Jump to content

யாழ்ப்பாணத்து கூழ்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள்.

கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 100 கிராம்

கழுவின இறால் - 100 கிராம்

கழுவின பாதி நண்டு - 8

மீன்தலை - 1

புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி

பயிற்றங்காய் - 10

புளி - ஒரு சின்ன உருண்டை

பாலாக்கொட்டை - 100 கிராம்

சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - சிறிதளவு

மிளகு - சிறிதளவு

நற்சீரகம் - சிறிதளவு

செத்தல் மிளகாய் - சிறிதளவு

செய்முறை:

1. ஒடியல் மாவை அரிப்பன் கொண்டு நன்றாக அரித்து கழுவி வைக்கவும்.

2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து வைக்கவும்.

4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன் பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும்.

5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போடவும்.

6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும்.

7. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

கூழ் குடிப்பதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாது என்பது இம்மக்களுடைய கருத்தாகும்.

நன்றி யாழ் மண்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீயண்ணை - யாழ் மண் வாசனை அடிக்கின்றது.

கூழ் என்றதும் ஆடிப்பிறப்பு தான் ஞாபகம் வருகின்றது.

இத்துடன் சோமசுந்தரப்புலவரின் பாடலும் ஞாபகம் வருகின்றது.

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண கூழ் என்பது என் உணர்வுகளுடன் இணைந்த ஒன்று

அப்பா புற்றுநோயில் சாக 6 நாட்களின் முன்பும் குடித்த ஒரு உணவு (அதுதான் இறுதியாக வாய்மூலம் உட்கொண்ட உணவாகவும் இருந்தது)

யாழில் சுற்றம் சூழ காச்சி உண்டதும்,

நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து டுபாயில் கூழ் காச்சியதும் பலருடன் சேர்ந்து அருந்தியதும்,

கனடா வந்த பின் காச்சி சுற்றம் சூழ குடிக்க ஆளின்றி அலைந்ததும்..........

நன்றி தமிழ் சிறி

Edited by நிழலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீயண்ணை - யாழ் மண் வாசனை அடிக்கின்றது.

கூழ் என்றதும் ஆடிப்பிறப்பு தான் ஞாபகம் வருகின்றது.

இத்துடன் சோமசுந்தரப்புலவரின் பாடலும் ஞாபகம் வருகின்றது.

இணைப்புக்கு நன்றி.

வாஷா, நேற்று இந்தப் பதிவை யாழ் மண்ணில் பார்த்தேன்.

யாழ்கள உறவுகளும் நாலு நாள் ஈஸ்டர் லீவில் வீட்டில் நிற்கும் செய்து பார்க்கட்டும் என்று இங்கு இணைத்துள்ளேன்.

ஏற்கெனவே யாழ் மண்ணுக்கு நன்றி தெரிவித்துள்ளேன்

கூழ் என்னும் போது நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஞாபகம் தான் வரும்.

இதோ அவரின் ஆடிக் கூழ் பாடல்.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆக்கம்:நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண கூழ் என்பது என் உணர்வுகளுடன் இணைந்த ஒன்று

------

யாழில் சுற்றம் சூழ காச்சி உண்டதும்,

நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து டுபாயில் கூழ் காச்சியதும் பலருடன் சேர்ந்து அருந்தியதும்,

கனடா வந்த பின் காச்சி சுற்றம் சூழ குடிக்க ஆளின்றி அலைந்ததும்..........

நன்றி தமிழ் சிறி

உண்மை தான் நிழலி,

கூழ் குடிக்கும் போது சுற்றம் சூழ நண்பர், உறவினர்களுடன் குடிக்கும் போது தான் சுவையாக இருக்கும்.

அதனை பலரும் கூழ் பாட்டி என்று தான் சொல்வார்கள்.

இப்போது நீங்கள்...... கனடாவில் கூழ் காய்ச்சினால் சுற்றம், சூழ கூழ் குடிக்க ஆட்கள் இருக்கிறார்கள் தானே....... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூழ் மறக்க முடியாத ஒரு உணவு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=10828&st=0

http://www.yarl.com/forum/index.php?showtopic=3345

குளக்காட்டான், 2005ம், 2006ம் ஆண்டிலேயே யாழ் களத்தில் கூழ் காய்ச்சியாச்சா......

