Jump to content

முதலில் உணருங்கள் பின்னர் நம்புங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் உணருங்கள்

பின்னர் நம்புங்கள்

நீங்கள் ஒரு கடைக்கு புடவை வாங்க அல்லது கோட் சூட் வாங்கச் செல்கிறீர்கள். கடைக்காரரிடம் நல்ல தரமான துணிகளை காட்டச் சொல்கிறீர்கள். கடைக்காரரும் தனக்கு தெரிந்த அளவிற்;கு துணிகளை எடுத்து போடுகின்றார். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? துணியை தொட்டு பார்ப்பீர்கள். ஏன் அதனை தொட்டு பார்க்க வேண்டும்? கடைக்காரன் நல்ல துணி என்று கூறினாலும், அதை தொட்டுப் பார்த்தால்தான் உங்களுக்கு ஆறுதல் வருகிறது. ஆமாம் நல்ல துணிதான் என்ற திருப்தி ஏற்படுகிறது.

இன்னுமொரு உதாரணத்தை பார்ப்போம். மகன் பாடசாலையில் இருந்து தேர்வு முடிவுகளை எடுத்து வருகிறான். நீங்களும் “தேர்வு முடிவுகள் எப்படி” என கேட்கிறீர்கள். அதற்கு மகனும் “நான் தேர்வு அடைந்து விட்டேன், எல்லாமே மிக திறமாக உள்ளது” என கூறுகிறான். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? ரிப்போட் காட்டை காட்டு என்பீர்கள். உங்களது கண்களால் பார்த்தால் தான் உங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது.

இவ்வாறு நாம் உலகத்து விடயங்கள் எல்லாவற்றையும் தொட்டு, பார்த்து, நுகர்ந்து உறுதி செய்து கொள்கிறோம். ஆனால் யாராவது கடவுள் உங்களின் உள்ளே உள்ளார் என்று கூறினால் “ஆமாம் கடவுள் என்னுள்ளே உள்ளார்” என்று கூறிவிடுகிறோம். அதற்கும் அப்பால் சென்று “கடவுள் என்னுள்ளே உள்ளார்”; என்றால் அவரை நான் தரிசிக்க வேண்டும், உணர வேண்டும் என்று கேட்பதில்லை. கடவுள் எல்லா இடமும் நீக்கமற நிறைந்துள்ளார் என கூறுவது மிகவும் சுலபம். ஆனால் உள்ளத்திலே வீற்றிருக்கும் கடவுளை உணர வைப்பது மிகவும் எளிதான காரியம் இல்லை. ஆனால் மனிதனைப் பொறுத்த வரையில் எதுவரை அவன் அதனை அனுபவிக்கவில்லையோ, அதுவரை ஒன்றுமே நிறைவாக இருக்காது. ஒரு விடயத்தைப்பற்றி படிப்பதால், எழுதுவதால் நாம் அதனை கொள்கையளவில் அறிந்து கொள்ளலாம் ஆனால் அதன் மூலம்; அனுபவம் ஏற்படாது.

நீங்கள் சைக்கிள் ஓடக் கற்றுகொள்ள வேண்டும் என்றால் மணிக்கணக்காக எவ்வாறு பெடலை அழுத்த வேண்டும், எவ்வாறு நேரே பார்க்க வேண்டும் என்றெல்லாம் கேட்டு அறியமுடியும். ஆனால் நீங்கள் ஒரு சைக்கிளில் ஏறி அமர்ந்து அதனை ஓட முயற்சிக்காத வரை அது எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளமாட்டீர்கள்.

இந்த மூச்சு வந்து போகும் வரை நீங்கள் மனிதனாக இருப்பீர்கள். மனிதன் என்ற ரீதியில் நீங்கள் பல விடயங்களை செய்யலாம். ஆனால் நீங்கள் ஒரு விடயத்தை நிட்சயம் செய்ய முடியும். அதுதான் உங்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும், வல்லமை பொருந்திய, எல்லோருக்கும் பொதுவாக விளங்கும், எல்லையில்லாத உண்மைப் பொருளை அனுபவம் செய்ய முடியும். இந்த புத்தியினால் விளங்க முடியாததை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். எப்பொழுது நீங்கள் அந்த பொருளை அனுபவம் செய்கிறீர்களோ, அன்று உங்கள் வாழ்வு பயனுள்ளதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைக்கு விருந்து நல்லாயிருக்கு! நன்றி அகதி! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வார்கள் மனிதன் மூன்று மலங்களாலும் ஆசையாலும் கட்டுண்டு கிடக்கிறான் என்று.

ஆணவம்..

கன்மம்..

மாயை..

ஆசை...

இவை அவனை நித்திய மகிழ்ச்சிக்குள் வாழ அனுமதியா..! எவன் ஒருவன் இவற்றில் இருந்து வெளி வருகிறானோ.. அவன் நித்திய மகிழ்ச்சியைப் பெறுவான்.

நானுந்தான் முயன்று பார்க்கிறன்.. எங்க.. அது நடக்கிறதா தெரியல்ல. நான் ஒன்றும் கிழவனாகி சாகிற கட்டத்தில முயற்சிக்கல்ல.. சிறுவனாக இருக்கிறதில இருந்து முயற்சிக்கிறன்..! :D :D :(

Link to comment
Share on other sites

இருக்குமிடத்தைவிட்டு

இல்லாத இடம்தேடி

எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே - அவர்

ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கிறவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்கிற மாதிரி நடிக்கிறவர்களை தட்டி எழுப்ப இயலாது தானே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்குமிடத்தைவிட்டு

இல்லாத இடம்தேடி

எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே - அவர்

ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே..! :)

எண்ணம் எல்லாம் ஒரு இடத்தையே நாடுது........ :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.