Jump to content

நினைவுத் தூபி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசாங்கம் எம் மாவீரர்கள், மற்றும் அனைத்து நினைவுத் தூபிகளையும் அழிப்பதற்கான நோக்கம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எதிர்கால சமுதாயத்தில் எம் விடுதலைப் போராட்டம் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் கொண்டிருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறை அறிந்து விடாமல் தடுப்பதற்குமாம். இப்படியான சூழ்நிலையில் எம் புலம்பெயர்ந்த தலைமுறையினர் இது பற்றிய தொடர்ச்சியான எழுச்சி கொண்டிருப்பதற்காக ஏன் நினைவுத் தூபி அமைக்கக் கூடாது?

அப்படி அமைக்கும் போது செயற்படுத்தக்கூடிய என் யோசனைகள்

மூடிய கட்டட அமைப்பாக அமைக்கும்போது, மாநகரசபைக்கு நிறைய விளக்கங்கள், வருடாந்திர வரி, போன்ற விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டி வரலாம் என்பதால், ஒரு திறந்த அமைப்பாகவே கட்டலாம்.

குறைந்தது ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக் கூடிய அளவு இடத்தையாவது தெரிவு செய்ய வேண்டும்.

தனியார் நிலம் தான் பயன்படுத்த முடியும் என்றாலும், வீடுகள் சூழ்ந்த பிரதேசமாகவோ, ஒதுக்குப் புறமாகவோ இருக்கம் இடங்களைத் தவிர்ப்பது நன்று.

நினைவுத் தூபியின் அமைப்பினை முள்ளிவாய்க்கால் தொடர்பான ஒரு அடையாளமாகவோ, அல்லது கார்த்திகைப்பூவின் வடிவமாகவோ அமைக்கலாம்.

சந்திக்குச் சந்தி பெரிய நிலப்பரப்பில் கோவில்கள், சேர்ச்சுக்கள் அமைக்கும் வசதி புலத்தில் இருக்கும்போது, ஏன் மாவீர்களுக்கும், வீழ்த்தப்பட்ட அப்பாவி மக்களையும் நினைவுகூர ஏதும் செய்யச்கூடாது.

Link to comment
Share on other sites

இன்று கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை சிங்கள ராணுவ பயங்கரவாதிகள் அழித்துக் கொண்டிருப்பதாக இன்று மதியம் நண்பர் ஒருவர் தொலைபேசியில் கவலையுடன் குறிப்பிட்டார். அனுமதியின்றி கட்டியதாக கூறி சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்களாம். அப்படியானால் யாழ் கோட்டையையும் அழிக்க வேண்டியது தானே என்று ஆதங்கப்பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனதிலும் தோனறிய யோசனை நிச்சயமாகச் செய்யலாம். ஆரம்பிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனை

முன்னெடுக்கக்கூடியவர்கள் முன்னெடுத்து செல்லவும்.

இது நிச்சயம் வெற்றி பெறும்.

கோவில்களும் கோபுரங்களும் எமக்கு வேண்டாம்.

எம் இனத்திற்க்காக வாழ்ந்தவர்களுக்கும்...

உயிரை அர்பணித்தவர்களுக்கும்....

நினைவுச்சின்னங்களை அமைத்து....

எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.

Link to comment
Share on other sites

நல்ல சிந்தனை. மாவீரர்களே எமது தெய்வங்கள். அவர் விதைகுழிகளே எமது கோவில்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் போடவும், பச்சைக்குறி இடவும் இத்தலைப்பை எழுதவில்லை. என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனை ஆக்கங்கள், போன்றவை அவசியமாகின்றன.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் போடவும், பச்சைக்குறி இடவும் இத்தலைப்பை எழுதவில்லை. என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனை ஆக்கங்கள், போன்றவை அவசியமாகின்றன.

மூடிய கட்டடமாக இல்லாவிட்டால் அந்தக் காணியின் அபிவிருத்தியை வரையறை செய்ய முடியாது. அப்படி ஒரு நிலை வரும்போது காணி அபிவிருத்தி தடைப்படும். நகரசபையிடமிருந்து அனுமதி கிடைக்கப் பெறாது.

