Jump to content

கிறிஸ்மத மதகுருக்களின் பாலியல் லீலைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவரே!

மன்னித்தருளும்.

விசயம் முடிஞ்சுது :wub:

எங்கடையளும் இருக்குதுகள்

எங்கை தொட்டவர்?

எப்புடி தொட்டவர்?

எதுக்கை? என்னமாதிரி தொட்டவர்?

என்னநிறத்திலை கோவணம் கட்டியிருந்தவர்?

எத்தினை பாகையிலை காலை தூக்கிவைச்சிருந்தவ?

ஆராச்சிக்கு எல்லையே இல்லையப்பா :(

Link to comment
Share on other sites

கு. சா

முதலாவது இவர் கிட்டத்தட்ட எங்கட பூசாரிக்குச் சமம் இவர்கள் தங்களுக்கு சக்தி இருக்கு முத்தி இருக்கு என்று திரியுற சாமிகள் இல்லை.

இரண்டாவது இது இன்னொரு நாட்டின் இன்னொரு சமூகத்தினால் தீர்க்கப்பட வேண்டியது.

இதனால் நேரடியாக எங்கள் இனத்துக்கு இழப்பில்லைத்தானே?

இவரின் வேலைக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று எலாம் வல்ல எமபெரும்மனை பிரார்த்திப்போமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத குருமார்களில் தான் அதிகளவு மோசமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத குருமார்களில் தான் அதிகளவு மோசமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள்.

இது கண்டனத்துக்குரிய கருத்து!

மதிப்புக்கு உரிய மதகுருமாரை அவமதிக்கும் கருத்தாகவே இது இருக்கின்றது.

அயோக்கியர்கள் தமது உண்மை முகத்தை மறைக்க மதகுருக்களாக மாறுகின்றனர் என்பதே உண்மை. மற்றையபடி கடவுளின் கட்டளையை ஏற்று பிற மனிதருக்கு சேவை செய்வேண்டும் என்றால்............. அன்னை தெரசாவின் இடம் இப்போதும் வெற்றிடமாகவே இருக்கின்றது.

அதைவிட எத்தனையோ செய்யலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவரே!

மன்னித்தருளும்.

விசயம் முடிஞ்சுது :D

எங்கடையளும் இருக்குதுகள்

எங்கை தொட்டவர்?

எப்புடி தொட்டவர்?

எதுக்கை? என்னமாதிரி தொட்டவர்?

என்னநிறத்திலை கோவணம் கட்டியிருந்தவர்?

எத்தினை பாகையிலை காலை தூக்கிவைச்சிருந்தவ?

ஆராச்சிக்கு எல்லையே இல்லையப்பா :rolleyes:

smiley-dance017.gifsmiley-dance015.gifsmiley-dance001.gif :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கருத்தில் சில உண்மை தெரிகிறது

அநேகமான பாதிரியார்கள் சிறுவயதிலேயே குளப்படி உள்ளவர்களாக இருந்து தவறுகளை திருத்துவதற்காக சேர்ச்சுகளில் சேர்ந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்

அந்த வகையில் நாசிப்படையில் இருந்ததாக தற்போதைய போப் ஆண்டவர் மீதும் ஒரு குற்றச்சாட்டு உண்டு

எனவே உண்மையில் அவர்களது பிறவிக்குணங்கள் சிலரால் மறக்கடிக்கப்படாமல் இருக்கலாம்

இது எனது சந்தேகம் மட்டுமே

இது எல்லோருடைய நடவடிக்கைகளையும் பாதிக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கருத்தில் சில உண்மை தெரிகிறது

அநேகமான பாதிரியார்கள் சிறுவயதிலேயே குளப்படி உள்ளவர்களாக இருந்து தவறுகளை திருத்துவதற்காக சேர்ச்சுகளில் சேர்ந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்

அந்த வகையில் நாசிப்படையில் இருந்ததாக தற்போதைய போப் ஆண்டவர் மீதும் ஒரு குற்றச்சாட்டு உண்டு

எனவே உண்மையில் அவர்களது பிறவிக்குணங்கள் சிலரால் மறக்கடிக்கப்படாமல் இருக்கலாம்

இது எனது சந்தேகம் மட்டுமே

இது எல்லோருடைய நடவடிக்கைகளையும் பாதிக்கின்றது

கிறிஸ்தவ பாதிரிமார்கள் பாலியல் வயதிலேயே பாதிரியாகி விடுகின்றனர்.

காதல்தோல்வி குடும்பத்தாரின் ஊந்துதல் அறியாமையின் தூண்டுதல்களே அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. காலபோக்கில் அந்த முனைப்புகள் குறைந்து ஒரே பைபிளை திரும்ப திரும்ப படித்தும் நிஜஉலகின் நிஜங்கள் பட்டும்படாமலும் தொட்டும். தமது சொந்த உணர்சிகளை கடவுளின் பெயரால் கட்டுபடுத்த முடியாத நிலை தோன்றுகின்றது. பின்பு யாருக்கும் தெரியாது தப்புகளை செய்ய முனைகின்றார்கள் நாளடைவில் அதற்கு எந்த தண்டனையும் கடவுளிடம் இருந்து கிடைக்காதபோது. கடவுளின் மேல் சந்தேகம் கொள்கிறார்கள் பின்பு நாளடைவில் அவர்கள் கடவுளையே நம்புவதில்லை. கடவுளை நம்பி கடவுளுக்கு பயப்படுகின்றவர்களை தமது ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும் ஆளாக்குகின்றனர்.

சுவாமிமேல் உள்ள மதிப்பினால் பலதுகள் வெளிவருவதில்லை அதனால்தான் இன்னமும் நல்ல சுவாமிகள் வாழ்கின்றார்கள். சிலதுகளே வெளிவருவதால் சிலபேர் தப்பானவர்களாக அடையாளம் காணப்படுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

அன்னை தெரசாவின் இடம் இப்போதும் வெற்றிடமாகவே இருக்கின்றது.

"அன்னை" தெரேசா என்பவர் மேட்குலகத்தால், தொடர்ச்சியான முயற்சியால், கற்பனையாக சிருஷ்டிக்கப்பட்ட ஒருவர். மேற்குலகம் Nobel பரிசை தமது சுயநலன்களுக்கு பயன்படுத்திய சந்தர்பங்களில் "அன்னை தெரேசா" என அழைக்கப்படும் தெரேசாவும் ஒருவர்.

அவரது பிரதான வேலை மதம் மாற்றுதலே. அதை ஏழைகளுக்கு, தொழு நோயாளர்களுக்கு உதவுவது என்ற போர்வையில் செய்துகொண்டிருந்தார். ஒரு தடவை மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவர முயன்ற போது, "மதமாற்ற தடைச்சட்டம் வந்தால் எனக்கு இந்தியாவில் வேலையில்லை என்று கூறி" தனது சுயரூபத்தை வெளிப்படுத்தினார் தெரேசா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அன்னை" தெரேசா என்பவர் மேட்குலகத்தால், தொடர்ச்சியான முயற்சியால், கற்பனையாக சிருஷ்டிக்கப்பட்ட ஒருவர். மேற்குலகம் Nobel பரிசை தமது சுயநலன்களுக்கு பயன்படுத்திய சந்தர்பங்களில் "அன்னை தெரேசா" என அழைக்கப்படும் தெரேசாவும் ஒருவர்.

