Jump to content

மகாத்மா காந்தியும் ஒரு நித்தியானந்தா தான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

newgandhi_347910t.jpg

காந்தியின் உறவுக்காறப் பெண்களுடனான சல்லாபம்.

(No sex please: Gandhi, above, 'tested' himself by sleeping with naked grand-nieces Manu, left, and Abha, right - .independent.co.uk)

இந்தியாவின் தேச பிதா... அகிம்சையின் முதல்வன்.. மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் இந்திய தேசத்தின் குஜராத்தைச் சேர்ந்த காந்தி.. பல மிக இளம் பெண்களோடு (குறிப்பாக உறவுக்காறப் பெண்களோடு) நிர்வாணமாக இருந்து பாலியல் பரிசோதனை என்று வாழ்க்கையை ஓட்டி இருப்பது தற்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.

மேலதிக செய்தி மற்றும் செய்தி ஆதார இணைப்பு இங்கு: http://kundumani.blogspot.com/

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தியும் ஒரு நித்தியானந்தா தான்

இந்தியாவின் தேச பிதா... அகிம்சையின் முதல்வன்.. மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் இந்திய தேசத்தின் குஜராத்தைச் சேர்ந்த காந்தி.. பல மிக இளம் பெண்களோடு (குறிப்பாக உறவுக்காறப் பெண்களோடு) நிர்வாணமாக இருந்து பாலியல் பரிசோதனை என்று வாழ்க்கையை ஓட்டி இருப்பது தற்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.

ஆட்டைகடிச்சு மாட்டைக்கடிச்சு கடைசியிலை அடிமடியிலையே கையை வைச்சிட்டாங்கள். :unsure:

Link to comment
Share on other sites

newgandhi_347910t.jpg

காந்தியின் உறவுக்காறப் பெண்களுடனான சல்லாபம்.

(No sex please: Gandhi, above, 'tested' himself by sleeping with naked grand-nieces Manu, left, and Abha, right - .independent.co.uk)

இந்தப்படத்திலை தவறானதாய் ஏதும் இல்லையே. மகாத்மா காந்தி அகிம்சை மூலம் இந்தியாவில சுதந்திர போராட்டத்தில ஈடுபட்டதால் மதிப்பு கொடுக்கப்பட்டார் ஒழிய பாலியல் ஆராய்ச்சிக்காக அவருக்கு ஒரு பட்டமும் கொடுக்கப்பட இல்லையே. ஊடகங்கள் என்றால் எப்பவும் உறிஞ்சாங்குண்டியை பிரபலப்படுத்துவதையே தர்மமாக கொண்டு இருக்க வேணுமோ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்திலை தவறானதாய் ஏதும் இல்லையே. மகாத்மா காந்தி அகிம்சை மூலம் இந்தியாவில சுதந்திர போராட்டத்தில ஈடுபட்டதால் மதிப்பு கொடுக்கப்பட்டார் ஒழிய பாலியல் ஆராய்ச்சிக்காக அவருக்கு ஒரு பட்டமும் கொடுக்கப்பட இல்லையே. ஊடகங்கள் என்றால் எப்பவும் உறிஞ்சாங்குண்டியை பிரபலப்படுத்துவதையே தர்மமாக கொண்டு இருக்க வேணுமோ..?

நீங்கள் இப்படிக் கேட்கும் போது ஊடகங்கள் மற்றும் என்னைப் போன்றோர் கேட்பார்கள்.. சாதாரணமா உரிஞ்சாங்குண்டியா இருந்தவரை ஏய்யா மகாத்மா என்று தேவையில்லாத அடைமொழி கொடுத்து வைச்சிருக்கீங்க. அவர் ஒரு சாதாரண ஆன்மா என்பதை சொல்லுங்கள் என்று கேட்கவும் உரிமை இருக்கிறது மச்சான்.

சாதாரண மனிதனாகக் கூட இல்லாமல் இயற்கைக்கு மாறாக காந்தி நடந்து கொண்டிருக்கிறார். இது தண்டனைக்குரிய குற்றமும் கூட. இயற்கைக்கு மாறான பாலியல் செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம்.

நித்தியானந்தாவும் இதைத்தான் செய்தார். அவரை சிறையில் வைத்திருக்கும் இந்திய சமூகம்.. காந்தியை மட்டும் மகாத்மா என்ற அடைமொழி கொடுத்து வைத்திருப்பது சரியா..??! :unsure:

Link to comment
Share on other sites

உங்களுக்கு விருப்பம் என்றால் காந்தி என்று கூப்பிடலாம். இல்லாட்டி வேற எப்பிடியாவது கூப்பிடலாம். யார் யார் எப்படி எப்படி ஆக்களுக்கு மரியாதை கொடுக்க வேணும் என்பது அவரவர் விருப்பம், ஈடுபாடு. இப்பவும் நித்தியானந்தா அவர்கள் மீது மதிப்பு வைத்து இருக்கும் பலர் இருக்கிறார்கள். ஆக்களை நிர்வாணப்படுத்தி பார்க்கும் கோணங்கிப்புத்தி தற்கால ஊடகங்களின் போக்கிற்கு நல்லதொரு சாட்சியாக இருக்கிது. ஒருத்தன் குற்றம் செய்யமாட்டானா.. உரிஞ்சாகுண்டியோட நிக்கமாட்டானா என்று ஏங்கி அலையும் நிலையிலேயே இன்று ஊடகங்கள் காணப்படுகிது. ஏதோ மகாத்மா காந்திக்கு பக்கத்தில நின்று பார்த்தமாதிரி கதை சொல்லுறீங்கள்.. மகாத்மா காந்தி ஒவ்வொரு நாளும் எத்தனை தடவை கக்கூசுக்கு போவார், எத்தனை மணிக்கு கக்கூசுக்கு போவார், அவருக்கு கக்கூசு என்ன நிறத்தில போகும் என்பவற்றையும் முடியுமானால் ஆராய்ஞ்சு சொல்லுங்கோ. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விருப்பம் என்றால் காந்தி என்று கூப்பிடலாம். இல்லாட்டி வேற எப்பிடியாவது கூப்பிடலாம். யார் யார் எப்படி எப்படி ஆக்களுக்கு மரியாதை கொடுக்க வேணும் என்பது அவரவர் விருப்பம், ஈடுபாடு. இப்பவும் நித்தியானந்தா அவர்கள் மீது மதிப்பு வைத்து இருக்கும் பலர் இருக்கிறார்கள். ஆக்களை நிர்வாணப்படுத்தி பார்க்கும் கோணங்கிப்புத்தி தற்கால ஊடகங்களின் போக்கிற்கு நல்லதொரு சாட்சியாக இருக்கிது. ஒருத்தன் குற்றம் செய்யமாட்டானா.. உரிஞ்சாகுண்டியோட நிக்கமாட்டானா என்று ஏங்கி அலையும் நிலையிலேயே இன்று ஊடகங்கள் காணப்படுகிது. ஏதோ மகாத்மா காந்திக்கு பக்கத்தில நின்று பார்த்தமாதிரி கதை சொல்லுறீங்கள்.. மகாத்மா காந்தி ஒவ்வொரு நாளும் எத்தனை தடவை கக்கூசுக்கு போவார், எத்தனை மணிக்கு கக்கூசுக்கு போவார், அவருக்கு கக்கூசு என்ன நிறத்தில போகும் என்பவற்றையும் முடியுமானால் ஆராய்ஞ்சு சொல்லுங்கோ. :unsure:

ஊடகங்களை நீங்கள் தவறான விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் உரிஞ்சாங்குண்டிகளை வெளிப்படுத்துவதை அல்ல நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரை அநாவசியமாக மகாத்மா ஆக்கும் சமூகம் அவரின் இன்னொரு பக்கத்தை காட்டாது மறைக்கும் (காந்தி சாதாரண மனிதன் என்பதையும் கடந்து இயற்கைக்கு மாறாக பாலியல் பித்துப் பிடித்து வாழ்ந்திருக்கிறார்..!) சமூகத்திற்குத்தான் இதைக் காட்டுகிறார்களே அன்றி உரிஞ்சாங்குண்டிகளை வைத்து எல்லா ஊடகங்களும் வியாபாரம் செய்வதில்லை. அதற்கென்றும் தனி ஊடகங்கள் இருக்கின்றன. நிர்வாணம் விரும்பிகளை திருப்திப்படுத்த என்று இயங்கும் ஊடகங்களும் பத்திரிகைகளும் இருக்கின்றன.

ஒரு சாதாரண மனிதன் இயற்கை விதிக்குள் செய்வதை எல்லாம் செய்திகளாக்குவதில்லை மச்சான். காந்தி இயற்கை விதிகளை கடந்து பாலியல் வெறித்தனமாக நடந்து கொண்டிருக்கிறார். அதுதான் நித்தியானந்தாவின் நிலையும். அவை கண்டிக்கத்தக்கவை மட்டுமன்றி சட்டபூர்வமான குற்றங்களாகும். அவற்றை ஊடகங்கள் வெளிப்படுத்துவது தவறல்ல..! நித்தியானந்தா ரஞ்சிதாவோடு அவரின் விருப்போடு எப்படியும் வாழ்ந்திருப்பின் அது பற்றி எவரும் பேச முடியாது. ஆனால் சாமியார் என்ற வேடத்தோடு பாலியல் ஆராய்ச்சி என்று ரஞ்சிதா மட்டுமன்றி பல பெண்களோடு உறவாடி வாழ்ந்ததுதான் செய்தியாக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள வேறுபாடுகளை மக்கள் விளங்கிக் கொண்டு விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே ஊடகங்களின் நோக்கம்.