என் மூளைக்கு எட்டியவரையில், கோயில் மாதிரிக் கட்டிவிட்டு அதன் வளவினுள் தூபிகளை அமைக்கலாம். கோயிலில் சாமி சிலைகளையும் வைத்துவிடுவது பாதுகாப்பானது.

இப்படிச் செய்யும்போது, வரிகட்டவேண்டி வரும்தான். ஆனால் கனடா கோயில்களில் வருமானத்துக்குப் பஞ்சமா என்ன..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஒருவர் அபிவிருத்தியற்ற காணிவை வைத்திருப்பதும், அதனுள் பிடித்தமான வகையில் கட்டடம் கட்டுவதும் பிழையானதா? எனக்கு சட்ட அமைப்புக்கள் பற்றி எதும் தெரியாது.

கோவில்கள் மாதிரி உண்டியல் வைத்துப் பணம் சம்பாதிக்கும் வேலை வேண்டாம் என்றே நினைக்கின்றேன். இது மறைந்து போன புனிதர்களுக்கானது. அவர்களை வைத்து வியாபாரம் வேண்டாமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் தமிழகத்தில் தாயகத்தில் எம்மவர்கள் நிர்வகிக்கும் ஆலயங்கள் தேவாலயங்கள் பள்ளிகள் எங்கனும் ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்து வீரமரணமடைந்தவர்கள் சார்பில் ஒரு நினைவு தூபியை சிறியதாகவோ பெரிதாகவோ அமைக்க வேண்டும். இவர்களை நினைவு கூறுதல் எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களின் ஒரு அங்கமாக ஆக்கப்பட வேண்டும். இதைச் செய்தால் அன்றி எதிரிகளின் நாசகார வேலைகளை தடுப்பது கடினமாக இருக்கும்.

அதுமட்டுமன்றி ஒரு குட்டித் தீவை விலைக்கு வாங்கி அதை எமக்காக உயிர்தந்த மாவீரர்கள் மற்றும் மக்களின் நினைவிடமாக புனித இடமாக ஆக்க வேண்டும். எத்தனையோ தீவுகளில் தேவாலயங்கள் கோவில்கள் பெளத்த விகாரைகள் அமைத்து அவற்றை வழிபட செய்கிறார்கள். எமக்காக எமது மண்ணின் மக்களின் விடிவிற்காக உயிர்தந்த அந்த உத்தமர்களை நினைவு கூற எமது கொடூர எதிரிகளின் கரங்களுக்கு அப்பால் மனித குல விழுமியங்களை நேசிக்கக் கூடியவர்களின் பங்களிப்போடு குறித்த ஒரு தீவில் எமது மாவீரர்களுக்கான மக்களுக்கான நினைவு இடத்தை அமைக்கலாம்.

அதை மக்கள் தாம் விரும்பும் போதெல்லாம் போய் கண்டு அவர்களை தரிசிக்க வகை செய்ய வேண்டும். இது மாவீரர்களான தமது பிள்ளைகளை இழந்து தவிக்கும் உறவுகள் பெற்றோருக்கும் பெரும் ஆறுதலாக அமையும்.

Link to comment
Share on other sites

மூடிய கட்டட அமைப்பாக அமைக்கும்போது, மாநகரசபைக்கு நிறைய விளக்கங்கள், வருடாந்திர வரி, போன்ற விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டி வரலாம் என்பதால், ஒரு திறந்த அமைப்பாகவே கட்டலாம்.