அவரது பிரதான வேலை மதம் மாற்றுதலே. அதை ஏழைகளுக்கு, தொழு நோயாளர்களுக்கு உதவுவது என்ற போர்வையில் செய்துகொண்டிருந்தார். ஒரு தடவை மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவர முயன்ற போது, "மதமாற்ற தடைச்சட்டம் வந்தால் எனக்கு இந்தியாவில் வேலையில்லை என்று கூறி" தனது சுயரூபத்தை வெளிப்படுத்தினார் தெரேசா.

உங்களது குற்றசாட்டை மறுப்பதற்கு என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை. அன்னை தெரேசாவை ஒவ்வொரு நாளும் நான் தொடரவில்லை என்பதே உண்மை.

இந்தவிடயத்தை இரண்டு கோணத்தில் வைத்தும் வாதடலாம் ஆனால் இதுதான் சரியானது என்ற தேர்வுக்கு வருவது அவரவர் மனங்களை பொறுத்தது. ஒன்று உங்களுடைய பார்வை மற்றையது................. அன்னை தெரேசா ஜேசுவை முழுமையாக நம்பியவர் அவர் அந்த மத்திற்கு முற்றுமாக தன்னை அர்பணித்தவர். ஆக துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு அதுவே சரியான பாதை என்று அவர் கூற முற்பட்டிருந்தால் அதில் எப்படி முரண்படலாம் என்பது எனக்கு புரியவில்லை.

அந்த மத்தின் பெயரால் மோசடிகளை செய்ய முற்பட்டார் என்றால் அது அவர் மீது குற்றங்களை சுமத்த ஏதுவானதாக இருக்கும். ஆனால் இந்த பாதையிலே நான் ஒளியை பார்க்கிறேன் துன்பத்தில் இருக்கும் நீங்களும் வாருங்கள் என்பது அவருடைய நம்பிக்கையை பொறுத்து. ஆனால் அது ஒரு மூடநம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அதை முற்றுமாக நம்பியவர் அதற்காக தன்னை அர்பணித்து கடைசிவரையிலும் போராடியவர் அன்னை தெரசாவை ஒரு போராளியாகவே நான் ஏற்று கொள்கிறேன். மதம் அவருடைய சொந்தவிடயம்.

ஜேசுவையும் நான் இதே போன்றே ஏற்றுகொண்டிருக்கிறேன் கடைசிவரையிலும் தனது தத்துவத்திற்காக போராடிய ஒரு போராளி. சிலுவை சுமப்பது என்பதை மறுத்திருக்கலாம் மரணம்தான் முடிவு என்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்தது. ஆனால் தனது தத்துவத்தை நிருபிக்க வேண்டும் அதற்கு எந்த வலியையும் ஏற்கிறேன் என்பது ஒரு போராளிக்கே உரித்தானது.

அன்னை தெராசாவை கிறிஸ்தவராக மட்டும் பார்கிறீர்களா?

ஒரு போராளியாகவும் பார்க்கமுடிகிறதா?

என்ற கேள்வியில் எமது விடை எதுவோ அதை பொறுத்தே தெரசாவின் பணியை நாம் எவ்வாறு எடை போடுகிறோம் என்பது தங்கியுள்ளது.

ஆனால் நிஜம் என்ற ஒன்று உங்கள் முன்னாலும் என் முன்னாலும் நிற்கின்றது. அதுதான் எத்தனையோ கோடிசுவரர்கள் வாழ்ந்த இந்தியாவில் எத்தனையோ கோடி பணங்களை வைத்திருந்தவர்களால் செய்ய முடியாததை. வெறும் கையுடன் வந்த அன்னை தெராசாவால் சாதிக்க முடிந்தது. எத்தனையோ அனாதை பிள்ளைகளுக்கு வாழ்வு கொடுக்க அவரால் முடிந்தது. என்னாலும் உங்களாலும் அது முடியவில்லை என்பதே உண்மை.

இறுதியில் அவர் மதம் மாற்றினார் என்ற குற்றசாட்டை நீங்கள் முன்வைத்தால்? என்னால் மறுக்க முடியாது.

எதை எதையெல்லாம் ஊட்டினார் என்று பிரித்து பிரித்து பார்க்க என்னால் முடியவில்லை. ஆனால் பசித்தவனுக்கு உணவு ஊட்டினார் என்பதையே நான் பார்க்கிறேன்.

தலித்துகள் என்று வீதியில் தூக்கியெறிந்து காலால் மிதிபட்டு கொண்டிருந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துவோ கிறிஸ்ணணோ அல்லாவோ யார் வருகிறார்கள் என்று பார்க்க நேரம் இருக்வில்லை. உணவை கொண்டு யார் வந்தான் என்பதை பார்க்கவே பசி இருந்திருக்கும். அதற்கான நன்றி கடன் என்பது அவர்களது சொந்த விடயமாகவும் எடுக்கலாம்.............. பொதுவிடயமாகவும் எடுக்கலாம்.

தவிர தெரசாவை பாப்பரசர் கூப்பிட்டார்.......

ஐநா கூப்பிட்டார்..........

நோபல் பரிசுகாரர் கூப்பிட்டார்.........

ஐரோப்பியர் கூப்பிட்டார்..........

என்றால் அது எல்லாம் சுயவிளம்பரமே என்பதில் எனக்கு எந்த வேறு கருத்தும் கிடையாது. அன்னை தெரசாவின் போராட்டம் வெற்றியடைந்த போததூன் எல்லோரும் கூப்பிட்டார்கள். ஆனால் வெற்றியடைய தினமும் எவ்வளவோ போராடினார் இளமையிலே என்பதே எனது பார்வை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு விதண்டாவாதத்திற்கு வரவில்லை.

இருப்பினும் எனது கேள்வி?

அன்னை தெரேசா!

அவர் பிறந்த நாடே பஞ்சம் பசி பட்னி நோய் நொடிகளுடன் தள்ளாடும் போது......

ஏன் எதற்க்காக???

இந்தியாவை தனது நற்பணிகளுக்காக தேர்வு செய்தார்?

விவரம் தெரிந்தவர்கள் யாராவது ஓரிருவரிகளில் விளக்குவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது குற்றசாட்டை மறுப்பதற்கு என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை. அன்னை தெரேசாவை ஒவ்வொரு நாளும் நான் தொடரவில்லை என்பதே உண்மை.

இந்தவிடயத்தை இரண்டு கோணத்தில் வைத்தும் வாதடலாம் ஆனால் இதுதான் சரியானது என்ற தேர்வுக்கு வருவது அவரவர் மனங்களை பொறுத்தது. ஒன்று உங்களுடைய பார்வை மற்றையது................. அன்னை தெரேசா ஜேசுவை முழுமையாக நம்பியவர் அவர் அந்த மத்திற்கு முற்றுமாக தன்னை அர்பணித்தவர். ஆக துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு அதுவே சரியான பாதை என்று அவர் கூற முற்பட்டிருந்தால் அதில் எப்படி முரண்படலாம் என்பது எனக்கு புரியவில்லை.

