Jump to content

கொம்பியூட்டர் படிக்க போன.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டர் படிக்க போன விசுகு.......

அது 1995 இல்.

ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று.

அப்போ இரண்டு நேர வேலை. ஆனால்

தெரிந்து கொள்ளணும்.

இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு.

1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.)

வகுப்பும் தொடங்கியாச்சு.

கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Printer (Canon)இலிருந்து Scanner (AGFA) வரை வாங்கியாச்சு. எனக்கு என்ன செய்தாலும் என்ன வாங்கினாலும் திறமாக சில காலத்துக்கு பாவிக்கக்கூடியதாக இருக்கணும். (திருமணம் முடித்து 22 வருடம்என்றால் இலகுவாக புரிந்து கொள்வீர்கள்தானே.)

அப்ப வாங்கிய கொம்பியூட்டர் 500- MO Disque Dur அளவைக்கொண்டது Windows -95

பிள்ளைகளின் படத்தை போடுவது....

அதை மெருகேற்றுவது...

அதை திரையில் கொண்டுவருவது ....

அதை திரையில பறக்கவிடுவது என்று பல கேள்விகளால் வாத்தியே சலிச்சுப்போச்சு.

அப்போ DOS.... Bita....அது இது என்று கடினமாக உழைக்கவேண்டும்

உண்மையில் நான் கேட்கத்தொடங்கின பிறகுதான் வாத்தியே படிக்க ஆரம்பித்தது.

அப்படியே படம் பார்ப்பது

அதுக்கு கனநாளைக்கு பிறகுதான் தமிழ்பாட்டு இறக்கம் செய்யலாம்

அதுவும் இரவு செய்யவிட்டுவிட்டு படுத்தால் விடியவும் முடிந்திருக்காது

அல்லது 20 வீதம் 30 வீதத்துடன் நின்றிருக்கும்

இதனால் படுக்க இரவு 3 மணி 4 மணியும் ஆகும் அங்கால மனைவி புலம்புவது கேட்கும்

கடைசி வார்த்தை இதுகள் மனுசரே என்று.

அத்துடன் நிற்பாட்டிவிட்டு படுத்தால் இரவு கனவு முழுவதும் அதுதான்

ஏன் வேலை செய்யவில்லை….

எப்படி இதை கண்டுபிடிக்கலாம்…..

இது என்னோடு கூடப்பிறந்தது

கணக்கியல் படிக்கும்போது ஐந்தொகை இரு பக்கமும் சமனாகாது போய்விட்டால்.... இரவு கனவில் விடைவரும் எனக்கு.

உடன் எழுந்து செய்துவிட்டுத்தான் படுப்பேன். அதேபோல்தான் இதுவும்.

அப்போ விடியோ சிடியில் தான் ஒருசில பாடல்கள் வரும் இப்போ மாதிரி டிவிடி எல்லாம் கிடையாது

MP3 வும்கிடையாது. இங்கு MP3 வந்தது 2002 என்று நினைக்கின்றேன். நான் அப்போ கார் மாத்தினேன். அதற்கு MP3 முதன்முதலில் பூட்டியதாக ஞாபகம்

அதன் பின் சில MP3 பாட்டுக்களை மிகவும்கடினமாக உழைத்து தரையிறக்கம்செய்தேன்

இத்துடன் வீட்டுக்கு வரும் உறவுகள் எனது வேலைகளைப்பார்த்துவிட்டு பாராட்டியவர்கள்

மிகமிககுறைவு. இதை படித்து என்ன செய்யப்போறார். வேற வேலையில்லை என்று சொன்னவர்களே அதிகம்.

நான் இனி முடிவுரைக்கு வரவேணும். இதை இங்கு எழுதியமைக்கு இந்த முடிவுரைதான் பதில்கூறும்.

2003 இல் நான்படித்த இந்த படிப்பை மூலதனமாக கொண்டு சொந்தமாக ஒரு தொழில் தொடங்கினேன். 5 கொம்பியூட்டருடன் தான் இந்த தொழிலை ஆரம்பித்தேன். இன்று 35 கொம்பியூட்டருடன் எனது தொழில் வளர்ந்திருக்கிறது.

இதுவரை இங்கு வரும் எவரும் நான் அறிந்துள்ளவற்றை அறிந்திருக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடிய அளவுக்கு நான் அவர்களைவிட ஒரு படி மேலே வளர்ந்திருக்கின்றேன்.

எனது மகனை அவனது 3ஆவது வயதிலேயே கொம்பியூட்டரில் விளையாட விடுவேன். அதற்கும் எனது உறவுகள் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்று நான் 4அடி பாய்ந்தால் என் குட்டி 16 அல்ல 32 அடி பாயும். உறவுகள் அவன் கைவிரல் அசைவில் சொக்கிப்போய் நிற்கிறார்கள்.