Link to comment
Share on other sites

மிக மிக கேவலமான ஒரு இனமாக நாங்கள் மாறிக்கொண்டிருகின்றோம்.இப்போது நான் இங்கு இருக்கும் ஒரு வானொலி (சீ.டீ.ஆர்)கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.மூன்றாந்தர தமிழ்நாட்டு ஆய்வாளரைக் கொண்டுவந்து மக்கள் மனதில் விசம் விதைக்கின்றார்கள்.இப்படியே போனால் நாங்கள் எதுவும் சாதிக்க மாட்டோம்.மேலும் மேலும் எதிரிகளைத்தான் சம்பாதிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அனைவருக்கும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு மகாத்மா என்று மிகைப்படுத்தியே அறிமுகப்படுத்தப்படுகின்றார். ஆனால் மகாத்மா என்று அழைப்பதற்கு அவர் எள்ளளவும் தகுதியற்றவர். தமது தந்தையார் இறந்து கிடத்தப்பட்டு இருக்கையில் அடுத்த அறையில் தான் மனைவியுடன் கலவியில் இருந்ததாக 'சத்திய சோதனை' என்ற நூலில் காந்தியே வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார். அதுமட்டுமன்றி இவர் தன்னுடைய மனைவியான கஸ்தூரிபாவை அடிக்கும் பழக்கமுடையவர் என்ற செய்தி மூடிமறைக்கப்பட்டு வருகின்றது. ஒருமுறை இங்கிலாந்து நாட்டின் பிரதமர் சேர். வின்ஸ்ட்டன் சேர்ச்சில் அவர்கள் இவரை Half-naked Fakir (அரைநிர்வாணப் பக்கிரி) என கேலியாக குறிப்பிட்டுள்ளார். ஏதோ இந்தியாவுக்கு இவர்தான் சுதந்திரம் வாங்கித்தந்தவர் என்ற ஒரு மாயையை இந்திய ஆளும் பார்ப்பனிய வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கின்றது. இந்த கருத்தையே நாமும் எமது அடுத்த சந்ததிக்கு சொல்லிக் கொடுக்கப் போகின்றோமா? அல்லது மகாத்மா என்ற போர்வைக்குள் வாழும் துராத்துமாவின் உண்மை நிலையினை சொல்லிக் கொடுக்கப் போகின்றோமா?

Link to comment
Share on other sites

நாங்கள் மற்றவர்களை கிண்டல் செய்வது இலகு. ஆனால், அதேநிலையில் எங்களை வைத்து சுயபரிசோதனை செய்தால் எங்களுக்குள் எத்தனை ஓட்டைகள் இருக்கிது என்று தெரியும். அயல் நாட்டு காந்தியை தூக்கி எறிந்து கதைப்பது இலகு என்றால் நம்மநாட்டு ஆளையும் இதேநிலமையில் வைத்து ஒப்பீடு செய்து பார்கிறது தவறு இல்லை. நாங்கள் மகாத்மா காந்தியை விமர்சனம் செய்த அதேபாணியில் நம்மட ஆளை அயல்நாட்டுக்காரன் சுயபரிசோதனை செய்தால் இப்படியும் சொல்லலாம்.

“தேசியத் தலைவர் என்று கூறப்படுவதற்கு பிரபாகரனுக்கு அருகதை இருக்கிறதா? ஓர் சாதாரண மனிதனை ஏன் தேசியத்தலைவர் என்று சொல்லி மாயை ஏற்படுத்தப்பட்டது? ***

என்ன வாசிச்சீங்களோ? நிலமை இதுதானுங்கோ. இப்ப பலருக்கு பீபீ இருநூறுக்கு ஏறி இருக்கும். படக்கு படக்கு எண்டு இதயத்துடிப்பு நூற்று நாப்பதில அடிக்கும். தேசியத்தலைவர் பற்றி விமர்சனம் செய்கிறதுக்கு எந்தக்கொம்பனுக்கும் உரிமை இல்லை என்று பதில் எழுதுறதுக்கு கைகள் துடிக்கும். இப்பிடித்தான் அயலநாட்டுகாரனும் சொல்வான்.

நடுவுநிலமை இல்லாமல் யாரும் எதையும் தூக்கி எறிஞ்சு பேசலாம். ஆனால், சுயபரிசோதனை என்று ஆரம்பிச்சால் நாங்கள் எவ்வளவு கேவலம் கெட்டவர்கள் என்பதை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். எப்பவும் ஒருத்தனிண்ட நல்ல பகுதிகளை பார்த்துக்கொண்டு, நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு வாழ்க்கையை ஓர் சாதகமாக வகையில உற்று நோக்கி செயற்படுவதே சிறப்பானது. அவன் அவளுடன் படுக்கையில கிடந்தான். இவன் இப்பிடி தன்னை காட்டிக்கொண்டு அப்பிடி அந்தமாதிரி அத்தனை பெண்டுகளுக்கு கேம் குடுத்தான் என்று பரபரப்பை கிளப்புவதன் மூலம் உருப்படியாக ஏதும் நடைபெறப்போவது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பாகிஸ்தான் புலனாய்வுத்துறையினரின் சதி :unsure::o

காந்தித் தாத்தா மக்களுக்குச் சுதந்திரத்தையே வாங்கித் தந்தவர்.

