Jump to content

ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ!


Recommended Posts

ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ!

எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும்.

அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன்.

அப்பொழுது

அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்?

ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன்.

உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வாழலாம். எப்பவாவது அதைப்பற்றி யோசிச்சனிங்களே?

இன்றைக்கு நேற்றே! முதன்முதலா அரும்பின மீசையைத் தினத்துக்கும் நூறுவாட்டி கண்ணாடிக்கு முன்னாலை நின்று தடவிப்பார்த்து ரசித்த காலத்திலேயே எனக்கு அந்த ஆசையும் தொடங்கிவிட்டது.

அப்பவே ஒருநாள் தம்பிராசா கடை வாசலிலைபோய் மசிந்தி மசிந்திக்கொண்டு நின்று ஒருத்தரும் கடைக்கு வராத நேரமா பார்த்து

அண்ணை எனக்கொரு ....... தாங்கோ எண்டு கேட்கும்போது தம்பிராசா அண்ணை உதைத் தொட்டபின் விட்டவனும் இல்லை! பிறகொரு நேரத்திலை தொட்டதுக்காக வருந்தாதவனுமில்லை என்ற இலவச அறிவுரையோட அந்தச் சனியனை தர என்ரை கையில வாங்கேக்கை பயத்தில கை நடுங்கேக்ககையே நினைச்சனான் இந்த ஒருதடவைதான் முதலும் கடைசியுமாய் வாங்கினதுக்கு..... ஆசைக்கு....... ஒருதடவை பாவிச்சுப் பார்க்கிறதோட சரி பிறகு சீவியத்திலையும் தொடுகிறதில்லை என்று.

ஆனால் அடுத்தநாள் பள்ளிக்கூடத்தில முதல்நாள் தம்பிராசா கடையில வாங்கினதில இருந்து நடந்ததுகளை நண்பர்களுக்குச் சொன்னதில இருந்து அவர்கள் என்னை ஒரு கதாநாயகனாகப் பார்க்க................. அவங்களுக்கு பந்தா காட்டுவதற்காக அடுத்தநாளும் தம்பிரைசா கடையில போய் அங்குமிங்கும் பார்த்து முழிசினபடி இரண்டாவது தடவையா வாங்கேக்கை கை நடுக்கம் கொஞ்சம் குறைஞ்சமாதிரித் தெரிந்தது.

பிறகென்ன ரமேசுக்காக சிவத்துக்காக என்று அடிக்கடி தம்பிராசா கடைக்குப்போய்..................

பயம் விட்டுப்போனதுமட்டுமில்லாமல�

� சாயங்காலம் ரியுசனுக்குப் போகேக்கை சட்டைப் பொக்கற்றுக்கால பெட்டி சாடையாத் தெரியிறமாதிரி வச்சுக்கொண்டு சையிக்கிளில போறது ஒரு கவுரவம்மாதிரித் தெரிஞ்சுது.

நானும் விடாமலுக்குப் பிறகு ஒருக்காலென்றாலும்........

வராமலுக்கென்ன எத்தனையோ நாளாச் சயிக்கிளிலையும் நடந்தும் முன்னுக்கும் பின்னுக்கும் சுத்தி அவள் வசந்தியை ஒருவழியா மடக்கின பிறகு ஒருநாள் அவங்கட புகையிலைத் தோட்டத்துக்கை......... ஆளுயரப் புகையிலைக்கண்டுகளுக்கு நடுவில..... சீ விடுங்கோ ஆரும் பார்த்தால்....... என்று அவள் சிணுங்கச் சிணுங்கக் கட்டிப்பிடிச்சு ............முகத்துக்குக் கிட்டப்போக சீ சிகரெட் நாத்தம் குமட்டிக்கொண்டு வருகுது, நீங்களும் பத்துறனிங்களே? என்று திமிறிக்கொண்டு அவள் விலக

கோவிக்காதையும் இதுதான் கடைசி இனியொருநாளும் பத்தமாட்டன் இங்கை பாரும் என்ன செய்கிறனென்று சொல்லிக்கொண்டு பொக்கற்றுக்கை கிடந்த சிகரெட் பக்கற்றை எடுத்துக் காலுக்கைபோட்டு மிதிச்சன். என்றாலும் பிறகு கொஞ்சநாளிலை வசந்தியைத்தான் விட்டன் சிகரெட்டைவிடேல்லை.

சீ நீரும் ஒருமனுசனெண்டு.........

கோவியாதையும் அம்பலத்தார்

பிறகொருநாள் தோய்க்கப்போட்ட சட்டைப்பொக்கற்க்கை கிடந்த பெட்டியை பார்த்திட்டு

என்ன இது வீட்டிலை அப்பா அண்ணைமார் ஒருத்தருக்கும் இல்லாத கேடுகெட்ட பழக்கமெல்லாம் எங்கட மானத்தை வாங்குpறதுக்கென்றே கடைசி காலத்தில வந்து பிறந்திருக்கிறாய் என்று அம்மா ஒப்பாரிவைக்க...............

