Jump to content

சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி

இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அழைத்துவரப்பட்டார் கே.பி என்றும், அவர் சிறையில் வாடுவதாகவும், அவரை இலங்கை அரசு சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், கே.பி அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தார், கே.பி இவருடன் பேசினார் என அரசல் புரசலாக பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 9 பேர் அடங்கிய தமிழர்கள் குழு ஒன்று அவரைச் சென்று சர்வசாதாரணமாக பார்த்துவிட்டு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து கே.பி நடத்திய பத்திரிகையாளர் மாநாடும் அதன் விபரங்களையும் லக்பிம வார ஏடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எங்கு உள்ளார் என்பதை தென்னிலங்கை மக்கள் கூட அறியவில்லை. ஆனால் திடீரென கே.பி புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலருடன் வடக்கு – கிழக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து திரும்பிய கே.பி குழுவினர் கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளனர்.

பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வெள்ளை நிற காரில் வந்து இறங்கினார் பத்மநாதன். அவரின் பையை பாதுகாப்பு படையினரே சுமந்து வந்தனர். அவருக்கு தேவையான சிகரட்டையும் அவர்களே ஓடிச் சென்று வாங்கி வந்தனர் எனவும், கே.பியின் குழுவில் அங்கம் வகித்த 9 உறுப்பினர்களில் அவரது உறவினர்கள் சிலரும் இருந்ததாகவும் லக்பிம தெரிவித்துள்ளது. அது மேலும் குறிப்பிடுகையில்..

புலம் பெயர் தமிழர்கள் தற்போது இரண்டாகப் பிளவுற்றிருப்பதாக குறிப்பிடுகிறது. அதாவது கே.பியின் அபிமானிகள் என்று ஒரு பிரிவும், ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என ஒரு பிரிவாக, புலம்பெயர் தமிழர்கள் இரண்டாகப் பிரிவுற்றுள்ளனராம். இதில் பிரித்தானியாவில் உள்ள பலர் கே.பியோடு தொடர்ந்தும் தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசில் அங்கத்துவம் வகிக்கும் சிலரும் இதில் அடங்குவர்.

கே.பியை துருப்புச் சீட்டாக வைத்து இலங்கை அரசு தற்போது ஒரு புதிய அரசியல் யுத்தக் களத்தை திறந்துள்ளதே இப்போது தோன்றியுள்ள நிலையாகும். இதனை புலம்பெயர் தமிழ் சமூகம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதே பெரும் பாடாக உள்ளது. எங்கு குத்தினால் தமிழர்களுக்கு வலிக்கும் என்று தெரிந்து வைத்துள்ள இலங்கை அரசு, அதனை தற்போது பாவிக்கிறது. புரியவில்லையா? அதுதான் ""போராளிகளின் புனர்வாழ்வு"" ! இதனைப் பயன்படுத்தி துருப்புச் சீட்டாக கே.பியைக் களமிறக்கி இருக்கிறது இலங்கை அரசு. போராளிகளை வெளியே விட அவர்களுக்கு ஏதாவது கற்கை(கல்வி) கொடுக்கப்படவேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்துகிறதாம். அதனால் பெரும் நிதியை புலம்பெயர் நாடுகளில் திரட்டி அதனை இலங்கையில் பாவிக்க சில தமிழ் பிரமுகர்கள் நேரடியாகவே பிரயத்தனம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க, நாம் ஏற்கனவே எதிர் பார்த்தது போல கே.பிக்கு அரசாங்கம் ஒரு பொது மன்னிப்பை வழங்குவதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு அவர் அரசுக்கு விடுதலைப் புலிகளின் பெரும் பணத்தை வழங்கினார், மற்றும் கப்பல்களை இலங்கை அரசுக்கு வழங்கினார் என்று செய்திகளை சிங்கள மக்களிடம் திட்டமிட்டு இலங்கை அரசு பரப்பி வருகிறது. எனவே பிற்காலத்தில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலும் சிங்கள மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பாது. அத்தோடு விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி என்ற வாசகங்களையே இலங்கை அரசு தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது, இந்நிலையில் சர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகள் தம்மோடு இணைந்தே செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு தன்னை இனம் காட்டும் அபாயமும் உள்ளது.