அவர் சுதந்திரமாக இருந்தால் தப்பா? :unsure:

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் உங்களுடைய கருத்துக்களை முற்றாக நிராகரிக்கின்றேன். காந்தியை மகாத்மா என்று எங்களுக்கு பாடபுத்தகங்கள் வாயிலாகவும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் திணிக்கப்பட்டு இருக்கின்றது. மற்றும்படி காந்தியிற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாங்கள் போய் அயல்நாட்டுக்காரரை திரு. பிரபாகரன் அவர்களை தேசியத்தலைவர் என்று சொல்லச் சொல்லவில்லை. அவர்களுடைய பாடப்புத்தகங்களில் தேசியத்தலைவர் என்று சொல்லச் சொல்லவில்லை. அவர் எப்போதும் எங்களுக்குத் தேசியத்தலைவர்தான். அவரைப்பற்றி அயல்நாட்டுக்காரர் என்ன சொன்னாலும் அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. திரு. பிரபாகரன் பற்றிய உங்கள் கருத்து எதுவாகவும் இருக்கலாம், அதுவும் பிரச்சினை இல்லை ஆனால் காந்தி ஒரு மகாத்மா இல்லை என்பது வெளிப்படையானது. இதில் நடுவு நிலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தித்தாத்தாவை விமர்சிப்பதற்கு ஏற்ற நேரமா இது என்று தெரியவில்லை.

ஆனால் காந்தித்தாத்தா

தன்னால் முடிந்ததுக்கும் மேலாக தனது மக்களுக்காக பாடுபட்டார் என்கின்றரீதியில் எனக்கு அவர்மீது மதிப்பு உண்டு. அதேநேரம் அவர்களது குறைகளையும் அறிந்திருக்கின்றேனே தவிர பார்த்ததில்லை. எனவே அது கேள்விப்பட்டது மட்டுமே. எனவே எனது மதிப்பு இருந்துகொண்டேயிருக்கும்.

ஆனால் மச்சானின் செருகலை கண்டிக்கின்றேன்.

பிரபாகரன் என்னோடு வாழ்ந்தவர். அவரை எனக்கு தெரியும். எனவே தங்களது வார்த்தைகளை எடுத்துவிடுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் மகாத்மா காந்தியை முழு இந்தியர்களூமே கடவுளாக கும்பிடுகிறார்கள்...நல் வழி போதித்தவர்களீல் அல்லா,புத்தர்,யேசு,காந்தி என சொல்வார்கள் அப்படிப்பட்டவர் 100% அப்பழுக்கில்லாது இருந்திருக்க வேண்டும்...ஆனால் தமிழர்களீலேயே தலைவரை வெறூத்த்வர்கள் உள்ளார்கள்...அவர்கள் சொந்தக் காரணங்களூக்காகவே தலைவரை வெறூத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது! :unsure:

Link to comment
Share on other sites

மோகன் அவர்கள் நேற்று இணைச்ச ஓர் பேட்டியில ஊடகவியலாளர் வித்தியாதரன் நல்லதொரு பதிலை வழங்கி இருக்கிறார். குறிப்பிட்ட கேள்வியையும், பதிலையும் இதில இணைக்கிறன் வாசிச்சு பாருங்கோ. இது இந்த தலைப்புக்கும் நன்றாக பொருந்தும்.

http://karumpu.com/wp-content/uploads/2010/Vithyatharan.mp3

கேட்கமுடியாவிட்டால் இந்த தொடுப்பை அழுத்துங்கோ:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் மச்சான் அவர்கட்கு மகாத்மா? காந்தியைப் பற்றித்தான் இங்க விவாதமே தவிர தேசியத்தலைவரைப்பற்றியதுpல்லை தேவையில்லாது தாங்கள் சில விடையங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் விவாதத்தைத் தொடருங்கள் ஆனால் தேசியத்தலைரைப்பற்றிய கருத்தினை திரும்பப்பெற்றுவிட்டு. யாழ இணையத்தள மட்டுறுப்பினர் எனது கருத்தினைச் செவிமடிப்பாராக. அன்பான உறவுகளே நீங்கள் யாரைப்பற்றியும் கருத்தெழுதுங்கள் விருப்பமெனில், ஆனால் தனது இனத்திற்காக கண்துஞசாது போராடி வீரமரணமடைந்த எனது தலைவனைப் பற்றிமட்டும் கருத்தெழுத இங்கு யாருக்கும் யோக்கியதையில்லை. மச்சான் அவர்கள் தனது கருத்தைத் திரும்பப் பெறல் வேண்டும். யாழ் இணையம் இக்கருத்துக்க கண்டனம் தெரிவித்தல் வேண்டும் இல்லையேல் இப்படியான கீழத்தரமான கருத்துக்களை எழுதும் நபர்களை ஊக்குவிக்கும் தளமாக யாழ் இணையம் கருதப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் உறவுகளே

இந்தத் திரி தவறான பாதையில் செல்லாமல் இருந்தால் நல்லது.