அந்த மத்தின் பெயரால் மோசடிகளை செய்ய முற்பட்டார் என்றால் அது அவர் மீது குற்றங்களை சுமத்த ஏதுவானதாக இருக்கும். ஆனால் இந்த பாதையிலே நான் ஒளியை பார்க்கிறேன் துன்பத்தில் இருக்கும் நீங்களும் வாருங்கள் என்பது அவருடைய நம்பிக்கையை பொறுத்து. ஆனால் அது ஒரு மூடநம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அதை முற்றுமாக நம்பியவர் அதற்காக தன்னை அர்பணித்து கடைசிவரையிலும் போராடியவர் அன்னை தெரசாவை ஒரு போராளியாகவே நான் ஏற்று கொள்கிறேன். மதம் அவருடைய சொந்தவிடயம்.

ஜேசுவையும் நான் இதே போன்றே ஏற்றுகொண்டிருக்கிறேன் கடைசிவரையிலும் தனது தத்துவத்திற்காக போராடிய ஒரு போராளி. சிலுவை சுமப்பது என்பதை மறுத்திருக்கலாம் மரணம்தான் முடிவு என்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்தது. ஆனால் தனது தத்துவத்தை நிருபிக்க வேண்டும் அதற்கு எந்த வலியையும் ஏற்கிறேன் என்பது ஒரு போராளிக்கே உரித்தானது.

அன்னை தெராசாவை கிறிஸ்தவராக மட்டும் பார்கிறீர்களா?

ஒரு போராளியாகவும் பார்க்கமுடிகிறதா?

என்ற கேள்வியில் எமது விடை எதுவோ அதை பொறுத்தே தெரசாவின் பணியை நாம் எவ்வாறு எடை போடுகிறோம் என்பது தங்கியுள்ளது.

ஆனால் நிஜம் என்ற ஒன்று உங்கள் முன்னாலும் என் முன்னாலும் நிற்கின்றது. அதுதான் எத்தனையோ கோடிசுவரர்கள் வாழ்ந்த இந்தியாவில் எத்தனையோ கோடி பணங்களை வைத்திருந்தவர்களால் செய்ய முடியாததை. வெறும் கையுடன் வந்த அன்னை தெராசாவால் சாதிக்க முடிந்தது. எத்தனையோ அனாதை பிள்ளைகளுக்கு வாழ்வு கொடுக்க அவரால் முடிந்தது. என்னாலும் உங்களாலும் அது முடியவில்லை என்பதே உண்மை.

இறுதியில் அவர் மதம் மாற்றினார் என்ற குற்றசாட்டை நீங்கள் முன்வைத்தால்? என்னால் மறுக்க முடியாது.

எதை எதையெல்லாம் ஊட்டினார் என்று பிரித்து பிரித்து பார்க்க என்னால் முடியவில்லை. ஆனால் பசித்தவனுக்கு உணவு ஊட்டினார் என்பதையே நான் பார்க்கிறேன்.

தலித்துகள் என்று வீதியில் தூக்கியெறிந்து காலால் மிதிபட்டு கொண்டிருந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துவோ கிறிஸ்ணணோ அல்லாவோ யார் வருகிறார்கள் என்று பார்க்க நேரம் இருக்வில்லை. உணவை கொண்டு யார் வந்தான் என்பதை பார்க்கவே பசி இருந்திருக்கும். அதற்கான நன்றி கடன் என்பது அவர்களது சொந்த விடயமாகவும் எடுக்கலாம்.............. பொதுவிடயமாகவும் எடுக்கலாம்.

தவிர தெரசாவை பாப்பரசர் கூப்பிட்டார்.......

ஐநா கூப்பிட்டார்..........

நோபல் பரிசுகாரர் கூப்பிட்டார்.........

ஐரோப்பியர் கூப்பிட்டார்..........

என்றால் அது எல்லாம் சுயவிளம்பரமே என்பதில் எனக்கு எந்த வேறு கருத்தும் கிடையாது. அன்னை தெரசாவின் போராட்டம் வெற்றியடைந்த போததூன் எல்லோரும் கூப்பிட்டார்கள். ஆனால் வெற்றியடைய தினமும் எவ்வளவோ போராடினார் இளமையிலே என்பதே எனது பார்வை.

இப்பிடி ஒரு அருமையான விளக்கம் வேறு யாரும் தர முடியுமா என்பது சந்தேகம் தான். சோற்றைக் காட்டி மதம் மாற்றினால், சோற்றையும் மறந்து, சோறு தேடியவனின் பசியையும் மறந்து சோறு கொடுத்தவனைக் குற்றவாளியாக்குவதே இப்ப மதப் பற்று ஆகிப் போயிற்றுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி.......................உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ......

Link to comment
Share on other sites

அன்னை திரேசா பற்றி அறியவிரும்புபவர்களுக்கு.....

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல் – குறள் 314

தனக்குத் துன்பம் செய்தவர்களைத் தண்டிப்பதாவது அவர்கள் வெட்கமுறும்படி நல்ல உதவியை அவர்களுக்கு செய்து விடுவதாகும்.

காளி கோவில் அருகே இறக்கும் தருவாயில் இருப்பவர்களைக் கொண்டு சென்று சிகிச்சை செய்வதால் கோவிலின் புனிதம் கெட்டுவிடுகிறதென மறியல் செய்த காளி கோவில் பூசாரிக்கே நோய் முற்றி கவனிப்பார் யாருமில்லாததால் அவரையும் இதே இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். இவர் தங்களுடைய இல்லத்தையே மூடச் செய்தவர்களுள் ஒருவராயிற்றே என்று பாராமல் அவரை இல்லத்தில் சேர்த்து பணிவிடை செய்தனர் அன்னை திரேசா இல்லத்து சகோதரிகள்.

இத்தனை அன்பு படைத்தவர்களிடம் அறியாமையுடன் நடந்து கொண்டதை எண்ணி வருந்திய பூசாரி அவரை நலம் விசாரிக்க வந்த அன்னையின் கரம் பற்றி, ‘நான் முப்பது ஆண்டுகளாக கருமை நிறம் கொண்ட தேவதைக்குப் பணிபுரிந்தேன். அத்தேவதை இதோ உயிர் பெற்று வெண்ணிறத் தேவதையாக வந்து என் உயிரைக் காப்பாற்றி விட்டாள்.’ என்று கூறி கண்ணீர் உகுத்தார்.

ஆரம்ப காலங்களில் அன்னை திரேசா ஒரு துணிப்பையைக் கரங்களில் எடுத்துக்கொண்டு கொல்கொத்தா நகரவாசிகளிடம், கடைகளிலும் பண உதவி வேண்டி செல்வது வழக்கம். ஒரு நாள் ஒரு பெரிய கடையின் உரிமையாளர் அன்னையின் கைகளில் காறி உமிழ்ந்தார். இதை முற்றிலும் எதிர்பாராத அன்னை பதட்டப்படாமல் தன் கைகளை துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்து புன்னகையுடன் இது நீங்கள் உங்கள் உயிரையே எனக்கு தானமாக கொடுத்ததற்கு சமம் என்றார். அதைக் கேட்ட கடை முதலாளி உடனே எழுந்து ஒடி வந்து அன்னையின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் அன்னை அப்போது எழுப்பிக்கொண்டிருந்த குழந்தைகள் காப்பக கட்டிடத்தின் முழு செலவையும் ஏற்றுக்கொண்டார். (இச்சம்பவம் மூலப் புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்டது அல்ல. நான் சென்னை லொயோலா கல்லூரியில் அன்னக்கு நடந்த பாராட்டு விழாவில் கேட்டது)

தொழு நோயாளர்களுக்கு ஓர் இல்லம்

1959ம் ஆண்டு அன்னை அவர்கள் மேற்கு வங்காள அரசின் உதவியுடன் ஒரு தொழு நோய் மருத்துவமனையை திறந்தார்.