அத்தோடு கே.பியின் வரவால், கருணா, ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், டக்ளஸ், மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இவர்கள் ஒரு பொது உடன்பாட்டிற்குள் வர சமீபத்தில் ஒன்றுகூடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கே.பி குழுவோடு சென்றிருந்த 9 பேரும், அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்ததாம், அந்தவேளை அங்கு வந்த அந்த குறிப்பிட்ட அமைச்சரை, தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக் கூற முற்பட்டவேளை, அவர் அதனைத் தவிர்த்து கையால் வணக்கம் மட்டும் சொன்னாராம், அத்தோடு இங்கு அரசியல் பேச வேண்டாம், நீங்கள் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை, அதனால் புனர்வாழ்வு பற்றி மட்டும் பேசினால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம்.

சரணடைந்த பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொன்றுள்ள இலங்கை அரசின் இராணுவம் போர்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் புரிந்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எனவே புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களுக்கு இடையே ஊடுருவி போர்குற்ற முன்னெடுப்புக்களைத் தடைசெய்யக்கூடும் அல்லது முன்னெடுக்கப்படும் விடயங்களை அறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முடியும். எனவே அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவோர் இது குறித்து மிகுந்த கவனம் கொள்வது நல்லது.

இலங்கை அரசின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து, தெளிவுபெறுதல், நல்லது. ஒரு சிலரின் சுயலாபம், மற்றும் அரசியல் நலனுக்காக எமது இனத்தின் மானத்தை அடகு வைக்கவேண்டாம். சூழ் நிலைக் கைதியாக இருக்கும் கே.பி குறித்தும் மிக அவதானமாகச் செயல்படுவதே நல்லது. இன்னும் சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ள கே.பி விரைவில் இந்த மாதிரியான தோற்றத்தையே தமிழ் மக்களிடம் பெறப்போகிறார்.

நன்றி - பதிவு இணையம்

Link to comment
Share on other sites

... முதல் முறையாக பதிவார், ஓர் ஆக்கபூர்வமான எழுத்தை பிரசுரித்திருக்கிறார்கள்! ... நன்றிகள் ... "து" பட்டம் கட்டி எழுதாமைக்கு!

... இந்த கேயாண்ணா பீனாவிற்கு புலத்தில் இந்த ஒன்பதுகளுக்கு பின் சில மாடு பிடித்துதிரியும் மாமாக்கள் இருக்கிறார்கள்! அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்! ... மக்கள் அவர்களிடம் சிலவல்ல பல கேள்விகளுக்கு விடை தேடுகிறார்கள், முடிந்தால் அவர்களை பகிரங்க மேடையில் ஏற்ற வேண்டும் ...

... இங்கு சில வதந்திகள், லண்டனிலுள்ள மாமாக்களின் அடையாளங்கள் தொடர்பாக ...

1) எங்கள் யாழ்கள பாண்டருடன் சேர்ந்த லிட்டிலெயிட் கும்பல்

2) தமிழர் நலன்புரி அமைப்பின் பொறுப்பான டாக்குத்தராம்.

3) டீபாம் டீவியில் வரும் டாக்குத்தரும் அடக்கமாம்.

4) சவுத்தோல் பகுதியிலுள்ள அப்புக்காததாம்.

5) லண்டனில் வாணவேடிக்கைகள் செய்த சில கவுண்ஸிலருகளாம்.

6) ....

... இந்த மாமாக்கள் சிலர் தங்கள் முன்னைய நடவடிக்கைகள் இங்கு தெரியவரின் தம் வேலைகள் அம்போ ஆகிவிடும் என்றுதான் சரணாகதி அடைந்தவர்கள் என்று கதைக்கிறாங்களடாப்பா?. இந்த மாமாக்களில் சிலர், சில முன்னால் புலிகளை பிளாக்மெயில் செய்வதாகவும் சொல்கிறார்களடாப்பா???? ...

... ஒரு உண்மையை இங்கு சொல்ல வேணும், உந்த கேயாண்ணா பீனாக்களை அம்பலப்படுத்துவதில் மாற்றுக்கறுத்து மாணிக்கங்கள் புலிகளை முந்திக்கொண்டு ஓடுகிறார்களாம்???? ...

Link to comment
Share on other sites

... மாமாக்களை கேயாண்ணா பீனாவை வைத்து பிடிக்கப்படுவதற்கு முன்னுக்கே, இங்கு லண்டனில் ஹம்ஷா நானா சிலரை பிடித்து விட்டாராம். அதுவும் போன வருசம் செப்ரம்பர் மாதத்துக்கு முன்னுக்கேயே இந்த மாமாக்கள் நானாவின் வலையில் வீழ்ந்து விட்டார்களாம்!!

