Jump to content

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் தவறாது வாக்களித்து தமது தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டும் -ஜெயானந்தமூர்த்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் தவறாது வாக்களித்து தமது தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டும் -ஜெயானந்தமூர்த்தி

எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் தவறாது வாக்களித்து தமது தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென லண்டன் வடமேற்கு பிராந்தியத்தில் 403 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழின உணர்வாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி வேண்டுகோள் விடுத்துளளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்: எமது தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டம் நீண்ட வரலாற்றைகக் கொண்டது. பல பரிணாமங்களைக் கண்டுள்ளது. இன்று தாயகத்தில் எமது போராட்டம் பல சர்வதேச சக்திகளின் சதித்திட்டத்தினால் மௌனிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எமது இலட்சியத்தை அடையும் வரை இப்போராட்டம் தொடரும். எனினும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப அதன் வழிமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழீழம் என்ற இலட்சியம் என்றுமே மாறப்போவதில்லை.

இன்றைய காலகட்டத்தில் தாயகத்தில் வாழும் எமது மக்கள் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிகமோசமான மனிதப்படுகொலையில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை. ;தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் வீதிகளில் விடப்பட்டுள்ளனர். இன்னமும் கொலை, கடத்தல், பாலியல்வல்லுறவு, சித்திரவதை என்பன தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் அம்மக்கள் தமது உரிமைகளுக்காகவோ, விடுதலைக்காகவோ குரல் கொடுக்க முடியாதவாறு நசுக்கப்பட்டுள்ளனர்.

எனவே எமது தாயக மக்களுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுக்கக் கூடிய செயல்திறன் மிக்கவர்களாக எமது புலம்பெயர் உறவுகளே உள்ளனர். எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைய எமது போராட்டம் இன்று புலம்பெயர் மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு இராஐதந்திர நகர்வாக சர்வதேச மட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அவை உருவாக்கப்பட்டு அதன் ஊடாக தாயக விடுதலைலையை விரைவு படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நாடுகடந்த அரசாங்கம் தொடர்பாகவும் அதன் தேர்தல் தொடர்பாகவும் சர்வதேச சமுகம் இன்று மிக உன்னி;ப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது.

நாம் வீழ்ந்துவிட்டோம் என சிறிலங்கா அரசும் இந்தியா உள்ளிட்ட சர்வதேசமும் நினைத்திருக்கும் வேளையில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் ஓராண்டு நிறைவு பெறும் மே மாதத்தில் புலம் பெயர் மக்கள் மீண்டும் நிமிர்ந்தெழும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தேர்தலில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் எமது ஒற்றுமையையும் பலத்தையும் நாம் சர்வதேசத்திற்குக் காட்ட முடியம். அத்துடன் இத்தேர்தலில் கொள்கையுடன் உறுதியாக நின்று தேசியத்திற்காக தொடர்ந்து உழைக்கக் கூடியவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறானால்தான் எதிர்காலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசை சிறப்பாகக் நடத்தி அதன் இலக்கை அடையமுடியும்.

எனவே எமது மக்கள் இத்தேர்தலை ஒரு தேசியக் கடமையாகக் கருதி நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை (02.05.2010) வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிப்பதன் மூலம் ளுஎமது இனத்தின் ஒற்றுமையையும் பலத்தையும் மீண்டும் நிருபித்துக் காட்ட வேண்டும்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://meenakam.com/?p=15069

Link to comment
Share on other sites

:rolleyes:ஆமா வாக்களிச்ச மக்களை அம்போவென விட்டுவிட்டு தன்னைப் போல், நாடு கடந்த வேட்பாளர்களும் தேர்தல் முடிய எங்கு பதுங்கலாம் என்பதையும் எடுத்து விட்டிருக்கலாம். :rolleyes::lol:
Link to comment
Share on other sites

இயலுமை என்ற வரம்பிற்குள் எதையாவது செய்துதான் பார்க்க வேண்டும். எது செய்தால் என்ன நடக்கும் என்பதே புரியாத நிலையிது. நாடு கடந்த அரசும் ஒரு புது முயற்சிதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.