கண்கவர் தோட்டங்களின் மத்தியில் இரு நூறு குடியிருப்புகளைக் கொண்ட சாந்தி நகரில் தொழு நோயாளிகள் நிம்மதியுடன் சிகிச்சை பெற்றனர். அந்த சாந்தி நகர் இப்போதும் ‘காந்திஜி பிரேம் நிவாஸ்’ என்ற பெயருடன் தொழு நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை செய்துவருகிறது.

இங்கு தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமின்றி செங்கல் சூளை, பால் பண்ணை, அச்சுக் கூடம் என பல தொழில்வசதிகளை செய்து தந்ததன் மூலம் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுக்கப்பட்டது.

குழந்தைகள் காப்பகம் - சிசுபவன்

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் மோட்ச ராச்சியம் இத்தகையோருடையதே என்ற யேசு பிரானின் அறிவுரைக்கேற்ப அன்னை அவர்கள் ‘அழிக்கப்படப் பிறந்தோர் குழந்தைகள் அல்ல. அவர்கள் இவ்வுலகத்தை ஆளப் பிறந்தவர்கள். ஆகவே வளர்க்க முடியாவிட்டால் என்னிடம் கொடுங்கள்’ என்று இருகரம் நீட்டி அனாதையாய் தெருக்களில் விடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்க்க அவர் 1953ம் ஆண்டு துவக்கிய இல்லத்தின் பெயர்தான் நிர்மல் சிசுபவன்.

அனாதைத் தாய்மார்களுக்கும் உதவி

அனாதையாய் விடப்பட்ட தாய்மார்களுக்கும் இவ்வில்லத்திலேயே அன்னை அவர்கள் புகலிடம் அளித்தார். வஞ்சகர்களால் ஆசைக் காட்டி மோசம் செய்யப்பட்ட அனாதை இளம் பெண்களுக்கு வாழ்வளிக்கும் அற்புத இல்லமாக அமைந்தது இவ்வில்லம்.

ஏழை எளியவர்களுக்கு கல்வி வசதி

1957ம் வருடம் ஐந்தே ஐந்து அனாதை மாணவர்களைக் கொண்டு துவக்கப்பட்ட இலவச கல்வியளிக்கும் பள்ளி 1958ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் சுமார் 200 மாணவர்களைக் கொண்ட பள்ளியாக உருவெடுத்தது.

நூறு மாணவ மாணவியரைக் கொண்டு திகழ்ந்த எந்த ஒரு பள்ளிக்கும் கட்டிடம் கட்டித் தருகின்ற கொல்கொத்தா மாநகராட்சியின் கவனத்தை அன்னையின் பள்ளியும் கவர்ந்தது. அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன் அன்னையின் கல்விப் பணி முழு வீச்சில் தொடர்ந்தது. அடுத்த ஐந்தே ஆண்டுகளில் கொல்கொத்தா நகரெங்கும் விரிவடைந்து பதினான்கு பள்ளிகளானது.

மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தன் சபை கன்னியர்களை ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பினார்.

அத்துடன் திருப்தியடையாத அன்னை தன் தொழு நோயாளிகளின் இல்லத்தில் வசித்துவந்தவர்களின் குழந்தைகளுக்கென பதினைந்தாவது பள்ளியைத் துவக்கி அவர்களுடைய குழந்தைகளின் அறிவு கண்களையும் திறந்து வைத்தார்.

எல்லாம் இறைவன் சித்தம்

மரம் வைத்தவன் கண்டிப்பாய் தண்ணீரையும் ஊற்றுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர் அன்னை தெரேசா.

அவர்கள் துவக்கிய அன்பின் பணியாளர்கள் சபை உலகெங்கும் ஒரு ஆலமரத்தைப் போல் கிளைவிட்டு வளர்ந்து நின்றபோது ஏற்பட்ட சகலவிதமான பிரச்சினைகளையும் இறைவனின் மேல் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையின் துணையுடன் எதிர்கொண்டார்.

மேலை நாடுகளிலும் அன்னையின் பணி பரவுதல்

1960ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பை ஏற்ற அன்னை லாஸ்வேகஸ் நகரில் நடந்த மகளிர் தேசிய மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் இந்திய மண்ணில் தனக்கிருக்கும் கடமைகளை எடுத்துரைத்ததைக் கேட்ட பெண்களும், தாய்மார்களும் மனமுவந்து நன்கொடைகளை வாரி வழங்கினர்.

அங்கிருந்து ஸ்விட்சர்லாந்து, உரோமாபுரி, ஜெர்மன் போன்ற பல மேலை நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து தன் இல்லங்களின் பணிகளுக்கு உதவுங்கள் என்று இருகரம் நீட்டி யாசித்தார்.

மேலை நாடுகளில் அவருடைய சேவைக்கு பெருத்த ஆதரவு கிடைக்கவே அவருடைய இல்ல கிளைகள் ஆஸ்திரேலியா, ஜெர்மன்,ஆப்பிரிக்கா உட்பட உலகிலுள்ள ஏறத்தாழ ஐம்பது நாடுகளில் தன்னுடைய சபையை விரிவு படுத்தினார். இன்றும் கொல்கொத்தாவிலும் இந்தியா முழுவதும் அன்னையின் சபையைச் சார்ந்த கன்னியர்கள் நடத்திவந்த இல்லங்கள் ஆற்றும் சேவைக்கு தேவையான பண வசதி இதுபோன்ற நாடுகளிலிருந்தே வருகின்றது.

அன்னையின் சேவையால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடரான எட்வர்டு கென்னடி ஒருமுறை கொல்கொத்தாவுக்கு அன்னையைக் காண வந்திருந்தார். அச்சமயம் அன்னை ஒரு நோயாளியைத் தொட்டு மருத்துவம் செய்துக் கொண்டிருந்தார். எட்வர்ட் கென்னடி அன்னையின் கரங்களைப் பற்றி குலுக்க ஆசைப் பட்டார்.

அன்னை, ‘ என் கை அழுக்காக இருக்கிறது. இதோ வருகிறேன்.’ என்று கைகளைக் கழுவச் சென்றார். உடனே கென்னடி அவர்கள் ‘யார் சொன்னது? உங்கள் கைதான் புனிதமான கை. இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கும் கை’ என்று அன்னையின் கரங்களைப் பற்றி குலுக்கி தன் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.

இவர் பெற்ற விருதுகளும் பரிசுகளும்

1964. மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

1971 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும், ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்

1972 - அமைதி விருதான நேரு விருது

1976 விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா’ விருது

1978 இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்’ விருது

1979 - நோபல் பரிசு

1980 இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா

1983 BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஷ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

1991 குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற பாரதிய வித்யா பவன் உறுப்பினர் விருது

1992 பாரதத்தின் தவப் புதல்வி விருது மற்றும் பாரத சிரோமணி விருது

1993 ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்’ விருது

1995 கொல்கொத்தாவின் நேதாஜி விருது மற்றும் தயாவதி மோடி அறக்கட்டளை விருது

1996 ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை’ விருது

என உலகில் இவருக்கு அளிக்கப்படாத விருதுகளே இல்லை எனப்படும் அளவுக்கு அன்னை திரேசா அவர்கள் உலகெங்கும் உள்ள மக்களால் கவுரவிக்கப்பட்டார்.

