Jump to content

கரும்புலிகள்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகள்.....

கரும்புலிகள் நினைவுக் கவிதை....

கவிதை - இளங்கவி

தமிழீழக் கடலின்

ஒவ்வோர் நீர்த்துளியும்

தன்னில் எரிந்த கரும்புலியின்

கதை சொல்லக் காத்திருக்கு........

எதிரியிடம் சிக்கி

மானம் இழந்ததனால்

அது விடும் கண்ணீர்த்துளிகள் சேர்ந்து

ஆழிப்பேரலையாகக் காத்திருக்கு......

நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து

அதிலே எதிரியைப் பலிகொடுத்து

எங்கள் கடலை எதிரி தொடாமல்

எங்களுக்காய் வைத்திருந்த

இரும்பு மனிதர்கள்

எங்கள் கரும்புலிகள்........

பிரயாணம் தொடங்கிவிட்டால்

அவனுக்கு புரிவதெல்லாம்

ஈழ விடுதலை......

தெரிவதெல்லாம்

எதிரியின் இலக்கு.......

அவன் இலட்சியம்

தான் எரிந்து எதிரியை எரிப்பது.....

தன் வாழ்வுக்காய்

தன் இனத்தை எரிப்பதல்ல....

காதல், வீரம், பாசம், சோகம்

எல்லாம் ஒன்றாய் சேர்த்த

ஓர் உறுண்டை அவன்.....

அது தனி மனிதருக்காய் அல்ல....

தான் பிறந்த மண்ணுக்காய்....

எரிந்த மனிதர்கள் எலும்பில்

குளிர்காய அவன் விரும்பியதில்லை.....

புலிதான் அவன்

ஆனாலும் பொறுக்கிப் போடப்படும்

இறைச்சி தின்னும்

புலியாய் இருக்கவில்லை.....

புல் மட்டும் உண்ணும்

பசுவாகவே இருந்தான்......

நாட்டுக்காய் தன் உயிரையே

பாலாகக் கொடுத்தவன்.....

செம்மொழி மாநாட்டின்

(அ)சிங்கமாய் இருக்க

அவன் விரும்பியதே இல்லை....

தன் மொழி உயிரோடிருக்க

தன்னுயிரை உருக்கி

படிக்கல்லாய்க் கட்டியவன்.....

அவனின் இலக்கணங்கள்

சுய நலமென்றால் என்ன என்றால்

பதில் தெரியாது முழிப்பான்.......

போர் என்ற சொல் கேட்க முதல்

அவன் துப்பாக்கி

குண்டுகளால் நிரம்பிவிடும்.....

இரவுத் தூக்கமின்றி

ஆந்தைபோல் விளித்திருப்பான்....

ஆனாலும் காலைப் பொழுதாகிவிட்டால்...

வாசல் நோக்கி அவன் கண்கள்

தபால்காரனை நோக்கியே இருக்கும்

காதலியிடமிருந்து கடிதத்துக்கல்ல.....

அம்மாவின் பாசமடலுக்கல்ல....

தலைவனிடமிருந்து மட்டும்

தன் யாத்திரைக்கு

திகதி குறிக்கும் மடலுக்காக மட்டுமே.....

மரண பயத்துக்காய்

தினம் தினம் மாண்டுபோகும்

மனிதரின் மத்தியில்......

மண்ணுக்காய் தான் மரணிக்கப் போகும்

தாமதிக்கும் கணங்களுக்காய்

தினம் தினம் செத்த

ஓர் தியாகக் குழந்தையவன்.....

இவன் உயிரை உருக்கி

நெருப்பில் காய்ச்சிய இரத்தத்தில்

உல்லாசக்குளியல் போடும்

சுயநலக் குப்பைகள்

கரும்புலியின்

தியாக வெம்மையில் கருகும்

தேதியொன்று வரும்......

அங்கே அக்கினனிப் பறவைகளாய்

மீண்டெழும் தமிழினத்தின்

விடுதலைக் கரங்கள்

பாதையோரம் காத்திருந்து வணங்கும்

ஈழ விடுதலைக்கு

பாதையமைத்துத் தந்தவனுக்காய்.......

இளங்கவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள்.....

கரும்புலிகள் நினைவுக் கவிதை....

கவிதை - இளங்கவி

செம்மொழி மாநாட்டின்

(அ)சிங்கமாய் இருக்க

அவன் விரும்பியதே இல்லை....

தன் மொழி உயிரோடிருக்க

தன்னுயிரை உருக்கி

படிக்கல்லாய்க் கட்டியவன்.....

