Jump to content

காதலுக்காக தியாகம்


Recommended Posts

காதலுக்காக எத்தனையோ விடயங்கலை பலர் தியாகம் செய்வார்கள், ஆனால் எமது வாழ்வியல் முறையை மாற்றி நாம் யார் என்ற அடையாலத்தை இழந்து நாம் காதலித்து திருமணம் செய்ய வேண்டுமா? அதனால் வரும் பிரச்ச்கனைகளை எம்மால் எதிர் கொள்ள முடியும்மா?

நான் குறிப்பிடப்போவது எமது வீட்டு அயலில் வசித்த ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம், எனது நண்பியும் கூட, 2002- 2005 காலப்பகுதியில் அவர் யாழ்பாணத்தில் இருந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார், அங்கு தமிழ் நாட்டின் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த, கொஞம் அங்கு உயர்வ்குப்பினர் என் கருதப்ப்டும் பின்னனியைக் கொண்ட ஒருவரும் பணி புரிந்து வந்தார், இருவருக்கும் காதல் மலர்ந்து டிருமணம் செய்யும் தருவாயும் வந்தது ஆனால் காதலனின் குடும்பதிற்கு தமது மகன் தமது இனத்தில் அல்லாத ஒருவரை மணம் செய்வது விருப்பம் இல்லை.இவர்கள் இன்னமும் பழமையைக் கொஞம் கடுமையாக கடைபிடிப்பவர்கள், என்றாலும் மகனின் விருப்பதிற்கு ஏற்ப திருமணதிற்கு சம்மதிதனர் ஆனால் சில கண்டிப்பான விதிகளை பெண் கடை பிடிக்க வேண்டும் என சம்மதம் வாங்கினர். இத்திருமணம் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என எனது நண்பியின் பெற்றோரும் பெரிதாக விரும்பவில்லை ஆனால் வழக்கம் போல இறுதியில் 2006ம் ஆண்டு மார்கழி மாதம் இருவருக்கும் திருமணம் நடந்து.ஆனால் 3 வருடங்களுக்குப் பின் அவரை கிட்டத்தட்ட அவரது அடையாலத்தை முழுதாக மாற்றி விட்டனர். ஆனால் அவரது குடும்ப வாழ்க்கை மகிழ்சியானதாக தான் இருக்கிறது. ஆனால் எமது அடையாலத்தை இழந்த வாழ்க்கை தேவையா????. நான் அண்மையில் இந்தியா சென்ற போது சில நாட்கள் அவருடன் கழித்தேன் அப்போது அவரை அடையால்ம் காண்ப்தேகொஞம் கஷ்டமாக இருந்தது, ஊரில் நீளப்பாவாடை அல்லது ஷல்வார் என வித்ம் விதமாக வலம் வந்தவர் இப்போது சீலையால் இழுத்து மூடியபடி நெற்றியில் பெரிய கும்குமத்துடனும் கழுத்தில் பெரிய தாலிச் சங்கிலி சகிதம் எனக்கு இதுவா தர்ஷி என ஆச்சர்யம் தான் ஏற்பட்டது.

இப்போது அவரது நிலை இது தான்

1. அவர் இப்போது புடவை மட்டுமே அணிய அனுமதி, அதுவும் 24 மணித்தியாலமும். இவர் அணியும் சாரியின் பிளவுஸ் முதுகுபுறம் முழுவது மூடி கிட்டத்தட்ட முழங்கை வரை நீண்டு இருக்கும். யன்னல் வைத்த் பிளவுஸ் எல்லம் அணிய அனுமதி இல்லை.அவற்றுடன் இருப்பது பெரிய கஷ்டம் என்றார், இவர் முன்னர் எல்லாம் ஷல்வார் அணிவதில் பிரியம் கொண்டவர்,இப்பொது படுக்கைக்குப் போகும் போது கூட புடவை தான் அணிகிறார். அதுவும் வியர்க்கும் போது பெரும் துன்பம் என்றார்