அது ஆறியிருக்கும், கூழ் சூடாக குடித்தால் தான் சுவையாக இருக்கும்.smiley-eatdrink003.gifsmiley-eatdrink059.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆக்கம்:நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

ஸ்ரீறியண்ணை யாழ்ப்பாண மண்வாசனை என்பதை தான் அப்படி எழுதிவிட்டேன். புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கூழ் என்றால் அது யாழ்ப்பாணமக்களின் விரும்பிய உணவு.

பாடல் பதிவிற்கு நன்றி ஸ்ரீறியண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கிடக்கட்டும்

எல்லாரும் ஆடிக்கூழைப்பற்றி கதைக்கிறியளோ இல்லாட்டி ஒடியல் கூழைப்பற்றி கதைக்கிறியளோ?

ஏனெண்டால்

ஆடிக்கூழுக்கும் ஒடியல்குழுக்கும் கனக்க வித்தியாசமெண்டு நினக்கிறன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கிடக்கட்டும்

எல்லாரும் ஆடிக்கூழைப்பற்றி கதைக்கிறியளோ இல்லாட்டி ஒடியல் கூழைப்பற்றி கதைக்கிறியளோ?

ஏனெண்டால்

ஆடிக்கூழுக்கும் ஒடியல்குழுக்கும் கனக்க வித்தியாசமெண்டு நினக்கிறன் :)

என்ன வித்தியாசம் குமாரசாமி அண்ணை,

தலையிலை கல்லை தூக்கிப் போடாமல், உடன சொன்னால் நல்லது கண்டியளோ........ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வித்தியாசம் குமாரசாமி அண்ணை,

தலையிலை கல்லை தூக்கிப் போடாமல், உடன சொன்னால் நல்லது கண்டியளோ........ :)

எனக்கு தெரிந்தவரைக்கும்

ஆடிக்கூழ் இனிப்பாக இருக்கும்

ஒடியல்கூழ் காரசாரமாக இருக்கும்

சிறித்தம்பி!!!!

என்ரை ஊரிலை ஆடிக்கூளெண்டால் பச்சையரிசிமாவிலை அதுவும் அரிசிமாவை குறுணிகுறுணியாய் உருட்டி பயறு பனங்கட்டி எல்லாம் இனிப்பாய் செய்வினம்

இருந்தாலும் ஊருக்கு ஊர் வித்தியாசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவரைக்கும்

ஆடிக்கூழ் இனிப்பாக இருக்கும்

ஒடியல்கூழ் காரசாரமாக இருக்கும்

சிறித்தம்பி!!!!

என்ரை ஊரிலை ஆடிக்கூளெண்டால் பச்சையரிசிமாவிலை அதுவும் அரிசிமாவை குறுணிகுறுணியாய் உருட்டி பயறு பனங்கட்டி எல்லாம் இனிப்பாய் செய்வினம்

இருந்தாலும் ஊருக்கு ஊர் வித்தியாசம்

குமாரசாமி அண்ணா, இதுவரை நான் கூழ்குடிச்சதே ஒரு பத்து தரம் தான்,

எல்லாம் காரசரமான கூழ் தான். அதில் இனிப்பு கூழ் என்று நீங்கள் சொல்ல வாய் ஊறூது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீறியண்ணை யாழ்ப்பாண மண்வாசனை என்பதை தான் அப்படி எழுதிவிட்டேன். புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கூழ் என்றால் அது யாழ்ப்பாணமக்களின் விரும்பிய உணவு.

பாடல் பதிவிற்கு நன்றி ஸ்ரீறியண்ணை.

வாஷா, யாழ் களத்துக்கு எந்த விதமான பிரச்சினையும் என்னால் வரக்கூடாது.

அப்படியான விஷங்களில் நான் மிக அவ தானமாக இருப்பேன். :)

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்தவரைக்கும்

ஆடிக்கூழ் இனிப்பாக இருக்கும்

ஒடியல்கூழ் காரசாரமாக இருக்கும்

சிறித்தம்பி!!!!

என்ரை ஊரிலை ஆடிக்கூளெண்டால் பச்சையரிசிமாவிலை அதுவும் அரிசிமாவை குறுணிகுறுணியாய் உருட்டி பயறு பனங்கட்டி எல்லாம் இனிப்பாய் செய்வினம்

இருந்தாலும் ஊருக்கு ஊர் வித்தியாசம்

குமாரசாமி அண்ணா, இதுவரை நான் கூழ்குடிச்சதே ஒரு பத்து தரம் தான்,

எல்லாம் காரசரமான கூழ் தான். அதில் இனிப்பு கூழ் என்று நீங்கள் சொல்ல வாய் ஊறூது.