... இங்கு வெம்பிலி பகுதியில் உள்ள ஒரு பீச்சுக்கு முன்னுக்கு வாற பாம் றெஸ்ரோரன்டில் தானாம் சாப்பாடு போட்டவராம் நானா!!! ... முதலில் அங்கு விருந்துக்கு போன மாமாக்கள் மறுத்தவர்களாம், தாம் அப்படிப் போகவில்லை என்று, ஆனால் மாமாக்களின் கெட்டகாலம் விருந்தை சிறப்பாக சீசீரிவி படம் பிடித்துட்டுதாம் ... எண்டுறாங்களடாப்பா!!!???!!!!!

Link to comment
Share on other sites

9 பேரும், அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்ததாம், அந்தவேளை அங்கு வந்த அந்த குறிப்பிட்ட அமைச்சரை, தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக் கூற முற்பட்டவேளை, அவர் அதனைத் தவிர்த்து கையால் வணக்கம் மட்டும் சொன்னாராம், அத்தோடு இங்கு அரசியல் பேச வேண்டாம், நீங்கள் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை, அதனால் புனர்வாழ்வு பற்றி மட்டும் பேசினால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம்.

இச்செய்தி 100% உண்மை!!! ... இதனை ஒன்பதுகளில் ஒன்றாக சென்ற ... முன்னால் திம்பு ரெலோ ... உறுதிப்படுத்தினாராம்! :)

Link to comment
Share on other sites

... மாமாக்களை கேயாண்ணா பீனாவை வைத்து பிடிக்கப்படுவதற்கு முன்னுக்கே, இங்கு லண்டனில் ஹம்ஷா நானா சிலரை பிடித்து விட்டாராம். அதுவும் போன வருசம் செப்ரம்பர் மாதத்துக்கு முன்னுக்கேயே இந்த மாமாக்கள் நானாவின் வலையில் வீழ்ந்து விட்டார்களாம்!!

... இங்கு வெம்பிலி பகுதியில் உள்ள ஒரு பீச்சுக்கு முன்னுக்கு வாற பாம் றெஸ்ரோரன்டில் தானாம் சாப்பாடு போட்டவராம் நானா!!! ... முதலில் அங்கு விருந்துக்கு போன மாமாக்கள் மறுத்தவர்களாம், தாம் அப்படிப் போகவில்லை என்று, ஆனால் மாமாக்களின் கெட்டகாலம் விருந்தை சிறப்பாக சீசீரிவி படம் பிடித்துட்டுதாம் ... எண்டுறாங்களடாப்பா!!!???!!!!!

இன்னும் சில உண்மைகளையும் தெரிந்து கொண்டீர்கள் எண்றால் பூரணமாக இருக்கும்... இங்கை ஏற்படுத்த பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் காரண கர்த்தா யார், யாரால் திட்டமிட்டு குழப்பபட்டது, என்பனவும், அவர்களின் நீண்ட திட்டமிடல்களையும் புரிந்து கொள்ளலாம்...!

யாழ் களத்துக்கு அடிக்கடி வருகை தரும் டி பி எஸ் ஜெ யில் இருந்து பலருடனும் KP யும் , இந்திய , இலங்கை உளவுப்பிரிவும் சேர்ந்து நடத்திய தமிழர்களை பிரிக்கும் வேலையை புரிந்து கொள்ளல் அவசியமானதும் கூட...

http://www.pathivu.com/news/7319/60//d,article_full.aspx

இந்த கட்டுரையில் இருப்பவை அனைத்தும் உண்மையானவை... ஆனால் இந்தக்கட்டுரை எனக்கு தெரிய யாழில் இரண்டு முறை வேறு வேறானவர்களால் இணைக்கப்பட்டு நிர்வாகத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது... காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை... ஆகவே நீங்கள் அங்கு போய் படித்துக்கொள்ளுங்கள்...

