Jump to content

கே.பி: எதிர்ப்புரட்சியின் நடுநாயகம் - சேரமான்


Recommended Posts

திகதி: 26.06.2010 // தமிழீழம்

வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக அரசல்புரசலாக வெளிவந்திருந்த நிலையில், இவற்றை அதிகாரபூர்வமாக உறுதிசெய்யும் வகையில் கடந்த 20ஆம் நாளன்று சண்டே ஒப்சேவர் வார இதழில் வெளியாகிய முகப்புச் செய்து அமைந்துள்ளது.

சண்டே ஒப்சேவர் வார இதழ் என்பது சிங்கள அரசின் ஊடக அமைப்பான லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓர் அதிகாரபூர்வ இதழாகும். இந்த வகையில் கே.பி தொடர்பாக சண்டே ஒப்சேவர் வார இதழ் வெளியிட்ட செய்தியை சிங்கள அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பாகவே நாம் கொள்ள முடியும். இதேநேரத்தில் இது தொடர்பாக கடந்த 22ஆம் நாளன்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கடந்த வாரம் யாழ் பலாலி, கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கே.பியிற்கு, கிளிநொச்சியில் உள்ள படைத்தளம் ஒன்றில் சிறீலங்கா படையினரால் விருந்துபசாரம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றின் தொடர்ச்சியாக இது குறித்து 24ஆம் நாளன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசாங்கத்தின் சாட்சியாகவே தற்பொழுது கே.பி திகழ்வதாகவும், இந்த வகையில் கே.பி அவர்களை குற்றவாளியாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் மலேசியாவில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் கே.பி கடத்தப்பட்டதாக அவரது குழுவினரால் செய்தி வெளியிடப்பட்ட பொழுது, அது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே இருதுருவ ரீதியிலான கருத்துக்களைத் தோற்றுவித்திருந்தது. ‘கே.பி கடத்தப்படவில்லை, அவராகவே சிங்கள அரசிடம் சரணடைந்தார்' என்று ஒருதரப்பினரும், ‘மிகவும் நுட்பமான முறையில் கே.பியை இலக்கு வைத்து சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றுள்ளனர்' என்று மறுதரப்பினரும் நேர்முரணான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பாக அப்போதைய காலப்பகுதியில் கே.பியுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த கனடிய தமிழ் எழுத்தாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ அமைப்பினரால் அல்கைடா இயக்கத் தலைவர்கள் கடத்திச் செல்லப்பட்டமைக்கு நிகரான பாணியிலேயே கே.பியையும் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். ஆனால் கே.பி கடத்தப்பட்டதாக அவரது குழுவினரால் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசல்புரசலாகக் கசிந்த பல தகவல்கள் ஊடகங்களில் வெளிவரத் தவறியிருந்தன. முதலாவதாக சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரின் வழித்துணையுடன் கொழும்பில் இருந்து அடிக்கடி சிங்கப்பூருக்கு கே.பி வந்து செல்வதாக தகவல்கள் கசிந்திருந்தன. இதன் ஓர் அங்கமாக தனக்கு நெருக்கமான சட்டத்தரணி ஒருவரையும், தொலைக்காட்சி ஒன்றின் பணிப்பாளர் ஒருவரையும் கே.பி சிங்கப்பூருக்கு அழைத்து சந்தித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள தனது நெருங்கிய சகாக்கள் சிலருடன் தொலைபேசியில் கே.பி உரையாடியதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன. இதற்கிடையே இதேகாலப்பகுதியில் தென்கிழக்காசிய நாடொன்றில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் தனது சகா ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய கே.பி, சிறீலங்கா அரசுடன் முரண்படுவது அர்த்தமற்றது என்றும், தனது நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த கப்பல் ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்ததாக தகவல்கள் கசிந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் என்று கூறி, தென்கிழக்காசிய நாடொன்றில் இருந்து சிறீலங்கா கடற்படையினரால் கப்பல் ஒன்று கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

இதேவேளை மலேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களும், போராளிகளும் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு, அந்தந்த நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் அனுசரணையுடன் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவங்களும் சத்தம் சந்தடியின்றி அரங்கேறியிருந்தன. இவ்வாறு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட பலர், சுற்றுலாப் பயணிகளாக கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்த பொழுதே கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா அரசு செய்தி வெளியிட்டிருந்தது. இவை ஒருபுறமிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று சிங்கள அரசால் இனம்காணப்பட்ட புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் மனிதநேய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து இவ்வாண்டின் முற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் ‘புலிவேட்டை' தொடங்கப்பட்டிருந்தது.