2.மூக்கின் இரண்டு பக்கமும் 5- 6 வைரக் கற்கள் பதித்த மூக்குத்திகள் அணிவித்து உள்ளனர். மூக்குக் குத்திய போது தன்க்கு ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் இருததாம், அதுவும் சில நிமிட இடைவெளியில் இரு மூக்குகளும் குத்தப் பட்டது. அதைவிட தான் வலி தாங்க முடியாமல் அழுத போது அவரது குடும்ப அங்கத்தவர்கள் தன்னப் பார்த்து சிரித்து நையாண்டி செய்தனராம். அத்துடன் அவற்றை அணிவதற்கு வெட்கமாக இருக்கிரது என்றார்.ஆனால் அவரது கணவரின் குடும்பத்தில் அது சாதரணம், ஆனால் வேறு எங்கேயாவத் வெளியில் போகும் போது மற்றவர்கள் தன்னைப் பார்க்கும் ஏளனப் பார்வை, சில வேளைகளில் அழத் தோன்றும் என்றார்.

3.சிவதர்ஷினி என்ற அவரது பெயர் இப்போது மரகதவள்ளி என் மாற்றப்பட்டது. மரகதவள்ளி என்பது தந்து கணவரின் பாட்டியின் பெயராம் அவர்களது வழக்கப்படி மருமக்ளின் பெயர் விருப்பம் இல்லை என்றால்பெரும்பலும் பாட்டியின் பெயரயே வைப்பார்களம். அத்துடன் எக்காரணம் கொண்டும் தந்து பழைய பெயரை பாவிக்கக் கூடாது என்று உத்தரவாம். ஒரு தடவை தனது தாயாரே நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டாரம். எனக்கு அவர் அங்கு செனறவுடன் என்னிடம் கூறிய முதலாவது விடயமே என்னை தர்ஷி என்று அழைக்க வேன்டாம்,என்பதே. அதனால் நான் அவரை மரக்த்ம் என்றே அழைத்தேன்

4.மரக்கறி உணவு வகை மட்டுமே உண்ணுகிறார்.

5.வயது மூத்தவர்களுடன் பேசும் போதும் வெளியில் வீதியால் எப்போதும் தலை குனிந்து தான் போக வேணுமாம்.மாமியாருடன் பேசும் போது கூட தலை குனிந்து தான் பேச வேணுமாம்.

6.தலை மயிரை விரித்து விடவோ அல்லது நீண்ட பின்னலாகவோ போடாமல் கொண்டை மட்டுமே போடலாம். அதை விட நெற்றியில் பெரிய கும்குமம்ப் பொட்டு, ஊரில் இவர் ஸ்டிக்கர் பொட்டு மட்டுமே வைப்பார்.

7.வயது மூத்தவர்களுக்கு முன்னால் ஆசனத்தில் அமர முடியாது, ஆனால் அவர்களது வீட்டில் யாராவது ஒரு வயது மூத்த்வர் வீட்டில் எப்போதும் இருப்பர்கள், என்பதால் இவர் காலையில் எழுந்தால் இரவு படுக்கும் வரை ஓரிடத்தில் அமர முடியாது.

8. கட்டிலில் இவர் இப்பொது படுக்கக் கூடாதம் நிலத்தில் தான் படுத்து உறங்குவார், மனைவிக்கு உரிய கடமைகளைச் செய்ய மட்டும் கட்டிலில் படுக்காலாம் மற்றப்படி எல்லம் நிலத்தில் பாயில் தான் உறங்குகிறார்.அவரது கணவர் கட்டிலில் தான் உறங்குவார்

9.காலில் பாதணிகள் அணிய அனுமதி இல்லை வெறும் காலுடன் தான் வெளியில் போவது என்றாலும் போவார்.இவர்து திருமணதிற்குப் பின்னர் இவர் பாதணிகள் அணியவில்லை.

இதை விட எப்போதுமே கொஞ்சம் நகை அணிய வேண்டும், எல்லம் பழைய காலது ஸ்டைல் நகைகள் ஆனால் அதைப் பற்றி அவர் பெரிதாக கவலைப்படவில்லை, ம்ம் உலகதில் எந்தப் பெண் தான் தங்கத்திப் பற்றி குறை கூறி உள்ளார்

10. அதை விட விடியற்காலை 4 மணிக்கு எழும்பி அன்றைய வேலைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும், அதோடு தொலைக்காட்சி சினிமா எல்லாம் பார்க்ககக் கூடாதாம்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் எமது அடையாலத்தை இழந்து ஒரு காதல் வேண்டுமா ??

