Jump to content

கரிக்கட்டை - ஒரு பக்க கதை


Recommended Posts

வன் ஓடி கொண்டிருந்தான்.

அவர்கள் துரத்தி கொண்டிருந்தார்கள்.

அதிகாலை மூன்று மணியை தாண்டி இருந்தது.

வீதியில் ஆளரவமே இல்லாத அந்த வேளையில்.. இவர்களின் ஆடு புலி ஆட்டம்.

அவர்கள் மூன்று பிரிவாக வந்திருந்தார்கள்.

அவனும் சளைக்கவில்லை.. அவர்களுக்கு தண்ணி காட்டி ஓடி கொண்டே இருந்தான்.

தலைநகரில் அந்த வேளையில் அவர்களின் அலைபேசிகள் விட்டாமல் கத்தி கொண்டிருக்க... இவன் ஓடி கொண்டே இருந்தான்.

இவர்களிடம் உயிரோட பிடிபடக்கூடாது. இது மட்டும் தான் இப்போ அவன் நினைக்கும் ஒரே எண்ணம்.

இவனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை.

இவன் உடலை, ஆக குறைந்தது இவன் முகத்தையாவது சேதமில்லாமல் எடுக்கவேண்டும் இது அவர்களுக்கான ஒரே கட்டளை.

என்னை வைத்து,

என் உருவத்தை வைத்து,

என் மக்களுக்காக வெடிக்க இருக்கும்,

விடுதலையை விரைவுபடுத்த காத்திருக்கும் தோழர்களை பிடிக்க விடக்கூடாது என்பது தான்.. அவனது கவலை.

இன்றைய சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் இனி இவன் கிடைக்கமாட்டான் என்பது அவர்களது கவலை.

ஆடு புலி ஆட்டம் தொடர்கிறது.

அந்தோ !...அவன் சுற்றி வளைக்கபட்டு விட்டான்.

ஐயோ.!. சக்கை கூட இல்லையே இப்போ வெடிக்க..

குப்பி கடித்தால் கூட, என் முகத்தை வைத்து இடங்களை பிடித்து விடுவார்கள்..

என்ன செய்ய.. என்ன செய்ய..

தொடர்பு எடுக்க கூட நேரமில்லை. நான் போனாலும் பரவயில்லை. அவர்கள் வாழ வேண்டும்..

ஆக குறைந்தது. எம் மக்களுக்காக வெடிக்கும் வரை அவர்கள் வாழ வேண்டும்..

என்ன செய்ய.. என்ன தான் செய்ய..

அப்பாடி.. ஒரு வெதுப்பகம் (பேக்கரி).

காலை பாணுக்காக மும்முரமாக இருந்தது..

அவன் உள்ளே நுழைந்து விட்டான்.

அவர்களும் உள்ளே வந்து விட்டார்கள்.

முழு இடமும் தேடியாச்சு..அவனை காணவில்லை..

கடைசியாக..

ஒரு வழியாக அவர்கள் அவனை கண்டுபிடித்து விட்டார்கள்.

கரிக்கட்டையாக..

அந்த கரி அவர்கள் முகத்திலும் அப்பி இருந்தது.

அன்றைய நாளின். தலைநகரின் ஒரு பகுதி காலை பாணுக்கு மட்டும் அல்ல..

எம் தாயக மக்களின் விடுதலைக்கும்..

அவன் விறகானான்.

குறிப்பு: இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது. இந்த மானமாவீரனின் தியாகத்தால் தான் தலைநகரின் ஒரு மிகபெரும் தாக்குதல், எந்த பிசகும் இன்றி நிறைவேறியது. இந்த மறைமுக மாவீரனது பெயர் வெளிபடுத்தபடாமையால், இடம் மற்றும் பெயரை தவிர்த்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ப்பணிப்புகள் பல விதம் அதில் இதுவும் ...ஒரு விதம்

நன்றி .பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்தனை தியாகங்களும் வீணாகி விட்டதே :lol:

Link to comment
Share on other sites

:lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனை தியாகங்களும் வீணாகி விட்டதே

ஓம் ! தியாகங்களைவிட துரோகங்கள் அதிகமானதால்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிக்கும் போதே உள்ளம் நடுங்கறதே, அவர்கள் நடுங்காமல் முடிவுகளை எடுத்து போராட்டத்தை முன்நகர்த்தியவர்கள், அவர்கள் நகர்வால் சர்வதேசம் நோக்கி நகர்ந்துள்ள போராட்டத்துக்கு நாம் என்ன செய்ய போகிறோம். எங்களிடமே தலைவர் நம்பிக்கையுடன் போராட்டத்தை ஒப்படைத்திருக்கிறார்.

