Jump to content

கொம்பியூட்டர் படிக்க போன.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டர் படிக்க போன விசுகு.......

அது 1995 இல்.

ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று.

அப்போ இரண்டு நேர வேலை. ஆனால்

தெரிந்து கொள்ளணும்.

இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு.

1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.)

வகுப்பும் தொடங்கியாச்சு.

கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Printer (Canon)இலிருந்து Scanner (AGFA) வரை வாங்கியாச்சு. எனக்கு என்ன செய்தாலும் என்ன வாங்கினாலும் திறமாக சில காலத்துக்கு பாவிக்கக்கூடியதாக இருக்கணும். (திருமணம் முடித்து 22 வருடம்என்றால் இலகுவாக புரிந்து கொள்வீர்கள்தானே.)

அப்ப வாங்கிய கொம்பியூட்டர் 500- MO Disque Dur அளவைக்கொண்டது Windows -95

பிள்ளைகளின் படத்தை போடுவது....

அதை மெருகேற்றுவது...

அதை திரையில் கொண்டுவருவது ....

அதை திரையில பறக்கவிடுவது என்று பல கேள்விகளால் வாத்தியே சலிச்சுப்போச்சு.

அப்போ DOS.... Bita....அது இது என்று கடினமாக உழைக்கவேண்டும்

உண்மையில் நான் கேட்கத்தொடங்கின பிறகுதான் வாத்தியே படிக்க ஆரம்பித்தது.

அப்படியே படம் பார்ப்பது

அதுக்கு கனநாளைக்கு பிறகுதான் தமிழ்பாட்டு இறக்கம் செய்யலாம்

அதுவும் இரவு செய்யவிட்டுவிட்டு படுத்தால் விடியவும் முடிந்திருக்காது

அல்லது 20 வீதம் 30 வீதத்துடன் நின்றிருக்கும்

இதனால் படுக்க இரவு 3 மணி 4 மணியும் ஆகும் அங்கால மனைவி புலம்புவது கேட்கும்

கடைசி வார்த்தை இதுகள் மனுசரே என்று.

அத்துடன் நிற்பாட்டிவிட்டு படுத்தால் இரவு கனவு முழுவதும் அதுதான்

ஏன் வேலை செய்யவில்லை….

எப்படி இதை கண்டுபிடிக்கலாம்…..

இது என்னோடு கூடப்பிறந்தது

கணக்கியல் படிக்கும்போது ஐந்தொகை இரு பக்கமும் சமனாகாது போய்விட்டால்.... இரவு கனவில் விடைவரும் எனக்கு.

உடன் எழுந்து செய்துவிட்டுத்தான் படுப்பேன். அதேபோல்தான் இதுவும்.

அப்போ விடியோ சிடியில் தான் ஒருசில பாடல்கள் வரும் இப்போ மாதிரி டிவிடி எல்லாம் கிடையாது

MP3 வும்கிடையாது. இங்கு MP3 வந்தது 2002 என்று நினைக்கின்றேன். நான் அப்போ கார் மாத்தினேன். அதற்கு MP3 முதன்முதலில் பூட்டியதாக ஞாபகம்

அதன் பின் சில MP3 பாட்டுக்களை மிகவும்கடினமாக உழைத்து தரையிறக்கம்செய்தேன்

இத்துடன் வீட்டுக்கு வரும் உறவுகள் எனது வேலைகளைப்பார்த்துவிட்டு பாராட்டியவர்கள்

மிகமிககுறைவு. இதை படித்து என்ன செய்யப்போறார். வேற வேலையில்லை என்று சொன்னவர்களே அதிகம்.

நான் இனி முடிவுரைக்கு வரவேணும். இதை இங்கு எழுதியமைக்கு இந்த முடிவுரைதான் பதில்கூறும்.

2003 இல் நான்படித்த இந்த படிப்பை மூலதனமாக கொண்டு சொந்தமாக ஒரு தொழில் தொடங்கினேன். 5 கொம்பியூட்டருடன் தான் இந்த தொழிலை ஆரம்பித்தேன். இன்று 35 கொம்பியூட்டருடன் எனது தொழில் வளர்ந்திருக்கிறது.

இதுவரை இங்கு வரும் எவரும் நான் அறிந்துள்ளவற்றை அறிந்திருக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடிய அளவுக்கு நான் அவர்களைவிட ஒரு படி மேலே வளர்ந்திருக்கின்றேன்.

எனது மகனை அவனது 3ஆவது வயதிலேயே கொம்பியூட்டரில் விளையாட விடுவேன். அதற்கும் எனது உறவுகள் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்று நான் 4அடி பாய்ந்தால் என் குட்டி 16 அல்ல 32 அடி பாயும். உறவுகள் அவன் கைவிரல் அசைவில் சொக்கிப்போய் நிற்கிறார்கள்.

