Jump to content

காதல் - காதலி - களம்


Recommended Posts

அது மாசி மாசி மாதத்தின் ஆரம்ப நாட்கள் ...

சுதந்திர தினத்தன்று புதுக்குடியிருப்பில் தனது கொடியினை ஏற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி நின்ற சிங்கள படைகளுக்கும் வீரதலைவனின் சொல் கேட்டு மக்களை காக்க நின்ற மானமா வீர்களுக்கும் இடையை கடும் சண்டை புதுக்குடியிருப்பை சூழ இடம்பெற்று கொண்டிருந்தது.

வேவு தகவல்கள் மூலம் பகைவனின் எறிகணை சேமிப்பு இடம் பற்றிய தகவல் அறிந்த புலிகள் படையணி ,அதனை கைப்பற்றவும் எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவும் ஒரு வலிந்த தாக்குதலுக்கு திட்டமிட்டனர். அதில் ஒரு மகளிர் அணியில் பூங்கொடியும் இணைக்கபட்டாள். அன்று அவள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. கொடிய பகைவனுக்கு பதிலடி கொடுக்கும் அந்த தருணத்துக்காக அவள் ஏங்கிய பலன் அன்று அவளுக்கு கிடைத்திருந்தது. அது மட்டும் அல்ல ..அவள் மகிழ்ச்சிக்கு காரணம் .. அவர்களின் தாக்குதல் பிரிவுக்கு கட்டளை தளபதியாக அவளின் காதலன் காவியனே இருந்தான். காதலனின் கட்டளையை ஏற்று சமர் செய்யும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை ..அவளுக்கு கிடைத்திருந்தது ...

பூங்கொடி .. .. காதலன் போராடும் போது தான் அவனுக்கு தோள் கொடுக்காமல் வீட்டில் இருப்பது பாரம் என்று கடிதம் மூலம் எழுதி கேட்டு காவியன் இருக்கும் பிரிவிலேயே தன்னை இணைத்தவள். கணினித்துறையில் வல்லமை படைத்த இவள் பெரும் சமர்கள் இடம்பெற்ற போது எல்லாம் பின்கள வேலைகளிலே பங்கெடுத்து இருந்தாள். காதலர்கள் சந்திக்க மூன்று மாசத்துக்கு ஒரு முறை ஒரு மணித்தியாலம் அனுமதி இருந்தாலும் காவியனின் வேலை பளு காரணமாக இவர்கள் சந்திப்பது குறைவு. கடிதங்கள் மூலமே தங்கள் அன்பையும் நாட்டு பற்றையும் பரிமாறி கொண்டார்கள். இந்த சண்டையில் காவியனும் ஒரு கட்டளை தளபதி என்று தெரிந்ததும் , அங்காவது அவனை சந்திக்கலாம் பேச முடியாவிட்டாலும் பரவாயில்லை அவன் முகத்தையாவது பார்க்கலாம் ,என்று அவள் பொறுப்பாளரை வற்புறுத்தி இந்த தாக்குதல் அணியில் இணைந்தவள் ..முதல் களம் அவளுக்கு ..கடைசி களம் என்று கூட தெரியாமல் சந்தோசமாக இருந்தாள் ...

கேப்பாபுலவு .... அதிகாலை நேரம் அதிர்ந்தது ..தளபதி லக்ஸ்மணன் தலைமையில் நந்திக்கடல் ஊடாக பகை நிலைகளுக்கு பின்புறம் சூரியகாட்டு பகுதிக்குள் ஊடுவிய புலிகள் அணி திகைப்பு தாக்குதலை தொடக்க மன்னாகண்டல் ,பத்தாம் வட்டாரம் ,மந்துவில் பகுதிகள் ஊடாக புலிகள் அணி முன்னணி நிலைகளை ஊடறுத்து பாய்ந்தன.பூங்கொடியும் அவள் அணிகளும் தீரமாக சண்டை செய்தன. எதிரி புலிகளின் பாச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான். கீர்த்தி முகாமை சூழ இருந்த பகுதியை தவிர்த்து அனைத்து பிரதேசங்களிலும் இருந்து பின்வாங்கி ஓடினான். 59 ம் படையணியே கதி கலங்கியது அத்தருணத்தில் புலிகள் அணி தங்களால் இயன்ற அளவு பிரதேசங்களை கைப்பற்றியவாறே முன்னேறின. மக்கள் மீது கொண்ட பாசம் எதிரி மீது கொண்ட கோபம் ..காதலன் / கட்டளை தளபதியின் நெறிப்படுத்தல் பூங்கொடியின் அணி எதிரியை துரத்தியவாறு எதிரி பிரதேசத்துக்குள் வெகு தூரம் முன்னேறி இருந்தது. அவர்களுக்கு சமாந்தரமாக நகர வேண்டிய அணிகள் சில தடைகளை தாண்ட வேண்டி இருந்தமையால் மெதுவாகவே நகர்ந்திருந்தன.