ஆடிக்கூழ் செய்முறைக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26210&st=0

http://www.yarl.com/forum3/index.php?showtopic=41646

Edited by KULAKADDAN
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள்.

கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 100 கிராம்

கழுவின இறால் - 100 கிராம்

கழுவின பாதி நண்டு - 8

மீன்தலை - 1

புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி

பயிற்றங்காய் - 10

புளி - ஒரு சின்ன உருண்டை

பாலாக்கொட்டை - 100 கிராம்

சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - சிறிதளவு

மிளகு - சிறிதளவு

நற்சீரகம் - சிறிதளவு

செத்தல் மிளகாய் - சிறிதளவு

செய்முறை:

1. ஒடியல் மாவை அரிப்பன் கொண்டு நன்றாக அரித்து கழுவி வைக்கவும்.

2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து வைக்கவும்.

4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன் பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும்.

5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போடவும்.

6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும்.

7. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

கூழ் குடிப்பதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாது என்பது இம்மக்களுடைய கருத்தாகும்.

நன்றி யாழ் மண்.

.

இந்தக் கூழுக்கு ஏன் கணவாய் சேர்க்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். :D

இது மச்சக் கூழ். எப்படி சைவக் கூழ் சமைக்கிறது...?????! :D

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்துக் கூழ் இணைப்பிற்கு மிகவும் நன்றி சிறி அண்ணா!

எனது அப்பாவுக்கும், அப்பப்பாவுக்கும் மிகவும் பிடித்த உணவு கூழ் தான் :D . நிழலி உங்கள் அப்பாவுக்கும் பிடித்த உணவா? :D

வீட்டில் உறவுகள் ஒன்றாகா சேரும் போது அப்பா தானே இதனை செய்து பரிமாறுவார்... எல்லா சத்தும் நிறைந்த இந்த உணவுக்கு ஈடு எதுவும் இல்லை என்று சொன்னது கூட ஞாபகம் வருகிறது...

கூழை வடலியில் பிழா மாதிரி ஒன்று செய்து (சரியாகப் பெயர் ஞாபகம் இல்லை) அதில் தருவார்... அதன் ருசியே தனி... எனது அப்பப்பா சொல்லுவார், கூழ் நல்ல பதமா செய்து இருக்க என்று அறிய, அந்தக் கூழைக் குடிக்கும் போது, குடிப்பவரின் மூக்கிலிருந்து நீர் சிந்துமாம்...

அது ஒரு கனாக் காலம்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் முந்தி ஒருக்கால் கூழ் காய்ச்சி இருக்கிறமாக்கும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=26267

கூழை பற்றிய செய்முறையே..... நாவூற வாயூற பகுதியில் கனக்க இருக்கும் போலை இருக்குது.

ஒவ்வொரு கூழும் ஒரு விதம். இந்த கோடை விடுமுறைக்கு எல்லாத்தையும் ஒரு கை பார்க்க வேண்டியது தான்.smiley-eatdrink026.gif

Link to comment
Share on other sites

ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். :lol:

இது மச்சக் கூழ். எப்படி சைவக் கூழ் சமைக்கிறது...?????! :rolleyes:

இந்த செய்முறை 2005 இல் பழைய யாழ் களத்திலை எழுதினது.

ஒடியற் கூழ் செய்முறை (சைவ கூழ்)

image29bw.jpg

தேவையான பொருட்கள்

ஒடியல் மா 250 கிராம்

150 கிராம் புழுங்கல் அரிசி

பலாக்காய் சுளை+பலா கொட்டை 250 கிராம்

பயற்றங்காய் 250 கிராம்

மரவள்ளி கிழங்கு 250 கிராம்

முருக்கம் காய் பிஞ்சு 2

முருக்கம் இலை, +முசுட்டை இலை,+ முல்லை இலை 250 கிராம்

மாங்காய் பெரிசா 1

செத்தல் மிளகாய் 250 கிராம் இடித்து தூள் ஆக்கியது

உப்பு அளவுக்கு

செய் முறை

புது ஒடியல் மா என்றால் கூழ் வைக்க 2 மணி நேரம் ஊற வைத்து நீரை 2 அல்லது 3 முறை மாற்றவும்

