Jump to content

இலங்கை VS இந்தியா


Recommended Posts

இலங்கை இந்திய அணிகளிடையேயான 1 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவின் நாக்பூர் நகரில் பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையில் இம்முறை முதல் தடவையாக 7 ஒருநாள் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இவ்வருட முற்பகுதியில் இலங்கை இந்திய மேற்கிந்தியத்தீவு அணிகளிடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டியில்இ இலங்கைஇ இந்திய அணிகளிடையே நடைபெற்ற முதல் இரு சுற்று ஆட்டங்களிலும்இ இறுதியில் இவ்விரு அணிகளிடையே நடைபெற்ற சாம்பியன் மோதலிலும் இலங்கை அணியே வெற்றிபெற்றது.

தற்போது இந்திய மண்ணில் இவ்விரு அணிகளுக்குமிடையில் 7 போட்டிகள் நடைபெற இருப்பதனால்இ இவ்விரு அணிகளுக்குமிடையில் கடும்போட்டி நிலவக்கூடும்.

இலங்கையில் வைத்து இந்திய அணியை மூன்று போட்டிகளிலும் தோற்கடித்த இலங்கை அணி வீரர்களே தற்போதும் அத்தப்பத்துவின் தலைமையில் இந்தியா சென்றுள்ளார்கள்.

இலங்கை வந்திருந்த இந்திய அணிக்கு ராகுல் ராவிட் தலைமைதாங்கினார். தற்போதும்இ ராகுல் ராவிட்டே இந்திய அணிக்கு தலைமை தாங்குகின்றார். இலங்கை வந்திருந்த இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம்பிடிக்கவில்லை. கங்குலி இடம்பிடித்திருந்தார். ஆனால்இ இன்று ஆரம்பமாகும் 1 ஆவது போட்டியில் நீண்ட இடைவெளியின் பின் சச்சின் டெண்டுல்கர் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால்இ கங்குலி அணியில் இடம்பிடிக்கவில்லை.

இந்தியா சென்றுள்ள இலங்கை அணிக்கும்இ மும்பாய் கிரிக்கெட் அணிக்குமிடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதனால்இ தமக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளதாகஇ இந்திய அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும்இ இப்போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரனும்இ சமிந்த வாஸும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இலங்கைஇ இந்திய கிரிக்கெட் அணிகளிடையே இதுவரை 82 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 41 போட்டிகளிலும் இலங்கை 34 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 7 போட்டிகளுக்கு முடிவுகள் கிடைக்கவில்லை.

ஐ.சி.சி. யினால் கடைசியாக வெளியிடப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரப்பட்டியலில் இலங்கைக்கு 2 ஆம் இடமும்இ இந்தியாவுக்கு 7 ஆம் இடமும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியிலேயே இலங்கை கோவிந்தா இந்தியா 152 ஓட்டங்களால் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது

இந்தியா--350/6 (50 ஓவர்களில்)

இலங்கை-198க்கு சகல விக்கட்டையும் இழந்தது

முழுமையான ஸ்கோர் விபரம்

http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._25OCT2005.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி முகத்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலே!

எங்கட சிறீலங்கன் பெடியளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. இருந்து பாருங்கோ என்ன மாதிரி வெளுத்துக்கட்டப்போறாங்களெண

Link to comment
Share on other sites

அப்பாடா ஒருமாதிரி இலங்கை தோத்திட்டுது, நல்ல காரியம் நடந்திருக்கு. :lol:

Link to comment
Share on other sites

மொகாலியில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி இலங்கை - இந்திய அணிகள்

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒரு நாள் போட்டி இன்று வெள்ளிக்கிழமை மொகாலியில் நடைபெற்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இரண்டாவது போட்டி நடக்கிறது. பஞ்சாப் மக்கள் கிரிக்கெட் பிரியர்கள் என்பதால் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் ஏற்கெனவே விற்று முடிந்து விட்டன.

இன்றைய போட்டியிலும் இலங்கை பரிதாபமான 8 விக்கட்டுகளால் ஒரு தோல்வியைச் சந்தித்தது

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்புக்கு முன் வந்தது

இதன்படி துடுப்பாட ஆரம்பித்த இலங்கையணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது முன்னனி ஆட்டங்காரர்களை விரைவாக ஆட்டமிழந்தமையால் இலங்கை குறைந்த 122ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

இலங்கையணி 122 க்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது(35.4 ஓவர்)

இந்தியா அணி 123 2விக்கட் இழப்புக்கு 20.2 ஓவர்களில்

முழுமையான ஸ்கோர் பார்ப்பதுக்கு

http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._28OCT2005.html

Link to comment
Share on other sites

நன்றி முகத்தார்...திருப்பியும் இலங்கை தோற்றுவிட்டுது... சனத் ஜெயசுரியா சிறப்பான தொடக்கத்தை குடுத்திருந்தால் (சச்சினை மாதிரி) மற்றைய ஆட்டக்காரர்கள் 250 தாண்டி இருப்பார்கள், சனத் டக்கிலேயே போனதால், இலங்கை அணீ தடுமாறிவிட்டது, சச்சின் திரும்பவும் தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. பல பாகிஸ்த்தான் வீரர்களின் அலட்டல்களுக்கு பதில் கொடுத்துவிட்டார், கரி பூசிவிட்டார்.... 1வது போட்டியில்93, இரண்டாவது போட்டியில் 67*.

