Jump to content

கொம்பியூட்டர் படிக்க போன.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டர் படிக்க போன விசுகு.......

அது 1995 இல்.

ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று.

அப்போ இரண்டு நேர வேலை. ஆனால்

தெரிந்து கொள்ளணும்.

இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு.

1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.)

வகுப்பும் தொடங்கியாச்சு.

கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Printer (Canon)இலிருந்து Scanner (AGFA) வரை வாங்கியாச்சு. எனக்கு என்ன செய்தாலும் என்ன வாங்கினாலும் திறமாக சில காலத்துக்கு பாவிக்கக்கூடியதாக இருக்கணும். (திருமணம் முடித்து 22 வருடம்என்றால் இலகுவாக புரிந்து கொள்வீர்கள்தானே.)

அப்ப வாங்கிய கொம்பியூட்டர் 500- MO Disque Dur அளவைக்கொண்டது Windows -95

பிள்ளைகளின் படத்தை போடுவது....

அதை மெருகேற்றுவது...

அதை திரையில் கொண்டுவருவது ....

அதை திரையில பறக்கவிடுவது என்று பல கேள்விகளால் வாத்தியே சலிச்சுப்போச்சு.

அப்போ DOS.... Bita....அது இது என்று கடினமாக உழைக்கவேண்டும்

உண்மையில் நான் கேட்கத்தொடங்கின பிறகுதான் வாத்தியே படிக்க ஆரம்பித்தது.

அப்படியே படம் பார்ப்பது

அதுக்கு கனநாளைக்கு பிறகுதான் தமிழ்பாட்டு இறக்கம் செய்யலாம்

அதுவும் இரவு செய்யவிட்டுவிட்டு படுத்தால் விடியவும் முடிந்திருக்காது

அல்லது 20 வீதம் 30 வீதத்துடன் நின்றிருக்கும்

இதனால் படுக்க இரவு 3 மணி 4 மணியும் ஆகும் அங்கால மனைவி புலம்புவது கேட்கும்

கடைசி வார்த்தை இதுகள் மனுசரே என்று.

அத்துடன் நிற்பாட்டிவிட்டு படுத்தால் இரவு கனவு முழுவதும் அதுதான்

ஏன் வேலை செய்யவில்லை….

எப்படி இதை கண்டுபிடிக்கலாம்…..

இது என்னோடு கூடப்பிறந்தது

கணக்கியல் படிக்கும்போது ஐந்தொகை இரு பக்கமும் சமனாகாது போய்விட்டால்.... இரவு கனவில் விடைவரும் எனக்கு.

உடன் எழுந்து செய்துவிட்டுத்தான் படுப்பேன். அதேபோல்தான் இதுவும்.

அப்போ விடியோ சிடியில் தான் ஒருசில பாடல்கள் வரும் இப்போ மாதிரி டிவிடி எல்லாம் கிடையாது

MP3 வும்கிடையாது. இங்கு MP3 வந்தது 2002 என்று நினைக்கின்றேன். நான் அப்போ கார் மாத்தினேன். அதற்கு MP3 முதன்முதலில் பூட்டியதாக ஞாபகம்

அதன் பின் சில MP3 பாட்டுக்களை மிகவும்கடினமாக உழைத்து தரையிறக்கம்செய்தேன்

இத்துடன் வீட்டுக்கு வரும் உறவுகள் எனது வேலைகளைப்பார்த்துவிட்டு பாராட்டியவர்கள்

மிகமிககுறைவு. இதை படித்து என்ன செய்யப்போறார். வேற வேலையில்லை என்று சொன்னவர்களே அதிகம்.

நான் இனி முடிவுரைக்கு வரவேணும். இதை இங்கு எழுதியமைக்கு இந்த முடிவுரைதான் பதில்கூறும்.

2003 இல் நான்படித்த இந்த படிப்பை மூலதனமாக கொண்டு சொந்தமாக ஒரு தொழில் தொடங்கினேன். 5 கொம்பியூட்டருடன் தான் இந்த தொழிலை ஆரம்பித்தேன். இன்று 35 கொம்பியூட்டருடன் எனது தொழில் வளர்ந்திருக்கிறது.

இதுவரை இங்கு வரும் எவரும் நான் அறிந்துள்ளவற்றை அறிந்திருக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடிய அளவுக்கு நான் அவர்களைவிட ஒரு படி மேலே வளர்ந்திருக்கின்றேன்.

எனது மகனை அவனது 3ஆவது வயதிலேயே கொம்பியூட்டரில் விளையாட விடுவேன். அதற்கும் எனது உறவுகள் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்று நான் 4அடி பாய்ந்தால் என் குட்டி 16 அல்ல 32 அடி பாயும். உறவுகள் அவன் கைவிரல் அசைவில் சொக்கிப்போய் நிற்கிறார்கள்.