வன்னிப் போரில் சிறீலங்கா படைகளின் நடவடிக்கைத் தளபதியாக விளங்கியவரும், தற்பொழுது யேர்மனியில் சிங்கள அரசின் இராசதந்திரியாக செயற்படுபவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவர்களின் அனுசரணையுடனேயே இந்தப் ‘புலிவேட்டை' முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, தமிழகத்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைக் குறிவைத்து, தமிழக காவல்துறையின் ‘கியூ' புலனாய்வுப் பிரிவினரால் ‘கைதுப்' படலங்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறாக ஒருபுறம் தமிழீழ விடுதலைப் போராட்டம் உயிரூட்டம் பெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான தனது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை முழுவீச்சுடன் சிங்கள அரசு முன்னெடுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் ‘கே.பி சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்', ‘தமிழீழ விடுதலைப் புலிகளால் கே.பி காட்டிக் கொடுக்கப்பட்டார்' போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி சிங்கள அரசின் நடவடிக்கைகள் மீதான புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் வெளிநாடுகளில் இயங்கும் கே.பி குழுவினரும், அவர்களின் ஊடகங்கள் ஈடுபட்டிருந்தன.

கடந்த ஓராண்டு காலப்பகுதியில் பல்வேறு தேர்தல் திருவிழாக்களுக்குள் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் திசைதிருப்பி விடப்பட்டிருந்த நிலையில், இவையெல்லாவற்றையும் தமக்கு சாதகமாகக் கையாண்ட சிங்கள அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில், தமிழீழத் தனியரசுக்கு ஆணை வழங்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கள் அமைந்திருந்தன. இது தொடர்பாக தனது அதிருப்தியை சிங்கள அரசு பகிரங்கமாக வெளியிட்டிருந்த அதேவேளை, ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம் கொட்டைப்பாக்குக்கு வழிகாட்டும்' என்ற குரூரமான தொனியில் கே.பி குழுவினரால் இயக்கப்படும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதோடு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்களின் முடிவுகளை சிறுமைப்படுத்தியும், இருட்டடிப்பு செய்யும் குழப்பகரமான செய்திகளையும் கே.பி குழுவினர் வெளியிட்டு வந்தனர்.

இவ்வாறாக சிங்கள அரசின் எதிர்ப்புரட்சி மூலோபாயத்தின் (counter-insurgency strategy) நடுநாயகமாக மாற்றம் பெற்றிருந்த கே.பியின் நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் கனக்கச்சிதமான முறையில் அவரது குழுவினர் அரங்கேற்றி வந்தனர். தற்பொழுது கே.பி அவர்களின் உண்மை முகம் வெளிவந்திருக்கும் நிலையில், இப்பொழுதும் அவரையும், அவரது செய்கைகளையும் நியாயப்படுத்தும் வகையில் கே.பி குழுவினர் ஈடுபட்டிருப்பது மிகவும் நகைப்புக்கிடமானது. அதாவது, ‘சிங்கள அரசின் சித்திரவதைக்கு ஆளாகிய கே.பி, சிங்கள அரசின் தாளத்திற்கு ஆடுவதை நாம் விமர்சிக்க முடியாது' என்றும், ‘கே.பி சந்தர்ப்பக் கைதியாக விளங்குகின்றார்' என்றும் அவரது குழுவினர் வியாக்கியானமளிக்க முற்படுவது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

சரி. ஒரு பேச்சுக்கு கே.பியை சந்தர்ப்பக் கைதியாகவே எடுத்துக் கொள்வோம். கே.பி மிகவும் நல்லவர் என்றும் வைத்துக் கொள்வோம். கே.பி எந்தத் தவறும் இழைக்கவில்லை, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அவர் எந்தத் துரோகமும் இழைக்கவில்லை என்றும்கூட எடுத்துக் கொள்வோம். அப்படியென்றால் கே.பியால் இனி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று நாம் எடுத்துக் கொள்ள முடியுமா? இதற்கு விடைகாண்பதற்கு மீண்டும் சிங்கள அரசின் எதிர்ப்புரட்சி மூலோபாயத்தை நாம் புரட்டிப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

முற்றுமுழுதாக மரபுரீதியாக இடம்பெற்று முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்ற வன்னிப் போரில் சிங்களப் படைகள் வெற்றியீட்டியதை நாம் மறுக்கமுடியாது. 1996ஆம் ஆண்டு வரை ஒரு அரைமரபுப் படையாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, முல்லைத்தீவை மீட்டெடுத்த ஓயாத அலைகள் - 1 நிலமீட்பு நடவடிக்கையின் பின்னர் துரித கதியில் மரபுப் படையணியாகத் தோற்றம் பெற்று, ஜெயசிக்குறு படை நடவடிக்கையின் பொழுது சிங்களப் படையணிகளை திணறடித்தது. இதன் பின்னர் மரபுரீதியிலான வளர்ச்சியின் உச்சகட்டமாக வன்னிப் பெருநிலப்பரப்பை மீட்டெடுத்து, யாழ்ப்பாணத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக விளங்கிய ஆனையிறவைக் கைப்பற்றி, சிங்களப் படைகளுக்கு பெரும் சவாலாக மாற்றம்பெற்றிருந்தனர்.

