Jump to content

யாழ்களம் உடனடியாக மூடும் திட்டம் பிற்போட்டமைக்கு நன்றிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நிரந்தரமாகவே இயங்கவேண்டும். இது யாழ் உறவுகளெல்லோரினதும் விருப்பமாகும். கருத்தெழுதுபவர்களிடம் சந்தா அறவிடுவது சரியானதாகவே இருக்கும்.எதுவானாலும் யாழின் இருப்பே எங்களெல்லோரினதும் விருப்பாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தினை மூடும் நிலையை ஒத்தி வைத்ததுக்கு நன்றி . யாழ் என்றும் ஆல் போல் தழைத்து

அறுகு போல் வேரூன்ற வேண்டும். நாங்கள் எல்லாம் இளைப்பாற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் ஐயா!

எங்கடையளுக்கு பொதுத்தொண்டு புண்ணியவேலை செய்ய வெளிக்கிட்டால் ஓட்டைச்சட்டியும் கிழிஞ்சகோமணமும் கெட்டபெயரும்தான் மிஞ்சும்.

இதை நடத்திக்கொண்டு போறது பெரியபிரச்சனை எண்டு நல்லவடிவாய்த்தெரியுது

அஞ்சு காசு குடுத்துட்டு அய்யாயிரம் கேள்வி கேக்கற கூட்டத்திலை....

நிம்மதியாய் ஒருவிசயத்தை கொண்டு நடத்துறது பெரிய விசயம்.

இருந்தாலும் நானும் ஒண்டு சொல்லுறன்!

தமிழுக்காகவும்...தமிழ்வளர்ச்சிக்காகவும்...

எதிர்கால தமிழ்கருத்துக்கள உறவுகளுக்காவவும்..

தமிழிணைய பாலமாக இருக்கும் யாழுக்காகவும்..

என்னால் முடிந்த உதவிகளை செய்ய காத்திருக்கின்றேன்.

முன்னர் நான் இங்கே ஒருசிலருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியிருந்தாலும்?

இந்தவிடயத்தில் அத்திவாரமாக இருக்க காத்திருக்கின்றேன்.

அத்துடன்..

ஒருசில பின்விளைவுகளை முன்னிட்டு... வெறும் பார்வையாளனாகவே இங்கிருப்பேன் என் உறுதி செய்கின்றேன். :)

Link to comment
Share on other sites

-

காசு கொடுத்து எழுதப்போகிறீர்களா ...?!

நடைமுறையில் வாசிப்பவர்கள்தான் காசு கொடுப்பார்கள் எழுதுபவர்கள் காசு பெறுவார்கள் ...

கள மீளமைமப்பிற்கு ஒரு யோசனை:

களம்: இயங்குவதற்கு ஒரு அமைப்பு. இதை ஒரு தனி நபராக பொருளாதரரீதியாகவும் சட்டரீதியகவும், குறைகளுக்கும் குற்றங்களுக்கும் எதிர்புகளுக்கும் மறுப்புகளுக்கும் சந்தேகங்களுக்கும் பாராட்டுகளுக்கும், மத்தியில் தன்னந்தனியாக பொறுப்பேற்று பதிலளித்து, காலங்களை கடக்கவைத்த சகோதரர் மோகனிற்கு மனமார்ந்த பாராட்டுகள்.

இனி மேல் இதை சுமக்கத் முடியாது கைவிடப்போகிறேன் என்றால், அது விளங்கிக் கொள்ளக்கூடியதே. மெல்லமாக நோகமல், பழைய நெருங்கிய அங்கத்தவர் வட்டத்தின் தோள்களில் இந்தச் சுமையை இறக்குவது ஒரு நல்ல யோசனையாகப் படுகிறது ...

உங்களுக்கு தெரியாததா இது ... ... இருந்தாலும்

துணிகிறேன், பிழையானால் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

உதாரணமாக:

தளத்தின் இன்றைய பெறுமதி 20 000€ என்று வைத்துக்கொள்வோம் அதை 4000 சிறு துண்டுகளாகப் பிரிப்போம் நெருங்கிய அங்கத்தவர்களுக்கு 5€ படி அந்தத் துண்டுகளை விற்கலாம்.