மல்லாந்து படுத்திருந்து எச்சில் உமிழ்ந்தால்...

வாத்தியார்

..............

Link to comment
Share on other sites

உங்களுக்கு தேசியத்தலைவர் என்று சொல்லி எதையாவது எழுதும்போது எப்படி ஆத்திரம் பீற்றிக்கொண்டு வருமோ இதுபோலவே காந்தியத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இவ்வாறான அவதூறுகள், மகாத்மா காந்தியை மலினப்படுத்தும் கருத்துக்கள் எரிச்சலையூட்டும். இந்தக்கருத்தாடலின் நோக்கம் நிச்சயம் இந்தியாவை, இந்தியர்களை கிண்டல் செய்வதாகவே எனக்கு படுகின்றது. நாங்கள் சில இலட்சங்கள், அவர்கள் பலப்பல கோடிகள். அவர்கள் எங்களை கிண்டல் செய்யத்தொடங்கினால் நிலமை எப்படி இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். எங்களுக்கையே நாங்கள் ஆக்களை கிண்டல் செய்து மகிழ்ந்து ஒன்றும் நடக்கப்போவது இல்லை. மேலே பேட்டியில் வித்தியாதரன் அவர்கள் இதை நன்றாக சொல்லி இருக்கிறார். காகத்திற்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு..!

Link to comment
Share on other sites

யாரோ வீட்டு விடுப்பு கதைப்பதில் தான் எங்களுக்கு திறில்.எங்கட வீட்டு கோடியில் நடப்பது தெரியாமல்.உண்மைகளை எழுதினால் இங்கு ஒருவருக்கும் தாங்க கூடிய சக்தியும் இல்லை ஏற்பார்களுமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

கலைஞன் மகாத்மா காந்தியை முழு இந்தியர்களூமே கடவுளாக கும்பிடுகிறார்கள்...நல் வழி போதித்தவர்களீல் அல்லா,புத்தர்,யேசு,காந்தி என சொல்வார்கள் அப்படிப்பட்டவர் 100% அப்பழுக்கில்லாது இருந்திருக்க வேண்டும்... ஆனால் தமிழர்களீலேயே தலைவரை வெறுத்தவர்கள் உள்ளார்கள்...அவர்கள் சொந்தக் காரணங்களூக்காகவே தலைவரை வெறுத்திருப்பார்கள்.

இதே கருத்துக்களத்தில யேசு கிறிஸ்துவை ஓரினச்சேர்க்கையாளர் (Gay) என்று எழுதினார்கள். ஓரினச்சேர்க்கை எண்டுறது இயற்கைக்கு முரணான உறவோ? இதுக்கு தண்டனை இருக்கிதோ? அப்பிடியென்றால் யேசு கிறிஸ்து சிலுவை சுமந்தார், பாவங்களை கழுவினார் என்று சொல்லிறது எல்லாம் சுத்த பம்மாத்தோ? யேசுகிறிஸ்துவை கடவுளின் தூதுவராக கும்பிடலாமோ? எது உண்மை? எது பொய்? எது தேவையானது? எது தேவை இல்லாதது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே கருத்துக்களத்தில யேசு கிறிஸ்துவை ஓரினச்சேர்க்கையாளர் (Gay) என்று எழுதினார்கள். ஓரினச்சேர்க்கை எண்டுறது இயற்கைக்கு முரணான உறவோ? இதுக்கு தண்டனை இருக்கிதோ? அப்பிடியென்றால் யேசு கிறிஸ்து சிலுவை சுமந்தார், பாவங்களை கழுவினார் என்று சொல்லிறது எல்லாம் சுத்த பம்மாத்தோ? யேசுகிறிஸ்துவை கடவுளின் தூதுவராக கும்பிடலாமோ? எது உண்மை? எது பொய்? எது தேவையானது? எது தேவை இல்லாதது?

ஜேசு ஒரு போராளி..........

அன்பால் எதையும் சாதிக்கலாம் வன்முறை மென்மேலும் வன்முறையையே கட்டவிழ்த்துவிடும் என்று முழுமையாக நம்பியவர். ஆக வன்முறைகளிடம் தன்னை முழுமையாக அர்பணித்தார். எனது மரணமும் எனது கொள்கைக்கு சாட்டசியாகட்டும் என்று எண்ணினார் அதற்காவே சித்திரவதைகளின் உச்சத்திற்கும் பணிவோடு தனது உடலை கொடுத்தார்.... சிலுவையை சுமந்தார். மற்றையபடி அவருடைய தனிபட்ட வாழ்கை பற்றியவையில் எவ்வளவு உண்மைகள் இருக்கினற்து என்பது சந்தேகமானதே. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு நடந்தைவைகளை எவ்வளவு துல்லியமாக மாசுபடாமல் அடுத்தடுத்த சந்ததிகளிடம் ஒப்படைக்கலாம் என்பது கேள்விகுறியானது.

