Jump to content

யாழ் இணையத்தின் சண்டித்தனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் யாழ் இணையத்துக்கை கடந்த மூன்று வருசங்களாய் படுத்து எழும்பறன். ஒவ்வொரு நாளும் எழுதாவிட்டாலும் ஒவ்வொரு நாளும் யாழில எழுதப்படுகிற பெருமபலான பதிவுகளை மேலோட்டமாக என்றாலும் பார்வையிடுவது வழமை. உந்த ஈழம் ஈ நியூஸ்காரருக்கு கடுப்பு ஏத்தின - டாம், சுமங்களா எழுதின பதிவுகளை - ஈழம் ஈ நியூஸ்காரர் பார்வையில டாம், சுமங்களாவின்ர எச்சரிக்கையை நான் வாசிக்க இல்லை. டாமும், சுமங்களாவும் அப்பிடி என்னதான் எழுதிச்சீனம். டாம், சுமங்களா எழுதினதுகளை யாராச்சும் வாசிச்சீங்களோ? நிருவாகம் அதை ஒருக்கால் திரும்ப போடுவீங்களோ வாசிச்சு பார்க்கிறதுக்கு.

யோவ் டாம், சுமங்களா..

குற்றவாளிக்கூண்டில விசாரணைக்காக வந்து நிக்கும்படி அழைக்கப்படுகின்றீர்கள்..

டாம் ஒருதரம்

டாம் இருதரம்

டாம் மூன்றுதரம்

சுமங்களா ஒரு தரம்

சுமங்களா ரெண்டுதரம்

சுமங்களா மூன்றுதரம்..

எனக்கு என்னமோ சுமங்களா எழுதின கீழ்க்கண்ட பதிவே ஈழம் ஈ நியூஸ்காரருக்கு - ஐ மீன் அவர்கள் பின்னால் நின்று ஆட்டுபவர்களுக்கு எரிச்சலை ஊட்டி இருப்பதாய் படுகிது:

வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் கேவல அரசியல் செய்யும் பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன்

தகவல் மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71378&st=0&p=584505&fromsearch=1&#entry584505

சுமங்களா

தொடர்ந்து ஈழநாடு பாலச்சந்திரன் அவர்கட்கு எதிராக குற்றம் சொல்லிவருவதால்..........

இந்த படத்தையும் அப்படி பார்க்க தங்களுக்கு தோன்றுகிறது

ஆனால் நான் இங்கு விசாரித்தவரை...

இது உண்மையில் அவரோடு எடுக்கப்பட்ட படம்தான்.

எடுக்கப்பட்ட வேளை TTNஇன் விடயமாக கதைக்க போனபோது.

ஆனால் அதை தற்போது பிரசுரித்து வாக்கு கேட்பது வேண்டுமானால் தவறு என்று தாங்கள் சொல்லியிருக்கலாம்

தங்கள் தனிப்பட்ட சிக்கல்களை தீர்த்துக்கொள்ள தலைவரை பயன்படுத்தவேண்டாம்

தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்

அல்லது எடுத்துவிடுங்கள்

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply

...

சுமங்களா எழுதினதுகளை யாராச்சும் வாசிச்சீங்களோ? நிருவாகம் அதை ஒருக்கால் திரும்ப போடுவீங்களோ வாசிச்சு பார்க்கிறதுக்கு.

....

எனக்கு என்னமோ சுமங்களா எழுதின கீழ்க்கண்ட பதிவே ஈழம் ஈ நியூஸ்காரருக்கு - ஐ மீன் அவர்கள் பின்னால் நின்று ஆட்டுபவர்களுக்கு எரிச்சலை ஊட்டி இருப்பதாய் படுகிது:

வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் கேவல அரசியல் செய்யும் பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன்

தகவல் மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71378&st=0&p=584505&fromsearch=1&#entry584505

சிவரமணி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64333&st=0&p=542571&#entry542571

Link to comment
Share on other sites

சித்தன்,

எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமங்களா அவர்கள் எழுதிய கருத்துக்களை மீள்பார்வை செய்யும்போது... அவர் ஈழம் ஈ நியூஸ்காரர் முறைப்பாடு செய்வதுபோல ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய ஒருவராக தெரியவில்லை. நமது சமூகம் மீது ஆழ்ந்த கரிசனை கொண்ட ஒருவராகவே படுகின்றது. நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் அவர் எழுதிய பதிவுகளை வேண்டுமானால் மீண்டும் வாசித்து பாருங்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன்,

எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமங்களா அவர்கள் எழுதிய கருத்துக்களை மீள்பார்வை செய்யும்போது... அவர் ஈழம் ஈ நியூஸ்காரர் முறைப்பாடு செய்வதுபோல ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய ஒருவராக தெரியவில்லை. நமது சமூகம் மீது ஆழ்ந்த கரிசனை கொண்ட ஒருவராகவே படுகின்றது. நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் அவர் எழுதிய பதிவுகளை வேண்டுமானால் மீண்டும் வாசித்து பாருங்கள். :rolleyes:

எனது வருத்தம் அதுவல்ல உண்மையில் தலைவருடன் எடுத்த படம் என்றால் நான் எழுதிய கருத்துக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், விசுகு அண்ணாவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஒரு தவறான கருத்தை இங்கு பதிய மாட்டார், சுமங்களா உண்மையாக எடுக்கபட்ட படத்தை பொய் என சொல்லி இருந்தால் அவரது சமூகம் மீதான கரிசனைகள் உடைந்து விடும், இதனால் யாழுக்கு எவ்வளவு பெரியகரைச்சல்,

எனக்குள்ள ஆதங்கம், ஏன் உண்மையை எழுதுகிறார்கள் இல்லை, உண்மைகளை அறியும் உரிமை எங்களுக்கு இல்லை என நினைகிறார்களா?

Link to comment
Share on other sites

சித்தன், சுமங்களா அவர்கள் எழுதிய தலைப்பு பதிவுகளை பாருங்கள். அவர் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய ஒருவர் என்றால்.. அல்லது எதேச்சையாக ஒரு தரப்பின் கருத்துக்களை திணிக்க வந்தவர் என்றால் விதம் விதமாக எத்தனையோ தலைப்பு பதிவுகளை யாழ் கருத்துக்களத்தில் பதிந்திருக்க முடியும். ஆனால்.. குறிப்பிட்ட இந்த ஈழநாடு ஆசிரியர் சம்மந்தமான முறைப்பாடு, மற்றும் ஈழம் ஈ நியூஸ்காரர் கூறுகின்ற தலைப்பு பதிவு தவிர அவர் வேறு ஏதும் தலைப்பு பதிவுகளை தாயகம் சம்மந்தமாக இடவில்லை. பெரும்பாலும் கதை, கவிதை, இலக்கியம், சமூக சாளரம் என்று நின்று தன்னை ஏதும் ஓர் தரப்புக்கு ஆதரவாளராக அவர் காட்டிக்கொள்ளவில்லை. சுமங்களா அவர்களது பதிவுகளை பார்க்கும்போது அவர் தாயகம் சம்மந்தமாக பரந்த அறிவை பெற்ற ஒருவராகவே உணரமுடிகின்றது. அவர் நேரடியாக குறிப்பிட்ட சிலரை தனது கருத்துக்களில் சாடி இருப்பதே பலருக்கு கடுப்பை கிளப்பி இருக்கின்றது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஒரு தவறான கருத்தை இங்கு பதிய மாட்டார், சுமங்களா உண்மையாக எடுக்கபட்ட படத்தை பொய் என சொல்லி இருந்தால் அவரது சமூகம் மீதான கரிசனைகள் உடைந்து விடும், இதனால் யாழுக்கு எவ்வளவு பெரியகரைச்சல், எனக்குள்ள ஆதங்கம், ஏன் உண்மையை எழுதுகிறார்கள் இல்லை, உண்மைகளை அறியும் உரிமை எங்களுக்கு இல்லை என நினைகிறார்களா?

சித்தன் நன்றி தங்கள் நம்பிக்கைக்கு.

அதை நான் வெளியில் சென்று விசாரித்து அத்துடன் அது எப்போது எடுக்கப்பட்டதுவரை விபரமாக எழுதியிருந்தேன்.

அதேநேரம் இந்த திரியின் பெயரை மாற்றுமாறும் அல்லது எடுத்துவிடுமாறும் கேட்டிருந்தேன்.ஆனால் அதை மாற்றவும் இல்லை. ஏன்அதற்கு அவர் பதில் கூட தரவில்லை.

இவ்வளவு பிரச்சினைகளையும் மோகன் அண்ணாவுக்கு கொடுத்த அவர் இதுவரை உண்மையையும் எழுதவில்லை.

எனவே இவர்கள் போன்றவர்களுக்காக எமக்குள் நாம் கடிபடுவதோ அல்லது ஊடகவியலாளர்கள் தமது நேரத்தை வீணடிப்பதோ தற்போதைய சூழ்நிலையில் எமக்கு தேவையா என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன், சுமங்களா அவர்கள் எழுதிய தலைப்பு பதிவுகளை பாருங்கள். சுமங்களா அவர்களது பதிவுகளை பார்க்கும்போது அவர் தாயகம் சம்மந்தமாக பரந்த அறிவை பெற்ற ஒருவராகவே உணரமுடிகின்றது. அவர் நேரடியாக குறிப்பிட்ட சிலரை தனது கருத்துக்களில் சாடி இருப்பதே பலருக்கு கடுப்பை கிளப்பி இருக்கின்றது என நினைக்கின்றேன்.