Link to comment
Share on other sites

இச்செய்தி 100% உண்மை!!! ... இதனை ஒன்பதுகளில் ஒன்றாக சென்ற ... முன்னால் திம்பு ரெலோ ... உறுதிப்படுத்தினாராம்! :)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32079

&

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72904

Link to comment
Share on other sites

... மார்ச் 30, லண்டன் ஹீத்ரொ விமான நிலையம், இரவு 9.30 மணி, கொழும்பு செல்லும் சிறிலங்கன் எயார் லைன்ஸுக்காக காத்திருக்கும் லவுண்ஞில், ஒரு கண்ணாடி போட கறுத்த உருவத்துக்கு அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள்(பக்கத்தில் இருப்பவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு), உரையாடல்கள் ஆங்கிலமும், தமிழும் மாறி மாறி ... பின்பு அவ்வுருவம் விமானத்துக்குள் சென்று உட்கார்ந்ததாம், அமோக வரவேற்பாம்...

... அவ்வுருவம், விமானம் கொழும்பு கட்நாயக்கா விமான நிலையத்தை அடைந்தவுடன், எல்லோரிடமும் சேர்ந்து இறங்கியதாம், ஆனால் வெளியில் வரும்போது இராஜ மரியாதைகளுடன் வேறு வழியால் கூட்டி செல்லப்பட்டாராம்! ...

அவ்வுருவம் ... டீபாம் டீவியில் உலாவும் டாக்குத்தராம் என்று சொல்லுகிறாங்களடாப்பா!!!!!!!

இந்த உருவத்தையும் எம் பத்திரிகைகள், இனையத்தளங்கள் ... பேட்டி எடுத்து ... உண்மையை அம்பலப்படுத்தலாமே????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களிடம் கேட்பது...

எவராயினும் என்னாவாவது செய்யட்டும்

கொஞ்ச காலத்துக்கு அவர்களை விட்டுவிடுங்கள்

உண்மை வரட்டும்

நல்லது நடக்கட்டும்

கெட்டது தெரியட்டும்

முதலில் அவர்கள் யார்என்பதை மக்களுக்கு இனம் காட்டட்டும்

உண்மை முகம் தெரியவரட்டும்

எங்கே போய் என்ன ஆட்டம் போட்டாலும் மக்களுக்கு முன் வந்தே ஆகவேண்டும்

எமது கையிலேயே இறுதி முடிவு...

வரவிடுங்கள்

நன்றி

Link to comment
Share on other sites

கே பி யை வெளிவிவகாரத்துக்கு பொறுப்பாக யார் அறிவித்தது?

Link to comment
Share on other sites

கே பி யை வெளிவிவகாரத்துக்கு பொறுப்பாக யார் அறிவித்தது?

கிளிநொச்சி விடுப்பட்ட போது ஒரு கடிதம் வாங்கினவர்... இந்தியாவுடன் பேச அழைக்கிறார்கள் அனுமதி வேணும் எண்டு... அந்த கடிதத்தை வைத்து பிரகடனப்படுத்திக்கொண்டார்...

Link to comment
Share on other sites

தயா

கே.பி க்கு மட்டும் தானோ கடிதம் கொடுக்கப்பட்டது.

அல்லது 2002 வரை கே.பி யுடன் வேலை செய்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டதா?

மீண்டும் வேலை செய்வதற்கு.

Link to comment
Share on other sites

கிளிநொச்சி விடுப்பட்ட போது ஒரு கடிதம் வாங்கினவர்... இந்தியாவுடன் பேச அழைக்கிறார்கள் அனுமதி வேணும் எண்டு... அந்த கடிதத்தை வைத்து பிரகடனப்படுத்திக்கொண்டார்...

தாய்லாந்தில் கே பி கைது செய்யப்பட்டார் என்ர செய்தியும் உடனே தாய்லாந்துக்கு ஓடி சென்ற வடக்கத்திய வெளிவிவகர அமைச்சரின் செய்தியும் கிளிநொச்சிக்கு தெரியாதோ?

Link to comment
Share on other sites

தாய்லாந்தில் கே பி கைது செய்யப்பட்டார் என்ர செய்தியும் உடனே தாய்லாந்துக்கு ஓடி சென்ற வடக்கத்திய வெளிவிவகர அமைச்சரின் செய்தியும் கிளிநொச்சிக்கு தெரியாதோ?

KP எண்ட பெயரிலை அண்று கைது செய்யப்பட்டது வேறு ஒருவர்...! அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஆங்கில இணையம் நடத்தியவர்... அவர் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு இப்போ ஐரோப்பிய நாடு ஒண்றில் இப்போது தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவான இணையம் ஒண்டை நடத்துபவர்...