Link to comment
Share on other sites

காதல் என்பது ஒருவரையொருவர் புரிந்து, ஒருவரின் விருப்பத்திற்கு, ஆசைகளுக்கு மதிப்புக் கொடுத்து வாழ்வதே. ஆனால், இவரின் வாழ்க்கையோ மிகவும் அடிமைத்தனமானது. காதலித்து மணந்த மனைவியைக் கட்டாந்தரையில் படுக்கவைத்துவிட்டு அந்தக் காதல் கணவனால் எவ்வாறுதான் நித்திரை கொள்ள முடிகிறதோ தெரியவில்லை. அவரது காதல் நிச்சயமாக உண்மைக்காதலாக இருக்க முடியாது. அந்தப் பெண் இப்போதைய நிலையில் எத்தனை அழகிழந்து காணப்பட்டார் என்பதை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது. தனது தன்மானத்தை இழந்து, அடையாளங்களை வாழும் ஒரு வாழ்க்கை தேவையே இல்லை. இதற்கு இவர் தனது காதலைத் துறந்திருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில் அவரின் கணவர் ஒரு காதல் கணவனாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு காதல் கணவானக இருந்திருந்தால், தனது மனைவியை இந்த நிலைக்குத் தள்ளியிருக்க மாட்டார். நீங்கள் அறிந்திராத இன்னும் பல விடயங்களும் இருக்கிறது. அவை அந்தரங்கமானவை.

Link to comment
Share on other sites

8. கட்டிலில் இவர் இப்பொது படுக்கக் கூடாதம் நிலத்தில் தான் படுத்து உறங்குவார், மனைவிக்கு உரிய கடமைகளைச் செய்ய மட்டும் கட்டிலில் படுக்காலாம் மற்றப்படி எல்லம் நிலத்தில் பாயில் தான் உறங்குகிறார்.அவரது கணவர் கட்டிலில் தான் உறங்குவார்

இது எல்லாம் உங்களுக்கு சொன்னவாவோ? தனியே சந்தித்து? :rolleyes:

Link to comment
Share on other sites

மனுசியை prostituteமாதிரி பாவிக்கற பழமைவாத பன்னாடைகளிண்ட உறவுமுறைகளை காதல், தியாகத்தோட சேர்த்து அலசி ஆராய்கிற தன்மையை பார்த்து தலையை எங்க கொண்டுபோய் முட்டுறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனுசியை prostituteமாதிரி பாவிக்கற பழமைவாத பன்னாடைகளிண்ட உறவுமுறைகளை காதல், தியாகத்தோட சேர்த்து அலசி ஆராய்கிற தன்மையை பார்த்து தலையை எங்க கொண்டுபோய் முட்டுறது.

மச்சான் நான் நினைச்சதை எழுதிட்டிங்க‌

அதாலை ஒரு பச்சை புள்ளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எல்லாம் உங்களுக்கு சொன்னவாவோ? தனியே சந்தித்து? :rolleyes:

கந்தனுக்கு எப்போதும் கவட்டுகுள்ளதான் நினைப்பு :):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கொஞ்சப் பேருக்கு இந்திய மோகம். அந்த நாடே ஒரு காட்டுமிராண்டி நாடு. அதுக்குள்ள இந்தியாகாரனை லவ்வு பண்ணுறதும்.. இந்தியா காரியை லவ்வு பண்ணுறதும்.. எங்கட ஆக்களுக்கு இப்ப ஒரு பசன். அதில இவைக்கு ஒரு இதாம்.

அந்த நாடே சனத்தொகையால பெருகி வழியுது.. இதுக்குள்ள அங்க என்னத்தை தேடி ஓடினமோ. அனுபவியுங்கோ. அப்பதான் விளங்கும். சொல்லி புரிய வைக்கக் கூடிய கூட்டமல்ல.. எங்கட சனக்கூட்டம்.