ஒரு திறந்த அமைப்பில் ஒரு கட்டடம் கட்டி கலாச்சார மையம் என்ற பெயரில் போரில் இறந்தவர்களை நினைவு கூரும் இடம் என்று சட்ட ரீதியாக அதை வரையறை செய்யலாம். திறந்த அமைப்பில் நினைவுச் சின்னங்கள் கலாச்சாரச் சின்னங்களை உருவாக்கலாம். படுகொலைகளை நினைவு கூரும் அருங்காட்சியகம் வரலாற்று ஆவணச் சேமிப்பு என்ற பிரிவுகளை ஏற்படுத்தலாம். இதற்கான வருமான வரி நிச்சயம் அதிகமாக இருக்கும். எமது நினைவு தினங்களுக்கும் பயன்பாட்டுக்கும் இல்லாத நாட்களை திறந்தவெளி அமைப்பை வாகனத் தரிப்பிடங்களாக்கி வாடகைக்கு விடுவதும் மண்டபங்களை பல்வேறு நிகழ்வுகளுக்காக வாடகைக்கு விடுவது போன்ற காரியங்களால் வருமானவரியை ஈடுகட்ட முடியும். இவ்வாறு வேறு இனத்தவர்களின் கலாச்சார மையங்கள் செயற்படுடகின்றது. மாவீரர்களை மைமயப்படுத்தி அமைப்பதற்குரிய சட்டரீதியான நேரடி அனுமதி சாத்தியமா என்பது கேள்விக்குறியானது. இந்த விடயத்திற்கு சட்ட வல்லுனர்களையே அணுகவேண்டும் தவிர இவ்வாறான ஒரு முயற்சி குறிக்கோளில் இருந்து விலகி வெறும் கலாச்சார மையமாக பரதநாட்டியம் ஆடுவதற்கு மட்டும் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனை.

சென்ற மாதம் இது தொடர்பான கருத்தை தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்திருந்தேன்.

வாழும் தேசத்தின் அனுமதி பெற்று, சட்ட திட்டங்களுக்கு அமைய முன்னேடுக்கலாம்.

கோயில்கள் அதிகரிக்கும் புலம்பெயர் நாட்டில் இது போன்ற நினைவுத்தூபி அமைப்பது வரவேற்கத்தக்கது.

Link to comment
Share on other sites

புலத்தில தமிழன் கோயில் கட்டினான் ஆனால் தமிழன் என்ற பெயரில் ஒரு மண்டபமும் கட்டவில்லை .கிறிஸ்தவர்களும் ,இந்துக்களும் ஒன்றாகக் கூடி வழிபாடு செய்யக்கூடியதாகவும் இருக்கும் அப்படி மண்டபம் கட்டி மாவீரர்களை வழிபாடு செய்தால்

Link to comment
Share on other sites

கனடாவில் ஒருவர் அபிவிருத்தியற்ற காணிவை வைத்திருப்பதும், அதனுள் பிடித்தமான வகையில் கட்டடம் கட்டுவதும் பிழையானதா? எனக்கு சட்ட அமைப்புக்கள் பற்றி எதும் தெரியாது.

கோவில்கள் மாதிரி உண்டியல் வைத்துப் பணம் சம்பாதிக்கும் வேலை வேண்டாம் என்றே நினைக்கின்றேன். இது மறைந்து போன புனிதர்களுக்கானது. அவர்களை வைத்து வியாபாரம் வேண்டாமே..

கனடாவின் சட்டவிதிகளின்படி அபிவிருத்தியற்ற காணியில் குடிசை போடுவதாக இருந்தாலும், இருப்பதை இடிப்பதாக இருந்தாலும் அனுமதி (Building Permit / Demolition Permit) வாங்கியிருக்க வேண்டும். அப்படி ஒரு அனுமதியை வாங்க நகரசபைக்கோ கிராமசபைக்கோ செல்லும்போது அது எத்தகைய ஒரு கட்டுமானம் என்பதை வரையறை செய்திருக்கவேண்டியது விண்ணப்பிப்பவரின் பொறுப்பாகும்.

அப்போது ஒரு சிக்கல் வருகிறது, இது என்னவகையான கட்டடம் என்பதை வரையறை செய்வதில். எல்லா இடங்களிலும் எல்லாவகையான கட்டடங்களையும் கட்டிவிட முடியாது. Zoning என்று ஏற்கனவே இடங்களை வரையறை செய்திருப்பார்கள். தொழிற்சாலைகளுக்கு சிலபகுதிகள், வீடுகளுக்கு சிலபகுதிகள் இப்படி இருக்கும்.