இன்று எனது மனைவி எல்லோருக்கும் சொல்லும் வசனம்

அன்று அவர் படித்தது.

இன்று எமக்கு சோறு போடுது……

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா... முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. உங்கள் தொழிலில் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா நம்மால் முடியாது எதுவுமே இல்லை என்பதுக்கு நீங்களே ஒரு எடுத்துக்காட்டு... முயற்சி பண்ணினால் எதையும் சாதிக்க முடியும் என்றதை அழகாகவே சொல்லி இருக்கிறிர்கள்... நன்றி உங்கள் அனுபவங்களை எங்களோட பகிர்ந்து கொண்டமைக்கு...உங்கள் தொழில் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழமகள் மற்றும் சுஜி

இதை கதையாக நான் எழுதவில்லை

இதே தலைப்பில் ஒருவர் எழுதியிருந்தார்

அவருடன் தொடர்ந்து எழுதலாம் என்றுதான் எழுதினேன்

ஆனால் அது முன்பே இணைக்கப்பட்டது என்று மோகன் அண்ணா முற்றுப்புள்ளி போட்டிருந்தார்

அதனால்தான் இதை தனியே இணைத்தேன்

நேரமின்மையால் மெருகூட்ட முடியாது போய்விட்டது.

இங்குள்ள அனேகருக்கு என் நேரமின்மை தெரியும்

அதனால் போட்டுத்தள்ளமாட்டார்கள் என்ற துணிவில் அப்படியே விட்டுவிட்டேன்

Link to comment
Share on other sites

35 கணினிகள் 100 ஆக பெருகட்டும்.

முயற்சிக்கு வாழ்த்துகள் விசுகு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

விசுகு, நீங்கள் தூர நோக்குடன் கொம்யூட்டர் படிக்க தொடங்கி அதனையே..... உங்கள் தொழிலாக கொண்டு இருப்பது மகிழ்ச்சி.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடின் உழைப்பு உங்களுக்கு வாழ ஒரு வழி காட்டுவதையிட்டு மகிழ்ச்சி......

மேலும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் விச்சு. நான் கணனி படிக்கப்போய், தலையில் இருந்த முடியும், கண்ணில் குழியும் விழுந்ததுதான் மிச்சம். :(:(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசான்

தமிழ்சிறி

நிலாமதியக்கா

மச்சான்

மற்றும் ராஐவன்னியன்...

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

இந்த இடத்தில் இடித்து இடித்த தள்ளியும் ....

நிலத்தின் கீழ் உடைத்தும் பெருப்பித்தாயிற்று. இனி இங்கு இடமில்லை.

அடுத்தபடி..... வேறு இடத்தில் வேறு தொழில் விரைவில் ...

ஆனால் இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிடவேண்டும்

சின்னனிலிருந்து என்னிடம் ஒரு பழக்கமுண்டு. பார்த்து பார்த்துத்தான் காலை வைப்பேன். அத்திவாரம் இறுக்கமாக இருக்கவேண்டும் என்பதும் முக்கியம். அதைவிட இருப்பது போதும் என்ற மனம். அத்துடன் 100 வந்தால் 10ஆவது பகிர்ந்தளிக்கவேண்டும் என்ற குணம். இதை தாங்கள் என்ன மாதிரி புரிந்து கொள்வீர்களோ தெரியாது. நான் இங்கு எழுதுவதற்கு காரணம் பணம் என்னிடம் தங்காது என்று சொல்லத்தான். எனக்கு பின்னர் தொழில் தொடங்கியவர்கள் 5 6 தொழில் என்று தொடங்கி நன்றாகவும் இருக்கிறார்கள். உள்ளதையும் இழந்திருக்கின்றார்கள். ஆனால் நான் இதற்குள் இருந்த இடத்தைத்தான் முடிந்த அளவு பாவித்துள்ளேன்

நிச்சயமாக அடுத்தபடி உறவுகளுடன் சேர்ந்து பெரிதாக இருக்கும்

அது என்னுடைய இன்னொரு கனவை நிறைவு செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் விசுகு உங்களிற்கு

தொடரட்டும் உங்கள் முயற்சி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்று தூரநோக்குடன் தான் நானும் 97 இல் படித்தேன். ஒரு மாதம் தான் படித்தேன். எல்லாம் டோஸ் அது இது என்று கடைசியில நானாக முயற்ச்சி பண்ணியும் சின்னப் பொடியளோட சேர்ந்தும் கற்றுக் கொண்டதுதான் அதிகம். உங்கள் மகன் போலவே எனது பிள்ளைகளும் கணணியை பிரிச்சு மேயுறாங்கள்.நான் அன்று நினைத்தது எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற எங்கள் பிள்ளைகள் நினைக்கக் கூடாது.அவையளப் பேய்க்காட்ட ஏலாது என்ற நினைப்பு வரவேண்டும்.

