Jump to content

சில கைக்கூ கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்து எழுத்தாளர்களில் கைக்கூ ரகக் கவிதைகள் அதிகம் எழுதுபவர்கள் இல்லையென்ற ஓர் கருத்தை ஓர் இணையத்தளத்தில் பார்த்தேன், ஏன் அதை முயற்சித்துப்பார்க்கக்கூடாது என்ற ஓர் முயற்சி இது....

எனது முதன் முதல் கைக்கூ கவிதைகள் சில...

துரோகிகள்

உரமிட்டு நெல் விதையிட்டு

பார்த்திருந்த ஓர் விளை நிலத்தில்

விளைச்சலைப் பாழ்படுத்த

முளைத்த சில முட் செடிகள்....!

---------------

பெண்புலிகள் அவலம்

துப்பாக்கி காட்டி

துரத்திய மிருகத்தின் வாயில்

துர்ப்பாக்கியமாய் இன்று

அவளின் முலைக்காம்புகள்...

-------------

பெண்ணின் விழிகள்

உடல்காயம் தராமல்

உள்ளிருக்கும் இதயத்தை

குளிர்விக்கும் அல்லது கூறுபோடும்

இரு மந்திர வாள்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

கைக்கூ கவிதை என்பது....... கடுகு சிறுத்ததை போல் இரு வரியில் வர வேண்டும்.

நீங்கள் நாலு வரியில் எழுதினாலும், நன்றாக இருந்தது.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற்பதிவு கவிதை ...அழகாய் இருக்கிறது. மேலும் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது, குறிப்பாக துரோகிகள் பற்றிய கவிதை நன்றாகப் பொருந்தி அமைகின்றது. பாராட்டுக்கள்....மேன்மேலும் ஹைக்கூக்கள் எழுத வாழ்த்துக்கள்..

இன்று இன்னமும் தமிழில் ஹைகூக் கவிதைகளிற்கு சரியான வரைவிலக்கணம் இல்லை. யப்பானில் தோன்றிய ஹைக்கூக்கவிதைகள் பின்னர் பிறமொழிகளில் தத்தம் மொழிகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப் பட்டன, எனினும் மூன்று வரியில் சொல்லப்படுவதே ஹைக்கூவின் அழகு.

முன்னர் 5, 7, 5 என்ற அசைவின் படி எழுதப்பட்ட ஹைக்கூக்கள் இப்போது அவ்வாறு எழுதப்படுவதில்லை.

உதாரணமாக ஒன்று:

மொழி

தேவதை பேச ஆரம்பித்துவிட்டாள்

தயாரானான் மொழிபெயர்ப்பாளன்

மழலையின் தந்தை!

- சிவகரன்

உதாரணம் இரண்டு:

பிம்பங்களற்ற தனிமையில்

ஒன்றிலொன்று முகம் பார்த்தன

சலூன் கண்ணாடிகள்

- நா.முத்துக்குமார்

இங்கு முதல் இரண்டு வரிகளும் ஏதோ ஒரு பொருளைக் குறிக்கும், மூன்றாவது அதைப்பற்றி விபரிக்கும்....இதுவும் ஹைக்கூ எழுதுவதில் ஒரு வகை, எனினும் உங்கள் முயற்சியும் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

கைக்கூ கவிதை என்பது....... கடுகு சிறுத்ததை போல் இரு வரியில் வர வேண்டும்.

நீங்கள் நாலு வரியில் எழுதினாலும், நன்றாக இருந்தது.

.

எழுதவேண்டுமென்ற ஆர்வத்தில் எழுதினேன், இனிமேல் என் ஆக்கங்களைய சுருக்கி மூன்று வரிகளுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறேன்....

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதற்பதிவு கவிதை ...அழகாய் இருக்கிறது. மேலும் தொடருங்கள்.

அழகு என்று சொல்லி ஊக்கம் தருவதற்கு என் மனமார்ந்த நன்றிகள் நிலாமதி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது, குறிப்பாக துரோகிகள் பற்றிய கவிதை நன்றாகப் பொருந்தி அமைகின்றது. பாராட்டுக்கள்....மேன்மேலும் ஹைக்கூக்கள் எழுத வாழ்த்துக்கள்..

இன்று இன்னமும் தமிழில் ஹைகூக் கவிதைகளிற்கு சரியான வரைவிலக்கணம் இல்லை. யப்பானில் தோன்றிய ஹைக்கூக்கவிதைகள் பின்னர் பிறமொழிகளில் தத்தம் மொழிகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப் பட்டன, எனினும் மூன்று வரியில் சொல்லப்படுவதே ஹைக்கூவின் அழகு.

முன்னர் 5, 7, 5 என்ற அசைவின் படி எழுதப்பட்ட ஹைக்கூக்கள் இப்போது அவ்வாறு எழுதப்படுவதில்லை.

உதாரணமாக ஒன்று:

மொழி

தேவதை பேச ஆரம்பித்துவிட்டாள்

தயாரானான் மொழிபெயர்ப்பாளன்

மழலையின் தந்தை!