தவிர ஜேசு கடவுளின் தூதுவரா என்றால்? அவரை தூதுவராக அனுப்புவதற்கு முதலில் ஒரு கடவுள் இருந்தாக வேண்டும். கடவுளே மனிதனை படைத்தான் என்றார்கள். குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பது நிருபணமாக நிருபிக்கபட்டாலும் அதை கடவுளின் பீதியால் ஏற்றுகொள்ள மறுக்கின்றார்கள். ஒரு வேளை கடவுள் ஒரு உயிரினத்தை படைத்தார் பின்பு அந்த உயிரினத்தில் இருந்து எல்லாம் விருட்சமடையட்டும் என்று எண்ணினார் என்ற கருத்தோடாவது கடவுளைபற்றி ஆய்வு செய்யவதற்கு என்றாலும் முயற்சி செய்யலாம்.

ஆனால் சைவசமயம் கல்லாய்.... மண்ணாய்.... பேயாய்... மரங்களாய்..... கனங்களாய்..... மனிதனாய். என்று சொன்னாலும் தங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரை கடவுள் உயர்ஜாதியாக படைத்தாராம் பின்பு இவர்களுக்கு அடிமைகளாகவும் கீழ்ஜாதிகரராகவும் சிலரைபடைத்தாராம் என்கின்றார்கள்.

நான் இன்னமும் விடை தேடிகொண்டிருக்கும் கேள்வி.... " எல்லாவற்றையும் கடவுள் படைக்கு முன்பு.... கடவுள் எவ்வாறு தோன்றினார்?" ஆக கடவுள் தோன்றுவதற்கு ஒரு உயிர்ப்பி இருந்திருக்கிறது என்று ஏற்றுகொள்ளும் பலரால் ஆதேபோல் இன்னமும் ஒன்று தோன்றுவதற்கான சாத்தியத்தை ஏற்றுகொள்ள முடியவில்லை.

ஆக பனை மரம் இல்லாத இடங்களில் தென்னை மட்டுமே உள்ளது உலகில் என்கிறார்கள். தென்னையில்லாத இடங்களில் பனைமட்டமே உள்ளமு என்கிறார்கள். இரண்டும் உள்ள இடத்திற்கு வாருங்கள் என்றால்....??? வரவும்மாட்டார்கள்.

ஆக ஜேசு கடவுளாகவும் புனிதராகவும் மனிதனால்தான் தோற்றுவிக்கபட்டார் என்பதே எனது நிலைபாடு. ஆனால் ஜேசு ஒரு போராளி என்பதில் எனக்கு அவரிடம் மிகுந்த அன்பும் பணிவும் எப்போதும் உண்டு. ஜேசுவை வணங்குவதில் எனக்கு சம்மதமே ஆனால் அவர் கடவுள் என்பதில் எனக்கு சந்தேகம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளோடு பொய்யை கலப்பது....

நாங்கள் மற்றவர்களை கிண்டல் செய்வது இலகு. ஆனால், அதேநிலையில் எங்களை வைத்து சுயபரிசோதனை செய்தால் எங்களுக்குள் எத்தனை ஓட்டைகள் இருக்கிது என்று தெரியும். அயல் நாட்டு காந்தியை தூக்கி எறிந்து கதைப்பது இலகு என்றால் நம்மநாட்டு ஆளையும் இதேநிலமையில் வைத்து ஒப்பீடு செய்து பார்கிறது தவறு இல்லை. நாங்கள் மகாத்மா காந்தியை விமர்சனம் செய்த அதேபாணியில் நம்மட ஆளை அயல்நாட்டுக்காரன் சுயபரிசோதனை செய்தால் இப்படியும் சொல்லலாம்.

“தேசியத் தலைவர் என்று கூறப்படுவதற்கு பிரபாகரனுக்கு அருகதை இருக்கிறதா? ஓர் சாதாரண மனிதனை ஏன் தேசியத்தலைவர் என்று சொல்லி மாயை ஏற்படுத்தப்பட்டது? ***”

என்ன வாசிச்சீங்களோ? நிலமை இதுதானுங்கோ. இப்ப பலருக்கு பீபீ இருநூறுக்கு ஏறி இருக்கும். படக்கு படக்கு எண்டு இதயத்துடிப்பு நூற்று நாப்பதில அடிக்கும். தேசியத்தலைவர் பற்றி விமர்சனம் செய்கிறதுக்கு எந்தக்கொம்பனுக்கும் உரிமை இல்லை என்று பதில் எழுதுறதுக்கு கைகள் துடிக்கும். இப்பிடித்தான் அயலநாட்டுகாரனும் சொல்வான்.

