட எனது கணிப்பின் படி பத்தாயிரம் எமது மக்களும் உள்ளடங்குவர். இங்கும் எம்மவரின் வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள் போன்றவற்றிற்கும் குறைவில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இருப்பினும் Brampton பகுதியின் மொத்த சனத்தொகையில் ஜம்பதுக்கு மேற்பட்ட வீதத்தினர் இந்தியர்கள் தான் உள்ளனர். இங்கே எந்த இடத்திற்கு சென்றாலும் அவர்களின் பிரசன்னமே அதிகமாக இருக்கும்.

Brampton பகுதியில் எண்பது வீதத்திற்கு மேலான கட்டிடங்கள்(வீடுகள், வர்த்தக நிலையங்கள்) வீதிகள் போன்றவை யாவும் நவீன அமைப்பை கொண்ட புதியனவையாகும். சுருக்கமாக சொல்லப்போனால் கனடாவிலையே குறுகிய காலப்பகுதியில் மிக வேகமாக உருவாக்கப்பட்ட ஒரு நவீன நகரம் அல்லது பட்டணம் என்றும் கூறலாம்.

இந்த பதிவில் இங்கு அமைந்துள்ள ஒரு பொது மருத்துவமனை(Brampton Civic Hospital) சம்பந்தமாகவே முக்கியத்துவம் கொடுக்கவுள்ளேன்.

images4e.jpg

இந்த மருத்துவ மனையின் பெயர் William Osler Health Centre ஆகும், இது அமைந்திருக்கும் இடம் 2100 Bovaird Drive East என்ற முகவரியாகும்.http://www.williamoslerhc.on.ca/ இதுபற்றிய மேலதிக விபரங்களை குறிப்பிட்ட இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மருத்துவமனை 2007ம் ஆண்டு October 28ந்திகதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. இது 2.4 கிலோமீற்றர் (Square Kilometres)அதாவது 1.3மில்லியன் Square Feet சுற்றளவை கொண்ட கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களின் வதிவிடத்தினுள் அமைந்துள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகும்.

images7i.jpg

இந்த மருத்துவமனை 479 படுக்கை அறைகளையும் 450 ஊழியர்களையும் கொண்டு ஆரம்பித்து இன்று 570 படுக்கை அறைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இங்கு கிட்டத்தட்ட 2570 வாகன தரிப்பிட வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த மருத்துவமனை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது அதாவது North Building & South Building. North Building ஆறு மாடிகளும், South Building மூன்று மாடிகளைக்கொண்டும் அமைந்துள்ளது.

இது நான்கு நுளை வாயில்களையும், நான்கு Elevators களையும் கொண்டு அமைந்துள்ளது.

lookingwest.jpg

இங்கு நீங்கள் நுளைந்ததும் நீங்கள் கேட்காமலே உதவவென அதிகளவான தொண்டர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி வாசலில் உங்கள் கரங்களில் ஒரு வழிகாட்டி தரப்படும் அதன்படி இலகுவாக உங்களது இடங்களை அடையக்கூடியதாக இருக்கும். பிரதான நுளைவாயிலில் பல பொழுதுபோக்கு சாதனங்கள். உணவகங்கள் போன்றவை தாராளமாகவே உள்ளன சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு மருத்துவமனை என்ற நினைப்பே இல்லாத சூழ்நிலையை இங்கே உணரக் கூடியதாகவுள்ளது.

2010 மார்ச்17ல் காலை 8மணியளவில் எனக்கு மிக வேண்டியவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சையிற்காக நானும். அவரும் இங்கு செல்கிறோம், உள் நுளைந்ததும் எங்கள் கையில் உள்ள பத்திரத்தை காண்பிக்கிறோம், அங்கு கடமையில் இருந்த தொண்டர் எங்களுடன் இணைந்து நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு வந்து, இணைக்க வேண்டியவர்களுடன் இணைத்த பின்பே நகருகிறார் என்றால் புரிந்திருக்கும் தானே.