இதன் பின்னர் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீதான கரும்புலி நடவடிக்கையின் ஊடாக சிங்கள அரசின் பொருண்மிய - படை வலிமையை சிதறடித்து, படைவலுச் சமநிலையின் ஊடாக அரசியல் ரீதியில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட்டமை வரலாறு. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை ஈட்டப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடம்பெற்ற மரபுவழி யுத்தம் என்பது முற்றுமுழுதாக நவீனயுக (modern) போர் யுக்திகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று ஏனைய நாடுகளில் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு அரசுகளும் நவீனயுக போர் யுக்திகளையே கையாண்டிருந்தன. எனினும் 2001 செப்ரம்பர் 11இற்குப் பின்னரான அமெரிக்காவின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் பின்நவீனயுக (post-modern) போர் யுக்திகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டிருந்தன. 2006ஆம் ஆண்டு யூலை மாதம் மாவிலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிங்கள அரசு தொடங்கிய பொழுது, இவ்வாறான பின்நவீனயுக போர் யுக்திகளையே சிங்களப் படைகள் களமிறக்கியிருந்தன. இந்தப் பின்நவீனயுக போர் யுக்திகளின் முன்னோடி நடவடிக்கையாகவே 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் துணைப்படைக் குழுக்கள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிழல் யுத்தத்தை (proxy war) சிங்கள அரசு முன்னெடுத்திருந்தது.

இவ்வாறாக சிங்கள அரசின் பின்நவீனயுக போர் யுக்திகள் வெறுமனவே களமுனையோடு மட்டும் மட்டுப்படுத்தபடவில்லை. மாறாக இந்தோனேசியாவில் இருந்து மாலைதீவு வரை தாக்குதல்களை நிகழ்த்தக்கூடிய கடல் வலிமையின் ஊடாகவே தனது யுத்த வெற்றியை சிங்கள அரசு உறுதிசெய்திருந்தது. தற்பொழுது சிங்கள அரசின் எதிர்ப்புரட்சி மூலோபாயம் என்பது முற்றுமுழுதாக புலனாய்வு நடவடிக்கைகளையும், உளவியல் நடவடிக்கைகளையும் (phsyc-ops) அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. தேசிய விடுதலைப் போராட்டங்களும், மார்க்சிய கிளர்ச்சிகளும் முறியடிக்கப்பட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு தசாப்தங்களாக கையாளப்படும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் மூலோபாயங்களுக்கும், யுக்திகளுக்கும் ஒப்பான எதிர்ப்புரட்சி மூலோபாயத்தையே தற்பொழுது சிங்கள அரசு கையாண்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக, ஈழப்போரின் விளைவாக ஊதிப்பெருத்திருக்கும் காலாட் படைகளின் (infantry) எண்ணிக்கையைக் குறைத்து, எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற காட்டுப்புற - நகர்ப்புற தேடியழிப்பு சிறப்புப் படையணிகளை(jungle-urban commando forces) கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகின்றது. மறுபுறம் தமிழீழ மக்களிடையே ஆயுதக் கிளர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழீழ தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, தமது காலாட்படை வீரர்களை உள்ளக பாதுகாப்புப் படையினராக (civil defence force) மாற்றியும், தமிழீழ மக்களிடையே சமூக சீர்கேடுகளை தூண்டிவிட்டு, தமிழ் துணைப்படைக் குழுக்களின் (paramilitary groups) ஆதிக்கத்தை மேலோங்க வைக்கும் நடவடிக்கைகளிலும் சிங்கள அரசு ஈடுபடுகின்றது.

அதேநேரத்தில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி வழங்கல்களை தடுத்து நிறுத்தக்கூடிய கடல்-வான்படைக் கட்டமைப்புக்களை அதிநவீன மயப்படுத்தும் நடவடிக்கைகளையும் சிங்கள அரசு முன்னெடுத்து வருகின்றது. இந்த வகையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்ற 1970களில், விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளோடு வாழ்ந்து, 1987ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வழங்கல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக விளங்கிய கே.பி, சிங்கள அரசைப் பொறுத்தவரை மிகவும் பெறுமதியான சொத்தாகவே கருதப்படுகின்றார்.