பாலச்சந்திரனை பலமுறை அவர் தாக்கியுள்ளார்

எனவே அவர் தனிப்பட்ட பிரச்சினைகளை இங்கு தீர்த்துக்கொள்ள முயல்கின்றார் என்பதே எனது கருத்து.

அதேநேரம் பாலச்சந்திரனுக்காக இங்கு நான் எதுவும் எழுதவில்லை.

எமது தாயகம் பெரும் இடர்களைப்பட்ட நேரங்களில் முழு மூச்சோடு முழுநேரமும் எமக்காக வீதியில் பாலச்சந்திரன் நின்றதை நான் ஒவ்வொரு நாளும் கண்டுள்ளேன்.

இந்த நன்றிக்கடன் எனக்கு அவரிடம் உள்ளது. அவ்வளவுதான்.

யாழ். களம் உட்பட எல்லா ஊடகவியலாளர்களும் இவற்றைவிட்டுவிட்டு எமது மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவர நேரத்தை செலவளிக்கவேண்டும் என்பதற்காகவே எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் நன்றி தங்கள் நம்பிக்கைக்கு.

அதை நான் வெளியில் சென்று விசாரித்து அத்துடன் அது எப்போது எடுக்கப்பட்டதுவரை விபரமாக எழுதியிருந்தேன்.

அதேநேரம் இந்த திரியின் பெயரை மாற்றுமாறும் அல்லது எடுத்துவிடுமாறும் கேட்டிருந்தேன்.ஆனால் அதை மாற்றவும் இல்லை. ஏன்அதற்கு அவர் பதில் கூட தரவில்லை.

இவ்வளவு பிரச்சினைகளையும் மோகன் அண்ணாவுக்கு கொடுத்த அவர் இதுவரை உண்மையையும் எழுதவில்லை.

எனவே இவர்கள் போன்றவர்களுக்காக எமக்குள் நாம் கடிபடுவதோ அல்லது ஊடகவியலாளர்கள் தமது நேரத்தை வீணடிப்பதோ தற்போதைய சூழ்நிலையில் எமக்கு தேவையா என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

விசுகு அண்ணா, நீங்கள் விசாரித்ததும், படம் எடுக்கப்பட்டதும் ஒருவேளை உண்மையாக இருக்கலாம். அது போலவே சர்ச்சைக்குரிய படம் எடிட் செய்யப்பட்டதும் உண்மை. படத்தின் பின்னணியில் ஒளி அதிகமாக இருப்பது ஒன்று, மற்றையது படத்தில் இருப்பவர்களின் காதுகளின் கீழ்ப்பகுதியின் நிழல் மற்றும் படத்தில் வலதுபுறம் நிற்பவரின் வலது கைச்சட்டை நிழல் என்பனவற்றை எடிட் செய்தவர்கள் அழிக்காது விட்டுவிட்டனர். ஒருவேளை இப்படமானது எடுக்கப்பட்டது உண்மை எனினும் இருவரும் நெருக்கமாக இருப்பதாகக் காணப்படுவது எடிட் செய்யப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது. எனவே இயல்பாகவே சந்தேகம் எவருக்கும் எழும்.

ஒரு குற்றச்சாட்டு ஆதாரத்துடன் முன் வைக்கப்படும் போது, அதை ஆதாரத்துடன் இல்லை என இடித்துரைப்பதுதான் சாலச் சிறந்தது. விளம்பரத்துக்காக படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இது போலியான படம் என குற்றம் சாட்டப்படும் போது உண்மையாக எடுக்கப்பட்ட படத்தின் மூலப்பிரதியை வெளியிட்டு உறுதிப்படுத்தலாம். இதனை விடுத்து விசாரித்து பார்த்தேன் உண்மை என நீங்கள் சொல்லுவது ஓரிருவரிடம் எடுபடுமே தவிர எல்லாரிடமும் எடுபடாது. உங்களுக்கு உறுதி செய்தவர்களிடம் படத்தின் மூலப்பிரதியை எடுத்து இங்கு இணைத்தால் என்ன?

அதுவரை தலைப்பில் மாற்றம் செய்வதோ அல்லது படத்தை நீக்குவதோ தேவையில்லை என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

இல்லையே, நீங்கள்தான் ஈழம் ஈ நியூஸிற்கு வக்காளத்து வாங்குவது போல கருத்து எழுதி இருந்தீங்கள். அதனால அப்படி சொன்னன். ஈழம் ஈ நியூஸ் உங்கட தளம் இல்லையோ. மெய்யாத்தான் சொல்லுறீங்களோ. சரி பரவாயில்லை. :rolleyes:

உங்கட நண்பனுக்கு நண்பன் திருடினதுக்காக உங்களை நான் திருடன் எண்டு திட்டினால் நீங்கள் ஏற்றுக்கொள்ளுவீங்களோ....?? அது போல தான் இந்த பிரச்சினைகளும்... !

