Jump to content

படையினர்தான் தாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடுகின்றார்களா? - பூமுகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ன்னி இராணுவ ஆளுகைக்குள் இருகின்றது இராணுவ மயமாக்கப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு செய்திகள் கிடைத்து வருகின்றன. அண்மையில் பூநகரியில் நடந்த மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்று வந்த பூமுகன் அங்கு இராணுவத்தினர் மக்களை நெருங்கி செய்யும் பணிகள் குறித்தும் அந்த சூழலில் உள்ள அதன் பாதிப்பு குறித்தும் பூநகரியில் ஒரு நாள் என உதயன் நாளிதளில் இந்தப் பதிவை எழுதியுள்ளார்.

இராணுவ மயமாக்கும் எண்ணங்களை அந்த மக்களின் மனங்களிலிருந்து எடுத்துக் காட்டும் இந்த பதிவு.

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் இலங்கை இராணுவத்தினர் ஓய்வு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இது அரசுக்கு பொருளாதார ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவித்திருக்கின்றது. தற்போது களமுனைகள், காவல் நிலைகள், காவலரங்குகள் என்பவற்றில் படையினர் இல்லை. குறிப்பாக இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள்,சில முக்கியமான வீதிகள், கடற்கரையோரங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் என்பவற்றில் கணிசமான அளவு படையினர் சுழற்சி முறையில் கடமையில் ஈடுபடுத் தப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காகச் சேர்க்கப்பட்ட படையினர் தற்பொழுது ஓய்வு நிலையில் இருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அரசு மாற்று வேலைகளில் இராணுவத்தினரை வித்தியாசமாகப் பயன்படுத்தி வருகின்றது. இங்கு வித்தியாசமன என்பது மக்கள் மத்தியில் இராணுவத்தினர்மீதான நல் அபிப்பிராயம் ஒன்றை ஏற்படுத்தி அதன்மூலம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டமாகும். வன்னிப் பிரதேசத்தில் பூநகரிக் கிராமத்தில் ஒரு மரணச் சடங்கில் இராணுவத்தினர் நடந்து கொண்ட, செயற்பட்ட விதம் இதனை உறுதி செய்வது போன்று அமைந்திருக்கின்றது.

ஆரசின் செயற்திட்டத்தின் ஊடாகப் படையினர் பல உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக நாடு முழுவதும் பரவிய டெங்கு நோய் பல உயிர்களைக் காவு கொண்டதுடன் பலரை நோக்குள்ளாக்கியும் இருந்தது. டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரணத் திணைக்களத்தினரும் தொண்டு நிறுவனத்தினரும் பல்வேறு திட்டங்களையும் விழிப்புணர்வு செயற்பாடுகளையும் மக்களுக்கு வழங்கியிருந்தனர். மறு பக்கமாக இராணுவத்தினரின் படையணிகள் மக்களுடன் இணைந்து டெங்கை கட்டுப்படுத்த சிரமதானப் பணிகளையும் விழிப்புணர்வுக் கருத்துக்களையும் மக்களிடம் பரப்பி துணை நின்றன.

இவற்றைவிட மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் யாழ் பாதுகாப்பு தலமையகம் ஊடாக படையணிகள் பல இணைந்து பல்வேறு பட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றன. பாடசாலை மட்ட இல்ல மெய்வன்மைப் போட்டிகள் உள்ளுர் விளையாட்டு அணிகளுக்கிடையிலான போட்டிகள், விளையாட்டு அணிகளுக்கும், இராணுவ வீரர்களும் இடையிலான போட்டிகள் என அவை அமைந்திருக்கின்றன. உன்மையில் இந்த செயற்பாடுகள் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு, ஒற்றுமையை ஏற்படுத்துகின்றது? மறுபக்கத்தில் ‘செய்கின்றார்கள் செய்யட்டும்’ என்று அமைகின்றதோ மக்களுக்கு சில நன்மைகள் கிடக்கின்றன என்பது யதார்த்தம் ஆகும். குடா நாட்டில் நிலமை இப்படி இருக்க வன்னிப் பகுதியில் படையினரின் பங்களிப்பு என்பது வித்தியாசமாக உணரப்படுகின்றது.