அம்மா! அம்மாவாணை இனி ஒருநாளும் பத்தமாட்டன் என்று வாக்குறுதியை அள்ளிவிட்டன். ஆனாலும் கடைசியில அம்மாவும் மேலபோட்டா உதைத்தான் விட்டபாடில்லை!.... கொள்ளி வச்ச கையோட நினைச்சன் சின்னனிலை உன்ரை தலையில அடிச்சுச் சத்தியம்பண்ணிப்போட்டு இத்தனை காலமா உந்தச் சனியனைவிடாத பாவம்தான் உன்னைக் கொன்றுபோட்டுதோ இப்பவே உந்தச் சனியனுக்கு முழுக்குப்போடுறன் என்று, யோசித்துக்கொண்டு சுடலையால திரும்பி தலைமுழுகின கையோட............... குளிருக்கு இதமா இருக்கட்டுமே இந்த ஒருதடவை மன்னிச்சுக்கொள்ளம்மா என்று தொட்டன் இன்றுவரை உந்தச் சனியனை விட்டுத்தொலைக்கவே இல்லை.

கல்யாணம் கட்டின புதிதில் முன்னம் வசந்தியிடம் பட்ட அனுபவம் ஞாபகத்துக்கு வர

வாசுகிக்குப் பக்கத்தில ஆசையாசையாகப் போறதென்றால்கூட எங்கை கண்டுபிடிச்சிடுவாளோ என்ற பயத்தில நல்லா குளிச்சு முழுகி வாசத்துக்கு வாய் நிறைய வெற்றிலையெல்லாம் போட்டுக்கொண்டுதான் போவன்,

ஆனால் கொஞ்ச நாளுக்குள்ளயே அவள் எதுக்கு உந்த நடிப்பு நடிக்கிறியள். நீங்கள் பத்துறது தெரியாதென்றே நினைக்கிறியள். மிரட்டிச் சொல்லித் திருத்துறதுக்கு நீங்களொன்றும் சின்னப்பாப்பா இல்லை. நீங்களா உணர்ந்தால்தான் உண்டு என்று போட்டாள் ஒருபோடு. ஆனால் அன்றுடன் எனக்கு கொஞ்சமிருந்த பயமும்போய் நடுவீட்டுக்கையே பத்தத் தொடங்கினன்.

தன்ரை தாயின்ரை சாவுக்கே காரணமாயிருந்ததுமட்டுமில்லா�

�ல் மனிசியையே மதிக்கத் தெரியாத உம்மையெல்லாம் இத்தனை நாளாக பெரிய மனுசனென்று நினைத்து நீர் சொல்லுற அறிவுரையளையெல்லாம் கேட்டன் பாரும்..........

அவ்வளவு கேவலமா நினைக்காதையும், அதுதான் பிறகு ஒரு காலகட்டத்தில் நாலு அனுபவமும் கொஞ்சம் அறிவும் வர மனச்சாட்சி உறுத்தினதிலையும் உடல் நலத்தில் ஏற்பட்ட அக்கறையிலையும் உண்மையிலையே விட்டுவிடுவம் என்று கனதரம் முயற்சி பண்ணினன்.

மனசை அடக்கிக்கொண்டு இருக்க தெருவில, கடையிலை என்று எங்கையும் போன இடத்தில ஆரும் பத்துறதைக் கண்டால் கை நடுங்கும் உடனையே பத்தவெணும்போலக்கிடக்கும் கஸ்டப்பட்டு அடக்குவன்.

காலையலை தேத்தண்ணியைக் குடிச்சிட்டுக் கக்கூசுக்கப்போனால் என்னையறியாமலே கை யன்னல் ஒட்டிலை பெட்டியைத் தேடும். வயிறெல்லாம் இறுகி அடைச்சதுபோலக் கிடக்கும். எல்லாத்துக்கும் மேலாலை கட்டுப்படுத்திக்கொண்டு ஊதாமல் இருப்பன்.

ஆனாலும் எங்கையும் சபை சந்தியிலை என்ரை நண்பர்களைச் சந்திச்சனென்றால் முடிஞ்சுது அலுவல், கொஞ்சநேரம் கதைச்சுக்கொண்டிருக்க........

ஒருக்கால் வெளியிலபோட்டுவருவமே என்று ஆராவது ஒருவர் தொடங்குவார். சரி நல்ல காத்துப் பிடிக்கட்டுமே என்று போனால், ஆளாளுக்கு ஊதத் தொடங்குவினம் நானும் கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நிற்பன். கை காலெல்லாம் நிதானத்தில நிக்காது. வாயெல்லாம் ஒருமாதிரிக்கிடக்கும் அப்பபார்த்து ஒருத்தர்.... இந்தாரும் எங்களையெல்லாம் கண்ட சந்தோசத்தக்கு ஒன்றைப் பத்தும் என்று பக்கற்றை நீட்டுவார்.

நானும் முதலிலை வேண்டாம் வேண்டாமென்றுதான் சொல்லுவன்.