வாழ்க.. வளமுடன். ஏதோ காஸை திறந்துவிட்டு தீ மூட்டி இன்னும் கொல்லாமல் விட்டாங்களே என்று சந்தோசப்படுங்கோ..! :D:lol:

Link to comment
Share on other sites

எல்லாம் அந்த சகோதரி தானாகத் தேடிக்கொண்டது. அவருக்கு விருப்பமில்லாவிட்டால் தானாகப் பிரிந்து சென்றுவிடப் போகிறார். ஆனால் அவருக்கு ஏதாவது சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்பதுதான் கேள்வி..! :lol:

Link to comment
Share on other sites

திருமணம் என்பது இரு மன பொருத்தம்!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு உடல்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம். இல்லற பயணம் இனிமையாக அமைய வேண்டுமானால் உடன் வருகிற துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியமானது. அந்தத் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இதில் `ஜஸ்ட் மிஸ்’ ஆனாலும் சிக்கல் ஆகிவிடும். இரு மனங்களும் ஒத்து போகாத நிலையில் விரைவில் சலிப்புகளும், பிரச்சினைகளும் தோன்றும். தற்போது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே மணமகனும், மணமகளும் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ளக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது. இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதன் முலம் திருமணத்துக்கு பிறகு ஏற்படக் கூடிய ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். பொதுவாக, துணையைத் தேர்ந்தெடுப்பதில் அழகும், அந்தஸ்தும்தான் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. ஆனால், அவற்றை மட்டுமே பிரதானமாக வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சிலர், பார்த்ததும் பிடித்து போய் விட்டால் உடனே திருமணத்துக்குச் சம்மதம் சொல்லி விடுவார்கள். ஆனால் இப்படி அவசரபட வேண்டாம். உங்களுக்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியலிடுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆதலால் திடகாத்திரமான ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் தாம்பத்தியம் சிறக்கும். திருமணம் செய்து கொள்ள போகும் இருவருமே தனது துணையாக போகிறவரின் உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். உடல் நலம் குன்றியவரை திருமணம் செய்து கொண்டால் தாம்பத்யத்தில் தோல்வி ஏற்படும். இதனால் பிரச்சினை ஏற்படும். நீங்கள் தேர்வு செய்ய போகும் வாழ்க்கைத் துணை பொருளாதார விஷயத்தில் மிகவும் கவனம் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துங்கள். இருவரில் யாரேனும் ஒருவர், தேவையில்லாமல், சிறுசிறு செலவுகளை அதிகம் செய்பவராக இருந்தாலும், குடும்பத்தின் உயர்வு பாதிக்கும். சிறுகச் சிறுக சேமிப்பது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். இந்த விஷயத்தில் இருவருமே ஒருமித்த கோணத்தில் சிந்திபவராக இருக்க வேண்டும். தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் மனக்கோட்டை கட்டியிருப்பான். அதேபோல், பெண்ணும் தனக்கு மாலையிட போகும் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி மனக்கோட்டை கட்டியிருப்பாள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி துணை அமையவில்லை என்றால் என்னவாகும்? ஏமாற்றமும், விரக்திம் மட்டுமே மிஞ்சும்.