நடந்து முடிந்த யுத்த்ததின் பொழுது எல்லாவற்றையும் இழந்து இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாங்களில் தங்கியிருந்த மக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் தற்போது படிப்படியாக மீள்குடிமயர்த்தப்படுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்கியமான சில பாடசாலைகளில் தற்காலிகமாக விடப்படும் மக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் மீளக்குடியமர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக பாடசாலைகளில் இருந்து குடும்பத் தலைவர், குடும்பத்தலைவியரை உழவு இயந்திரத்தில் ஏற்றிகச் கொண்டு அவர்களின் காணிகளுக்கு செல்லும் இராணுவத்தினர் அவரவரது காணிகளில் சிறு குடிசை அமைப்பதற்குத் தேவையான விபரங்களை சேகரிக்கின்றனர். மறுநாள் காலை குறிப்பிட்ட கிராமத்தில் மீள் குடியமர்த்துவதற்காக ஏற்றப்படும் குடும்பங்கள் அவரவரது காணிகளில் இறக்கப்பட்டதும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தற்காலிக குடிசை அமைத்து கொடுப்பதற்காக 6 முதல் 8 வரையான படையினர் உதவிப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் பொழுது வீட்டிற்கு உருத்துடையவர்கள் எந்த வேலைகளையும் செய்ய படையினர் அனுமதிப்பதில்லை. அந்தளவுக்கு பெருவிருப்புடன் அவர்களின் பணி இருக்கின்றது.

இவ்வாறு முக்கியமான பணியை படையினர் செய்வது மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருக்கின்றது. இவ்வாறான பணிகளை முடித்த பின்பும் நலன் விசாரிக்கும் பாணியில் புலன் விசாரணை நடத்தவும் படையினரின் ஒரு பகுதியினர் விசேடமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனபதும் நோக்கத்தக்கது. இவை இவ்வாறு இருக்க இந்த மாதம் முற்பகுதியில் (02.04.2010) அகதி முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த முகாமைத்துவ கற்கைகள் வணிகபீட மாணவனான் பாலசிங்கம் கருணாநிதி தனது இரண்டாம் வருட இறுதி அரையாண்டுப் பரீட்சை முடிவில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இந்த மாணவனின் மரணச் சடங்கில் படையினர் நல்கிய பங்களிப்பை மறந்துவிட முடியாது. மரணமான மாணவனின் குடும்பத்தினர் வவுனியா நலன்புரி நிலையத்திலிந்து ஒரிரு வாரங்களுக்கு முன்பதான் அவர்களது சொந்த இடமான பூநகரி, கறுக்காய் தீவு பகுதியில் மீள குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் மீளக்குடியமரும்போது படையினர் உதவினரோ என்வோ பன்னிரண்டு தகரங்களில் ஒரு வேப்பமர நிழலில் அவர்களது தற்காலிக குடிசை அமைக்கப்பட்டிருந்தது. வயல் வெளியாக காட்சியளிக்கும் அந்தப் பகுதியில் தற்போது நிலவும் அசாதாரண வெப்பநிலை எப்படி இருக்கும் என்று சொல்லிப் புரிய வைக்க முடியாது. சுற்றியிருக்கும் எல்லா குடும்பங்களும் இ;படித்தான் இருக்கின்றன. முன்னரைப்போhன்று பந்தல், கதிரைகள் என்று வாடகைக்கு அமர்த்துவதற்கு எதுவுமே கிடையாது ஆனால் வன்னியில் தரப்பாலுக்கு பஞ்சமில்லை. இதை ஒவ்வொரு தொண்டு நிறுவனங்களும் தமது நாமத்தால் எல்லா குடும்பங்களுக்கும் வழங்கியிருப்பதை காண முடிகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இந்த மாணவனின் பூத உடல் அவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்படட் போது படையினர் பல்வேறு வகையில் உதவிகளை மேற்கொண்டனர். பூநகரியில் குடி தண்ணீரைப் பெறுவது சற்றுக் கடினம். எல்லா வீடுகளிலும் கிணறு இருந்தலும் அவை உவர் நீராகவே காணப்படும். சில இடங்களில் மாத்திரமே நல்ல தண்ணி கிணறுகள் உள்ளன. இந்த வெப்பமான காலத்தில் தண்ணீர் இல்லாமல் எப்படி சமாளிப்பது? பொறுத்த நேரத்தில் படையினர் மூன்;று நான்கு தாங்கிகளில் நீரை நிப்பி உதவினர்.

