Jump to content

தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்??


ஜனாதிபதிதேர்தலில் தமிழிழ மக்கள் என்ன செய்யவேண்டும்??  

28 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

விடுதலைப்புலிகள் ஏட்டை அன்பளிப்பும் வேண்டாம் தொளிவு பெறுங்கோ எண்டு இலவசமா விட்டாலும் எங்கடையள் முன்னேறாது. தினமுரசை காசுகுடுத்து வேண்டி நுனிப்புல் மேஞ்சு போட்டு யாருக்கு குத்திறுது எண்டு குளம்பி தங்களுக்கு தாங்களே இன்னொருக்கா காது குத்த நிக்குதுகள்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...6824&highlight=

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...7013&highlight=

நான் எண்டால் அருமைக்குரிய சமாதான தேவனுக்குத்தான் போடுவன். அந்த தொழிவை தந்த பிருந்தனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில் ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுத்துவிட முடியாது. அதேபோல் தேர்தலைப் புறக்கணிப்பதும் நல்லதல்ல. முதலில் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் தற்போது சிறுபான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது. அப்படியொரு நிலையை ஜே.ஆர.ஜெயவர்த்தனா முன்பே ஏற்படுத்திவிட்டார். வேண்டுமாயின் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களில் மட்டுமே வித்தியாசங்களைக் காட்ட உதவும். இதனை சென்றமுறை சந்திரிக்காவும் நிரூபித்து விட்டார். தற்போதுள்ள நிலைமையில் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போவது தென்னிலங்கை மக்களின் வாக்குகளே. அப்படிப் பார்க்கும் போது தென்னிலங்கையில் மகிந்தவிற்கே ஆதரவு அதிகமாகவுள்ளது. சிறுபான்மை மக்கள் வாக்குப் போடாமல் விடுவதாலோ அல்லது அந்த வாக்குகளை செல்லுபடியற்றதாக மாற்றுவதாலோ அது வெல்பவரைப் பாதிக்கப் போவதில்லை. மாறாக வெல்லக் கூடிய ஒருவருக்கு அவ்வாக்குகள்; செல்லுமிடத்தில் அவருக்கு பெருண்பான்மை அல்லது அறுதிப் பெருண்பான்மை கிடைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். இதனால் என்ன நன்மையென நீங்கள் கேட்கலாம். தற்போதய மகிந்தவின் இனவாதச் சிங்களக் கட்சியுடனான ஒப்பந்தங்கள் யாவும் ஒரு இராஜதந்திரமே!!! மகிந்த பலகாலமாக அரசியலிலும் பொறுப்பான பதவிகளிலும் இருந்திருக்கின்றார். ஆனால் அவர் இன்றுவரை சிறுபான்மை மக்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டது கிடையாது. அத்துடன் மகிந்த வென்று ஆட்சிக்கு வந்தால் அவரது முதல் வேலை பண்டாரநாயக்காவின் குடும்பத்தாரை அரசியலிலிருந்து ஓரம் கட்டுவதாகவேயிருக்கும். அதேபோல் மகிந்த பெருண்பான்மையுடன் வெற்றிபெற்று வந்தால் இந்த சிங்கள இனவாதக் கட்சிகளினால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. அதுபோல் அறுதிப் பெருண்பான்மையுடன் ஜெயித்து வந்தால் அரசியல் சட்டங்களில் மாற்றங்களை செய்வதற்கும் வழி கிடைக்கும். இவையெல்லாவற்றையும் விட மேலாக தற்போதய வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையின் பொருளாதாரநிலை வெளிநாடுகளை எதிர்த்துக் கொண்டு சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் செயல்களை ஆட்சிக்கு வரும் எவரினாலும் செய்ய முடியாது. எனவே மகிந்த வென்று வந்தால் டக்ளஸ் போன்றவர்களின் சுயதம்பட்டங்களுக்குத்தான் வழிவகுக்கும் போன்ற தப்பாண எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு எதிர்காலத்தை நன்கு சிந்தித்து நிகழ்காலத்தை தீர்மானிப்பதே நன்கு சிறந்தது.

Link to comment
Share on other sites

Vasi wrote:

ரணிலுக்கு குத்திட்டன் :roll:

என்ன வசி பாவம் ரணில். எங்கெ குத்தினீர் முகத்திலா அல்லது மூக்கிலா???

:roll: :roll:

Link to comment
Share on other sites

Vasi wrote:

ரணிலுக்கு குத்திட்டன் :roll:

என்ன வசி பாவம் ரணில். எங்கெ குத்தினீர் முகத்திலா அல்லது மூக்கிலா???

:roll: :roll:

கையாலயா இல்ல கையில இருக்கிற கத்தியால குத்தினனீங்களா வசி அண்ணா :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.