எங்கள் ஆட்கள் ஏற்கனவே கோயில் கட்டி அனுமதியெல்லாம் வாங்கியிருப்பதால்தான் கோயிலைச் சொன்னேன். கோயில் என்றால் சைவக் கோயிலாகக் கட்டாமல் தமிழன்னைக்கு என்று கட்டிவிடலாம். :)

இந்தமாதிரி விடயங்களைச் செய்யும்போது, முதல்தடவையே சரியாகச் செய்துவிட வேண்டும். ஒருதடவை நகரசபையில் பிசகினால், பிறகு அனுமதி கொடுப்பதில் சிக்கல்கள் பண்ணுவார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் போடவும், பச்சைக்குறி இடவும் இத்தலைப்பை எழுதவில்லை. என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனை ஆக்கங்கள், போன்றவை அவசியமாகின்றன.

உங்களைப்போன்றவர்களின் வார்த்தை பிரயோகங்களினால் தான் பல விடயங்கள் பின்னெடுக்கப்பட்டுள்ளன.

முதலில் வார்த்தைகளால் மக்களை அரவணைக்க பழகுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடையம் ஒட்டுமெத்தத் தமிழர்களதும் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடையம். மற்றது இவ்விடையத்தை நிறைவேற்றவதற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு முதலில் தேவை சும்மா சாந்தகப்பையை எடுத்தோமா வெட்டியாக ஏதாவது ஒரு கட்டிடத்தைக் கட்டிணோமா என்பதாகவிருக்கக் கூடாது அப்படியொரு நினைவகமோ அன்றேல் மாவீரர்களது புகழ்பாடுவதற்கும் அவர்களைப் போற்றுவதற்குமான அமைவிடத்தை நிர்மானிக்கவேண்டுமாகவிருந்தால் அவ்வமைவிடம் உலக கட்டிடக்கலை வடிவமைப்பின் ஒரு மைல்கல்லாக இருத்தல்வேண்டும் இந்தவிடையத்தைச் செயவதற்குரிய ஆற்றல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம்தான் இருக்கின்றது என நான் நினைத்ததுண்டு ஆனால் நோற்றைய தினம் நடைபெற்ற அதனது அங்குரார்ப்பண நிகழ்வில் தொழல்நுட்பரீதியில் பல சொதப்பல்களை நேரடி ஒலிபரப்பின்மூலம் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. மிகுதியைத் பின்பு தொடர்கிறேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா மாணவர் சமூகம் ஏற்கனவே ஒரு இது பற்றிய காட்சியகத்தைப் Nபுணுகின்றார்கள். அவர்களுக்கு வலு போதாமல் இருப்பினும் கடினப்பட்ட முயல்கின்றார்கள். அவர்களோடு இணைந்தும் முன்னெடுக்கலாம்.

