Jump to content

ஓடிப்போன ஒட்டகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடிப்போன ஒட்டகம்

இந்தப்பனிக் குளிருக்கு எவன் வீட்டிற்குள்ளையே அடைபட்டுக்கிடப்பான்.

என்ரை நாட்டிலைதான் நான் சுதந்திரமாகச் சுத்தலாம் என்று ஒரு துண்டுக் காகிதத்திலை

எழுதி வைத்திட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி டுபாய்க்குக் கப்பல் ஏறின ஒட்டகம்,

கோடைகாலம் தொடங்க...... போனதுபோலவே சொல்லாமல் கொள்ளாமலுக்கு இரண்டு நாளுக்குமுதல் வந்து தன்ரை அறையுக்கை படுத்துக்கிடந்தது.

சரி என்னதான் நடக்குது பார்ப்பம் என்று பேசாமலுக்கு இருந்தால்

அது பாட்டுக்குத் திரும்பவும் தன்ரை குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டுது.

அதுதான் அந்தக் கதையளை உங்களுக்குச் சொல்லுவமென்று வந்து உட்கார்ந்தால் வைத்தியரிடம் மருந்தெடுக்கப்போறதுக்கு நேரமாச்சுது.

கோபியாதையுங்கோ போட்டுவந்து விசயத்தைச் சொல்லுறன்..........

நட்புடன் நாணல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தொடர்க...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிலாமதி,

ஒரு சிலராவது என்ரை எழுத்தையும் படிக்கிறதற்கு ஆவலாக இருக்ககிறியள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.

இப்ப ஒரு சின்னக் கதையைச் சொல்லுகிறன் கேளுங்கோ.....

கொள்கைமாறாத ஒட்டகமும் நானும்........

காலையில எழுந்து சோம்பல்போகாதவனாக

சோபாவில் சாய்ந்தபடி ஜன்னலுக்கால தெருவில போறவாற சனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன்.

என்ன அது இன்றைக்கும் காலங்காத்தாலை சோபாவில உட்கார்ந்து காலை ஆட்டினபடி............

நக்கலாகச் சொல்லிக்கோண்டு ஒட்டகம் தன்ரை அறையிலிருந்து தலையை நீட்டியது.

நான் எப்படியும் இருப்பன் அதாலை உனக்கென்ன கேடுவந்தது என்றன் எரிச்சலோட

காலமை எழும்பினால் வீட்டு உடுப்புக்கூட மாத்தாமலுக்கு வேலைவெட்டி இல்லாமல்

உந்தச் சோபாவிலை காலைஆட்டிக்கொண்டு இருக்கிறதே தொழிலாப்போச்சுது.

சும்மா இருக்கிறநேரத்தில என்னோட சேர்ந்து உந்த மலசலகூடம், சமையலறைச் சுத்தம் செய்யலாமே?

எனக்கென்றால் சும்மா பத்திக்கொண்டு வந்தது அடக்கிக்கொண்டு..

நானொன்றும் சும்மா பொழுதுபோகாமலுக்கு இருக்கேல்லை ஒரு கொள்கையோடதான் உட்காந்திருக்கிறன் என்று கத்தவும்,

அது என்ன அப்படி ஒரு கொள்கையாக்கும் என்று ஒட்டகம் முடிக்கமுதலே

நான் இன்றைக்கு முழுநாளும் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறதென்ற இலட்சியத்தோட இருக்கிறன்.

அட உதைத்தான் நேற்றும் சொன்னதுபோலகிடக்கு.........

ஒம்! ஒம்!

நேற்றுக்காலமையும் ஒரு அலுவலும் செய்யிறதில்லை என்ற குறிக்கோளோடதான் உட்கார்ந்தனான்.

பிறகென்னடா என்றால் தவிர்க்க இயலாமலுக்கு ஒரு சில வேலையளைச் செய்யவேண்டி வந்திட்டுது,

அதாலை சாயங்காலம் இலட்சியம் நிறைவேறாமல்போட்டுது என்ற கவலையோடதான் படுக்கப்போனனான்.

அதுதான் இன்றைக்கு என்னதான் நடந்தாலும் என்ரை கொள்கையைவிடுகிறதில்லை என்ற கொள்கையிலை ஒரேபிடியாக இருக்கிறன்.

அதை இதைச் சொல்லிப் பிறகு இன்றைக்கும் சாயங்காலம் என்னைக் கவலைப்பட வைத்திடாதை,

நீயும் என்ரை கொள்கையை ஒருநாளுக்கென்றாலும் கடைப்பிடிச்சுப்பார் அப்ப தெரியும் அருமை என்று நான் சொல்லவும்,

ஒட்டகம் சட்டென்று நான் கொம்யுனிசம் சமத்துவம் என்றதைவிட்டு ஒருநாளும் விலகமாட்டன் என்று வீரமாச் சொல்ல

நானும் விடாமலுக்கு

அப்ப இன்றைக்கும்

முதலாளியளை ஒழிக்கிறன்,

அளவுக்கு அதிகமாக வச்சிருக்கிறவனை ஒழிக்கிறன்,

சமத்துவத்தை உண்டாக்கிறன் என்று அடுத்தவனைத் தட்டிச்சுத்தி ஓசிச்சீவியம் நடத்தப்போறாயென்று சொல்லு என்றன் நக்கலாக

இப்படியே கதைச்சுக் கதைச்சு வீணாக நேரம்போகுது.