இதில் போப்பாண்டவரும் உலகெங்கும் உள்ள கிறீத்துவ சபைகளும், அவர்கள் நடத்துகின்ற பல்கலைக் கழகங்களும் அளித்த விருதுகள் சேர்க்கப்படவில்லை!

இத்தனை விருதுகளும், பாராட்டுகளும் பெற்ற அன்னை தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை, ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.

முதுமைக் காலம்

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய் பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார்.

இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சார்ந்த சகோதரி நிர்மலா அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார்.

1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் நாள் வெள்ளிக் கிழமை என்றும் போல் காலையில் எந்தவித அறிகுறியும் இன்றி கண்விழித்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் நெஞ்சு வலி வந்தது. அவருடைய சிறப்பு மருத்துவரான அஸீம் பர்தன் பரிசோதனைக்குப் பிறகு வழக்கம்போல் தன்னுடைய அன்றாட பணிகளில் ஈடுபட்டார்.

அன்று மாதத்தின் முதல் வெள்ளியாதலால் வழக்கம்போல் காலை உணவைத் தவிர்த்து தியானத்தில் ஈடுபட்டார். கன்னியர்களின் கட்டாயத்தின் பேரில் மதிய உணவை உண்டு ஓய்வெடுத்தார்.

இரவு உணவையும் முடித்துக் கொண்டு உறங்க செல்லும் நேரத்தில் மீண்டும் நெஞ்சு வலி அதிகரிக்கவே மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் ‘இயேசுவே, இயேசுவே’ என்ற வார்த்தைகளுடன் அன்னையின் உயிர் பிரிந்தது.

அவருடைய இறுதிச் சடங்கில் பங்குகொள்ளாத உலகத் தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம் கூடி அன்னைக்கு கண்ணீர் அஞ்சலி செய்தது.

கொல்கொத்தா நகரில் மட்டுமல்ல, இந்தியாவின் மூலை முடுக்களிலும் உலகெங்கும் பரவி கிடக்கும் அன்னையின் சபை கன்னியர்கள் நடத்தும் இல்லங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் எல்லாவற்றின் வழியாக பலன் பெறும் கோடானு கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்கிறார் அன்னை திரேசா என்னும் ஆக்னஸ்.

இவரும் நான் பெருமையுடன் வணங்கும் மாமனிதர்களில் ஒருவர்.

*****

மூலம்:அருளாளர் அன்னை தெரேசா - ஆசிரியர் பட்டத்தி மைந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான் பதிவு...........விளக்கம் தேவைபடுபவர்களுக்கு பதிலாக் அமையும் என நம்புகிறேன்.

ஈழமகள் உங்களுக்கு எனது பாராட்டும் நன்றிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது குற்றசாட்டை மறுப்பதற்கு என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை. அன்னை தெரேசாவை ஒவ்வொரு நாளும் நான் தொடரவில்லை என்பதே உண்மை.

இந்தவிடயத்தை இரண்டு கோணத்தில் வைத்தும் வாதடலாம் ஆனால் இதுதான் சரியானது என்ற தேர்வுக்கு வருவது அவரவர் மனங்களை பொறுத்தது. ஒன்று உங்களுடைய பார்வை மற்றையது................. அன்னை தெரேசா ஜேசுவை முழுமையாக நம்பியவர் அவர் அந்த மத்திற்கு முற்றுமாக தன்னை அர்பணித்தவர். ஆக துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு அதுவே சரியான பாதை என்று அவர் கூற முற்பட்டிருந்தால் அதில் எப்படி முரண்படலாம் என்பது எனக்கு புரியவில்லை.

அந்த மத்தின் பெயரால் மோசடிகளை செய்ய முற்பட்டார் என்றால் அது அவர் மீது குற்றங்களை சுமத்த ஏதுவானதாக இருக்கும். ஆனால் இந்த பாதையிலே நான் ஒளியை பார்க்கிறேன் துன்பத்தில் இருக்கும் நீங்களும் வாருங்கள் என்பது அவருடைய நம்பிக்கையை பொறுத்து. ஆனால் அது ஒரு மூடநம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அதை முற்றுமாக நம்பியவர் அதற்காக தன்னை அர்பணித்து கடைசிவரையிலும் போராடியவர் அன்னை தெரசாவை ஒரு போராளியாகவே நான் ஏற்று கொள்கிறேன். மதம் அவருடைய சொந்தவிடயம்.

ஜேசுவையும் நான் இதே போன்றே ஏற்றுகொண்டிருக்கிறேன் கடைசிவரையிலும் தனது தத்துவத்திற்காக போராடிய ஒரு போராளி. சிலுவை சுமப்பது என்பதை மறுத்திருக்கலாம் மரணம்தான் முடிவு என்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்தது. ஆனால் தனது தத்துவத்தை நிருபிக்க வேண்டும் அதற்கு எந்த வலியையும் ஏற்கிறேன் என்பது ஒரு போராளிக்கே உரித்தானது.

அன்னை தெராசாவை கிறிஸ்தவராக மட்டும் பார்கிறீர்களா?

ஒரு போராளியாகவும் பார்க்கமுடிகிறதா?

என்ற கேள்வியில் எமது விடை எதுவோ அதை பொறுத்தே தெரசாவின் பணியை நாம் எவ்வாறு எடை போடுகிறோம் என்பது தங்கியுள்ளது.

ஆனால் நிஜம் என்ற ஒன்று உங்கள் முன்னாலும் என் முன்னாலும் நிற்கின்றது. அதுதான் எத்தனையோ கோடிசுவரர்கள் வாழ்ந்த இந்தியாவில் எத்தனையோ கோடி பணங்களை வைத்திருந்தவர்களால் செய்ய முடியாததை. வெறும் கையுடன் வந்த அன்னை தெராசாவால் சாதிக்க முடிந்தது. எத்தனையோ அனாதை பிள்ளைகளுக்கு வாழ்வு கொடுக்க அவரால் முடிந்தது. என்னாலும் உங்களாலும் அது முடியவில்லை என்பதே உண்மை.

இறுதியில் அவர் மதம் மாற்றினார் என்ற குற்றசாட்டை நீங்கள் முன்வைத்தால்? என்னால் மறுக்க முடியாது.

எதை எதையெல்லாம் ஊட்டினார் என்று பிரித்து பிரித்து பார்க்க என்னால் முடியவில்லை. ஆனால் பசித்தவனுக்கு உணவு ஊட்டினார் என்பதையே நான் பார்க்கிறேன்.

தலித்துகள் என்று வீதியில் தூக்கியெறிந்து காலால் மிதிபட்டு கொண்டிருந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துவோ கிறிஸ்ணணோ அல்லாவோ யார் வருகிறார்கள் என்று பார்க்க நேரம் இருக்வில்லை. உணவை கொண்டு யார் வந்தான் என்பதை பார்க்கவே பசி இருந்திருக்கும். அதற்கான நன்றி கடன் என்பது அவர்களது சொந்த விடயமாகவும் எடுக்கலாம்.............. பொதுவிடயமாகவும் எடுக்கலாம்.

தவிர தெரசாவை பாப்பரசர் கூப்பிட்டார்.......