இன்று எனது மனைவி எல்லோருக்கும் சொல்லும் வசனம்

அன்று அவர் படித்தது.

இன்று எமக்கு சோறு போடுது……

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா... முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. உங்கள் தொழிலில் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா நம்மால் முடியாது எதுவுமே இல்லை என்பதுக்கு நீங்களே ஒரு எடுத்துக்காட்டு... முயற்சி பண்ணினால் எதையும் சாதிக்க முடியும் என்றதை அழகாகவே சொல்லி இருக்கிறிர்கள்... நன்றி உங்கள் அனுபவங்களை எங்களோட பகிர்ந்து கொண்டமைக்கு...உங்கள் தொழில் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழமகள் மற்றும் சுஜி

இதை கதையாக நான் எழுதவில்லை

இதே தலைப்பில் ஒருவர் எழுதியிருந்தார்

அவருடன் தொடர்ந்து எழுதலாம் என்றுதான் எழுதினேன்

ஆனால் அது முன்பே இணைக்கப்பட்டது என்று மோகன் அண்ணா முற்றுப்புள்ளி போட்டிருந்தார்

அதனால்தான் இதை தனியே இணைத்தேன்

நேரமின்மையால் மெருகூட்ட முடியாது போய்விட்டது.

இங்குள்ள அனேகருக்கு என் நேரமின்மை தெரியும்

அதனால் போட்டுத்தள்ளமாட்டார்கள் என்ற துணிவில் அப்படியே விட்டுவிட்டேன்

Link to comment
Share on other sites

35 கணினிகள் 100 ஆக பெருகட்டும்.

முயற்சிக்கு வாழ்த்துகள் விசுகு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

விசுகு, நீங்கள் தூர நோக்குடன் கொம்யூட்டர் படிக்க தொடங்கி அதனையே..... உங்கள் தொழிலாக கொண்டு இருப்பது மகிழ்ச்சி.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடின் உழைப்பு உங்களுக்கு வாழ ஒரு வழி காட்டுவதையிட்டு மகிழ்ச்சி......

மேலும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் விச்சு. நான் கணனி படிக்கப்போய், தலையில் இருந்த முடியும், கண்ணில் குழியும் விழுந்ததுதான் மிச்சம். :(:(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசான்

தமிழ்சிறி

நிலாமதியக்கா

மச்சான்

மற்றும் ராஐவன்னியன்...

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

இந்த இடத்தில் இடித்து இடித்த தள்ளியும் ....

நிலத்தின் கீழ் உடைத்தும் பெருப்பித்தாயிற்று. இனி இங்கு இடமில்லை.

அடுத்தபடி..... வேறு இடத்தில் வேறு தொழில் விரைவில் ...

ஆனால் இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிடவேண்டும்

சின்னனிலிருந்து என்னிடம் ஒரு பழக்கமுண்டு. பார்த்து பார்த்துத்தான் காலை வைப்பேன். அத்திவாரம் இறுக்கமாக இருக்கவேண்டும் என்பதும் முக்கியம். அதைவிட இருப்பது போதும் என்ற மனம். அத்துடன் 100 வந்தால் 10ஆவது பகிர்ந்தளிக்கவேண்டும் என்ற குணம். இதை தாங்கள் என்ன மாதிரி புரிந்து கொள்வீர்களோ தெரியாது. நான் இங்கு எழுதுவதற்கு காரணம் பணம் என்னிடம் தங்காது என்று சொல்லத்தான். எனக்கு பின்னர் தொழில் தொடங்கியவர்கள் 5 6 தொழில் என்று தொடங்கி நன்றாகவும் இருக்கிறார்கள். உள்ளதையும் இழந்திருக்கின்றார்கள். ஆனால் நான் இதற்குள் இருந்த இடத்தைத்தான் முடிந்த அளவு பாவித்துள்ளேன்

நிச்சயமாக அடுத்தபடி உறவுகளுடன் சேர்ந்து பெரிதாக இருக்கும்

அது என்னுடைய இன்னொரு கனவை நிறைவு செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் விசுகு உங்களிற்கு

தொடரட்டும் உங்கள் முயற்சி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்று தூரநோக்குடன் தான் நானும் 97 இல் படித்தேன். ஒரு மாதம் தான் படித்தேன். எல்லாம் டோஸ் அது இது என்று கடைசியில நானாக முயற்ச்சி பண்ணியும் சின்னப் பொடியளோட சேர்ந்தும் கற்றுக் கொண்டதுதான் அதிகம். உங்கள் மகன் போலவே எனது பிள்ளைகளும் கணணியை பிரிச்சு மேயுறாங்கள்.நான் அன்று நினைத்தது எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற எங்கள் பிள்ளைகள் நினைக்கக் கூடாது.அவையளப் பேய்க்காட்ட ஏலாது என்ற நினைப்பு வரவேண்டும்.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.மென் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசா ...