நாடுகடந்த அரசு என்பது பெரிய வருமானத்தில் இயங்கும் அமைப்பல்ல. அது தனிப்பட்ட ஒவ்வொருவரின் உழைப்பிலும் தான் தங்கியிருக்கின்றது. வருமானம் இல்லாத தன்னார்வ அமைப்பிடம் நேரத்தியை நாங்களும் உதவுவதினூடகத் தான் பெற முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் நாடுகடந்த தமிழீழ அரசானது அடிப்படையில் அரசியல் கட்டமைப்பாக இருந்தாலும், ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட கிழக்கிந்தியக்கம்பனிபோன்ற சர்வதேச சட்டநடைமுறைகளுடன் இயங்கக்கூடிய அமைவாக இருப்பதையே நான் விரும்புகிறேன் அதன்மூலமே தமிழர்களது தேவையற்றவித்தில் முடங்கியுள்ள செல்வங்களை பாரிய முதலீடாக்குவதிலும் உலகில் தமிழர் தமக்கென ஒரு சட்டபூர்வமான நிதி நிறுவனத்துக்கு உரித்துடையோராகவிருப்பதற்கும் புலத்தில் நாம் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும் (புலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதென்பது யூதர்களது ஸியோனிசச் சிந்தனைக்கு ஒத்ததாகவோ அன்றேல் அதைவிடக் கடினமாக எமது எதிரிக்கு எதையும் விட்டுக்கொடுத்துவிடா கடும் போக்கானதாவோ இருத்தல்வேண்டும்); இச்சட்டபூர்வமான தமிழர் நிதிநிறுவனத்தின் சொத்துக்களில் ஒன்றாக எமது மாவீரர்களது நினைவகம் அமைந்திடலாம். நெடுக்காலபோவான் கூறியதுபோல் உலகில் எமக்குப் பாதுகாப்பானதாக உணரும் மற்றும் அரசியல் திருகுதாளங்கள் இல்லாத அதுவும் தமிழர்கள் நினைத்தவிடத்தே பயணத்தை மேற்கொள்ளக்கூடியதுமான ஒரு நாட்டில் இந்நினைவகத்தை அமைக்கலாம் இவை ஒன்றும் இயலாத விடையமில்லை. ஆனால் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் தங்களது இருப்பினை நிறுவனமயப்படுத்தல் வேண்டும் அதற்குத் தோதான ஒரு அமைப்பே நாடுகடந்த தமிழீழ அரசாங்கமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அவசியமான ஆலோசனையாகும்.தமிழர்கள் தாம் வாழும் நாடுகள் தோறும் அமைக்க வேண்டியது. அதற்கென நாம் நாடுகள் தோறும் செயற்குழுக்களை நிறுவி அதற்கான சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து அதனை தமிழர் பண்பாட்டுக்கமைய மண்டப வடிவிலே அமைத்து, கூம்புவடிவாக மேலேழுந்து அதிலே கார்த்திகைப்பூ விரிந்திருப்பதுபோன்று இருந்தால் பொதுவானதாக இருக்கும். மண்ணில் விதையான பெரும்பாலானவர்கள் விடுதலைக்காக வீழ்ந்தவர்களே. பொதுமக்களுட்பட. உள்ளே 1958 இல் இருந்து தற்போதுவரை தொடரும் இன அழிப்பிற்குள்ளானோரது பெயர்களையும் பதியவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்குப் புலம் பெயர் நாடுகளில் நினைவுத்தூபி அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம்.

ஒவ்வொரு நாடுகளிலும் அங்கு வாழும் ஈழத்தமிழ் மக்கள் மாவீரர்களை நினைவு கூருவதற்காக

அமைக்கப்படும் நினைவுத்தூபியுடன் ஒரு உள்ளரங்கம் அமைப்பதும் சிறந்தது.

இதற்கு ஏற்கனவே இருக்கும் ஒரு உள்ளரங்கத்தை வாங்கிப் புதுப்பித்து அதன் முன் ஒரு நினவுத்தூபியை அமைக்கலாம்.

ஈழத்தமிழர்களின் இன்விடுதலை சம்பந்தமான நிகழ்வுகளை இந்த உள்ளரங்கில் நடத்தலாம்.

இனவிடுதலை தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளுக்காக அமைப்பாளர்களிடம் ஒரு சிறு தொகையை அறவிட்டு அதன் மூலம் நினைவுத்தூபியையும் உள்ளரங்கினையும் பராமரிக்கலாம்.

அல்லது ஈழத்தில் இருக்கும் மாவீரர் குடும்பங்களுக்கு உதவி செய்யலாம்.

பதிவு செய்து ஒரு பொது அமைப்பாக உருவாக்கினால் வரிச்சலுகைகள் நிச்சயமாகக் கிடைக்கும்.

வாத்தியார்

...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரமாண்டமான அமைப்பாக அமைக்கின்றபோது சில விடயங்களில் அவதானம் அவசியமானதே. மாதந்த நிதியை மக்களிடம் பெற்று கட்டுகின்றபோது, மக்களிடம் இருந்து வருவாய் இல்லாதபோது மூடிவிட்டுப் போகின்ற நிலைமை வந்து விடும். எனவே குறைந்தபட்சம் வருவாயைக் பெறக்கூடிய வகையில் அமைத்தால் தான் ஈடுசெய்ய முடியும்.

எனவே ஒன்று மண்டபம், நூலகம், போன்றவற்றை உள்ளடங்கியதாகப் பிரமாண்டமான விதத்தில் அமைக்கலாம். அல்லது திறந்தவெளித் தூபியாக அமைக்கலாம்.

தன்னைத் தானே நிவர்த்தி செய்யாமல், மக்களை நம்பிக் கொண்டு கட்டினால் வருவாய் இல்லாத சந்தர்ப்பங்களில் அதை இடைநடுவே கைவிட வேண்டி வரலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.