பூங்கொடியின் அணி ஒரு எதிரியின் சமையலறை மற்றும் சமையல் சேமிப்பு இடத்தை கைப்பற்றியது. அங்கே அடைக்கப்பட்ட தகர மீன், நூட்லஸ், பிஸ்கட்ஸ் எல்லாமே தொகை தொகையாக இருந்தன. அப்போ களமாடும் புலிகள் ஒழுங்கான சாப்பாடு சாப்பிட்டு நிறைய காலம் ஆகி இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு நேர உணவு மட்டுமே உண்டு விட்டு சண்டை போட்ட காலம். பயறு அல்லது பருப்பு கலந்த சோறு இது மட்டும் தான் சாப்பாடு. அதோடு தான் பதுங்கு குழி அமைக்கவேண்டும் மரம் தறிக்க வேண்டும் கனரக ஆயுதம் தூக்கி சண்டை போட வேண்டும். புலிகள் செய்தார்கள் மக்களுக்காக ..

சண்டையிலே சாப்பாடு பொருட்கள் கைப்பற்றபட்டால் அவை கட்டளைபீடம் ஊடக பின்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவை பின்னர் காயமடைந்த போராளிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். சண்டையில் ஈடுபடுபவர்களுக்கு கிடைப்பது அரிது.

பூங்கொடியும் அவள் அணிகளும் சாப்பாட்டு பொருட்களை கண்டதும் அவர்களுக்கு மூன்று நாளாக சாப்பிடாத பசி தான் ஞாபகத்துக்கு வந்தது. இராணுவம் ஓடும் வெற்றி செய்தி ஒரு பக்கம் ..நிறைய நாட்களுக்கு பின்னர் கண்ட உணவு பொருட்கள் ஒருபக்கம் ..அவர்கள் மகிழ்ச்சியினை கொண்டாட அந்த உணவு பொருட்களை பயன்படுத்தினார்கள். கையில் இருந்த அலைபேசியினை அணைத்துவிட்டு ..சாப்பாடை ஒரு பிடி பிடிக்க தொடக்கி இருந்தார்கள் ..அவ்வளவு பசி அவர்களுக்கு ..

சமாந்தர அணிகளின் முன்னேற்றம் தாமதப்பட சமர் கோட்டினை நேராக வைத்திருக்கும் நோக்கில் இவர்கள் பிரிவு கட்டளை தளபதியான காவியன் தனது காதலியின் அணிக்கு அலைபேசியில் ..அவர்களின் நிலையை சற்று பின்வாங்குமாறு தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தான். அவர்களோ அதை அறியாமல் சாபிட்டு கொண்டிருந்தனர். எதிரி அவர்களை சுற்றி வளைத்து கொண்டிருந்தான். பூங்கொடி திருப்தியாக சாபிட்டுவிட்டு அலைபேசியை இயக்கிய போது தான் நிலைமையின் விபரீதம் அவர்களுக்கு புரிந்தது.

காவியனுடன் தொடர்பை ஏற்படுத்திய பூங்கொடி தாங்கள் இராணுவத்தால் சுற்றி வளைக்கபட்டத்தை அறிவித்தாள். காவியன் உதவி அணி வரும் வரை பொறுமை காக்கும் படி கெஞ்சி கேட்டு கொண்டவாறே தானே ஒரு அணியுடன் அவள் இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக முன்னேறினான். அந்த இடத்தை நெருங்க ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது மீண்டும் அழைத்த பூங்கொடி தங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் அனைவரும் எதிரியிடம் பிடிபடாமல் குண்டடிக்க (நஞ்சுக்கு கூட தட்டுப்பாடான காலம் அது ) போவதாக அறிவித்தாள். தாங்கள் விட்ட பிழைக்கான தண்டனை என்று சொன்னாள். காவியன் எவளவோ சொல்லி பார்த்தான். பூங்கொடிக்கு காதலை விட காதலனின் கட்டளையை விட, கொண்ட கொள்கையும் நாட்டின் மீதான தீராதா பற்றுமே பெரிதாக பட்டது. அனைவருமே தங்கள் வயிற்றினுள் கைக்குண்டை அழுத்தி வெடித்தார்கள். இந்த நாட்டுக்காக அவர்கள் தங்களை வெடித்தார்கள் . தாங்கள் நேசித்த மண்ணுக்காக சிதறினார்கள். எந்த காதலன் முகத்தை பார்க்கலாம் என்று தாக்குதல் அணியில் இனைந்தாளோ அவன் முகத்தை கடைசி வரை பார்க்காமல் சிதறியது அவளின் உடல் மட்டும் இல்லை அவளின் காதலும் தான் ..