பழைய மா என்றால் 4 மணி நெரம் முதல் வைத்து பல முறை நீரை மாற்றவும்

இது மாவின் காறல் தன்மை போக உதவும்

பானையில் அரிசியை கழுவி அவிய வைக்கவும். அரிசி பதி அவிந்து வரும் போது எல்ல மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும்

மரக்கறிகள் அவிந்ததும் செத்தல் மிளகாய் தூள், உப்பு என்பவற்றை உங்கள் சுவை அளவுக்கு சேர்க்கவும்

நன்கு கலக்கி சிறிது நேரத்தின் பின் ஊற வைத்த ஒடியல் மாவை நீர் விட்டு கரைத்து சேர்க்கவும்

நன்கு கலக்கி கொதித்ததும் இறக்கவும்

கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-))

http://www.yarl.com/forum/index.php?&showtopic=3345&st=20

Edited by KULAKADDAN
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கூழுக்கு ஏன் கணவாய் சேர்க்கவில்லை?

கூழுக்கு சின்ன கணவாயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டால்..... கடிபடும் போது நல்ல சுவையாக இருக்கும் ரதி.

ஆனால் இங்கு கூழ் காய்ச்சின சட்டி, சிறியதாக இருந்ததால் கணவாயை சேர்க்காமல் விட்டுள்ளார்கள். ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். ^_^

------

இது ஒடியல் மாவில் செய்வதால், பனைகள் அதிகம் உள்ள இடமான யாழ்ப்பாண மக்களால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கலாம்.

யாழ் மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட சில பிரயோசனமான பொருட்கள் ....... துலா, இடியப்ப உரல் போன்றவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக் கூழ் இணைப்பிற்கு மிகவும் நன்றி சிறி அண்ணா!

எனது அப்பாவுக்கும், அப்பப்பாவுக்கும் மிகவும் பிடித்த உணவு கூழ் தான் ^_^ . நிழலி உங்கள் அப்பாவுக்கும் பிடித்த உணவா? :)

வீட்டில் உறவுகள் ஒன்றாகா சேரும் போது அப்பா தானே இதனை செய்து பரிமாறுவார்... எல்லா சத்தும் நிறைந்த இந்த உணவுக்கு ஈடு எதுவும் இல்லை என்று சொன்னது கூட ஞாபகம் வருகிறது...

கூழை வடலியில் பிழா மாதிரி ஒன்று செய்து (சரியாகப் பெயர் ஞாபகம் இல்லை) அதில் தருவார்... அதன் ருசியே தனி... எனது அப்பப்பா சொல்லுவார், கூழ் நல்ல பதமா செய்து இருக்க என்று அறிய, அந்தக் கூழைக் குடிக்கும் போது, குடிப்பவரின் மூக்கிலிருந்து நீர் சிந்துமாம்...

அது ஒரு கனாக் காலம்... :(

image29bw.jpg

-----

கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-))

http://www.yarl.com/forum/index.php?&showtopic=3345&st=20

குட்டி, பலா இலையில் கூழ் குடிப்பது..... கூழுக்கு தனிச்சுவையை தரும் என்பது முற்றிலும் உண்மை.

நீங்கள் குறிப்பிடும் பலா இலையில் செய்த பிளாவை குளக்காட்டான் தனது படத்தில் காட்டியுள்ளார், அதனை பனுவல் என்று குறிப்பிடுகின்றார்.

Link to comment
Share on other sites

குட்டி, பலா இலையில் கூழ் குடிப்பது..... கூழுக்கு தனிச்சுவையை தரும் என்பது முற்றிலும் உண்மை.

நீங்கள் குறிப்பிடும் பலா இலையில் செய்த பிளாவை குளக்காட்டான் தனது படத்தில் காட்டியுள்ளார், அதனை பனுவல் என்று குறிப்பிடுகின்றார்.

இல்லை தமிழ் சிறி, அவர் பனை ஓலை பிழாவை குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். கள்ளுத்தவறணைக்களில் இருப்பதை போன்றது. நான் படத்தில் காட்டிய பலா இலை பனுவல்?? ஐ குறிப்பிடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கூழ் என்டால் காரசாராமாய் இருக்க வேனும்.கண்னாலும் மூக்காலும் தணன்னி வரவேனும். :wub: சிலர் தேங்கய் சொட்டு சேர்த்து குடிப்பினம்.எனக்கு அது சரிப்பட்டு வராது.அது சரி சிறி ஏன் பாதி நன்டு :rolleyes: சாப்டாட்டு விசயத்தில கஞ்சத்தனம் கூடாது :lol:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.