அத்தனை தியாகங்களும் வீணாகி விட்டதே

ஓம் ! தியாகங்களைவிட துரோகங்கள் அதிகமானதால்! :D

தியாகங்கள் ஒருபோதும் வீனாகாது நான், நீங்கள் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர் நினைத்தால், போகவேண்டிய தூரம் அதிகமாக இருந்தாலும் எமது இலக்கு அடையக்கூடிய ஒன்றே. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகங்கள் ஒருபோதும் வீனாகாது

நன்றி .பகிர்வுக்கு. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள் மூட்டிய நெருப்பு எங்கள் உள்ளங்களில் எரிந்து கொண்டிருக்கும் வரை தமிழீழம் என்ற இலட்சியம் அணையாது.

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

ஊக்கம் தந்த கருத்துகளுக்கு நன்றி.

கட்டி அழ கல்லறை கூட இல்லாத இந்த கரும்புலி வீரர்களின் கனவு நிச்சயம் நனவாகும்.

"தேசத்துக்காய் எங்கெங்கும்" வெடித்த எங்கள் மறைமுக கரும்புலிகளை மனசிலே நிறுத்துங்கள்.

அவர்கள் பெயர்கள் கூட இன்னும் உலகத்துக்கு தெரியாமல் ஏன் பெற்றோருக்கு கூட தெரியாமல் இந்த மண்ணுக்காக தங்களை சாம்பாலாக்கியவர்கள்.

அவர்களின் உண்மையான தியாகமும், அவர்களின் பெயர்களும் வெளியில் வர வேண்டும் என்றால் எங்களுக்கு நாடு வேண்டும்.

அதற்காக எல்லாரும் ஒற்றுமையாக போராடுவோம் என்று இந்த நாளில் அவர்கள் மீது உறுதி கொள்ளுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரிக்கட்டையானாலும் காலத்தால் அழியாதவர்கள். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு விழிகளில் நீர்வரவைத்தபதிவு. நன்றிகள் அபிராம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவுகளால் பல அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன

அவை அவையாகவே இருக்கட்டும்

அவை கதைகள் அல்ல

நிஐங்கள்

எனக்கு இது போன்ற கருத்துக்களை அல்லது கதைகளை வாசிக்கும்போது....

அது கரும்புலிகளை மேலும் மேலும் ....

இப்படி செய்திருக்கலாம்

அப்படி செய்திருக்கலாம்

இப்படி செய்திருந்தால் அது இன்னும் சிறப்பான கொடையாக இருந்திருக்கும்...................

என்பது போன்று அவர்களது அதி உச்ச தியாகத்தை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.

தயவு செய்து உண்மையென்றால் உண்மைச்சம்பவம் என்று எழுதுங்கள்.

அதை அப்படியே எழுதுங்கள்.

கதை என்றால் கதை என்று எழுதுங்கள்

கற்பனையும் உண்மையையும் கலந்தது என்று அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தவேண்டாம்.

தங்கள் உணர்வுகளை மதிக்கின்றேன்

எனது உணர்வையும் மதிக்குமாறு அவர்களின்பால் நானும் தாங்களும் வைத்திருக்கும் அன்பின்பால் கேட்கின்றேன்.

Link to comment
Share on other sites

எமது உறவுகளால் பல அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன

அவை அவையாகவே இருக்கட்டும்

அவை கதைகள் அல்ல

நிஐங்கள்

எனக்கு இது போன்ற கருத்துக்களை அல்லது கதைகளை வாசிக்கும்போது....

அது கரும்புலிகளை மேலும் மேலும் ....

இப்படி செய்திருக்கலாம்

அப்படி செய்திருக்கலாம்

இப்படி செய்திருந்தால் அது இன்னும் சிறப்பான கொடையாக இருந்திருக்கும்...................

என்பது போன்று அவர்களது அதி உச்ச தியாகத்தை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.

தயவு செய்து உண்மையென்றால் உண்மைச்சம்பவம் என்று எழுதுங்கள்.

அதை அப்படியே எழுதுங்கள்.

கதை என்றால் கதை என்று எழுதுங்கள்

கற்பனையும் உண்மையையும் கலந்தது என்று அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தவேண்டாம்.

தங்கள் உணர்வுகளை மதிக்கின்றேன்

எனது உணர்வையும் மதிக்குமாறு அவர்களின்பால் நானும் தாங்களும் வைத்திருக்கும் அன்பின்பால் கேட்கின்றேன்.