அறுவைச் சிகிச்சையிற்கு முன்பும் பின்பும் அவர்களது பராமரிப்பு பாராட்டப்பட வேண்டியவை , எல்லோராலும் பாராட்டப்படும் ஜரோப்பிய நாட்டிலை பல வருடங்களாக பல மருத்துவமனைக்கு சென்றிருந்த எனக்கு இவை மிகவும் ஆச்சரியமாகவே இருந்தன.

images6t.jpg

அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு வேளையிலும் உணவு, மருந்துகள் பரிமாறப்பட்ட பின்பு தகவல்கள் சேகரிக்கப்படும் அதாவது என்ன உணவு தரப்பட்டது, எது மிகுதியாக விட்டீர்கள் போன்ற தகவல்கள் குறித்துக்கொள்வார்கள்.

இப்படிப்பட்ட ஒரு மருத்துவமனை நான் வாழும் மண்ணில் இருப்பதையிட்டு பெருமைப்படுகின்றேன்.

இந்த மருத்துவமனை பற்றிய மேலதிக தகவல்கள் பெற ஆர்வமாகவுள்ளவர்கள் http://www.oslerfoundation.org/pdfs/WM_OSL_4PG_JUL06.pdf என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இப்படியான பதிவுகளை எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

தொடர்ந்து இப்படியான பதிவுகளை எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

உங்கள் ஆதரவுக்கும்,கருத்துக்கும் நன்றி அப்பு!!!

Link to comment
Share on other sites

... நீங்கள் எழுதியவைகளை கண்ணால் பார்த்து மகிழ வேண்டும் போலுள்ளது! இயலுமானால் ஒரு விமான ரிக்கட் போட்டனுப்பினால் ... <_<

Link to comment
Share on other sites

நன்றி வல்வை அண்ணா....நானும் இந்த வைத்தியசாலைக்கு 2008ல் போயிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல அவர்களது சேவை மெச்சும்படியாகவே இருந்தது. கனடாவில் பல வைத்தியசாலைகளின் சேவைகள் நன்றாக இருந்தாலும் அவசரப்பிரிவு சேவையில் இன்னும் மாற்றங்கள் தேவை என்பது என் கருத்து. இந்த வைத்தியசாலையில் அவசரப்பிரிவு சேவை எப்படியுள்ளது என்பதை முடிந்தால் அறியத்தாருங்கள். நீங்கள் இருக்கும் நகரத்தின் சிறப்புக்களை மேலும் எடுத்துவாருங்கள். நன்றி

Link to comment
Share on other sites

வல்வை அண்ணை, சுவாரசியமாய் எழுதி இருக்கிறீங்கள், நல்லாய் இருக்கிது. நான் பிரம்டன் வந்து போவதுண்டு. இந்த வைத்தியசாலையை கண்டது இல்லை. மிசிசாகாவில இருக்கிற திரில்லியமும் நல்லாய் வந்திட்டிது என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

... நீங்கள் எழுதியவைகளை கண்ணால் பார்த்து மகிழ வேண்டும் போலுள்ளது! இயலுமானால் ஒரு விமான ரிக்கட் போட்டனுப்பினால் ... :)

பிரச்சினையே இல்லை, விமானச்சீட்டு இங்கிருந்து அனுப்பலாம், பணத்தை உங்கையே செலுத்தக்கூடிய வசதியையும் செய்து தாறனெங்க ஜோசிக்கவே வேண்டாம்.

யாமிருக்க பயமேன்?

உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லையான்!

Link to comment
Share on other sites

நன்றி வல்வை அண்ணா....நானும் இந்த வைத்தியசாலைக்கு 2008ல் போயிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல அவர்களது சேவை மெச்சும்படியாகவே இருந்தது. கனடாவில் பல வைத்தியசாலைகளின் சேவைகள் நன்றாக இருந்தாலும் அவசரப்பிரிவு சேவையில் இன்னும் மாற்றங்கள் தேவை என்பது என் கருத்து. இந்த வைத்தியசாலையில் அவசரப்பிரிவு சேவை எப்படியுள்ளது என்பதை முடிந்தால் அறியத்தாருங்கள். நீங்கள் இருக்கும் நகரத்தின் சிறப்புக்களை மேலும் எடுத்துவாருங்கள். நன்றி

நன்றி சகோதரி ஈழமகள்!

நீங்கள் கூறியதுபோல் உந்த அவசரப்பிரிவு சேவை எங்கும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி தானெங்க, இருந்தும் உள்ளே எடுத்துவிட்டார்கள் என்றால் நல்ல கவனிப்பு.

