Jump to content

ஓடிப்போன ஒட்டகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடிப்போன ஒட்டகம்

இந்தப்பனிக் குளிருக்கு எவன் வீட்டிற்குள்ளையே அடைபட்டுக்கிடப்பான்.

என்ரை நாட்டிலைதான் நான் சுதந்திரமாகச் சுத்தலாம் என்று ஒரு துண்டுக் காகிதத்திலை

எழுதி வைத்திட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி டுபாய்க்குக் கப்பல் ஏறின ஒட்டகம்,

கோடைகாலம் தொடங்க...... போனதுபோலவே சொல்லாமல் கொள்ளாமலுக்கு இரண்டு நாளுக்குமுதல் வந்து தன்ரை அறையுக்கை படுத்துக்கிடந்தது.

சரி என்னதான் நடக்குது பார்ப்பம் என்று பேசாமலுக்கு இருந்தால்

அது பாட்டுக்குத் திரும்பவும் தன்ரை குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டுது.

அதுதான் அந்தக் கதையளை உங்களுக்குச் சொல்லுவமென்று வந்து உட்கார்ந்தால் வைத்தியரிடம் மருந்தெடுக்கப்போறதுக்கு நேரமாச்சுது.

கோபியாதையுங்கோ போட்டுவந்து விசயத்தைச் சொல்லுறன்..........

நட்புடன் நாணல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தொடர்க...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிலாமதி,

ஒரு சிலராவது என்ரை எழுத்தையும் படிக்கிறதற்கு ஆவலாக இருக்ககிறியள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.

இப்ப ஒரு சின்னக் கதையைச் சொல்லுகிறன் கேளுங்கோ.....

கொள்கைமாறாத ஒட்டகமும் நானும்........

காலையில எழுந்து சோம்பல்போகாதவனாக

சோபாவில் சாய்ந்தபடி ஜன்னலுக்கால தெருவில போறவாற சனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன்.

என்ன அது இன்றைக்கும் காலங்காத்தாலை சோபாவில உட்கார்ந்து காலை ஆட்டினபடி............

நக்கலாகச் சொல்லிக்கோண்டு ஒட்டகம் தன்ரை அறையிலிருந்து தலையை நீட்டியது.

நான் எப்படியும் இருப்பன் அதாலை உனக்கென்ன கேடுவந்தது என்றன் எரிச்சலோட

காலமை எழும்பினால் வீட்டு உடுப்புக்கூட மாத்தாமலுக்கு வேலைவெட்டி இல்லாமல்

உந்தச் சோபாவிலை காலைஆட்டிக்கொண்டு இருக்கிறதே தொழிலாப்போச்சுது.

சும்மா இருக்கிறநேரத்தில என்னோட சேர்ந்து உந்த மலசலகூடம், சமையலறைச் சுத்தம் செய்யலாமே?

எனக்கென்றால் சும்மா பத்திக்கொண்டு வந்தது அடக்கிக்கொண்டு..

நானொன்றும் சும்மா பொழுதுபோகாமலுக்கு இருக்கேல்லை ஒரு கொள்கையோடதான் உட்காந்திருக்கிறன் என்று கத்தவும்,

அது என்ன அப்படி ஒரு கொள்கையாக்கும் என்று ஒட்டகம் முடிக்கமுதலே

நான் இன்றைக்கு முழுநாளும் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறதென்ற இலட்சியத்தோட இருக்கிறன்.

அட உதைத்தான் நேற்றும் சொன்னதுபோலகிடக்கு.........

ஒம்! ஒம்!

நேற்றுக்காலமையும் ஒரு அலுவலும் செய்யிறதில்லை என்ற குறிக்கோளோடதான் உட்கார்ந்தனான்.

பிறகென்னடா என்றால் தவிர்க்க இயலாமலுக்கு ஒரு சில வேலையளைச் செய்யவேண்டி வந்திட்டுது,

அதாலை சாயங்காலம் இலட்சியம் நிறைவேறாமல்போட்டுது என்ற கவலையோடதான் படுக்கப்போனனான்.

அதுதான் இன்றைக்கு என்னதான் நடந்தாலும் என்ரை கொள்கையைவிடுகிறதில்லை என்ற கொள்கையிலை ஒரேபிடியாக இருக்கிறன்.

அதை இதைச் சொல்லிப் பிறகு இன்றைக்கும் சாயங்காலம் என்னைக் கவலைப்பட வைத்திடாதை,

நீயும் என்ரை கொள்கையை ஒருநாளுக்கென்றாலும் கடைப்பிடிச்சுப்பார் அப்ப தெரியும் அருமை என்று நான் சொல்லவும்,

ஒட்டகம் சட்டென்று நான் கொம்யுனிசம் சமத்துவம் என்றதைவிட்டு ஒருநாளும் விலகமாட்டன் என்று வீரமாச் சொல்ல

நானும் விடாமலுக்கு

அப்ப இன்றைக்கும்

முதலாளியளை ஒழிக்கிறன்,

அளவுக்கு அதிகமாக வச்சிருக்கிறவனை ஒழிக்கிறன்,

சமத்துவத்தை உண்டாக்கிறன் என்று அடுத்தவனைத் தட்டிச்சுத்தி ஓசிச்சீவியம் நடத்தப்போறாயென்று சொல்லு என்றன் நக்கலாக

இப்படியே கதைச்சுக் கதைச்சு வீணாக நேரம்போகுது.