இன்று எனது மனைவி எல்லோருக்கும் சொல்லும் வசனம்

அன்று அவர் படித்தது.

இன்று எமக்கு சோறு போடுது……

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா... முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. உங்கள் தொழிலில் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா நம்மால் முடியாது எதுவுமே இல்லை என்பதுக்கு நீங்களே ஒரு எடுத்துக்காட்டு... முயற்சி பண்ணினால் எதையும் சாதிக்க முடியும் என்றதை அழகாகவே சொல்லி இருக்கிறிர்கள்... நன்றி உங்கள் அனுபவங்களை எங்களோட பகிர்ந்து கொண்டமைக்கு...உங்கள் தொழில் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழமகள் மற்றும் சுஜி

இதை கதையாக நான் எழுதவில்லை

இதே தலைப்பில் ஒருவர் எழுதியிருந்தார்

அவருடன் தொடர்ந்து எழுதலாம் என்றுதான் எழுதினேன்

ஆனால் அது முன்பே இணைக்கப்பட்டது என்று மோகன் அண்ணா முற்றுப்புள்ளி போட்டிருந்தார்

அதனால்தான் இதை தனியே இணைத்தேன்

நேரமின்மையால் மெருகூட்ட முடியாது போய்விட்டது.

இங்குள்ள அனேகருக்கு என் நேரமின்மை தெரியும்

அதனால் போட்டுத்தள்ளமாட்டார்கள் என்ற துணிவில் அப்படியே விட்டுவிட்டேன்

Link to comment
Share on other sites

35 கணினிகள் 100 ஆக பெருகட்டும்.

முயற்சிக்கு வாழ்த்துகள் விசுகு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

விசுகு, நீங்கள் தூர நோக்குடன் கொம்யூட்டர் படிக்க தொடங்கி அதனையே..... உங்கள் தொழிலாக கொண்டு இருப்பது மகிழ்ச்சி.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடின் உழைப்பு உங்களுக்கு வாழ ஒரு வழி காட்டுவதையிட்டு மகிழ்ச்சி......

மேலும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் விச்சு. நான் கணனி படிக்கப்போய், தலையில் இருந்த முடியும், கண்ணில் குழியும் விழுந்ததுதான் மிச்சம். :(:(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசான்

தமிழ்சிறி

நிலாமதியக்கா

மச்சான்

மற்றும் ராஐவன்னியன்...

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

இந்த இடத்தில் இடித்து இடித்த தள்ளியும் ....

நிலத்தின் கீழ் உடைத்தும் பெருப்பித்தாயிற்று. இனி இங்கு இடமில்லை.

அடுத்தபடி..... வேறு இடத்தில் வேறு தொழில் விரைவில் ...

ஆனால் இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிடவேண்டும்

சின்னனிலிருந்து என்னிடம் ஒரு பழக்கமுண்டு. பார்த்து பார்த்துத்தான் காலை வைப்பேன். அத்திவாரம் இறுக்கமாக இருக்கவேண்டும் என்பதும் முக்கியம். அதைவிட இருப்பது போதும் என்ற மனம். அத்துடன் 100 வந்தால் 10ஆவது பகிர்ந்தளிக்கவேண்டும் என்ற குணம். இதை தாங்கள் என்ன மாதிரி புரிந்து கொள்வீர்களோ தெரியாது. நான் இங்கு எழுதுவதற்கு காரணம் பணம் என்னிடம் தங்காது என்று சொல்லத்தான். எனக்கு பின்னர் தொழில் தொடங்கியவர்கள் 5 6 தொழில் என்று தொடங்கி நன்றாகவும் இருக்கிறார்கள். உள்ளதையும் இழந்திருக்கின்றார்கள். ஆனால் நான் இதற்குள் இருந்த இடத்தைத்தான் முடிந்த அளவு பாவித்துள்ளேன்

நிச்சயமாக அடுத்தபடி உறவுகளுடன் சேர்ந்து பெரிதாக இருக்கும்

அது என்னுடைய இன்னொரு கனவை நிறைவு செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் விசுகு உங்களிற்கு

தொடரட்டும் உங்கள் முயற்சி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்று தூரநோக்குடன் தான் நானும் 97 இல் படித்தேன். ஒரு மாதம் தான் படித்தேன். எல்லாம் டோஸ் அது இது என்று கடைசியில நானாக முயற்ச்சி பண்ணியும் சின்னப் பொடியளோட சேர்ந்தும் கற்றுக் கொண்டதுதான் அதிகம். உங்கள் மகன் போலவே எனது பிள்ளைகளும் கணணியை பிரிச்சு மேயுறாங்கள்.நான் அன்று நினைத்தது எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற எங்கள் பிள்ளைகள் நினைக்கக் கூடாது.அவையளப் பேய்க்காட்ட ஏலாது என்ற நினைப்பு வரவேண்டும்.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.மென் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசா ...

