Jump to content

வெட்கம் தவிர்


Recommended Posts

இன்று வாசித்ததில் பகிர எண்ணியது இது

-----------------------

என்னிடம் வந்த அந்த இளைஞனின் பெயர் குமரன். தன் மனைவியைப்பற்றி புகார் வாசித்தான் இப்படி, 'என் மனைவி மேல நான் உயிரையே வெச்சிருக்கேன். நளினம், மென்மை, வெட்கம், சிணுங்கல் எல்லாம் பெண்மையின் இயல்புனு சொல்வாங்க. இதெல்லாம் என் மனைவிகிட்டே மைனஸ். நான் என்ன பண்றது டாக்டர்?'

பொதுவாக, சமுதாயத்தில் எல்லோரிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பாலினம் (Gender) சார்ந்து வரையறுத்து வைத்துஇருக்கிறார்கள். இதனை Gender Role அல்லது appropriate behaviours என்பார்கள். இவை சமுதாயம் உருவாக்கிய கட்டமைப்பு விதிகள்.

ஆணாக இருந்தால், அழக் கூடாது. தைரிய சாலியாக இருக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். வீட்டைக் காக்கும் பொறுப்பு உள்ளவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதும்; பெண்ணாக இருந்தால், குழந்தையை வளர்க்க வேண்டும். சமைக்க வேண்டும். சாதுவாக இருக்க வேண்டும் என்று பாலின அடிப்படையில் எதிர்பார்த்தார்கள். பெண் சம்பாதிக்கவில்லை என்றால்கூட யாரும் எதுவும் சொல்வது இல்லை. ஆனால், கட்டாயம் அவளுக்குச் சமையல் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சிந்தனைப் போக்கு.

இன்றைய நாளில், பெண்கள் விரல்களில் புத்த கங்கள். அவர்கள் பெயரில் வங்கிச் சேமிப்புகள். சிந்தனைத் தளங்களிலும் கலக்குகிறார்கள். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற குறுகிய பார்வைகள் மாறிவிட்டன. இன்று குழந்தை களை ஆண்கள் பொறுப்பாகக் கவனிக்க ஆரம் பித்துவிட்டார்கள். ஆணும் சமையலுக்கு உதவி செய்கிறான். பலர் சமைக்கவும் ரெடி. ஆனால், பழங்காலச் சிந்தனைப் போக்குடன் பெண்ணைப் பார்ப்ப தனால்தான் குமரனைப் போன்றவர் களுக்குப் பிரச்னை.

உடல்ரீதியான எதிர்பார்ப்பை (Gender Role) உருவாக்கியது இயற்கை அல்ல; அந்தந்தச் சமுதாயம்தான். இதனால்தான் நாட்டுக்கு நாடு, சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் இந்தப் பார்வை மாறுபடுகிறது. காலகட்டங்களுக்கு ஏற்ப இவை மாறிக்கொண்டும் இருக்கும். எனவே, பழைய சிந்தனையோடு இந்தக் காலப் பெண்களைப் பார்ப்பது தவறு.

கணவன் - மனைவி உறவில் வெட்கம், கூச்சம் இருந்தால் அது சுவாரஸ்யமான தாம்பத்யம் கிடையாது. உலகம் ஜெட் வேகத்தில் மாறினாலும் இன்னும் ஜட்கா வேகத்தில் சிலர் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் குமரன் போன்றவர்கள்.

சிந்தனை, செயல்பாடு, மதிப்பீடு போன்றவை மாறும்போது நாமும் மாறிக்கொண்டால் சந்தோஷமாக வாழலாம்!

என்னை மெழுகி

உன்னைக் கோலமிடுகிறாய்

அதிகாலை வாசலாகிறது

படுக்கை!

நன்றி: ஆனந்த விகடன்

Link to comment
Share on other sites

நளினம், மென்மை, வெட்கம், சிணுங்கல் எல்லாம் பெண்மையின் இயல்புனு சொல்வாங்க. இதெல்லாம் என் மனைவிகிட்டே மைனஸ். நான் என்ன பண்றது டாக்டர்?'