ஐநா கூப்பிட்டார்..........

நோபல் பரிசுகாரர் கூப்பிட்டார்.........

ஐரோப்பியர் கூப்பிட்டார்..........

என்றால் அது எல்லாம் சுயவிளம்பரமே என்பதில் எனக்கு எந்த வேறு கருத்தும் கிடையாது. அன்னை தெரசாவின் போராட்டம் வெற்றியடைந்த போததூன் எல்லோரும் கூப்பிட்டார்கள். ஆனால் வெற்றியடைய தினமும் எவ்வளவோ போராடினார் இளமையிலே என்பதே எனது பார்வை.

ஒரு வாய் சோற்றுக்காக மதம் மாறலாம் அது தப்பில்லை என்றால் டக்கிலஸ்சும் மக்களுக்கு ஏதோ கொஞ்சம் நன்மை செய்கிறார் அவரை உங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளலாமே!...மகிந்தா நாட்டை பிரித்து தருவேன் ஆனால் அனைவரும் சிங்களவராக மாறுங்கள் என்றால் உடனே மாறுவீர்களா?...அன்னை திரேசாவை பற்றி என்னாலும் பல விமர்சனங்களை வைக்க முடியும் ஆனால் நான் எழுத மாட்டேன்...புலி எதிர்ப்பு ஊடகங்களிலும் இப்போது எமது மதத்தை விமர்சித்து எழுத தொடங்கி உள்ளார்கள்...புலி ஆதரவாளாரான நீங்கள் புலி எதிர்ப்பு ஆதரவாளார்களுடன் இந்த விடயத்தில் ஆவது ஒத்துப் போவதையிட்டு மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாய் சோற்றுக்காக மதம் மாறலாம் அது தப்பில்லை என்றால் டக்கிலஸ்சும் மக்களுக்கு ஏதோ கொஞ்சம் நன்மை செய்கிறார் அவரை உங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளலாமே!...மகிந்தா நாட்டை பிரித்து தருவேன் ஆனால் அனைவரும் சிங்களவராக மாறுங்கள் என்றால் உடனே மாறுவீர்களா?...அன்னை திரேசாவை பற்றி என்னாலும் பல விமர்சனங்களை வைக்க முடியும் ஆனால் நான் எழுத மாட்டேன்...புலி எதிர்ப்பு ஊடகங்களிலும் இப்போது எமது மதத்தை விமர்சித்து எழுத தொடங்கி உள்ளார்கள்...புலி ஆதரவாளாரான நீங்கள் புலி எதிர்ப்பு ஆதரவாளார்களுடன் இந்த விடயத்தில் ஆவது ஒத்துப் போவதையிட்டு மகிழ்ச்சி.

நீங்கள் என்ன சொல்ல முனைகிறீர்கள் என்பது என்னால் சரியாக புரியபடவில்லை.

அன்னை தெராசாவையும் ஒட்டுகுழுக்களையும் ஒப்புக்கு தேடுவது என்பதில் எந்த ஒற்றுயுமில்லை.

ஒருவாய் சோற்றுக்கு மதம் மாறுவது?

இதை எங்கிருந்து பெற்றீர்கள் என்பது புரியவில்லை. நீங்கள் இந்தியாவை சினிமாவில் பாhத்துகொண்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். அனாதைகளாக யாருமற்று உணவற்று உடைகளற்று உயர்ந்த மனிதர்கள் என்று பெயரெடுத்தவர்களின் கால்களுக்குள் மிதிபட்டுகொண்டிருந்த குழந்ததைகளின் வலியும் வேதனையும் உங்களுக்கு எட்டவில்லை என்பதை உங்கள் கருத்துகள் சொல்கின்றன.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்............

அவர்களுக்கு வருவது ஜேசுவா காந்தியா புத்தனா சித்தனா என்பதெல்லாம் யோசித்து அறிய கூடிய அறிவே அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களின் மூளையில் கூட பசியின் வலியை தவிர வேறெதையும் அறியாதார் அவர்கள். இப்போது அணைப்பதற்கு ஒரு கரம் கிடைத்தால்............?

நானும் நீங்களும் சொர்க்கம் என்று பேசிகொள்வோமே........ இங்கில்லாததெல்லாம் இன்பங்கள் மட்டுமே சூழ்திருக்க கூடிய ஒரு இடமாக கருதுவோமே. அந்த சொர்க்கம் அவர்களுக்கு அதுதான்.

அதை அன்னை தெராசாதான் அவர்களுக்கு கொடுத்தார். கடவுள் என்று ஒருவரை அவர்கள் ஏற்றுகொள்வதாக இருந்தால் அவர்களுக்கு அன்னை தெராசாதான் கடவுள். ஆனால் அவர் எனக்கொரு கடவுள் உண்டு உங்களுக்கும் அவரே கடவுள் அவருக்கு முன்னால் நானும் நீங்களும் குழந்தைகள் என்றார். இதில் நீங்கள் எந்த இடத்தில் முரண்படுகன்றீர்கள் என்பது புரியவில்லை.

நான் முரண்படுவதற்கு எத்தனையோ இருக்கின்றது............... ஒரு நாளிலேயே கோடி பணம் சேர்க்கும் இந்து கோவில்கள் பல அதே இந்தியாவில்தான் இருந்தது இருக்கின்றது. ஆனால் அதை நான் ஒரு விமர்சனத்திற்கும் இழுக்கவில்லை.

காரணம் அன்னை தெரசாவை நான் ஒரு போராளியாகவே ஏற்றுகொண்டுள்ளேன். நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் அவர் கிறிஸ்தவத்தை முழுமையாக நம்பினார். ஆனால் அது ஒரு மூடநம்பிக்கையாக கூட இருந்திருக்கலாம்.

தமிழர்களுடைய காவல்தெய்வங்களான கரும்புலிகளும் தமது தலைவனின் காலத்தில் ஈழம் மலரும் தமக்கு பின்னால் பல இளைஞரும் யுவதிகளும் வருவார்கள் நிற்சயம் ஈழம் மலரும் என்ற அசையாத நம்பிக்கை அவர்களுக்கு தமது உயிரை குண்டுகளுக்கு வெடியாக்கும் போது இருந்த ஒரே நம்பிக்கையும் அதுதான். அது எவ்வளவு தூரம் உண்மையானது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டு நிற்கின்றது. எதிரியின் மூல திட்டமே இளைய தலைமுறையை இல்லாது செய்வது தயவு செய்து வாருங்கள் ஒரு கரம் தாருங்கள் என்ற கடைசிநேர குரலுக்கு யாரும் போகவில்லை........... கட்டாய ஆட்சேர்ப்பு கூட கரும்புலிகள் வாழ்ந்த நாட்டில் நடந்து முடிந்துள்ளது. அவைகள் எனக்கு தேவையில்லாதவைகள் நான் கரும்புலிகளை போராளிகளாக ஏற்றுகொள்கிறேன் இதுதான் எனது இடம். கரும்புலிகளின் நம்பிக்கை என்பதற்கும் அவர்கள் போராளிகளாக வாழந்து இறந்தார்கள் என்பதற்கும் இடையில் முரண்பட்டுகொள்ள என்ன இருக்கின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.

எனக்கு அன்னை தெரேசாவை நேரடியாக தெரியாது.............