அத் துண்டுகளின் தன்மையை நீங்கள்தான் உங்கள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வரயறுக்கவேண்டும்

தளத் துண்டுகளை வைத்திருப்பவர்களின் சக்தி:

- ஒவ்வரு அங்கத்தவரும் வைத்திருக்கக் கூடிய மிகக்குறைந்த தொகை 10ம் மிகக்கூடிய தொகை 100ம் மாகும்

10 துண்டு வைத்திருப்பவர் வாக்களித்தால் அது பத்து வாக்குகளுக்குச் சமம்

...

தளத்தின் பொருள் ஆதாரம் எப்போதும் திடமான நிலையில் இருக்க:

- தளத் துண்டுகளை வைத்திருப்பவர்கள் தளத்தின் இலாபத்திலிம் நட்டத்திலும் பங்கு பெறக் கடமைப்படட்வர்கள்

அதாவது இலாபமானால் துண்டுகளின் தொகைப்படி பிரித்து கொடுக்கப்படும், நட்டமானால் துண்டுகளின் தொகைப்படி பிரித்து கேட்கப்படும்

...

ஒரு தரம் இந்த தள உரிமையாளர் வட்டம் ஆக்கப்பட்டபின் உங்கள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு

இயங்கும் திசையை வரையறுக்க வேண்டும்:

- தமிழில் தமிழால் தமிழரிற்கும் தமிழிற்கும் தெவையான பொருளாதார கலை கலாச்சார சகோதர விருத்திக்கான ஒரு உலகம் பரந்த சந்தையை ஆக்குதல்

...

பின் நிருவாக வட்டத்தை நியமிக்க வேண்டும், உங்கள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் மிகுதியை , நேரடி ஜனநாயகத்தின் அடிப்படையில், செய்வார்கள்

.../...

இந்த யந்திரத்தை நீங்கள் இருக்கும் நாட்டின் சட்டதிட்டங்களுக் இணங்க இயக்கிவிட வேண்டும்

.../...

பின்பு களம் உலகம் எங்கும் இந்த அடிப்படையில் வளரலாம் (no.yarl.org, ca.yarl.org, fr.yarl.org, ... etc)

பிகு:

- துண்டுகளைத்தான் பங்குகள் என்று அழைக்கிறோம்

- பெயர் குறிப்பிடாமல் களத்திற்கு பணம் கொடுக்க ஒரு வளி இருந்தால் பலர் கேட்காமலே தந்திருப்பார்களா ?

-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் திரும்ப வலம் வருவதையிட்டு எனது மனப் பூர்வமான மகிழ்ச்சியினை மோகன் அண்ணாவுக்கும்,நிர்வாகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்...அது தொட‌ர்ந்தும் நான் உயிரோடு இருக்கும் வரை இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

இந்த இடத்திலை பத்துபதினைஞ்சு சிவப்புபுள்ளி குத்தோணும் போலை கிடக்கு

காத்திலைகரைஞ்சுபோவார் சிவப்பிலை அமத்துற சிஸ்ரத்தையே தூக்கீட்டாங்கள் :lol:

Link to comment
Share on other sites

என்னிடம் மோகன் அண்ணாவின் தொலைபேசி இலக்கம் இல்லை, இல்லாவிட்டால் நானும் தொலைபேசி எடுத்து அழுதிருப்பன்.

நன்றிகள்...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் மோகன் அண்ணாவின் தொலைபேசி இலக்கம் இல்லை, இல்லாவிட்டால் நானும் தொலைபேசி எடுத்து அழுதிருப்பன்.

நன்றிகள்...............................

நல்லகாலம் தொலைபேசி இல்லாமல் போய்விட்டதினால் திரு.மோகன் தப்பிவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thanks mohan anna

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நன்றி மோகன்! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.