மரணச் சடங்கின் பொழுது காலை மதியம் மாலை நேரங்களில் உணவுகளையும் அனைவருக்கும் படையினரே வழங்கினர். உண்மையில் மரணச் சடங்கிற்கு வருபவாகளுக்கு அயலவர்கள் உணவு மற்றும் நீர் ஆகாரங்களை வழங்குவது வன்னியில் ஒரு வழக்கும். இப்பொழுது அவ்வளவுக்கு அவர்கள் வசதியாக இல்லை. பெருமளவில் சமைப்பதற்கு போதுமான பாத்திரங்களை பெறுவதும் சிரம்தான். ஆனால் பல்வேறு இடங்களிலிருந்தும் மரணச் சடங்கிற்கு வந்தவர்களின் பசியை எப்படியோ தீர்க்கத்தான் வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் பூநகரி பிரதேசத்தில் படையினரின் உதவி மிகவும் தேவையான ஒன்றாகவே இருந்திருக்கின்றது. ஆனால் அவர்கள் இந்த உதவியை கேட்காமலே செய்திருந்தனர்.

அன்றைய தினம் இறுதிக் கிரியைக்காக கருணாநிதியின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லுவதற்குக் கூட படையினர் உதவினர். அவரின் உடல் உழவு இயந்திரத்தின் மூலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இப்படி வன்னியில் மக்களுக்கு துணையாக படையினர் ஈடுபட்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். அதனை அந்த பிரதேச மக்கள் நன்றியுடன் எடுத்து சொல்லுகின்றனர். வன்னிப் பகுதியில் யுத்த காலத்தின் பொழுது படையினரால் மக்கள் கட்டம் கட்டமாக இடம்பெயர வைக்கப்படடனர். இதன்போது ஷெல்தாக்குதல்கள் விமானத் தாக்குதல்கள் என்று பல்வேறு இன்னல்களுக்குள் அகப்பட்டு உயிர்களைப் பறிகொடுத்து பெறுமதியான சொத்துக்களை இழந்து உடுத்த உடையுடன் அகதி முகாங்களில் மக்கள் தஞ்சமடைந்தனர். அப்பொது அரச தரப்பினரும் தொண்டு நிறுவனங்களும் வழங்கிய உலர் உணவுப் பொருட்கள், சயைல் பாததிரங்கள், புடவைகள், கூரை விரிப்புக்கள், பிலாஸ்டிக் பொருட்கள் என்று சிறிய மூடைகளுடன் மீளக் குடியமர வந்திருக்கும் இந்த மக்களுக்கு மீண்டும் இராணுவத்தினரே பல்வேறு வகைகளிலும் உதவி புரிவது வித்தியாசமான ஒரு புறச் சுழலை அப்பகுதியில் ஏற்படுத்தி வருகின்றது.

மக்கள் தமக்கு நடந்தவற்றை எல்லாம் மறந்து இந்த உதவிகளை மனதார ஏற்றுக் கொள்ளுகின்றார்களா? அல்லது படையினர்தான் தாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடுகின்றார்களா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும். எப்படியோ இந்தச் சந்தர்ப்பத்தில் படையினர் மக்கள் மனங்களை வென்று ஒரு நல்லுறவைக் கட்டி எழுப்ப முற்படுவதன் விளைவுகள் எப்படி இருக்கப் போகின்றன? படையினரின் இந்த மாற்றத்திற்கு வேறு எதுவும் பின்னணி உண்டா? என்பதை கண்கூடாக பார்ப்பதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

நன்றி : உதயன்

pathivu.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயன் கட்சி மாறீட்டுது ....சரவணபவன் இன்னும் மாறேல்லதானே! :D

Link to comment
Share on other sites

இவர்கள் இப்படித்தான் நடித்து தங்களின் வேலையை கொண்டு போவார்கள். எ து பொ க்களுக்குதான் இது சரி

மற்றும்படி 1996 யாழில் இதே வேலை செய்து பிறகு யாவரும் அறிந்ததே . எத்தனை கொலைகள் பெண்கள் கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள், என்று இன்னோரன்ன என்று பலதும் அரங்கேறிக்கொண்டிருக்கிறார்கள்.