செய்திகள் புத்தகங்கள் ஊடாகத்தான் தெரியும். ஆக அவரிடம் பல குறைகள் இருந்திருக்கலாம் செய்திகள் இருட்டடிப்பு செய்திருக்கலாம். அந்த உண்மைகளை வேறு வாயிலாக நீங்கள் அறிந்திருக்கலாம். உங்களிடம் விமர்சனங்கள் உண்டு என்று எழுதுகின்றீர்கள் ஆனால் என்ன என்று எழுதமாட்டேன் என்பதில் ஏதுவுமே இல்லை. இது ஒரு பொது கருத்துகளம் உங்களுடைய வாதங்களை நீங்கள் முன்வைத்தால்தான் அன்னை தெரேசாவை பற்றி முழுதுமாக அறிய எமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு தெரிந்தவைகளை எழுதுங்கள். ஆனால் யாரையும் எதைபற்றிய உண்மைகளையும் எழுதாதீர்கள் என்று மட்டும் எழுதாதீர்கள். தப்புகள் தண்டனை;குள்ளாகாது போனாலும் பரவாயில்லை இனியும் தொடரவாவது வாய்ப்பு கொடுக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை தெராசா

அவர் ஒரு பகுதியினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டவரல்ல. உலகத்தால்

அதிலும் இந்திய மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்

எனவே அவர் பற்றிய விவாதத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

தெய்வங்கள் என்று நாம் கும்பிடுபவை செய்யாதவற்றை இது போன்ற சில மனிதர்கள் செய்திருப்பது எம்மை எரிச்சலூட்டுமாயின் நாம் மனிதர்களாக இருக்க தகுதியற்றவர்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் உண்மைவிடயங்கள்...

சாடைமாடையாக இப்போதுதானே கசிகின்றது.

Link to comment
Share on other sites

இப்பிடி ஒரு அருமையான விளக்கம் வேறு யாரும் தர முடியுமா என்பது சந்தேகம் தான். சோற்றைக் காட்டி மதம் மாற்றினால், சோற்றையும் மறந்து, சோறு தேடியவனின் பசியையும் மறந்து சோறு கொடுத்தவனைக் குற்றவாளியாக்குவதே இப்ப மதப் பற்று ஆகிப் போயிற்றுது.

அருமையான விளக்கம் ஐயா பசித்திருப்பவனுக்கு சோற்றை கொடுத்தால் மதம் மாற்றலாம். விட்டால் இன்னும் சொல்வீர்கள்.

இப்படித்தான் சில இடங்களில் அநாதரவாக விடப்படும் பெண்கள் சிறுவர்களை சிலர் அடைக்லம் கொடுத்துவிட்டு பின்னர் தகாத நடவடிக்ககைளில் ஈடுபடுத்தி அவர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். இதையும் நீங்கள் சரி என்கிறீர்களா. கேவலம்.

உண்மையிலேயே சமூகத்தொண்டு செய்யும் ஆர்வமிருப்பவர்கள் சோற்றையும் தொழிலையும் வழங்குவார்களேயொழிய மதத்தினை மாற்றமாட்டார்கள். அப்படி அவர்கள் மாற்றுகின்றார்களாயின் அவர்களின் நோக்கம் சமூகத்தொண்டல்ல . மத மாற்றமே. அதாவது இலாப நோக்கம். இங்கு அன்னை தெராசாவை பற்றி நான் எதுவும் கதைக்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் தொடர்பான ஆழமான அறிவு எனக்கில்லை.

ஆனால் தென் தமிழீழத்தில் எத்தனையோ இப்படியான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தென் தமிழீழத்தில் சில பிரதேசங்கள் இனவழிப்பினால் மிகவும் கோரமாக பாதிக்கப்பட்டவை. பொருளாதாரத்தில் பின் தங்கியவை. கணவனை பறிகொடுத்த ஏராளமான பெண்கள். யுத்தத்தினால் தாய் தந்தையரை இழந்த மிகவும் வறிய குழந்தைகளை குறித்த கிறிஸ்தவ மத நிறுவனங்களால் நடத்தப்படும் இல்லங்களில் சேர்க்கும்போது அவர்கள் கூறுவார்கள் எமது மதத்திற்கு குழந்தைகள் மாற வேண்டும் என்று. உங்களுக்கு வீடு கட்டி தருகின்றோம். உங்களுக்கு தொழில் உபகரணங்கள் தருகிறோம். ஆனால் எமது மதத்திற்கு மாறவேண்டும் என்று. இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். மாறத்தான் செய்வார்கள். இதுதான் தொண்டு நோக்கமா. இல்லை. வியாபாரம். மத வியாபாரம்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் தருகின்றீர்கள். உங்கள் சேவை நோக்கை பாராட்டுகின்றோம். ஆனால் அந்த பிஞ்சுகளை அவர்கள் மதங்களில் வளர விடுங்கள். அவர்கள் வளர்ந்த பின் ஒரு முடிவுக்கு வந்து தனக்கு விரும்பிய மதத்தை பின்பற்ற அவர்களுக்கு சுதந்திரம் வழங்குங்கள். அதுதான் உண்மையான சேவை. அதை விடுத்து உதவி செய்யும் முன்பே மத மாற்றம் செய்வது மத வியாபாரமே ஒழிய தொண்டில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல முனைகிறீர்கள் என்பது என்னால் சரியாக புரியபடவில்லை.

அன்னை தெராசாவையும் ஒட்டுகுழுக்களையும் ஒப்புக்கு தேடுவது என்பதில் எந்த ஒற்றுயுமில்லை.

ஒருவாய் சோற்றுக்கு மதம் மாறுவது?

இதை எங்கிருந்து பெற்றீர்கள் என்பது புரியவில்லை. நீங்கள் இந்தியாவை சினிமாவில் பாhத்துகொண்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். அனாதைகளாக யாருமற்று உணவற்று உடைகளற்று உயர்ந்த மனிதர்கள் என்று பெயரெடுத்தவர்களின் கால்களுக்குள் மிதிபட்டுகொண்டிருந்த குழந்ததைகளின் வலியும் வேதனையும் உங்களுக்கு எட்டவில்லை என்பதை உங்கள் கருத்துகள் சொல்கின்றன.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்............

அவர்களுக்கு வருவது ஜேசுவா காந்தியா புத்தனா சித்தனா என்பதெல்லாம் யோசித்து அறிய கூடிய அறிவே அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களின் மூளையில் கூட பசியின் வலியை தவிர வேறெதையும் அறியாதார் அவர்கள். இப்போது அணைப்பதற்கு ஒரு கரம் கிடைத்தால்............?

நானும் நீங்களும் சொர்க்கம் என்று பேசிகொள்வோமே........ இங்கில்லாததெல்லாம் இன்பங்கள் மட்டுமே சூழ்திருக்க கூடிய ஒரு இடமாக கருதுவோமே. அந்த சொர்க்கம் அவர்களுக்கு அதுதான்.

அதை அன்னை தெராசாதான் அவர்களுக்கு கொடுத்தார். கடவுள் என்று ஒருவரை அவர்கள் ஏற்றுகொள்வதாக இருந்தால் அவர்களுக்கு அன்னை தெராசாதான் கடவுள். ஆனால் அவர் எனக்கொரு கடவுள் உண்டு உங்களுக்கும் அவரே கடவுள் அவருக்கு முன்னால் நானும் நீங்களும் குழந்தைகள் என்றார். இதில் நீங்கள் எந்த இடத்தில் முரண்படுகன்றீர்கள் என்பது புரியவில்லை.