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.மென் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசா ...

புலவர்..

தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

இங்கு புலவர் குறிப்பிட்ட கருத்துப்பற்றி நான் கொஞ்சம் எழுதவேண்டும்

நான் இங்கு எனது உறவுகளுக்கு அடிக்கடி சொல்வது இது.

கணணி வாங்கித்தரும்படியும் அதை செயற்படத்தித்தரும்படியும் எனது உறவுகள் கேட்கும்போது நான் கூறுவது

தாங்கள் முதலில் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள்

பெற்றோருக்கும் சில விடயங்கள் தெரியும் என்பது மக்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்

இல்லையென்றால் மிகவும் ஆபத்தான சிக்கலான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்கவேண்டிவரும்

நான் வெளியிலிருந்து வந்தால் மக்களுக்கு தெரியும்

அப்பா எங்கெல்லாம் நாம் போயிருக்கின்றோம் என்பதை பார்த்துவிடுவார் என்று.

அதைவிட முக்கியமானது இது இதுக்குள் போகக்கூடாது

எவற்றை பார்க்கக்கூடாது

காட்டால்(Visa Card) பணம் செலுத்தும் எந்தவித கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொந்த முகவரிகளை அறிவித்தலை தவிர்த்தல்...

போன்றவற்றை சொல்வதற்கும் எமக்கு குறிப்பிட்ட கணணி அறிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்றாவது ஒருநாள் கற்றவை பின்பொரு காலத்தில் கட்டாயம் பலனைத் தரும்..உங்கள் முயற்சி, பின்னர் வெற்றிநடை போட்டது எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள். உங்களைப் பார்த்து ஒரு முன்னுதாரணமாக திகழவேண்டும்..கதையை கதையாக குறிப்பிட்ட விதமும் நன்று. மேலும் மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு உங்கள் தொழில் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

படித்து அதே துறையில் சொந்த தொழில் செய்வது போல் நிம்மதி இருக்கவே முடியாது. கணிணி துறையில் தான் நான் படித்து அதே துறையில் தான் வேலை செய்கிறேன். சிலவேளை ஏன் தான் இத்துறையில் படித்து வேறொருவருக்கு வேலை செய்கிறேன் என மனம் வெறுத்ததுண்டு. விசுகு, உங்கள் முயற்சி பாராட்டப்படவேண்டியது. மேலும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிப்பிரியன்

jhansirany

நுணாவிலான்

நன்றிகள் தங்களது கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும்..

பாரதிப்பிரியா எழுதியதுபோல் எந்த படிப்பும் எந்த மொழி அறிவும் வீண்போகாது

அதேபோல் நுணாவிலான் சொல்வதுபோல் இன்னொருத்தருக்கு எமது உழைப்பு போவதும் கவலைதான்.

நான் இன்னொன்றையும் எழுதினால் சிலவேளை அது இன்னொரு உதாரணமாகலாம்.

நானும் 6 மாதம்வரைதான் கணணி பற்றி ஒருவரிடம் படித்தேன்

அதன்பின் எனது சொந்த முயற்சிதான்.

அதேநேரம் எனக்கு படிப்பித்த எனது ஆசிரியர் என்னைப்போல் இதே தொழிலை சொந்தமாக ஆரம்பித்து நட்டமடைந்து

இன்று என்னிடம் வேலை செய்கின்றார்.

இது இன்னொரு பக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொம்பியூட்டர் படிக்க போன விசுகு.......

அது 1995 இல்.

ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று.

அப்போ இரண்டு நேர வேலை. ஆனால்

தெரிந்து கொள்ளணும்.

இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு.

1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.)

வகுப்பும் தொடங்கியாச்சு.

கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Printer (Canon)இலிருந்து Scanner (AGFA) வரை வாங்கியாச்சு. எனக்கு என்ன செய்தாலும் என்ன வாங்கினாலும் திறமாக சில காலத்துக்கு பாவிக்கக்கூடியதாக இருக்கணும். அப்ப வாங்கிய கொம்பியூட்டர் 500- MO Disque Dur அளவைக்கொண்டது Windows -95

பிள்ளைகளின் படத்தை போடுவது....

அதை மெருகேற்றுவது...

அதை திரையில் கொண்டுவருவது ....

அதை திரையில பறக்கவிடுவது என்று பல கேள்விகளால் வாத்தியே சலிச்சுப்போச்சு.