கற்பை தூக்கி தலையில் வைத்திருக்கும் சமுதாயத்தில் மென்மை வெட்கம் சிணுங்கல் இல்லாமல் வெளிப்படையா பெண் இருந்தால் அவளுக்கு பாலியல் உறவில் முன் அனுபவம் இருக்கின்றது. வேலி பாயக்கூடத் தயங்கமாட்டாள் என்று மறுவளத்தே கணவன் சந்தேகப்படும் அமைப்பை இந்தக் கலாச்சாரம் காலாகாலம் போதித்து நிற்கின்றது. இதனால் பெண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வாசிப்பதே ஒழுக்கம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. என்னுமொரு புறம் இவ்வாறு பெண்கள் அடக்கிவாசித்தால் சுவார்சியமற்றவளாய் உணரப்பட்டு வைப்பாட்டி தேவைப்படுகின்றது. கிளிமாதிரி பொண்டாட்டி குரங்குமாதிரி வைப்பாட்டி தத்துவம் இப்படித்தான் முனைப்புக்கொள்கின்றது. இந்த மனோபாவத்தில் இருந்து விடுதலையானது யதார்த்தத்தில் அவ்வளவு எளிதல்ல.

Link to comment
Share on other sites

கட்டின கணவனிடம் போலியான வெட்கம் ,நளினம், காட்டுறதில் எந்த அர்த்தமும் இல்ல. இந்த காலத்தில் அனேகமான ஆண்கள் மனைவியோட விருப்பங்கள், ஆசைகளுக்கு ஏற்பத்தான் நடப்பார்கள் என நினைக்கிறன்.அப்படி இல்லாமல் பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேணுமென்ற மாயையை உருவாக்கினால் கடைசியில் சுகன் சொன்னமாதிரி கிளிமாதிரி பொண்டாட்டியிருக்க குரங்கு மாதிரி வப்பாட்டி இருக்கிற கதையாகத்தான் முடியும்.நிச்சயம் பெண்கள் தனது கணவன் மாரிடம் தாம்பத்தியத்தைப்பற்றி மனம்திறந்து கதைக்க கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கணும் அதற்கு ஆண்களும் மனைவி மாருக்கு எதையும் மனந்திறந்து கதைக்கும் உரிமையை வழங்கனும். அப்படிபட்ட வாழ்க்கை நிச்சயம் அன்னியோன்யம் நிறைந்ததாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ஓய் நிழலி...... கிளுகிளுப்பான திரியை ஆரம்பிச்சு வைச்சதுக்கு ஆண்கள் சார்பாக பாராட்டுக்கள்.

ஆனா... எனக்கு ஒரு பெரிய குழப்பம் இருக்கு அதை ஆராவது தீர்த்து வைச்சால் நல்லம் இவளுகளை... ஊப்ஸ்... ஹிஹி இவளை புரிஞ்சு கொள்ளவே முடியல்லை.

நான் தொட்டால் இவள் துவண்டாள்

நான் துவண்டால் இவள் படர்ந்தாள்

இதில அச்சத்தையும் நாணத்தையும் தேடிப்பார்க்கிறன் அடையாளம் பிடிபடுதில்லையே.... அச்சத்தையும் நாணத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

Link to comment
Share on other sites

இதில அச்சத்தையும் நாணத்தையும் தேடிப்பார்க்கிறன் அடையாளம் பிடிபடுதில்லையே.... அச்சத்தையும் நாணத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

இடுப்பில கிள்ளி பார்க்கலாமோ

பளார் எண்டு ஒரு அறை விழுந்தால் அச்சப்படாத பார்டியாய் இருக்கலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சத்தையும் நாணத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

சகலவற்றையும் கழற்றி எறிந்துவிட்டு பிறந்தமேனியாக தெருவில் ஒரு பொடி நடைபோட்டு வாருங்கள். பெண்களிடம் மட்டுமல்ல ஆண்களிடம் கூட அச்சம் நாணம் இருப்பதைக் கண்டுபிடித்து விடுவீர்கள்!

தர்ம அடிக்கும் சிறைச்சாலைக்கும் பயமில்லாதவர்தானே.. தைரியமாய் புறப்படுங்கள்.

Link to comment
Share on other sites

அண்மையில ஒரு தமிழ்ப்படம் பார்த்தன். அதில காதலன் அப்பிடித்தான் தன்ர காதலை நிரூபிக்க தெருவில உரிஞ்சுபோட்டு ஓடறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில ஒரு தமிழ்ப்படம் பார்த்தன். அதில காதலன் அப்பிடித்தான் தன்ர காதலை நிரூபிக்க தெருவில உரிஞ்சுபோட்டு ஓடறான்.

காதலை நிரூபிக்க கதாநாயகனை அம்மணமாய் ஓடவிட்ட இயக்குநர் கதாநாயகியையும் ஒட்டுத்துணி இல்லாமல் ஓடவிட்டிருந்தால் படம் பிச்சிக்கினு போயிருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில அச்சத்தையும் நாணத்தையும் தேடிப்பார்க்கிறன் அடையாளம் பிடிபடுதில்லையே.... அச்சத்தையும் நாணத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

அவைகள் அங்கேதான் இருக்கும், ஆனால் அந்தர்யாமியாக!

