Jump to content

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Group A

puthucricket1.png

Group B

pudthu2.jpg

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த உலக கிண்ண போட்டியில் அமெரிக்காsmilie_flag_324.gif கலந்து கொள்ளவில்லையா? அல்லது தெரிவாகவில்லையா?

இணைப்பிற்கு நன்றி பையன். :)

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பையன்! :lol:

அமெரிக்காவும் துடுப்பாட்டம் ஆடுகின்றவர்களா! :lol:

Link to comment
Share on other sites

அமெரிக்காவும் துடுப்பாட்டம் ஆடுகிறவையள்தான். விரைவில் உலககோப்பையில் பங்குபற்றும் காலமும்வரும்.

துடுப்பாட்ட நாடுகள்: http://www.cricinfo.com/ci/content/page/417881.html

துடுப்பாடும் அமெரிக்கா: http://www.cricinfo.com/usa/content/current/team/11.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி! பிரான்சில் துடுப்பாட்டம் விளையாடுவதில்லை! ஆனால் நாங்கள் விக்கட்டும் , பட்டும் செய்து மென் பந்தில் விளையாடுவதுண்டு!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையன்26

இந்தப் போட்டியில் பையன்26 தான் எனக்குக் குரு. :lol:

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த உலக கிண்ண போட்டியில் அமெரிக்காsmilie_flag_324.gif கலந்து கொள்ளவில்லையா? அல்லது தெரிவாகவில்லையா?

இணைப்பிற்கு நன்றி பையன். :lol:

.

வணக்கம் சிறி அண்ணா.. :lol::lol::lol:

அமரிக்கன்ட கிரிக்கட் விளையாட்டு நல்லா இல்லை :lol: ..அது தான் அவை உலக கோப்பையில் பங்கு பற்ற வில்லை..அமரிக்கன விட அப்கானிஸ்தான் வீரர்கள் நல்லா விளையாடினம் :lol: ..2மாதத்துக்கு முதல் நடந்த 20ஓவர் கிரிக்கட்டில அப்கானிஸ்தான் பங்கு பற்றினது.....அமரிக்கன் பங்கு பற்ற வில்லை அந்த விளையாட்டிளும் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பையன்26

இந்தப் போட்டியில் பையன்26 தான் எனக்குக் குரு. :lol:

வாத்தியார்

**********

hehe :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் 26 வாத்தியார் தட்சனை தரவில்லை எண்டால் சுழல் பந்துதான் சரியா! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் இந்த முறை உங்கட நாடு தப்புமா..2003 உலக கோப்பையில் சமிந்த வாஸ்சின் பந்தோடை மாயமாய் போனவை 36 ரன்ஸ் ஓட. இந்த உலக கோப்பையில கனடான்ட முதல் விளையாட்டு சொறிலங்காவோடை :lol::lol::lol:

Link to comment
Share on other sites

எனக்கு யார் வெண்டாலும் பரவாயில்லை..! சொறிலங்கா உதைவாங்க வேணும்..! :lol:

Link to comment
Share on other sites

மச்சான் இந்த முறை உங்கட நாடு தப்புமா..2003 உலக கோப்பையில் சமிந்த வாஸ்சின் பந்தோடை மாயமாய் போனவை 36 ரன்ஸ் ஓட. இந்த உலக கோப்பையில கனடான்ட முதல் விளையாட்டு சொறிலங்காவோடை :lol::D:lol:

கனடா துடுப்பாட்ட அணி ஒரு விநோதமான அணி. போட்டியில எப்பிடு விளையாடும் என்று போட்டி முடிஞ்சாப்பிறகுதான் தெரியும். ஒரு சில அதிர்ச்சி வெற்றிகள் கிடைக்கலாம். அதுபோலவே படுதோல்விகளும் கிடைக்கலாம். அணியில 40+ வயசு ஆக்களும் இருக்கிறீனம். 15+ வயசு சின்னப்பெடிகளும் இருக்கிதுகள். தமது நாடுகளில சர்வதேச தரத்தில விளையாட வாய்ப்பு கிடைக்காத திறமைசாலியான ஆக்கள் கனடா அணியினுள் நுழைகிறதுக்கான முயற்சிகளும் நடந்துள்ளது, நடந்துகொண்டு உள்ளது. இதனால கனடா அணியை தரம் குறைத்து பேசவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் முரளி பந்து எறிகிறாரா, எறிந்தால் கொஞ்சம் கஷ்டம்தான்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் முரளி பந்து எறிகிறாரா, எறிந்தால் கொஞ்சம் கஷ்டம்தான்! :lol:

:lol::D:lol:

ஹாஹா..

அவர் பந்தை எறிகிறது இல்லை. அவருக்கு பந்தை விக்கேட்டை நோக்கி போடத்தான் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்ல சொறிலங்கா பொந்தியா பாகிஸ்தான் தோத்து வெளியால போக வேண்டும்.

என்னுடைய விருப்பத் தெரிவு

1.இங்கிலாந்து

2. தென்னாபிரிக்கா

3.மேற்கிந்திய தீவுகள்

4.அவுஸ்திரேலியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல சொறிலங்கா பொந்தியா பாகிஸ்தான் தோத்து வெளியால போக வேண்டும்.