அப்போ DOS.... Bita....அது இது என்று கடினமாக உழைக்கவேண்டும்

உண்மையில் நான் கேட்கத்தொடங்கின பிறகுதான் வாத்தியே படிக்க ஆரம்பித்தது.

-------

-------

அதேநேரம் எனக்கு படிப்பித்த எனது ஆசிரியர் என்னைப்போல் இதே தொழிலை சொந்தமாக ஆரம்பித்து நட்டமடைந்து

இன்று என்னிடம் வேலை செய்கின்றார்.

இது இன்னொரு பக்கம்.

விசுகு உங்களுக்கு படிப்பித்த ஆசிரியர், தனது மணித்தியால சம்பளத்தை கருத்தில் எடுத்து தனது வேலையை ஏனோ... தானோ.... என்று செய்து கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக முழு ஈடுபாட்டுடன் இருந்தமை தான் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தந்தது. ஒரு வேலையில் இறங்கப் படாது..... இறங்கினால் வெற்றிக்கனியை எட்டக்கூடியதாக இருக்க வேண்டும், சில வியாபாரங்கள் ஆரம்ப ஒரு வருடத்தில் நட்டம் கொடுக்கலாம்..... அதையும் தாங்கும் சக்தி வேண்டும், விளம்பர யுக்தி , வாடிக்கையாளரை கவரும் கனிவு, எல்லாம் தனிப்பட்டட வியாபாரத்தில் முக்கியமாக நீங்கள் கவனத்தில் எடுத்த படியால் தான் இன்று , நீங்கள் வெற்றிப் படிகளில் நிற்கின்றீர்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு படிப்பித்த ஆசிரியர், தனது மணித்தியால சம்பளத்தை கருத்தில் எடுத்து தனது வேலையை ஏனோ... தானோ.... என்று செய்து கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக முழு ஈடுபாட்டுடன் இருந்தமை தான் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தந்தது.சில வியாபாரங்கள் ஆரம்ப ஒரு வருடத்தில் நட்டம் கொடுக்கலாம்..... அதையும் தாங்கும் சக்தி வேண்டும்[/quote]

உண்மைதான் சிறி

தாங்கள் எழுதிய பின்னர்தான் இப்படித்தான் உண்மையில் நடந்தது என்பதை நான் உணர்ந்தேன்

தொழில் தொடங்கும்போதே குறைந்தது 1 வருடமாவது வேறு வகையில் எனது குடும்பத்துக்கான செலவுக்கான பணம் வரும் வகையில் வேறு ஒரு ஏற்பாடு செய்திருந்தேன்.

நன்றி தங்கள் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கும் தங்களது நேரத்திற்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நீங்கள் கிரேட் அண்ணா

நன்றி உறவே

தங்களது பெயரை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை

தமிழுக்கு மாத்தலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல எப்போதும் நட்டத்தினை தாங்கும் அளவிற்கு ஒரு மினிமம் தொகையை பேக்கப்பாக மெயின்டன் பண்ணுங்கள் தோழர் விசுகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல எப்போதும் நட்டத்தினை தாங்கும் அளவிற்கு ஒரு மினிமம் தொகையை பேக்கப்பாக மெயின்டன் பண்ணுங்கள் தோழர் விசுகு

நன்றி தங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும்...

எனது சகோதர சகோதரர்கள் எனக்கு ஏதும் காசுப்பிரச்சினை என்று கேள்விப்பட்டால் சொல்வார்கள்

அவன் சேமிக்காமல் இருக்கமாட்டான்

சிறு வயதிலிருந்தே அவனிடமுள்ள பழக்கமிது....

Link to comment
Share on other sites

விசு அண்ணா! வாழ்த்துக்கள்.

உங்கள் கொம்புட்டர் வாத்தியிடமிருந்து நீங்கள் ஒன்றுமே கற்கவில்லையா? உங்களது இன்றைய நிலைக்கு உங்கள் கொம்புட்டர் வாத்தியின் பங்களிப்பு 0 என கொள்ளலாமா?

(ஊரில் நண்பர்கள் சிலர் இன்றைய வாதியார்மாரின் பங்களிப்பு பற்றி காரசாரமாக விவாதித்து வருகிறோம். உங்கள் பதில் உதவியாக இருக்கும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி முழுவதுமாக ஒதுக்கிவிடமுடியாது

அடிப்படையை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்

அதனால் அது பற்றிய பயம் அகன்று ஓரளவு தெளிவும் கிடைத்தது.

அதேநேரம் நேரத்தை கூடுதலாக ஒதுக்கி எனக்கு தேவையானவற்றை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்

அவரே சொல்லுவார் தன்னிடம் படித்து இந்தளவுக்கு வந்ததற்கு எனது விடாமுயற்சியே காரணம் என்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.