இவன் உயிரை உருக்கி

நெருப்பில் காய்ச்சிய இரத்தத்தில்

உல்லாசக்குளியல் போடும்

சுயநலக் குப்பைகள்

கரும்புலியின்

தியாக வெம்மையில் கருகும்

தேதியொன்று வரும்......

இளங்கவி.

இளங்கவியே பாராட்டுகள்.

அந்த நாள் வருமென்று நம்புவோம். நம் பணி தொடர்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து

அதிலே எதிரியைப் பலிகொடுத்து

எங்கள் கடலை எதிரி தொடாமல்

எங்களுக்காய் வைத்திருந்த

இரும்பு மனிதர்கள்

எங்கள் கரும்புலிகள்........

நன்றி இளங்கவி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவியே பாராட்டுகள்.

அந்த நாள் வருமென்று நம்புவோம். நம் பணி தொடர்வோம்.

நொச்சி

உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து

அதிலே எதிரியைப் பலிகொடுத்து

எங்கள் கடலை எதிரி தொடாமல்

எங்களுக்காய் வைத்திருந்த

இரும்பு மனிதர்கள்

எங்கள் கரும்புலிகள்........

நன்றி இளங்கவி!

suvy

கரும்புலிகளின் தியாகங்களைச் சொல்ல வார்த்தைகள் போதாது......

மண்ணை நெருங்கி வந்த பகையை எரித்த அக்கினிக் குஞ்ச்சுகள்....

கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்மொழி மாநாட்டின்

(அ)சிங்கமாய் இருக்க

அவன் விரும்பியதே இல்லை....

தன் மொழி உயிரோடிருக்க

தன்னுயிரை உருக்கி

படிக்கல்லாய்க் கட்டியவன்.....

எனக்கு பிடித்த வரிகள் ....தொடரட்டும் உங்கள் கவிதைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பிடித்த வரிகள் ....தொடரட்டும் உங்கள் கவிதைகள்

புத்தன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகள் நினைவுக் கவிதை தந்த இளங்கவி அவர்களுக்கு நன்றிகள்...

குட்டி

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.

கரும்புலிகள் என்றென்றுமே தமிழர் மனங்களை விட்டு மறையாதவர்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளின் தியாகத்தை ஒப்பிடவே முடியாது ... கவி படைத்த இளங்கவிக்கு எனது பாராட்டுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகளின் தியாகத்தை ஒப்பிடவே முடியாது ... கவி படைத்த இளங்கவிக்கு எனது பாராட்டுகள்

ரதி

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ரதி....

உலகத்தில் எதுவுமே அவகளின் தியாகத்திற்கு ஈடாகாது... அவர்களைப் பற்றிய நினைவுகளின் எண்ண ஓட்டங்களே என் வரிகளாய்....

Link to comment
Share on other sites

மரண பயத்துக்காய்

தினம் தினம் மாண்டுபோகும்

மனிதரின் மத்தியில்......

மண்ணுக்காய் தான் மரணிக்கப் போகும்

தாமதிக்கும் கணங்களுக்காய்

தினம் தினம் செத்த

ஓர் தியாகக் குழந்தையவன்.....

தன்னின மக்களுக்காய் தான் மரணிக்கப் போகும்

தாமதிக்கும் கணங்களுக்காய்

தினம் தினம் செத்த

ஓர் தியாகக் குழந்தையவன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னின மக்களுக்காய் தான் மரணிக்கப் போகும்

தாமதிக்கும் கணங்களுக்காய்

தினம் தினம் செத்த

ஓர் தியாகக் குழந்தையவன்.....

ஆராவமுதன்

பொதுவாகவே மனிதர் எல்லோருக்கும் மரணபயம் அப்படியான மரணபயத்தை எண்ணி மனதளவில் சாகும் மனிதரின் மத்தியில் ''மண்ணுக்காய் தான் மரணிக்கப்போகும்....'' என்பது தன் நிலம், அந்த நிலத்தில் வாழும் தன் இனத்துக்காக என்பதையே குறிக்கிறது, அதை நீங்கள் குறிப்பிட்டதைப் போல தன்னின மக்களுக்காய் என்று நேரிடையாகச் சொல்ல நான் நினைக்கவில்லை....

நீங்கள் குறிப்பிட்ட வரிகளை புரிந்திராதவர்களுக்கும், புரிவதில் சிரமப்பட்டிருந்தவர்களுக்கும் நானே அதை விளக்கும் முகமாக உங்கள் விமர்சனம் அமைதிருந்ததில் எனக்கு மகிழ்ச்சி...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.