நானொரு புது ஜக்கிசான் பட DVD வாங்கிவந்தனான் பார்க்கப்போறன்.

super என்று internet இல எல்லாம் கனபேர் எழுதியிருக்கிறாங்கள் விருப்பமென்றால் சேர்ந்து பாருமன் என்று ஒட்டகம் கேட்கவும்.

நானும் என்னை மறந்து, ஜக்கிசான் படமென்றால் நல்ல சண்டையும் பகிடியுமாக சும்மா இருக்கிறதுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்குமென்றன்.

கொள்கைகள்...................................?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையை வாசித்தேன்...ஏன் நீங்கள் ஒட்டகத்தை வைத்தே கதை எழுதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கதையை வாசித்தேன்...ஏன் நீங்கள் ஒட்டகத்தை வைத்தே கதை எழுதுகிறீர்கள்?

ரதி உங்களது சந்தேகத்தைத் தயக்கமின்றிக் கேட்டீர்களே நன்றிகள்.

தயக்கமின்றிக் கேட்டீர்கள் என்று எழுதியதிலும் ஒரு விடயம் இருக்கிறது பொதுவாகவே நம்மில் அநேகருக்கும் ஒரு அர்த்தமற்ற பயமிருக்கும். தனக்கொருவிடயம் தெரியாது என்று அடுத்தவரிடம் கேட்பதால் அவர் தன்னைப்பற்றித் தாழ்வாக நினைத்துவிடுவாரோ அல்லது பொது இடங்களில் தெரியாத ஒருவிடத்தைப்பற்றிச் சந்தேகம் கேட்டால் சமுதாயத்தில் தனது அந்தஸ்த்துக்குறைந்துவிடுமோ என்ற தயக்கத்தில் தெரியாத, புரியாத விடயங்களையெல்லாம் தெரிந்தமாதிரி நடித்துக்கொள்வோம்.

உண்மையிலே எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கவேண்டுமென்ற தேவையுமில்லை சாத்தியமும் இல்லை. ஆனால் தெரியாத ஒருவிடயத்தைச் சந்தர்ப்பம் கிடைத்தும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் இருப்பதுவோ அல்லது தெரிந்தமாதிரிக் காட்டிக் கொள்வதுவோதான் தவறு அப்படிச் செய்வதன்மூலம் தன்னையேதான் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இதனால்த்தான் ரதியிடம் இருந்த தேடுதல் ஆர்வத்தை பாராட்டியே அப்படி சந்தேகத்தைத் தயக்கமின்றிக் கேட்டீர்களே நன்றிகள் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

இனி விசயத்துக்வாறன் ரதி

நாடகங்களின் ஒரு மாற்று வடிவமாக தெருநாடகங்கள் குறியீட்டு நாடகங்கள் இருப்பதுபோல

தான் சொல்லவரும் கருத்தை இவ்வாறானதொரு மாற்று வடிவில் சொல்வதுவும் கதைகளை முக்கியமாக சமுகச் சீர்கேடுகளைச் சொல்வதில் ஒரு பாணியாகும் இந்தக் கதைவடிவம் தமிழிற்குத்தான் புதிதே அன்றிப் பல வேற்றுமொழிகளிலும் இவ்வாறாகத் தமது கருத்துக்களைச் சொல்லும்கதைகள் நிறையவே வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான கதைகளின் தொகுப்புக்கள் புத்தகங்களாகப் பல மொழிகளிலும் வந்திருக்கின்றன.

நம்மவர்மத்தியிலும் இவ்வகைப்படைப்புக்களை தோற்றுவிக்கலாமே என்னற எண்ணத்திலேயே

ஒட்டகத்தையும் கதை மாந்தருடன் இணைத்து எழுதுகிறேன். இங்கு ஒட்டகமென்பது வெறுமனே ஒரு குறியீடே அன்றி விசேடமா வேறெதுவும் இல்லை. நீங்களும் இதுபோல ஒரு எலி, புலி, நரியென எதையாவது இணைத்துக்கற்பனை செய்துபாருங்களேன்.

Link to comment
Share on other sites

ஓ ஒட்டகம் வெற்றுக்குறியீடு மாத்திரம்தானோ. நான் நினைச்சன் உங்கட வாழ்க்கைத்துணையை கடுப்பில ஒட்டகம் எண்டு கூப்படிறீங்களாக்கும் எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஒட்டகத்தாருக்கு சிவப்பு சட்டை காரருடன் என்ன கோபம் என்று சொல்லுங்கோவன்...உங்கள் குறியீடு கதை வடிவங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ ஒட்டகம் வெற்றுக்குறியீடு மாத்திரம்தானோ. நான் நினைச்சன் உங்கட வாழ்க்கைத்துணையை கடுப்பில ஒட்டகம் எண்டு கூப்படிறீங்களாக்கும் எண்டு.