உள்னோக்கம் மதிவனங் உட்பட அனைத்து தமிழர்களும் அழியும் வரை சிங்களவனின் நடிப்பு தொடரும்

Link to comment
Share on other sites

தி. மு. க. கள் தான்.....

அப்போ பூமுகன் என்ன ஒட்டு குழுவா? அல்லது தேசத்துரோகியா?

என்ன சொல்கின்றீர்கள் யாழ் கள பேராசிரியர்களே, வைதிய கலாநிதிகளே, வழக்கறிஞர்களே ?

Link to comment
Share on other sites

தி. மு. க. கள் தான்.....

அப்போ பூமுகன் என்ன ஒட்டு குழுவா? அல்லது தேசத்துரோகியா?

என்ன சொல்கின்றீர்கள் யாழ் கள பேராசிரியர்களே, வைதிய கலாநிதிகளே, வழக்கறிஞர்களே ?

பூமுகன் சொன்ன சம்பவம் உண்மை.ஆனால் கடந்த காலங்களில் சுனாமி சொன்னது போல் இராணுவம் கடந்த காலங்களில் நடந்து கொண்டு பின்னர் என்ன செய்தது என்பது முழு சமூகமுமே அறியும்.எனவே அனுபவங்களில் இருந்து பட்டறிந்ததை தான் சொல்கிறோம்.அதாவது நல்ல மனதுடன் இராணுவம் செய்வதாக நம்ப தயாரில்லை. உதாரணத்துக்கு 17000 ஆக இருந்த சரணடைந்த போராளிகள் இன்று 11000 என்ற அளவில் உள்ளது.இப்போ தெரியவில்லையா இவர்களின் சுயமுகம்???

இந்த கொலைவெறி இராணுவம் மாறி நல்லவர்களாகி விட்டார்கள் என்றால் நம்ப இன்னும் கேணையர்கள் உலகில் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். :lol:

Link to comment
Share on other sites

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

Link to comment
Share on other sites

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

என்ன ஆசான் உடைந்த றெக்கொட் போன்று .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்....ரூம் போட்டு யோசிபாங்களொ.....

என்ன கிளிபிள்ளை போல கீச்சுட்டுகொண்டு........

ஏதாவது வேற சிடியை கேட்டு வாங்கி போடலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிளிபிள்ளை போல கீச்சுட்டுகொண்டு........

ஏதாவது வேற சிடியை கேட்டு வாங்கி போடலாமே?

தோழரே மருதங்கெணி நான் இந்த திரிக்கு பதில் எழுத வில்லையே.....

Link to comment
Share on other sites

தோழரே மருதங்கெணி நான் இந்த திரிக்கு பதில் எழுத வில்லையே.....

அவர் அப்படித்தான் .... இதை எல்லாம் பெரிசு படுத்தாதீர்கள்... விசயம் வெளியே தெரிஞ்சால் யாரும் பொம்புளை தரமாட்டாங்கள். பெரியமனசு பண்ணி விடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஆசான் உடைந்த றெக்கொட் போன்று .........

ஏன அண்ண குற்ரமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதா? :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.... இங்கதான் அரசியல் ஆய்வுகள் கட்டுரையள் பறக்குது..... அங்க நடக்கிறது தலைகீழா இருக்கு.

பாக்கபோனா தலைவர்ட தனிநாட்டு கொள்கைய பின்பற்றி கொஞ்ச காலத்தில ஒற்றநாடு உருவாகிடும். :(

Link to comment
Share on other sites

ம்.... இங்கதான் அரசியல் ஆய்வுகள் கட்டுரையள் பறக்குது..... அங்க நடக்கிறது தலைகீழா இருக்கு.

பாக்கபோனா தலைவர்ட தனிநாட்டு கொள்கைய பின்பற்றி கொஞ்ச காலத்தில ஒற்றநாடு உருவாகிடும். :(

அப்பவும் புலியை சொறியிற வேலையை நீங்கள் நிப்பாட்ட மாட்டியள் தானே...??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.