நீங்கள் திரும்பி என்னை பாத்து ஏதும் சொல்லப்படாது அமத்திக்கொண்டு இருக்க வேண்டும்... ( இதுதான் இண்டைக்கு நீங்கள் எனக்கு சொல்ல வாறது )

Link to comment
Share on other sites

actually.. Mr.Dalai, இன்னைக்கு நான் சொல்ல வருவது என்ன என்றால்.. நீங்கள் எங்களுக்கு நண்பர். ஈழம் ஈ நியூஸ் guys உங்களுக்கு நண்பர்கள். So.. அவர்களுக்கு நாங்கள் நண்பர்கள். எங்களுக்கு அவர்கள் நண்பர்கள். Therefore, நண்பர்களுக்கு இடையில இருக்கிற பிரச்சனையை நண்பர்களே பேசி தீர்த்திடலாம். பிரசனையை இத்துடன் விட்டிடலாம். This is இண்டைக்கு நான் உங்களுக்கு சொல்ல வருவது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, நீங்கள் விசாரித்ததும், படம் எடுக்கப்பட்டதும் ஒருவேளை உண்மையாக இருக்கலாம். அது போலவே சர்ச்சைக்குரிய படம் எடிட் செய்யப்பட்டதும் உண்மை. படத்தின் பின்னணியில் ஒளி அதிகமாக இருப்பது ஒன்று, மற்றையது படத்தில் இருப்பவர்களின் காதுகளின் கீழ்ப்பகுதியின் நிழல் மற்றும் படத்தில் வலதுபுறம் நிற்பவரின் வலது கைச்சட்டை நிழல் என்பனவற்றை எடிட் செய்தவர்கள் அழிக்காது விட்டுவிட்டனர். ஒருவேளை இப்படமானது எடுக்கப்பட்டது உண்மை எனினும் இருவரும் நெருக்கமாக இருப்பதாகக் காணப்படுவது எடிட் செய்யப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது. எனவே இயல்பாகவே சந்தேகம் எவருக்கும் எழும்.

ஒரு குற்றச்சாட்டு ஆதாரத்துடன் முன் வைக்கப்படும் போது, அதை ஆதாரத்துடன் இல்லை என இடித்துரைப்பதுதான் சாலச் சிறந்தது. விளம்பரத்துக்காக படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இது போலியான படம் என குற்றம் சாட்டப்படும் போது உண்மையாக எடுக்கப்பட்ட படத்தின் மூலப்பிரதியை வெளியிட்டு உறுதிப்படுத்தலாம். இதனை விடுத்து விசாரித்து பார்த்தேன் உண்மை என நீங்கள் சொல்லுவது ஓரிருவரிடம் எடுபடுமே தவிர எல்லாரிடமும் எடுபடாது. உங்களுக்கு உறுதி செய்தவர்களிடம் படத்தின் மூலப்பிரதியை எடுத்து இங்கு இணைத்தால் என்ன?

அதுவரை தலைப்பில் மாற்றம் செய்வதோ அல்லது படத்தை நீக்குவதோ தேவையில்லை என்பது எனது கருத்து.

ஏற்கனவே பதில் எழுதிவிட்டேன் சேரன்

.இவ்வளவு பிரச்சினைகளையும் மோகன் அண்ணாவுக்கு கொடுத்த அவர் இதுவரை உண்மையையும் எழுதவில்லை.

எனவே இவர்கள் போன்றவர்களுக்காக எமக்குள் நாம் கடிபடுவதோ அல்லது ஊடகவியலாளர்கள் தமது நேரத்தை வீணடிப்பதோ தற்போதைய சூழ்நிலையில் எமக்கு தேவையா என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

பாலச்சந்திரனை பலமுறை அவர் தாக்கியுள்ளார்

எனவே அவர் தனிப்பட்ட பிரச்சினைகளை இங்கு தீர்த்துக்கொள்ள முயல்கின்றார் என்பதே எனது கருத்து.

அதேநேரம் பாலச்சந்திரனுக்காக இங்கு நான் எதுவும் எழுதவில்லை.

எமது தாயகம் பெரும் இடர்களைப்பட்ட நேரங்களில் முழு மூச்சோடு முழுநேரமும் எமக்காக வீதியில் பாலச்சந்திரன் நின்றதை நான் ஒவ்வொரு நாளும் கண்டுள்ளேன்.

இந்த நன்றிக்கடன் எனக்கு அவரிடம் உள்ளது. அவ்வளவுதான்.

யாழ். களம் உட்பட எல்லா ஊடகவியலாளர்களும் இவற்றைவிட்டுவிட்டு எமது மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவர நேரத்தை செலவளிக்கவேண்டும் என்பதற்காகவே எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.