தண்ணில சீனியை கரைத்தால் சீனி மறைந்து விடும், மீண்டும் சூடேற்றினால் இரண்டும் தனித்தனியாக தெரியும்! எல்லாம் சயன்ஸ் தான்! :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கற்பை தூக்கி தலையில் வைத்திருக்கும் சமுதாயத்தில் மென்மை வெட்கம் சிணுங்கல் இல்லாமல் வெளிப்படையா பெண் இருந்தால் அவளுக்கு பாலியல் உறவில் முன் அனுபவம் இருக்கின்றது. வேலி பாயக்கூடத் தயங்கமாட்டாள் என்று மறுவளத்தே கணவன் சந்தேகப்படும் அமைப்பை இந்தக் கலாச்சாரம் காலாகாலம் போதித்து நிற்கின்றது. இதனால் பெண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வாசிப்பதே ஒழுக்கம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. என்னுமொரு புறம் இவ்வாறு பெண்கள் அடக்கிவாசித்தால் சுவார்சியமற்றவளாய் உணரப்பட்டு வைப்பாட்டி தேவைப்படுகின்றது. கிளிமாதிரி பொண்டாட்டி குரங்குமாதிரி வைப்பாட்டி தத்துவம் இப்படித்தான் முனைப்புக்கொள்கின்றது. இந்த மனோபாவத்தில் இருந்து விடுதலையானது யதார்த்தத்தில் அவ்வளவு எளிதல்ல.

சாட்டைஅடி ஆண்களுக்கும் இந்த சமுதாயத்துக்கும்...

ஆனால் நான் இதிலிருந்து விடுபட்டேனா என்பதே என் கேள்வி

பதில்

மன்னிக்கவும்

இல்லை என்பதுதான்.

Link to comment
Share on other sites

காதலை நிரூபிக்க கதாநாயகனை அம்மணமாய் ஓடவிட்ட இயக்குநர் கதாநாயகியையும் ஒட்டுத்துணி இல்லாமல் ஓடவிட்டிருந்தால் படம் பிச்சிக்கினு போயிருக்கும் :D

எங்கை தியட்டரை விட்டோ...?? :)

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு, இன்றுதான்.....என் கண்ணில் பட்டது. :rolleyes: 
பதிந்தவர் யார், கருத்துப் பகிர்ந்தவர்கள் யார்.... என்று பார்த்தால், ஆச்சரியப் பட்டுப் போவீர்கள். :D 
ஹ்ம்ம்... எல்லாம், அந்தக் கனாக்காலம். :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு, இன்றுதான்.....என் கண்ணில் பட்டது. :rolleyes:

பதிந்தவர் யார், கருத்துப் பகிர்ந்தவர்கள் யார்.... என்று பார்த்தால், ஆச்சரியப் பட்டுப் போவீர்கள். :D

ஹ்ம்ம்... எல்லாம், அந்தக் கனாக்காலம். :lol::icon_idea:

இன்னாடா இது?

தல கண்ணில இம்புட்டு நளா படேல்லையாமே!

நிசமாலுமா? :D

Link to comment
Share on other sites

இதை பதிந்த அந்த நல்ல மனுசன் இப்ப எங்க என்று தெரியவில்லை..... :D பிழம்பு வேற வெள்ளிக்கிழமைகளில் வருவதும் இல்லை... :icon_idea:

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு, இன்றுதான்.....என் கண்ணில் பட்டது. :rolleyes:

பதிந்தவர் யார், கருத்துப் பகிர்ந்தவர்கள் யார்.... என்று பார்த்தால், ஆச்சரியப் பட்டுப் போவீர்கள். :D

ஹ்ம்ம்... எல்லாம், அந்தக் கனாக்காலம். :lol::icon_idea:

நேற்று பொழுது போகலை என்று 5 வருடத்திற்கு முன்பு என்ன பதில்கள் போட்டிருக்கன் என்று தேடிப்பார்த்தன் அது உங்கட கண்களிலும் பட்டிட்டுதா ... நானும் ஆச்சரியப்பட்டுப்போனன்...
Link to comment
Share on other sites

உணர்வுகள் திட்டமிட்டு வருவதில்லை.தானாக வருவது.ஆண் பெண் எல்லாம் அதற்கு அப்பால் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.