Jump to content

ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள்


Recommended Posts

audio.gifஇன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது. வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடாக கனக்கின்ற துயரங்களின் பாரம் உங்களின் சிந்தனைக்காக….
Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி சாந்தி அக்கா. எதையாவது எழுதி ஆக்களுக்கு கடுப்பு ஏத்தாமல் இருப்பதற்காக ***சுயதணிக்கை***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரும் சரி போராளிகளும் சரி அவர்களோடு வாழ்ந்த மக்களும் சரி போராட்டம் இவ்வாறான ஒரு இக்கட்டுக்குள் செல்லும் என்பதை அவ்வளவு எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி எதிர்பார்த்திருப்பின் இவ்வாறான பிரச்சனைகளைக் கையாள்வது குறித்தும் சிந்தித்திருப்பார்கள்..! இருந்தாலும் இன்று மக்கள் சிந்தித்து இவர்களின் மீட்சிக்காக செயற்திட்டங்களை தீட்டிச் செயற்பட வேண்டும்.

போராளிகள் திருமணம் செய்வதை தலைவர் ஆரம்ப காலங்களில் அவ்வளவு ஊக்கிவிக்கவில்லை. காரணம்.. அவர்களின் எதிர்காலமென்பது நிச்சயமற்றதாக இருந்ததால். போராட்டம் வலுப்பெற்ற போதே தலைவர் திருமணங்களை அனுமதித்தார். திருமணங்கள் இன்று பல போராளிகளின் உயிர்களை காத்திருக்கிறது என்பதும் உண்மை. திருமணமான போராளிகள் பலரை விடுவிக்க எதிரியானவன் கூட முன்வந்திருக்கிறான்.

இவ்வாறான திருமணமானவர்களுக்கு அவர்களின் மனைவிமார் பிள்ளைகள் குரல்கொடுக்க முடிகிறது. திருமணம் செய்யாத பெற்றோர் தொடர்பின்றிய எத்தனையோ போராளிகள் மரணப்படுகுழிகளுக்குள்ளும் சித்திரவதை முகாம்களிலும் கிடக்கின்றனர். அவர்களின் மீட்சி பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

சொந்த மக்களின் வாக்கில் தெரிவானதாக சொல்லும் டக்கிளஸ் தேவானந்தா போன்றவர்கள்.. இந்தியா வரைக்கும் போய் சிங்களத்திற்கு வக்காளத்து வாங்கி வரும் நிலையில் இருக்கிறார்களே அன்றி தனது மக்களின் பிள்ளைகள் சிறைகளில் இருந்து சீரழிவது பற்றி சிந்திக்கவில்லை. இதனால் தான் இவர்களை நோக்கியும் கடந்த காலங்களில் துப்பாகிகள் நீண்டன என்பதையும் இவர்கள் ஏற்று மாற்று வழிகளில் சிந்திக்க முன்வர வேண்டும். மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டிருப்பவர்களை அரசியல் செய்ய அனுமதிப்பதும்.. மக்களைப் பொறுத்தவரை பாதுகாப்பானதல்ல..!

எமது போராளிகளின் ஒட்டுமொத்த விடுதலையும் அவர்களின் வளமான வாழ்வுமே இந்த குரல்களுக்கு எல்லாம் முடிவு கட்ட முடியும். அதை நோக்கி இளைய சமூகம் (அது தாயகத்தில் இருந்தாலும் சரி புகலிடத்தில் இருந்தாலும் சரி ஒருங்கிணைந்து ) எவ்வாறு செயற்படுவது அதற்கான திட்டங்களை எவ்வாறு வகுப்பது செயற்படுத்துவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். சர்வதேச தொண்டர் அமைப்புக்களின் கவனத்திற்கு இவர்களின் அவலங்களை கொண்டு வர வேண்டும். வெறுமனவே எமக்குள் இவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம்.. தற்காலிக உதவிகளைச் செய்யலாம்... அல்லது.. அரசியல் செய்யலாம்.. தவறுகளை விட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தூண்டலாம். ஆனால் இவர்களின் துயருக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன..??! :):lol::unsure:

Link to comment
Share on other sites

புனர்வாழ்வு முகாம்களில் பயற்சி பெற்று வரும் முன்னாள் 53 விடுதலைப்புலி ஜோடிகளுக்கு நாளை தினம் சட்டரீதியாக திருமணம் :

12 June 10 01:38 am (BST)

புனர்வாழ்வு முகாம்களில் தற்போது பயற்சி பெற்று வரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் மற்றும் ஆண் போராளிகளின் 53 இளம் ஜோடிகள் நாளை தினம் சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இந்த திருமண வைபவம் வவுனியா பம்பைமடு புனர்வாழ்சு முகாமில் நடைபெறவுள்ளது.

திருமணம் செய்து வைக்கப்படவுள்ள இந்த இளம் ஜோடிகள் அவர்களுகென அமைக்கப்பட்டுள்ள விசேட கிராம் ஒன்றில் குடியேற்றப்படவுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளர். ஒரே தினத்தில் ஒரே இடத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல் முறையாகும் எனவும் பிரிகேடியர் கூறியுள்ளார்.

- உலக தமிழ்ச் செய்திகள் (ஜிரிஎன்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.