Link to comment
Share on other sites

இன்றைக்கு கெஞ்சி, கூத்தாடி விடுமுறை எடுத்து கிரிக்கெட் பார்ப்போம் என்றால், இலங்கை அணி காலை வாரிவிட்டதே. இருந்தபோதிலும் முறளியின் சிறப்பான பந்துவீச்சு, ரென்டுல்கரை ஆட்டம்கான் வைத்தது.

அதுசரி எமக்கு வைர எதிரி, அப்படியிருந்தும் இலங்கை கிரிக்கெட் அணியை நாம் ஏன் விரும்புகிறோம்

Link to comment
Share on other sites

அதுசரி எமக்கு வைர எதிரி, அப்படியிருந்தும் இலங்கை கிரிக்கெட் அணியை நாம் ஏன் விரும்புகிறோம்

நல்ல கேள்வி.. பொதுவாக விளையாட்டு எண்டு வந்தாலே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருடைய விளையாட்டுமுறை பிடிக்கும் (உதாரணத்துக்கு பிரேசில் வீரர் ரொனால்டோவுக்கு டன் விளையாடுற விளையாட்டு பிடிக்கும் எண்டால் பார்த்துக்குங்கோவன்) அதேமாதிரி ஆசியவை எடுத்துக்கொண்டால் கிரிக்கட் விளையாட்டு பிரபல்யமாகிகொண்டுவருகிறது, ஆகையால் அங்கே இருந்து வந்த நாங்கள் கிரிக்கட் விளையாட்டை மிகவும் விரும்பி பார்க்கிறோம், உலக தர வீரர்களில் சனத் ஜெயசூரியாவின் அதிரடி ஆட்டம் கன ரசிகர்களை கவர்ந்துள்ளது, முத்தையா முரளியின் பந்துவீச்சு பல ரசிகர்களை கவர்ந்துள்ளது, அதே போலத்தான் சச்சின்,சேவாக், சமிந்தவாஸ், சங்கக்கார, போன்றவர்களின் ஆட்டம் பல கிரிக்கட் ரசிகர்களை அவர்களை அறியாமலே கவர்ந்துவிடும்,, விளையாட்டில் இதெயெல்லாம் பெரிதாக எடுக்ககூடாது, எதிரி, துரோகி என்று,, :idea:

உதாரணத்துக்கு முரளி, ஜெயசூரியாவின் ஆட்டங்களைபார்த்து எத்தனையோ தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் தாங்களூம் அப்படி வரவேண்டு என்று நினைத்து சிறுவயசில் இருந்தே பயிற்சியை ஆரம்பிக்கின்றனர்...இதனால் நன்மையே ஒளிய தீமை இல்லை.... :idea:

Link to comment
Share on other sites

இன்றைக்கு கெஞ்சி, கூத்தாடி விடுமுறை எடுத்து கிரிக்கெட் பார்ப்போம் என்றால், இலங்கை அணி காலை வாரிவிட்டதே. இருந்தபோதிலும் முறளியின் சிறப்பான பந்துவீச்சு, ரென்டுல்கரை ஆட்டம்கான் வைத்தது.

அதுசரி எமக்கு வைர எதிரி, அப்படியிருந்தும் இலங்கை கிரிக்கெட் அணியை நாம் ஏன் விரும்புகிறோம்

எங்களுக்கு எப்பவுமே இலங்கை அணியை முழுசாப் பிடிக்காது..! சில வீரர்களின் திறமை பிடிக்கும்...(முரளி அந்தப்பத்து சனத் வாஸ் மகேல)..பிடிச்சது தென்னாபிரிக்க அணிதான்...! :wink: :P

Link to comment
Share on other sites

எங்களுக்கு எப்பவுமே இலங்கை அணியை முழுசாப் பிடிக்காது..! சில வீரர்களின் திறமை பிடிக்கும்...(முரளி அந்தப்பத்து சனத் வாஸ் மகேல)..பிடிச்சது தென்னாபிரிக்க அணிதான்...! :wink: :P

ஓய் பீஏ என்ன லொள்ளா?? பின்ன என்ன இலங்கை அணியை பிடிகாதெண்டுபோட்டு அணில இருக்கிற முழுப்பெயருகளை செப்புறீங்க ஆ???? :evil:

Link to comment
Share on other sites

ஓய் பீஏ என்ன லொள்ளா?? பின்ன என்ன இலங்கை அணியை பிடிகாதெண்டுபோட்டு அணில இருக்கிற முழுப்பெயருகளை செப்புறீங்க ஆ???? :evil:

என்ன ஆச்சு பொஸ்ஸுக்கு... இலங்கை அணில.. 20 பேர் இருந்தா.. 5 பேரோட திறமை பிடிச்சிருக்கு எண்டம் பொஸ்...இப்ப உங்களுக்கு பீஏயா இருக்கல்லையா அதுபோல...! :wink: :lol:

Link to comment
Share on other sites

இலங்கை

3வது போட்டியிலும் இலங்கை தோல்வி அடைந்தது இன்று ஜெப்புூரில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை 6 விக்கெட்டுகளால் மீண்டுமொரு தோல்வியை சந்திச்சிருக்கிறது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது குறிப்பிட்ட 50 ஓவர்களில் 4 விக்கட்டுகள் இழப்புக்கு 298 ஓட்டங்களை எடுத்தது (சங்கக்கார -138ஆ.இ)

அதன்பின் துடுப்பாட விளையாடிய இந்தியயணி 4 விக்கட்டுகள் இழப்புக்கு 46.1 ஓவர்களில் 303 ஓட்டங்களை பெற்றது (டோனி -183 ஆ.இ)

இலங்கையணி 298/4 (50ஓவர்)

இந்தியாஅணி 303/4 (46.1ஓவர்)

ஸ்கோர் விபரம்

http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._31OCT2005.html

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றிகள் முகத்தார் அப்பாடா இலங்கை தோத்துட்டுதா. :P :lol:

Link to comment
Share on other sites

நித்திரை முழித்து கிரிக்கெட் பார்த்தால், சோதனை மேல் சோதனை. இலங்கை அணி மிகவும் கஷ்டப்பட்டு 298 ஓட்டங்களை எடுத்திருந்து, ஆனால் கிப்பி டோனி வெளு வெளுவென்று வெளுத்து விட்டான். எனிமேல் நான் இலங்கை அணியை நம்ப மாட்டேன். பாவிபயல்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புனேயில் நடந்த இந்தியா இலங்கை ஒருநாள் ஆட்டத்தில் மீண்டும் இலங்கை இந்தியாவிடம் 4 விக்ககெட்டுக்களால் தோல்வி அடைந்துள்ளது. இலங்கை எல்லா விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்றது. அடுத்து ஆடிய இந்தியா 45.1 ஓவரில் 6விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்ங்களை பெற்றது.

7 ஆட்டங்களை கொண்ட தொடரில் தொடர்ந்து இலங்கை 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

7போட்டிகள் கொண்ட இத் தொடரில் இதுவரை நடந்த 4போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றதன் மூலம் விடீயோகேன் கப் 2005 யை தமதாக்கிக் கொண்டுள்ளது

முழுமையான ஸ்கோர் பார்ப்பதுக்கு

http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._03NOV2005.html

Link to comment
Share on other sites

இந்திய அணிக்கு பாராட்டுக்கள்..! தோற்றாலும் அணிக்காக சிறப்பாக விளையாடிய இலங்கையணி வீரர்களுக்கும் பாராட்டுக்கள்...மிச்சம் உள்ள மூன்றையும் வென்றாவது மானத்தைக் காப்பாற்றுறியளோ பாப்பம்..! முகத்தார் நீங்கள் வர்ணனையைத் தொடருங்கோ...! இடைல முடிக்காம..! :wink: :P

Link to comment
Share on other sites

"கப்பே" போச்சுதாம் இனி என்னத்த விளையாடி, பேசாம "பப்புக்கு" போய் தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான். :P :P :P

Link to comment
Share on other sites

5 வது போட்டி

வாவ்.......வாவ் அப்பாடி இலங்கை அந்த மச்சையாவது வெண்டுட்டுதே..

இந்தியா இலங்கைக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக குஜராத் அகம்பதாபாத் ல் நடைபெற்றது முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுகள் இழப்புக்கு 285 ஓட்டங்களைப் பெற்றது (கம்பீர் -103 ராவிட் - 103 ஆ.இ ) பதிலளித்தாடிய இலங்கையணி 47.4 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்புக்கு இந்த இலக்கை எட்டியது 6ஆவது விக்கெட்டு ஜோடியாக இணைந்த ஆர்னல்ட (49) டில்சானும் (81) சிறப்பாக ஆடி 131 இணை ஓட்டங்களை எடுத்ததன் மூலம் 5 விக்கட்டுகளால் இந்த வெற்றி இலங்கைக்கு கிடைத்தது

இந்தியா 285 /8 (50ஓவர்)

இலங்கை- 286 /5 (47.4 ஓவர்)

ஸ்கோர் விபரம்

http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._06NOV2005.html

Link to comment
Share on other sites

சொன்னது போல பொடியள் செய்திட்டாங்கள்...இன்னும் பாக்கி இருக்கல்லா..! நன்றி முகத்தார்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

6வது போட்டி

பழைய குருடி கதவை திறவடி எண்ட நிலைதான் இலங்கையணிக்கு மீண்டும் 7 விக்கெட்டுகளால் ஒரு தோல்வியை கண்டுள்ளது இன்று நடைபெற்ற 6வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய

இலங்கையணி - 196 (42.5 ஓவர்)

இந்திய அணி - 197/3 (34.5 ஓவர்)

ஸ்கோர் விபரம்

http://www.cricinfo.com/db/NEW/LIVE/frames..._09NOV2005.html

Link to comment
Share on other sites

பொடியள் பொடியள் பொடியள் கவித்திட்டாங்களே...! :shock: 8) :roll: :shock:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.