புலவர்..

தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

இங்கு புலவர் குறிப்பிட்ட கருத்துப்பற்றி நான் கொஞ்சம் எழுதவேண்டும்

நான் இங்கு எனது உறவுகளுக்கு அடிக்கடி சொல்வது இது.

கணணி வாங்கித்தரும்படியும் அதை செயற்படத்தித்தரும்படியும் எனது உறவுகள் கேட்கும்போது நான் கூறுவது

தாங்கள் முதலில் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள்

பெற்றோருக்கும் சில விடயங்கள் தெரியும் என்பது மக்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்

இல்லையென்றால் மிகவும் ஆபத்தான சிக்கலான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்கவேண்டிவரும்

நான் வெளியிலிருந்து வந்தால் மக்களுக்கு தெரியும்

அப்பா எங்கெல்லாம் நாம் போயிருக்கின்றோம் என்பதை பார்த்துவிடுவார் என்று.

அதைவிட முக்கியமானது இது இதுக்குள் போகக்கூடாது

எவற்றை பார்க்கக்கூடாது

காட்டால்(Visa Card) பணம் செலுத்தும் எந்தவித கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொந்த முகவரிகளை அறிவித்தலை தவிர்த்தல்...

போன்றவற்றை சொல்வதற்கும் எமக்கு குறிப்பிட்ட கணணி அறிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்றாவது ஒருநாள் கற்றவை பின்பொரு காலத்தில் கட்டாயம் பலனைத் தரும்..உங்கள் முயற்சி, பின்னர் வெற்றிநடை போட்டது எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள். உங்களைப் பார்த்து ஒரு முன்னுதாரணமாக திகழவேண்டும்..கதையை கதையாக குறிப்பிட்ட விதமும் நன்று. மேலும் மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு உங்கள் தொழில் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

படித்து அதே துறையில் சொந்த தொழில் செய்வது போல் நிம்மதி இருக்கவே முடியாது. கணிணி துறையில் தான் நான் படித்து அதே துறையில் தான் வேலை செய்கிறேன். சிலவேளை ஏன் தான் இத்துறையில் படித்து வேறொருவருக்கு வேலை செய்கிறேன் என மனம் வெறுத்ததுண்டு. விசுகு, உங்கள் முயற்சி பாராட்டப்படவேண்டியது. மேலும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிப்பிரியன்

jhansirany

நுணாவிலான்

நன்றிகள் தங்களது கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும்..

பாரதிப்பிரியா எழுதியதுபோல் எந்த படிப்பும் எந்த மொழி அறிவும் வீண்போகாது

அதேபோல் நுணாவிலான் சொல்வதுபோல் இன்னொருத்தருக்கு எமது உழைப்பு போவதும் கவலைதான்.

நான் இன்னொன்றையும் எழுதினால் சிலவேளை அது இன்னொரு உதாரணமாகலாம்.

நானும் 6 மாதம்வரைதான் கணணி பற்றி ஒருவரிடம் படித்தேன்

அதன்பின் எனது சொந்த முயற்சிதான்.

அதேநேரம் எனக்கு படிப்பித்த எனது ஆசிரியர் என்னைப்போல் இதே தொழிலை சொந்தமாக ஆரம்பித்து நட்டமடைந்து

இன்று என்னிடம் வேலை செய்கின்றார்.

இது இன்னொரு பக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டர் படிக்க போன விசுகு.......

அது 1995 இல்.

ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று.

அப்போ இரண்டு நேர வேலை. ஆனால்

தெரிந்து கொள்ளணும்.

இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு.

1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.)

வகுப்பும் தொடங்கியாச்சு.

கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Printer (Canon)இலிருந்து Scanner (AGFA) வரை வாங்கியாச்சு. எனக்கு என்ன செய்தாலும் என்ன வாங்கினாலும் திறமாக சில காலத்துக்கு பாவிக்கக்கூடியதாக இருக்கணும். அப்ப வாங்கிய கொம்பியூட்டர் 500- MO Disque Dur அளவைக்கொண்டது Windows -95

பிள்ளைகளின் படத்தை போடுவது....

அதை மெருகேற்றுவது...

அதை திரையில் கொண்டுவருவது ....

அதை திரையில பறக்கவிடுவது என்று பல கேள்விகளால் வாத்தியே சலிச்சுப்போச்சு.