என்னுடைய விருப்பத் தெரிவு

1.இங்கிலாந்து

2. தென்னாபிரிக்கா

3.மேற்கிந்திய தீவுகள்

4.அவுஸ்திரேலியா

விடலை! விருப்பம் உங்கள் உரிமை, ஆனால் முடிவு அறிவிப்பது ஜெர்மன் அக்டோபஸ், முனியின் கிளி, கந்தப்புவின் கோழி! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்ல சொறிலங்கா பொந்தியா பாகிஸ்தான் தோத்து வெளியால போக வேண்டும்.

என்னுடைய விருப்பத் தெரிவு

1.இங்கிலாந்து

2. தென்னாபிரிக்கா

3.மேற்கிந்திய தீவுகள்

4.அவுஸ்திரேலியா

விடலை! விருப்பம் உங்கள் உரிமை, ஆனால் முடிவு அறிவிப்பது ஜெர்மன் அக்டோபஸ், முனியின் கிளி, கந்தப்புவின் கோழி! :blink:

நான் கடலை எறிஞ்சு கண்டு பிடிக்கப்போறன். :lol:

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. முதலாவது உலக கோப்பை போட்டி 1975-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்தது. இதில் வெஸ்ட்இண்டீஸ் கோப்பையை கைப்பற்றியது. 1979-ம் ஆண்டு நடந்த 2-வது உலக கோப்பையிலும் வெஸ்ட்இண்டீஸ் அணியே சாம்பியன் பட்டம் பெற்றது.

1983-ம் ஆண்டு (இங்கிலாந்து) நடந்த 3-வது போட்டியில் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றியது. 4-வது உலக கோப்பை போட்டியை 1987-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து நடத்தியது.

இதில் ஆஸ்திரேலியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றது. 1996-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் இலங்கை கோப்பையை வென்றது.

1999, 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலக கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. ஆஸ்திரேலியா 4 முறையும், வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளன.

10-வது உலக கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகியவை இணைந்து நடத்துகிறது. இந்தப்போட்டி அடுத்த ஆண்டு (2011) பிப்ரவரி 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடக்கிறது.

3-வது முறையாக உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறுவதால் இந்த முறை உலக கோப்பையை இந்தியா கைப்பற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா உலக கோப்பையை வென்றது. அதன்பிறகு கோப்பையை வெல்லாதது வேதனை அளிக்கிறது.

2003-ம் ஆண்டு உலககோப்பையில் இறுதிப் போட்டியில் தோற்றது. கடந்த முறை முதல் சுற்றிலேயே வெளியேறியது.

2-வது முறையாக உலக கோப்பையை இந்தியா கைப்பற்ற சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் தேர்வு குழுவினருக்கு உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா 5-0 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் யூசுப்பதானின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இதேபோல பந்து வீச்சில் அஸ்வின் முத்திரை பதித்தார்.

இதனால் இந்த இருவரும் உலக கோப்பை போட்டியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா தொடருக்கு பிறகே அணி வீரர்கள் முடிவு செய்யப்படும்.

ஜடேஜா ஆல் ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல் படவில்லை. யூசுப்பதான் நியூசிலாந்து தொடரில் பந்துவீச்சு, பேட்டிங்கில் முத்திரை பதித்தார். இதனால் ஆல்ரவுண்டர் முறையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். உலக கோப்பை போட்டியில் முதன்மை சுழற்பந்து வீரர்கள் தேவை.

ஒருவர் ஹர்பஜன்சிங் மற்றொருவர் யார் என்பது முடிவு ஆகவில்லை. இதில் ஒஜாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கடும் போட்டி நிலவலாம்.

உலககோப்பை போட்டியில் தெண்டுல்கர், ஷேவாக் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். 3-வது வீரராக காம்பீர் வருகிறார். அதற்கு அடுத்த வரிசையில் யுவராஜ்சிங், கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா உள்ளனர்.

யூசுப்பதான் 7-வது வீரராக வரலாம். காம்பீர் சரியாக ஆடவிட்டால் வீராட்கோக்லி 3-வது வீரராக களம் இறக்கப்படலாம். யூசுப்பதானுக்கு வாய்ப்பு இல்லை என்றால் அவரது இடத்துக்கு கோக்லி வரலாம்.

எந்த வரிசையிலும் தான் விளையாட தயார் என்று வீரட் கோக்லி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து தொடரில் முனாப்பட்டேல் நன்றாக பந்து வீசினார். இதனால் அவரும் வாய்ப்பில் உள்ளார்

Link to comment
Share on other sites

உலககோப்பை அவுஸ்திரேலியாவின் கைகளின் பிடியில் இனி விளங்கப்போவது இல்லை என்று மட்டும் ஊகிக்கமுடிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி ஆரம்பம் ஆக்க இன்னும் இந்தனை நாள் தான் இருக்கு

c-worldcup.jpg

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவின் வேகத்தில் இந்தியா தினறல் :wub::lol:

Link to comment
Share on other sites

மகிழ்ச்சி.

இந்தியாவும் சிறீலங்காவும் முதல்சுற்றிலேயே வெளியேற வேண்டும் என்பதே எனது அவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தோல்வி உறுதி

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2003 ஆண்டு உலக்க கோப்பையில் பார்த்த அதே விரட் லிய மறுபடியும் பார்க்கிறேன்...!

:D:)

123119.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.