புலவர்..

தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

இங்கு புலவர் குறிப்பிட்ட கருத்துப்பற்றி நான் கொஞ்சம் எழுதவேண்டும்

நான் இங்கு எனது உறவுகளுக்கு அடிக்கடி சொல்வது இது.

கணணி வாங்கித்தரும்படியும் அதை செயற்படத்தித்தரும்படியும் எனது உறவுகள் கேட்கும்போது நான் கூறுவது

தாங்கள் முதலில் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள்

பெற்றோருக்கும் சில விடயங்கள் தெரியும் என்பது மக்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்

இல்லையென்றால் மிகவும் ஆபத்தான சிக்கலான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்கவேண்டிவரும்

நான் வெளியிலிருந்து வந்தால் மக்களுக்கு தெரியும்

அப்பா எங்கெல்லாம் நாம் போயிருக்கின்றோம் என்பதை பார்த்துவிடுவார் என்று.

அதைவிட முக்கியமானது இது இதுக்குள் போகக்கூடாது

எவற்றை பார்க்கக்கூடாது

காட்டால்(Visa Card) பணம் செலுத்தும் எந்தவித கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொந்த முகவரிகளை அறிவித்தலை தவிர்த்தல்...

போன்றவற்றை சொல்வதற்கும் எமக்கு குறிப்பிட்ட கணணி அறிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்றாவது ஒருநாள் கற்றவை பின்பொரு காலத்தில் கட்டாயம் பலனைத் தரும்..உங்கள் முயற்சி, பின்னர் வெற்றிநடை போட்டது எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள். உங்களைப் பார்த்து ஒரு முன்னுதாரணமாக திகழவேண்டும்..கதையை கதையாக குறிப்பிட்ட விதமும் நன்று. மேலும் மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு உங்கள் தொழில் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

படித்து அதே துறையில் சொந்த தொழில் செய்வது போல் நிம்மதி இருக்கவே முடியாது. கணிணி துறையில் தான் நான் படித்து அதே துறையில் தான் வேலை செய்கிறேன். சிலவேளை ஏன் தான் இத்துறையில் படித்து வேறொருவருக்கு வேலை செய்கிறேன் என மனம் வெறுத்ததுண்டு. விசுகு, உங்கள் முயற்சி பாராட்டப்படவேண்டியது. மேலும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிப்பிரியன்

jhansirany

நுணாவிலான்

நன்றிகள் தங்களது கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும்..

பாரதிப்பிரியா எழுதியதுபோல் எந்த படிப்பும் எந்த மொழி அறிவும் வீண்போகாது

அதேபோல் நுணாவிலான் சொல்வதுபோல் இன்னொருத்தருக்கு எமது உழைப்பு போவதும் கவலைதான்.

நான் இன்னொன்றையும் எழுதினால் சிலவேளை அது இன்னொரு உதாரணமாகலாம்.

நானும் 6 மாதம்வரைதான் கணணி பற்றி ஒருவரிடம் படித்தேன்

அதன்பின் எனது சொந்த முயற்சிதான்.

அதேநேரம் எனக்கு படிப்பித்த எனது ஆசிரியர் என்னைப்போல் இதே தொழிலை சொந்தமாக ஆரம்பித்து நட்டமடைந்து

இன்று என்னிடம் வேலை செய்கின்றார்.

இது இன்னொரு பக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டர் படிக்க போன விசுகு.......

அது 1995 இல்.

ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று.

அப்போ இரண்டு நேர வேலை. ஆனால்

தெரிந்து கொள்ளணும்.

இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு.

1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.)

வகுப்பும் தொடங்கியாச்சு.

கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Printer (Canon)இலிருந்து Scanner (AGFA) வரை வாங்கியாச்சு. எனக்கு என்ன செய்தாலும் என்ன வாங்கினாலும் திறமாக சில காலத்துக்கு பாவிக்கக்கூடியதாக இருக்கணும். அப்ப வாங்கிய கொம்பியூட்டர் 500- MO Disque Dur அளவைக்கொண்டது Windows -95

பிள்ளைகளின் படத்தை போடுவது....

அதை மெருகேற்றுவது...

அதை திரையில் கொண்டுவருவது ....

அதை திரையில பறக்கவிடுவது என்று பல கேள்விகளால் வாத்தியே சலிச்சுப்போச்சு.