"வெற்றிகளுக்காக கொடுக்கப்படும் விலைகள் மிக அதிகம் . அவை வெளியிலே தெரிவதில்லை . இவர்களின் காதலும் அதற்கு விதிவிலக்கு அல்ல ."

குறிப்பு : காவியன் பிறிதொரு நாளில் தேவிபுரம் ஊடறுப்பு சமரில் காவியமானான். இதில் வரும் பெயர்கள் மட்டும் தான் கற்பனை .. இந்த சம்பவத்தில் வீரச்சாவை தழுவி கொண்ட அந்த ஏழு பெண் போராளிகளுக்கும் இந்த கதை சமர்ப்பணம்.

எனக்கு கதை எழுத தெரியாது ..இது என் முதல் எழுத்து ..பிழைகளை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா முதல் எழுத்து ...

கண்கள் குளமாகின

நன்றி ஐயா

தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை படித்தேன்...எனக்கு என்னத்தை எழுதுவது எண்டு புரியவில்லை.

Link to comment
Share on other sites

அபிராம் நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்..... எம்மக்களுக்கு தெரியாத இப்படி எத்தனையோ பல சம்பவங்கள் வெளிகொணரப்படவேண்டும். இப்படி எமக்காக போராடி மாவீரர்களாகிய ஒவ்வொருவருக்கும் உங்கள் எழுத்து சமர்ப்பணமாகட்டும்.

அவர்கள் மண்ணைவிட்டு போயிருக்கலாம் ஆனால் எம் மனங்களில் அவர்கள் எப்போதும் நிலைத்திருப்பார்கள்.

அணைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்...!

Link to comment
Share on other sites

"சயனைட் கூட இல்லாமல் குண்டை கட்டி வெடித்தார்கள்" நம்பவும் முடியவில்லை தாங்கவும் முடியவில்லை.இதற்குமேல் எழுதவும் முடியவில்லை.

Link to comment
Share on other sites

நன்றி அபிராம். ஏராளமான அர்ப்பணிப்புகளும் செய்யப்பட்டும் இறுதியில் எமது மக்களுக்கு ஒன்றும் இல்லாமல் போனது இன்றும் நெஞ்சு கனக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை காதலர்களுக்கு வீர வணக்கங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சயனைட் கூட இல்லாமல் குண்டை கட்டி வெடித்தார்கள்" நம்பவும் முடியவில்லை தாங்கவும் முடியவில்லை.இதற்குமேல் எழுதவும் முடியவில்லை.

நம்பவும் முடியவில்லை?

தாங்கவும் முடியவில்லை?

எழுதவும் முடியவில்லை?

மூண்டிலை ஒண்டும் ஏலாட்டி போர்த்துக்கொண்டு படுக்குறது தானே

எவன் வெத்திலைபாக்கு வைச்சு உங்களை இஞ்சை கூப்பிட்டவன்? :(

Link to comment
Share on other sites

....... அப்போ களமாடும் புலிகள் ஒழுங்கான சாப்பாடு சாப்பிட்டு நிறைய காலம் ஆகி இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு நேர உணவு மட்டுமே உண்டு விட்டு சண்டை போட்ட காலம். பயறு அல்லது பருப்பு கலந்த சோறு இது மட்டும் தான் சாப்பாடு. அதோடு தான் பதுங்கு குழி அமைக்கவேண்டும் மரம் தறிக்க வேண்டும் கனரக ஆயுதம் தூக்கி சண்டை போட வேண்டும். புலிகள் செய்தார்கள் மக்களுக்காக .......

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்களது மற்றைய கதைகளைப் படித்தபின்பு தான், உங்களின் ஆக்கங்களைத் தேடிய போது கண்ட உங்களின் முதல் கதையினை இன்று படித்தேன். வெற்றி வரும் போது அதற்கான விலைகளப் பற்றி அறியமால் பாராட்டி விட்டு தோற்கும் போது அவர்களைத் தூற்றுகிறார்கள் பலர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.