மச்சான், என்ரை பழைய கதையைக் கேட்டுப்போட்டு நீங்களே முடிவுபண்றுங்களேன். சிறுவயதுமுதல் கொழும்பில் வளர்ந்து இந்துக்கல்லூரி றோயல்கல்லூரி எனப் படித்ததில் ஓரறவிற்குச் சரளமாக மூன்று மொழிகளிலும் பேசமுடிந்தில் தமிழ் சிங்களம் என்றெவித்தியாசம் இல்லாமல நண்பர்களைவிட அதிகமான நண்பிகள் கூட்டத்துடன் ஜாலியாச் சுற்றித்திரிந்த எனது வாழ்க்கையை பதினெட்டாவது வயதில 1977 ஆண்டு இனக்கலவரம் முற்றாகப் புரட்டிப்போட்டது. அகதியாக வடமராட்சியில் கால்பதித்த எனது வாழ்வின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று போர்க்குணமுள்ளவனாக மாறியது. அடுத்தது நல்லதொரு நண்பனைப்போன்று ஆளுமையும் நிதானமும் மதிநுட்பமும்மிக்க அன்பான மனைவியைச் சந்தித்தது. நான் உச்சங்களைத்தொட்ட அகங்காரத்தில் திளைத்தவேளைகளில் நிதானந்தவறாமலும் குப்புறவிழுந்த சோகமான கணங்களில் தன்மடியில் தாங்கிய தாயாகவும் நிற்கும் என் மனைவியின் துணையில்லாது இருந்திருந்தால் எனது சமாதியில் என்றோ புல்முளைத்திருக்கும்.

அது சரி ஒட்டகத்தாருக்கு சிவப்பு சட்டை காரருடன் என்ன கோபம் என்று சொல்லுங்கோவன்...உங்கள் குறியீடு கதை வடிவங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

புத்தன், எனக்கொன்றும் சிவப்புச்சட்டைக்காரரிலை கோபங்கிடையாது.நான் முன்பு கூறியதுபோலத் திடீரென வடக்கிற்குத் தூக்கி வீசப்பட்டபின் அதற்கான காரணங்களைத் தேடமுற்பட்டபோது படித்த புரட்சி வரலாறுகள்தான் நாளடைவில் வீட்டிலிருந்து பாடாலைக்குச் செல்வதாகப் புறப்பட்டு நண்பரிடம் பாடப்புத்தகங்களைக் கொடுத்துவிட்டு யாழிலிருந்து வன்னிக்கு மினிபஸ் ஏறவும் இரவு அப்பாவிப் புhனைபோல வீட்டுக்குவரும் துணிச்சலைத்தந்து நாளடைவில் நிரந்தரமாக வீட்டிலிருந்து வெளியேற்றியது. நான் கதைகளில் தொட்டுச்செல்வது பல்வேறு மனித முரண்பாடுகளைத்தான் அவை எல்லாம் என் கொள்கைகளாக இருக்கவேண்டுமென்ற நியதி எதுவும் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான், என்ரை பழைய கதையைக் கேட்டுப்போட்டு நீங்களே முடிவுபண்றுங்களேன். சிறுவயதுமுதல் கொழும்பில் வளர்ந்து இந்துக்கல்லூரி றோயல்கல்லூரி எனப் படித்ததில் ஓரறவிற்குச் சரளமாக மூன்று மொழிகளிலும் பேசமுடிந்தில் தமிழ் சிங்களம் என்றெவித்தியாசம் இல்லாமல நண்பர்களைவிட அதிகமான நண்பிகள் கூட்டத்துடன் ஜாலியாச் சுற்றித்திரிந்த எனது வாழ்க்கையை பதினெட்டாவது வயதில 1977 ஆண்டு இனக்கலவரம் முற்றாகப் புரட்டிப்போட்டது. அகதியாக வடமராட்சியில் கால்பதித்த எனது வாழ்வின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று போர்க்குணமுள்ளவனாக மாறியது. அடுத்தது நல்லதொரு நண்பனைப்போன்று ஆளுமையும் நிதானமும் மதிநுட்பமும்மிக்க அன்பான மனைவியைச் சந்தித்தது. நான் உச்சங்களைத்தொட்ட அகங்காரத்தில் திளைத்தவேளைகளில் நிதானந்தவறாமலும் குப்புறவிழுந்த சோகமான கணங்களில் தன்மடியில் தாங்கிய தாயாகவும் நிற்கும் என் மனைவியின் துணையில்லாது இருந்திருந்தால் எனது சமாதியில் என்றோ புல்முளைத்திருக்கும்.

தங்களது வாழ்க்கை என்னையும் உறையவைத்துவிட்டது

தாங்கள் 1977

நான் 1983

அதே இந்துக்கல்லூரி (பம்பலப்பிட்டிய)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.