அறுபது வயதானவரை இருபது வயதானவர் திருமணம் செய்து கொள்வது புரட்சிகரமாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் இனிமை என்பது இருக்காது. உங்களது துணை, ஏறக்குறைய சம வயது உடையவராக இருக்க வேண்டும். பெண், ஆணைவிட ஐந்து முதல் எட்டு வயது வரை இளையவராக இருப்பது நல்லது. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் அது வாழ்க்கையில் சலிப்பையே உருவாக்கும். கணவன், மனைவி இருவரும் இரண்டு விதமான சமுக நிலை உடையவர்களாக இருப்பது சரியானதல்ல. இருவருமே உயர்ந்த சமுக நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். வாழ்க்கைக்கு அதுதான் முக்கியம். வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத் தரம் ஆகியவை நமது சமுக அந்தஸ்தை உயர்த்திக் காட்டுபவை. வாழ்க்கைத் தரம் குறைந்த இடத்தில் வாழ்ந்தால் அந்த இடத்துக்கு ஏற்பவே நமது சமுக அந்தஸ்து மதிப்பிடப்படும். ஆண்கள் எப்போதும் அழகான பெண்ணைத்தான் மனைவியாக்கிக் கொள்ள விரும்புவார்கள். அதே சமயத்தில் நல்ல குணத்தையும் எதிர்பார்பார்கள். பெண்களுக்கும் இதே எதிர்பார்புதான் இருக்கும். உங்களின் துணை அழகாக, வாட்ட சாட்டமாக இருந்தால் மட்டும் போதாது, நடத்தை குறைபாடு இல்லாதவராக, குணக்கேடு இல்லாதவராக இருப்பதும் முக்கியம். தனக்குரியவர் நல்ல குணங்களோடு இருக்க வேண்டும் என எதிர்பார்பது நல்லது. கணவனும், மனைவியும்தான் மற்றவர்களை விடவும் மிக நெருங்கிய நபர்கள். ஒருவர் துன்பப்படுவதை இன்னொருவர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு அமைய போகும் வாழ்க்கைத் துணை இத்தகைய தோழமை உணர்வு உள்ளவராக இருப்பது அவசியம். இருவரும் உதவும் மனபான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் காதலை வெளிபடுத்தினால் உறவுகள் ஆழமாகும்

Link to comment
Share on other sites

எல்லாம் அந்த சகோதரி தானாகத் தேடிக்கொண்டது. அவருக்கு விருப்பமில்லாவிட்டால் தானாகப் பிரிந்து சென்றுவிடப் போகிறார். ஆனால் அவருக்கு ஏதாவது சிந்திக்கும் திறன் இருக்கிறதா என்பதுதான் கேள்வி..! :(

அவருக்கு விருப்பம் இல்லை என்று இல்லை, அவரது குடும்ப வாழ்க்கை மகிழ்சியானது தான், ஆனால் அவரது அடையாலம் மாற்றப்ப்ட்டு விட்டது, அதனால் தான் சில சிக்கல்கள்

Link to comment
Share on other sites

வாழ்க.. வளமுடன். ஏதோ காஸை திறந்துவிட்டு தீ மூட்டி இன்னும் கொல்லாமல் விட்டாங்களே என்று சந்தோசப்படுங்கோ..! :(:D

அவர்கள் அப்படிப் பட்டவர்கள் இல்லை, ஆனால் நான் மேலே குறிப்பிட்ட சில விடயங்களை கொஞம் இறுக்கமாக, கடைபிடிப்பவர்கள், உதாரணமாக 24 மணித்தியாலமும் சீலை கட்டினால் எப்படி இருக்கும், அல்லது 29 வயது பெண் ஒருவர் இரண்டு மூக்கிலும் கைவிரல் நகத்தின் அளவில், மூக்குதி பொடுவதிப் பார்த்தால் மற்றவர்கள் கேலியாகப் பார்ப்பார்களா இல்லையா? (2 மூக்குத்திகளும் இந்திய ரூபாயின் படி 100,000/=, ஒவ்வொன்றிலும் 6 வைரக் கற்கள் படி 12 வைரக் கற்கள்). அதுக்காக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் இல்லை, இப்போது அவருக்கு 1 வயதில் ஒரு குழந்தையும் உண்டு. :(:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது இருவரும் கல்யாணத்துக்கு முன் தமது வாழ்க்கை பற்றி பேசி தீர்மானிப்பது என்பதுதான்.....

இங்கு நீங்கள் கூறும் செய்திகளும் அவர்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து அமுலாக்கல்தான்...

எனவே இதில் வெளியாரின் நுளைவுகளே தற்போது சிக்கலை உண்டு பண்ணும்

எனவே கருத்து எழுதுவது தப்பு...

நன்றி

அவருக்கு விருப்பம் இல்லை என்று இல்லை, அவரது குடும்ப வாழ்க்கை மகிழ்சியானது தான்,

அவர்கள் அப்படிப் பட்டவர்கள் இல்லை, . அதுக்காக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் இல்லை, இப்போது அவருக்கு 1 வயதில் ஒரு குழந்தையும் உண்டு. :lol::lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.