ஆனாலும் விடமாட்டினம். ஆளாளுக்கு விடமாட்டினம், என்ன நெடுகலுமே கேட்கிறம் ஒருக்கால்தானே ......... பொக்கற்றிலை பெட்டியோட வைச்சுப் பத்துமென்றெ சொல்லுறம் இண்டைக்குப் பத்தினால் இனி எப்ப காணேக்கை கேட்கிறமோ?............. இப்படியே ஆளாளுக்கு உசுப்பிவிட என்கும் ஆசை பத்திவிடும்,

ஒரு நாளைக்குத்தானே பரவாயில்லை என்று பத்துவன் பிறகென்ன பழைய கதைதான். இப்படி எத்தனைதரம் விடுகிறதும் பத்துறதுமாய்...............

சா! பக்கத்தில வரத்தான் வாழவேணுமென்று ஆசையாக்கிடக்கு! மனிசி பிள்ளையளோட கொஞ்சக் காலலத்துக்கெண்டாலும் சந்தோசமா ஒன்றா இருக்கவேணும் நாலு இடத்துக்குக் குடும்பமா போய்வரவேணும் என்று ஆசையாகக்கிடக்குது.................

மனுசன் கதைக்கமுடியாமலுக்கு விக்கிவிக்கி அழத்தொடங்கிவிட்டுது.

உமக்கு உண்மையிலையே என்னிலை அக்கறை இருந்தால் இப்படிச் செய்கிறவையளை நிறுத்தச்சொல்லும் நான் நிறுத்துறன் என்று கையைப்பிடிச்சுக் கெஞ்சுமாப்போல நாதழுதழுக்க................

என்னாலையும் கட்டுப்படுத்தமுடியாமலுக்கு மனுசனைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுதிட்டன்.

ஒருவழியா விடைபெற்றுக்கொண்டு திரும்பும்போது பொக்கற்றுக்கை கிடந்த பெட்டியை எடுத்து ஆஸ்பத்திரி வாசலிலை கிடந்த குப்பைத்தொட்டியில போட்டிட்டு காரை நோக்கி மெதுவா நடந்தன்.

--------------------

சிரிக்காமல், சிந்திக்காமல் மனிதனில்லை.

நேசமுடன் அம்பலத்தார்

http://aahaampalam.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினையான கதை. வசனங்களை அழகாக் ஒழுங்குபடுத்தினால் இன்னும் சிறப்பு.

பதிவுக்கும் பதிந்தவருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

அருமையான கதை நுணா அண்ணா. இந்த கதையை படித்தாவது நாலு பேர் திருந்தினால் எவ்வளவு நல்லாயிருக்கும். கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பது போல் சா கிட்டவந்துட்டு என்று தெரிந்து பிறகு ஊதுவதை விட்டோ கவலைப்பட்டோ ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு இந்தகதை. நன்றி கதைக்கும் கதை பகிர்விற்கும்.

Link to comment
Share on other sites

இணைப்பிற்க்கு நன்றி நூணா அண்ணா... நல்லதொரு கதை,... கதை என்றே சொல்ல முடியாது பலரின் வாழ்க்கையில் இப்படியும் நடந்து இருக்கு...எல்லாம் நடந்து முடிய ஜோசித்துப்பலன் இல்லை... சா விளிம்பில் வந்து விட்டு ஜோசித்து என்ன செய்வது,,

Link to comment
Share on other sites

நானும் படிக்கேக்க பெடியலோட பம்பலா அடிச்சுப்பாத்தனான் புரக்கடிச்சதுதான் மிச்சம் ஒரு முழுசுகூட அடிச்சுமுடிக்க முடியல. :rolleyes:

Link to comment
Share on other sites

அன்பின் நுணாவிலான் எனது பழைய கதையை

தேடிப்படித்துத் தூசுதட்டி மீள்பதிவுசெய்தற்கு நன்றிகள்!

நிலாமதி உங்கள் கருத்திற்கு நன்றிகள்.மிக நீண்டகாலத்தின்பின் தொடர்புகொள்வதில் மகிழ்ச்சி.

ஈழமகள், சுஜி, மற்றும் மனிதன் எல்லோரது கருத்துக்களிற்கும் நன்றிகள்.

இந்த வயதான கிழவனின்ரை கதையை இன்றும் நீங்களெல்லாம் விரும்பிப்படித்துக்

கருத்துச் சொல்லுவது எனக்குத் தெம்பைத்தருகிறது.

இப்பஎல்லாம் இளசுகள் நீங்கள் அடிக்கிற கும்மாளத்தைப் பார்க்கவே நேரம் சரியாகுது.

கட்டையிலபோற வயசில தொடர்ந்து கொம்பியுhட்டருக்கு முன்னாலை உட்காரமுடிகிறதில்லை

உட்கார்ந்து எழுதமுடிந்தால் மிண்டும் எழுத முயலுகிறன்.

கிழவனிற்குப் பரிவாக நலு வார்த்தை கொன்னதுக்கு நன்றிகள் பிள்ளைகள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ராகிங் பீரியட்டிலை அடிச்சுபார்த்தனான் மணம் வாந்தி தான் வந்திச்சுது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.