நீங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் உண்மையான உணர்வுக்கு தலைவணங்குகிறேன். உண்மையை உண்மையாக எழுதுவதற்குரிய காலம் கனியாமையால் உண்மையை கதையாக எழுத வேண்டி உள்ளது.

அவர்களின் தியாகத்தை ஒப்பிட முடியாது. கதை வடிவிலேனும் அவர்களின் தியாகம் எங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் எழுதுகிறோம். கற்பனை என்று, இதில் எங்கள் புனை கதைகளை கலக்குவதற்கு, அவர்களின் தியாகத்தின் பெயரால், எங்கள் மனம் ஒரு போதும் இடம் தராது. நாங்கள் கதாசிரியர்கள் அல்லர். அவர்களின் தியாகம், இன்றைய கால கட்டத்தில் எங்கள் மக்களை ஒன்றிணைக்க, விடுதலையின் விலையை உணர்த்த, பயன்படடுமே என்று தான் கதை வடிவில் தர முயற்சி எடுத்தோம்.

அவர்கள் சுயத்தை அழித்தவர்கள். தமிழீழம் காணும் வரை தங்கள் விவரம் உலகுக்கு தெரியவராது என்பதை நன்கு அறிந்தவர்கள். தேசத்தின் புயல்கள் அவர்கள்.

இந்த சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் இன்னமும் சிங்கள நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ளமையாலும் , சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாலும், இந்த சம்பவங்கள் தொடர்பான பெயர்கள், இடங்களை தவிர்க்க/மாற்ற வேண்டிய கட்டாய சூழல் எங்களுக்கு ஏற்பட்டது. இது உங்கள் மனசை பாதித்தது என்றால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

ஈழப் போரில் மாவீரர்களில் மரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றை சொல்லி நிற்கும், அதிலும் கரும்புலிகளின் ஈகை சொல்லிலடங்கா.... பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

அபிராம் பிகிர்வுக்கு நன்றி. மேலும் உங்கள் எழுத்தால் உள்ளே இருக்கும் போராளிகள் பாதிக்கப்படாமல் எழுதும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம் பிகிர்வுக்கு நன்றி. மேலும் உங்கள் எழுத்தால் உள்ளே இருக்கும் போராளிகள் பாதிக்கப்படாமல் எழுதும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன்.

இதுதான் எனது கருத்தும்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கனவுகள் பலிக்குமா?. நம்பிக்கை முள்ளிவாய்க்காலோடு போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதாசிரியர் அபிராம். உங்களது எழுத்து நடை மிகவும் அழகாக இருக்கிறது. அந்த அப்பழுக்கில்லாத, எல்லாவற்றையும் துறந்து மற்றவர்களின் நலனையே கருத்தாக கொண்ட ஒருவனின் அழியாத தியாகத்தை, அவனது கடைசி எண்ணங்களை, மிகவும் அழகாக வடித்திருக்கிறீர்கள்.

சருகுகள் வீழ்ந்தால் தான் மரத்துக்கு உரம் கிடைக்கும். முப்பத்தாயிரம் சருகுகள் தமிழ் ஈழம் என்ற மரத்திற்கு உரமேற்றிவிட்டு சென்றிருக்கின்றன.

இந்த தியாகத்தால் வளர்ந்த மரத்தை வீழ்த்துவது முடியாத காரியம். காலம் வரும், நாம் சென்று கூடு கட்டும் காலம் திரும்பி வரும்.

இவர்களின் கனவுகள் பலிக்குமா?. நம்பிக்கை முள்ளிவாய்க்காலோடு போய்விட்டது.

கந்தப்பு ஐயா, எனக்கு தமிழ் ஈழத்தில் முள்ளிவாய்க்கால் ஜெனோசைட் பின் நம்பிக்கை இன்னும் கூடியது.

இந்த ஜெனோசைட் விடயத்தை ஸ்ரீ லங்கா காரன் முடக்காமல் உலகிற்கு கூறும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. நாம் துவண்டிருப்பது சரியல்ல.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

என்னைப் பொறுத்தவரையில்.............. எதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ................ ஆனால், எம் மாவீரர்கள், வீரமறவர்கள் செய்த உண்மையான அளப்பரிய தியாகங்கள் என்றைக்கும் வீண்போகாது என்ற அசைக்க முடியாத பெருநம்பிக்கை இருக்கின்றது.

அவர்களின் கனவு என்றாவது ஒருநாள் ஈடேறியே ஆகும். அதை வீணடிக்க யாராலும் இயலாது.

இறுதிவரை தொடரும் இலட்சியப் பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொள்வோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பார்த்தீபன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.