நடுவுநிலமை இல்லாமல் யாரும் எதையும் தூக்கி எறிஞ்சு பேசலாம். ஆனால், சுயபரிசோதனை என்று ஆரம்பிச்சால் நாங்கள் எவ்வளவு கேவலம் கெட்டவர்கள் என்பதை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். எப்பவும் ஒருத்தனிண்ட நல்ல பகுதிகளை பார்த்துக்கொண்டு, நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு வாழ்க்கையை ஓர் சாதகமாக வகையில உற்று நோக்கி செயற்படுவதே சிறப்பானது. அவன் அவளுடன் படுக்கையில கிடந்தான். இவன் இப்பிடி தன்னை காட்டிக்கொண்டு அப்பிடி அந்தமாதிரி அத்தனை பெண்டுகளுக்கு கேம் குடுத்தான் என்று பரபரப்பை கிளப்புவதன் மூலம் உருப்படியாக ஏதும் நடைபெறப்போவது இல்லை.

உண்மைகளுக்குள் இருக்கும் பொய்களை மூடிமறைப்பது......

இரண்டும் வேறுவேறானவை. இதில் ஒன்றோடு ஒன்றை ஒப்புவிப்பது பாறங்கல்லுடன் உப்புகல்லை ஒப்புவிப்பதாகும்.

இந்திய சுதந்திர போராட்டம் என்பது 100 வருடங்கள் தொடர்ந்தபோர். இதில் மகாத்மா காந்தியின் காலம் ஒரு சிறியது. ஆனால் சுதந்திரம் அடைந்தபோது அவரின்காலமே கனிந்தது.

மகாத்மா காந்தியின் போராட்டத்தால் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மகத்மாகாந்தி சுதந்திரத்திற்காக போராடிகொண்டிருந்தார்.

மேல் உள்ள இரண்டு வசனங்களும் வேறு வேறு அர்த்தம் உடையவை. ஆனால் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியவை இந்த அர்த்தங்களே.

"மகாத்மா"

இது ஒரு சாதாரண ஆத்மாவிலும் இருந்து மேன்மையானது. மகாத்தானது. புனிதமானது.

சாதாரண ஆத்மாக்களில் இருந்து காந்தி மேன்மையானவரா? மகாத்தானவரா? புனிதமானவரா? என்பதே விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியது.

ஆம் காந்தி ஒரு மகாத்மா என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம் ஏனெனில் பலர் அவர் ஒரு சாதாரண ஆத்மாவிலும் கீழானவர் என்று கூட சொல்கின்றார்கள். ஆகையால் அவர் எவ்வாறு மேன்மையானவர்......... எவ்வவாறு மகத்தானவர் எவ்வாறு புனிதமானவர் என்று நிருபணமாக எழுதிவிடுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்.

ஆனால் மகாத்மா காந்தி பிழை என்று எழுதும் உங்களால்.............. பிரபாகரன் பிழை என்று எழுதினால் எற்றுகொள்ள முடியுமா?

என்றால் இது மிரட்டல். இது ஒரு கருத்தாடல் இல்லை. பிரபாகரன் ஒரு இனத்திற்கு ஒரு தேசியத்திற்கு தலவைராக இருந்தாரா என்பது பற்றி விவாதிப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இனி புலிகள் போராடவே இல்லை.... என்றும் சில ஒட்டுகுழுக்கள் தமது "பத்திரிகை" என்ற பெயரில் தாங்களே எழுதி தாங்களே வாசிக்கும் இடங்களில் எழுதுகிறார்கள். அப்ப யாழ் கருத்து களத்தில் புலிகள் போராடினார்களா? என்றும் ஒரு விவாத்தை வைப்பதில் எந்த தவறும் இல்லைதான். ஆனால் நாம் அந்தளவு புத்திசாலிகளா? என்ற இன்னொரு கேள்வியும் உடன்வருகிறதல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் தங்களின் தேசிய தலைவருடனான ஒப்பீடு மிகத்தவறானது. பிரபாகரன் தேசிய தலைவரானது அவர் ஒரு தேசிய இனத்தினை அடையாளப்படுத்தி அதன் விடிவுக்காக தனது தலைமையில் போராடிய படியால் தான். காந்தி இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர் என்பதை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால் காந்தி மகாத்மா.. என்ற நிலைக்குரிய ஒருவரல்ல.

மகாத்மா என்பது ஒரு உன்னதமான பதம். அதற்கென்று சில பண்புகள் வரையறுக்கப்பட்டிருப்பதால் தான் அப்பதத்தை சாதாரணமாக எல்லோரும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. காந்தி இந்திய விடுதலைக்காக போராடியதோடு மட்டும் மகாத்மா ஆக முடியாது. அப்படிப் பார்த்தால் பல விடுதலைப் போராளிகளும் மகாத்மாக்களாக இனங்காட்டப்பட வேண்டும்.

காந்தி ஒரு தேச விடுதலைப் போராளி என்ற நிலைக்கு அப்பால் தனிமனித ஒழுக்கங்களை பேணத்தவறி இருக்கிறார். அப்படியான ஒருவருக்கு மகாத்மா என்ற தகுதி அவசியம் தானா...???!