- சிவகரன்

உதாரணம் இரண்டு:

பிம்பங்களற்ற தனிமையில்

ஒன்றிலொன்று முகம் பார்த்தன

சலூன் கண்ணாடிகள்

- நா.முத்துக்குமார்

இங்கு முதல் இரண்டு வரிகளும் ஏதோ ஒரு பொருளைக் குறிக்கும், மூன்றாவது அதைப்பற்றி விபரிக்கும்....இதுவும் ஹைக்கூ எழுதுவதில் ஒரு வகை, எனினும் உங்கள் முயற்சியும் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்...!

பாரதிப்பிரியன்...

முதலில் உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்...

மேலும் நீங்கள் சொன்ன தகவல்களைத்தான் நானும் இணையத்தளங்களில் தேடி அறிந்துகொண்டு வருகிறேன்.... முழுமையான விடயங்க்ளை அறியமுதலே முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியடித்து கைக்கூ கவிதை எழுதமுற்பட்டபடியால் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்..அதற்கு வருந்துகிறேன்...

வரும் படைப்புக்களில் முன்னேற்றம் காட்டுவேன்....

நன்றி...

Link to comment
Share on other sites

முயற்சிக்கு பாராட்டுகள்

ஹைக்கூ என்பது ஒன்றிற்கான உவமானமோ அல்லது, ஒரு தலைப்பிற்கான நேரடி விளக்கமோ அல்ல திவ்யபாரதி. உங்களின் துரோகி போன்றவை தலைப்பின் கீழான நேரடி விளக்கமாக இருக்கு. ஹைக்கூ கவிதைகளின் தாயகம் ஜப்பான்.

மேலதிக விபரங்களுக்கு சில அருமையான உதாரணங்களுக்கும் இங்கே பாருங்கள்

Hicoo

பாரதிப்பிரியன் இணைத்த ஹைக்கூகள் மிக சிறந்த எடுத்துக்காட்டு. சலூன் கண்ணாடிகளுக்கும் மொழிக்குமான கவிதைகள் அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சையமாக உங்கள் போன்றவர்களை பாராட்டி உற்சாக படுத்த வேண்டும்.தொடருங்கள் உங்கள் முயற்ச்சியை.மற்றும் மேல் கள உறவுகள் சொன்ன வழிகளையும் ஆராயுங்கள்.எனக்கு றைக்கு கவிதை என்றால் உடன் ஞாபகம் வருது அப்பதுல் ரகுமான்தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் ஒரு இணைப்பு

tamilbookmarket.com

நிழலி...

உங்கள் இரு இணைப்புக்களுக்கும் நன்றி...

நீங்கள் இறுதியாக இணைத்த இணைப்பில் சில அருமையான கவிதைகளைப் பார்த்தேன்... வெகுவிரைவில் நான் சொல்லவரும் கருத்தை நல்ல கைக்கூ கவிதைகளாகத் தர முயற்சிக்கிறேன்...

நன்றிகள் தகவலுக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சையமாக உங்கள் போன்றவர்களை பாராட்டி உற்சாக படுத்த வேண்டும்.தொடருங்கள் உங்கள் முயற்ச்சியை.மற்றும் மேல் கள உறவுகள் சொன்ன வழிகளையும் ஆராயுங்கள்.எனக்கு றைக்கு கவிதை என்றால் உடன் ஞாபகம் வருது அப்பதுல் ரகுமான்தான். :)

sagevan

நிச்சியமாக கள உறவுகளின் ஆலோசனைகளையும் ஏற்றுநடந்து நல்ல கவிதைகளை தர முயற்சிக்கிறேன்...

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைக்கூ கவிதை நல்லாய்தான் இருக்கு

வணக்கம் jil

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • 8 years later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் தமிழ் நிலவன். தொடர்ந்து எழுதுங்கள் ஹைக்கூவும் கைவசமாவது திண்ணம்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹைக்கூ கவிதை என்பது யப்பானியர்களின் கவிதை. அவர்களின் வரையறைக்குள் நாம் கவிதை எழுத வேண்டுமே தவிர நாம் எம் விருப்பப்படி எழுதிவிட்டு அதற்கு அப்பெயரை வைக்கக் கூடாது. மற்றவர்கள் போல் என்னால் பொய்யாகப் புழுக முடியாது. அதற்காக மன்னித்துவிடுங்கள். உங்கள் குறுங்கவிதைகள் நன்றாக இருக்கின்றன.  முயன்றால் ஹைக்கூ கவிதைகளை உங்களால் எழுத முடியும். வாழ்த்துக்கள்.

ஆனாலும் உங்கள் கவிதைகளை பார்க்க முன்னர் யாழில் குறுங்கவிதைகளை ஒருவர் எழுதிக்கொண்டு இருந்தார். அவரா நீங்கள்????. பெயர் மறந்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.