இதனையே கோத்தபாய ராஜபக்ச, கெஹெலிய ரம்புக்வெல, ரோஹான் குணரட்ண போன்றோரால் அண்மைக் காலங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உறுதிசெய்கின்றன. உண்மையில், கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றோரை விட தற்பொழுது சிங்கள அரசுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த ஒருவராகவே கே.பி திகழ்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால கெரில்லாத் தாக்குதல்களை தடுத்தல், மீண்டும் மரப்படையாக தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்ச்சியடைவதற்கான சூழலை இல்லாதொழித்தல், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே நிலவக்கூடிய போர்க்குணத்தை மட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கான நடுநாயகமாகவே கே.பியை சிங்கள அரசு பொக்கிசப்படுத்திப் பயன்படுத்தி வருகின்றது.

இதேநேரத்தில் புகலிட தேசங்களில் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகளை முறியடிக்கும் கருவியாகவும் கே.பியை சிங்கள அரசு கனக்கச்சிதமாகக் கையாண்டு வருகின்றது. இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்பீடத்துடன் தொடர்புகளைப் பேணிவந்த ஒருவர் என்ற வகையில், இறுதிக் கட்டத்தில் சிங்கள அரசு அரங்கேற்றிய கொடூர போர்க்குற்றங்கள், தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை நன்கு அறிந்துகொண்ட ஒருவராகவே கே.பி திகழ்கின்றார். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் படுகொலை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராளிகளும், பொறுப்பாளர்களும் சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டமை, முள்ளிவாய்க்கால் பூமியில் பல்லாயிரக்கணக்கான வன்னி மக்களுக்கு சிங்களப் படைகளால் சமாதி கட்டப்பட்டமை போன்ற பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை அறிந்த ஒருவராக அல்லது இவற்றுக்கு உடந்தையாக இருந்த ஒருவராகவே கே.பி திகழ்கின்றார்.

சிங்கள அரசை பன்னாட்டு அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தித் தண்டிப்பதற்கும், தமிழீழ மக்கள் இனவழித்தொழிப்பிற்கு ஆளாகியமையை நிரூபிப்பதற்கும் இவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரில் ரொபேட் ஓ பிளேக், விஜய் நம்பியார், எரிக் சுல்கைம், பா.சிதம்பரம் போன்றோருடன் தொடர்புகளைப் பேணிய ஒருவராகவே கே.பி திகழ்கின்றார். இதன் மறுபக்கத்தை நாம் புரட்டிப்பார்த்தால், சிங்கள அரசின் போர்க்குற்றங்களையும், தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கைகளையும் மூடிமறைப்பதற்கு கே.பி ஒருவரே போதும்! அதாவது வன்னிப் போரில் போர்க்குற்றங்கள் எவற்றையும் சிங்கள அரசு இழைக்கவில்லை என்று கே.பி கூறுவதே போர்க்குற்றங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்கிவிடும்.

இறுதிப் போரில் ஒரு பொதுமகனைக்கூடத் தமது படையினர் கொல்லவில்லை, ஒரு பெண்ணைக்கூட பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை, ஒரு கிராமத்தைக்கூட அழிக்கவில்லை என்று ராஜபக்ச சகோதரர்கள் தற்பொழுது வெளியிடும் கூற்றுக்களுக்கு சான்று பகர்வர்தற்கு கே.பி ஒருவரின் சாட்சியமே சிங்கள அரசுக்குப் போதும். இந்த வகையில், இதுவரை காலமும் கே.பியால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விட, இனிவரும் காலத்தில் ஏற்படப் போகும் பாதிப்புக்களே மிகவும் ஆபத்தானவையாக அமையும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறமுடியும். இதைப்புரிந்துகொண்டு இனியாவது கே.பியின் பின்னால் நிற்கும் அவரது குழுவினர் நடந்து கொள்ள வேண்டும் என்பதே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எதிர்பார்ப்பாகும். உறங்கிக் கொண்டிருப்பவர்களை தட்டியெழுப்பலாம்: உறங்கிக் கொண்டிருப்பது போன்று நடிப்பவர்களை???

- சேரமான்

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi.com/

Link to comment
Share on other sites

இந்த தலைப்பு நானும் இங்கு இணைத்து காணாமல் போய் இருக்கு....! யாழுக்கை பேய் பிசாசுகள் நடமாடுது போல கிடக்கு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.