நான் முரண்படுவதற்கு எத்தனையோ இருக்கின்றது............... ஒரு நாளிலேயே கோடி பணம் சேர்க்கும் இந்து கோவில்கள் பல அதே இந்தியாவில்தான் இருந்தது இருக்கின்றது. ஆனால் அதை நான் ஒரு விமர்சனத்திற்கும் இழுக்கவில்லை.

காரணம் அன்னை தெரசாவை நான் ஒரு போராளியாகவே ஏற்றுகொண்டுள்ளேன். நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் அவர் கிறிஸ்தவத்தை முழுமையாக நம்பினார். ஆனால் அது ஒரு மூடநம்பிக்கையாக கூட இருந்திருக்கலாம்.

தமிழர்களுடைய காவல்தெய்வங்களான கரும்புலிகளும் தமது தலைவனின் காலத்தில் ஈழம் மலரும் தமக்கு பின்னால் பல இளைஞரும் யுவதிகளும் வருவார்கள் நிற்சயம் ஈழம் மலரும் என்ற அசையாத நம்பிக்கை அவர்களுக்கு தமது உயிரை குண்டுகளுக்கு வெடியாக்கும் போது இருந்த ஒரே நம்பிக்கையும் அதுதான். அது எவ்வளவு தூரம் உண்மையானது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டு நிற்கின்றது. எதிரியின் மூல திட்டமே இளைய தலைமுறையை இல்லாது செய்வது தயவு செய்து வாருங்கள் ஒரு கரம் தாருங்கள் என்ற கடைசிநேர குரலுக்கு யாரும் போகவில்லை........... கட்டாய ஆட்சேர்ப்பு கூட கரும்புலிகள் வாழ்ந்த நாட்டில் நடந்து முடிந்துள்ளது. அவைகள் எனக்கு தேவையில்லாதவைகள் நான் கரும்புலிகளை போராளிகளாக ஏற்றுகொள்கிறேன் இதுதான் எனது இடம். கரும்புலிகளின் நம்பிக்கை என்பதற்கும் அவர்கள் போராளிகளாக வாழந்து இறந்தார்கள் என்பதற்கும் இடையில் முரண்பட்டுகொள்ள என்ன இருக்கின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.

எனக்கு அன்னை தெரேசாவை நேரடியாக தெரியாது.............

செய்திகள் புத்தகங்கள் ஊடாகத்தான் தெரியும். ஆக அவரிடம் பல குறைகள் இருந்திருக்கலாம் செய்திகள் இருட்டடிப்பு செய்திருக்கலாம். அந்த உண்மைகளை வேறு வாயிலாக நீங்கள் அறிந்திருக்கலாம். உங்களிடம் விமர்சனங்கள் உண்டு என்று எழுதுகின்றீர்கள் ஆனால் என்ன என்று எழுதமாட்டேன் என்பதில் ஏதுவுமே இல்லை. இது ஒரு பொது கருத்துகளம் உங்களுடைய வாதங்களை நீங்கள் முன்வைத்தால்தான் அன்னை தெரேசாவை பற்றி முழுதுமாக அறிய எமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு தெரிந்தவைகளை எழுதுங்கள். ஆனால் யாரையும் எதைபற்றிய உண்மைகளையும் எழுதாதீர்கள் என்று மட்டும் எழுதாதீர்கள். தப்புகள் தண்டனை;குள்ளாகாது போனாலும் பரவாயில்லை இனியும் தொடரவாவது வாய்ப்பு கொடுக்காதீர்கள்.

[/quote

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்பவரே உண்மையான கருணை உள்ளம் கொண்டவர்...அன்னை திரேசா தனது நாட்டை விட்டு இந்தியாவிற்கு போனதே மக்களை மதம் மாற்றவே...அவர்களின் வறுமையை இவர் தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டார்...உண்மையாகவே இவர் கருணையும்,இரக்கமும் கொண்ட சமூக சேவையாளராக இருந்தால் முதலாவது இவர் தனது நாட்டில் உள்ள மக்களுக்கு சேவை செய்திருப்பார்[அதற்கு அவசியம் இருக்காது ஏனென்றால் அவரது நாட்டில் அனைவரும் கிரிஸ்தவர்கள்]இரண்டாவது இந்தியாவிற்கு சேவையாற்ற சென்றாலும் மக்கள் சேவையே அவரது முக்கிய கடமையாக கொண்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையாற்றி இருப்பார் ஆனால் அவர் சென்றதே மதம் மாற்ற அதில் அவர் வெற்றி பெற்றார்...உடனே பாப்பரசரில் இருந்து அனைவரும் கூப்பிட்டார்கள்...இந்த உலகத்தில் அன்று தொட்டு இன்று வரை வென்றவனுக்கே மதிப்பு தோற்றவனுக்கு இல்லை.[ஏதாவது சாதித்தவர்களையே பாராட்டுவார்கள்]

நீங்கள் எழுதியிருந்தீர்கள் கிரிஸ்தவ மதத்தில் சாதி பார்க்க மாட்டார்கள் என...அவர்களது வேலை மதம் மாற்றுவது அவர்கள் சாதி பார்த்து தேவாலயங்களுக்கு வராதே என சொன்னால் உடனே அவ் மக்கள் அடுத்த பிரிவு கிரிஸ்தவ சபைக்கு போய் விடுவார்கள் அடித்தது எவ்வளவு பேர் அவர்களது சபைக்கு போகின்றார்களோ அதற்கு ஏற்ற மாதிரி தான் வெளிநாட்டில் இருந்து காசு அனுப்புவார்கள்... அதனால் தான் அவர்கள் சாதி பார்ப்பதில்லை...கிரிஸ்தவ சபைகளுக்கு அனைத்து மக்களையும் அழைப்பவர்கள் அதாவது அதில் உயர் சாதியினர் அதே தாழ்ந்த மக்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்களா? ஆக மொத்தத்தில் எல்லோரும் அதாவது இந்துக்களும்,கிரிஸ்தவர்களும் சாதி பார்த்தவர்கள் தான்..இந்துகள் தெரிந்தே செய்தார்கள் கிரிஸ்தவர்கள் ஒளித்து செய்தார்கள் அது தான் உண்மை.

இக் கருத்துகள் யாராவது கிரிஸ்தவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...அவர்கள் எங்கள் மதத்தை[மனத்தை] புண்படுத்துவதால் தான் நானும் இப்படி எழுத வேண்டி உள்ளது.

போராளிகளினதும்,கரும்புலிகளதும் தியாகத்தை அவருடன் ஒப்பிடுவதே மிகப் பெரிய பிழை இவர்கள் எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் எங்களுக்காக தம்மை அர்பணித்தவர் அன்னையை மாதிரி எதுவும் எதிர்பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களாகிய நாங்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மீது குண்டுபோட்டோம்............ அவர்கள் எம்மீது போட்டார்கள்.

என்ன கொஞசம் கூடுதலான அளவில் போட்டார்கள்.

தமிழர்கள் அதிக அளிவில் இறந்திருந்தால் சிங்களவர்களை மன்னித்துவிடுங்கள்!

உங்களுடைய கருத்துக்கான பதில் இதுவல்ல பின்பு எழுதுகிறேன். இப்போது நேரமில்லை..........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.