நானொரு புது ஜக்கிசான் பட DVD வாங்கிவந்தனான் பார்க்கப்போறன்.

super என்று internet இல எல்லாம் கனபேர் எழுதியிருக்கிறாங்கள் விருப்பமென்றால் சேர்ந்து பாருமன் என்று ஒட்டகம் கேட்கவும்.

நானும் என்னை மறந்து, ஜக்கிசான் படமென்றால் நல்ல சண்டையும் பகிடியுமாக சும்மா இருக்கிறதுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்குமென்றன்.

கொள்கைகள்...................................?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையை வாசித்தேன்...ஏன் நீங்கள் ஒட்டகத்தை வைத்தே கதை எழுதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கதையை வாசித்தேன்...ஏன் நீங்கள் ஒட்டகத்தை வைத்தே கதை எழுதுகிறீர்கள்?

ரதி உங்களது சந்தேகத்தைத் தயக்கமின்றிக் கேட்டீர்களே நன்றிகள்.

தயக்கமின்றிக் கேட்டீர்கள் என்று எழுதியதிலும் ஒரு விடயம் இருக்கிறது பொதுவாகவே நம்மில் அநேகருக்கும் ஒரு அர்த்தமற்ற பயமிருக்கும். தனக்கொருவிடயம் தெரியாது என்று அடுத்தவரிடம் கேட்பதால் அவர் தன்னைப்பற்றித் தாழ்வாக நினைத்துவிடுவாரோ அல்லது பொது இடங்களில் தெரியாத ஒருவிடத்தைப்பற்றிச் சந்தேகம் கேட்டால் சமுதாயத்தில் தனது அந்தஸ்த்துக்குறைந்துவிடுமோ என்ற தயக்கத்தில் தெரியாத, புரியாத விடயங்களையெல்லாம் தெரிந்தமாதிரி நடித்துக்கொள்வோம்.

உண்மையிலே எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கவேண்டுமென்ற தேவையுமில்லை சாத்தியமும் இல்லை. ஆனால் தெரியாத ஒருவிடயத்தைச் சந்தர்ப்பம் கிடைத்தும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் இருப்பதுவோ அல்லது தெரிந்தமாதிரிக் காட்டிக் கொள்வதுவோதான் தவறு அப்படிச் செய்வதன்மூலம் தன்னையேதான் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இதனால்த்தான் ரதியிடம் இருந்த தேடுதல் ஆர்வத்தை பாராட்டியே அப்படி சந்தேகத்தைத் தயக்கமின்றிக் கேட்டீர்களே நன்றிகள் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

இனி விசயத்துக்வாறன் ரதி

நாடகங்களின் ஒரு மாற்று வடிவமாக தெருநாடகங்கள் குறியீட்டு நாடகங்கள் இருப்பதுபோல

தான் சொல்லவரும் கருத்தை இவ்வாறானதொரு மாற்று வடிவில் சொல்வதுவும் கதைகளை முக்கியமாக சமுகச் சீர்கேடுகளைச் சொல்வதில் ஒரு பாணியாகும் இந்தக் கதைவடிவம் தமிழிற்குத்தான் புதிதே அன்றிப் பல வேற்றுமொழிகளிலும் இவ்வாறாகத் தமது கருத்துக்களைச் சொல்லும்கதைகள் நிறையவே வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான கதைகளின் தொகுப்புக்கள் புத்தகங்களாகப் பல மொழிகளிலும் வந்திருக்கின்றன.

நம்மவர்மத்தியிலும் இவ்வகைப்படைப்புக்களை தோற்றுவிக்கலாமே என்னற எண்ணத்திலேயே

ஒட்டகத்தையும் கதை மாந்தருடன் இணைத்து எழுதுகிறேன். இங்கு ஒட்டகமென்பது வெறுமனே ஒரு குறியீடே அன்றி விசேடமா வேறெதுவும் இல்லை. நீங்களும் இதுபோல ஒரு எலி, புலி, நரியென எதையாவது இணைத்துக்கற்பனை செய்துபாருங்களேன்.

Link to comment
Share on other sites

ஓ ஒட்டகம் வெற்றுக்குறியீடு மாத்திரம்தானோ. நான் நினைச்சன் உங்கட வாழ்க்கைத்துணையை கடுப்பில ஒட்டகம் எண்டு கூப்படிறீங்களாக்கும் எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஒட்டகத்தாருக்கு சிவப்பு சட்டை காரருடன் என்ன கோபம் என்று சொல்லுங்கோவன்...உங்கள் குறியீடு கதை வடிவங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ ஒட்டகம் வெற்றுக்குறியீடு மாத்திரம்தானோ. நான் நினைச்சன் உங்கட வாழ்க்கைத்துணையை கடுப்பில ஒட்டகம் எண்டு கூப்படிறீங்களாக்கும் எண்டு.