தயா

கே.பி க்கு மட்டும் தானோ கடிதம் கொடுக்கப்பட்டது.

அல்லது 2002 வரை கே.பி யுடன் வேலை செய்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டதா?

மீண்டும் வேலை செய்வதற்கு.

எனக்கு தெரிய KP க்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டது...! KP யுடன் வேறு ஆக்கள் எல்லாம் நீக்கப்பட்டார்கள் என்பது எனக்கு புதிய தகவல்...! அப்படி நான் யாரையும் அறியவில்லை...

Link to comment
Share on other sites

.... கேபியை ஒதுக்கியதற்கு பின்னர், கேபி கண்காணிக்கப்படவில்லை, அவர்/ அவரின் மனைவி/பினாமிகளின் பெயரில் இருந்த சொத்துக்கள் பல வருடங்களாகியும் மாற்றப்படவில்லை! பெயரில், அவரின் நிஜ உருவம் தெரியாது, இறுதிக்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் ... விடப்பட்ட பிழைகளை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

Link to comment
Share on other sites

.... கேபியை ஒதுக்கியதற்கு பின்னர், கேபி கண்காணிக்கப்படவில்லை, அவர்/ அவரின் மனைவி/பினாமிகளின் பெயரில் இருந்த சொத்துக்கள் பல வருடங்களாகியும் மாற்றப்படவில்லை! பெயரில், அவரின் நிஜ உருவம் தெரியாது, இறுதிக்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் ... விடப்பட்ட பிழைகளை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

உண்மையை சொன்னால் அவருடன் கூட வேலை செய்தவர்களால் அவர் விலக்க பட்ட பின்னர் கூட அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்து இருந்தார்கள்... அவர் பிழையாக செயற்படுவார் எண்று யாரும் நினைத்து கூட பார்த்து இருக்கவில்லை... அதுதான் உண்மை...!

KP எந்த விதமான பெரிய பிரச்சினையாலும் விலக்கி வைக்கப்படவில்லை... நீண்டகாலமாக அதிகப்படியான செலவுகளும் அதுக்கான கணக்குகளை கொடுக்காமையும் தான், நீயே இப்படி செய்தால் உனக்கு கீழை இருப்பவங்கள் எப்படி ஒழுங்கா இருப்பாங்கள் எண்டு கேட்டு அவரிடம் இருந்து பொறுப்புக்கள் வாங்கப்பட்டன...!

தாய்லாந்தில் நடந்த பேச்சுக்களின் போது கருணாவுக்கும் KP க்கும் நேரடியாக ஏற்பட்டு இருந்த தொடர்பு தொடர்ந்ததை யாரும் தெரிந்து கொள்ள இல்லை... KP யின் மாற்றத்துக்கு கருணாவின் பங்கு அளப்பரியது...

KP மட்டும் அல்ல வேறு யாராக இருந்தாலும் நீங்கள் விசுவாசமாக தான் இருக்கிறார்களா எண்று பார்க்க யாராலும் பரீட்சை வைத்து கொண்டு இருக்க முடியாது... இருந்த ஆள் பற்றாக்குறைக்குள் இதவேறை செய்து இருக்க வேண்டும் எண்டு சொல்வது நடக்க கூடிய விடயமும் இல்லை...

Link to comment
Share on other sites

தாய்லாந்தில் நடந்த பேச்சுக்களின் போது கருணாவுக்கும் முP க்கும் நேரடியாக ஏற்பட்டு இருந்த தொடர்பு தொடர்ந்ததை யாரும் தெரிந்து கொள்ள இல்லை... முP யின் மாற்றத்துக்கு கருணாவின் பங்கு அளப்பரியது...

கருணா, கே.பி என்பர்களுக்கு இணையாக பலர் புலத்தில் திரைமறைவில் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

கருணா, கே.பி என்பர்களுக்கு இணையாக பலர் புலத்தில் திரைமறைவில் இருக்கின்றார்கள்.

அடையாளப்படுத்துவது கொஞ்சம் கடினமாக இருப்பது மிகவும் உண்மை... காலம் எல்லா பாம்புகளையும் வெளியில் கொண்டு வரும் எண்டு நம்புகிறன்... KP க்கு ஒருவருசம் எண்டால் இவர்களுக்கும் எண்டும் காலம் இருக்கும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.