அப்போ DOS.... Bita....அது இது என்று கடினமாக உழைக்கவேண்டும்

உண்மையில் நான் கேட்கத்தொடங்கின பிறகுதான் வாத்தியே படிக்க ஆரம்பித்தது.

-------

-------

அதேநேரம் எனக்கு படிப்பித்த எனது ஆசிரியர் என்னைப்போல் இதே தொழிலை சொந்தமாக ஆரம்பித்து நட்டமடைந்து

இன்று என்னிடம் வேலை செய்கின்றார்.

இது இன்னொரு பக்கம்.

விசுகு உங்களுக்கு படிப்பித்த ஆசிரியர், தனது மணித்தியால சம்பளத்தை கருத்தில் எடுத்து தனது வேலையை ஏனோ... தானோ.... என்று செய்து கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக முழு ஈடுபாட்டுடன் இருந்தமை தான் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தந்தது. ஒரு வேலையில் இறங்கப் படாது..... இறங்கினால் வெற்றிக்கனியை எட்டக்கூடியதாக இருக்க வேண்டும், சில வியாபாரங்கள் ஆரம்ப ஒரு வருடத்தில் நட்டம் கொடுக்கலாம்..... அதையும் தாங்கும் சக்தி வேண்டும், விளம்பர யுக்தி , வாடிக்கையாளரை கவரும் கனிவு, எல்லாம் தனிப்பட்டட வியாபாரத்தில் முக்கியமாக நீங்கள் கவனத்தில் எடுத்த படியால் தான் இன்று , நீங்கள் வெற்றிப் படிகளில் நிற்கின்றீர்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு படிப்பித்த ஆசிரியர், தனது மணித்தியால சம்பளத்தை கருத்தில் எடுத்து தனது வேலையை ஏனோ... தானோ.... என்று செய்து கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக முழு ஈடுபாட்டுடன் இருந்தமை தான் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தந்தது.சில வியாபாரங்கள் ஆரம்ப ஒரு வருடத்தில் நட்டம் கொடுக்கலாம்..... அதையும் தாங்கும் சக்தி வேண்டும்[/quote]

உண்மைதான் சிறி

தாங்கள் எழுதிய பின்னர்தான் இப்படித்தான் உண்மையில் நடந்தது என்பதை நான் உணர்ந்தேன்

தொழில் தொடங்கும்போதே குறைந்தது 1 வருடமாவது வேறு வகையில் எனது குடும்பத்துக்கான செலவுக்கான பணம் வரும் வகையில் வேறு ஒரு ஏற்பாடு செய்திருந்தேன்.

நன்றி தங்கள் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கும் தங்களது நேரத்திற்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நீங்கள் கிரேட் அண்ணா

நன்றி உறவே

தங்களது பெயரை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை

தமிழுக்கு மாத்தலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல எப்போதும் நட்டத்தினை தாங்கும் அளவிற்கு ஒரு மினிமம் தொகையை பேக்கப்பாக மெயின்டன் பண்ணுங்கள் தோழர் விசுகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல எப்போதும் நட்டத்தினை தாங்கும் அளவிற்கு ஒரு மினிமம் தொகையை பேக்கப்பாக மெயின்டன் பண்ணுங்கள் தோழர் விசுகு

நன்றி தங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும்...

எனது சகோதர சகோதரர்கள் எனக்கு ஏதும் காசுப்பிரச்சினை என்று கேள்விப்பட்டால் சொல்வார்கள்

அவன் சேமிக்காமல் இருக்கமாட்டான்

சிறு வயதிலிருந்தே அவனிடமுள்ள பழக்கமிது....

Link to comment
Share on other sites

விசு அண்ணா! வாழ்த்துக்கள்.

உங்கள் கொம்புட்டர் வாத்தியிடமிருந்து நீங்கள் ஒன்றுமே கற்கவில்லையா? உங்களது இன்றைய நிலைக்கு உங்கள் கொம்புட்டர் வாத்தியின் பங்களிப்பு 0 என கொள்ளலாமா?

(ஊரில் நண்பர்கள் சிலர் இன்றைய வாதியார்மாரின் பங்களிப்பு பற்றி காரசாரமாக விவாதித்து வருகிறோம். உங்கள் பதில் உதவியாக இருக்கும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி முழுவதுமாக ஒதுக்கிவிடமுடியாது

அடிப்படையை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்

அதனால் அது பற்றிய பயம் அகன்று ஓரளவு தெளிவும் கிடைத்தது.

அதேநேரம் நேரத்தை கூடுதலாக ஒதுக்கி எனக்கு தேவையானவற்றை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்

அவரே சொல்லுவார் தன்னிடம் படித்து இந்தளவுக்கு வந்ததற்கு எனது விடாமுயற்சியே காரணம் என்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.