மச்சான், என்ரை பழைய கதையைக் கேட்டுப்போட்டு நீங்களே முடிவுபண்றுங்களேன். சிறுவயதுமுதல் கொழும்பில் வளர்ந்து இந்துக்கல்லூரி றோயல்கல்லூரி எனப் படித்ததில் ஓரறவிற்குச் சரளமாக மூன்று மொழிகளிலும் பேசமுடிந்தில் தமிழ் சிங்களம் என்றெவித்தியாசம் இல்லாமல நண்பர்களைவிட அதிகமான நண்பிகள் கூட்டத்துடன் ஜாலியாச் சுற்றித்திரிந்த எனது வாழ்க்கையை பதினெட்டாவது வயதில 1977 ஆண்டு இனக்கலவரம் முற்றாகப் புரட்டிப்போட்டது. அகதியாக வடமராட்சியில் கால்பதித்த எனது வாழ்வின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று போர்க்குணமுள்ளவனாக மாறியது. அடுத்தது நல்லதொரு நண்பனைப்போன்று ஆளுமையும் நிதானமும் மதிநுட்பமும்மிக்க அன்பான மனைவியைச் சந்தித்தது. நான் உச்சங்களைத்தொட்ட அகங்காரத்தில் திளைத்தவேளைகளில் நிதானந்தவறாமலும் குப்புறவிழுந்த சோகமான கணங்களில் தன்மடியில் தாங்கிய தாயாகவும் நிற்கும் என் மனைவியின் துணையில்லாது இருந்திருந்தால் எனது சமாதியில் என்றோ புல்முளைத்திருக்கும்.

அது சரி ஒட்டகத்தாருக்கு சிவப்பு சட்டை காரருடன் என்ன கோபம் என்று சொல்லுங்கோவன்...உங்கள் குறியீடு கதை வடிவங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

புத்தன், எனக்கொன்றும் சிவப்புச்சட்டைக்காரரிலை கோபங்கிடையாது.நான் முன்பு கூறியதுபோலத் திடீரென வடக்கிற்குத் தூக்கி வீசப்பட்டபின் அதற்கான காரணங்களைத் தேடமுற்பட்டபோது படித்த புரட்சி வரலாறுகள்தான் நாளடைவில் வீட்டிலிருந்து பாடாலைக்குச் செல்வதாகப் புறப்பட்டு நண்பரிடம் பாடப்புத்தகங்களைக் கொடுத்துவிட்டு யாழிலிருந்து வன்னிக்கு மினிபஸ் ஏறவும் இரவு அப்பாவிப் புhனைபோல வீட்டுக்குவரும் துணிச்சலைத்தந்து நாளடைவில் நிரந்தரமாக வீட்டிலிருந்து வெளியேற்றியது. நான் கதைகளில் தொட்டுச்செல்வது பல்வேறு மனித முரண்பாடுகளைத்தான் அவை எல்லாம் என் கொள்கைகளாக இருக்கவேண்டுமென்ற நியதி எதுவும் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான், என்ரை பழைய கதையைக் கேட்டுப்போட்டு நீங்களே முடிவுபண்றுங்களேன். சிறுவயதுமுதல் கொழும்பில் வளர்ந்து இந்துக்கல்லூரி றோயல்கல்லூரி எனப் படித்ததில் ஓரறவிற்குச் சரளமாக மூன்று மொழிகளிலும் பேசமுடிந்தில் தமிழ் சிங்களம் என்றெவித்தியாசம் இல்லாமல நண்பர்களைவிட அதிகமான நண்பிகள் கூட்டத்துடன் ஜாலியாச் சுற்றித்திரிந்த எனது வாழ்க்கையை பதினெட்டாவது வயதில 1977 ஆண்டு இனக்கலவரம் முற்றாகப் புரட்டிப்போட்டது. அகதியாக வடமராட்சியில் கால்பதித்த எனது வாழ்வின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று போர்க்குணமுள்ளவனாக மாறியது. அடுத்தது நல்லதொரு நண்பனைப்போன்று ஆளுமையும் நிதானமும் மதிநுட்பமும்மிக்க அன்பான மனைவியைச் சந்தித்தது. நான் உச்சங்களைத்தொட்ட அகங்காரத்தில் திளைத்தவேளைகளில் நிதானந்தவறாமலும் குப்புறவிழுந்த சோகமான கணங்களில் தன்மடியில் தாங்கிய தாயாகவும் நிற்கும் என் மனைவியின் துணையில்லாது இருந்திருந்தால் எனது சமாதியில் என்றோ புல்முளைத்திருக்கும்.

தங்களது வாழ்க்கை என்னையும் உறையவைத்துவிட்டது

தாங்கள் 1977

நான் 1983

அதே இந்துக்கல்லூரி (பம்பலப்பிட்டிய)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.