அப்போ DOS.... Bita....அது இது என்று கடினமாக உழைக்கவேண்டும்

உண்மையில் நான் கேட்கத்தொடங்கின பிறகுதான் வாத்தியே படிக்க ஆரம்பித்தது.

-------

-------

அதேநேரம் எனக்கு படிப்பித்த எனது ஆசிரியர் என்னைப்போல் இதே தொழிலை சொந்தமாக ஆரம்பித்து நட்டமடைந்து

இன்று என்னிடம் வேலை செய்கின்றார்.

இது இன்னொரு பக்கம்.

விசுகு உங்களுக்கு படிப்பித்த ஆசிரியர், தனது மணித்தியால சம்பளத்தை கருத்தில் எடுத்து தனது வேலையை ஏனோ... தானோ.... என்று செய்து கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக முழு ஈடுபாட்டுடன் இருந்தமை தான் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தந்தது. ஒரு வேலையில் இறங்கப் படாது..... இறங்கினால் வெற்றிக்கனியை எட்டக்கூடியதாக இருக்க வேண்டும், சில வியாபாரங்கள் ஆரம்ப ஒரு வருடத்தில் நட்டம் கொடுக்கலாம்..... அதையும் தாங்கும் சக்தி வேண்டும், விளம்பர யுக்தி , வாடிக்கையாளரை கவரும் கனிவு, எல்லாம் தனிப்பட்டட வியாபாரத்தில் முக்கியமாக நீங்கள் கவனத்தில் எடுத்த படியால் தான் இன்று , நீங்கள் வெற்றிப் படிகளில் நிற்கின்றீர்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு படிப்பித்த ஆசிரியர், தனது மணித்தியால சம்பளத்தை கருத்தில் எடுத்து தனது வேலையை ஏனோ... தானோ.... என்று செய்து கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக முழு ஈடுபாட்டுடன் இருந்தமை தான் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தந்தது.சில வியாபாரங்கள் ஆரம்ப ஒரு வருடத்தில் நட்டம் கொடுக்கலாம்..... அதையும் தாங்கும் சக்தி வேண்டும்[/quote]

உண்மைதான் சிறி

தாங்கள் எழுதிய பின்னர்தான் இப்படித்தான் உண்மையில் நடந்தது என்பதை நான் உணர்ந்தேன்

தொழில் தொடங்கும்போதே குறைந்தது 1 வருடமாவது வேறு வகையில் எனது குடும்பத்துக்கான செலவுக்கான பணம் வரும் வகையில் வேறு ஒரு ஏற்பாடு செய்திருந்தேன்.

நன்றி தங்கள் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கும் தங்களது நேரத்திற்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நீங்கள் கிரேட் அண்ணா

நன்றி உறவே

தங்களது பெயரை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை

தமிழுக்கு மாத்தலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல எப்போதும் நட்டத்தினை தாங்கும் அளவிற்கு ஒரு மினிமம் தொகையை பேக்கப்பாக மெயின்டன் பண்ணுங்கள் தோழர் விசுகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல எப்போதும் நட்டத்தினை தாங்கும் அளவிற்கு ஒரு மினிமம் தொகையை பேக்கப்பாக மெயின்டன் பண்ணுங்கள் தோழர் விசுகு

நன்றி தங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும்...

எனது சகோதர சகோதரர்கள் எனக்கு ஏதும் காசுப்பிரச்சினை என்று கேள்விப்பட்டால் சொல்வார்கள்

அவன் சேமிக்காமல் இருக்கமாட்டான்

சிறு வயதிலிருந்தே அவனிடமுள்ள பழக்கமிது....

Link to comment
Share on other sites

விசு அண்ணா! வாழ்த்துக்கள்.

உங்கள் கொம்புட்டர் வாத்தியிடமிருந்து நீங்கள் ஒன்றுமே கற்கவில்லையா? உங்களது இன்றைய நிலைக்கு உங்கள் கொம்புட்டர் வாத்தியின் பங்களிப்பு 0 என கொள்ளலாமா?

(ஊரில் நண்பர்கள் சிலர் இன்றைய வாதியார்மாரின் பங்களிப்பு பற்றி காரசாரமாக விவாதித்து வருகிறோம். உங்கள் பதில் உதவியாக இருக்கும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி முழுவதுமாக ஒதுக்கிவிடமுடியாது

அடிப்படையை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்

அதனால் அது பற்றிய பயம் அகன்று ஓரளவு தெளிவும் கிடைத்தது.

அதேநேரம் நேரத்தை கூடுதலாக ஒதுக்கி எனக்கு தேவையானவற்றை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்

அவரே சொல்லுவார் தன்னிடம் படித்து இந்தளவுக்கு வந்ததற்கு எனது விடாமுயற்சியே காரணம் என்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.