தேசிய தலைவர் ஒரு போராளி மட்டுமல்ல.. அவர் ஒரு கட்டுக்கோப்பான உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த ஒரு விடுதலை இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திய மாவீரன். அவரோடு தனிமனித ஒழுக்கமற்ற காந்தியை ஒப்பீடு செய்ய முடியாது. காந்தி கஸ்தூரி பாயோடு எப்படி வாழ்ந்தார் என்பதைப் பற்றி அல்ல நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். காந்தி அவரையும் தாண்டி பல பெண்களோடு இயற்கைக்கு மாறான உறவு நிலைகளைப் பேணி இருப்பது தனிமனித ஒழுக்கத்தில் அவர் மிகவும் பிந்தங்கி இருந்திருக்கிறார் என்பதையே காட்டுகிறது. அப்படியான ஒரு மனிதனை எப்படி மகாத்மா என்றழைக்கலாம் என்பதே கேள்வி.

தேசிய தலைவரை வட இந்தியர்கள் பயங்கரவாதி என்று அழைத்ததும் இன்றி அவரை கொலை செய்ய படைகளையும் ஆயுதங்களையும் படைத்துறை ஆலோசனைகளையும் வழங்கி இருக்கின்றனர். ஆனால் நாங்கள் காந்தியை கொல்லவல்ல இதை எழுதுகிறோம். காந்திக்கு இந்திய பேரரசுக்குரிய சமூகம் வழங்கி இருக்கும் மகாத்மா என்ற நிலை சரியானதா.. காந்தி அதற்கு தகுதியுடையவரா என்பதுதான் கேள்வி.

நாம் கொள்கையிலும் தனி மனித ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய தேசிய தலைவரை மகாத்மா என்று அழைக்கவில்லை. அவர் எமது தேசிய இனத்தின் விடுதலைக்காக அதன் அடையாளத்திற்காக போராடிய பெரு வீரன் என்ற அடிப்படையில் தான் அவருக்கு தேசிய தலைவர் என்ற அந்த அந்தஸ்தை அளித்திருக்கிறோம். இதனை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்றும்படி தேசிய தலைவரை விட காந்தி தனி மனித ஒழுக்கத்தில் மிகக் கீழ்மட்டத்தில் இருந்திருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த வகையில் தேசிய தலைவர் பிரபாகரன் ஒப்பீட்டளவில் காந்தியை விட சிறந்தவர் என்பதை நிரூபிக்க முடியும். ஆனால் அதை இந்திய சமூகம் ஏற்காது. அது அவரை பயங்கரவாதி என்றே சொல்லும். காந்தி விடுதலை என்று சொல்லி எத்தனையோ இந்திய மக்களை வெள்ளையர்களின் குண்டுக்கு இரையாக்கி இருக்கிறார். ஆனால் அதற்காக அவரை எவரும் பயங்கரவாதி என்று சொன்னதில்லை. விடுதலைப் போராளி என்றே இனங்காண்கின்றனர். ஆனால் தேசிய தலைவர் அப்படியன்று. அவர் ஒரு இராணுவ வழிப் புரட்சியின் முதல்வனாக இருந்து கொண்ட கொள்கையோடு தனி மனித ஒழுக்கத்தையும் காத்து போராடியவர். அவரை சதி செய்து வீழ்த்தியது இதே காந்தி தேசமாகும். அது காந்தியைப் போல இரட்டை நிலை வாழ்வையே பிரதிபலித்து நிற்கிறது.

தேசிய தலைவர் அப்படிப்பட்ட ஒருவரல்ல என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு சந்தேகம் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது காந்தியா...?? அல்லது வெள்ளைக்காறன் சுதந்திரத்தை காந்தியிடம் குடுத்து போட்டு போனவனோ....??

சந்தேகத்துக்கு முக்கிய காரணம் பிரித்தானியர்களுக்கு மிகவும் தலையிடியாக இருந்த நேதாஜி இன் இராணுவம் காந்திய வாதிகளால் மறைக்கப்பட்டு வருகிறது...

Link to comment
Share on other sites

காந்தி பெற்றுக் கொடுத்த சுதந்திரம், இந்திய சிறுபான்மை தேசிய இனங்கள் அனைத்தின் சுதந்திரத்தையும் பார்ப்பனியத்திடம் அடகு வைத்த சுதந்திரம்

பிரபாகரன் கண்டது: சாதிகள் அற்ற, பெண் சுதந்திரம் மிக்க ஒரு சுதந்திர தமிழ் ஈழத்தை

ஒருவரை மகாத்மாவாக்கி இந்த உலகம் தன் அடக்குமுறையை தொடர்கின்றது

ஒருவரை பயங்கரவாதியாக்கி தன் மேலாதிக்கத்தை ஒடுக்கப் பட்ட தேசிய இனங்கள் மீது தொடர்ந்து செலுத்துகின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.