ஆனால் இந்த மருத்துவமனை அதாவது கனடாவிலையே பச்சை நிலத்தரையில் உருவாக்கப்பட்டதாகும், நல்ல சுவாத்திய பகுதியிலும் அமைந்துள்ளது. போக்குவரத்தும் இலகவானதாகும்.

வல்வை அண்ணை, சுவாரசியமாய் எழுதி இருக்கிறீங்கள், நல்லாய் இருக்கிது. நான் பிரம்டன் வந்து போவதுண்டு. இந்த வைத்தியசாலையை கண்டது இல்லை. மிசிசாகாவில இருக்கிற திரில்லியமும் நல்லாய் வந்திட்டிது என்று நினைக்கிறன்.

நன்றி முரளி!

உண்மைதான் முரளி. நான் இந்தப்பகுதிக்கு 2004 இறுதியில் வந்தேன், 2007ல் தான் இது கட்டப்பட்டது, அந்தப்பகுதியால் போகும் ஒவ்வொரு வேளையும் வியப்புடன்தான் பார்த்துச் செல்வேன்.

ஏனெனில் வெற்றுத்தரையாக இருந்த நிலத்தில் இவ்வளவு பெரிய கட்டிடமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை அண்ணா இலக்கணாவத்தை வேறு அதை விடுங்க அது பக்கத்து ஊர் என்பதால் பார்க்க,அதன் அழகை ரசிக்க முடிந்தது. அது போல உதையும் நாங்கள் நேரடியா பார்க்கணும்னா நீங்க எங்களுக்கு இலவசமா விமான ரிக்கட் போட்டு தணும்லே

அது தானே நல்ல பிள்ளைக்கு அழகு. :)

(என்னடா இவன் ஓசியிலையே காலத்தை ஓட்டிடுவான்னு நீங்க நினைப்பது கேட்குது)

அப்ப நான் வரட்டா (கனடாக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் உங்கள் நெருங்கிய உறவினரும் பயன் பெற்று.........அது பற்றி ஏனயோருக்கும் பதிவிடும் உங்கள் முயற்சி பாராட்டப்படத்தக்கது மேலும் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

வல்வை அண்ணா இலக்கணாவத்தை வேறு அதை விடுங்க அது பக்கத்து ஊர் என்பதால் பார்க்க,அதன் அழகை ரசிக்க முடிந்தது. அது போல உதையும் நாங்கள் நேரடியா பார்க்கணும்னா நீங்க எங்களுக்கு இலவசமா விமான ரிக்கட் போட்டு தணும்லே

அது தானே நல்ல பிள்ளைக்கு அழகு. :)

(என்னடா இவன் ஓசியிலையே காலத்தை ஓட்டிடுவான்னு நீங்க நினைப்பது கேட்குது)

அப்ப நான் வரட்டா (கனடாக்கு)

அப்பன் ஜீவா உங்கள் கருத்துக்கு நன்றியெங்க!

உதிலை பிரச்சினையில்லை என்று ஏற்கெனவே தம்பி நெல்லையானுக்கும் கூறிவிட்டேன் அதாவது உங்கள் முகவரியைத் தாங்க பிரயானச் சீட்டையும், எங்கே பணம் செலுத்தவேணும் என்ற விபரத்தையும் அனுப்பி வைக்கிறன்.

இப்போ சந்தோஷம் தானுங்க?

Link to comment
Share on other sites

நீங்களும் உங்கள் நெருங்கிய உறவினரும் பயன் பெற்று.........அது பற்றி ஏனயோருக்கும் பதிவிடும் உங்கள் முயற்சி பாராட்டப்படத்தக்கது மேலும் தொடருங்கள்.

அக்கா!

உங்களால் எனக்கு தரப்பட்ட உசாரும், உங்களைப்போன்ற நல் மனங் கொண்டவர்களின் வேண்டுதல்களும், மருத்துவனையில் உள்ளவர்களின் பராமரிப்புகளும் தான் எங்களது சிகிச்சை நல்லதாக முடிந்துள்ளது. இருப்பினும் நாளை கிடைக்கவிருக்கும் இதுபற்றிய பெறுபேறுகள் தான் மிகமிக முக்கியமானவை.

என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியதே அவர்களின் அன்பான உபசரிப்பும், மருத்துவ மனையின் சூழ்நிலையும் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.